Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"மூன்று கவிதைகள் / 18"
"மூன்று கவிதைகள் / 18" 'மின்னலாய் ஒரு பின்னல்' [நம்பிக்கை, துரோகம், சத்தியம், சோதனை] நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து துரோகம் செய்யும் மனிதர்களை அறியாயோ? சத்தியம் வெல்ல களத்தில் இறங்கினால் சோதனை வந்து வேதனை கொடுக்குதே! அல்லது நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து/ துரோகம் செய்யும் மனிதர்களே/ சத்தியம் வெல்லும் நாளில்/ சோதனை வரும் உங்கள் வாழ்வுக்கு! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. 'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்' விண்ணில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை உண்மை ஒன்றை உலகிற்குப் பகிர ஆண்டவன் வருகையை ஞானிகள் அறிய மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்! கண்கள் எல்லாம் அன்பு பொழிய கந்தலில் மறைந்து இருந்த பாலகன் கருணை காட்டி உலகை அணைத்து களவு இல்லா மனிதம் காட்டினான்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................................. 'வன்னியில் குண்டுகள் ... ' வன்னியில் குண்டுகள் ஆயிரம் விழுகுது கன்னியின் பார்வையில் ஏக்கம் தழுவுது மண்ணுக்கும் மொழிக்கும் நின்ற மக்கள் கண்ணுக்கும் தெரியாமல் சாம்பல் ஆகினர்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ துளி/DROP: 1968 ["மூன்று கவிதைகள் / 18" https://www.facebook.com/groups/978753388866632/posts/33098366463145241/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 79 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 13: இது மகிந்த தேரர் இலங்கைக்கு பறந்து சென்ற மாயாஜால நிகழ்வைப் பற்றியது. இது இலங்கையில் நடந்த எந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியதும் அல்ல. இதில் மகிந்த, அசோக மன்னரின் மகன் என்று கூறப்படுகிறது. எனவே அவர் ஒரு மனிதர். எனவே, ஈர்ப்பு விசையை மீறி பறக்கும் திறன் பெற்றிருக்க முடியாது. மகிந்த இலங்கைக்கு பறந்து வந்தது ஒரு புராண கதையாக மட்டுமே இருக்கலாம்? எந்த இந்திய ஆதாரங்களிலும் மகிந்த என்ற, அசோகனின் மகன் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. அது மட்டும் அல்ல, இவர் பிறந்து வளர்ந்ததாக கூறப்படும் இந்தியாவில், மகிந்த மட்டும் அல்ல, அவரது சகோதரி சங்கமித்தா, அவரது மகன் சுமனா, அவர்களின் தாய் தேவி மற்றும் மூன்றாம் புத்த சபை [Mahinda, his alleged sister Sanghamitta, her son Sumana, their mother Devi, and the Third Buddhist Council] ஆகியவை பற்றி எந்த வரலாற்று அல்லது இலக்கிய ஆவணங்களும் இல்லை. மேலும் அவர்கள் அனைவரும் துறவி எழுத்தாளர்களால் தங்கள் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கண்டு பிடிக்கப்பட்ட கற்பனையான கதாபாத்திரங்கள் என்றே தோன்றுகிறது. சங்கமித்தா என்ற பெயருக்கு 'சங்காவின் நண்பர்' என்று பொருள். ஆனால், சங்கமித்தா பிறந்தபோது அசோகர் ஒரு பௌத்தர் அல்ல, அவர் ஒரு இந்து. எனவே அவர் தனது மகளுக்கு அப்படி பெயரிட்டிருக்க முடியாது? மேலும், சங்கமித்தா என்பது பெண்களுக்கான பிரத்யேகப் பெயரும் அல்ல. இது ஒரு பட்டப் பெயர் என்பதுடன், அதே பெயரைக் கொண்ட ஆண் தேரர் ஒருவர் தொலைதூரக் கரையிலிருந்து வந்தார் என மகாவம்சமே கூறுவதைக் காண்க. அத்தியாயம் 37 - 1 முதல் 5 வரை பார்க்கவும். ஜேததீசனுடைய [Jetthatissa] மரணத்துக்குப் பின்னர் அவனுடைய தம்பி மகாசேனன் [MAHÁSENA1] இருபத்தேழு வருட காலம் அரசனுக இருந்தான். அவனை அரசனாகப் பட்டாபிஷேகம் செய்வதற்கு மறு கரையிலிருந்து ச்ங்கமித்திர தேரர் இங்கு வந்தார். பட்டாபிஷேகமும் மற்றும் வேறு பலவிதமான சடங்குகளையும் செய்து முடித்ததும் மகா விஹாரையை அழிக்க விரும்பிய கட்டுப்பாடில்லாத அந்தப் பிக்கு, இவ்வாறு கூறி அரசனைத் தம் வசப்படுத்திக் கொண்டார். "மகா விஹாரையில் வசிப்பவர்கள் உண்மையான வினயத்தைப் போதிப்பது இல்லை. நாங்கள் தான் உண்மையான வினயத்தைப் போதிப்பவர்கள்." இதன்பேரில் அரசன் 'மகா விஹாரையில் வசிக்கும் பிக்குகளுக்கு யார் உணவு அளித்தாலும், அவர்களுக்கு நூறு பணம் அபராதம் விதிக்கப் படும்’ என்று கட்டளை பிறப்பித்தான் என்று கூறுகிறது. மகிந்த இலங்கையை புத்த மதத்திற்கு மாற்றுவார் என்று புத்தர் முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. 13 - 15 முதல் 16 வரை பார்க்கவும். அத்தியாயம் XIII / மகிந்தவின் வருகை: 15. இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். 16. "அங்கு உங்களுக்கு உதவுபவர்கள் நாங்களாக இருப்போம் ' என்றான். புத்தர் ஒரு மனிதராக இருந்ததால், இந்த முன்னறிவிப்பு ஒரு அப்பட்டமான பொய், மேலும் அவருக்கு எந்த முன்னறிவிப்பு திறனும் இருந்திருக்க முடியாது. இன்னும் ஒன்றையும் கவனியுங்கள். புத்தர், தானே, இலங்கைக்கு மூன்று தடவை பறந்து போய், அங்கு கோடிக்கணக்கானோருக்கு போதித்தது என்னவாச்சு? ஏன் அவர் தான் பிறந்து வளர்ந்து இறந்த இடத்தில் புத்த மதத்தை நிலைநிறுத்த, இப்படியான மாயயால வித்தைகள் செய்யவில்லை? அது மட்டும் அல்ல, முன்பும் புத்தர் தனது மரணப் படுக்கையில் விஜயன் இலங்கைக்கு வருவது குறித்து தீர்க்கதரிசனம் கூறினார். அத்தியாயம் 7 – 3 முதல் 4 வரை பார்க்கவும். அத்தியாயம் 07 விஜயனின் பட்டாபிஷேகம்: "சிம்மபாகுவின் மகன் விஜயன் லால நாட்டிலிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வந்திருக்கிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவதற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்கிறார். ததாகதர் கூறிய இவ் வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீலோற்பலம் மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த தேவனிடம் ஒப்படைத் தான். [சக்கன் - இந்திரன். விஷ்ணு-நீல வண்ணமுடையவன்.] சக்கனிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் அத்தேவன் விரைந்து இலங்கைக்கு வந்து நாடோடியான துறவிக் கோலத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். விஜயனுடன் வந்தவர்கள் யாவரும் அவரிடம் வந்து ஐயனே ! இது என்ன தீவு’ என்று கேட்டனர். "இலங்கைத் தீவு' என்று அவர் பதிலளித்தார். "இங்கு மனிதர் யாரும் கிடையாது. எனவே அபாயம் எதுவும் நேராது' என்றும் அவர் கூறினர். பின்பு தமது கமண்டலத்திலிருந்து நீரையெடுத்து அவர்கள் மீது தெளித்தார். பிறகு அவர்கள் கையில் நூலினுல் காப்புக் கயிறு" கட்டிவிட்டு காற்றிலே கலந்து மறைந்து விட்டார். அங்கே பெண் நாய் உருவில் ஒரு யட்சினி [ யட்சி yakkhini] தோன்றினாள். அவள் குவண்ண [Kuvanna] என்பவளுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவள். விஜயனைச் சேர்ந்தவர்களில் ஒருவன் இளவரசன் [விஜயன்] தடுத்ததையும் கேளாமல் அவள் பின் தொடர்ந்து சென்றான். அருகில் கிராமம் இருந்தால் தானே நாய் தென்படும்" என்று இளவரசன் அப்பொழுது எண்ணினான். ஒன்றைக் கவனியுங்கள். 'கிராமம் இருந்தால்தானே நாய் தென்படும்', என்ற வரியில், கிராமம் என்றால் என்ன வென்று ஒரு தரம் சிந்தியுங்கள். மனிதர்கள் கூட்டாக வாழும் பொழுதுதான் கிராமம் தோன்றுகிறது. அப்படி என்றால் அங்கு மனிதர்கள் உண்டு என்பதாகிறது. ஆனால், "இங்கு மனிதர் யாரும் கிடையாது' என்று கூறியது எனோ? விஜயனின் நண்பன் சென்ற இடத்தில் நாயுருவில் இருந்த யகூஷிணியின் எஜமானி குவண்ண என்பவள் ஒரு மரத்தடியில் சந்தியாசினியைப் போல் நூல் நூற்றுக் கொண்டு அமர்ந்திருந்தாள். இதில் கட்டாயம் ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம். உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது. இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது. Part: 79 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 13: This is about the magical event of Mahinda Thera flying to Lanka and not about any reliable historical events that took place in Lanka. Mahinda is alleged to be the son of the King Asoka. He is therefore a human and could not have had the gravity defying capability of flying. Mahinda came flying to Lanka is a hoax, as described above. There is no mention of Mahinda in any of the Indian sources. Mahinda, his alleged sister Samghamitta, her son Sumana, their mother Devi, and the Third Buddhist Council have no synchronism with any historical or literature documents in India, and they all are fictitious characters invented by the monkish authors to meet their nefarious agenda. The name Samghamitta means ‘friend of Sanga’. Asoka was not a Buddhist when Samghamitta was born, and therefore he would not have named his daughter thus. Furthermore, Samghamitta is not an exclusive name for females, for a Thera with the same name came from the further coast, 37 - 2. It is alleged that the Buddha foretold that Mahinda would convert Lanka to the faith, 13 - 15 to 16. This foretelling is an abject lie as the Buddha was a human, and he could not have had any foretelling capability. The Buddha also prophesied at his deathbed about the arrival of Vijaya to Lanka, 7 – 3 to 4. Lord Buddha was a very good person, but it does not mean that he had the divine power of foretelling mental faculty. Mahinda, however, as per the narrative flew to Lanka and landed on the Missaka mountain. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 79 B தொடரும் / Will follow துளி/DROP: 1967 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79A] https://www.facebook.com/groups/978753388866632/posts/33091560820492472/?
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
"அனைவருக்கும் எம் இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!" --- உங்கள் "2026" பயணத்தை இனிதே ஆரம்பித்து நீங்கள் கொண்ட கனவுகள் பலிக்கவும் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவும் என் முழுமனத்தோடு உங்களை வாழ்த்துகிறேன்!. வீடும் நாடும் இனிய எனின் எம் வாழ்க்கையும் இனிதே என்பதை இந்த புது ஆண்டு 2026 இல் உணருங்கள்!!. "யாண்டுபல வாக , நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்க; அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே." [புறநானூறு பாடல் 191 - பாடியவர் - பிசிராந்தையர்] “தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன் ---- “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.” புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான். அப்படியான ஒரு வாழ்வு, அப்படியான ஒரு நாடு உங்களுக்கு கிட்டட்டும் . 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பண்டைய தமிழ் பாடலில் இருந்து உங்களுக்கு ஒரு வாழ்த்து [மதுரைக் காஞ்சி / ஆசிரியர் - மாங்குடி மருதனார்] "முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பல் மீன் நடுவண் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே" "கடலின் நடுவில் சூரியன் பிரகாசிப்பது போலவும், பல நட்சத்திரங்களுக்கு நடுவில் சந்திரன் ஒளிர்வது போலவும், செழித்த/மலர்ந்த உறவினர்களுடன் பிரகாசமாக, அழகாக விளங்கி, அழகிய அணிகலன்களை அணிந்த பெண்கள் பொற்கிண்ணங்களில் வாசனை நிறைந்த தேறலை (மதுவை) ஊற்றித் தர, நீ தினமும் மகிழ்ச்சியுடனும் இனிமையுடனும் வாழ்க; நீ பெற்ற இந்த நல்ல வாழ்க்கையை (ஊழியை) மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ்வாயாக!" அன்புடன் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid033aDU7J4b39aeWz2DtwETREGGLkaQYRJhoehLLdX5cqkjeVtzeWn82Dy8d1utaRwVl?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 78 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 78 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை சில இலங்கை புராணக்கதைகள் கூறுவது போல், மகேந்திரன் [மகிந்த] மாயமாக பறக்காமல் தென்னிந்தியாவில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணம் செய்ததாக இந்த கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் மகேந்திரன் [மகிந்த] துறவியானதற்கான காரணம் என்னவென்றால்: பண்டைய இந்திய மரபில், ஒரு மன்னர் இறந்தால், அவரது மூத்த மகன் அரியணையைப் பெறுவார் என்றும் இளைய சகோதரர்கள் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்றும் பொதுவாக அவர்கள் துறவிகளாக மாற வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்கள் தங்கள் தாயகத்தில் தங்க அனுமதிக்கப் படுவதில்லை. எனவே தான் அசோகரின் ஒன்றுவிட்ட சகோதரரான மகேந்திரன் [மகிந்த], இந்த மரபைப் பின்பற்றி ஒரு புத்த துறவியானார். முக்கிய குறிப்புகள்: தென்னிந்தியாவிலிருந்து புத்த மதம் படிப்படியாக இலங்கைக்கு பரவியது. பௌத்தம் தமிழ்ப் பகுதிகளுக்கும் இலங்கைக்கும் பரவுவதில் பேரரசர் அசோகரும் அவரது குடும்பத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். 7 ஆம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் புத்த மதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது, அதே நேரத்தில் இந்து மதமும் சமண மதமும் மிகவும் பிரபலமாக இருந்தன. அசோகரின் சகோதரர் மகேந்திரன் [மகிந்த], இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகளில் அல்ல, தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு பயணம் செய்திருக்கலாம். மேலும், தமிழ் நாடுகள் பேரரசர் அசோகரின் ஆட்சியிலிருந்து சுதந்திரமாக இருந்தன. மேலும் மேற்கூறிய மரபின்படி அசோகரின் தம்பி மகேந்திரன் [மகிந்த] தமிழ் நாட்டை வசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது இயல்பானது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாடு அல்லது மகதத்தில் (Magadha) பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தின் போது சமண மதம் தமிழ்நாட்டிற்கு வந்தது. மன்னர் சந்திரகுப்த [Chandragupta] கூட ஆட்சியைத் துறந்த பிறகு சமணராகி, மைசூருக்கு [Mysore] வந்து அங்கு இறந்தார். புத்த மதம் சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் நாட்டிற்கு வந்து, கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை கணிசமான காலம் நிலவியது. கி.பி 300 முதல் கி.பி 600 வரையிலான தென் இந்தியா தமிழ் மன்னர்களின் வரலாறு எதுவும் இல்லை. அதுமட்டும் அல்ல, பொது சகாப்தத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குக் கூட தமிழ் மன்னர்களின் விவரங்கள் தெளிவாக இல்லை. களப்பிரர் (Kalabhra dynasty) தென்னிந்தியாவை ஆண்ட அரசர்கள் ஆவார்கள். இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய பொ.ஊ. 250 – பொ.ஊ. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சைன சமயம், பௌத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்று பொதுவாக நம்பப்படுகிறது? இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. அதன் பின், ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் போர்க்குணமிக்க சைவ மதம் [militant Saivism] நிலவியது. கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கரர் அந்தக் காலகட்டத்தில் தனது பிராமண மத வடிவத்தைப் [Brahminical religion] பரப்பினார். ஏழாம் நூற்றாண்டில், சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறிய பாண்டிய மன்னரின் ஆட்சியில் சமண மதம் கடுமையான அடியைச் சந்தித்தது. அவரது பெயர் மாறவர்மன் அரிகேசரி [Maravarman Arikesari]. அரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவார். பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவர் தன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டார். கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றார். திருவிளையாடல் புராணத்தில் இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்று பெரிய சின்னமனூர்ப் பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளான். இந்த மன்னர் ஒரு வெறித்தனமான குணம் [fanatical character] கொண்டவர், முதலில் சமணத் துறவிகளின் தூண்டுதலின் பேரில் சைவர்களை சித்திரவதை செய்தார். பின்னர் அவர் சைவ மதத்திற்கு மாறி சமணர்களுக்கு எதிராக சமமான தீவிரத்துடன் இருந்தார். இவர் சுமார் எட்டாயிரம் சமணத் துறவிகளை உயிருடன் தூக்கிலிட்டார். இது மற்ற அனைத்து மதப் பின்பற்றுபவர்களுக்கும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியிருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பௌத்தர்கள் பெருமளவில் இலங்கைக்கு இடம்பெயர்ந்திருக்க வேண்டும், இருப்பினும், இந்த துயரமான மரணத்திற்குப் பிறகும் சமணர்கள் நீண்ட காலம் உயிர் பிழைத்தனர். மகாவம்சத்தில் தமிழர்களுக்கு எதிரான சார்பு இதனால்த்தான் தோன்றியிருக்கவும் ஒரு வாய்ப்பு உண்டு, ஆனால் தீபவம்சத்தில் வெளிப்படையாகக் அப்படி ஒன்றும் கூறப்படவில்லை. இந்தியாவில் மகாயான பௌத்தம் பரவுவதை கடுமையான தேரவாத பௌத்தத்தால் தாங்க முடியவில்லை என்பதும் இதற்குக் இன்னும் ஒரு காரணமாக இருக்கலாம். சமையலில் இருந்து வரும் சூடான புகையை தினமும் வெளிப்படுத்தாவிட்டால் ஓலை கையெழுத்துப் பிரதிகள் நீண்ட காலம் நிலைத்திருக்காது. புத்த துறவிகள் பொது மக்கள் கொடுக்கும் பிச்சையில் உயிர்வாழ வேண்டும் என்பதால் மடங்களில் சமையல் நடைபெறுவதில்லை. அதனால்த் தான் துறவிகள் எப்போதும் மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார்கள். இதனால் அவர்கள் பிச்சை எடுக்கத் தேவையில்லை. சூடான புகைக்கு ஆளாகாத ஓலை கையெழுத்துப் பிரதிகள் நூற்று முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. குறிப்பாக சூடான ஈரப்பதமான சூழலில். எனவே, ஓலை கையெழுத்துப் பிரதிகள் நொறுங்கி நொறுங்குவதற்கு முன்பு அவற்றை கட்டாயம் ஒவ்வொரு நூற்று முதல் நூற்றைம்பது ஆண்டுகளில் நகலெடுக்க வேண்டும். இந்த தருணத்தில் தான் மூலப் பிரதிகளுக்குள் தமக்கு வேண்டியவற்றை செருகவும் மூல பிரதியில் உள்ளவற்றை சிதைக்கவும் சரியான நேரமாக இருந்துள்ளது. இந்தச் செயல்பாட்டில் தான் தமிழ் எதிர்ப்பு உணர்வு மெல்ல மெல்ல மெதுவாக அங்கு சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்ற வாதமும் இன்னும் அறிஞர்களிடம் உண்டு. Part: 78 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 The earlier mentioned interesting passage, which shows how vivid the traditions of Asoka and his brother continued to be in the south after the lapse of nine centuries, and locates Mahendra in a monastery to the south of the Kaviri, within easy reach of Ceylon, goes a long way to support the hypothesis that Mahendra really passed over to the island from a southern port on the mainland. That hypothesis is much more probable than the Ceylonese story that he came by aerial flight through the air, ‘as flies the king of swans.’ Nor is it likely that his first discourse converted the king and forty thousand of his subjects…’ Unquote Quote from page 51 ‘The assumption of monastic robe by the emperor’s younger brother, or rather half brother on the mother’s side, was quite in accordance with the precedent and rule. ‘According to the laws of India, says Chinese historian, ‘when a king dies, he is succeeded by his eldest son (Kumararaja); the others leave the family and embrace a religious life, and they are no longer allowed to be in their native kingdom’. Unquote Tamil countries were independent of the Emperor Asoka’s rule and it was natural that Mahendra, Asoka’s younger brother elected to reside in Tamil Nadu as per the above-mentioned tradition. Jainism came to Tamil country around third century B. C. during a twelve-year famine in Magadha. Even the King Chandragupta became a Jain after abdicating, and came to Mysore to die. Buddhism came to Tamil country about a century later and prevailed for a considerable time, till about sixth century A. D. There is no history of Tamil kings from 300 A. D. to 600 A. D. The details of Tamil kings are sketchy even for the first three centuries of the Common Era. Around sixth to seventh century, militant Saivism came to exist in the south India. Adi Sankarar from Kerala propagated his form of Brahminical religion around that time. Around the seventh century, Jainism suffered a severe blow under the rule of a Pandyan king who converted from Jainism to Saivism. His name is Maravarman Arikesari, but he is also known as Koon Pandyan and Sundarapandiyan, and he reigned from 641 A. D. to 670 A. D. This king was a fanatical character and tortured Saivists first at the instigation of Jain monks. Then he was converted to Saivism and went against Jains with equal vehemence. He impaled about eight thousand Jain monks alive, and this must have sent shock waves through all other religious followers. The Buddhists must have shifted to Ceylon en masse during this time, however, the Jains survived for a long-time even after this tragic impaling. That is the anti Tamil bias in the Mahavamsa, which is not explicit in the Dipavamsa. It could also be that rigid Theravada Buddhism could not stand the spread of Mahayana Buddhism. Ola manuscripts will not survive long if it is not daily exposed to the warm smoke from cooking. No cooking takes place in monasteries as monks are supposed to survive on alms given by the common folks. That is why monks are always trying to win favour of kings and rulers so that they need not to go around for alms. Ola manuscripts not exposed to warm smoke would not last more than one hundred to one hundred and fifty years, especially in the warm moist environment. Ola manuscripts need to be copied before they become friable and crumbling. This is the opportune time to insert and corrupt the originals. The anti-Tamil sentiment must have slowly built up in this process. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 79 தொடரும் / Will follow துளி/DROP: 1966 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 78] https://www.facebook.com/groups/978753388866632/posts/33076511595330728/?
