Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 28 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 28 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'மன்னன் மகல்லக்க நாகனில் இருந்து மன்னன் விசயகுமாரன் வரை' மகல்லக்க நாகன் [Mahallaka Naga] கஜபாகுகாமனிக்குக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் இராசவலியிலுள்ள மஹாலு மனா [Mahalu Mana] ஆகும். தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தின்படி கஜபாகு காமினியின் மாமனார், மகல்லக்க நாகன் ஆகும். இருப்பினும், இராசவலிய, கஜபாகு மன்னரின் மைத்துனர் என்றும் கூறுகிறது. மகல்லக்க நாகனின் மகன் பதுதிஸ்ஸ (Bhatutissa / மகாவம்சத்தின் படி பதிகதிஸ்ஸ [Bhatikatiss] மற்றும் ராஜாவலியின் படி பதியதிஸ்ஸ [Bhatiyatissa] ) இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவருடைய மகன் கனித்ததிஸ்ஸ அல்லது கனிட்ட தீசன் [Kannitthatissa] பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால், இராசவலியத்தில் அதற்கேற்ற அரசன் இல்லை. கனித்ததிஸ்ஸவின் மகன் குச்சநாகன் அல்லது சூளநாகன் [Khujjanaga] தீபவம்சத்தின்படி இரண்டு வருடங்களும், மகாவம்சம் 36-18ன்படி ஒரு வருடமும் ஆட்சி செய்தார். இராசவலியில் அதற்குரிய அரசன் இல்லை. குச்சநாகனின் இளைய சகோதரர் குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் (Kunjanaga / Kuncanaga / மகாவம்சத்தில் குஞ்சநாகன்) தனது சகோதரனைக் கொன்று ஒரு வருடம் ஆட்சி செய்தார் (மகாவம்சம் 36-19 இல் இரண்டு ஆண்டுகள்). இராசவலியத்தில் அதற்கேற்ற அரசன் இல்லை. சிறிநாகன் [Sirinaga] அரசனை வென்று பத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். தீபவம்சத்தில் கூறப்படாத சிறிநாகனைப் பற்றிய ஒரு கதை மகாவம்சத்தில் உள்ளது. இக்காலக்கட்டத்தில், இராசவலிய மற்ற இரண்டு வரலாற்று நூல்களிலும் இருந்து மிகவும் வேறுபட்டடு காணப்படுகிறது. இராசவலியிலுள்ள குடானா [Kudana] என்பது மற்ற இரண்டிலும் உள்ள சிறிநாகனுக்கு (சிறிநாகன் 1) சமமானதாக இருக்கலாம்? குடானா இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சத்தின்படி சிறிநாகனின் மகன் அபய [Abhaya] இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். இருப்பினும், அவர் மகாவம்சத்தில் ஒகாரிக திஸ்ஸ [Voharikatissa] ஆகும். மற்றும் இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இராசவலியத்தில் இவன் அரசன் வெரிதிஸ்ஸ [Veritissa] ஆகும். அங்கும் அவன் இருபத்தி இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சி செய்ததாக கூறுகிறது. அபயவின் [Abhaya] இளைய சகோதரன் திஸ்ஸக [Tissaka], மன்னனுக்குப் பிறகு இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் இவன் அரசன் அபயநாகன் [Abhayanaga] ஆக மாறியதுடன், ஆக எட்டு ஆண்டுகள் தான் ஆட்சி செய்கிறான்; ஆட்சி காலம் முற்றிலும் இங்கு பெரிதாக வேறுபடுகிறது. தீபவம்சத்தில் கூறப்படாத ஒரு கதையை , மகாவம்சம் கூறுகிறது. அதாவது, அபயநாகன், தன் மூத்த சகோதரனின் மனைவியுடன் [ராணியுடன்] பாலியல் உறவு அல்லது காதல் விருப்பம் கொண்டிருந்தான் என்று கூறுகிறது. தீபவம்சத்தின்படி திஸ்ஸகவின் ஆட்சியின் போது உண்மையான [புத்த] மதத்தை சிதைக்க மதவெறி முயற்சிகள் இருந்தனவென்று கூறுகிறது. ஆனால் மகாவம்சத்தில் அத்தகைய முயற்சி ஒன்றும் கூறப்படவில்லை. இராசவலியவில் இவனுக்கு ஒத்த அரசன் அபா சென் [Aba Sen] ஆகும். திஸ்ஸகவின் மகன் சிறிநாக (இரண்டாம் சிறிநாகன்) இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இராசவலியவின்படி இவனுக்கு ஒத்த அரசன் சிறி நா [Siri Na] ஆகும். அங்கும் அவன் இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சி செய்தான். அடுத்து வந்த மன்னன் விஜய (Vijaya மகாவம்சத்தில் விசயகுமாரன் / Vijayakumara) ஒரு வருடம் ஆட்சி செய்தான். இராசவலியவின்படி இவனுக்கு ஒத்த மன்னன் விஜயிந்து [Vijayindu], ஆனால் அங்கு அவன் ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான் எனக் குறிக்கப்பட்டுள்ளது?. Part: 28 / The Kings who ruled after Vijaya and the related affairs / King Mahallanaga to king Vijayakumara Mahallanaga ruled after Gajabahukagamani for six years. He is the Mahalu Mana in the Rajavaliya. Mahallanaga is the father in law of Gajabahukagamani as per the Dipavamsa and the Mahavamsa. The Rajavaliya, however, says Mahalu Mana is the brother in law of the King Gajaba. Mahallanaga’s son Bhatutissa (Bhatikatissa as per the Mahavamsa and Bhatiyatissa as per the Rajavaliya) ruled for twenty-four years. His son Kannitthatissa ruled for eighteen years. There is no corresponding king in the Rajavaliya. Kannitthatissa’s son Khujjanaga ruled for two years as per the Dipavamsa and one year as per the Mahavamsa 36-18.There is no corresponding king in the Rajavaliya. Khujjanaga’s younger brother Kunjanaga (Kuncanaga in the Mahavamsa) killed his brother and ruled for one year (two years in the Mahavamsa 36-19). There is no corresponding king in the Rajavaliya. Sirinaga defeated the king and reigned for nineteen years. There is a tale about Sirinaga in the Mahavamsa, which is not in the Dipavamsa. The Rajavaliya differs much from the other two chronicles in this period. Kudana in the Rajavaliya could be the equivalent of Sirinaga (say Sirinaga 1) in the other two chronicles. Kudana reigned for twenty years. Sirinaga’s son Abhaya reigned for twenty-two years as per the Dipavamsa. However, he is the Voharikatissa in the Mahavamsa and ruled for twenty-two years. The corresponding king in the Rajavaliya is Veritissa, and he reigned for twenty-two years. Abhaya’s younger brother Tissaka succeeded the king and reigned for twenty-two years. The corresponding king in the Mahavamsa is Abhayanaga and he ruled for eight years; lengths of reign are radically different. There is a tale about Abhayanaga’s affair with the queen, his elder brother’s wife, in the Mahavamsa, which is not in the Dipavamsa. There were sectarian attempts to corrupt the true religion during the reign of Tissaka as per the Dipavamsa but there is no such attempt in the Mahavamsa. The corresponding king in the Rajavaliya is Aba Sen. Tissaka’s son, Sirinaga (Sirinaga2), ruled for two years. The corresponding king as per the Rajavaliya is Siri Na and he too ruled for two years. The succeeding king is Vijaya (Vijayakumara in the Mahavamsa) ruled for one year, and the corresponding king in the Rajavaliya is Vijayindu and he ruled for six years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 29 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 28 https://www.facebook.com/groups/978753388866632/posts/31505070985808138/?
  2. "மூன்று கவிதைகள் / 11" தீரா அலைகளின் ஓயா ஓசையினால் தீண்டித் தீண்டிச் செல்லும் அலைகளால் குளிர்ந்து நடுங்கி சிலிர்த்து நடக்கிறான் வெள்ளை மணலில் கோட்டை கட்டுகிறான்! நிமிர்ந்து எழும் கடலலை அருகே பிரிய மனமின்றி கடலில் நீந்துகிறாள் சிப்பிகள் சோகிகள் தேடி எடுத்து மாலை ஒன்று செய்து மகிழ்கிறாள்! ........................................... அலை சறுக்கு ஆனந்தம் ஆனந்தமே கடலில் பறக்கும் பறவை அதுவோ மேகத்தின் மேல் மிதப்பது போல பூரிப்பு ஒன்று ஆட்கொள்கிறது தாயே! இன்ப ஊற்று உள்ளத்தில் பாய சக்தி பாய்ந்து ஆன்மாவை நனைக்க உப்புச் சுவை நாவில் கரைய ஆழி சொர்க்கம் இன்பம் இன்பமே! ......................................................... மரக் கம்பம் விடிவெள்ளி நமக்கு விரி கடலே பள்ளிக்கூடம் - ஐலசா குட்டி மீன்கள் நம்தோழன் - ஐலசா கொக்காய் நாம் ஒற்றைக்காலில் - ஐலசா அருமை மேகம் நமதுகுடை - ஐலசா பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசா பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா பிடிக்கும் மீன்கள் நம்உணவு - ஐலசா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "மூன்று கவிதைகள் / 11" https://www.facebook.com/groups/978753388866632/posts/31488051377510099/?
  3. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 C பகுதி: 27 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'அசோக மன்னன் திஸ்ஸனுடனான நட்பைப் பற்றிய எந்தப் பதிவையும் தனது கல்வெட்டுக்கள் எதிலும் ஏன் பதியவில்லை' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] வரலாற்று அறிஞர்களின் கூற்றின் படி, சேர [கேரள] மற்றும் பாண்டிய [மதுரை] மன்னர்களின் சத்திவாய்ந்த செல்வாக்கு இலங்கை மேல், கிருஸ்துக்கு முன்பே இருந்து கி பி 300 ஆண்டு வரை இருந்துள்ளது. அந்த கால பகுதியில் கேரள மக்கள் பேசிய மொழி தமிழாகும். பின்பு காலப்போக்கில் சேர நாட்டுத் தமிழ் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாகி, தமிழுடன் சமஸ்கிருதத்தைக் கலந்து, மலையாளம் என்ற தனி மொழி பிறந்தது. இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் உள்ள தூரம் ஆக 30 கிலோமீட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கலாநிதி ஒபேயசேகர [Dr Obeysekere ] இலங்கைக்கும் கேரளத்திற்கும் உள்ள தொடர்பை பத்தினி தெய்வ வழிபாடு [ கண்ணகி வழிபாடு] மற்றும் தாய் வழி அமைப்பு [matrilineal system] மூலம் அலசுகிறார். மேலும் அவர் தாய் வழி அமைப்பு தெற்கு சிங்களவர்களிடமும் முன்பு இருந்து, ஆனால் பின்பு தந்தை வழி அமைப்பால் மாற்றம் செய்யப் பட்டது என்கிறார். [According to Dr Obeysekere, the matrilineal system existed in the Sinhala-speaking South also, but was supplanted by the patrilineal system]. மேலும் அவர், பத்தினி தெய்வ வழிபாட்டை கேரளத்து தமிழ் மொழி பேசும் புத்த சமய வர்த்தகர்களாலும் மற்றும் மற்றவர்களாலும், குறிப்பாக வஞ்சி [Tamil-speaking Kerala Buddhist traders and other immigrants from the Vanchi area] பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார். குறிப்பாக இரண்டு கேரளா வர்த்தக குடும்பம், மெஹனாவரா மற்றும் அழகக்கோனார் அல்லது அழகக்கோன் குடும்பங்கள் இதில் ஈடுபட்டதாக கூறுகிறார். இதில் இன்று சிங்களவர்களில் காணப்படும் அழகக்கோன் குடும்பங்கள் இவர்களின் வாரிசு என்கிறார் [two trader families of Kerala origin, namely, the Mehenavara and the Alagakonara (the Alagakones of today are probably their descendents)], மேலும் பத்தினி தெய்வம் பற்றிய சிங்கள பாடலின் மூலம் தமிழ் என்கிறார் [Dr Obeysekere says that the Sinhala songs related to the Pattini cult were originally in Tamil]. சுருக்கமாக, விஜயன் முதல் துட்டகைமுனு வரை, எல்லாளன் உட்பட, மொத்தம் 396 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் கற்பனையான மன்னர்கள் போலவே தோன்றுகிறது. இக்காலத்தில் அரசர்கள் இல்லை என்பதல்ல. அரசர்கள் அல்லது தலைவர்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவர்களின் பெயர்கள், இலங்கை ஆட்சிக்கு ஒரு பௌத்த சாயலைக் கொடுப்பதற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளன என்று நம்புகிறேன். தேவநம்பிய திஸ்ஸா என்பது இந்தியப் பேரரசர் அசோகரின் பிரதி அல்லது நகல். அசோகனும் தேவநம்பிய திஸ்ஸ என்ற இரண்டாவது மகன். தேவநம்பிய திஸ்ஸ 40 வருடங்கள் ஆட்சி செய்ததாக இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது. அசோகர் இந்திய மரபுப்படி 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அசோகன் மாதிரி, ‘தேவானம்பிய’ என்ற அடைமொழியுடன், இலங்கையில் திஸ்ஸ மட்டுமே இடுந்தாரென இலங்கை நூல் கூறுகிறது. அசோகனுக்கும் திசாவுக்கும் இருந்ததாகக் கூறப்படும் நட்பு தமிழ்நாட்டில் இருந்த நட்பின் நகல் என்று இலகுவாகக் கூறலாம். அந்த நட்பு தமிழ்ப் புலவர் பிசிராந்தியாருக்கும், கிள்ளி என்ற பெயரால் அழைக்கப்பட்ட, தமிழ் மன்னன் கோப்பெருஞ்சோழனுக்கும் இடையே இருந்தது போல, நேரில் காணாமலேயே நட்பு கொண்டனர். என்றாலும் அசோக மன்னன் திஸ்ஸனுடனான நட்பைப் பற்றிய எந்தப் பதிவையும் தனது கல்வெட்டுக்கள் எதிலும் பதியவில்லை என்பதும், மற்றும் எந்த அசோகன் வாழ்ந்த மண்ணின் வரலாற்றில் அல்லது புராணத்திலோ குறிப்பிடவில்லை என்பது முக்கியமாகும். மாறாக சங்ககால நண்பர்களின் குறிப்பு சங்கப்பாடலில் உள்ளத்தையும் கவனிக்க. முதுமையினால் ஏற்படும் துன்பம், வேதனை, அவமானம் இவைகளை மக்கள் விரும்பாமல் ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அன்று இருந்தது; அதன்படி, இறக்கும் வரை உணவைத் தவிர்த்து, சோழ மன்னன் இறக்க முடிவு செய்து மேலும் சிலருடன் வடக்கு நோக்கி அமர்ந்தான். மன்னர், தான் இறப்பதற்கு முன், தனது கவிஞர் நண்பர் தன்னைப் பார்க்க வருவார் என்று நம்பினார். கவிஞர் இதை உணர்ந்து அந்த இடத்திற்கு விரைந்தார், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மன்னர் தனது கவிஞர் நண்பரைக் காணாமல் இறந்துவிட்டார். பிசிராந்தையார் தனது உணர்ச்சிவசப்பட்ட அரச நண்பரின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுக் கல்லைக் கண்டு, அங்கேயே வடக்கு நோக்கி அவரும் அமர்ந்து இறந்தார். நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 28 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 C https://www.facebook.com/groups/978753388866632/posts/31473570135624890/?
  4. கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 05 ஆலயத்தில் 'கள்வர்கள் கவனம் உங்கள் நகைகளையும், பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்' என்ற எச்சரிக்கும் பலகை கண்ணில் தெரிந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அலங்கார கந்தனை பார்த்தான். நீ இந்த அலங்கார கோலம் எனறால், பெண்களை எப்படி குறை சொல்லுவேன்? அவர்களுக்கும் ஆசை அடிமனதில் இருக்கும் தானே?? கள்ளனையும், ஏமாற்றி பறிப்பவளையும் ... ' ... அவன் அதற்கு மேல் சிந்திக்கவில்லை. சனநெருக்கம் அவனை வெளியே தள்ளிவிட்டது. என்றாலும் அவன் வாய், தன் வேதனையை முணுமுணுத்துக்கொண்டு இருந்தது ஐயோ ஸ்வாமினி [Swamini] நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும் மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசியா ? உனைப்போன்ற பெண்ணை நான் நம்பி வந்தேன் உயிர்கொன்று நீ ஓடினாயே எனைப்போன்ற ஆணை ஏமாற்றிவிட்டு தினம் நூறு பொய்கூறுறாயேன்? தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய் அதை யாருக்கும் நீ செய்யாதே நான் போன பின்னர் எனைப்பற்றி இழிவாய் யாரோடும் பேசிக் கொல்லாதே! ஐயோ ஸ்வாமினி [Swamini] நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்! ஆகஸ்ட் 21, தேர்த்திருவிழா இன்று. நல்லூர் திருவிழாவின் கடைசி பெரிய நாள் இது - தெருக்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர். அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர். அருண், காலையில் வெக்கை என்பதால், வேட்டி சால்வையுடன் மட்டுமே வந்தான். ஆனால் இன்று தேவையான பணம் கொண்டு வந்தான். அவன் கண்களுக்கு இன்னும் வெட்கம் இல்லை. ஆரணி அங்கு நிற்கிறாளா எனத் தேடிக் கொண்டு இருந்தது. ஆசை யாரைத்தான் விடுகுது? இன்று அவனிடம் தாராளமாக பணம் இருப்பினும், ஒரு எளிய சாலையோர விற்பனையாளரிடமிருந்து வாங்கிய ஒற்றை சிவப்பு ரோஜாவை ஏந்தி, அங்கு காத்து நின்றான். அவன் கண்கள் அன்பால் நிறைந்திருந்தன. ஆரணி தூர வருவது அவனுக்கு தெரிந்தது, ஆனால் அவள் தனியவரவில்லை. ஒரு இளம் தம்பதியாக, அவன் வாங்கிக் கொடுத்த சேலையுடனும் அலங்காரத்துடனும் வந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு தோழியையும் காணவில்லை. அவனுக்கு அவன் கண்ணையே நம்ப முடியவில்லை. அவன் நெஞ்சம் நடுங்கியது, அவன் இதயம் வெறுமையாகியது. அவள், அவனை கண்டும் காணாமலும், ஒரு கேலியான புன்னகையுடன் கூட்டத்திற்குள் நழுவினாள். அருணின் கையிலிருந்து ரோஜா தூசி நிறைந்த தெருவில் விழுந்தது. அவன் மனம் வாழ்வதா சாவதா என்று காதல் மேல் கோபம் கொண்டு ஏதேதோ புலம்பத் தொடங்கியது. அவன் இப்ப தத்துவவாதி (Philosopher) ஆகிவிட்டான் தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள் அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை உண்டாக்குவது எப்படி என்று? என் கல்லறைக்கு வரும் போதாவது அவளை பார்த்து யாராவது கேளுங்கள் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று? அருண் உயர்ந்த கோபுரத்தின் கீழ் தனியாக நின்றான். தேர் மணிகள் முழங்கின, சங்குகள் ஊதப்பட்டன, தெய்வம் தனது முழு மகிமையிலும் பிரகாசித்தது - ஆனால் அருணின் கண்கள் ஏமாற்றத்தால் நனைந்தன. அவன் திரும்பி பார்த்தான் ஆரணி ஒரு மூலையில், வெள்ளை மணலில் அந்த நபருடன் அருகில் இருந்து கடலை கொரித்துக் கொண்டு இருந்தாள். இடைக் கிடை அவர்கள் இருவரும் உரையாடுவது தெரிந்தது. என்றாலும் அவனுடன் அவள் முன்பு எப்படி அன்னியோன்னியமாக, நெருக்கமாக கொஞ்சி பேசினாலோ, அப்படி அது இருக்கவில்லை. அந்த நேரத்தில், அந்த வழியாகச் சென்ற ஒரு வயதான ஒருவர், சற்று நின்று, அவனது நெற்றியில் மெதுவாக புனித திருநீறு பூசினார். "மகனே," மெதுவாகச் சொன்னார், "உண்மையான கடவுள் ஒரு பூவைக் கூட அன்புடன் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் ஆபரணங்களையும் தங்கத்தையும் கேட்பவர்களுக்கு அன்பு தெரியாது - அவர்களுக்கு ஆசை மட்டுமே தெரியும்." அருண், அவரின் வார்த்தைக்கு முன் தலை குனிந்தான். அந்த வார்த்தைகள் ஆழமாகத் தாக்கின. பளபளப்பை தங்கம் என்றும், கவனத்தை பாசம் என்றும், பக்திக்கான ஆசை என்றும் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்தான். வாங்கி பெறப்படும் அன்பு நிலையானதல்ல. அது ஒரு நாள் விற்கப்படும். பரிசுகள், பொருட்கள், ஆடம்பரங்கள் மூலம் கட்டப்பட்ட அன்பு, அந்தப் பரிசுகள் இல்லாமல் போனவுடன் மங்கிவிடும். ஆனால் உண்மையான அன்பு வேறுபட்டது. அது ஆபரணங்களையும் செல்வங்களையும் எண்ணாது. பொருள்களை அளவிடாது. அது உள்ளம் உள்ளத்தோடு பிணையும் உணர்வு. கைகள் காலியாக இருந்தாலும், அன்பின் தூய்மை என்றும் அழியாது நிலைத்து நிற்கும். அருண், அன்று இரவு யாழை விட்டு புறப்பட்டான். ஆனால் அந்தப் பிரிவிலும் கூட, அவன் இதயம் மேலும் ஞானம் பெற்றது. ஏனெனில் அவன் உணர்ந்தான்—பொய்யான அன்பு, அழகு மலர்கள் போலவே விரைவில் வாடிவிடும். அது இறுதியில் பணப்பையையும் இதயத்தையும் காலி செய்து விடும். ஆனால் உண்மையான காதல், சாம்பலுக்குள் மறைந்திருந்தாலும், ஒருநாள் மறுபடியும் முளைத்து மலரக் கூடிய சக்தி கொண்டது. அது அழியாதது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/31456074064041164/?
  5. "மூன்று கவிதைகள் / 10" பண்பாடு வரலாறு காட்டும் உடை பலராலும் உடுத்த வெள்ளை வேட்டி! காலம் மாற கோலம் மாறினாலும் திருவிழாக் காலத்தில் தோன்றும் வேட்டி! படித்தவரும் கட்டினர் பாமரரும் கட்டினர் உடுத்த வேட்டியில் மகிழ்ச்சி கொண்டனர்! மடித்தகரை சால்வையை தோளில் போட்டு எழுந்து நடந்தனர் மனதில் கம்பீரம்பொங்க! ........................................... நீல வானத்தில் நிலவு ஒளிர நீண்ட கடலில் அலைகள் தோன்ற வெள்ளை மணலில் நண்டு ஓட துள்ளிக் குதிக்குது டால்பின் கூட்டம்! காற்று வெளியில் பட்டம் பறக்க காந்த மொழியில் மங்கை பாட சலங்கை ஒலிக்க பெதும்பை ஆட சங்கு பொருக்கி பேதை மகிழ்ந்தாள்! ......................................................... யாழ் நூலகத்தின் படிகளின் இடையில் புத்தரின் சடலம் குருதியில் கிடந்தது அரச காவல் காடையர் கும்பல் நூல்கள் ஏடுகளுடன் தர்மமும் எரித்தனர்! இரவு இருளில் அதிகாரிகள் வந்தனர். எங்கள் பட்டியலில் இவரில்லையே என்றனர் இவரைச் சுடாமல் எரிக்க முடியாதே சத்தியம் மறந்தே மனிதம் எரித்தோம் என்றனர்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "மூன்று கவிதைகள் / 10" https://www.facebook.com/groups/978753388866632/posts/31440053538976550/?