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
மேலும் நான் இலங்கை கடற் தொழில் அமைச்சில் [கொழும்பு] கடல் பொறியியல் விரிவுரையாளராக சில ஆண்டு கடமையாற்றிய பொழுது, 1983 க்கு முதல், அங்கு, குறுநகரில் அமைந்துள்ள கடல் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சில தடவை போய் உள்ளேன். அங்கு பயிற்சி, குருநகர் மீன்பிடித்தல் மற்றும் சிறிய படகுகள் தங்கி இருக்கும் ஜெட்டிகளில் இருந்து புறப்பட்ட மீன் பிடி படகுகளில் தான் நடந்தன - அங்கு பெரிய கப்பல்கள் அல்லது கிரேன்கள் இருக்க வில்லை என்பது நான் நேரடியாக பார்த்தது
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
📌 What Happened on 21 October 1987? On 21 October 1987, during Operation Pawan — the military campaign by the Indian Peace Keeping Force (IPKF) in Sri Lanka — a special operation was carried out against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) base at Gurunagar, in the Jaffna Peninsula. Wikipedia+1 ⚓ Attack by Indian Navy MARCOS The Indian Navy’s Marine Commandos (MARCOS — then known as Indian Marine Special Forces) were tasked with neutralizing LTTE’s small naval/boat assets and disrupting their supply routes to Jaffna. Wikipedia A team of about 18 commandos led by Lt. Arvind Singh conducted an amphibious raid on LTTE positions at Gurunagar. They swam long distances and used small assault craft and floating rafts laden with explosives to approach their targets stealthily. Daily News Archives+1 The commandos rigged explosives on the jetty and on LTTE speedboats moored there and detonated them. They then disengaged and returned under fire without suffering casualties among their own team. Daily News Archives 📌 Important Clarification: This was not a large-scale strike on a “major port infrastructure” — Gurunagar did not have a formal harbour with large concrete port buildings or shipping docks comparable to Colombo or Trincomalee. It was essentially a fishing and small-boat landing area/jetty used by LTTE marine elements and local fishermen, not a fully developed commercial port. Daily News Archives 📌 Were Ships or Civilian Boats Hit? The primary targets were LTTE speedboats and small craft which were being used for logistic movement and potentially for attacks. These were destroyed as part of the demolition charges placed by the commandos. Daily News Archives ✔ No evidence exists in reliable military histories that large freight ships, civilian passenger vessels, or commercial port facilities were attacked in this operation. ✔ The operation was a military raid on LTTE assets, not a naval bombardment of port infrastructure. 📌 Casualties & Damage Indian MARCOS — according to mainstream military histories — did not suffer casualties during this specific operation because the team withdrew successfully after detonating their charges. Wikipedia There are no credible official records confirming that hundreds of Indian troops were killed in this particular strike — such figures (e.g., “600 killed”) appear only in unverified online sources and should not be treated as factual. The LTTE’s naval assets at the beach/jetty were destroyed (speedboats and small craft), and the jetty structures sustained explosive damage. 📌 Context: Operation Pawan This raid was part of a larger phase of fighting between IPKF and the LTTE: 📌 Operation Pawan (11–25 October 1987) was the Indian Peace Keeping Force’s campaign to seize and control the Jaffna Peninsula from LTTE control as part of the Indo-Sri Lanka Accord of 1987. Wikipedia Who was involved overall: Indian Army units (various infantry brigades, paratroopers) Indian Navy and Coast Guard blockading coastal supply routes Indian Air Force providing air support LTTE fighters (Sea Tigers, ground forces) Casualties in Operation Pawan (overall, not just Gurunagar): Indian losses: over 200 killed, hundreds wounded in fighting around Jaffna. Wikipedia LTTE losses: estimated thousands overall in the broader Jaffna campaign. Wikipedia This reflects intense urban and jungle warfare over several weeks — not solely the commandos’ beach raid. 📌 Was There a “Port” at Gurunagar? 📍 Gurunagar (Jaffna) was historically a fishing and small-boat landing zone, not a major commercial harbour. Footpaths and basic jetties existed for fishing and small craft — not large ships or cranes — especially during the war period when movement of large vessels was restricted. Daily News Archives ✔ So calling it a “thuramukam” (port) in the sense of a major harbour is inaccurate; it was a jetty/small coastal landing used locally and militarily by the LTTE Sea Tigers. 📌 Aftermath & Impact Short-term Impacts: LTTE speedboats and jetty facilities at Gurunagar were destroyed, disrupting some of the group’s coastal logistics. Daily News Archives The IPKF was able to restrict LTTE maritime movement, contributing to the larger campaign to push rebels out of Jaffna’s urban areas. Wikipedia Longer-term Consequences: Operation Pawan as a whole was strategically costly for India — heavy casualties, political controversy, and eventual Indian withdrawal in 1990. Wikipedia The war further deepened mistrust between the LTTE and IPKF, eventually leading to the assassination of Indian Prime Minister Rajiv Gandhi in 1991, claimed by the LTTE. Wikipedia Civilian consequences: The broader Jaffna operations were part of intense urban warfare affecting civilians in and around Jaffna — shelling, displacement, and casualties — but these were not limited to the Gurunagar raid itself and reflected the larger conflict. Wikipedia 📌 Summary Aspect What Really Happened Target on Oct 21, 1987 MARCOS raid on LTTE boats and jetty at Gurunagar, Jaffna. Daily News Archives Type of place Small jetty/landing area, not a large port. Daily News Archives Ships attacked? LTTE small speedboats and jetty facilities, not big naval or civilian ships. Daily News Archives Casualties (MARCOS) No reported commandos killed in that specific raid. Wikipedia Casualties in campaign IPKF losses in Jaffna operations numbered in the hundreds overall. Wikipedia Aftereffects Disruption of LTTE coastal logistics; part of wider conflict that shaped Sri Lanka’s civil war and India-Sri Lanka relations. Wikipedia
-
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் [மூன்று பகுதிகள்]
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 கிறிஸ்துமஸ் ஈவ் [christmas eve] சந்திப்பு டிசம்பர் 24 அன்று, யாழ்ப்பாணத்தின் அன்றைய மாலை மெதுவாக மங்கிக் கொண்டிருந்தது. நாட்காட்டியில் [காலண்டரில்] அது கிறிஸ்மஸ் ஈவ் [இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள்] என்று எழுதப்பட்டிருந்தாலும், யாழின் வானம் அதை எந்த மத நாளாகவும் கருதவில்லை. அது பைபிளில் காணப்படும் தேதி அல்ல. கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததாக ஒருபோதும் பைபிளில் கூறப்படவில்லை. அது ஒரு முன்மொழிவு மட்டுமே. அதுவும் கிறிஸ்து இறந்து 340 ஆண்டுகளின் பின்பே. அதனாலோ என்னவோ அது எப்போதும் போலவே — காற்றோடு, உப்புக் காற்றின் சுவையோடு, மண்ணின் நினைவோடு இருந்தது. ஆனாலும் மக்கள் பெரும் திரளாக வந்தார்கள். வரலாற்றுக்காக அல்ல, நம்பிக்கைக்காக வந்தார்கள். கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, யாழ்ப்பாண தேவாலயத்திற்குள் காலண்டரில் நம்பிக்கை கொண்டவராக அல்ல, மாறாக மக்களை, இயேசுவை நம்புபவராக, பகுத்தறிவில் என்றும் தன்னை ஒரு மாணவனாகக் கருதும் அடைக்கலம் நுழைந்தான். அவன் ஒரு இளம் வழக்கறிஞர். வடக்கு – கிழக்கில் உண்மைக்காக வழக்காடும் ஒருவன். போலீஸ் நிலையங்களில் அவன் பெயர் நன்கு அறியப்பட்டது. அதிகாரிகளுக்குப் பிடிக்காத பெயர். ஆனால் மக்களுக்கு நன்கு அறியப்பட்ட , விரும்பப்பட்ட பெயர். இவன் அடிக்கடி, தூசி நிறைந்த மாஜிஸ்திரேட் (நீதிபதி / Magistrate) நீதிமன்றங்களிலும் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட காவல் நிலையங்களிலும் தோன்றினான். - தங்கள் சொந்த நிலம், பலவந்தமாக பறிபோவதை பாதுகாத்ததற்காக கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளுக்காகவும், நில உரிமையாளர்களுக்காகவும் , இந்தியா மீனவர்களின் அத்துமீறலுக்கு - அரசின், கடற்படையின் தீவீர கண்காணிப்பு வேண்டி எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்காகவும், தங்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுத்தான். அவனுக்கும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் என்பது பிறந்தநாள் அல்ல, அது வேறு ஒரு நோக்கத்திற்காக, அதாவது அவர் இறந்து நீண்ட காலத்திற்குப் பிறகு - அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது, அப்போது ரோம் நகருக்கு எளிதான மதமாற்றம் தேவைப்பட்டது, கிறிஸ்துவின் பிறப்பை ஐரோப்பா ஏற்கனவே விரும்பிய சாட்டர்னேலியா மற்றும் சூரிய விழாக்களுடன் இணைக்க அந்த நாள் தேர்ந்து எடுக்கப்பட்டது என்பது வரலாறாகும். ஆனால் உலகத்திற்கு வழிகாட்டிய இயேசுவில் நம்பிக்கை உண்டு. தேதிகளை மட்டும் தான் அவன் நம்பவில்லை. அதனால்த்தான் அவன் அங்கு வந்தான். ஒரு சைவ தமிழ், இசை மற்றும் நடன ஆசிரியை, அவர் மதம் மாறுவதற்காக அல்ல, பாடகர் குழுவிற்கு ஒரு பயிற்சி அளிக்க அங்கு அழைக்கப்பட்டு இருந்தாள். அவளின் பெயர் ஆராதனா. சங்கீதத்தை இறைவனுக்காக அல்ல — மனிதனுக்காகப் பாடுவாள். எல்லாவற்றிற்கும் மேலாக, பண்டிகை கீதங்கள் (கரோல் கீதங்கள் / Christmas Carols) முதலில் கிறிஸ்துமஸுக்கு மட்டுமே பிரத்தியேகமானவை அல்ல. அவை ஒருகாலத்தில், வசந்தத்திற்கும், அறுவடைக்கும், சில நேரம் கிண்டலுக்கும் கூட பாடப்பட்ட பாடல் ஆகும். [They were sung in May fields, during harvests, even as satire]. அதனால் அவள் அதில் தேர்ச்சி பெற்ற பாடகியாகவும் இருந்தாள். ஆராதனா, பலிபீடத்தின் அருகே வெறுங்காலுடன் நின்று, சுருதியை சரிசெய்து, தாளத்தைக் கற்றுக் கொடுத்தாள். அது மட்டும் அல்ல, மகிழ்ச்சி ஒரு கடவுளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல [how joy does not belong to one god alone.] என்பதையும் கற்றுக் கொடுத்தாள். ஒரு மரப் பலகையில் தாளம் போட்டு, ஒரு சிறுவனை மெதுவாகத் திருத்துவதை அடைக்கலம் ஓரளவு அருகில் நின்று கவனித்தான். அவள், அவர்களுக்கு குரல் பயிற்சிக்காக பாடிய போது, தேவாலயம் ரோமன், புராட்டஸ்டன்ட் அல்லது ஆங்கிலிகன் மதத்தை உணரவில்லை - அது தமிழை உணர்ந்தது [When she sang, the church did not feel Roman, Protestant, or Anglican—it felt Tamil.]. நள்ளிரவு சேவைக்குப் பிறகு, அடைக்கலமும் ஆராதனாவும், அலங்கரிக்கப்படட காகித நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து ஒருவருடன் ஒருவர் சமயங்களின் வரலாறு பற்றியும், இன்றைய இலங்கை வாழ் தமிழரின் நிலைகள் பற்றியும் பேசினர் . அப்பொழுது, "உனக்குத் தெரியுமா? ," அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள், "புத்தாண்டும் வரப்போகிறது. இன்னொரு கடன் வாங்கிய கொண்டாட்டம்." அவன் தலையசைத்தான். "ஜனவரி 1 ஆம் தேதி பிரபஞ்சம் சார்ந்தது அல்ல. அது நிர்வாக ரீதியானது. ஜூலியஸ் சீசரின் நாட்காட்டி. பேரரசால் எழுதப்பட்ட காலம்." "மகாவம்சம் கூட புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்று கூறுகிறதே ?, அதை நம்புகிறீர்களா? என்று ஆராதனா இலங்கை அரசியல் பக்கம் திரும்பினாள். அடைக்கலம் ஒரு சிரிப்புடன் கூறினான், எல்லா புராணங்களும் கூறும் புரளிகள் தான் இவை, என்றாலும் மகாவம்சத்தை உண்மையான வரலாறாக இன்னும் நம்புகிறார்கள். அது தான் தமிழர் பூமியில் நிகழும் அட்டூழியம்" என்றான். “நம்பிக்கை கேள்வி கேட்காத போது தான் ஆபத்தாகிறது,” அவன் தொடர்ந்தான். அவள் மெதுவாகச் சொன்னாள்: “ஆமாம் கேள்வி கேட்கத் தெரிந்த ஒரு மனிதனால் மட்டுமே நம்பிக்கையையும் காதலையும் உண்மையாகப் பாதுகாக்க முடியும். [Only a man who knows how to ask questions can truly protect belief and love.]” அந்த இரவு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் இருவரையும் சமமாகப் பார்த்தது. அந்த உரையாடல் அவர்களை கொஞ்ச நேரம் ஆறுதலாக கதைக்க வழிவகுத்தது. ஆனால், அந்த உரையாடலின் போது, அவன் கண்களுக்கு ஒரு ஓய்வும் கிடைக்கவில்லை. அது அவளை அளந்து அளந்து அவன் மனதுக்கு சொல்லிக் கொண்டே இருந்தது. கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால் ஒப்புமையில் கடலினையும், மீனையும், அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந் தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை தன்னகத்தே கொண்ட ஆராதனா, அடைக்கலத்தின் மனதில் புகுந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. கிறிஸ்மஸ் – புத்தாண்டு இடைப்பட்ட நாட்கள், விடுதலைகளாக இருந்ததாலும், கொண்டாட்ட நாட்களாக இருந்ததாலும் அவர்கள் உரையாடல்களை தொலைபேசி மூலமும் சிலவேளை நேரடியாகவும் சந்தித்து தொடர்ந்தனர். யாழ்ப்பாண சுப்பிரமணிய பூந்தோட்டத்தின் பழைய மரங்களுக்குக் கீழும், யாழ் பொது நூலத்திலும் அவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலங்களை மெல்ல எழுதிக் கொண்டு இருந்தனர். ஆனால் அந்த பழைய மரங்கள் மகிழ்வாகக் காணப்படவில்லை. அதை வெட்டி அகற்றி, உட்புற அரங்கம்அமைப்பதில் சிலர் ஈடுபடுவது அதன் காதில் விழுந்ததோ என்னவோ? அடைக்கலத்தின் கண்களில் கேள்விகள் அதிகம். பதில் கொடுக்காத உலகத்திற்கான வழக்குத் தயாரிப்பே அவன் வாழ்வு. அதேபோல, ஆராதனாவுக்கு நடனமும் இசையும் அவளுக்குப் பக்தியின் மொழி. கேள்வி கேட்காமல் நம்புவதில் அவளுக்கு ஒரு அமைதி இருந்தது. ஆனால் அப்போது அவர்களுக்கு, குறிப்பாக ஆராதனாவுக்கு காதல் பிறக்கவில்லை. ஆனால் இரண்டு உலகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தன. "இறப்பவே தீய செயினும் தம் நட்டார் பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட! ஒருவர் பொறை இருவர் நட்பு" என்பது போல, இந்த அடி வாயிலாகப் பொறுமை குணமுடையோராக நண்பர்கள் இருக்க வேண்டுமென நாலடியார் பாடல் உரைக்கின்ற படி, அவர்களின் சந்திப்பு பொறுமையுடனும், ”ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று” என்பதற்கு இணங்க, பிற உயிர்களுக்குக் கருணை பண்பு காட்டும் குணமில்லாதவரின் உள்ளத்தில் நட்பும் உறவும் தோன்றுவதில்லை என்பதை உணர்ந்து அது அமைதியாகத் அவர்களுக்கு இடையில் தொடங்கியது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் துளி/DROP: 1965 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/33069006056081282/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 77 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 77 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை இலங்கையின் மதமாற்றத்தை விவரிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவின் மடங்கள் அல்லது துறவறக் கட்டளைகளுடன் தொடர்புடைய கதைகள் அல்லது புனைவுககளின் சுருக்கம் அத்தியாயங்கள் VI [VI. The Ceylonese Legend of Asoka] மற்றும் VII [VII. The Indian Legends of Asoka] இல் இந்த புத்தகத்தில் காணப்படுகிறது. அவற்றை வரலாறாக ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும், உண்மையில், தீவின் மதமாற்றம் அது பழைய புனைவுகளில் கூறப்பட்டதை விட மிகவும் மெதுவாக நடந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய எந்த அதிகாரப்பூர்வமான விவரமும் எங்களிடம் இல்லை. இப்போது அசோகர் கல்வெட்டுக்களின் கூற்றுக்களின் படி, அது இலங்கையைப் பற்றி அமைதியாக உள்ளது. எனவே, உள்ளூர் துறவியரின் கதைகளை உறுதிப்படுத்தும் தெளிவான வரலாற்றுப் பதிவுகளோ அல்லது அசோகப் பேரரசரிடமிருந்து அதிகாரப்பூர்வ கல்வெட்டுகளோ இல்லை என்பதே உண்மை. அசோகரின் மகள் என்று கூறப்படும் சங்கமித்தாவின் கதை கேள்விக்குரியது. அவளுடைய பெயருக்கு "ஒழுங்கின் தோழி" ["Friend of the Order"] என்று பொருள். இது ஒரு உண்மையான நபரின் பெயரை விட ஒரு குறியீட்டு பட்டமாகத் தெரிகிறது. மேலும், எந்த கல்வெட்டுகளிலும் அவளைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. [சங்கமித்தா பிறக்கும் பொழுது ஒரு இந்து, அப்படி என்றால், எப்படி அவளுக்கு "ஒழுங்கின் தோழி" என்று பெயர் சூட்டி இருப்பார்கள்?] மகிந்த மற்றும் அவரது சகோதரியின் கதைகள், பின்னர் இலங்கையில் பௌத்தத்திற்கு ஒரு மகத்தான வரலாற்றை வழங்கவும், பிரபல பேரரசரான அசோகருடன் இணைக்கவும் உருவாக்கப்பட்டதாக பேராசிரியர் ஓல்டன்பெர்க் [Professor Oldenberg] நம்புகிறார். மகிந்தா மற்றும் சங்கமித்தா பௌத்தத்தை ஒரே நிகழ்வில் கொண்டு வந்திருக்க முடியாது. அது மிகவும் மெதுவாகவும் படிப்படியாகவும் பரவி இருக்கலாம். அதாவது, யதார்த்தம் மிகவும் படிப்படியாக இருந்து இருக்கும் சுருக்கமாக, இலங்கைக்கு பௌத்தம் வருவது பற்றிய பாரம்பரியக் கதைகள் முற்றிலும் உண்மையாக இருக்காது என்றும், இந்த செயல்முறை புராணக்கதைகள் கூறுவதை விட படிப்படியாகவும் குறைவான வேகத்துடனும் நடந்து இருக்கலாம் என்றும் இந்தப் பகுதி கூறுகிறது. The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற நூலில், பக்கம் 49 தொடக்கம் 51 வரையில் உள்ள பகுதியின் எளிமையான விளக்கம் என்னவென்றால், பௌத்தம் காலப்போக்கில் இலங்கைக்கு பரவியது: பௌத்த இலக்கியங்கள் [Buddhist literature] (பாளி மற்றும் ஒருவேளை சிங்கள மொழியில் எழுதப்பட்டவை) இலங்கைக்கு ஒரே நேரத்தில் வரவில்லை. அதாவது, மகத நாடு (இந்தியாவில் புத்த மதம் தோன்றிய இராச்சியம்) அல்லது மகதம் (Magadha) பேரரசுடனான நேரடித் தொடர்பின் திடீர் விளைவை விட, மாறாக, இலங்கைக்கும், இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியாவின் பகுதிகளுக்கும் இடையிலான வழக்கமான தொடர்பு மூலம் புத்த மதம் படிப்படியாகப் பரவியது. சைனம் மற்றும் பௌத்தத்தின் வளர்ச்சியில் மகதமானது ஒரு முக்கியப் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் புத்த மதம்: 5 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன பயணிகள், புத்த மதம் தென்னிந்தியாவை அடைந்து சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். சில புத்த மடங்கள் தென் இந்தியா தமிழ் பகுதிகளில் இருந்தன, அவை இலங்கையின் புத்த நம்பிக்கைக்கும் செல்வாக்கு செலுத்தின கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மகிந்த தேரரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist]. பாண்டிய இராச்சியத்தில் (கி.பி 640) மத நிலைமைகள்: ஹியுங் சாங், மலைக்கோடடை பகுதிக்கு (காவிரி நதிக்கு தெற்கே உள்ள பாண்டிய இராச்சியம்) விஜயம் செய்து பல்வேறு மதக் குழுக்களைக் கவனித்தார். சிலர் புத்த மதத்தைப் பின்பற்றினர், மற்றவர்கள் இந்து மதம் அல்லது சமண மதத்தைப் பின்பற்றினர். பல புத்த மடாலயங்கள் இடிபாடுகளில் இருந்தன, சுவர்கள் மட்டுமே அங்கு இருந்தன. இந்து கோயில்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தன, மேலும் பலர் சமண மதத்தைப் பின்பற்றினர். மகேந்திரனும் [மகிந்த] அவரது இலங்கைப் பயணமும்: மதுரைக்கு (பாண்டிய இராச்சியம்) அருகில், புதர்களால் மூடப்பட்ட ஒரு பழைய புத்த மடாலயம் இருந்தது. இந்த மடாலயம் பேரரசர் அசோகரின் தம்பி மகேந்திரனால் [மகிந்த] கட்டப்பட்டதாக பாரம்பரியம் கூறப்படுகிறது. அங்கே அருகிலுள்ள ஒரு தூபி (ஒரு புத்த ஆலயம்) அசோகரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. Part: 77 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 “the conversion of the island must have been a process of much slower than it is represented to have been”. The Edicts, as now interpreted, are silent about Ceylon, and cannot be cited in support of the local monastic traditions, which although resting upon a basis of fact, are wholly untrustworthy of details. We must be content to admit our ignorance, which is likely to continue. I am sceptical about the tale of Samghamitta, the supposed daughter of Asoka. Her name, which means ‘Friend of the Order’, is extremely suspicious, and the inscriptions give no indications of her existence. Professor Oldenberg has much justification for his opinion that the story of Mahinda and his sister seems to have been-‘invented for the purpose of possessing a history of the Buddhist institutions in the island, and connect it with the most distinguished person conceivable – the great Asoka. The historical legend is fond of poetically exalting ordinary occurrences into great and brilliant actions; we may assume that, in reality, things were accomplished in a more gradual and less striking manner than such legends make them appear’. The naturalization in Ceylon of the immense mass of Buddhist literature now exist in Pali and, I believe, also in Sinhalese, must necessarily have been a work of time, and seem to be the fruit of long and continuous intercourse between Ceylon and the adjacent parts of India, rather than the sudden result of direct communication with Magadha. The statements of the Chinese pilgrims in the fifth and seventh centuries prove that Asoka’s efforts to propagate Buddhism in the far South were not in vain, and that monastic institutions existed in the Tamil countries, which were in a position to influence the faith of the island. Hiuen Tsang mentions one stupa in the Chola country, and another in the Dravida or Pallava kingdom ascribed to Asoka. Still more significant is his description of the state of religion in A. D. 640 in the Malakotta Pandya country to the south of the Kaviri (Cauvery), where he found that- ‘Some follow the true doctrine, others are given to heresy. They do not esteem learning much, but are wholly given to commercial gain. There are the ruins of many old convents, but only the walls are preserved, and there few religious followers. There are many hundred Deva (Brahmanical) temples, and a multitude of heretics, mostly belonging to the Nirgranthas (Jains). Not far to the east of this city (the unnamed capital,? Madura) is an old Sangharama (monastery) of which the vestibule and court are covered with wild shrubs; foundation walls only survive. This was built by Mahendra, the younger brother of Asoka-raja. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 78 தொடரும் / Will follow துளி/DROP: 1964 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 77] https://www.facebook.com/groups/978753388866632/posts/33063046316677256/?
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08 அத்தியாயம் 8 - மீண்டும் யாழ்ப்பாணம் அந்த மாலை, தென்றல் காற்று வீசிக்கொண்டிருக்க, மரங்களின் இலைகள் தன் பாடல்களை பாடிக்கொண்டிருக்க, அவர்களின் வண்டி அளவான வேகத்துடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. "யாழ்ப்பாண நூலகம், இடிந்து விழுந்தாலும், அது பேசுகிறது," என்று ஆரன் தன் உரையாடலைத் தொடங்கினான். "அறிவையும் கலாச்சாரத்தையும் முற்றிலுமாக அழிக்க முடியாது என்பதை இது நமக்குச் சொல்கிறது. எங்கள் அன்பைப் போலவே, அவையும் தாங்கும்." என்றான். அனலி அவனது கையின் மேல் ஒரு கையை வைத்தாள். "அப்படியானால், நாம் நினைவைப் பேணுபவர்களாக இருப்போம், ஆரன். நம் முன்னோர்களின் கதைகள், அவர்களின் கவிதைகள், அவர்களின் பக்தி மற்றும் நமது பயணத்தை எடுத்துச் செல்வோம் - இதனால் காலம் நகர்ந்தாலும், எதுவும் உண்மையில் இழக்கப்படாது." என்றாள். ஒரு நிமிஷம் வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள். மன்னார் கடலின் அழகை இருவரும் சேர்ந்து ரசித்தார்கள். உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல, அவள் காந்த விழிகளில், அவள் அப்பாவின் எச்சரிக்கையை சற்று மறந்துவிட்டான். கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன, ஆரனின் அனலியின் பாதங்களை நனைத்து குழப்பிவிட்டோமோ என்று. மணல் தோண்டும் நண்டுகளும் இருவரையும் விழி உயர்த்தி பார்த்தன, அவர்களின் அணைப்பில் இடைவெளி இல்லையே என்று. தன்னைவிட ஒரு அழகி இருக்கிறாளென நிலவும் இன்னும் விண்ணில் தோன்றவில்லை. இடைவெளி இல்லாமல் இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தனர். நல்ல காலம் "சித்தி" என்று அக்காவின் மகள் கூப்பிட்டது இருவரையும் எல்லை தாண்டாமல், வண்டிக்கு திரும்ப வைத்தது. என்றாலும் அவன் எண்ணங்கள் ஏதேதோ மனதில் இன்னும் கற்பனை செய்துகொண்டே இருந்தது. 'பிரமன் அழகை எல்லாம் ஒன்று குழைத்து படைத்திட்ட அழகோவியமாக, அவள் அங்கத்தில் எது அழகு என்று ஆராய்ச்சி பண்ண முடியாத படி என்னை தவிக்க வைத்துவிட்டானே ' என்று பெருமூச்சு விட்டான். 'மான் விழி, மீன் விழி என்று பெண்களின் கண்களைச் சொல்வார்கள். இவள் கண்களோ பார்த்தோர் மனதை ஊடுருவிச் செல்லும் அம்பு விழியாய் இருக்கே. அழகான கண்கள் அதன் இமைகள் நேர்த்தியாக மை தீட்டி அழகு கொடுக்குதே' ஆரன், அனலியை திரும்பி பார்த்தான். முகத்தில் தவழும் தலை முடியால் அவள் முகம் மேகம் மூடிய நிலவு போல பிரகாசித்தது. கன்னங்களோ பளிங்குக்கல் போல பளபளத்தது. அளவாக வடிவமைத்த மூக்கோ கிளி கண்டால் கொத்தும் கோவைப்பழம் போல இருந்தது. காதில் இருந்த வளையம் கிளி ஊஞ்சலாட நினைத்திடுமோ என்று கொஞ்சம் பயந்தான். அவன் எண்ணம் முடிவு இல்லாமல் தொடர்ந்தது. அப்பொழுது அவளின் தேனில் ஊறிய பலாச்சுளை போன்ற உதடுகள் அதன் ஓரங்களில் சிறுநகை ஒன்றைத் தவழ விட்டது. அந்தப் புன்னகை அவன் மனதை கிறங்கடித்தது, ஆனால் அவன் அதை வெளியே காட்டவில்லை. யாழ்ப்பாணம் அடைந்ததும், நேராக வண்டி 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' க்கு போனது. அங்கே அவர்களை வரவேற்ற அனலியின் அப்பா, ஆரனுக்கும் அனலிக்கும் வேன் டிரைவருக்கும் வடையுடன் கோப்பி கொடுத்தார். அக்காவின் மகள் துள்ளிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டார். ஆரன் முழு சுற்றுலாவிற்க்கான மிகுதிப் பணத்தைக் கொடுத்தான். அதன் பின் அவர்கள் உரையாடும் பொழுது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆரன், அனலியைத் திருமணம் செய்ய விரும்புவதாக தன் எண்ணத்தை மெதுவாகக் கூறினான், உடனே கொஞ்சம் வெட்கத்துடன், பக்கத்தில் இருந்த அனலி, தன் அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, அவரின் காதல் தானும் விரும்புவதாகக் கூறினாள். அவர்களுக்குள் எந்த சூழலில்-எந்த காலகட்டத்தில் காதல் வந்தது, ஆக்கிரமித்தது என்று சொல்ல முடியவில்லை. ஓசை படாமல் வந்து உட்கார்ந்து கொண்டது. இரண்டு பேருக்குள்ளும் காதல் இருந்தது பல சந்தர்ப்பங்களில் உறுதியானது. ஆரனுக்கு இருந்த அதே உணர்வு அனலிக்கும் இருந்தது. அதனால்த்தான் அனலியும் உடனடயாக ஒத்துக்கொண்டாள். சுற்றுலா பயணிக்கவே காலம் பணித்தாலும் சற்றும் எதிர்பாராது நம்மை இணைத்ததோ? தேகம் சிறகடிக்க வானம் குடைபிடிக்க தொலைந்தது எம் இருவரின் இடைவெளியோ ? மேனி எங்கும் சுவை தேடி அலையும் இளம்முயல் குட்டிகள் நம் இதழ்களோ? குரல் அலையையும் இதய வாசத்தையும் கடத்திவரும் காற்றின் காதலர்கள் நாமோ? விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்ததோ பொங்கும் நட்பை காதலாய் மாற்றிட? வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்ததோ என்றும் நாம் ஒருவரையொருவர் நினைக்க? அதன் பின், அவர்கள் தங்கள் காதல் தொடங்கிய நல்லூர் கோவிலுக்கு மீண்டும் சென்றனர். பிரமாண்டமான திருவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன, தாளமாக மேளங்கள் முழங்கின, பக்தர்கள் முருகனுக்கு காணிக்கைகளை எடுத்துச் சென்றனர். காற்று, கொண்டாட்டத்தாலும் பக்தியாலும் மின்னியது. ஆரன் அனலியை நோக்கித் திரும்பினான். “நல்லூரிலிருந்து திருகோணமலை வரை, கண்டி முதல் நுவரெலியா வரை, மட்டக்களப்பு முதல் கதிர்காமம் வரை, முல்லைத்தீவு முதல் மன்னார் வரை ... இந்தப் பயணம், ஒரு பயணத்தை விட மேலானது. இது இதயத்தின் யாத்திரையாக இருந்தது. ஒவ்வொரு இடமும் எங்களுக்கு பக்தி, சகிப்புத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் அழகைக் கற்றுக் கொடுத்துள்ளது.” என்றான். அனலி சிரித்தாள், அவள் கண்கள் பிரகாசித்தன. “இவை அனைத்திலும், நாங்கள் ஒன்றாக நடந்தோம். வரலாற்றின் வழியாக, நிலப்பரப்புகளின் வழியாக, கடந்த காலத்தின் கிசுகிசுக்கள் வழியாக. எங்கள் காதல் இந்தக் கதைகளைப் போன்றது - இலங்கையின் தமிழ் மண்ணில் பின்னப்பட்டது.” என்றாள். மாலை சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது மறையும் போது, நகரத்தை அம்பர் (amber) ஒளியில் வரைந்தபோது, ஆரனும் அனலியும் நல்லூர் கோயில் படிகளில் கைகள் பின்னிப் பிணைந்து, இதயங்கள் ஒன்றாகின. அந்த அமைதியான, புனிதமான தருணத்தில், அவர்கள் புரிந்துகொண்டார்கள்: அன்பும் வரலாறும் பிரிக்க முடியாதவை. பக்தி, நினைவாற்றல் மற்றும் பகிரப்பட்ட பயணம் மூலம், அவர்களின் கதை - யாழ்ப்பாணத்தின் நீடித்த உணர்வைப் போல - என்றென்றும் நிலைத்திருக்கும் என்று. அனலி அவன் மீது சாய்ந்தாள், அவளுடைய கண்கள் மின்னின. "அன்பு அனைத்தையும் சுமந்து செல்கிறது. அது கதைகள், பக்தி மற்றும் அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையை சுமந்து செல்கிறது. அதனால்தான் நமது கதையும் முக்கியமானது - அது திரைச்சீலையின் ஒரு பகுதியாகும்." என்றாள். ஆரன் தனது கையை அவளின் கையுடன் இறுக்கிக் கொண்டான். "அப்படியானால், அனலி, நாம் எங்கு சென்றாலும், வரலாறு எந்த புயல்களைக் கொண்டு வந்தாலும், நமது அடையாளத்தைக் கொண்டாடுவோம், நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்போம், நமது அன்பைப் போற்றுவோம் என்று சபதம் செய்வோம்." என்றான். "நாங்கள் சென்ற ஒவ்வொரு நகரமும் எங்களுக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்தது: கதிர்காமத்தில் பக்தி, யாழ்ப்பாணத்தில் மீள்தன்மை, மன்னாரில் சகிப்புத்தன்மை, மலைப்பகுதிகளில் நெருக்கம், இப்போது, இங்கே - நாம் உள்ளூருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான பாலம், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான பாலம்." என்றாள் சிரித்தபடி. “வரலாறு புத்தகங்களில் மட்டுமல்ல,” ஆரன் மெதுவாகச் சொன்னான். “அது கோயில்களிலும், ஆறுகளிலும், கோட்டைச் சுவர்களிலும்... இதயங்களிலும் உள்ளது. நாங்கள் செய்தது எளிமையானது, ஆனால் ஆழமானது - நாங்கள் நினைவில் வைத்திருந்தோம், நேசித்தோம், அதை முன்னோக்கி எடுத்துச் சென்றோம்.” என்றான். அவன் தனது நாட்குறிப்பில்: "இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். பண்டைய பயணிகள், கல்வெட்டுகள் மற்றும் தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நாளேடுகள் இந்த நிலங்களை ஆண்ட தமிழ் மற்றும் நாக மன்னர்களின் இருப்பை பதிவு செய்கின்றன. இவ்வாறு ஆழமான வரலாறு இருந்தபோதிலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை (1948 முதல்) பாகுபாடு, இனக் கலவரங்கள் 1956, 1958, 1977, 1983, … ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1987 க்கும் 2009 மே 18ம் தேதிக்கும் இடையில் குறைந்தது ஐம்பதாயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட பொது தமிழ் மக்கள் உயிரிழந்தனர். பல இலட்ச மக்கள் குறிப்பாக 1983 க்கு பின் புலம்பெயர்ந்தார்கள். அவர்களின் பரம்பரையில் ஒருவனே நான்! [ஆரன்!] இன்று, பல தமிழர்கள் என் [ஆரனின்] தாய் தந்தை போல், கட்டாய இடம்பெயர்வு காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் அதே வேளையில், தாயகத்துடனான அவர்களின் தொடர்பு மங்கிவிடக்கூடாது. இந்த தொடர்பைப் பேணுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வழக்கமான வருகைகள் ஆகும். யூதர்கள் 2,000 ஆண்டுகள் எருசலேமுக்குச் சென்றனர். ஆர்மேனியர்கள் இன்னும் அர்மேனியாவிற்கு செல்கிறார்கள். ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள், கானா, செனெகல் சென்று “Door of No Return” இடத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். அப்படியே, புலம்பெயர் தமிழரும் தாயகத்தை விட்டு விலகக் கூடாது. நீங்கள் செல்லாவிட்டால் வரலாறு அழிக்கப்படும். ஆனால் நீங்கள் சென்றால் — வரலாறு உயிர்ப்படும். நம்மை யாரும் அழிக்க முடியாது என்பதற்கான சாட்சி அதுவே. நாம் செல்லாவிட்டால், நம்மை அழிக்க முயலும் மௌனம் மேலோங்கும். நாம் சென்றால், உலகம் அறியும் — வடகிழக்கு எப்போதும் தமிழர் தாயகம் என்று. ஆனால், நீங்கள் அங்கே உங்களுக்கு ஒரு துணை தேடவேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அது தனிப்பட்ட முடிவு, அதில் நானும் ஒருவனாகிவிட்டேன். அவ்வளவுதான்!" என்று எழுதினான். அனலி அதைப் பார்த்து, ஆரனை மனதார வாழ்த்தியதுடன் பெருமையும் அடைந்தாள்! ஆரன் அனலியின் இதயங்கள் பல நூற்றாண்டுகளின் தமிழ் வரலாற்றோடு ஒற்றுமையாக துடித்தன - ஒரு மக்களின் கதையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு காதல் கதையாக அது பின்னிப்பிணைந்து. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1963 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/33056093137372574/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 76 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 76 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 12: இது புத்தரின் நம்பிக்கையை பல நாடுகளுக்குப் பரப்புவது பற்றியது. தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டிலும் நாக மன்னர்கள் மற்றும் நாக இனம் பற்றிய பாரபட்சம் உள்ளது. இது இந்த அத்தியாயத்தில் பிரதிபலிக்கிறது. இந்த அத்தியாயம் இலங்கையில் உண்மையில் நடந்த எந்த வரலாற்று நிகழ்வுகளையும் பாதிக்காத ஒன்று ஆகும். இருப்பினும், பகவான் புத்தரின் பெயரில் வரலாற்றுத் திரிபு இங்கு நடந்துள்ளது. மொகாலிபுத்தர் (Moggaliputta), தேரர்களை அருகிலுள்ள நாடுகளுக்கு புத்தரின் நம்பிக்கையைப் பரப்ப அனுப்பினார். அசோகரின் அரசுக்கு, இலங்கை அருகிலுள்ள அண்டை நாடு அல்ல. மகாவம்சம் மற்றும் தீபவம்சத்தில் பட்டியலிடப்பட்டுள்ள, அனுப்பப்பட்ட நாடுகள் மற்றும் தேரர்களின் பெயர்கள் அசோக மன்னரின் பாறை அரசாணை 13 உடன் சரியாக உறுதிப்படுத்தப் படவில்லை. பாறை சாசனம் 13 இன் படி, அசோகர் கலிங்கப் போருக்கு வருத்தம் தெரிவித்ததுடன், தர்மத்தைப் பரப்புவதில் கவனம் செலுத்தினார் என்பதையும் ஒழுக்கம் மற்றும் நெறிமுறை விதிகளைப் பயன்படுத்தி நீதி மற்றும் நல்லாட்சி மூலம் தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும் மற்றும் இராஜதந்திர உறவுகளைக் ஏற்படுத்துவதையும் குறிப்பிடுகிறது. குறிப்பாக, அசோகர் அண்டை நாடுகளுக்கு தரும தூதுகளை [பௌத்தத்தில், தர்மம் (பாலி: தம்மம்) என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கிறது / Dhamma missions] அனுப்பியதாக பதின்மூன்றாவது சாசனத்தில் கூறுகிறார். கிரேக்கம், கந்தாரா (இன்றைய ஆப்கானிஸ்தான்) மற்றும் தமிழ் நாடுகளான சோழ, பாண்டிய, கேரளம் மற்றும் சத்யபுத்ரா மற்றும் தாமிரபரணி வரையும் [Greek, Ghandara (present day Afghanistan), and various other places, including Tamil countries Cola, Pandya, Kerala, Satyaputra and as far as Tamaraparni] உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தூதுவர்கள் அனுப்பப்பட்டனர் என்று தர்மத்தின் வெற்றியைப் பற்றிப் பேசுகிறது. தாமரைபர்ணி என்பது இலங்கை அல்ல, தாமரைபர்ணி நதிக்கரையோரப் பகுதிகளைக் குறிக்கிறது. தாமரைபர்ணி நதி இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாண்டிய நாட்டில் உருவாகி, பாண்டியர்களின் கடற்கரையான மன்னார் கடலுக்கு ஓடுகிறது. அசோகர் தனது எந்த ஆணைகளிலும் இலங்கை அல்லது அதற்கு உரித்தான எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை, ஆனால் மேற்கூறிய தமிழ் நாடுகளை அவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அரசாணையில் உள்ள தாமரைபர்ணியை எதிர் கடற்கரையில் உள்ள ஒரு இடமாகக் கருத முடியாது. வி.ஏ. ஸ்மித், 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919,', என்ற குறிப்பில், இலங்கை என்பது தாமரைபர்ணி என்ற பெயரால் குறிக்கப்படவில்லை என்பதைக் தெளிவாகக் காட்டுகிறது. அசோகரின் ஆணை, சோழர்கள் மற்றும் பாண்டிய நாடுகளை தர்மத்தின் மூலம் அவர் கைப்பற்றிய நாடுகள் என்று தெளிவாகக் குறிக்கிறது, ஆனால் தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டும் இந்த நாடுகளைக் குறிப்பிடவில்லை. புத்த மதம் தமிழ் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தது, மகிந்தன் அல்லது மகிந்தரால் காற்றில் பறந்து கொண்டு வந்தது அல்ல என்ற உண்மையை மறைக்க, இது வேண்டும் என்றே விடுபட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் சொல்லப்படும் பொய்யை விட, ஒருவரின் தொடர்ச்சியான, கட்டாயப் படுத்தப்பட்ட மற்றும் பெரும்பாலும் பகுத்தறிவற்ற நடத்தையின் விளைவாகக் கூறப்படும் பொய் இது என்று கருதுகிறேன். அது மட்டும் அல்ல, இந்தியாவில் மூன்றாம் பௌத்த சபை மற்றும் மொகாலிபுத்தர் தேரர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. வி.ஏ. ஸ்மித் [V. A. Smith], மூன்றாம் சபையையும் வரலாற்றுக் குறிப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, இலங்கையின் மதமாற்றத்தையும், சரியான வரலாறாக இல்லாமல், கட்டுக்கதைகளாகக் கருதுகிறார். ஏழாம் நூற்றாண்டின் சீன யாத்ரீகர் சுவான்சாங் (யுவான் சுவாங்) (ஆங்கிலம்: Xuanzang / Hsuan-tsang, sometimes transcribed Xuan Tsang), சோழ நாட்டில் தூபி [stupa] இருந்ததாகவும், திராவிட அல்லது பல்லவ இராச்சியத்தில் மற்றொரு தூபி இருந்ததாகவும் கூறுகிறார். இது அசோகரின் தம்பி மகேந்திரனால் [மகிந்தவினால் / Vitashoka or Vigatashoka] கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. முழு விவரங்களுக்கு 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற குறிப்பின் 49வது பக்கத்தைப் பார்க்கவும். இந்த தம்பி தான் தமிழ்நாட்டிலிருந்து புத்த மதத்தை இலங்கைக்கு எடுத்துச் சென்றவர். என்றாலும் இலங்கைத் துறவிகள் தமிழ்நாடு வழியாக பௌத்தத்தின் தொடர்பை அழிக்க விரும்பினர் போல் தெரிகிறது. இதனால், அசோகரின் மகன் மற்றும் மகள், மகிந்த மற்றும் சங்கமித்தா ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களை உண்டாக்கினார் என வலுவாக நம்பலாம், ஏனென்றால், புத்தர் மற்றும் அசோகன் பிறந்த இந்தியாவில், இந்த இரு பிள்ளைகளையும், இந்தியாவின் வரலாற்றிலோ இலக்கியத்திலோ எங்குமே காணவே இல்லை. இதேபோல் தான், பேரரசர் அசோகா தனது ஒன்றுவிட்ட 99 சகோதரர்களைக் கொன்றார் என்ற கதையும் இருக்கிறது. 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற புத்தகத்தின் 47 முதல் 50 பக்கங்கள், இலங்கைத் தீவின் புத்த மத மாற்றத்தைப் பற்றி அலசுகிறது. Part: 76 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 12: This is about spreading Buddha’s faith to many countries. There are bias in both Dipavamsa and Mahavamsa about Naga kings and the Naga race. This is reflected in this chapter. This chapter has no bearing on any historical events that really took place in Lanka. However, historic distortion took place on the name of Lord Buddha. Moggaliputta sent Theras to propagate the faith to the adjacent countries. Lanka is not an adjacent, not a neighbouring, country to the Asoka’s kingdom. The names of countries and Theras sent to the countries as listed in the Mahavamsa and the Dipavamsa do not properly corroborate with the Rock Edict 13 of the King Asoka. Asoka sent missions, as per his Rock Edict 13, to Yona king Antiyoga, to four kings beyond the king Antiyoga, named Tulamaya, Antekina, Maka and Alikyashudala. Asoka speaks of conquest by Dhamma “likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamaraparni”. Tamaraparni refers to the regions along the Tamaraparni River, not Lanka. Tamaraparani River originates in the Pandya country, in the present day Thirunelvelly District, and runs to Mannar Sea, the sea coast of Pandyas. Asoka never mentioned the name Lanka in any of his edicts, but he clearly states the above mentioned Tamil countries. Tamaraparni in the edict can never be construed as a place on the opposite coast. V. A. Smith, Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919,' was clearly of the view that Lanka is not meant by the name Tamaraparni. Asoka’s edict clearly identifies the Cholas and Pandya countries as the countries where his conquest by Dhamma took place, but both the Dipavamsa and the Mahavamsa do not mention these countries. This is a deliberate omission to hide fact that the Buddhism came to Lanka from Tamil countries and not by Mahinda by flying through air which is a pathological lie. There is no evidence for the Third Buddhist Council and the convenor Moggaliputta Thera in India. V. A. Smith considers the Third Council and the conversion of Ceylon as described in the chronicles as legends, and not as sober history. The seventh century Chinese pilgrim, Hiuen Tsang, says there was a stupa in the Chola country, and another in the Dravida or Pallava kingdom, believed to be built by Mahendra, the younger brother of Asoka. See page 49 of Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' for full details. This younger brother, Mahendra is the one who took Buddhism to Lanka from Tamil Nadu. The monks wanted to obliterate the connection of the Buddhism through Tamil Nadu, and invented a son and a daughter of Asoka, Mahinda and Sanghamitta. Similarly they invented the fictitious story that the Emperor Asoka killed 99 of his half brothers. There is no independent record in India, the birth place of Buddhism, Buddha, and Asoka about Mahinda and Sanghamitta. The Pages 47 to 50 of Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' are quoted below about the conversion of the island. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 77 தொடரும் / Will follow துளி/DROP: 1962 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 76 https://www.facebook.com/groups/978753388866632/posts/33048586891456532/?