  6. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 B பகுதி: 27 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'மூன்று கேள்விகள்?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] சமஸ்கிருத பெயர்ச் சொல் " सैंहल " [saiMhala] என்பதன் அர்த்தம் கறுவா அல்லது இலங்கைக்கு உரியது அல்லது அங்கு உற்பத்தி செய்யப் படுவது அல்லது சிங்களவர் [cinnamon / Laurus Cassia - Bot or belonging to or produced in Ceylon or Sinhalese ] ஆகும். இதன் உச்சரிப்பு "சின்ஹல" ஆகும். இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின் சமஸ்கிருதப் பெயரான "சின்ஹல" என்பதே சிங்களமாக மருவியிருக்கலாம் எனவும் வாதாடலாம் என நம்புகிறேன். ஏனென்றால் சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் என்பது நம்பமுடியாத இயற்கைக்கு மாறான தகவலாக இருப்பதால்? பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராணக் கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"]. டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மஹிந்தரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist]. அசோகனின் உற்ற நண்பனான தேவநம்பிய தீசன் அல்லது தீசன் இலங்கையை ஆளும் காலத்தில், புத்த சமயப்பரப்பாளர் குழுவொன்றை [Buddhist monk missionary] தன் மகனின் தலைமையில் அங்கு அனுப்பினான் என்கிறது மகாவம்சம். இந்த தீசன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்றும், இவையனைத்தும் தீசனின் பெருமையால் நிகழ்ந்தவை என்றும், இவ்வற்றை கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து. ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ் விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. எனவே இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்றான் என்றும் பதினோராம் அத்தியாயம், 'தேவநம்பிய தீசன் பட்டாபிஷேகம்' [ Chapter XI / The Consecrating Of Devanampiyatissa] கூறுகிறது. மேலும் பதின்மூன்றாவது அத்தியாயம் 'மஹிந்தர் வருகையில்' [Chapter XIII / The Coming Of Mahinda], இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அதைத் தொடர்ந்து, பதிநான்காவது அத்தியாயம் 'தலைநகர் புகுதலில்' [Chapter XIV / The Entry Into The Capital], அரசனை [தீசனை] சோதிப்பதற்காக மஹிந்த தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக் கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தான் என்கிறது. இப்ப நான் உங்களைக் கேட்க விரும்புவது, புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட, விஜயன் வரும் பொழுது, அங்கு ஒரு அதிசயமும் நடைபெறவில்லை, மாறாக உயர்குலம் அற்ற இயக்கர் பெண்ணை மணக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறான். பின் அவன் தன் மனைவியையும் பிள்ளைகளையும், துரத்திவிட்டு, உயர் குல பாண்டிய தமிழ் இளவரசியை இரண்டாம் தாரமாக மணக்கிறான், என்றாலும் பிள்ளைகள் இல்லாமல் அவன் சந்ததி இலங்கையை ஆளாமல், முற்றுப் பெறுகிறது. அப்படி என்றால் ஏன் அவனை புத்தர் தேர்ந்தெடுத்தார் ? இரண்டாவதாக, இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அப்படி என்றால் புத்தர் தன் முதல் தெரிவான விஜயனில் தடுமாறி, இரண்டாவது தெரிவை இருநூறுக்கு சற்று மேற்பட்ட ஆண்டுகளின் பின் காலம் தாழ்த்தி செய்தாரா ? மூன்றாவதாக, அசோகன் தீசனின் நட்ப்பிலும், அவன் ஆளும் இலங்கையிலும் மிகவும் அக்கறை கொண்டு மஹிந்த தேரரை அனுப்பினார் என்கிறது, அப்படி என்றால், எதற்காக, மஹிந்தர் வந்து இலங்கையில் இறங்கும் பொழுது, தீசன் சோதிக்கப் பட்டான்? எவராவது இதை வாசிக்கும் பொழுது, அவர்களின் மனதில் கட்டாயம் அசோகன், தீசனின் நட்பிலும், மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்து வைத்து இருந்தார்கள் என்பதிலும் ஒரு ஐயப்பாடு ஏற்படும் என்றும் தோன்றுகிறது? [When one reads this portion of the Mahavamsa, the question arises how far Asoka and Tissa could be friends and how much Asoka knew of Tissa] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 27 C தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 B https://www.facebook.com/groups/978753388866632/posts/31425152117133359/?
  7. கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 04 ஆகஸ்ட் 18 தங்க ரத்தத்தில் வேல்விமானம் திருவிழா. அவன் அவளுக்காக பின் வீதியில் காத்து நின்றான். இதைக் கவனித்த ஆரணியின் தோழி ஒருவள், "அருண், நீங்க கோவிலுக்குள் செல்வதை நிறுத்தி விட்டீர்கள்" என்று கிண்டல் செய்தாள். அருண் சிரித்தபடி தோள்களைக் குலுக்கினான். "இப்போது எனக்கு என் சொந்த இறைவி இருக்கிறாள்." என்றான். உண்மையிலேயே, அவளை ஒரு தெய்வீகப் பெண் போல அவன் வணங்கினான். ஒவ்வொரு மாலையும், அவள் கை அவன் கையைத் தொட்டபோது, அவளுடைய சிரிப்பு அவனுக்காக ஒலித்தபோது, அவன் ஒரு வெற்றியாளரைப் போல உணர்ந்தான். ஆனாலும் ஒவ்வொரு பரிசும் அவனுடைய பணப்பையை வடிகட்டியது, ஒவ்வொரு புன்னகையும் அவன் கொடுத்தவற்றுடன் பிணைந்ததாகத் தோன்றியது. ஆனால் அவள் கச்சிதமாக நடந்து கொண்டதால், அவன் அதை உணரவில்லை. ஆனாலும், அவனை பொறுத்தவரையில், அன்பு மதிப்புக்குரியது. பரிசுகள் சிறிய தியாகங்கள் மட்டுமே. அன்று ஆரணி எனோ இன்னும் வரவில்லை. அவளின் இன்னும் ஒரு தோழி, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, " அருண் நீங்க கொஞ்சம் கவனமாக ஆரணியுடன் பழகுங்கள், இதைவிட நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை" என்ற சொல்லவும் ஆரணி வரவும் சரியாக இருந்தது. அவன் முதல் முதலாக கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான். அவன் அன்று ஒன்றும் வாங்கவும் இல்லை, சாப்பிட போகவும் இல்லை. ஆரணி சிணுங்கினாள். அவள் கண்கள் அருகிலுள்ள நகைக் கடையை நோக்கிச் சென்றன. ஆனால் அவன் கண்டும் காணாதவனாக இருந்து விட்டான். தங்க ரத்தத்தில் அலங்கார வேலன் வரும் காட்சியை அவன் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான். அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. அவனின் கையை பிடித்து, விரல்களால் அழுத்தியபடி, " என்ன நடந்தது அருண் உனக்கு?, நான் பக்கத்தில் இருப்பது தெரியவில்லையா?" என்று கொஞ்சம் கெஞ்சலாக கேட்டாள், பின் "வாங்க, எங்கேயாவது சாப்பிட்டுக் கொண்டு தனியாக கதைப்போம்" என்றாள். ஆனால், அவன் பேசாமல் அமைதியாக நின்றான். அப்பொழுது தெருக்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன, "வேல்! வேல்!" என்று கோஷமிட்டன. அவன், அவள் கைகளை பிடித்து, நீ என்னவள், நான் கொண்டு வந்த என் பணப்பை குறைந்து கொண்டு போகிறது. இனி நான் கட்டுப்பாடுடன், தேவைக்கு அளவாகத் தான் செலவழிக்க முடியும். அதுதான் என்று இழுத்தான். பின் ரியோவில் போய் இருவரும் ஐஸ்கிரீமும் மரக்கறி ரோலும் சாப்பிட்டனர். ஆனால் முதல் முதலாக எந்த பரிசும் வாங்கிக் கொடுக்கவில்லை. அவளின் தோழி சொன்னதின் அர்த்தத்தை ஆரணியிடம் தேடிக் கொண்டு இருந்தான், ஆனால் அவளுக்கு அதைக் காட்டாமல் ! ஆகஸ்ட் 20, சப்பரம் திருவிழா. அவன் வேண்டும் என்றே, அன்று பணப்பை கொண்டுவரவில்லை. அவன் அவளை சோதிக்க விரும்பினான். ஆரணி தன்னை இன்னும் கூடுதலாக அலங்காரப் படுத்திக் கொண்டு வந்தாள். அவளின் அந்த கவர்ச்சி அழகு, அவள் மேல் ஆசையைக் கூடினாலும், அவன் எளிமையாக, ஒரு பக்தன் போல், ஆனால் அவளின் கையை பிடித்தபடி ஆலயத்துக்குள் புகுந்தான். என்றாலும் அவனின் உடலும் உள்ளமும் அவளை ரசித்துக் கொண்டே இருந்தன. 'காமரம் முரலும் பாடல், கள், எனக் கனிந்த இன் சொல்; தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் அணங்கு ஆம்" என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப்பாலது அன்றோ?' மதுவைப் போல் மயக்கமூட்டும் இனிய பேச்சும், இனிய மலர்கள் சூடப் பெற்ற அவளின் கூந்தலும்; தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம் என்று சொல்லும்படி; தாமரை மலரில் வசிக்கும் திருமகளும் அவளின் தோழியாதற்குக் கூடத் தகுதி அற்றவள் என்று கூறும் அளவுக்கு ஆரணி அழகை அள்ளி அள்ளி அருணுக்கு வீசிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவன் முன் போல் அதை வெளியில் அவளுக்கு காட்டிக் கொள்ள வில்லை. பரிசு மட்டும் அல்ல சாப்பிடக்கூட கூப்பிடவில்லை. ஆக கோவில் தீர்த்தமும் சாதகமும் மட்டுமே அவனும் பருகி, அவளுக்கும் தன் கையால் ஊட்டினான். அதில் ஆசை, காமம் இருக்கவில்லை. அன்பும் பாசமும் இருந்தன. ஆனால் ஆரணிக்கு அது எரிச்சலாகவே இருந்தது. அவள் புன்னகை தடுமாறியது. அவள் கொஞ்சம் கடும் கோபத்துடன், " பெண்ணை, காதலியை ரசிக்கத் தெரியாத, அவளை திருப்தி படுத்தாத, அவளுக்கு, இந்த விழாக் காலத்தில் ஒன்றுமே கொடுக்காத நட்பு , அது என்ன நட்பு?" என்று கேட்டாள். அவன் அமைதியாக இருந்தான். அவனுக்கு 'நான் இவ்வளவு நாளும் கொடுத்தேனே, ரசித்தேனே, இன்று ஒரு நாள் பொறுக்க முடியாதா? அப்படி எனறால் இது உண்மையான அன்பா ? பாசமா?' என்று கேட்கத் தோன்றியது, ஆனால் கேட்கவில்லை , அதற்கு இனி தேவையும் இல்லை. அவள், அவனின் கையை உதறி விட்டு, அங்கிருந்து அகன்று விட்டாள். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. தன் யாழ் அனுபவத்தை நினைத்து தனக்குள் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தான். ஆலயமணி அப்போது ஒலித்தது. பக்தர்களின் அரோகரா கோஷம் காதை பிளந்தது. என்றாலும் அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையுடன் அங்கு கொஞ்ச நேரம் நின்றான். ஆனால் அவள் வரவில்லை. பார்க்கப் போனால், மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? அருணின் வாழ்க்கையிலே, நல்லூர் ஆலயத்துக்குள் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்து விட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வதீியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்து விடும் ஒரு சம்பவம், சில பேரினது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பி விட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும் போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய தோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிட வில்லையா? ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது! சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிகப் பெரியது. இன்று அருணின் அனுபவமும் அப்படியே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/31411651205150117/?
  8. "மூன்று கவிதைகள் / 09" முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ அன்பு காட்டாயோ !! ........................................... தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள் அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை உண்டாக்குவது எப்படி என்று? என் கல்லறைக்கு வரும் போதாவது அவளை பார்த்து யாராவது கேளுங்கள் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று? ......................................................... மஞ்சள் வெயில் பூத்த வானமும் பனை மரங்களின் இனிய தாலாட்டும் பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும் எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும் அன்பும் பண்பும் துளிர்த்துவிடும்! வீட்டை விட்டு எட்டி நடந்தால் வானம் பாடிகளின் ஆட்டமும் வீதியோர பசுக்களின் கூட்டமும் காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும் வானுயர நிமிர்ந்த பனைமரமும் மனதைத் தொடும் நினைவுகளே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "மூன்று கவிதைகள் / 09" https://www.facebook.com/groups/978753388866632/posts/31395276500120921/?