-
"மூன்று கவிதைகள் / 17"
"மூன்று கவிதைகள் / 17" 'புகைப்படக் கவிதை' குறள் தந்த வள்ளுவருடன் நான் குரல் அடக்க எரித்த நூலகத்தில்! குமிழி வாழ்வின் விளிம்பில் இவன் குமுறும் தமிழனின் தாய் நிலத்தில்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................................... மின்னலாய் ஒரு பின்னல் [படைத்தல், காத்தல், அழித்தல் & அருளல்] படைத்தல் தொழில் கடினம் என்றாலும் காத்தல் அதனிலும் மேல்! அழித்தல் செய்தவன் ஒருநாள் அருளல் புரிந்து அணைத்தாலும் ஏற்காதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .......................................................................... 'மகளா மருமகளா' மகளா மருமகளா கேட்பவன் யாரடா குலப்பெருமை காக்க மணாட்டி ஆனவளே விளக்கேற்ற வந்த மற்றைய மகளே! திருமணம் முடிந்தது மனையாட்டி ஆகி இருஉடல் சேர்ந்ததும் தாயாய் மாறி சந்ததி பெருக தன்னையே தந்தவளே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. துளி/DROP: 1961 ["மூன்று கவிதைகள் / 17" https://www.facebook.com/groups/978753388866632/posts/33041205765527978/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 75 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 75 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 11: இந்த அத்தியாயம் தேவநம்பிய தீசனின் பட்டாபிஷேகம் பற்றியது. தேவநம்பிய (கடவுள்களின் பிரியமானவர்) என்பது மன்னர் அசோகரும் பயன்படுத்திய அதே முன்னொட்டு. அசோகரின் கல்வெட்டுகளைப் வாசித்துப் புரிந்துகொண்ட ஜேம்ஸ் பிரின்செப் [James Princep], இலங்கை அரசு ஊழியரான ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் (George Turnour Jnr; 11 மார்ச் 1799 – 10 ஏப்ரல் 1843) உடனான கடிதப் பரிமாற்றத்தின் காரணமாக அந்தக் கல்வெட்டுகள், தேவநம்பிய தீசனால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை ஆரம்பத்தில் உருவாக்கினார். மன்னர் அசோகரும் தீசனும் நிலம் மற்றும் கடல் வழிகளில் இரண்டாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் வாழ்ந்தவர்கள். அசோகரும் தீசனும் மிகவும் நல்ல நண்பர்கள் என்று மகாவம்சம் கூறுகிறது. இது எழுதப்பட்டது ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு ஆகும். அதாவது தீசனின் காலத்தில் இருந்து 900 அல்லது 800 ஆண்டுகளுக்குப் பின்பு ஆகும். தீசன் மற்றும் புகழ்பெற்ற பௌத்த பேரரசர் அசோகர் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்காவிட்டாலும், அவர்களை நண்பர்களாக காட்டுவதற்கான ஒரு விரிவான முயற்சி இதுவாக இருக்கும். அதாவது, மிகவும் பிரபலமான பௌத்த பேரரசர் அசோகரின் மகிமையைப் பகிர்ந்து கொள்வதும், அவரது மகிமையில் மூழ்குவதும் இதன் நோக்கமாக மகிந்த தேரருக்கு இருக்கலாம்? சுமார் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாயிரத்து நானூறு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஒருவர் தொடர்பு கொள்ள எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! பருவக்காற்றுகளைப் பயன்படுத்தி வணிகக் கப்பல்களுக்கு ஒரு சுற்றுப் பயணம் செய்ய ஒரு வருடம் எடுத்திருக்கும். ஒரு பருவக்காற்றுடன் பயணம் செய்து, அடுத்த எதிர் பருவக்காற்றுடன் திரும்பிச் செல்ல காத்திருக்கும் சுமார் ஆறு மாத காலத்தில் பொருட்களைச் சேகரிக்கவும் வேண்டி இருந்தது. உதாரணமாக, பாடலிபுத்திரத்தில் [Pataliputra] உள்ள அசோகரிடமிருந்து வந்த செய்தி, முதலில் கிழக்குக் கரையை அடைந்து, தாம்ரலிப்தா [Tamralipti] துறைமுகத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர், வடகிழக்கு பருவமழையுடன் இலங்கைக்கு பயணிக்க வேண்டும். தங்கி, திரும்பும் பயணத்திற்கான பொருட்களை சேகரித்து, பின்னர் தென்மேற்கு பருவமழையுடன் புறப்பட வேண்டும். பண்டைய காலங்களில், வணிகமும் வர்த்தகமும் இன்று இருப்பது போல் பரவலாகவோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்டதாகவோ இல்லை, எனவே கப்பல்கள் பயணத்திற்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. ஒரு தகவல் தொடர்புக்கு எனவே ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். மறைந்த திரு. எஸ்.யு. குணசேகரம் தனது "The Vijayan Legend and the Aryan Myth" என்ற கட்டுரையில், அசோகர் மற்றும் தீசன் ஆகிய இருவரும் வரலாறு அறிந்த ஆரம்பகால பேனா நண்பர்கள் என்று நகைச்சுவையாகக் கூறினார் என்பதைக் கவனிக்க. மேலே கூறிய பலவற்றை மிக தெளிவாக விரிவாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. தேவநம்பிய தீசன் முடிசூட்டப்பட்டபோது பல அதிசயங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது; அவருக்கு நம்பமுடியாத பல செல்வங்கள் கிடைத்தன. அத்தியாயம் XI / தேவநம்பிய தீசனின் முடிசூட்டு விழாவில், 8 முதல் 10 வரை: "பட்டாபிஷேகம் செய்து கொண்டபோது பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இலங்கைத் தீவு முழுவதும் பூமிக்குள் ஆழப் புதைந்து கிடந்த புதையல்களும், மணிகளும் தரைமட்டத்துக்குத் தாமாக வந்தன. இலங்கைக்கருகே மூழ்கிப்போன கப்பல்களில் இருந்த அணிகலன்கள் பலவும், இயற்கையாகக் கடலிலுள்ள செல்வங்களும் கரையில் வந்து ஒதுங்கின." என்று கூறுகிறது. அவர் அவற்றை தனது நண்பர் அசோகருக்கு அனுப்பினார், அசோகர் அவற்றைப் பிரதிபலனாகப் பெற்று, புத்தரிடம் தஞ்சம் புகுந்து கொள்ளுமாறு தீசனிடம் கேட்டுக் கொண்டார். அசோகர் அந்தப் பொருட்களைப் பெற்றபோது 'இதோ, எனக்கு இத்தகைய விலைமதிப்பற்ற பொருட்கள் எதுவும் இங்கு இல்லை' என்று நினைத்தார். அசோகர், தீசனின் முதல் முடிசூட்டு விழாவிற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது முடிசூட்டு விழாவைச் செய்யும்படி தீசனைக் கோரினார். இதில் வேடிக்கை என்னவென்றால், தீசன் அனுப்பிய தூதரகள் அங்கு ஐந்து மாதங்கள் தங்கியிருந்து, பின்னர் வெசாக்க மாதத்தில் (மே) திரும்பி வந்து பன்னிரண்டு நாட்களில் தமது வீட்டிற்குச் சென்றனர். மே மாதத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசாது, ஆனால் அவை பன்னிரண்டு நாட்களில் வீட்டிற்கு போய்ச் சேர்ந்தனர் ?? பாவம் மகிந்த தேரர், ஏனென்றால் அவ்வளவுதான் அவரின் ஞானம்! இதுவும், கடல் பயணம் பற்றிய விரிவான விளக்கமும், சூழலும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. அசோகருக்கும் தீசனுக்கும் இடையிலான நட்பு, கவிஞர் பிசிராந்தையார் மற்றும் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் இடையே தமிழ்நாட்டில் நிலவிய நட்பின் கதையின் நகலாகும் என்பது வெள்ளிடைமலை. “கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் காண்டல் இல்லாது யாண்டுபல கழிய வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும் அரிதே தோன்றல்! அதற்பட ஒழுக”லென்று [புறநானுறு 216, ” வேந்தே! பிசிராந்தையாரும் நீயும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கிறீர்களே தவிர நீங்கள் இருவரும் சிறுபொழுதுகூட ஒருவரை ஒருவர் நேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன என்கிறது இந்த சங்கப்பாடல்] இன்னும் ஒன்றையும் நான் சொல்லவேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிற மண்ணும் அதாவது செம்மண்ணும் அசோகனால் இலங்கைக்கு கொண்டுபோக கொடுக்கப்பட்டது. இருப்பினும், தம்பபன்னி என்ற பெயர் சிவப்பு நிற மண்ணின் காரணமாக வந்தது என்பதையும் அது இலங்கையின் உட்புறத்தில் ஏராளமாகக் அல்லது தாராளமாகக் இருக்கிறது என்பதையும், அதனால் இது ஒன்றும் விசேடமான பொருள் இல்லை, காவிக்கொண்டு போவதற்கு என்பதை தீசனின் ஆட்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை விசேடமான பொருளாக இலங்கைக்கு கொண்டு போனார்கள். இது எதைக் காட்டுகிறது அல்லது சொல்லுகிறது என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். மேலும் கங்கையின் நீர், வலம்புரிச் சங்கு, பருவம் கொழிக்கும் எழில் மங்கை, பொற் கலசங்கள், விலையுயர்ந்த மெத்தை, உயர்ந்த மூலிகைகள், ஆருயிரம் வண்டி நிறைய பறவைகளால் கொணரப்பட்ட மலையரிசி, மற்றும் ஒரு அரசனுடைய கோலாகலமான பட்டாபிஷேக வைபவத்துக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் தன்னுடைய நண்பனுக்கு பரிசுப் பொருள்களாகத் தூதுவர்களின் மூலம் அசோகன் அனுப்பினான் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றைக் கவனியுங்கள் 'ஆருயிரம் வண்டி நிறைய பறவைகளால் கொணரப்பட்ட மலையரிசி' யை இலங்கைக்கு கொண்டு போக அந்தக் காலத்து கப்பல்கள் எத்தனை தேவைப்பட்டு இருக்கும்? கொஞ்சம் யோசியுங்கள்?? அது மட்டும் அல்ல, இந்த அரிசி கொண்டுவரப்பட்டது பறவைகளால் என்ற வரி, ஒளவையார், அகநானூறு: 303: 8-14 பாடலை உங்களுக்கு நினைவூட்டிட வில்லையா? “புலம் கந்தாக இரவலர் செலினே, வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் 10 நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,” Part: 75 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 11: This chapter is about the consecrating of Devanampiyatissa. Devanampiya (Beloved of the Gods) is the same prefix, the King Asoka also used. James Princep who deciphered the inscriptions of Asoka initially toyed with the idea that Devanampiyatissa of Lanka must have caused those inscriptions to be written because of his correspondence with George Turnour, a Ceylon Civil Servant. The King Asoka and Tissa lived more than two thousand kilometres apart along the land and sea routes. The Mahavamsa claims that Asoka and Tissa were very good friends. This is an elaborate ploy to make Tissa and the glorious Buddhist Emperor Asoka to be friends even though both never met each other. The intention is to share the glory of the most famous Buddhist Emperor Asoka, and to bask in his glory. Imagine the time it would have taken for one to communicate over a distance of more than two thousand kilometres about two thousand four hundred years ago! It would have taken one year to make a round trip for merchant ships using the monsoonal winds. Travel with one monsoonal wind and stay for about six months collecting stuffs to go back with the next opposite monsoonal wind. A message from Asoka in Pataliputra first need to reach the eastern shore, say to the seaport Tamralipti. Then travel with the, say, North-East Monsoon to Lanka. Stay and collect stuffs for the return journey, and then depart with the South-West Monsoon. There would not have been much commerce in those days to have readily available ships to travel. It would take more than one year for one communication. The alleged friendship between Asoka and Tissa would be analysed later. Late Mr. S. U. Gunasegaram in his article “The Vijayan Legend and the Aryan Myth” quipped that these two, Asoka and Tissa, as the earliest pen friends known to history. It is alleged that many wonders happened when Devanampiyatissa was crowned; many unbelievable wealth came available to him. He sent those to his friend Asoka, and Asoka reciprocated in kinds and requested Tissa to take refuge in the Buddha. Asoka thought when he received those goods: ‘Here, I have no such precious things’. Asoka also requested Tissa to have a second coronation, after six months of his first coronation. The embassy sent by Tissa stayed for five months before returning in the month of Vesakha (May) and reached home in twelve days. North East monsoonal wind is not active in the month of May, but they reached home in twelve days. They were given red coloured earth also. However, they should have known that name Tambapanni was because of the red coloured earth and it must have been available in plenty in the interior of Lanka. The king Asoka sent also a maiden in the flower of her youth, 11 – 31. What happened to her when she was handed over to Tissa? The poor girl is left in the lurch! The alleged friendship between Asoka and Tissa is a copy from the story of friendship prevailed in Tamil Nadu between the poet Pisiranthaiyar and the Chola king Koperumcholan. The Chola king Koperumcholan is also an accomplished poet. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 76 தொடரும் / Will follow துளி/DROP: 1960 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 75] https://www.facebook.com/groups/978753388866632/posts/33027448740237014/?
-
"மூன்று கவிதைகள் / 16"
"மூன்று கவிதைகள் / 16" 'புகைப்படக் கவிதை' அருகம் விரிகுடா எம்மை அழைத்தது அருகில் பேத்தி சறுக்கி விளையாடுகிறாள்! பருவக் காற்று முகத்தைத் தடவுது புருவம் உயர்த்தி அழகை அனுபவிக்கிறேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... 'காவலாய் நிற்கும் மரங்கள்' காவலாய் நிற்கும் மரங்கள் எங்கே காற்றாய் மறைந்து போனது ஏனோ? காடுகள் அழித்து நகரம் வந்ததோ கால மாற்றத்தால் வெள்ளம் புகுந்ததோ? கோலம் மாறும் மனித சமூகம் ஆல மரத்தின் நிழல் அறியாதோ? உலகம் தேடும் வானிலை மாற்றம் நலமாக இனி எமக்கு அமையாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................... பேருந்துப் பயணங்களில்' பேருந்துப் பயணங்களில் பார்த்த முகம் அருகில் இருக்கையில் கண்ட சொர்க்கம் புருவம் உயர்த்தி மலர்ந்த புன்முறுவல் பருவம் கொட்டிய பெண்மை வனப்பு திருடுதே இதயத்தை! தேடுதே அவளை!! மஞ்சள் சேலையில் பயணத்தில் கண்டவள் வஞ்சகம் இல்லா நட்புத் தந்தவள் நெஞ்சம் குளிர அன்பாய்ப் பேசியவள் கொஞ்சும் பார்வையால் மனதைக் கிளறியவள் தஞ்சம் தருவாளா? வாழ்வு கொடுப்பாளா?? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ துளி/DROP: 1958 ["மூன்று கவிதைகள் / 16" https://www.facebook.com/groups/978753388866632/posts/33022090424106179/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 74 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 74 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மகாவம்சம் / அத்தியாயம் XI / தேவநம்பிய தீசன் அல்லது தீசனின் [Devanampiya Tissa or Tissa] பட்டாபிஷேகம்: அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது மகன் மூத்த சிவன் என்பவன் - சுவண்ணபாலியின் மகன் ஆட்சிக்கு வந்தான். நாடு அப்போது அமைதியாக இருந்தது. அரசன் அழகுள்ள மகா மேகவனம் பூங்காவை [Mahameghavana-garden] அமைத்தான். அதன் பெயருக்கேற்ப அந்த வனம் எல்லா வகையான நல்ல வளங்களையும் உடையதாக இருந்தது. பழ மரங்களும், மலர் மரங்களும் அங்கு இருந்தன. பூங்காவை அமைப்பதற்காக அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்த போது ஒரு பெரிய மேகம் காலமில்லாத அந்தக் காலத்திலும் திரண்டு மழையைப் பொழிந்தது. அதனாலேயே அந்தப் பூங்காவை மகா மேகவனம் என்றழைத்தனர். இலங்கையின் திருமுகம் போல் நிகழ்ந்த புகழ் மிக்க அனுராதபுரத்திலிருந்து மூத்த சிவன் அறுபது வருட காலம் ஆண்டான். அவனுக்குப் பத்து குமாரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் நலனில் அக்கறை கொண்டவர்கள். இரண்டு பெண்கள்; அவர்கள் இருவரும் அழகாகவும் பிறந்த குடிக்குப் பெருமை தரும் விதத்திலும் இருந்தார்கள். இரண்டாவது குமாரன் பெயர் தேவநம்பிய தீசன் என்பது. சகோதரர்கள் எல்லோரிலும் குண நலனிலும் அறிவுத் திறமையிலும் மிகச் சிறந்தவனாக அவன் விளங்கினன். பண்டுகாபயனுக்கு முப்பது வயதில் மகன் பிறந்தான் என்று கருதினால், மூத்த சிவன் அரியணை ஏறும்போது, மூத்தசிவனுக்கு எழுபத்தேழு வயதுடையவனாக இருந்திருப்பான். அவன் மேலும் அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே, மூத்த சிவனுக்கு குறைந்தபட்சம் நூற்று முப்பத்தேழு வயது வரை வாழ்ந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அளவுக்கு மிக நீண்ட வயது. மூத்த சிவனுக்கு பத்து மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்; மகன்கள் அபயன், தேவநம்பிய தீசன், மகாநாகன், உத்திய, மத்தபய, மித்த, மகாசிவன், அசேலன், சூரதிச்சன், கிர என்ற ஆண் மகன்களும், அனுலா மற்றும் சிவாலி என்ற மகள்களும் இருந்தனர். [Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa, Kira, and the daughters are Anula and Sivali.] பெயர்கள் தீபவம்சத்திலிருந்து வந்தவை. மகாவம்சம் பெயர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. அபயா மூத்த மகனாக இருந்தும், வரிசையில் இரண்டாவது மகனான தீசன் அரசனானான். மூத்த மகன் அபயாவுக்கு என்ன நடந்தது என்பது தீபவம்சத்திலோ அல்லது மகாவம்சத்திலோ கொடுக்கப்படவில்லை. பண்டுகாபயா மற்றும் மூத்தசிவாவின் ஆட்சிக்காலம் தீபவம்சத்தில் ஐந்து வசனங்களைக் கொண்ட ஒரு பத்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 106 வசனங்களைக் கொண்ட நீண்ட அத்தியாயமாக 10 ம் அத்தியாயம், முற்றும் முழுவதுமாக பண்டுகாபயனின் ஆட்சியை மகாவம்சத்தில் பேசுகிறது. [மகாவம்சம் / அத்தியாயம் X / பண்டுகாபயனின் பட்டாபிஷேகம்] இது மகாவம்சத்தின் ஆசிரியரின் தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவாக்கத்தாலும் மற்றும் அலங்காரத்தாலும் நீண்டுள்ளது புரிகிறது. சந்திரகுப்த மௌரியரிடமிருந்தும் [Chandragupta Maurya] அவரது பிராமண ஆலோசகர் சாணக்கியரிடமிருந்தும் [Chanakya] ஒரு சிறிய பிரதியை இங்கு காண்கிறோம். அதாவது, பண்டுகாபயன் ஒரு பிராமணரை தனது குருவாகக் கொண்டுள்ளார். எனவே, குருவாக பிராமணர் என்பது பிராமண மதம் நீதிமன்ற மதம் என்பதைக் குறிக்கிறது, ஏனெனில் புத்த மதம் மகிந்த தேரரால் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. பண்டுகாபயனின் மாமனார் கிரிகண்டசிவா [Girikandasiva] ஆவார். இது ஒரு வெளிப்படையான சைவ தமிழ் பெயர் ஆகும். மேலும், பண்டுவாசுதேவா, பண்டுகாபயா, மூத்தசிவா, சுவண்ணபாலி, கிரிகண்டசிவா போன்ற பெயர்களும் மற்றும் பிராமண குரு போன்றவை மிகவும் வலுவான பாண்டியர், சைவ மற்றும் தமிழ் தொடர்பைக் குறிக்கின்றன. மேலும் அத்தியாயம் X / பாண்டுகாபயனின் பட்டாபிஷேகம், 94 முதல் 102 வரை தெளிவாகக் கூறுகிறது: சண்டாள கிராமத்துக்கு [candala-village, candala: an outcaste or untouchable / the lowest of the men] வட கிழக்கில் சண்டாளர்களுக்காகத் தனியே, தாழ்ந்தவர்களுக்கான ஒரு சுடலையை [cemetery] ஏற்படுத்தினான். இதற்கு வடக்கே, இதற்கும் பாசான மலைக்கும் [Pasana-mountain] இடையே, வேடுவர்களுக்கான குடிசைகள் வரிசையாகக் கட்டப்பட்டன. அதற்கும் வடக்கே காமனி வாபி [Gamani-tank] வரை, பல துறவிகளுக்கான ஒரு மடம் அமைக்கப்பட்டது. அகற்குக் கிழக்கே அரசன் நிகந்த ஜோதியர்களுக்காக [nigantha Jotiya] ஒரு வீட்டைக் கட்டினன். இதில் காமனி வாபி என்பது இன்று கரம்பவக்குளம் எனவும் நிகந்தஜோதியர் என்பவர்கள் சைனத் துறவிகள் என்றும் ஊகிக்கப்படுகிறது அல்லது அடையாளம் காணப்படுகிறது. அப்பிரதேசத்திலேயே கிரி என்னும் பெயருடைய நிகந்தரும் [சமணர் / Jain], பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளும் இருந்தனர். அங்கு அரசன் நிகந்த கும்பாண்டருக்காக [Kumbhanda / கும்பாண்டர் என்பது பௌத்த புராணங்களின் சிறிய தெய்வங்களில் உள்ள குள்ளமான, தவறான உருவம் கொண்ட ஆவிகளின் குழுவில் ஒன்றாகும்.] ஒரு பிரார்த்தனை மண்டபத்தைக் கட்டினன். அது அவர் பெயரால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து மேற்கேயும், வேடுவர்கள் வசித்த பதிக்குக் கிழக்கேயும் மாறுபட்ட கொள்கை யுடைய ஐநூறு குடும்பங்கள் வசித்தன. ஜோதியருடைய வீட்டுக்கு அப்பால், காமனி வாபியின் இக்கரையில் ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுக்கும் துறவிகளுக்காக [wandering mendicant monks] ஒரு மடத்தைக் கட்டுவித்தான். ஆசீவகர்களுக்குத் (Ājīvika, ஆசீவகம் என்பது ஒரு இந்திய மெய்யியல் கொள்கையும், துறவு வாழ்க்கையும் ஆகும். இது பொ.ஊ.மு. 6 ஆம் நூற்றாண்டில் புத்தர், மகாவீரர் ஆகியோருக்கு சமகாலத்தில் வாழ்ந்த மற்கலி கோசாலர் என்பவர் உருவாக்கிய ஒரு சமய நெறியாகும். ஆசிவகம் ஊழ்வினையை அதிகம் வலியுறுத்துகிறது.) தங்கமிடமும், பிராமணர்களுக்கான ஒரு தங்குமிடத்தையும் அமைத்தான். இந்த இடத்தில் நோயுற்றவர்கள் தங்கி சுகம் பெற ஒரு மனையையும், மண்டபத்தையும் கட்டினன்." எனவே இங்கே, பண்டுகாபயன் மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட மற்றும் நீதி தவறாத அரசனாக சித்தரிக்கப்படுகிறார். பழங்குடி மக்கள் ["பழங்குடி மக்கள்" என்ற சொல் இந்தோ-ஆரிய குடியேறிகள் வருவதற்கு முன்பு இலங்கையில் வசித்து வந்ததாக நம்பப்படும் பூர்வீக இயக்கர்கள் மற்றும் நாகர்களைக் குறிக்கிறது.] அரவணைக்கப்பட்டு, சமூகத்தில் சமமான இடத்தை வழங்கினார். மேலும் பல்வேறு மதக் குழுக்களுக்கு அவர் ஆதரவளித்தார். உதாரணமாக, துறவிகள் (துறவிகள் மற்றும் காடுகளில் வசிக்கும் முனிவர்கள்), சமணர்கள் (பண்டைய இந்தியாவில் ஒரு முக்கிய மதமாக இருந்த சமண மதத்தைப் பின்பற்றுபவர்கள்), அஜீவகர்கள் (இப்போது அழிந்துபோன துறவிப் பிரிவு, இது விதியை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளைப் பின்பற்றியது), பிராமணர்கள் மற்றும் நிறுவப்பட்ட மத நம்பிக்கைகளிலிருந்து விலகிச் செல்லும் மதப் பிரிவுகள் அனைத்தும் தங்க வைக்கப்பட்டன. இது இன்றைய இலங்கையின் தேசியவாத புத்த துறவிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. ஆனால் பண்டுகாபயன் காலத்தில் புத்தமதம் இன்னும் இலங்கைக்கு வரவில்லை, புத்தர் நேரடியாக இலங்கையில் போதித்தது என மகாவம்சத்தின் தொடக்கத்தில் கூறப்பட்டது, விழலுக்கு இறைத்த நீர் போலாயிற்று என்பதை மகிந்த தேரரை மீண்டும் அனுப்பியதில் இருந்து அறிகிறோம். இன்றைய இலங்கையில், சில துறவிகள் மற்றும் குழுக்கள் (எ.கா., பொது பல சேனை அல்லது "பௌத்தர்களின் அதிகாரப் படை") சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை ஊக்குவிக்கின்றன, இது பண்டுகாபயாவின் பன்முக அணுகுமுறைக்கு முற்றிலும் முரணானது. பௌத்தர்கள் அல்லாதவர்களை உள்ளடக்கிய பண்டுகாபயாவைப் போலல்லாமல், நவீன பௌத்த தேசியவாதிகள் பெரும்பாலும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதுடன், பல மத சகவாழ்வை எதிர்க்கின்றனர். அதுமட்டும் அல்ல, அரசியலில் இருந்து விலகி இருந்த பண்டைய துறவிகளைப் போலல்லாமல், நவீன துறவிகள் அரசியல் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபடுவதுடன், பெரும்பாலும் சிறுபான்மை எதிர்ப்பு கொள்கைகளை ஆதரிக்கின்றனர், விதைக்கின்றனர்! Part: 74 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 If it is assumed that Pandukabhaya had his son when he was thirty years of age, then the son, Mutasiva, would have been about seventy seven years of age when he ascended the throne. He ruled for another sixty years. Hence, Mutasiva must have lived at least to the age of one hundred and thirty seven, unbelievably very long age. Mutasiva had ten sons and two daughters; the sons are Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa, Kira, and the daughters are Anula and Sivali. The names are from the Dipavamsa, and the Mahavamsa is silent on the names. Abhaya is the eldest son, but Tissa, the second in line, became the king. What happened to the eldest son Abhaya is not given in the Dipavamsa or in the Mahavamsa. The reigns of Pandukabhaya and Mutasiva are detailed in one paragraph of five verses in the Dipavamsa. However, the entire long chapter 10 with 106 verses is used to cover the rule of Pandukabhaya in the Mahavamsa. This is a selective elaboration and embellishment by the author of the Mahavamsa. There is a bit of a copy from Chandragupta Maurya and his advisor Chanakya, a Brahman. Similarly, Pandukabhaya has a Brahmin as his Chaplain. Brahmin as chaplain indicates a Brahamnical religion is the court religion, as the Mahinda Thera does not yet introduce the Buddhism. Pandukabhaya’s father in law is Girikandasiva which is a Saiva Tamil name. The names Panduvasudeva, Pandukabhaya, Mutasiva, Suvannapali, Girikandasiva, Brahmin chaplain etc indicate very strong Pandyan, Saiva and Tamil connection. Pandukabhaya is depicted as a very liberal and even handed king. The aboriginal people are accommodated and had they seated on par with him, refer 10-67. Ascetics, Jains, Ajivakas, Brahmins, and other heretical sects are all accommodated. It is a far cry from the present day jingoistic Buddhist monks of Ceylon. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 75 தொடரும் / Will follow துளி/DROP: 1958 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 74 https://www.facebook.com/groups/978753388866632/posts/33020555820926306/?
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 07 அத்தியாயம் 7 - வடக்கு நோக்கித் திரும்புதல் கிழக்கு கடற்கரையை, திருகோணமலையில் இருந்து அம்பாறை வரை சென்று பார்த்த பிறகு, கதிர்காமம் மற்றும் மலை நாடு ஏறி இறங்கியபின், ஆரனும் அனலியும் ஆழ்ந்த தமிழர் வரலாற்று அறிவுடனும் மற்றும் தங்களுக்கு இடையினான நல்ல புரிதலுடனும் காடுகள் மற்றும் தடாகங்கள் வழியாக வடக்கு நோக்கி அவர்கள் திரும்பினார்கள். முதலில் அவர்களின் அன்பையும் ஆர்வத்தையும் தூண்டிய நகரம் அது. இந்த முறை, நகரம் ஒரு இலக்காக மட்டுமல்லாமல், ஒரு வீடு திரும்பும் இடமாகவும் இருந்தது. என்றாலும் அவர்கள், மன்னாரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான மடுமாதா தேவாலயம் மற்றும் இலங்கையில் உள்ள ஒரு பழமையான சிவன் கோயிலாகவும், பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றானதுமான திருக்கேதீஸ்வரம் ஆலயம், முல்லைத்தீவில் உள்ள ஒட்டி சுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் மற்றும் முள்ளிவாய்க்கால் போய், அதன் பின் யாழ்ப்பாணம் போகத் தீர்மானித்தனர். அதன்படி, அவர்கள் முதலில் முல்லைத்தீவு சென்று ஒட்டி சுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் மற்றும் முள்ளிவாய்க்கால் இரண்டையும் பார்த்தனர். முள்ளிவாய்க்காலின் வெண்மணற் கடற்கரை மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது என்றாலும், மே, 2009-இல் அங்கு பாய்ந்த இரத்தத்தின் சிவப்பு நிறம் தான் ஆரனின் கண்களில் தெரிந்தது. அவன் கண்களில் இருந்து கண்ணீர் அவனை அறியாமல் ஒழுகியது. அனலி உடனடியாக அவனை அணைத்து, கண்ணீரைத் துடைத்தாள். அப்பொழுது கதிரவன் மறையவும், கார்மேகம் சூழவும் சரியாக இருந்தது. சட்டென்று மாறிய வானிலைக்கு ஏற்றாற் போல் பாடல் ஒன்று காற்றில் தவழ்ந்தது, “நீயும் நானும் அன்பே.. கண்கள் கோர்த்துக் கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்”, அருமையாக இருந்தது. நீண்ட காலம் தனியாக தவித்த அனலி ஒரு கணம், தன்னையே இழந்துவிட்டாள்! அந்த உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. தனக்குள்ளே தானே சிரித்துக்கொண்டாள். அப்பொழுது அவளின் முழுமையாக வெளிவராத புன்னகையும் மற்றும் அவள் அணிந்திருக்கும் கண்ணாடியையும் தாண்டி வெளிப்படும் அவளின் கண்களின் அழகும் ஆரனை ஒருகணம் வாயடைக்க வைத்தது. பெண்மையின் அழகில் பிரம்மனும் மயங்கினான் கண்களின் அசைவில் நானும் தடுமாறினேன் விண்ணில் வாழும் தேவதை இவளோ மண்ணில் வந்தது என்னைத் தழுவவோ? உதடு பிரித்து முத்துப் புன்னகை உதடு பிரிக்காமல் பவளப் புன்னகை உதடு சுழித்து கொல்லும் புன்னகை உதடு கடிக்க உள்ளம் ஏங்காதோ? முன்பு அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த அவன் ஏனோ இப்ப அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். “ஹலோ” என்று அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து மண்ணிற்கு கொண்டு வந்தான்! அப்பொழுது, வானொலியில் “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை, சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை” இசைஞானியின் பாடல் ஒலித்தது. அதன் பின் அவர்கள் தங்கள் உணர்வுகள், கற்பனைகளில் இருந்து விடுபட்டு, ஒருவாறு சமாளித்துக்கொண்டு அவர்கள் மன்னார் சென்றனர். மன்னார் நகரில், ஆரனும் அனலியும் தங்கள் காலை உணவை ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில், யாரோ ஒருவர் “சண்டை நடந்த காலத்தில, அவங்கள் சைவம், வேதம் எண்டு பார்த்து விட்டே, குண்டு போட்டவங்கள்; பிடிச்சுக் கொண்டு போனவங்கள். தமிழன் எண்டு மட்டும் தானே பார்த்தவங்கள். அப்ப நாங்கள் ஏன் சைவம், வேதம் எண்டு வேற்றுமை காட்ட வேண்டும்….” என்ற உரையாடல், அவர்களின் கவனத்தை, வெகுவாக ஈர்த்தது. அப்பொழுது அனலி, ஆரானிடம் மெதுவாக "ஆமாம், போர் நடைபெற்ற காலங்களில், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், மடுமாதா தேவாலயம் உட்பட வடக்கு, கிழக்கு தேவாலயங்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீது, தமிழர்கள் என்றே குண்டு போடப்பட்டது. இதேபோல வடக்கு, கிழக்கில் இந்துக் கோவில்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீதும், தமிழர்கள் என்றே குண்டுகள் போடப்பட்டன. அன்று, அவ்வாறு கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களை இன்று, இந்து, கிறிஸ்தவம் எனக் கூறுபோட்டு, வேரறுக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன" என்று வேதனையுடன் கூறினாள். ஆரன், அனலியை கூர்ந்து பார்த்தான். " அனலி உனக்கு ஒன்று தெரியுமா?, பண்டாரநாயக்க, தான் பிறந்த கிறிஸ்தவத்திலிருந்து பௌத்தத்துக்கு மாறியதாலேயே, பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட சிங்கள சமூகம், தங்களின் தலைவராக அவரை ஏற்றுக் கொண்டது. ஆனால் தந்தை செல்வா, தான் பிறந்த, தான் நேசித்த கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிக் கொண்டே, பெரும்பான்மை இந்து மக்களைக் கொண்ட, தமிழ்ச் சமூகத்தின் ஏக தலைவராக இறுதி மூச்சு வரை கோலோச்சினார். அது தான் தமிழ் மக்களின் பெருமை! அதை உடைக்கத்தான் இப்போது இந்த சதிகள்!!" என்றான். "இதேவேளை, தமிழர் பிரதேசங்களை விழுங்கும் ஓர் ஊடகமாகவே விகாரைகளையும் தாதுகோபுரங்களையும் பேரினவாதம் அமைத்து வருகின்றது. இது காலங்காலமாக, நம் நாட்டில் அரங்கேற்றப்பட்டு வரும் அசிங்கமான விடயமாகும். இதன் கரும் புள்ளிகளே, வடக்கு, கிழக்கு தமிழ் பாரம்பரிய பிரதேசங்களில் புத்தர் கோவில் ஆக்கிரமிப்பு ஆகும். ‘நாம் தமிழர்கள்’ என்ற பொது நலனைக் காவு கொடுத்து விட்டு, மதம் என்ற சுய நலனுக்குள் சிக்கக் கூடாது. இல்லையேல், பெரும் புயல் போல சீறிப்பாய்ந்து வருகின்ற பேரினவாதத்துக்கு முன்னால் சுருண்டு போய் விடுவோம். பிரிந்து கிடந்தால், எம்மால் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது; எங்கள் தலை எழுத்தையே மாற்றி விடுவார்கள்." என்றான் ஆரன். "ஆகவே, எமக்குள் இருக்கின்ற வேண்டப்படாத தடுப்புகளை உடைத்து, சுதாகரிக்க வேண்டிய நேரமிது. வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழாக மட்டும் இருக்கட்டும், எங்களின் மூச்சும் பேச்சும் வீச்சும்!" என்று முடித்தாள் அனலி. திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டு நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது அதன் பெருமையைக் கூறுகிறது. அனலி சுந்தரரின் ஈழத்து தேவாரத்தை பாடிக் காட்டினாள். மூவர் என இருவர் என முக் கண்ணுடை மூர்த்தி மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன் னகரில் பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் தேவன் எனை ஆள்வான் திருக் கேதீச்சரத் தானே! ஆரன் உடனடியாக ஏழாம் நூற்றாண்டு சம்பந்தரின் ஈழத்து தேவாரத்தை ஒருவாறு எழுத்துக்கூட்டி வாசித்துக் காட்டி, இதன் கருத்து உனக்குத் தெரியுமா என்று அனலியைக் கேட்டான் புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர் எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின் மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே! "ஆமாம், முதல் வரியில், 'புனைந்த துகிலை ஆடையாய்க் கொண்ட பெளத்தர்கள் புறம் பேசுவதே கொண்டுள்ளார்கள்' என்று கூறப்படுவதில் இருந்து, இன்றும் இன்னும் சைவ மத ஆலயங்களுக்கு எதிராக அல்லது வலிந்து கட்டப்படும் புத்த ஆலயங்கள், அவர்களின், அந்த சிலரின் செயலுக்கு எடுத்துக்காட்டாகிறது." என்றாள். மேலும் இந்நாட்டுப் பழங்குடியினரான நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் ஆகும் . அந்த பெருமை மிக்க ஆலயத்தைக் கண்டுகளித்த பின் அவர்கள் மடுமாதா தேவாலயம் சென்று பார்த்தனர். அதன் பின் யாழ்ப்பாணம் சென்றனர். பொதுவாகவே எல்லா பசங்களுக்கும் அவங்க காதலன் காதலியுடன் ஒரு நீண்ட தொலைதூர பயணம் செய்ய விருப்பம் இருக்கும், அதுவும் காதலியுடன் பிரத்தியேக வாகனத்தில் தொலைதூர பயணம் என்றால் அதன் இன்பத்தை சொல்லவா வேண்டும்? ஆரன், அனலி அதற்க்கு விதிவிலக்கு அல்ல. என்றாலும் அனலியின் அப்பாவின் அந்த எச்சரிக்கைகளை அல்லது வேண்டுகோளை ஆரன் என்றும் மறக்கவில்லை. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 08 தொடரும் துளி/DROP: 1957 [கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [A Journey to the homeland through Love, Faith, and Roots] / பகுதி 7 https://www.facebook.com/groups/978753388866632/posts/33015708298077725/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 73 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 73 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 9 அபயனின் பட்டாபிஷேகம் பற்றியது. பண்டுவசுதேவனுக்கு [அல்லது பண்டுவாசுதேவவுக்கு] பத்து மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். மூத்தவன் அபயன் அல்லது அபய [Abhaya], இளையவள் உம்மத சித்தா அல்லது உன்மாதசித்திரா [Unmada Chitra]. இவள் மிகவும் அழகானவள். பண்டுவாசுதேவ முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். மேலும் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை பண்டுவாசன் என்று குறிப்பிடுவதைக் கொண்டு, இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர்.[மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (209 - 211)/232.] இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால் பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். உம்மத சித்தாவின் மகன் தனது அனைத்து மாமாக்களையும் கொல்வான் என்று ஒரு ஜோதிடர் கணித்தார்; இதனால், அவளுக்கு ஒரு மகன் பிறந்தால், மாமாக்கள் எல்லோரும் அவனைக் கொல்ல முடிவு செய்தனர். இந்த வேளையில், சக்க இளவரசர் பாண்டுவின் மகன்களும் இலங்கைக்கு வந்தனர். அதாவது, கௌதம புத்தரின்) தந்தை சுத்தோதனனின், இளைய சகோதரன், அமிதோதனாவின் பேரன்களும், பேத்தியைத் தொடர்ந்து இலங்கை வந்தனர்? நம்பினால் நம்புங்கள், மகாவம்சத்தின் கதை இது?? எனவே மீண்டும் கௌதம புத்தருடன் மற்றொரு உயிரியல் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது! ராமர், அனுராதா, விஜிதா, திகாயு, ரோஹண [Rama, Anuradha, Vijita, Dighayu, Rohana] ஆகியோர், இலங்கை வந்த சக்க பாண்டுவின் மகன்கள் ஆவார்கள். அங்கு அவர்களின் சகோதரியே ராணியாவார். நாளடைவில், இளவரசி உம்மத சித்தா திகாயுவின் மகனுடன் [Dighagamini / தீககாமினி] உறவு வைத்து கர்ப்பமானார். ஒரு மகன் பிறந்தார், ஆனால் இந்த பையனுக்காக மற்றொரு பெண்ணை மாற்றுவதன் மூலம், பையன் காப்பாற்றப்பட்டு, இரகசியமாக வளர்க்கப்பட்டான். அவனுக்கு பண்டு காபய [பண்டுகாபயன் / Pandukabhaya] என்று பெயரிடப்பட்டது. பண்டு காபய பிறந்து அபயன் பட்டாபிஷேகம் செய்யப்பட்டபோது, பண்டுவாசுதேவன் இறந்தார். "பண்டு கபாயன்" என்ற பெயரில், பண்டு என்றால் "பழைய", கபாயன் என்றால் "சிவன்" என்றும் இது இந்துக்களின் பழம்பெரும் தெய்வமான "முந்துசிவன்" என்ற பெயரை ஒத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதே 'பண்டு' என்ற சொல்லே பாண்டியன் (பண்டு+இயன்) என்ற பெயரின் வேர்ச்சொல்லுமாகும் என்பதையும் அறிக. மேலும் தீபவம்சத்தில், பண்டுகாபயாவை பகுண்டக சோரா [Pakundaka chora] என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது திருடன் என்று பொருள்படுகிறது. [In Pali, the word "chora" (छोर) means "thief" or "robber"] எனவே விஜயன் குலத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றாகிறது. அத்தியாயம் 10: பண்டுகாபயனின் குழந்தைப் பருவம் முதல் பட்டாபிஷேகம் வரையிலான வாழ்க்கையைப் பற்றி, நம்பமுடியாத திருப்பங்களைக் கொண்ட கதைகள் போன்று, பல விசித்திரக் கதைகள் இங்கு உள்ளன. பண்டுகாபயன் முப்பத்தேழு வயதில் முடிசூட்டப்பட்டான். மேலும் அவன் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே, அவன் நூற்று ஏழு ஆண்டுகள், திடகாத்திரமாக வாழ்ந்திருக்க வேண்டும்? ஏனென்றால் அதுவரை மன்னனாகவே ஆட்சி செய்துள்ளார். நம்பமுடியாத அளவிற்கு நீண்ட ஆயுள் கொண்ட மன்னன். நாம் முன்பு கூறியவாறு, தீபாவம்சம் அவனை பகுண்ட மற்றும் பகுண்டகன் [Pakunda and Pakundaka] என்றும் குறிப்பிடுவதுடன், தீபாவம்சத்தின் 11 - 1 & 2 இல்: 1. அபயனின் இருபதாம் ஆண்டு ஆட்சி நிறைவடைந்த நிலையில், பகுண்டனும் தனது இருபதாம் ஆண்டு அகவை நிறைவடைந்தார். பகுண்டகன் பிறந்து முப்பத்தேழாவது ஆண்டு நிறைவடைந்தபோது அவன் மன்னனாக முடிசூட்டப்பட்டார். 2. அபயனின் இருபதாம் ஆண்டுக்குப் ஆட்சிக்குப் பிறகு பகுண்டகன் ஒரு கொள்ளையனாக வாழ்ந்தான்; பதினேழு ஆண்டு கொள்ளை வாழ்வின் பின், அவன் தன் தாய் மாமன்கள் ஏழு பேரையும் கொன்று, அனுராதபுர நகரில் அரசனாக முடிசூடிக் கொண்டான் என்று கூறுகிறது. என்றாலும், அவன் பதினேழு ஆண்டுகள் ஒரு கொள்ளையனாக வாழ்ந்ததாக தீபவம்சம் கூறும் அதேவேளை, மகாவம்சம் இதைப் பற்றி அமைதியாக உள்ளது. பண்டு கபாயன் பதினாறு வயதைக் கடந்தபோது தனது மனைவி சுவண்ணபாலியை [Suvannapali] மணந்தார். மூத்தசிவா [மூத்தசிவன் / Mutasiva] பண்டுகபயனின் மகன், அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதுவும் ஒரு நீண்ட ஆட்சி. ஆனால் மகாவம்சம் அவரைப் பற்றியோ அல்லது அவரது நீண்ட ஆட்சியைப் பற்றியோ அதிகம் எதுவும் கூறவில்லை; அவரது ஆட்சி சுமார் ஆறு வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏன் ? ஒருவேளை, அவரது பெயர் தமிழில் ஒலிப்பதால் இப்படி இருக்குமா? அவரது தாயார் சுவண்ணபாலி ஆகும். சுவண்ணபாலி அல்லது சுவர்ணபாலி, சுவர்ணலதா போன்ற பெயர்களைக் கொண்ட தமிழ்ப் பெண்கள் தமிழ்நாட்டில் இருந்தனர், இன்னும் இருக்கின்றனர் என்பதையும் நோக்குக. Part: 73 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 9: This is about the consecrating of Abhaya. Panduvasudeva had ten sons, and one daughter. Abhaya is the eldest, and youngest is the daughter Citta, very beautiful one. Panduvasudeva ruled for thirty years. A soothsayer predicted that Citta’s son would kill his uncles; the uncles wanted to kill if a son is born to her. Sakka Pandu’s sons also came to Lanka. Another biological connection with Gautama Buddha is invented! Rama, Anuradha, Vijita, Dighayu, Rohana are the sons of Sakka Pandu who came to Lanka where their sister already came and became the queen. Princess Citta had an affair with the son of Dighayu and became pregnant. A son was born, but by interchanging with another girl for this boy, the boy was saved and was brought up clandestinely. An ancient tale is copied here. He was named Pandukabhya. Panduvasudeva died when Pandukabhya was born and Abhaya was consecrated. Another coincidence is invented. Chapter 10: There are many fairy tales like stories with many unbelievable twists and turns about Pandukabhaya’s life from childhood to the consecration. To quote from the page 52 of Reference 22: “It is interesting to note how the Chroniclers availed themselves of the Indian legend of Devagabbha, Nandagopa, Vasudeva, and Kamsa as contained in the Ghata Jataka“. Indian Puranic stories are liberally used to spin stories here. Pandukabhaya was crowned when he was thirty-seven years old, and he ruled for seventy years. He must have lived for one hundred and seven years, incredibly a long life. The Dipavamsa refers him as Pakunda and Pakundaka, refer 11 - 1 of the Dipavamsa. The Dipavamsa says that he lived as a robber for seventeen years. The Mahavamsa is selectively silent on this. Pandukabhaya took his wife, Suvannapali, when he has passed sixteen years of age. Mutasive was the son of Pandukabhaya, and he ruled for sixty years. It is also a long reign, but the Mahavamsa has nothing much to say about him or about his long reign; his rule was mentioned in passing in about six verses. Could the reason be that his name sounds Tamil? His mother was Suvannapali. There were Tamil ladies with names Suvannapali, Suvarnalatha etc. in Tamil Nadu. Mahanama, author of the Mahavamsa, must have decided to erase this Tamil identity of sixty years by not giving any importance to it. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 74 தொடரும் / Will follow துளி/DROP: 1956 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 73 https://www.facebook.com/groups/978753388866632/posts/33009567578691797/?
-
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 72 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 72 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை எட்டாம் அத்தியாயம், பண்டு வாச தேவன் பட்டாபிஷேகத்தில், சிங்கபுரத்தில் [Sihapura or sinhapura] சிங்கபாகுவின் [Sihabahu or Sinhabahu] மரணத்துக்குப் பிறகு, அவனுடைய மகன் சுமித்த அரசன் ஆனன. மதுர நாட்டரசனுடைய மகளை அவன் மணந்து கொண்டான்.[Sumitta was king; he had three sons by the daughter of the Madda king./ -Madda = Skt. Madra, Means Madura, the capital city of the Pandyans] அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.அவர்களில் இளையகுமாரன் பண்டு வாச தேவன் [Pandu Vasudeva]. மேலும் விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய தமிழ் மகளிர்கள். மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜய சிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாளி மொழியில் பாண்டியர் என்ற பெயர் பண்டு என வழங்கப்பட்டது. அதனால் தானோ என்னவோ பண்டு வாசதேவ, பண்டுகாபய முதலிய அரசபெயர்கள் காணப்படு கின்றன. விஜயன் 38 ஆண்டுகள் ஆட்சி செய்தார். மேலும் தனது, கடைசி காலத்தில், தனது சகோதரன் சுமித்தாவுக்கு [Sumitta] செய்தி அனுப்பினார், அவரை ஆட்சியை பொறுப்பேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.விஜயனிடமிருந்து வந்த தூதர்கள் கடிதத்தை அரசனிடம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தை படிக்கக் கேட்டதும் அரசன் தன் மூன்று பிள்ளைகளையும் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான்: 'அன்புடையவர்களே! எனக்கோ வயதாகி விட்டது. எ ன து சகோதரனுக்கு உரியதான அழகிய இலங்கைத் தீவுக்கு உங்களில் ஒருவர் போக வேண்டும். அங்கே அவனுடைய மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்' என்றான். ஆனால் அந்த செய்தியை அனுப்பிய உடனேயே விஜயன் இறந்து விட்டார். மன்னன் சுமித்தாவிற்குப் பதிலாக, அவரது இளைய மகன் பண்டுவாசுதேவன், மன்னரின் அமைச்சர்களின் முப்பத்திரண்டு மகன்களுடன் பிச்சைக்காரத் துறவிகள் வேடத்தில் இலங்கைக்கு வந்தார். தீபாவம்சம் மன்னர் பண்டுவாசுதேவனை (கிமு 504-474) பண்டுவாச / Pandu Vasa என்று அழைக்கிறது. இது பாளி அல்லது பிராகிருத மொழியில் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் என்று பொருள்படும். ஒருவேளை பாண்டிய அரசைச் சேர்ந்த அவரது தாயாரால் இருக்கலாம்?இருப்பினும், பண்டுவாச, விஜயனுடன் எவ்வாறு தொடர்புடையவர் என்பது தீபவம்சத்தில் கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. மகாவம்சத்தில் மட்டுமே அவர் விஜயனின் சகோதரரான சுமித்தாவின் இளைய மகன் என்று கூறுகிறது? . மன்னரின் அழைப்பின் பேரில் வந்த அவர்கள், ஏன் மாறுவேடத்தில் வர வேண்டும் என்று ஒருவர் யோசிக்கலாம்? ஆனால், எனோ, அப்படித்தான் வந்தார்கள். அதேநேரத்தில், மற்றொரு மன்னன் சக்க இளவரசர் பாண்டுவின் இளைய மகள் கச்சனா [Kaccana] அல்லது பத்தகச்சனா [Bhaddakaccana] என்ற இளவரசி, முப்பத்திரண்டு இளம் கன்னிப் பெண்களுடன் ஒரு கப்பலில் கடலில் மிதக்க விட்டிருந்தனர். முப்பத்திரண்டு மகன்களும் முப்பத்திரண்டு மகள்களும் ஒரே காலத்தில் நிகழ்வது, என்ன ஒரு தற்செயல் நிகழ்வு [What a coincidence]! அவர்களும் விஜயனைப் போல இலங்கையை அடைந்தனர்! பண்டுவாசுதேவ பத்தகச்சனை மணந்து இலங்கையின் அரசரானார். அதேபோல 32 மந்திரி மார்களின் மகன்களும், 32 பத்தகச்சனாவின் தோழிகளை மணந்தனர். சித்தார்த்தாவின் (கௌதம புத்தரின்) தந்தை சுத்தோதனனுக்கு (Suddhodana) நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில், அமிதோதனா [Amitodana] இளையவர் ஆவார். இவரின் மகன் தான் சக்க பாண்டு [Sakka Pandu]. எனவே புத்தரின் தம்பியின் பேத்தி தான் பத்தகச்சனா ஆகும். ஆகவே வலிந்து கட்டிக்கொண்டு புத்தருடனான உயிரியல் தொடர்பு இந்த அத்தியாயத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், புத்தர் பிறந்த பூமியில், இதில் எதுவுமே அவர்களின் வரலாற்று நிகழ்வில் பதியவில்லை. மகாநாம தேரர் தனது மகாவம்சத்தின் மூலம் இலங்கையை 'தம்ம தீபமாக' [‘Dammadeepa’]’ சித்தரித்தார்; அதாவது, புத்தர் தர்மத்தைப் பாதுகாக்கவும் பிரச்சாரம் செய்யவும், தேர்ந்தெடுத்த நிலம் இது என்கிறார். அத்துடன் அவர், மகாநாம தேரர், (புத்தர் அல்ல), பௌத்தம் ஐயாயிரம் ஆண்டுகளாக மேலோங்கும் என்றும், சிங்களவர்கள் மட்டுமே அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார். தென்னிந்தியத் தமிழர்கள் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் உட்பட இந்தியாவில் பௌத்தம் அதன் செல்வாக்கை இழக்கத் தொடங்கிய ஒரு நேரத்தில், மகாவிஹார துறவிகள், குறிப்பாக மகாநாம தேரர் பீதியடைந்திருக்கலாம், எனவே பௌத்தத்தைப் பாதுகாக்க, இலங்கையை ‘பௌத்த நாடாக’ மாற்ற முடிவு செய்திருக்கலாம். இவ்வாறு, சிங்கள-பௌத்த என்ற இந்த ஒரு ‘உச்ச’ இனத்தை உருவாக்க, பல்வேறு பழங்குடியினர் மற்றும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து, சிங்கள இனத்தை அப்பொழுது தான் உருவாக்கினார்; எனவே, இந்த புது மொழியில் தேர்ச்சி பெறாத சராசரி பௌத்த பாமர மக்கள், திரிபிடகத்திற்கும் மகாவம்சத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். திரிபிடகம் என்பது மூன்று முக்கிய வகை நூல்களைக் கொண்டுள்ளது, அவை கூட்டாக பௌத்த நியதியை உருவாக்குகின்றன: சூத்திர பிடகம், வினய பிடகம் மற்றும் அபிதம்ம பிடகம் ஆகும். எனவே பௌத்த துறவிகள் மகாவம்சத்தைப் பிரசங்கித்தபோது, அந்தத் துறவிகள் கூறிய அனைத்தையும் புத்தரின் உண்மையான வார்த்தைகள் என்று பாமர மக்கள் ஏற்றுக்கொண்டனர். அன்று முதல் இந்நாட்டின் பௌத்த மதகுருமார்கள், பௌத்த தத்துவத்தை சிங்களவர்களின் ‘இன’மதமாக மாற்றி, மகாவம்சத்தின்படி அதனைப் பிரச்சாரம் செய்தனர். இவ்வாறாக, கடந்த 1400 முதல் 1500 வருடங்களாக, இந்த நாட்டில் பௌத்தர்கள், நமது பௌத்த மதகுருமார்களாலும், அவர்களின் 'பைபிள்' என்ற மகாவம்சத்தாலும் தவறாக வழிநடத்தப்பட்டு, வழிகாட்டப் பட்டு, பொய் சொல்லப்பட்டுள்ளனர்! Part: 72 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 8: This is about consecrating of Panduvasudeva. Vijaya ruled for 38 years, and sent a message to his brother Sumitta inviting him to come and take over the reign. Vijaya died soon after sending the message. Instead of Sumitta, his youngest son Panduvasudeva came to Lanka with thirty two sons of the ministers of the king in disguise of mendicant monks. One may wonder why they should come in disguise when they were on the invitation of the king! Coincidentally, Bahaddakaccana, the youngest daughter of another king Sakka Pandu was set to drift in sea on a ship along with thirty-two young maidens. What a coincidence to have thirty-two sons and thirty-two daughters! They too reached Ceylon, like Vijaya: what a coincidence! Panduvasudeva married Bahaddakaccana and became the ruler of Lanka. The Sakka Pandu was the son of Amitdodana who was the youngest brother of Suddhodana, the father of Gautama Buddha. Biological connection with Buddha is invented in this chapter. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 73 தொடரும் / Will follow துளி/DROP: 1955 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 72 https://www.facebook.com/groups/978753388866632/posts/33000992909549264/?