  9. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 27 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'பன்னிரண்டாயிரம் கைதிகளை அழைத்து வருவதற்காக கஜபா மன்னன் ஒரே ஒரு இராட்சதனுடன் சோழ நாட்டிற்குச் சென்றாரா?' தீபவம்சம் கஜபாகுவின் ஆட்சியை 22 – 13 முதல் 14 வரையிலான இரண்டு வசனங்களில் விவரிக்கிறது. மகாவம்சம் அவரது ஆட்சியை சுமார் 35 – 115 முதல் 122 வரையிலான எட்டு வசனங்களில் விவரிக்கிறது. இருப்பினும், இராசவலிய கஜபாகுவைப் பற்றிய நம்பமுடியாத கதையைக் கூறுகிறது. பைபிள் கதை ஒன்று, பல தலைமுறைகளாக எகிப்தியர்களிடம் அடிமைகளாக இஸ்ரவேல் மக்கள் இருந்தனர் என்றும், ஒரு முறை, அவர்களை ஆறுதல்படுத்திய மோசே, உடனே வானை நோக்கி இறைஞ்சினார். அப்போது கடவுள் மோசேயை நோக்கி, “ இன்னும் நீ என்னிடம் ஏன் அழுகிறாய்? செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் இரண்டாய்ப் பிளக்கும். பிளந்த இடத்தில் உலர்ந்த தரையைக் காண்பீர்கள். அப்போது உலர்ந்த தரை வழியே நடந்து கடலைக் கடந்து செல்லுங்கள் என்கிறார். இராசவலிய கதை, பைபிள் கதையின் நகலாகத் தோன்றுகிறது. தமிழ் நாடுகள் அன்றைய காலத்தில் வலிமைமிக்க சேர மன்னனின் கீழ் இருந்தன, பன்னிரண்டாயிரம் கைதிகளுடன் கூடுதலாக பன்னிரண்டாயிரம் கைதிகளை அழைத்து வர கஜபாகு ஒரு பூதத்துடன் சோழ நாட்டிற்குச் சென்றான் என்று இராசவலிய கதை கூறுவது முற்றிலும் விசித்திரமாக உள்ளது. அதுமட்டும் அல்ல, அந்த பூதத்துடன் சோழநாட்டிற்கு நடந்து போவதற்கு கடல் பிரிந்து, பைபிள் கதை போல், வழி கொடுத்தது. இந்த புனைகதை தென்னிந்தியாவில் உள்ள தமிழ் அரசுகளுக்கும் இலங்கையில் உள்ள அரசுக்கும் இடையே நிலவிய நல்லுறவை தவறாக சித்தரிக்கும் துறவியின் முயற்சியாக இருக்கலாம்.? இதற்கு நேர்மாறாக தமிழ் ஆதாரங்களில் கஜபாகு பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக, சிலப்பதிகாரம் 151 - 163: "பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப் பூவும் புகையும் மேவிய விரையும் தேவந் திகையைச் செய்கென் றருளி வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவ னின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர்" என்று அவரை 'கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்' என்று பெருமையுடன் கூறுகிறது. கஜபாகு மன்னன் பத்தினி தேவியின் கொலுசுகளையும், நான்கு தேவாலய முத்திரைகளையும், வலகம்பாவின் (மற்ற இரண்டு வரலாற்று நூலிலும் வட்டகாமினி) காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புத்தரின் பிச்சைக் கிண்ணத்தையும் [இது புத்த மதத்தில் ஒரு புனித நினைவுச்சின்னம்] மீட்டு தன்னுடன் கொண்டு வந்ததாக இராசவலிய வெற்றியுடன் கூறுகிறது. என்றாலும் கஜபாகுகாமினியின் காலத்தில் பத்தினி வழிபாடு இலங்கைக்கு வந்ததாக மறைமுகமாக ஒப்புக்கொண்டு, தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில், (சிலம்பு. 30 : 160, உரைபெறு கட்டுரை 3) கூறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது. செங்குட்டுவன் வஞ்சிமா நகரத்தில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துக் குடமுழுக்குச் செய்தபோது அந்த விழாவுக்குத் தான் இவன் வந்திருந்தான். பிற்காலத்து நூலாகிய இராசவலிய, சோழ அரசன் ஒருவன் இலங்கைக்குச் சென்று போர் செய்து சிங்களவரைச் சிறைப்பிடித்து வந்து காவிரியாற்றுக் கரை கட்டுவித்தான் என்றும், பிறகு கஜபாகு அரசன் சோழ நாட்டுக்குப் போய்ச் சிங்களவரைச் சிறைமீட்டுக் கொண்டு வந்தான் என்றும் கூறுகிறது. இச்செய்தியை மகாவம்சம் கூறவில்லை. பழைய தமிழ் இலக்கியங்களும் கூறவில்லை. எனவே, இச்செய்தி நம்பத்தக்கதன்று.? Part: 27 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is King Gajaba went to the Chola country with one giant to bring back twelve thousand prisoners?' The Dipavamsa describes his [king Gajabahu] rule in two verses 22 – 13 to 14. The Mahavamsa describes his [king Gajabahu] rule in about eight verses 35 – 115 to 122. However, the Rajavaliya spins an unbelievable story about him. The story is a part copy of the Biblical story of the Saint Moses bringing back the Israelites out of Egypt through the Red Sea. Tamil countries were under the powerful Chera king at that time, and the Rajavaliya’s narration that Gajaba went to the Chola country with one giant to bring back twelve thousand prisoners along with additional twelve thousand is a flight of fancy of the author of the Rajavaliya. The sea parted and gave way to him to walk to the Chola country with that giant. This fiction is perhaps the monkish effort to misrepresent the cordial relationship that prevailed between Tamil kingdoms in South India and the kingdom in Lanka. This may not reflect the better cordial relationship that existed at the time of Gajaba between the Tamil kingdoms in South India and Lanka. The Rajavaliya triumphantly states that the king Gajaba brought with him the jewelled anklets of the goddess Pattini and the insignia of the four devala, and the bowl-relic, which had been carried off during the time of Valagamba (Vattagamni in the other two chronicles). There is an indirect admission that Pattini cult came to Lanka during the time of Gajabahukagamani, confirming the statement in the Tamil Epic Sillappathikaram. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 27 B தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 A https://www.facebook.com/groups/978753388866632/posts/31383474037967834/?
  10. கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 03 ஆகஸ்ட் 15 கார்த்திகைத் உற்சவம், ஆகஸ்ட் 17 கைலாச வாகனம் என அடுத்து அடுத்து வந்த பெரு விழாக்களில் சனநெருக்கம் கூடியதால், அவர்கள் ஒரு ஒதுக்குப்புறமாக தங்கள் தனிமையை தேடிக்கொண்டனர். கைலாச வாகன ஊர்வலத்தின் போது, அருண், இரவு உணவுக்கு, தான் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தில் உள்ள ஆடம்பர 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்தான். அவள் எந்தவித தயக்கமும் இன்று புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள். எனவே அவர்கள், கொஞ்சம் நல்லூரில் இருந்து தள்ளி அந்த ஹோட்டலுக்கு போனார்கள். அப்ப நேரம் மாலை ஆறு அரை தான். எனவே அங்கே உள்ள நீச்சல் தடாகத்தில் ஒன்று, ஒன்றரை மணிநேரம் பொழுது போக்க முடிவு செய்தான். அவளும் சம்மதிக்க, அங்கேயே மிகவும் கவர்ச்சியான அழகான ஒரு துண்டு பெண்கள் நீச்சல் உடை [one piece ladies swimming dress] வாங்க விரும்பினான். ஆனால் அவள் இரண்டு துண்டு பெண்கள் நீச்சல் உடை [two piece ladies swimming dress] தனக்கு விருப்பம் என்றும் அது தனக்கு வசதியானது என்றும் கூற, அதையே வாங்கினான். அவள் அவன் கரங்களை தன் கரங்களுடன் கோர்த்து, நெருக்கமாக நின்று உங்கள் அறையில் போய் உடை மாற்றுவோமா என்றாள். ஆனால் அது, தனிப்பட்ட அறையில், இப்போதைக்கு வேண்டாம், இங்கு ஆண்கள் பெண்கள் தனித்தனியாக உடை மாற்றும் இடம், நீச்சல் தடாகத்துடன் இருக்கிறது, அங்கே நாம் மாற்றலாம் என்றான். அவள் ஒன்றும் பேசவில்லை, அமைதியாக ஒத்துக் கொண்டாள். என்றாலும் அவள் வாய் 'கண்ணுக்கு இமை ஆடை. விண்ணுக்கு மேகம் ஆடை. மண்ணுக்குக் கடல் ஆடை. இதயத்திற்கு எண்ணங்களே ஆடை. ஆன்மாவுக்கு உடல் ஆடை. காதலிக்கு காதலன் ஆடை. அதற்கு ஏன் தனித்தனி அறை? சமணர்களில் ஒரு பிரிவினர் நிர்வாணமாக இருப்பார்கள். கேட்டால் ‘நாங்கள் நிர்வாணத்தையே உடுத்தியிருக்கிறோம் என்பார்கள். உங்களுக்கு உங்களில் முதல் நம்பிக்கை வேண்டும்' ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. அவன் உள்ளம், அதைக் கேட்டு, அவன் மேல் உள்ள, அவளின் நம்பிக்கையை பாராட்டினாலும், அவன் எனோ தன் முடிவை மாற்றவில்லை. தன் கரங்களை வின்னெங்கும் விரித்து அணைத்தபடி ஆதவன் ஒருபுறம் மறைய.... மறுபுறம் வான் கடலில் மும்முரமாக நீச்சல் பழக வேகமாக வந்துகொண்டிருந்தது நிலவு.... அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவிக் கிடந்த நட்சத்திரங்கள் பூமிக் காதலனை காதலோடு பார்க்க.....வெளிச்சம் விலகியும் விலகாத ஓர் அழகான பொன் அந்தி மாலைப் பொழுது.... அந்த இனிய மாலையில் படபடக்கும் மின்மினிகளாய் விளக்குகள் கண்சிமிட்ட.... எங்கு திரும்பினாலும் வானுயர்ந்த கட்டிடங்களை தனக்குள் அடக்கிக் கொண்டு இருந்த அந்த ஹோட்டலின் நீச்சல் தடகத்துக்கு, அழகான கண்ணைக் கவரும் பகட்டான இறுக்கமான இரண்டு துண்டு நீச்சலுடையில் இளமையின் பூரிப்புடனும், சதைப் பிடிப்புடனும் விளங்கும் தனது பெரும் பகுதியை வெளிக் காட்டிய வண்ணம், ஒய்யாரமாக அன்ன நடையில் ஆரணி வந்தாள். அருண் ஏற்கனவே உடை மாற்றி அங்கே நீச்சல் உடையில் [swim suit] இருப்பதைக் கண்ட ஆரணி, அலைகளுக்குள் எழுந்த சந்திர ஒளியைப் பார்த்தது போல் திகைத்து, நீரின் பளிங்குச் சாயலில் ஒளிர்ந்த அவனது உடல்வாகு [உடற்கட்டு], அவளது இதயத்தில் இனிய அலைகளை எழுப்பி, அவளுக்குள் சொல்லமுடியாத ஈர்ப்பைத் தூண்டின. அதேநேரம், ஆரணியின் அசைவுகள் ஒவ்வொன்றையும் மனதில் பதித்துக் கொண்டு, விளக்குகள் அலை அலையாக பாய்ந்து, நீச்சல் தடாக தண்ணீரில், அது நட்சத்திரங்களைப் போல பிரதிபலிப்பதை ரசித்துக் கொண்டு இருந்த அவன், தன் கால்களை நீரில் நனைத்தபடி, ' உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கனும்' என்றான். நாம் அழகிகள் என்று நினைக்கும் பெண்களில் பலர், உண்மையில் பல பொருத்தமான ஆடைகளால், தமது அவலட்சணத்தை மறைப்பதில் சாமர்த்தியம் வாய்ந்தவர்கள் என்பதே உண்மை. அவர்களின் உண்மை அழகு எவ்வளவு என்பதை அவர்களை ஒரு நீச்சலுடையில் பார்க்கும் பொழுது தான் தெரியும்! ஆரணியோ அப்படிப்பட்ட அழகி அல்ல. உடைகள் உண்மையில் அவள் அழகை வெளிக் காட்டுவதற்குத் தடையாக இருந்தனவே அல்லாமல், துணை புரியவில்லை. அவற்றைக் குறைக்கக் குறைக்க வளவளப்பான அவளது இயற்கை மேனி வெளியே தெரிய, அவள் அழகும் அதிகரித்தது. ஆரணி தன் வண்ணமயமான நீச்சலுடையில் ஒரு தங்கப் பதுமை போல் பிரகாசித்தாள். அவளது சிற்றிடை ஒடுங்கித் தோன்ற, அவளது எலுமிச்சம் பழ நிறக் கால்களும், வசீகரமான பொற்றோள்களும் பரிசுத்தமாக விளங்கிய கழுத்தும் வெறுமையாகத் தோன்றிக் காண்பவர் கண்களைப் பறித்தன. அதில் அருண் விதிவிலக்கல்ல. அவள் அந்த உடலுடன் ஒட்டிய இரண்டு துண்டு உடையில், பெண்மையின் அழகை முழுமையாக அள்ளி வீசிக் கொண்டு, அவன் அருகில் வந்து, அவன் மேல் சாய்ந்தபடி, விளையாட்டுத்தனமாக தன் கைகளால் நீரை அள்ளி அவன் முகத்தில் தெளித்தபடி, 'நாம் ஸ்விம் [swim] பண்ணலாமா' என்று கேட்டாள். யூனிவர்சிட்டியில் [university] இருந்த காலத்தில் ஸ்விம் [swim] பண்ணியது, இன்று தான் அதன்பின் நீந்தப் போகிறேன் என்றான் அருண், பின், அவள் கைகளை பிடித்தபடி. அவள் ஷாவெரில் [shower] ஏற்கனவே உடலை நனைத்துக் கொண்டு வந்ததால், அவளின் நனைந்த தோற்றத்தை பார்த்த அருண், 'உன் ஸ்ட்ரக்சர் [structure] செம்மையாக இருக்கு .. நல்லா மெயின்டெய்ன் [maintain] பண்ணுறாய்' என்றான். 