-
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question"
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 03 / In English & Tamil அடுத்த வருடம் அவர்கள் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். அங்கு கிறிஸ்துமஸ் சத்தமாக இருந்தது. பிரகாசமாக இருந்தது. மேலும் வணிக ரீதியாக இருந்தது. கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] நெருப்பிடம் [fireplace] அருகே தொங்கவிடப்பட்ட காலுரை [ஸ்டாக்கிங்ஸ் / Stockings] காணப்பட்டது. குழந்தைகள் சாண்டா கிளாஸ் [Santa Claus] புகைபோக்கியில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தனர். அடுத்த நாள் குழந்தைகள் எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ந்தனர். அன்று இரவு, சாரா கேட்டாள், “சாண்டா [Santa Claus] பரிசுகளை கொண்டு வந்ததாக நீங்கள் எப்போதாவது நம்பினீர்களா?” சாமுவேல் சிரித்தான். “நான் குழந்தையாக இருந்தபோது, ஆம். ஆனால் நான் ஏன் என்று ஒருபோதும் கேட்டதில்லை.” அவன் கொஞ்சம் இடைநிறுத்தினான். அதன் பின், “நாங்கள் மரபுகளில் பிறந்தவர்கள். நாங்கள் அவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறோம். பெரியவர்களாக இருந்தாலும், அவர்கள் நம்புவதை ஏன் நம்புகிறார்கள் என்று கேட்பவர்கள் மிகக் குறைவு.” அப்பொழுது, தனது சாதாரண வகுப்பில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை அறிவியல் பூர்வமாகக் கற்றுக் கொடுத்த தனது பள்ளி ஆசிரியரை சாரா நினைவு கூர்ந்தார், ஏன் என்றால், அவர் கிரகணங்களின் போது உண்ணாவிரதம் இருந்தார். அதேவேளை, சாரா, அவனின் பதிலை சங்கடமாக உணர்ந்து, ஒரு பெருமூச்சு விட்டாள். ஏனென்றால் அவளும் அப்படியே, ஒன்றும் ஏன் என்று கேட்பதில்லை. அது சரி சாரா, கொஞ்சம் என்னைப் பார் என்றவன் நாம், "நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன்" என்றான். மூன்றாவது கிறிஸ்துமஸ் அமைதியாக வந்தது. இந்த முறை, பைபிளைத் திறந்தது சாரா தான். அவள் லூக்கா, அத்தியாயம் 2 ஐ [Luke 2 / The Birth of Jesus] சத்தமாக, "அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்று வாசித்து விட்டு, அவள் சாமுவேலைப் பார்த்து, “குளிர்காலத்தில் மேய்ப்பர்கள் அதைச் செய்வார்களா?” என்று கேட்டாள். “இல்லை,” என்று சாமுவேல் மெதுவாக பதிலளித்தான். பின், “பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். ” என்றான். அவன் அவளுக்கு மற்ற வசனங்களைக் எடுத்துக் காட்டினான்: சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.] வாசித்து முடிய அவன் அவளுக்கு சொன்னான்: “பைபிளே குளிர்காலம் கடுமையாக இருந்தது என்று காட்டுகிறது, எனவே இயேசு டிசம்பரில் பிறந்திருக்க முடியாது.” என்றான். சாரா கொஞ்சம் தயக்கத்துடன் மெதுவாக பைபிளை மூடினாள். கண்ணீர் அவள் கண்களை நிரப்பியது - கோபத்தால் அல்ல, விசுவாசம் எடுத்தவுடன் உடைவதில்லை என்பதால். “அப்படியானால் கிறிஸ்துமஸ் என்றால் என்ன?” என்று அவள் கேட்டாள். சாமுவேல் அவள் கையைப் பிடித்தான். “ஒரு தேதி இல்லை,” “ஒரு மரம் இல்லை. சாண்டா அல்ல.” “இது பல நூற்றாண்டுகளாக வளர்ந்த கதை - வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரத்துடன் கலந்தது.” “ஆனால் இயேசு?” என்று அவள் கேட்டாள். “அவருடைய செய்தி நிலைத்திருக்கிறது,” என்று சாமுவேல் பதிலளித்தான். “உண்மை. இரக்கம். நீதி. மனிதநேயம்.” அவர்கள் அமைதியாக சாளரத்தின் ஊடாக அயலவர்கள் கொண்டாட்டத்தை பார்த்து ரசித்தனர். ஆண்டுகள் கடந்தன. அவர்களின் வீட்டில் இன்னும் மெழுகுவர்த்திகள் இருந்தன - ஆனால் குறைவான அலங்காரங்களுடன். அவர்களின் குழந்தைகளுக்கு சாண்டா கிளாஸ் கதை இல்லை. ஆனால் நேர்மை இருந்தது. ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும், அவர்கள் மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்றனர். சாரா இன்னும் பிரார்த்தனை செய்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிந்து கொண்டனர். அவர்கள் நம்பிக்கையை விட ஆழமான உண்மைகளைக் கற்றுக்கொண்டார்கள். ஒரு கிறிஸ்துமஸ் மாலையில், சாரா மெதுவாகச் சொன்னாள், "நான் இன்னும் நம்புகிறேன்." சாமுவேல் சிரித்தான். "நான் இன்னும் கேள்விகள் கேட்கிறேன்." அவள் அவன் மீது சாய்ந்தாள். "ஒருவேளை அது போதும்." என்றாள். சாமுவேல் தலையசைத்தான். ஏனென்றால் அவர்கள் அமைதியான உண்மையைக் கற்றுக்கொண்டார்கள்: நம்பிக்கை கேள்விகளுக்கு அஞ்சுவதில்லை. அன்பு உண்மைக்கு அஞ்சுவதில்லை. மாயையிலிருந்து விடுபட்ட கிறிஸ்துமஸ், பலவீனமாகாது—ஆனால் மனிதனாக மாறுகிறது. Brief of 'When the Candle Met the Question' / Part: 03 England and the Second Christmas They moved to England the following year. Christmas there was louder. Brighter. More commercial. Stockings hung by the fireplace. Children waited for Santa Claus to come down the chimney. One night, Sarah asked, “Did you ever believe Santa brought gifts?” Samuel smiled. “When I was a child, yes. But I never asked why.” He paused. “We are born into traditions. We accept them without questioning. Even as adults, very few people ask why they believe what they believe.” Sarah remembered her schoolteacher—who taught solar and lunar eclipses scientifically—yet fasted during eclipses. She felt uneasy. The Bible Opens The third Christmas arrived quietly. This time, it was Sarah who opened the Bible. Luke, Chapter 2. She read aloud about the shepherds guarding their flocks at night. She looked at Samuel. “Would shepherds do that in winter?” “No,” Samuel replied gently. “Historically, flocks were brought in before October 15 to protect them from cold and rain.” He showed her other verses: Song of Solomon 2:11 — “The winter is past.” Ezra 10:9,13 — People trembling in heavy winter rain, unable to stand outside. “The Bible itself shows winter was harsh,” he said. “So Jesus could not have been born in December.” Sarah closed the Bible slowly. Tears filled her eyes—not of anger, but of loss. Faith Does Not Break “Then what is Christmas?” she asked. Samuel took her hand. “Not a date,” he said. “Not a tree. "Not Santa.” “It is a story that grew over centuries—mixed with history, politics, and culture.” “But Jesus?” she asked. “His message remains,” Samuel replied. “Truth. Compassion. Justice. Humanity.” They sat silently. A Different Celebration Years passed. Their home still had candles—but fewer decorations. There was no Santa story for their children. But there was honesty. Every Christmas, they visited hospitals, orphanages, and old-age homes. Sarah still prayed. Samuel still questioned. But neither tried to convert the other. They had learned something deeper than belief. Ending One Christmas evening, Sarah said softly, “I still believe.” Samuel smiled. “And I still ask questions.” She leaned against him. “Maybe that is enough.” Samuel nodded. Because they had learned the quiet truth: Faith does not fear questions. Love does not fear truth. And Christmas, stripped of illusion, becomes not weaker—but human. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] முற்றிற்று / Ended துளி/DROP: 1954 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/32987342684247620/?
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 06 அத்தியாயம் 6 - கண்டி மற்றும் நுவரெலியா கண்டியை அடைந்தபோது காற்று குளிர்ந்தது; கோவில்மலர்கள் வாசம் வீசியது. தலதா மாளிகை அல்லது பல் அவையம் ஒளியில் மிதந்தது; ஏரியில் விளக்குகள் பிரதிபலித்தன. தலதா மாளிகையில் பூஜையை மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரிவுகளைச் சேர்ந்த துறவிகள் தினமும் மூன்று முறை செய்கிறார்கள்: விடியற்காலை, நண்பகல் மற்றும் அந்தி வேளையில் ஆகும். அப்பொழுது நினைவுச் சின்னத்தைப் பார்ப்பதற்காக உள் அறையைத் திறப்பது மற்றும் பக்தர்களால் பூக்கள் காணிக்கை செலுத்துதல் நடைபெறும். ஆரனும் அனலியும் அப்படியான ஒரு சூழலில், வெளிவீதியால், ஆலயத்தை நோக்கி நடக்கும் பொழுது, [hevisi drums] ஹெவிசி பறை கேட்டுக் கொண்டு இருந்தது. அங்கே நிறைய பூக்கடைகள் இருந்தன. கோயிலுக்குப் போகிறவர்கள் வாங்கிச் செல்வதை இருவரும் கவனித்தார்கள். அவர்களும் பூக்களை வாங்கினர். ஹெவிசி மேளம் வெறும் இசை நிகழ்ச்சி அல்ல. இது இலங்கையின் பௌத்த மரபுகள் மற்றும் கோயில் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு புனிதமான கலை வடிவமாகும். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் [Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha] 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். இவன் இலங்கையில் 1700களில், கிட்டத்தட்ட அழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுக்க விரும்பி, சியாமில் (Siam / தாய்லாந்து) இருந்து துறவிகளை அழைத்துவர முயற்சி செய்தான். சியாம் பிக்குகள் இறுதியாக 1753-இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் கண்டியில் மல்வத்த மற்றும் அச்கிரிய [Malwatta and Asgiriya chapters] என்னும் இரண்டு பிக்கு சங்கங்களை உருவாக்கினர். அந்த நேரத்தில், எசல [சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும்] பெரகரா விழாவில் [The Kandy Esala Perahera procession] பத்தினி அம்மன் [கண்ணகி] முதன்மையாக வணங்கப்பட்டு வந்தார். ஆனால் சியாமிலிருந்து வந்த பிக்குகள் இதை ஏற்கவில்லை. அவர்கள் மன்னரிடம், “தலதா (Dalada / Sacred Tooth Relic) விழாவின் முன்னிலையாக இருக்க வேண்டும்” எனக் கூறினர். அதன் பிறகு, அதாவது சுமார் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தான், பெரகரா விழாவில் பல் நினைவுச் சின்னம் முக்கியத்துவம் பெற்றது என்ற நீண்ட வரலாற்றை சுருக்கமாக அனலி எடுத்துரைத்தாள். தலதா மாளிகையில் உள்ள ஓவியங்கள் கண்டி காலத்து ஓவியங்கள் ஆகும். இவை மாளிகையின் பல இடங்களில், குறிப்பாக மேல் மாடி உட்கூரையில் உள்ள நிரல்களிலும், தலதா மண்டபம், எண்கோண மண்டபம் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் பல பெண்ணுருவங்கள் அடங்கிய நுட்பமான இரதங்களும், சதுர்நாரி பல்லக்குகளும் இடம்பெற்றுள்ளன. அவை எல்லாவற்றையும் ரசித்து இருவரும் பார்த்தார்கள். தர்மத்தின் தானமே எல்லா தானங்களையும் மிஞ்சும். தர்மத்தின் ருசி எல்லா ரசனைகளையும் மிஞ்சும். தர்மத்தில் உள்ள இன்பம் எல்லா இன்பங்களையும் மிஞ்சும். ஆசையை அழிப்பது எல்லா துன்பங்களையும் வெல்லும். ஆரனும் அனலியும், தலதா மாளிகைக்கு சென்றபின், அதன் முன் இருந்த, 1807 ஆம் ஆண்டு மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கரால் கட்டப்பட்ட கண்டி ஏரியை சுற்றி பொழுதுபோக்காக நடைப் பயணம் செய்து, கோயில் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சிகளை கண்டு ரசித்தனர். “வரலாறு நம்மைப் பிரித்தது,” என்று ஆரன் கூறினான், “ஆனால் பக்தி இன்னும் நம்மைப் பிணைக்கிறது.” அனலி சிரித்தாள். அப்பொழுது அவர்கள் இரவில் காலடி எடுத்து வைத்தனர். அமைதியான ஏரியின் குறுக்கே கண்டியின் விளக்குகள் பிரதிபலித்தன. அங்கே பொதுவான கெண்டை மீன் மற்றும் திலாப்பியா மீன்கள் அங்கும் இங்கும் கூட்டமாக ஓடுவது தெரிந்தது, அவைக்கு மேலே நீர்க்காகம் அல்லது பெரிய நெட்டைக்காலி [Great Cormorants], மீன்கொத்தி, மற்றும் அவை போன்ற பறவைகள் வட்டமிட்டுக் கொண்டு இருந்தன. அக்காவின் மகள் அதை பார்ப்பதில், தனது நேரத்தை செலவழித்தாள். அது அவர்களுக்கு தங்களுக்குள் தனிப்பட பேசவும் பழகவும் இடமளித்தது. 'உண்மையான அன்புக்கு ஏங்குபவர்களைத்தான் காதல் மரணக் குழியில் தள்ளுகிறது' என்று யாரோ சொன்னது அவனுக்கு சிரிப்புக்கு வந்தது. ஏன் என்றால், அது அவளின் கன்னக்குழியில் தான் விழுத்தும் என்று இப்ப அவனின் அனுபவம். அவன் தோளில் சாய்ந்து இருந்தவள், கொஞ்சம் எட்டி, அவன் காதில், "நான் உங்களை காதலிக்கின்றேன். இறுதி வரைக்கும் என்னை இப்படியே காதலிக்க வேண்டும்" என்றாள் வெட்கத்துடன். அவள் கன்னத்தை கிள்ளியபடி, "வேற வேல என்ன இருக்கு அத விட முக்கியமா" என்றான் ஆரன். பின் அவன், அவள் முகத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு, "அடி பாவி... இத ஏன் மொதலையே சொல்லல" என்றான். "ம்ம்ம் ... எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குமானுத் தெரியல... அதான் சொல்லல" என்றாள் செல்லச் சிரிப்புடன். பிறகு எனோ, " சும்மா தான்!!!" என்றுக் கூறி அவன் நெஞ்சத்தில் மீண்டும் சாய்ந்து கொண்டாள். அவள், தான் என்ன பேசுகிறேன் என்று ஒரு தொடர்பு இல்லாமல், எதோ ஒரு மயக்கத்தில் உளறுவது போல் இருந்தது. "சும்மாவா சொன்னார்கள் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்று" என்று எண்ணிக் கொண்டு, ஆரன், " சரி!! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா" என்றான். "ம்ம்ம்!!!" என்றாள். "நிமிடத்திற்கு நிமிடம் நீ அழகாகிக் கொண்டே போகின்றாயே ... அது எப்படி" என்றான். நாணத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கூடுதலாய் ஒரு நிமிடம் கூட ஆகவில்லை ஆனால் அவள் அழகைக் கூட்டி இருந்தாள். "ஒ! தன் கேள்வி தவறோ... வினாடிக்கு ஒரு முறை அல்லவா இவள் அழகை கூட்டிக் கொண்டே போகிறாள்" என்று எண்ணிக் கொண்டு அவன் இருக்கும் போதே, "அது ரகசியம்... சொல்ல முடியாது... சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்" என்றாள். "என்ன கேள்வி" என்றான். "உண்மையிலேயே வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து காதல் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?" என்றாள். அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் கண்கள் பேசின. அது சொல்லாமல் சொன்னது. உள்நாடு வெளிநாடு காதலுக்கு ஏது பாகுபாடு உறங்கும் போது கனவிலும் விடிந்தவுடன் நினைவிலும் வாழும் வரை உயிரிலும் காற்றை கண்ட உடன் நடனமாடும் மரங்களைப் போல ஒருவரை ஒருவர் கண்டவுடன் ஆசை அன்பு, பாசம், காமம் துளியாய் மனதில் எழும் உணர்வே காதல் காதல் ஏரிக்கரை கொஞ்சம் அமைதியாய் அப்பொழுது இருந்தது. சூரியன் மறையும் நேரம். குளிர் தென்றல் அவர்கள் இருவருக்கும் பல கதைகளைப் பேசிக் கொண்டு சென்றது. ஏனோ அவள் முகம் திடீரென வாடிப் போனது . "ஏய் என்னாச்சி?" என்றான் ஆரன். பதில் வரவில்லை. "எதாவது பிரச்சனையா...?" ஆரன் தொடர்ந்தான். "இல்லை..." என்றாள் அனலி. பெண்கள் இல்லை என்றால் ஏதோ இருக்கின்றது என்று அர்த்தம். எனவே, அவன் திருப்பி பின்னால் பார்த்தான். அக்காவின் மகள், பறவைகளை, மீன்களை எண்ணுவதை விட்டு விட்டு, சித்தியை எண்ணுவது போல அங்கு நின்றாள். ஆரன், அக்காவின் மகளை கூப்பிட்டு, எப்படி ஏரி, தலதாமாளிகை என்று கேட்டு நிலைமையைச் சமாளித்தான். பின் அடுத்த நாள், கண்டி நகரத்தை விட்டு, நுவரெலியாவிற்கு போகும் பொழுது, வழியில், தொடர் வண்டி நிலையம், கடைத் தெரு, பூந்தோட்டம், பேராதனை பல்கலைக் கழகம், என பலவற்றை இருவரும் ரசித்துப் பார்த்தார்கள். அதன் பின், கண்டி மற்றும் பேராதனையின் பரபரப்பான தெருக்களிலிருந்து, ஆரனும் அனலியும் மத்திய மலைப்பகுதிகளுக்கு மேலும் தெற்கே பயணிக்கத் தொடங்கினர். அங்கு மூடுபனி மூடிய மலைகளும் பச்சை பசேலென தேயிலைத் தோட்டங்களும் அவர்களுக்காகக் காத்திருந்தன. மேகங்கள் நனைந்த மலைகள் மற்றும் மரகதப் பள்ளத்தாக்குகள் வழியாக அவர்களின் வாகனம் மெதுவாக மேலே ஏறியது. அக்காவின் மகள், "ஆஹா.. அங்கு பாருங்கள் எவ்வளவு பச்சை பசேல் என்று புல்வெளிகள். வயல்கள். ஆஹா! அதோ சிறிய ஓடைகள், பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது சித்தி" என்றாள். "ஆமாம், கீழே பள்ளத்தாக்கு. மேலே மலை முகடுகள். அவற்றில் மழை மேகங்கள் மிதந்து கொண்டு உள்ளன" என்று அனலி, கை நீட்டிக் காட்டி தொடர்ந்தாள். திடீரென அக்காவின் மகள், ஆரனைப் பார்த்து "இலங்கைக்குப் பறந்து செல்லும்போது அனுமாருக்கு மிகவும் குளிர்ந்து இருக்குமா?" என்று கேட்டாள். ஆரன் சிரித்தான் "வரும் பொழுது குளிர்ந்து இருக்க வேண்டும், அது தான் போகும் போது வாலில் நெருப்புடன் பறந்தானோ ?" என்ற கேள்வியுடன் பதில் அளித்தான். அனலி ஜன்னலுக்கு எதிராக முகத்தை அழுத்திக் கொண்டு, சிவப்பு நிற புடவைகளில் தேயிலை பறிப்பவர்கள் எறும்புகள் போல துடிப்பான பச்சை சரிவுகளில் நகர்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "நாம் வேறொரு உலகத்திற்குள் அடியெடுத்து வைத்தது போல் இருக்கிறது," என்று அவள் கிசுகிசுத்தாள். "பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கவிடப்பட்ட ஒரு உலகம் போல் இருக்கிறது" என்றாள். ஆரன் சிரித்தான். "இது நினைவுகளைச் சுமந்து செல்லும் உலகம் - காலனித்துவ தோட்டங்கள், இந்தியாவிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட தமிழ் தொழிலாளர்கள், தலைமுறை தலைமுறையாக உழைப்பு மற்றும் ஏமாற்றம். அவர்களின் சோகக் கதைகள் நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் மூழ்கியுள்ளன." என்றான். நுவரெலியாவிற்குச் செல்வது ஒரு நீண்ட பயணம். இடையில் ஓரிடத்தில், ஒரு பழங்கால கடையில் இறங்கி, பழங்கள் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, அங்கிருந்து ரம்போதா அருவிகளைப் [The Most Majestic Ramboda Falls In Sri Lanka] பார்த்தார்கள். பச்சைப் பசேல் என்று மலைக் காடுகள் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருந்தன. அப்பொழுது சட்டென்று மழை தூறியது. அந்த தூறலில், இருவரும் நன்றாக நனைந்து விடடார்கள். அந்த ஈரத்தில், அவளின் உடல், ஒரு கவிதை போல மிதந்தது அவனுக்கு, அவன் வாய் அவனை அறியாமலே; மலையின் உச்சி மனம் நொந்து விழுந்து சாவதற்கு அல்ல மனம் மகிழ்ந்து மேலும் பறந்து உயர்வதற்கு தாய்நாட்டின் தாலாட்டில் மலை உச்சியின் விளிம்பில் வாழ்வதை நினைப்போமே அனலி! என்று முணுமுணுத்தது. வழியில் தம்ரோ டீ [Damro Tea] தொழிற்சாலைக்கு ஒரு விசிட் [visit] அடித்தார்கள்! ஆனால் அவர்கள் சொல்லும் டெக்னாலஜி [technology] எல்லாம் கேட்கும் நிலையில் ஆரனும் அனலியும் இல்லை! அவர்களின் எண்ணம் எல்லாம் சிகிரியா சித்திரம் போல், முகிலில் மிதந்து கொண்டு இருந்தன. அதன் பின், இலங்கையின் "சிறிய இங்கிலாந்து" என்று அழைக்கப்படும் நுவரெலியாவை அடைந்த அவர்கள், பைன் மரம் மற்றும் ஈரமான மண்ணின் நறுமணத்தைச் சுமந்து செல்லும் மிருதுவான மலைக் காற்றில் கிரிகோரி ஏரியின் (Lake Gregory) வழியாக நடந்து சென்றனர். காலனித்துவ கால பங்களாக்கள் தெருக்களில் வரிசையாக இருந்தன, குதிரை வண்டிகள் கற்களின் மீது மெதுவாகச் சத்தமிட்டன. நுவரெலியாவில் அப்பொழுது 14°C. பனி மூட்டமாக இருந்தது. ஆனால் ஆரனுக்கு இவை ஒன்றும் பெரிய குளிரல்ல. ஆனால் அனலிக்கு பனி கடந்து செல்லும்பொது, எலும்பு வரை எட்டிப் பார்த்து குளிர்ந்தது. அவள் ஆரனை இறுக்கிப் பிடித்து அணைத்துக் கொண்டாள். அக்காவின் மகளையே மறந்து விட்டாள் அந்த குளிரில். அனலியின் இந்த புத்துணர்ச்சியான முகம், அவளின் தங்க மாலை மின்னிய சங்கு கழுத்து, ஒட்டிய உடையில் அவளின் அழகு, அவனை அப்படியே பிரமிக்க வைத்தது. என்றாலும் அவன், அவள் கைகளை உதறிவிட்டு கொஞ்சம் விலகி நின்றான். அதன் பின் அவர்கள் வடக்கு நோக்கித் திரும்பினார்கள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 07 தொடரும் துளி/DROP: 1953 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/32974794075502481/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 71 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 71 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை 701 வங்காளி வாலிபருக்கு 701 தமிழ் குமாரி பெண்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பணியாட்களுடனும் வணிகர்களுடனும் திருமணம் செய்ய இலங்கை வருவதால், எல்லா வகையிலும், தமிழர்களுக்கு இலங்கை மீது அதிக உரிமை இருப்பதே தெரிகிறது. அன்றைய காலக்கட்டத்தில், ஒரு உதாரணத்துக்கு. விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளாக தோணியில் நாடு கடத்தப் பட்டு, இலங்கையில் கரை ஒதுங்கிய மொத்தம் 701 பேரின் வங்காள ஆரிய ரத்தமும் மற்றும் அவர்கள் அனைவரினதும் தமிழ் மனைவிமாரினதும் , அவர்களுடன் அவர்களுக்கு பணி புரிய வந்த தமிழ் கூட்டாளிகள், வேலையாட்களினதும் மொத்தம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் இரத்தமும் ஆரம்ப காலத்தில் முதலில் கலக்கிறது. இப்ப சொல்லுங்கள் யாரின் இரத்தம் கூடுதலாக இருக்கும்? யாருக்கு இலங்கை மீது அதிக உரிமை இருக்கும்? மற்றும் அவர்கள் வரும் பொழுது ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த ஆதி நாகர், இயக்கர் குடிகளின் இரத்தமும் கட்டாயம் நாளடைவில் சேர்ந்து இருக்கும். எனவே சிங்கள வம்சத்தின் கலப்பு எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை? ஆனால் அதை அவர்கள் புரியும் பக்குவத்தை மகாவம்ச, ராஜவலிய கதைகள் தடுத்துக்கொண்டே இருப்பது தான் உண்மை. இயல்பிலேயே தனது சொந்த நாட்டில் ஒரு குற்றவாளியான விஜயனும் அவனது தோழர்களும் தங்கள் தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் வெவ்வேறு கப்பலில் தவிக்க விட்டுவிட்டு, விஜயன் தனது முதல் அல்லது இரண்டாவது மனைவியை [இலங்கையின் பூர்வீக குடியான குவண்ணாவை] வேறொரு வெளிநாட்டுப் பெண்ணைத் [மதுரை தமிழ் இராசகுமாரியை] திருமணம் செய்து கொள்ள, தனது பிள்ளைகளுடன் துரத்தினார் என்கிறது மகாவம்சம். இந்த நிலையில், விஜயனை இலங்கையின் முதல் நாகரிக குடிமகன் என்று சொல்லமுடியுமா ? அல்லது இலங்கையின் உரிமைகோரலின் அடிப்படை எதையும் அவன் உருவாக்க முடியுமா? அது மட்டும் அல்ல பௌத்தம் கூட அப்போது இலங்கையில் நிறுவப்படவில்லை. சிங்கள மொழி என்று ஒன்று உலகிலேயே இல்லை? அது, சிங்கள மொழி ஆரம்பிக்க தொடங்கியதே, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே! இலங்கையில் இருந்தது சிவா, நாக வழிபாடு மட்டுமே!! இன்னும் ஒன்றைக் கவனியுங்கள், விஜயன் தனது தூதர்களை தமிழ் நாட்டுக்கு அனுப்புகிறான், செய்திகள் பரிமாறப்படுகின்றன, தமிழ் புரியாத இலங்கையாக இருந்து இருந்தால், தன் மகளையும், 700 தோழிகளையும் அங்கு எப்படி திருமணம் செய்து வாழ ஒரு வீரமிக்க, செல்வந்த அரசன் அனுப்பினான்? செய்திகளை எப்படி பொதுமக்களிடம் பரிமாறினர் ? கொஞ்சம் சிந்தியுங்கள்? மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள குவண்ணாவின் முழு அத்தியாயமும் தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கவேண்டும், பாண்டிய நாட்டு மன்னன் தன் மகளை சமீபத்தில் இலங்கையில் வந்து ஒரு துணை மானிடப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி, பிள்ளைகள் பெற்று