'உங்களை பார்த்தாலே தெரியுது உங்கள் நீச்சலை .. ஆனா பிராக்டிஸ் [practice] பண்ண மீண்டும் எல்லாம் சரிவரும்' என்றவள், அவன் எதிர்பாராத அந்தக் கணத்தில் அவனை நீரில் தள்ளி விட்டு விட்டு. தானும் குதித்தாள். அப்பொழுது மாலைச் சூரியன் நீச்சல் தடாகத்தில் சிவந்த பொற்கதிர்களைப் பரப்பியிருந்தது. நீருக்குள் அவள் இறங்கிய அந்த நொடியில், பவளமெனத் திகழ்ந்த அவளது சருமம், நீரின் பளிங்குச் சாயலில் மேலும் ஒளிர்ந்தது. அவள் நீந்தத் தொடங்கியவுடன், நீர் அலைகள் அவளது உருவத்தை அணைத்துப் போற்றுவது போல தோன்றியது. ஒவ்வொரு அசைவும் ஒரு இசை, ஒவ்வொரு சிரிப்பும் ஒரு கவிதை. அருகில் நீருக்குள் இருந்த அருணின் கண்கள் தன்னிச்சையாக அவளின் மீது ஈர்க்கப்பட்டன. அவன் நீந்துவதையே கொஞ்சம் மறந்துவிட்டான். “அவள் ஒரு சாதாரணப் பெண் அல்ல… அழகு, நாணம், இளமை—எல்லாமும் ஒரே வடிவில் கலந்தவள்,” என்று அவன் உள்ளம் தனக்குள் பேசிக் கொண்டது. அவள் நீரிலிருந்து மேலெழும்பும் போது, துளிகள் கன்னத்தில் முத்துக்களாய் ஒளிர, அவன் இதயம் அந்த நொடியிலேயே அவளிடம் சிறையானது. அவள் சிரித்தாள்; அந்த சிரிப்பில் ஒரு மலர்ந்த ரோஜாவின் மணமும், ஒரு புதிதாக எழும் காதலின் திகைப்பும் இருந்தது. அருகில் பார்த்துக் கொண்டிருந்த அவனின் மனம் தன்னிச்சையாக அவள் மேல், மேலும் ஈர்க்கப்பட்டது. சிறிது தைரியமாய்ப் பின் பேசத் தொடங்கினான்: “உன்னைப் பார்த்தால் நீருக்கே பொறாமை வருகிறதே… உன்னைச் சுற்றி சுற்றி ஆடி ஆடி விளையாடுகிறது.” என்றான். அவள் சிரித்தாள். தண்ணீரின் துளிகள் அவளது கன்னத்தில் முத்துக்களாய் ஒளிர்ந்தன. அவள் சிறிது நாணத்துடன் தண்ணீருக்குள் தன் கைகளை, முகத்தை புதைத்தாள். “நீ நீரிலிருந்து மேலெழும் ஒவ்வொரு தருணமும், என் மனதில் ஒரு அழகு சிற்பம் உருவாகிறது." என்றான். “சிற்பமா? நான் ஒரு சாதாரணப் பெண் தான்…” என்ற சொன்ன அவள், யாரும் அங்கு இல்லாத அந்த வேளையில், திடீரென அவனைக் கட்டி அனைத்து முத்தம் கொடுத்து, மெல்லச் சிரித்தாள். அவளது அந்த சிரிப்போடு சேர்ந்து, அவனது உள்ளங்களிலும் புதிதாய் மலர்ந்த அவனின் காதல், மேலும் மேலும் வேரூன்றிக் கொண்டது. நீச்சல் தடாகத்தை விட்டு வெளியே வந்த ஆரணி, கண்ணாடி முன் பக்கவாட்டில் நின்றவாறு தன் முன் அழகையும் பின் அழகையும் ஒரு முறை பார்த்தாள். பின் துவாலை [towel] ஒன்றால் தன்னை போர்த்திக் கொண்டு, உடை மாற்ற புறப்பட்டாள். மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப, மணிப் பூ ஆடை-அது போர்த்து, கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி, நடந்தாய்; வாழி, ஆரணி ! வண்டுகள் இரு மருங்கும் ஒலிக்க, பூ ஆடையைப் போர்த்திக் கொண்டு கயல் மீன் கண்களை விழித்துக் கொண்டு நடந்தாய், வாழ்க ஆரணி என்று அவன் மனம் மகிழ்ந்து கொண்டு இருந்தது. அருண் அங்கிருந்த சாய்வு நாற்காலியில், இன்னும் ஈரத்துடனே, திடகாத்திரமான மேனியுடன், துவாலை ஒன்றாலும் போர்க்காமல், சாய்ந்து இருந்தபடி, ' நான் உன்னை ரொம்ப அடக்கமான பொண்ணுன்னு நினைத்தேன்' என்று கிண்டலாகக் கூறினான். 'க்கும்' என பொய்க் கோபத்துடன் முகத்தைக் சுளித்துக் கொண்டாள் ஆரணி. என்றாலும் அவனின் மூங்கில் போன்ற தோள்கள், பரந்த மார்பு, நீண்ட கைகள், முறுக்கேறிய வல்லமை கொன்ட தசைகள். நேர் கொண்ட கூரிய விழிகள். அரிதாக புன்னகைக்கும் இறுகிய உதடுகள், உறுதியைக் காட்டும் உடலமைப்பு கொண்ட கம்பீரமான தோற்றம் அவளை சற்று வியக்க வைத்தது. அவனை கீழிருந்து மேல்வரை திரும்பவும் பார்த்த ஆரணி, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி, ' ரொம்ப சூட இருக்கிங்க போல' என்று சிரித்தபடி, அவனின் தோளை மெல்ல தட்டி விட்டு போனாள். சந்தோசத்தில் அவன் கண்களை விரித்து 'ஓகே ஓகே' என்று கூறியபடி அவளின் பின் தானும் உடை மாற்ற தொடர்ந்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/31368158149499423/?
  11. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 26 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 26 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'சோழ மன்னன் ஒருவன் 12000 இலங்கையரைத் சிறைபிடித்தானா?' வசபாவின் [வசபனின்] மகன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasikatissa] அவனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் வசபாவின் மாமா மற்றும் மாமன் மகள் பற்றிய ஒரு கதை உள்ளது. வங்கனாசிகதிஸ்ஸ இராசவலியில் வன்னேசினம்பாபா [Vannesinambapa] ஆகும். சோழ நாட்டு மன்னன் ஒருவன் படையுடன் வந்து பன்னிரண்டாயிரம் பேரைத் தன் நாட்டிற்கு சிறைபிடித்து அழைத்துச் சென்றதாக இராசவலிய கூறுகிறது. இந்த மன்னனைப் பற்றிய ஒரு கதை இராவலியில் காணப்படுகிறது, இது இராமாயணத்தில் உள்ள ஒரு கதையை ஒத்ததாகவும், தமிழில் உள்ள பொற்கை குலசேகர பாண்டியனைப் பற்றிய மற்றொரு கதையைப் போலவும் உள்ளது. இருப்பினும், மற்ற இரண்டு வரலாற்று நூல்களிலும் இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. கி.பி 3ஆம் நூற்றாண்டு (கி.பி. 201) முதல் கி.பி 6ஆம் நூற்றாண்டு (கி.பி. 501) வரையிலான காலகட்டம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் காலகட்டத்திற்கு முன்பு இலங்கை மீது படையெடுக்கும் திறன் கொண்ட ஒரு சோழ மன்னன் இருந்தான் என்பது நம்பகமானதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த பொற்கைப் பாண்டிய மன்னனைப் [Golden Handed Pandya] பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் (குறிப்பு: மதுரை காண்டம் - கட்டுரை காதை) உள்ளது. இவனுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட செயற்கைக் கை பொருத்தப்பட்டது. என்றாலும் அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. “கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான் பொற்கையான் ஆனகதை போதாதோ- நற்கமல மன்றலே வாரி மணிவா சலையசைக்கத் தென்றலே ஏன் வந்தாய் செப்பு?” [கம்பர்] ஒருமுறை கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் மனைவியுடன் படுத்திருந்தார். இருவரும் உறங்கும் நேரம் வந்ததும் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்ட கம்பர் படுக்கையில் இருந்து எழுந்து கதவைத் திறந்தார். அப்பொழுது தென்றல்தான் கதவைத் தட்டியது என்பதை உணர்ந்தார். உடனடியாக 'காற்றுடன் பேசுவது' போல இந்த பாட்டை பாடி,'கொற்கை பாண்டியன் குலசேகரப் பெருமான், ஊரார் வீட்டுக் கதவைத் தட்டிய ஒரே தவறுக்காக பொன் கை பாண்டியனாக மாறிய கதை உனக்குத் தெரியுமா?' என்று காற்றிடம் கேட்டார். அவன் மகன் கஜபாகுக்க காமினி [Gajabahuka Gamani] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கஜபாகுக்க காமினி என்பது இராசவலியில் உள்ள முதலாம் கஜபாகு [Gajabahu I] என்றும், மற்ற இரண்டு வரலாற்று நூலிலும் சொல்லப்பட்ட இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பதிலாக, இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் கூறுகிறது. முன்பு குறிப்பிட்டது போல் வசபா ஒரு தமிழனாக இருக்கலாம்? எனவே கஜபாகுக்க காமினியும் தமிழனாக இருக்கலாம்? சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்த போது, மன்னனின் அழைப்பின் பேரில், இந்திர விழாவிற்கு வந்திருந்த அரசர்களில் இலங்கை அரசனான கஜபாகுவும் (முதலாம் கஜபாகு) ஒருவன் ஆகும். பல்லவ மன்னர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய மன்னர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாததன் அடிப்படையில், இந்த இதிகாசத்தின் காலம் முதன் முதலில் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டது. பின்னர் கஜபாகுவின் காலத்தின் அடிப்படையில், கி.பி. 171 முதல் 193 வரை, அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த தமிழ் மன்னர்களுக்கும் இலங்கை மன்னர்களுக்கும் அன்றைய கால கட்டத்தில் பகை ஒன்றும் இருக்கவில்லை. இலங்கை மன்னர் கஜபாகு தென்னிந்தியாவின் தமிழ் மன்னர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். தீபவம்சமும் மகாவம்சமும் அதைப் பற்றி மௌனமாக இருக்கின்றன. கஜபாகு என்ற மன்னன் இலங்கையில் அண்மைக் காலம் வரை நிலவிய பத்தினி வழிபாட்டை இலங்கைக்கு கொண்டு வந்தான். தீபவம்சமும், மகாவம்சமும் கஜபாகு மன்னனைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. Part: 26 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did a Chola king capture 12,000 Sri Lankans?' Vasabha’s son Vankanasikatissa ruled after him for three years. There is s story about Vasabha’s uncle and uncle’s daughter in the Mahavamsa. Vankanasikatissa is the Vannesinambapa in the Rajavaliya. The Rajavaliya says that a king of Soli country came with an army and took twelve thousand people to his country. There is a tale in the Rajavaliya about this king, which is very similar to a story in the Ramayana and similar to another story about the Golden Hand Kulasekara Pandiyan in Tamil. However, the other two chronicles did not say anything in this regard. The period from the 3rd century A. D. (201 A. D.) to the 6th century A. D. (501 A. D.) is considered a dark period in the history Tamil Nadu as there is no detail available about this period. It is not trustworthy to believe that there was a Chola king with the capacity to invade Lanka just prior to this period. His son Gajabahukagamani ruled for twenty-two years. Gajabahukagamani is the Gajaba in the Rajavaliya and ruled for twenty-four years, instead of twenty-two in the other two chronicles. As indicated earlier, Vasabha could be a Tamil. Therefore, Gajabahukagamani could also be a Tamil. He is the Gajabahu who went to Tamil Nadu to participate in the Indravill(zz)a on the invitation of the very famous Chera king Cheran Senguttuvan. There was no enmity between the Tamil kings in Tamil Nadu and the Lanka kings. He, the king Gajabahu, brought the Pattini cult to Ceylon, which prevailed in Lanka until very recently. The Dipavamsa and the Mahavamsa have nothing much to say about the king Gajabahukagamani. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 27 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 26 https://www.facebook.com/groups/978753388866632/posts/31353268157655089/?
  12. எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] யாழ் மண்ணிலும் லண்டன் வானிலும் நம்பிக்கைக் கனவில் உறுதியாக நீந்தி இழப்புகள் தாண்டி உயர்ந்த மகனே கலங்கரை விளக்காய் வாழ்க வாழ்கவே! அறிவியலில் மனதைப் பறி கொடுத்து பொறியியலில் வாழ்வை திறம்பட அமைத்து மகன் மகளென இரு குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்பவனே வாழ்க வாழ்கவே! விண்ணில் இருந்து அம்மா வாழ்த்த மண்ணில் இருந்தது நாம் வாழ்த்த எண்ணம் என்றும் உயர்வாக அமைந்து வண்ண மயமாக வாழ்வு ஒளிரட்டும்! ஆரோக்கியம், அமைதி வாழ்வை நிறைக்க அன்பு ஆசிகள் உனைச் சுற்றிக்கொள்ள பூச்சொரிந்து தீபம் ஏற்றி வாழ்த்துகிறோம் அன்புடன் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! [அப்பா, கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] From Jaffna’s soil to London’s skies, A journey of hope, where your spirit flies. Through trials and loss, you stood so tall, A guiding light, admired by all. A healer’s heart, both kind and true, The world is brighter because of you. A son, an Engineer and a matured father, Each year you grow, we hold you near. Though your mother now rests above, She sends her blessings, her endless love. From heaven’s gate she smiles today, “Happy Birthday, my son,” she’ll say. May health and peace forever stay, Happy Birthday, my son, on this special day. [Appa, Kandiah Thillaivinayagalingam] எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/31335919739389931/?
  13. “My dear Tamil diaspora and their children and grandchildren…” / "எனது அன்பான தமிழ் புலம்பெயர்ந்த மக்களே, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளே..." “When I say Jaffna, Mullaitivu, Trincomalee, Batticaloa—your heart feels pain. You remember massacres, burnt homes, destroyed temples. Some of you think, ‘Why should we go back there?’ But I am here to tell you—that is exactly why you must go back. ”Visiting the North and East of Sri Lanka is not just tourism. It is a duty—cultural, political, economic, and spiritual. / "நான் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு என்று சொல்லும்போது - உங்கள் இதயம் வலிக்கிறது. படுகொலைகள், எரிக்கப்பட்ட வீடுகள், அழிக்கப்பட்ட கோயில்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது. உங்களில் சிலர், 'நாம் ஏன் அங்கு திரும்பிச் செல்ல வேண்டும்?' என்று நினைக்கிறீர்கள், ”இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வது வெறும் சுற்றுலா மட்டுமல்ல. அது ஒரு கடமை - கலாச்சார, அரசியல், பொருளாதார மற்றும் ஆன்மீகம் ஆகும், அதனை, ஏன் நீங்கள் பயணிக்க வேண்டும் என்பதை, நான் இங்கே கீழே விபரமாக ஆங்கிலத்தில், - காரணம் இது புலம்பெயர்ந்த மக்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கும் சேர்த்து என்பதால் - பதிவிடுகிறேன் 1. Cultural & Historical Continuity The Tamil people have lived in the North and East of Sri Lanka for more than two millennia. Ancient travelers, inscriptions, and chronicles such as Dipavamsa and Mahavamsa record the existence of Tamil and Nāga kings who ruled these lands. Despite this deep history, post-independence Sri Lanka (1948 onwards) brought systematic discrimination, ethnic riots (1956, 1977, 1983), mass displacement, and finally the devastating war that ended in 2009. Today, while many Tamils live abroad due to forced migration, their connection to the homeland must not fade. One powerful way to maintain this connection is regular visits to the North and East of Sri Lanka. Visiting these lands keeps alive the visible presence of Tamils. If diaspora Tamils don’t go, the government and others may claim, “Tamils have abandoned it.” Example: In Jaffna, many ancient temples (Nallur Kandaswamy, Ketheeswaram, Naguleswaram, Thirukoneswaram) are living testimonies of Tamil heritage. When diaspora families visit and worship there, they affirm that these are not “abandoned ruins” but part of a living culture. 2. Counteracting State Narratives Successive governments have promoted “Sinhala-Buddhist heritage” in Tamil areas, often erasing or overshadowing Tamil symbols with new Buddhist statues or army-built structures. Example: After 2009, many Buddhist shrines were erected in Mullaitivu, Kilinochchi, and Trincomalee where no Sinhala people live. In brief, The Sri Lankan state has tried to erase Tamil heritage by replacing temples with Buddhist shrines and by changing place names. Regular visits by diaspora Tamils challenge this narrative by showing the world community and local Sinhala authorities that Tamils abroad have not forgotten or surrendered these lands. In brief, When Tamils visit in large numbers, it challenges the narrative of abandonment and sends a message that the land is still ours. 3. Support for the Local Population. In other words , Strengthening the Local Economy Tourism dollars spent in Jaffna, Trincomalee, Batticaloa, Mullaitivu, and Vavuniya directly support Tamil businesses, helping communities recover. This reduces dependency on state-driven projects that often marginalize locals. For examples, Tamils who remain in the North and East still face: Military occupation of land Lack of job opportunities Psychological trauma of war Diaspora visits bring not only emotional strength but also economic support. Tourists spend money on hotels, guides, transport, small businesses — strengthening the Tamil economy rather than making it collapse. Example: In Jaffna, during Nallur festival, diaspora visitors boost the entire city’s economy, helping small traders, food stalls, transport workers, and local hotels. specially staying in Tamil-owned guesthouses, using local guides, and buying from small traders sustains the Tamil economy. 4. Global Awareness, Documentation & A Political and Cultural Statement Every diaspora family that visits, takes photos, writes blogs, or shares experiences on social media. This creates a counter-narrative to government propaganda. Example: If Tamil Canadians, British Tamils, and French Tamils post about their visits to Mullaitivu massacre sites, Thileepan memorials, or burned Jaffna library grounds, the international audience sees the truth. This keeps Tamil suffering and history alive beyond Sri Lanka’s borders. Every diaspora visit is a subtle reminder to the government and the world that Tamils have not forgotten their homeland. It is similar to how Palestinians, even if exiled, insist on returning to their villages to show ownership. That is, Diaspora visits remind the world that Tamils are alive and present, not forgotten. 5. Generational Identity & Education Children born abroad may grow up knowing only Canada, UK, Switzerland, Australia, etc. Without seeing Jaffna or Batticaloa, they may believe “we are outsiders.” Many second-generation diaspora youth have never seen their ancestral villages. So Visiting allows them to connect emotionally, bridging the gap between exile and homeland. For Example, Visiting the homeland allows them to: See their ancestral temples, schools, and villages. Hear Tamil spoken in its natural setting. Feel the soil of their forefathers. Example: Many Tamil families take children to the Jaffna Public Library site to teach them about its 1981 burning. This ensures that Tamil memory continues beyond one or two generations. 6. Diplomatic & Political Message and World Historical Examples When diaspora Tamils travel back in large numbers, it sends a message to: Sri Lankan government: “We still care for this land.” International observers: “Tamils are not a disappearing minority; they are a global people tied to their homeland.” Example: During Nallur festival, thousands of diaspora Tamils return. Even Colombo newspapers report: “Diaspora floods Jaffna.” This cannot be ignored by authorities—it proves Tamil homeland identity is alive. Jewish diaspora: For centuries, Jews visited Jerusalem despite displacement, keeping their bond alive until Israel was established. Armenian diaspora: Armenians dispersed after the genocide still regularly visit Armenia to strengthen ties. African diaspora: Many African Americans visit Ghana and other African countries as “homecoming” journeys to reclaim identity. Similarly, Tamil diaspora visits maintain ownership and memory. 7. Preventing or Protecting Land Grabs & Countering State Narratives of Development Government often justifies army occupation by saying, “No Tamils live here anymore, so we will develop it.” If diaspora visits increase, they strengthen claims of ancestral ownership. Example: In Mullaitivu, army-run tourist resorts have been built on seized Tamil lands. If diaspora visitors insist on staying in Tamil-owned guesthouses and demand access to Tamil lands, it resists this land-grab silently but effectively. The Sri Lankan government promotes "development tourism" in the North and East to justify Sinhalization. Diaspora visits counter this narrative by prioritizing Tamil spaces, schools, temples, and villages. 8. Healing and Remembrance Many Tamils lost loved ones (1956, 1977, 1983 pogroms, and the 2009 Mullivaikkal massacre). Visiting those lands is a pilgrimage of memory. Example: Visiting Mullivaikkal on May 18th, lighting candles, and praying together sends a message: “We have not forgotten our dead.” It also heals families abroad who carry grief and trauma. 9. Religious & Spiritual Duty For Hindus, Saivaite temples of the North-East (Thirukoneswaram, Naguleswaram, Ketheeswaram, Nallur) are among the oldest shrines of Tamil Saivism. For Christians, churches like Madhu shrine hold deep meaning. Visiting is a spiritual reaffirmation—keeping the faith alive in Tamil soil. that is, Visiting preserves faith and spirituality on Tamil soil. 10. Examples or Lessons from Other Nations Jewish diaspora: Even after 2000 years of dispersion, Jews regularly visited and prayed towards Jerusalem until they regained Israel. Armenians: Spread worldwide but maintain pilgrimages to Armenia, keeping alive their claim to history. Kurdish diaspora: Visits Kurdistan regularly to strengthen its recognition. Similarly, Tamil diaspora must visit Sri Lanka’s North-East to ensure homeland identity is not erased. Conclusion Yes—diaspora Tamils must regularly tour the North and East of Sri Lanka. It is not just tourism; it is: A political act of resistance A cultural duty of remembrance An educational investment for future generations An economic lifeline for local Tamils A global declaration that the Tamil homeland is alive Without diaspora visits, silence and absence will allow governments and international allies to say: “Tamils don’t care anymore.” With regular visits, the truth remains visible—both to Sri Lanka and to the world In brief , For Tamils abroad, visiting the North and East of Sri Lanka is more than a holiday. It is an act of cultural preservation, political resistance, and emotional healing. Each step taken in Jaffna, each prayer at Trincomalee, each embrace with local relatives echoes across history, reminding both the Sri Lankan state and the world that this land is still Tamil land. If we do not visit, silence may slowly erase us from memory. If we do visit, we prove—like other displaced peoples throughout history—that our roots cannot be cut. The North and East are not just geography; they are identity, memory, and future. Before I conclude, let me share a few key historical facts, briefly but meaningfully, for you to remember. / Historical Context (Brief but Essential) 1. Ancient Tamil Presence Archaeological and literary evidence confirms that Tamils and Nagas (Saivite-related communities) lived in Sri Lanka long before Vijaya’s arrival (around 500 BCE). Stone inscriptions, Brahmi scripts, and Sangam literature refer to Tamil-speaking peoples in the island. Ancient texts like Mahavamsa and Dipavamsa—though written with Sinhala-Buddhist bias—acknowledge the existence of Tamil kings and Naga chieftains. Major Saivite temples—Ketheeswaram (Mannar), Naguleswaram (Keerimalai, Jaffna), Thirukoneswaram (Trincomalee), Munneswaram (Chilaw)—all existed from early centuries and prove the depth of Tamil religious civilization. Thus, Tamils are not “immigrants” but one of the founding civilizations of the island. 2. Medieval Tamil Kingdoms From 10th century onwards, the Chola influence spread into the island. By the 13th century, the Jaffna Kingdom (Arya Chakravarthi dynasty) was firmly established, ruling from Jaffna over much of the North and parts of the East. The Jaffna Kingdom maintained Tamil literature, culture, and trade until its fall to the Portuguese in 1619. This period solidified the North-East as a Tamil homeland, with its own rulers, coinage, temples, and laws. 3. Colonial Period (1505–1948) Portuguese, Dutch, and British successively colonized Sri Lanka. British rule brought the North-East Tamil regions and Kandyan Sinhalese regions into one administrative unit in 1833 (Colebrooke-Cameron reforms). This was the first artificial unification of the island. Tamil Saivite revival movements flourished (e.g., Arumuga Navalar in Jaffna). Tamils gained prominence in education and administration due to missionary schools and British appointments. 4. Post-Independence Betrayals (1948 onwards) When Sri Lanka gained independence (1948), the Sinhala political elite began to sideline Tamils systematically: 1948–49: Citizenship Act disenfranchised nearly 1 million Indian Tamils (plantation workers). 1956: Sinhala Only Act imposed Sinhala as the sole official language, sparking anti-Tamil riots. 1958, 1977, 1981, 1983: Large-scale anti-Tamil pogroms killed thousands and destroyed properties—especially the burning of the Jaffna Public Library (1981) and Black July (1983). 1972 & 1978 Constitutions: Elevated Buddhism and Sinhala primacy, sidelining Tamil rights. Standardization (1970s): Denied Tamil students equal university access. Thus, Tamils realized they could not secure justice within a Sinhala-majority framework. 5. Civil War (1983–2009) The Tamil struggle turned into an armed conflict, led by the Tamil youth groups. Tamils sought to protect their homeland in the North - East from state oppression and colonization. For 26 years, the North - East experienced war, displacement, and destruction. 2009 Mullivaikkal massacre: Tens of thousands of Tamils were killed in the final months. Even after the war ended, justice was denied, and militarization continued. 6. Post-War Situation (2009–Present) High militarization: The Northern Province has the highest soldier-to-civilian ratio in the world. Land grabs: Army and state acquire fertile Tamil lands for military camps, Buddhist shrines, and Sinhala settlements. Demographic changes: Sinhala colonization schemes continue, particularly in Trincomalee, Mullaitivu, and Batticaloa. Cultural erasure: Ancient Saivite temples are replaced or overshadowed by new Buddhist constructions. Economic suppression: The North-East lags in investment and jobs, forcing youth to migrate. Psychological trauma: War survivors live with grief, disappearances, and unhealed wounds. 7. New Rulers & Political Climate Different governments (Rajapaksas, Sirisena, Gotabaya, Wickremesinghe) promised reconciliation but failed to deliver justice or political rights. International pressure (UNHRC reports) highlights human rights violations, but Sri Lanka resists accountability. Current rulers speak of “development,” but often it masks Sinhala-Buddhist expansion in Tamil areas. Without diaspora presence, the North-East risks becoming a “museum piece,” where Tamil culture exists only in books, not in living communities. 8. Why Diaspora Must Visit North & East Now connecting history to present: To show unbroken connection. Tamils have lived there for 2300 years. Visits prove this continuity to the Sri Lankan state and to the world. To prevent erasure. If diaspora Tamils stop visiting, the government may argue: “They left permanently; this is now Sinhala land.” To educate the next generation. Children abroad must see Nallur, Jaffna Library site, Mullivaikkal beach, Trincomalee temples—otherwise, they risk losing homeland identity. To support local Tamils. Tourism brings money to Tamil-owned businesses, strengthening local survival instead of depending on state or army establishments. To preserve memory & justice. Visiting massacre sites, memorials, and destroyed villages keeps international awareness alive. Silence benefits only the state. To mirror global examples. Jews, Armenians, Kurds—all maintain ties to their homeland through visits, even when they lived in diaspora for centuries. Tamils must do the same. 9. Practical Outcomes of Regular Visits Each diaspora visit is not just a holiday but an act of political resistance and cultural reaffirmation. It sends a strong message to: Sri Lankan rulers: “This land still belongs to Tamils.” World community: “Tamils are not erased; we are alive.” & Future Tamil generations: “This is your motherland, never forget it.” — Kandiah Thillaivinayagalingam, following my last visit to Sri Lanka in August 2025 -- “My dear Tamil diaspora and their children and grandchildren…” / "எனது அன்பான தமிழ் புலம்பெயர்ந்த மக்களே, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளே..." https://www.facebook.com/groups/978753388866632/posts/31322667227381849/?