வாழ்ந்து வரும் அறியப்படாத ஒரு பொல்லாத, நாடுகடத்தப்பட்ட ஒருவனிடம் அனுப்பியிருப்பானா? அப்படி அனுப்பினான் என்று மகாநாமா கூறினால், கட்டாயம் எதோ ஒன்றில், எதோ ஒரு நோக்கில் பைத்தியமாக இருக்க வேண்டும்? அதே நேரம், தென் இந்தியா வரலாற்று குறிப்புகளில், பாண்டிய அரசிலோ அல்லது தமிழ்நாட்டிலோ, ஒரு இளவரசி, தோழிகள் சகிதம், தனது உதவியாளர்களுடனும் வணிக மக்களுடனும் இலங்கையில் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ வாழ்வதற்காக வந்ததாக எந்த குறிப்புகள் எதுவும் இல்லை. அத்தியாயம் 07, தொடக்கத்தில் தெளிவாகக் கூறுகிறது: உலகின் வழிகாட்டியாகிய புத்தபெருமான் அகில உலகத்தின் மீட்டெழுவதற்கான செயல்களைச் செய்து முடித்ததும், தெய்விக அமைதியின் உச்ச நிலையை அடைந்தவராக, பேச்சாற்றல் மிக்கவர்களில் பெரியவரான அவர், பெரிய தேவர் கூட்டத்தின் நடுவில், தம்முடைய நிர்வாண [முத்தி] நிலையில் படுக்கையில் இருந்த பொழுது, தனது அருகில் நின்ற சக்கனிடம் (Sakka / தேவர்களின் அரசன் இந்திரன்) பேசினார்: "சீகபாகு / சிங்கபாகு" வின் மகன் விஜயன் லால நாட்டி லிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வருகிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவகற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்கிறார். ததாககர் [மனதில் நிறைநிலை அடைந்தவர் / புத்தபெருமான்] கூறிய இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீல தாமரை மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த *தேவனிடம் [நீல வண்ணமுடைய - விஷ்ணு] ஒப்படைத்தான். புத்த சமய தெய்வ பக்தர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்வுகளுக்காகத் [‘serene joy and emotion of the pious’] தான் மகாவம்ச கதையை தொகுத்ததாக ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வெளிப்படையாக கூறி இருப்பதால், ஏன் மகாநாம தேரர் புத்தரின் அமானுஷ்ய சக்திகள் மற்றும் இந்து கடவுள்களுக்கு கட்டளையிடும் அவரது திறன் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் புனைவுகளை அறிமுகப்படுத்துகிறார் என்பது வெளிப்படையாக எமக்குப் புரிகிறது. புத்தர் கடவுளைப் பற்றி அதிகமாக எதுவும் சொல்லவில்லை. அத்துடன் இந்து கடவுள்களை வழிபடுவதையோ அல்லது பிராமண பூசாரிகளால் இந்து கோவில்களில் செய்யப்படும் விழாக்களையோ மற்றும் சடங்குகளையோ நம்பவில்லை என்ற உண்மை அவரின் போதனைகளிலும் வாழ்விலும் செயல்களிலும் எங்கும் பறந்து விரிந்து இருந்தபோதிலும், மகாநாமதேரர் இப்படியான தரவுகளை புகுத்தியிருப்பது வேடிக்கை மட்டும் அல்ல, புத்த மதத்தின் உண்மைக்கும் களங்கம் விளைவிக்கிறது, எதோ பக்திமான்கள் மகிழட்டும் என புத்தரையும் கூத்து போட வைப்பது சரியா? ஒன்று மட்டும் ஞாபகப் படுத்துங்கள், புத்தரைப் பின்பற்ற உலகத்திலிருந்து, அதாவது ஆசையில் இருந்து, முழுமையாக ஓய்வு பெறுவது அவசியம். இப்ப சொல்லுங்கள், எந்த புத்தகுரு அல்லது புத்த பத்திமான் இப்படி இலங்கையில் வாழ்கிறார்? அப்படி வாழ்ந்தால், ஏன் வடக்கிலும் கிழக்கிலும், தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில், அவர்களின் காணியை பறித்து, புத்தர் சிலையாக எழும்புவாரா? இப்போது என் நினைவுக்கு வருவது என்னவென்றால், புத்தருக்கு, நாடு கடத்தப்பட்ட, கெட்ட நடத்தை கொண்ட விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தனிப்பட்ட ஆர்வம் இருந்தால், மற்றும் புத்தர் ஏற்கனவே இலங்கை உயிர் வாழ் இனங்களுக்கு, தனது போதனையை போதித்து இருப்பதாலும், விஜயனும் அவனது கூட்டாளிகளும், ஏன் இலங்கையில் அரசை நிறுவியபோது அல்லது அதற்குப் பின்னாவது, தனது 38 ஆண்டு ஆட்சி காலத்தில், எப்போதாவது, பௌத்தர்களாக இருக்கவில்லை? மேலும், இலங்கையில் அவர்களின் முதல் வாழ்க்கை இயக்கர்களிடையே [சமஸ்கிருதம்: यक्ष yakṣa; பாலி: yakkha / உருவமற்ற, மனிதரல்லாதவர்கள்] தொடங்குகிறது , புத்தர் யாரை பயமுறுத்தி, இலங்கையில் வாழத் தகுதியற்றவர் என்று விரட்டி, வேறு ஒரு தீவுக்கு அகற்றினாரோ, அப்படிப்பட்ட இயக்கர்களைத் தான் முதலில் விஜயன் சந்திக்கிறான்?, அப்படி என்றால், புத்தர் தன் பழைய கதையை மறந்து விட்டாரா? ஏன் - தான் தேர்ந்தெடுத்த, பெருமைக்குரியதாக அவராலேயே கருத்தப்பட்ட, துர்நடத்தை கொண்ட விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகளைச் சந்திக்க, இயக்கர்களை அனுமதித்தார்? அது மட்டுமின்றி, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு புத்தருடன் மிகவும் நட்பாக, அவரது இரண்டாவது மற்றும் மூன்றாவது வருகையில் இருந்த நாகர்களை, விஜயனும் அவரது கூட்டாளிகளும் ஏன் சந்திக்கவே இல்லை? பல ஏற்பாடுகளை செய்த புத்தருக்கு ஏன் இவைகள் ஞாபகம் வரவில்லை? மற்றொன்று, மகாவம்சத்தின் பிந்தைய அத்தியாயத்தில், விஜயனுக்குப் பிறகு இலங்கைக்கு புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதுவும் இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அசோகரின் மகன் அல்லது தூதுவர் மூலம்? அது மட்டுமின்றி, புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்பியது அசோகர் மட்டுமே! சிங்களம் என்ற இனம் ஆரம்பிப்பதற்கு விஜயன் என்ற உருவம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்ததே தவிர, அவர் ஒன்றும் சாதிக்கவில்லை ! இலங்கையில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கான எந்தவொரு முயற்சியையும் தொடர அவருக்கு ஒரு பெருமைமிக்க உரித்தான குழந்தைகள் கூட இல்லை. இந்துவாக பிறந்து இந்துவாகவே இறந்தான்! Part: 71 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 As of that time, by all counts, Tamils had a larger claim on Lanka as ladies came with attendants and trade people. Vijaya, a criminal by nature in his own country, chased away his first wife to marry another woman cannot form the basis of claim of Lanka for Buddhists. Even the Buddhism was not established in Lanka at that time. The entire episode of Kuvanna is not in the Dipavamsa. Would the king of Pandya country have sent his daughter to an unknown person who recently landed in Lanka and living with a sub-human woman? Mahanama must be crazy! There are no references to this in the Pandya kingdom from which the princess came with her attendants and trades people. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 72 தொடரும் / Will follow துளி/DROP: 1952 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 71 https://www.facebook.com/groups/978753388866632/posts/32969445186037370/?
-
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question"
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 02 / In English & Tamil சாமுவேல் யாழ்ப்பாண போதனை மருத்துவ மனையிலும் சாரா வேம்படி மகளீர் கல்லூரியிலும் கடமையாற்றுவதால், திருமணமான பின், அவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கள் வாழ்வை தற்காலிகமாக அமைத்தார்கள். சாரா, திருமண தம்பதிகளாக, தங்களது முதல் கிறிஸ்துமஸ்ஸை பிரத்தியேகமாக கொண்டாட, வீட்டை கவனமாக அலங்கரித்தாள். ஜன்னல் அருகே ஒரு சிறிய கிறிஸ்துமஸ் மரம் நின்றது. மெழுகுவர்த்திகள் மெதுவாக மின்னின. அவள் வீட்டு வேலைகள் செய்யும் போதும் கூட கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினாள். ஆனால் சாமுவேல், இவைகளில் ஒன்றிலும் தனிக்கவனம் செலுத்தாமல், தானும் தன்பாடாக இருந்தான். அதைக்கவனித்த சாரா, "கிறிஸ்துமஸ் நெருங்குகிறது, 2026 பிறக்கப்போகுது, ஆனால் நீ அமைதியாக இருக்கிறாய்," என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள். "உன் ஆர்வத்தை, மகிழ்வை, செயலை பார்த்து, நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்," என்று அவன் பதிலளித்தான். "இது உலகை இரட்சிக்க பிறந்த இயேசுவின் பிறந்தநாள்," என்று அவள் இயல்பாகச் சொன்னாள். சாமுவேல் தயங்கி, பின்னர் மெதுவாகக் கேட்டான், "அவர் எப்போது பிறந்தார் என்று எப்படி உனக்குத் தெரியும்?" சாரா சிரித்தாள். "டிசம்பர் 25. அது அனைவருக்கும் தெரியும். ஏன் குட்டி பிள்ளைக்கு கூட , வேண்டும் என்றால் கேட்டுப் பாருங்க" என்றாள். ஆனால், அப்பொழுது சாமுவேல் வாக்குவாதம் செய்யவில்லை. அவன் அமைதியாக சிரித்தான், மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்க உதவினான். அன்பு, பொறுமையுடன் தொடங்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். மற்றது, இது, திருமணத்தின் பின், அவளின், முதல் கிறிஸ்மஸ். வாரங்கள் கழித்து, ஒரு சாதாரண மாலையில், உப்பரிகையில் [பால்கனியில்] அமர்ந்து இருவரும் நிலா ஒளியில் கொஞ்சம் ஓய்வு பெற்றுக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு இருந்தார்கள். அன்று மூன்றாம் பிறை வானில் ஒளிர்ந்துகொண்டு இருந்தது. சாமுவேலுக்கு அப்பொழுது பாரதிதாசனின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. துருக்கச் சிறுவன் ... "மூன்றாம் பிறையாய்த் தோன்றும் காலை என்கூட்டத்தார் உன்னைத் தொழுவார் ஆதலாலே அழகு நிலவே துருக்கருக்குச் சொந்தப் பொருள் நீ ! கத்தோலிக்கச் சிறுவன்... "கன்னி மரியாள் உன்மேல் நிற்பாள் ஆதலாலே அழகு நிலவே கத்தோலிக்கச் சொத்து நீதான்! இந்துச் சிறுவன்... எங்கள் சிவனார் முடியில் இருப்பாய் ஆதலாலே அழகு நிலவே இந்து மதத்தார் சொந்தப் பொருள் நீ ! அவன் அந்த பாடல் வரிகளை பாடிக் காட்டிவிட்டு, சாராவிடம் கேட்டான்: மூன்று பேரும் மொழியைக் கேட்டால், யாருக்கு சொந்தம் தீர்ப்புச் சொல்வாய்? சாரா, எந்த சிந்தனையும் செய்யாமல், எடுத்த உடனேயே, அது கத்தோலிக்கருக்கே என்றாள். சாமுவேல், அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, ... பாரதிதாசனின் அடுத்தவரியை பாடினான். சுயமரியாதைச் சிறுவன்... யாவரும் மனிதர் என்பது தெரிந்தால், நிலவும் பொதுவே என்பது தெரியும், அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே! அவள் ஒன்றும் சொல்லவில்லை, மௌனமாக அவனைப் பார்த்தாள். சாமுவேலும் மௌனமாக ஒரு வரலாற்றுப் புத்தகத்தைத் திறந்தான். “சாரா,” அவன் மெதுவாகக் கூறினான், கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது. 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாகத் தெரியவில்லை என்றான். அவள் மேலே பார்த்தாள், பின் சாரா முகம் சுளித்தாள். “அப்படியானால் அதை ஏன் மாற்ற வேண்டும்?” அவள் சட்டென்று கேட்டாள். அங்குதான் அவர்களின் சூழ்ச்சியே இருக்கிறது என்றவன், "கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால் - “சாட்டர்னேலியா. யூல். பேகன் [Saturnalia. Yule. Pagan] கொண்டாட்டங்கள் - அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை." சுருக்கமாக, “கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை மாற்ற, கிறிஸ்தவத் தலைவர்கள் ஏற்கனவே உள்ள பண்டிகைகளை கிறிஸ்துவின் கதையுடன் இணைத்தனர்.” என்றான். அறை அமைதியாகிவிட்டது. சாரா கோபப்படவில்லை. ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அதை கவனித்த சாமுவேல், " சாரா நான் ஒன்றையும் பழிக்கவில்லை, இன்றைய இந்து சமயம் கூட, தென் இந்தியரை, தங்களுக்குள் உள்வாங்க, தங்களின் வேத சமயத்துக்குள், பண்டைய தமிழரின் சைவ சமயத்தை உள்வாங்கியது ஒரு வரலாறு. அதற்காக முருகன் → ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால் → விஷ்ணு ஆனான்! சிவன் → ருத்திரன் ஆனான்! கொற்றவை →பார்வதி / துர்க்கை ஆனாள்! அதற்குத் தக்க புராணங்களும் இயற்றப்பட்டன." என்றான். அறை அமைதியாகிவிட்டது. சாரா கோபப்படவில்லை. ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அவளின் வாயும் மனமும் உலக நாடுகளின் அன்பு இரட்சகரை துதித்துக்கொண்டு இருந்தது. "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!" "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!" "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!" "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!" Brief of 'When the Candle Met the Question' / Part: 02 The First Christmas It was their first Christmas as a married couple, still living near Jaffna. Sarah decorated the house carefully. A small Christmas tree stood near the window. Candles flickered softly. She sang hymns as she worked. Samuel watched. “You’re quiet,” she said, smiling. “I’m thinking,” he replied. “It’s Jesus’ birthday,” she said naturally. Samuel hesitated, then asked gently, “Do you know when he was born?” Sarah laughed. “December 25. Everyone knows that.” Samuel did not argue that night. He only smiled and helped her light the candles. Love, he knew, must begin with patience. The Question Enters the House Weeks later, on an ordinary evening, Samuel opened a history book. “Sarah,” he said softly, “did you know that Christmas was officially fixed on December 25 only 340 years after Jesus’ death?” She looked up. “Pope Julius I made that declaration,” he continued. “Before that, Christians remembered Jesus’ birth on March 29, January 6, and even a date in June.” Sarah frowned. “Why change it then?” “Because Europe already had midwinter festivals,” Samuel said. “Saturnalia. Yule. Pagan celebrations.” “To convert non-Christians, Christian leaders merged existing festivals with Christ’s story.” The room fell silent. Sarah was not angry. But something inside her shifted. Her mouth and mind were filled with praise for the beloved Savior of the world. "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift" நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 03 தொடரும் / Will follow துளி/DROP: 1951 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/32961478550167367/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 70 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 70 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மகாவம்சத்தின் ஆசிரியர், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் தம்பபன்னி [இலங்கை] என்ற பகுதியில் கிமு 543 இல் புத்தர் காலமான அதே தினத்தில் வருகை தந்ததாக, ஒரு மத முக்கியத்துவம் கொடுப்பதற்காக, செயற்கையாக நிர்ணயித்தார். அதற்காக, அதாவது இந்த சூழ்ச்சியால், விஜயனுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர்களின் ஆட்சிக் கால இடைவெளியை நிரப்புவதற்காக ஆட்சிக்காலத்தை சிலருக்கு நீட்டப்படுள்ளது. உதாரணமாக, அபயனின் மருமகன் பண்டுகாபயா [பண்டுகாபயன் / King Pandukhabaya, nephew of Abhayan] கிமு 377 முதல் கிமு 307 வரை, அதாவது 70 ஆண்டுகள் என நீடிக்கப் பட்டுள்ளது. பண்டுகாபயாவின் மகன் மூத்தசிவா 60 ஆண்டுகள் ஆட்சி செய்தார் (கி.மு. 307 - கி.மு. 247) இவ்வாறு தந்தையும் மகனும் 130 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்! மேலும் விஜயனின் வருகை பற்றிய கதை கிபி 6 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வுக்கு கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், விஜயன் ஒரு பௌத்தர் அல்ல. ஆனால் ஒரு இந்து, சிங்களவர் அல்ல, ஆனால் பெங்காலி - கலிங்க வம்சாவளி! மற்றது உலகில் சிங்களம் என்ற மொழியே இல்லை! புத்தர் இறந்த மாதத்தில், கட்டாயம் இலங்கை வந்து அடைய முடியாது என்பதை விபரமாக, காற்றின் படங்களுடன் ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. 7வது அத்தியாயம் விஜயனின் முடிசூட்டு விழாவைப் [பட்டாபிஷேகம்] பற்றியது. விஜயன் இலங்கையைச் சேர்ந்த குவேணி [Kuveni / Kuvanna / குவண்ணா] என்ற இயக்கர் பெண்ணை [யட்சினி / Yakshini] சந்திக்க நேர்ந்தது. அவன் அவளை மணந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அவளின் உதவியுடன் இயக்கர்களை (Yaksha) கொன்றான். என்றாலும் விஜயனுக்கு இலங்கையின் அரசனாவதற்கு ஒரு உன்னதமான பெண் தேவைப்பட்டது. அப்போது மதுரை மன்னனின் மகளும், விஜயனின் 700 தோழருக்கான மதுரை தமிழ் பெண்களும், பணியாட்கள் மற்றும் வணிகர்களுடன், தமிழ்நாட்டின் பாண்டிய அரசின் ஒரு பகுதியான மதுரையில் இருந்து, வரவழைக்கப் படடனர். எனவே இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அந்த நேரத்தில் தமிழர்களாக இருக்க வேண்டும். முதல் மனைவி குவண்ணாவை விஜயன் விரட்டியடிக்கும் பொழுது, அவனது சொந்தக் குழந்தைகள் இருவரும் தாயுடன் சென்றனர். குவண்ணாவின் சொந்த மக்கள் உடனடியாக அவளைப் பழிவாங்கும் வகையில் கொன்றனர். எனினும் குழந்தைகள் சுமனகுட்டா [Sumanakutta] வழியாக மலைநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர். அதனால், அவர்களின் சந்ததியினர் மலைநாட்டில் குடியேறினர் பெருக்கினார். விஜயன், பாண்டிய மன்னனுக்கு ஆண்டுக்கு இருமுறை நூறாயிரம் (பணத்துண்டுகள்) மதிப்புள்ள சிப்பி முத்துக்களை [shell pearl ] அனுப்புவது வழக்கம் ஆகியது. 'சிப்பி முத்து' என்பது சிப்பி ஓடுகளின் உட்புறப் புறணியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, இது முத்தின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது. [Shell Pearls are made from the inner lining of oyster shells, also known as Mother of Pearl.] மேலும் விபரத்துக்கு 7 - 67 முதல் 74 வரை பார்க்கவும். மகாவம்சம், அத்தியாயம் 7, வசனங்கள் 67-74 / மலைகளுக்கு தப்பி ஓடுதல் மற்றும் முடிசூடல் [சுருக்கம்]: விஜயன் மற்றும் குவேனியின் இரு பிள்ளைகளான, சகோதரனும் சகோதரியும் பாதுகாப்புக்காக சுமனகூடத்திற்கு (ஆதாமின் சிகரம்) தப்பி ஓடினர். அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றனர். அவர்கள் அங்கு உள்ள மன்னரின் அனுமதியுடன் மலாயா பகுதியில் (இலங்கையின் மலைப்பகுதியான மத்திய பகுதியில்) வாழ்ந்தனர். அவர்களின் சந்ததியினர் தான் புலிந்தர்கள் என்றும், "புலிந்தர்கள்" என்பது காட்டுமிராண்டித்தனமான (நாகரிகமற்ற) பழங் குடியினருக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் என்றும் விவரிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த சூழலில், "புலிந்தர்கள்" என்பது இலங்கையின் பூர்வீக மக்களான வேடர்களைக் குறிக்கிறது. அத்துடன் இந்த பகுதி, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மலைப்பகுதிகளுக்கு இடையே உள்ள உள்நாட்டின் பகுதி, இப்போது சபரகமுவ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட, வேடர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் "புலிந்த" என்பது பண்டைய இந்திய மற்றும் இலங்கை வரலாற்றில் காட்டு அல்லது நாகரிகமற்ற மலைவாழ் பழங்குடியினருக்கான பொதுவான பெயராகும். விஜயனின் தூதுவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, பாண்டிய தமிழ் மன்னன், தன் மகளுக்கு [மதுரை இளவரிசிக்கு] ஏராளமான ஆடையணிகளுடனும் பிரயாணத்துக்குத் தேவையான எல்லா பொருள்களுடன் அனுப்பி வைத்தான். தேர்ந்தெடுத்த இதர [700] பெண்களுக்கும் ஆடை அணிகளை வழங்கினான். அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற வகையில் யானைகள், குதிரைகள், வாகனங்கள் அனுப்பவும் ஏற்பாடும் செய்தான். கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் அவர்களுடன் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. அவர்களிடம் வெற்றி வீரனான விஜயனுக்கு ஓர் செய்தியையும் அனுப்பினன். இந்தப் பெருவாரியான மக்கள் கப்பலில் புறப்பட்டு இலங்கைத்தீவில் மகாதிட்டு எனப்படும் இடத்தில் கரையேறினர். இந்தக் காரணத்ததாலேயே அவர்கள் இறங்கிய இடம் மகாதிட்டு [the ancient port of Mahatittha / now Mantota opposite the island Manaar.] எனப்படுகிறது. மாதோட்டம் என்பது, இலங்கைத் தீவில், மன்னார் பகுதியில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் பட்டினம் ஆகும். பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை மாதொட்ட அல்லது மகாதித்த என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் மாந்தை என்றும் மாதோட்டம் என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய துறைமுகமாக இது விளங்கியதுடன் உலகளாவிய வணிகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களும், போசலின் [Porcelain] பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் அகழ்வாய்வுகள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், இப்பகுதியில் பெருமளவில் மக்கள் வாழ்ந்து வந்ததையும், மாதோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் வேளாண்மை முயற்சிகள் இடம்பெற்றதையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதன் பின், விஜயன் தமிழ் பாண்டிய இளவரசியை மணந்து மன்னனாக முடிசூடினான். அதேபோல மற்ற 700 பேரும் மதுரை தமிழ் பெண்களை மணந்தனர். அத்துடன் விஜயன் தனது அமைச்சர்களுக்கு செல்வத்தை வழங்கினார். அது மட்டும் அல்ல, ஒவ்வொரு ஆண்டும், தனது மனைவியின் தந்தைக்கு மதிப்புமிக்க முத்துக்களை அனுப்பினார். தனது கெட்ட வழிகளை மாற்றிய பிறகு, இலங்கையை தம்பபன்னி நகரில் (இன்றைய வடமேற்கு இலங்கையில் இருப்பதாக நம்பப்படுகிறது?) 38 ஆண்டுகள் அமைதியாகவும் நியாயமாகவும் ஆட்சி செய்தார் என்று இந்த பகுதி கூறுகிறது. Part: 70 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 7: This is about consecrating of Vijaya. Vijaya happened to meet with Kuvanna, a Yakkhini, native of Lanka. He married her and she bore two kids to him. He slew the Yakkhas with her help. Vijaya needed a noble woman to marry to become the king of Lanka. Then the daughter of the king of Mathura, along with ladies for the 700 companions and with attendants and trades people came from Mathura, part of the Pandya Kingdom in Tamil Nadu. The majority of the people in Lanka, therefore, should be Tamils by that time. Vijaya chased away the first wife Kuvanna, and his own children went with her. Kuvanna’s own peopled promptly killed her in revenge, and the kids fled to the hill country through Sumanakutta. Their offspring populated the hill country, Malaya. Vijaya used to send a shell pearl worth twice a hundred thousand (pieces of money) to the Pandya king annually, 7 - 73. Vijaya ruled 38 years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 71 தொடரும் / Will follow துளி/DROP: 1950 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 70 https://www.facebook.com/groups/978753388866632/posts/32955016070813615/?