  14. கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 02 ரியோ வுக்கு வந்ததும், தன் இருக்கையை அருணுக்கு மிக அருகில் இழுத்து, பட்டும் படாததுமாக நெருங்கி அமர்ந்து கொண்டு, உங்களைப் பற்றி சொல்லுங்களே என்றாள். ஆரணியின் அகவை 21 அல்லது 22 இருக்கலாம். என்றாலும் பேசுவது பழகுவதைப் பார்த்தால் ஒரு 'டீன் ஏஸ்' [teen age] பெண் மாதிரியே இருந்தது. சங்க காலத்து தமிழில் 'டீன் ஏஸ்' பெண்ணை 'மடந்தை' என்று சொல்வார்கள். ஆனால் மடந்தை என்ற சொல் ஆரணியின் அழகை பூரணமாக கொண்டு வரவில்லை அவளைப் பார்க்கும் போதெல்லாம் 'முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள்' என்ற திருஞானசம்பந்தநாயனார் பாடல் எவருக்கும் ஞாபகம் வரலாம்? அப்படித்தான் ஓரளவு மாந்தளிர் போல் நிறத்தினையும் அரும்பு போல் முலையினையுடைய பார்வதி போலும் அவள் தன் இளமையையும், வனப்பையும் வெளிக்காடிக் கொண்டு இருந்தாள். அருண் தன் லண்டன் வாழ்வை சுருக்கமாக, குறிப்பாக அவளுக்கு, மற்றவர்களுக்கு பொதுவாக விளக்கிக் கொண்டிருந்தான். முன் இரவு நேரம், விளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டு பட்டு விழுந்து கொண்டிருந்தது. உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன. ஆரணி, வைத்த கண் வாங்காமல் அருணையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை கையேந்தி பிடித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. அவள் கண்களின் இமைகள் ஏதேதோ பேசின. அவள் திடீரென, "எமக்கு பசிக்குதே, ஐஸ்கிரீமுடன் நாம் எதாவது சாப்பிடுவோமா” என்றாள் ஒருவித சிணுங்கல்களுடன். ”அவ்வளவுதானே… பிரச்சனையில்லை, என்னென்ன வேண்டும் என்று பொதுவாக எல்லோரிடமும், ஆனால் குறிப்பாக அவள் முகத்தை பார்த்தபடி கேட்டான். அவள் கண்கள் மின்னின. அந்த ஒற்றைப் புன்னகை அவனை ஆழமாக இழுத்தது. தன்னை சுற்றிய சூழல் மறந்து, அவனின் இரண்டு விழிகளும் ஒன்றையே தேடுது. இத்தனை இளம் பெண்களுக்குள் அவள் மட்டும் எப்படி தனியாகிறாள்? எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை. அவனுக்கு அதன் பதில் அப்பொழுது புரியவில்லை, என்றாலும் .. அவள் பார்வை ... அதற்காகவே தவமிருக்கிறது அவனது விழிகள்! நேர்வடிவான தாடையை கைகளில் ஏந்தி முழங்கையில் முட்டுக் கொடுத்து அவனையே பார்த்தபடி இருந்தாள், ஆரணி. மறவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசத் தொடங்கி விட்டார்கள். அவளின் சீரான பல் வரிசை பளிச்சென்றது. அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவனைப் பற்றி இழுத்தது. பல வருடங்கள் தூங்கிய சிக்காடா (Cicada) பூச்சி [சிள் வண்டு அல்லது சுவர்க்கோழி], பெண் சிக்காடாவை ஈர்ப்பதற்காக வெளியே வந்து சத்தம் போடுவது போல அவன் மனதும் சத்தம் போட தொடங்கி விட்டது. ரியோவை விட்டு வெளியே வரும் பொழுது, அவளது கைகள் அவனது கைகளுடன் இணைந்தன. கொஞ்சம் தூரத்தில் பொன் மஞ்சளில் அலங்காரக் கந்தன், வடக்கு வீதி நோக்கி தேவிகளுடன் ஊர்வலம் போய்க் கொண்டு இருந்தார். அவளது தோழிகள், எதோ சாட்டு சொல்லிவிட்டு, வடக்கு வீதிக்கு சென்று விட்டார்கள். அவன் அங்கு இருந்த ஒரு நகைக் கடையில் தனது முதல் பரிசாக தங்கச் சங்கிலி வாங்கி, தானே அவள் கழுத்தில் போட்டு ரசித்தான்! அப்பொழுது, ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பத்தில் நிற்பது போல குறுகுறுப்பாக அவன் மனம் துள்ளியது. விமான ஓடுதரை விளக்குகள் போல எண்ணங்கள் வந்து அவனைத் தாக்கின. அவன் உதடுகளில் இன்னும் கொடுக்கப்படாத முத்தங்கள் பல இருந்தன. அவன் விரல் நுனிகளில் இன்னும் தொட்டுப் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருப்பது போல பட்டது. அவன் வயிற்றுக்குள்ளே இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகள் இப்போது வெளியே வரத் துடித்தன. எல்லாத்தையும் அவிச்சு, வடித்துப் பார்த்தால் மிஞ்சியது ஒன்றுதான். ஆரணியை, அவளின் குறும்பு சேட்டையை, அவளின் அழகை, அவளின் கொஞ்சல் பேச்சை அவனால் மறக்க முடியவில்லை. அவன் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மையான காரணம் அவளிடத்தில் தான் இருப்பது போல அவனுக்குப் பட்டது. இரவில் ஒன்றே ஒன்று .. மனதில் சென்றதேன் தேடி .. உனைத் தேடி .. நான் அலைந்ததேன் பறக்கும் பறவை நானோ .. விரியும் மலர்கள் நீயோ தேனே ... கரும்பே ..நீ யென் தேவி .. தேவி! உன் கண்கள் அலைய என் மனம் அலைய நான்...என் இதயத்தின் அருகே எரிகிறேன் என் இதயத்தை நீ எடுக்க அழகுக்கு பலியாக அழகான பெண்ணே காதலில் விழுகிறேன்! அவன் வாய் அவனை அறியாமல் பாடிக்கொண்டு இருந்தது! அவன் மீது படர்ந்த முதல் பெண் தீண்டல் [ஸ்பரிசம்] அவளுடையதே. இணைந்த கைகள் மெல்ல மெல்ல அவள் இடையை வருடின. அவளும் அவனை அணைத்தபடி நடந்தாள். அந்த நெருக்கத்தில் அவளின் மூச்சு காற்றோடு அவன் உறவாடினான். அவளது உள்ளங்கை வேர்வையை முதல் முதல் உணர்ந்தான். அவள் சுவாசம் புரிந்தது, அவள் வாசம் தெரிந்தது. அவள் விழிகளின் வார்த்தைகள் உணர்ந்தான். என்றாலும், தோழிகள் திரும்பி வர, இருவரும் நாளை சந்திப்போமென பிரிந்தனர். அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் அருண் நல்லூர் ஒழுங்காக வந்தான். ஆனால் என்றுமே மிக எளிய சாதாரண பருத்தி வேட்டியும் பருத்தி வெள்ளை மேல் சட்டையுடன் மட்டுமே. என்றாலும் அவனின் நடை உடை பாவனை மற்றும் பேச்சு அவனை யார் என்று காட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் அவளுடன் அவன் பொழுது போனது. அவன் அவளுக்கு ஒவ்வொரு நாளும் எதோ ஒரு பரிசு, அவள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவளை அலங்காரப்படுத்தி அழகுபார்த்து அதில் ஒரு மகிழ்ச்சி அடைந்தான். அவளும் அவனுடன் நெருங்கி நெருங்கி பழகிக் கொண்டே இருந்தாள். முதலில் கொஞ்சம் திருவிழா, பின் கொஞ்சம் ரியோ, லிங்கம் என தோழிகளுடன் அவள் அவனை சந்தித்தாலும், அதன் பின் அவள் அவனுடன் மட்டும் தனியாக போய்விடுவாள். இருவரும் புது தம்பதிகள் போலவே நெருக்கமாக இருந்தார்கள். அவள் தினமும் வெவ்வேறு கண்ணைக் கவரும் உடையில் அவனுக்கு இன்பம் ஊட்டிக் கொண்டே இருந்தாள். அவனும் விலையுயர்ந்த உடைகள், மாலைகள், வளையல்கள் என அலங்காரங்கள் - அனைத்தும் திருவிழாக் கடைகளிலிருந்து வாங்க்கிக் கொடுத்துக் கொன்டே இருந்தான். அவள் எல்லாவற்றையும் ஏற்று, மேலும் மேலும் தன் நெருக்கத்தையும் கூட்டினாள். அவன் அவள் என்னுடையவளே என்ற மகிழ்வில், அவளுடைய அணைப்பில், சிரிப்பில், அழகில், கொஞ்சல் பேச்சில் தன்னையே இழந்து கொண்டு இருந்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/31301211756194063/?