-
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question"
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 01 / In English & Tamil யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மதிய வேளைகளில் வழமைபோல் சுறுசுறுப்பாக இருந்தது. மருத்துவப் பீட மாணவர்கள், குறிப்பாக மூத்த இளங்கலை மாணவர்கள், உடற்கூறியல் குறிப்புகளாலும் தூக்கமில்லாத இரவுகளாலும் சூழப்பட்டு, அந்த சுமைகளுடன் வேகமாக நடந்துகொண்டு இருந்தார்கள். அதேவேளை, குறிப்பாக இளைய கலைப்பீட இளங்கலை மாணவர்கள் புத்தகங்களை கைகளில் ஏந்தி, இலக்கியம், அரசியல் மற்றும் வாழ்க்கைக்கு இடையே அலைந்து திரிந்த எண்ணங்களுடன் மெதுவாக நடந்துகொண்டு இருந்தார்கள். உயரமான, அமைதியான, எதையும் கேள்விகேட்டு அதன் உண்மைத் தன்மையை அறிவதில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டவனாக, ஆனால் அதே நேரத்தில் சராசரி மாணவனாக, இறுதியாண்டு மருத்துவ மாணவன், சாமுவேல் [Samuel] இருந்தான். அவன் ஒரு தீவீர கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் என்பதால், சிறுவயதில் ஒழுங்காக தன் பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்று, ஒவ்வொரு டிசம்பரிலும் கரோல்களையும் [carols] பாடியுள்ளான். ஆனாலும் - அவன் சாதாரண வகுப்பிற்குப் பிறகு, சமயம் மற்றும் புராண நம்பிக்கையை, அப்படியே நம்பாமல், எதையும் ஆராந்து, கேள்விகேட்டு அதில் இருந்து உண்மைகளை பிரித்து எடுக்கக் கற்றுக்கொண்டான். அவன் மனிதநேயம், நெறிமுறைகள் மற்றும் உண்மை ஆகியவற்றில் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தான், அதனால், தலைமுறைகளாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட, அல்லது புராணங்களாக எழுதப்பட்ட, அல்லது பழக்கங்களாக ஒட்டிக்கொண்ட அல்லது சமய நூல்களில் சொல்லப்பட்ட எதையும், அறிவுரீதியாக ஆராயாமல் ஏற்பதை தவிர்க்கத் தொடங்கினான். அதேவேளை, இரண்டாம் ஆண்டு கலை மாணவியான சாரா [Sarah] முற்றிலும் வித்தியாசமானவர். அவள், தனது நம்பிக்கைகளை ஒரு சால்வை போல சுமந்து சென்றாள் - மரபுரிமையாக தலைமுறையாக தொடர்வதால், எந்த கேள்வியும் கேட்காமல், ஒருவர் உயிர்வாழ சுவாசிப்பதைப் பின்பற்றுவது போல, இயற்கையாகவே, பகுப்பாய்வு இல்லாமல், அவள் மதத்தைப் பின்பற்றினாள். அவள் பெற்றோர் நம்பியதால் அவள் நம்பினாள். எல்லோரும் கொண்டாடியதால் அவள் கொண்டாடினாள். அவளுக்கு, நம்பிக்கை ஒரு விவாதம் அல்ல; அது சொந்தமானது. ரோமன், ஐரோப்பிய மற்றும் திருச்சபை பற்றிய ஒரு வரலாற்று மாணவியான சாரா, கலாச்சார ஆய்வுகள் பற்றிய புத்தகத்தைத், யாழ்ப்பாண பல்கலைக்கழக முதன்மை நூலகத்தில் அன்று தேடிக்கொண்டிருந்தாள். அந்தவேளை, சாமுவேல், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் பற்றிய உண்மைத் தன்மையை - தொல்பொருள் ஆய்வுகள், கல்வெட்டுகள், பண்டைய பயணிகளின் குறிப்புகள், பண்டைய இலக்கிய குறிப்புகள் மற்றும் விஞ்ஞான ரீதியான உண்மைகள் - மூலம், ஒரு பொழுதுபோக்காக அலச அங்கு வந்தான். அவன் கொஞ்சம் வேகமாக வந்ததாலும், அவன் உயரமாக, அகன்ற மார்பு, திடமான தோள்கள் (தடந்தோள்), நீண்ட கைகள் மற்றும் உறுதியான உடல் கொண்டவனாக கம்பீரமான நடையுடன் வந்ததால், சாராவை திரும்பி அவனைப் பார்க்க வைத்தது. சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை வீங்கு இறைப் பணைத்தோள் மடந்தை மான் பிணையன்ன மகிழ் மட நோக்கே? தேமல் படர்ந்த, அழகான, உயர்ந்த, நிமிர்ந்த இள முலைகளையும், பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலும் தோளையுடைய இளம் பெண்ணின் பெண் மானைப் போன்ற மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வையினால்? .... சாமுவேல் கொஞ்சம் தடுமாறினாலும், அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு, ஹாய், நான் சாமுவேல் இறுதியாண்டு மருத்துவபீட மாணவன் என்று, தன்னை அறிமுகப் படுத்தினான். அவளும் தான் இரண்டாம் ஆண்டு கலை மாணவி என்று, அவன் கண்ணை பார்த்தபடி கூறினாள். 'கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' அதனாலோ என்னவோ, கொஞ்ச நேரம் அவர்கள் பேசாமல், பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து இருந்தார்கள். என்றாலும் சில நிமிடங்களுக்கு பின், அவர்களின் உரையாடல்கள் பணிவுடன் தொடங்கி, பின்னர் மெதுவாக ஆழமடைந்தன. சாமுவேல் சாராவிடம் இதற்கு முன்பு அவள் அறியாத, அவளிடம் இதுவரை யாராலும் அல்லது அவளே தன்னிடம் கேட்கப்படாத கேள்விகளைக் கேட்டான். சாரா ஆதாரங்களுடன் அல்ல, ஆனால் உணர்ச்சியுடன் பதிலளித்தாள். ஆனாலும் இருவரும் அதை அச்சுறுத்தப்படுவதாக உணரவில்லை. அவர்களுக்கு இடையே மென்மையான எதோ ஒன்று வளர்ந்தது - வேறுபாட்டை மதிக்கும் ஒரு பாசம் - ஒரு அன்பு. என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காதல் அவர்களின் தயக்கத்தை வென்றது. அவர்கள் பெரிதாக, ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக, தங்கள் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, திருமணம் செய்து கொண்டனர். Brief of 'When the Candle Met the Question' / Part: 01 Jaffna University had its own rhythm in the late afternoons. The medical faculty students walked fast, burdened with anatomy notes and sleepless nights. Across the road, the arts faculty moved slower—books under arms, thoughts drifting between literature, politics, and life itself. Samuel belonged to the first group. A final-year medical student, tall, quiet, known among his batch not for loud brilliance but for relentless questioning. He was born into a Christian family, attended church from childhood, sang carols every December, and yet—somewhere along the way—he had learned to separate faith from habit. He believed deeply in humanity, ethics, and truth, but he no longer accepted anything simply because it had been repeated for generations. Sarah was different. A second-year arts student, she carried her beliefs like a shawl—warm, unquestioned, inherited. She followed religion the way one follows breathing: naturally, without analysis. She believed because her parents believed. She celebrated because everyone celebrated. To her, faith was not a debate; it was belonging. They met at the university library. She was searching for a book on cultural studies. He was reading history—Roman, European, ecclesiastical. Their conversations began politely, then slowly deepened. Samuel asked questions Sarah had never been asked before. Sarah answered with emotion, not evidence. Yet neither felt threatened. Something gentle grew between them—an affection that respected difference. Two years later, love overcame hesitation. They married quietly, without drama. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 02 தொடரும் / Will follow துளி/DROP: 1949 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 01] / In English & Tamil https://www.facebook.com/groups/978753388866632/posts/32947476411567581/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 69 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 69 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை 6வது அத்தியாயம் விஜயன் இலங்கைக்கு வருவதைப் பற்றியது. பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த நாடுகளில் ஒன்றான வங்க நாட்டு மன்னன் [Vanga king] கலிங்க மன்னனின் [Kalinga king] மகளை மணந்தான். அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவள் சிங்கத்துடன் இணைந்து வாழ்ந்து சீகபாகு / சிங்கபாகு [Sihabahu / Sinhabahu] என்ற ஆண் மகனையும், சீகவலி [Sinhasivali or Sihasivali] என்ற மகளையும் பெற்றெடுத்தாள். [மகனின் கை, கால்கள் சிங்கத்தைப் போல உருவானதால் அவனுக்கு சீகபாகு என்று பெயரிட்டாள். ஆனால் மகளுக்கு சீகவலி என்று பெயரிட்டாள்.] ஒரு மனிதப் பெண் மற்றும் மிருக சிங்கத்தின் இணைப்பிலிருந்து சந்ததிகளைப் பெறுவது உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது. இது ஏற்கனவே விரிவாக விவரிக்கப் பட்டுள்ளது. பின் சீகபாகு தனது சொந்த சகோதரியை திருமணம் செய்து, பதினாறு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தான். அதில், விஜயனும் சுமித்தாவும் [Vijaya and Sumitta] முதல் இரட்டையர் ஆகும். விஜயன் வன்முறையாளர், பொல்லாதவர் மற்றும் தீய நடத்தை உடையவர். அவருக்கு அதே குணாதிசயங்களைக் கொண்ட எழுநூறு நண்பர்களும் இருந்தனர். விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் கப்பலில் ஏற்றி, தங்கள் பூர்வீக நிலத்தில் அவர்கள் செய்த குற்றச் செயல்களின் காரணமாக, நாடு கடத்தப்பட்டனர். அவர்களது மனைவிகளும் மற்றும் குழந்தைகளும் வெவ்வேறு கப்பலில் ஏற்றி கடலில் நாடு கடத்தப்பட்டனர். குழந்தைகளையோ தாய்களையோ அவர்களின் தந்தை அல்லது கணவன் செய்த குற்றங்களுக்காக, அதுவும் குழந்தைகளையும் தாய்களையும் தனித்தனியாக வேறு வேறு கப்பலில் ஏற்றி நாடு கடத்துவார்களா? மேலும் குழந்தைகளின் வயது சுழியத்திலிருந்து [பூஜ்ஜியத்திலிருந்து] பத்து அல்லது பன்னிரெண்டு வரை வேறு படலாம் ? குறைந்த பட்சம் குழந்தைகளாவது தாயுடன் இருக்க வேண்டும் அல்லவா? இது ஒரு அதீத கற்பனை போல், நம்பும்படியாகவும் இல்லை. 700 + 01 பேரும் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாய்மரம் மற்றும் துடுப்புகளின் உதவியுடன் ஒரே கப்பலில் பயணம் செய்தனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது? இருப்பினும் கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஏறக்குறைய ஆயிரம் பேரை அல்லது குறைந்தது எழுநூறு பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு கப்பல் இந்தியப் பெருங்கடலில் எங்கும் இருந்ததாக ஒரு வரலாறும் இல்லை. நீண்ட காலமாக, இந்தியாவில், படகுகள் சிறியதாக இருந்தன, மேலும் பாய்மரக் கம்பம் மிக உயரமாக இருந்ததுடன் அரிதாகவே நிலத்தை விட்டு, வெகுதூரம் வெளியேறியது. இருப்பினும், கடலில் செல்லும் கப்பலுக்கு, துடுப்புகளும் இருந்தன. கடலில் காற்று குறையும் போது அது பயன்படுத்தப்பட்டன. மேலும் துடுப்புகள் துறைமுகங்களுக்குள் கப்பலை அங்கும் இங்கும் வசதியின் படி திருப்ப மற்றும் முன்னோக்கி, பின்னோக்கி செலுத்த பயன்படுத்தப்பட்டன. இல்லையெனில் கப்பல் காற்றின் உதவியுடன் மட்டுமே பொதுவாக பயணித்தது. பிந்தைய வேத காலத்தில் (கி.மு. 600 முதல் 200 வரை), கடல் பயணங்கள், படகுகள் மற்றும் பாதைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் கடல்சார் நடவடிக்கைகளின் ஆரம்ப குறிப்பு ரிக் வேதத்தில் உள்ளது; அக்கினியை வேண்டி, ரிக் வேதம் மண்டலம் ஒன்றில், சூக்தம் 97 இல் வசனம் 7 & 8 யிலும் கப்பலைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 7 - "எங்கும் முகமுள்ள நீ, எங்களுடைய பகைவர்களை - அக்கரைக்குச் செல்லும் கப்பல் போல் செலுத்தவும், அவனுடைய ஒளி எங்களுடைய பாபத்தை நீக்குக", 8 - நீ எங்களை, எங்களுடைய நலத்துக்காக [ஷேமத்துக்காக], கப்பலிலே கடலுக்கப்பால் செலுத்தவும். அவனுடைய ஒளி, எங்களுடைய பாபத்தை நீக்குக" என்கிறது. கிமு 200 வாக்கில், கப்பல்கள் பெரிய பெரிய அளவுகளில் கட்டப்பட்டன. ஒரு கப்பலை பெட்டிகளாகப் பிரிக்கும் ஒரு பகிர்வுகளின் [bulkhead] எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது; ஒரு கப்பலில் உள்ள ஒரு bulkhead [பல்க்ஹெட்] என்பது மேலோட்டத்திற்குள் [கப்பல் கூடுக்குள் / hull ] உள்ள ஒரு செங்குத்துச் சுவராகும், இது கப்பலை தனித்தனி பெட்டிகளாகப் பிரிக்கிறது, முதன்மையாக மேலோட்டத்தில் உடைப்பு ஏற்பட்டால் நீர் பரவுவதைத் தடுக்க உதவுகிறது, இதனால் நீர் புகாத பகுதிகளை உருவாக்குவதன் மூலமும் சேதம் ஏற்பட்டால் வெள்ளத்தைக் குறைப்பதன் மூலமும் கப்பலின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. இதனால், அந்தக்காலத்தில், கப்பல்களின் பக்கங்களில் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்த, சிலர் இவற்றில் [bulkheads] 13 வரை வைத்திருந்தனர். அத்துடன், அந்தக் காலத்தில் 100 பேரை ஏற்றிச் செல்லும் 200 டன் எடையுள்ள கப்பல்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட மரம் முக்கியமாக மலபார் தேக்கு [Malabar teak] ஆகும். இது வெளிநாட்டு கப்பல்களில் பயன்படுத்தப்படும் கருவேலமரத்தை [oak] விட நீடித்து நிலைத்ததாக இருந்தது. விஜயனும் அவரது தோழர்களும் முதலில் சுப்பரா [சுப்பராகா / Suppara / Supparakka] என்ற இடத்தில் இறங்கினர். அவர்கள் அங்கும் முன்போலவே தவறாக நடந்து கொண்டனர். இதனால், கப்பல் மூலம் தப்பி ஓட வேண்டியிருந்தது. பின்னர் அவர்கள் புத்தர் பரிநிர்வாணத்தை அடைந்த நாளில் இலங்கையில் தரையிறங்கினார்கள். இது வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு என்பது வெள்ளிடைமலை. விரிவான விபரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மனைவிகள் மகிழடிபாகத்திலும் [Mahiladipaka], குழந்தைகள் நாகதீபத்திலும் [ Naggadipa] இறங்கினர். மனைவிகள் மற்றும் குழந்தைகளின் தலைவிதியைப், அதாவது, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் புறக்கணித்து வரலாற்றை [கதையை] மகாவம்சத்தில், மகாநாம தேரர் எழுதியுள்ளார். விஜயன் தனது சொந்த நாட்டில், தனது நடத்தையில் ஒரு குற்றவாளியாக இருந்தார். தங்கள் தங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்பதை அறிய விஜயன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அவர் முதலில் தரையிறங்கிய சுப்பராவிலும், அப்படியே குற்றமாக நடந்து கொண்டார். எனினும், இப்படியான மற்றும் சிங்கத்தின் வாரிசான, 'விஜயன் வருகை' யைத்தான் இலங்கை தங்களுடையது என்ற சிங்கள பௌத்தர்களின் கூற்றுக்கு அடிப்படையாக்குகிறார்கள். இருப்பினும், வில்ஹெல்ம் கெய்கர் தனது தீபவம்சம் மற்றும் மகாவம்சம் பற்றிய தனது ஒப்பீட்டு ஆய்வில் விஜயனின் வருகை ஒரு கட்டுக்கதை என்று கூறியுள்ளார், குறிப்பு "The Dipavamsa And Mahavamsa And Their Historical Development In Ceylon, In German by Wilhelm Geiger in 1905, and the English translation by Ethel M Kumaraswamy, ஆனால் அந்த அறிக்கை மரபியல் அல்லது உயிரியல் அடிப்படையை தவிர்த்து, வேறு காரணங்களைக் கூறுகிறது. எனினும் மரபியல் அல்லது உயிரியல் அடிப்படை ஒரு வெள்ளிடை மலையாகும். எது எப்படியாகினும், இந்த அத்தியாயம் இலங்கையின் கடற்கரையில் தரையிறங்கியதாகக் கூறப்படுவதைத் தவிர, இலங்கையில் நடந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. Part: 69 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 6 is about coming of Vijaya: A Vanga king married the daughter of a Kalinga king. She gave birth to a beautiful daughter. She cohabited with a lion and gave birth to one boy, Sihabahu, and a daughter, Sihasivali. Sihabahu killed the father lion when he was about sixteen years of age, and created a new kingdom, Sihapura. It is biologically impossibile to have offspring out of the union of a human lady and a lion. Sihabahu incestuously married his own sister, and gave birth to sixteen twins. Vijaya and Sumitta is the first twin. Vijaya was violent, wicked and of evil conduct and he had seven hundred friends of same characters. Vijaya and his seven hundred companions were put on a ship and exiled because of their criminal conducts in their native land. Their wives were also put on another ship and allowed to drift in sea. Their children were also put in yet another ship and allowed to drift in sea. Would any sensible person or king punish kids for the crimes committed by their fathers? Anything is fine when it helps Buddhism! Vijaya and his companions first landed at a place called Supparakka. They misbehaved there, and had to flee by ship. Then they landed in Lanka on the day Buddha attained Parinirvana, a deliberate concocted happy coincidence. Wives landed in Mahiladipaka and the children landed in Naggadipa. The Mahavamsa, rather Mahanama, just ignored the fates of the wives and the children. Vijaya was a criminal in his behaviour in his native country and also criminally behaved where he landed first, Supparaka. This is the basis of the claim of the Singhalese Buddhists that Lanka is theirs. It is a criminal concept and a frivolous claim. Even Wilhelm Geiger has stated that Vijaya’s arrival is a myth in his comparative study of Dipavamsa and Mahavamsa, Reference 11, but that statement was not based on genetics or biology. This Chapter is also not about historical events which happened in Lanka, except the alleged landing on the shores of Lanka.. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 70 தொடரும் / Will follow துளி/DROP: 1948 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 69 https://www.facebook.com/groups/978753388866632/posts/32947323861582836/?