  15. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 25 C பகுதி: 25 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] இலங்கையில் கண்டு எடுக்கப் பட்ட கல்வெட்டுகள், சிங்களம் என்பது கி மு 500 ஆண்டில் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் இருந்து வந்த குடியேறிகளால் கொண்டு வரப் பட்ட பிராகிருதத்தில் இருந்து மெல்ல மெல்ல வளர்ந்த ஒரு மொழியாகும் என்பதை உறுதிப் படுத்துகிறது. இது இந்திய - ஆரிய மொழிகளில் இருந்து தனிமை படுத்தப் பட்டதால், அதன் வளர்ச்சி ஓரளவு சுயாதீனமாக இருந்தது எனலாம். திராவிட மொழிகளில் மூத்தது தமிழ் என்பதாலும், சிங்கள இனம் என்ற ஒன்றின் தோற்றம் ஆரம்பத்தில் இருந்தே தமிழுடன் தலைமுறைகளாக இணைந்திருந்ததாலும், சிங்கள மொழியின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பு பெற்று, சிங்கள மொழியின் ஒலியியல், இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியங்களில் தமிழின் தாக்கத்தை இன்று காணக் கூடியதாக உள்ளது. [Stone inscriptions suggest that Sinhala developed from the Prakrits, brought to Sri Lanka by settlers from Northwestern and Northeastern India in the 5th century BCE. Because of its isolation from the other Indo-Aryan languages of mainland India, Sinhala’s development was somewhat independent. Since Tamil, the oldest of the Dravidian languages, and Sinhala have coexisted for generations, it strongly influenced Sinhala’s phonology, grammar, and vocabulary.] கி மு 300 ஆம் அல்லது கி மு 200 ஆம் ஆண்டில் இருந்து சிங்கள பிரகிருத் அல்லது சிங்கள மொழிக்கு முன்னைய கல்வெட்டுக்கள் [Sinhalese Prakrit inscriptions] காணப்பட்டாலும், சிங்கள கல் வெட்டுக்கள் 6ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே, அதிகமாக 9ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே தான் காணப்படுகின்றன. தொடக்கத்தில் இரண்டு மூன்று வரிகளில் நன்கொடைகளைப் பற்றிய விபரங்களை தந்தன, ஆனால் 10ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கூடுதல் விளக்கமுள்ளதாக அமைந்ததாக காணப்படுகிறது [At the beginning the inscriptions had two or three short lines containing the information about donations made to bhikkhus. After the 10th century A.C these have become more descriptive because they contained appreciations made for some kings]. தமிழ் மொழியின் செல்வாக்கு இலங்கையில் பரந்து பட்டு இருந்தன என்பதற்கு தமிழ் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன. உதாரணமாக, காலி கல்வெட்டு, பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு, அனுராதபுரத்தில் உள்ள அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு, [இந்த மூன்று கல்வெட்டு படங்களும் இணைக்கப்பட்டுள்ளன] கேகாலை மாவட்டத்தில் உள்ள கோட்டகமைக் கல்வெட்டு போன்றவை சான்றாகும். இந்த கல்வெட்டுக்கள் எல்லாம் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வெளியே, இலங்கையின் வெவ்வேறு திக்குகளில் கண்டு எடுக்கப் பட்டவையும் ஆகும். காலி கல்வெட்டு என்பது 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும். பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு என்பது இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது. அதேபோல, அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது. கோட்டகமைக் கல்வெட்டு என்பது, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசன் ஒருவன் கம்பளை அரசின் மீதான போரொன்றில் பெற்ற வெற்றியைக் குறிக்க எழுதப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்ட ஒரு பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. இங்கே சொற்களிடையே இடைவெளி இல்லாமலும் அடிகள் முறையாகப் பிரிக்கப்படாமலும் உள்ளது. ஆய்வாளர்கள் இதைப் பின்வருமாறு ஒழுங்கு படுத்தியுள்ளர்கள். "சேது கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலதம்பாரித்தார் பொங்கொலிநீர் சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர் தங்கள்மடமாதர் தாம்" இதன் கருத்து "சிங்கையாரியனுக்கு அடங்காத சிங்களத் தலைவர்களுடைய மனைவிமார் கண்ணீர் விட்டுத் தமது நெற்றியில் இருந்த பொட்டை அழித்தனர்" என்பதாகும். இதில் இன்னும் ஒன்றையும் கவனிக்க, சிங்களப் பெண்கள் பொட்டு வைப்பதையும், கணவன் இறக்கும் பொழுது அதை அழிப்பாதையும் கூட காண்கிறோம். படம் 01: [1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும் / Dutch Reformed Church – Galle / The current Dutch Reformed Church was completed in 1755 and stands at the highest point of the Galle Fort./ One of the most unusual stones in the church was this one, written in Tamil. Unfortunately, it is quite worn and hard to make out, / Apparently this is the grave of the first Tamil convert to Christianity] படம் 02: [பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது / In the 12th Century CE, the Velakkaras set up a Tamil inscription were they promised to protect the Relic of the tooth of the Buddha at Polonnaruwa ] படம் 03: [அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது.] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 26 தொடரும் / Will follow https://www.facebook.com/groups/978753388866632/posts/31293597796955459/?
  16. "மூன்று கவிதைகள் / 08" 'உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்?' உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன் மன்னவனின் மடியிலே மயக்கம் வருவதேன் அன்ன நடையாளின் உடலெல்லாம் பூரிப்பதேன் மென்மையான தழுவல் இன்பம் பொழிய உன்னதமான காதல் வேறெங்கே காண்பேன்? பெண்ணொருத்தி சாய்ந்து படுத்த கோலம் கண்ணிரண்டும் பார்த்து மகிழ்ந்த நேரம் மண்ணில் பிறந்ததின் பயனைக் கண்டேன் விண்ணில் பறந்த உணர்வு கொண்டேன் எண்ணங்கள் எல்லாம் அவள் மட்டுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. 'மனதைத் தொடும் நினைவுகள்' மஞ்சள் வெயில் பூத்த வானமும் பனை மரங்களின் இனிய தாலாட்டும் பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும் எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும் அன்பும் பண்பும் துளிர் விடும்! வீட்டை விட்டு எட்டி நடந்தால் வானம் பாடிகளின் ஆட்டமும் வீதியோர பசுக்களின் கூட்டமும் காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும் வானுயர நிமிர்ந்த பனைமரமும் மனதைத் தொடும் நினைவுகளே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... 'சத்தியமே வெல்லும்' சத்தியமே வெல்லும் குழப்பம் மறையும் சந்தேகம் வேண்டாம் கடமையைச் செய்! சமத்துவம் வளர்ந்தால் நீதி தவறாது சத்தம் போட்டு உண்மைச் சொல்! சமூகம் இணைந்தால் நட்பு வளரும் சராசரி மனிதனுக்கும் சத்தியம் நிலைக்கும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "மூன்று கவிதைகள் / 08" https://www.facebook.com/groups/978753388866632/posts/31286359797679259/?
  17. கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர். அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வெள்ளைப் பருத்தி சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி உடன் ஒரு உள்ளூர் வாலிபனாக பார்வைக்கு தோன்றினாலும், அவரது முகம் இன்னும் வெளிநாட்டு நிலங்களின் புத்துணர்ச்சியை பறைசாற்றிக் கொண்டுதான் இருந்தது. அது அவனால் மறைக்க முடியவில்லை. மற்றும் அவனது இதயம், தன் தாய் தந்தை பிறந்த மண்ணின் வாசனையைத் தேடி அலைந்து கொண்டு இருந்தது. முதலில், அவன் தமிழ் கடவுள் முருகனின் முன் உண்மையாக, பக்தியாக, பண்பாடாக வழிபடத் தான் அங்கு வந்தான். என்றாலும் பட்டு, நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான, 'அலங்கார கந்தனின்' மீது கண்கள் பதிந்த பொழுது அவன் தடுமாறினான். அந்த தடுமாற்றத்தில் தான், கூட்டத்தில், தன் தோழிகளுடன் நின்றிருந்த ஒரு இளம் பெண், அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அழகைக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டான். கோயில் விளக்குகளின் கீழ் அவளுடைய சேலை மின்னியது, அவளுடைய கண்ணாடி வளையல்கள் ஒவ்வொரு அசைவிலும் ஒலித்தன, ஒளிர்ந்தன. அவளுடைய கரும் கூந்தலில் மல்லிகைப் பூக்கள் காற்றோடு நடனமாடின. மேளம் மற்றும் கோயில் மணிகளின் சத்தங்களுக்கு மேலே அவளுடைய சிரிப்பு மின்னியது. அருணுக்கு, அவள் வெறும் பெண் அல்ல - அவள் "அலங்காரக் காந்தை" யாகத் தோன்றினாள்! அன்று மாலை முதல், அருணின் உள்ளம் அவளை அமைதியாகத் தேடி அலையத் தொடங்கியது. அவன் இப்ப அலங்கார கந்தனுக்காக அல்ல, மாறாக அலங்கார காந்தைக்காகத் நல்லூர் வரத் தொடங்கினான். முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ கருணை காட்டாயோ !! திருவிழாவின் பத்தாம் நாள் இன்று. நல்லூரைச் சுற்றி பல பல குளிர்பானங்கள், வளையல்கள், சேலைகள் மற்றும் இனிப்புகளால் கடைகள் நிரம்பி இருந்தது. முருகன் வள்ளி தெய்வானையுடன் பொன் மஞ்சத்தில் வரும் ஆகஸ்ட் ஏழாம் நாள். இந்த 7 ஆம் எண் மதத்தில் - இஸ்லாத்தில் 7 வானங்கள், கிறிஸ்தவத்தில் 7 படைப்பின் நாட்கள், இந்து மதத்தில் 7 சக்கரங்கள் எனவும், இயற்கையில் - வாரத்தில் 7 நாட்கள், வானவில்லில் 7 வண்ணங்கள், 7 இசைக் குறிப்புகள் எனவும் மற்றும் வரலாற்றில் - உலகின் 7 அதிசயங்கள் எனவும் தோன்றுவதால், பல மேற்கத்திய மற்றும் கிழக்கு கலாச்சாரங்களில் 7 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அருண் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துபவன் அல்ல. என்றாலும், இன்று எனோ அது அவனுக்கு ஒரு உற்சாகம் கொடுத்தது. அந்த உற்சகம் கொடுத்த தைரியத்தில், அவன் அவளை அணுகி, "எக்ஸ்க்யூஸ் மீ [Excuse me]" என்றான். பச்சை நிற சுடிதாரில் பச்சைகிளி போல் போஸ் [Pose] கொடுத்துக் கொண்டு, வெள்ளைக் கொடி ஒன்று படர்ந்து, நுனியில் பூக்கள் மலர்ந்தது போல, கொண்டையில் மல்லிகை மாலை சூடிக்கொண்டு, தன் தோழிகளுடன் நின்ற அவள் கண்களில் ஒரு கவர்ச்சி தீபம் எரிந்து கொண்டு இருந்தது. அவள் சற்று தலை நிமிர்ந்து, மென்மையான வார்த்தைகளில் ”சொல்லுங்க… ‘ப்ளீஸ் [Please]’ .. என்ன வேணும்?” என்றாள். அந்த ‘ப்ளீஸ்’ அப்படி ஒரு மென்மை. சினிமா காதல் காட்சியாக… காடு முழுக்க ஆள் உயரக் கம்பி மத்தாப்புகளை நட்டுவைத்து ஒரே நேரத்தில் பற்ற வைத்தது போல் அவன் மனதுக்குள் அத்தனை பிரகாசம்.”ஐ’யம் [I am] அருண் ” என்றான். அவள் கண்களால் ஒரு வித வலை வீசியபடி நான் ”ஆரணி” என்றாள் தயங்கியபடி. பெண்களின் பெயரை அந்தப் பெண்களே உச்சரிக்கக் கேட்கும் போது அது இன்னும் அழகாகிவிடுகிறது! அது மட்டும் அல்ல, ஆலய வளவில், மாகாளி ; பார்வதி போன்ற இறைவிகளின் பெயரைக் கொண்ட அவளில், மேலும் ஒரு தனி விருப்பமும் நம்பிக்கையும் அவனுக்குத் தானாக மலர்ந்தது ”நாம் ரியோ [Rio] வுக்கு போகிறோம், நீங்களும் இணையலாம். ஆறுதலாக அங்கு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வோம், நீங்கள் பிரீ [free] என்றால்? எங்களுடன் வரலாம்" என்றாள், எந்த தயக்கமும் இன்றி, இதமான வரவேற்பு புன்னகையுடன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31263916889923550/?
  18. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 25 B பகுதி: 25 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] ரொபெர்ட் நொக்ஸ் கண்டி அரசனால் சிறை பிடிக்கப் பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின், சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்க வில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று எழுதி உள்ளார். ["To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV /page 322-323]. அது மட்டும் அல்ல, போர்த்துகீசியர்கள் இலங்கையில் 1505 ஆம் ஆண்டு தரையிறங்கிய காலத்திலும் கூட தமிழ் இலங்கையில் ஒரு பிரதான மொழியாக இருந்தது என்பதற்கு பல சான்றுகள் வரலாற்று ரீதியாக இருக்கின்றன. உதாரணமாக, கோட்டை அரசன் ஏழாம் புவனேகபாகு [the king of Kotte, Bhuvanehabahu VII / 1468 – 29 December 1550] போர்த்துகீசியர்களுடன் தமிழில் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டார். மேலும் கோட்டை அரசாட்சியில் நீதிமன்ற மொழியாக அன்று தமிழும் இருந்துள்ளது.[Aiyangar, S. Krishnaswami; de Silva, Simon; M. Senaveratna, John (1921). "The Overlordship of Ceylon in the Thirteenth, Fourteenth and Fifteenth Centuries"] . Kotte என்ற சொல்லே தமிழ் சொல் கோட்டை யில் இருந்து பெறப்பட்டதாகும்.[Somaratne, G.P.V. (1984). The Sri Lanka Archives, Volume 2. Department of National Archives. p. 1.] அதே போல, அறிஞர் H L செனிவிரட்ன [H L Seneviratne] பல கண்டி தலைவர்கள் [Kandyan chieftains] 1815 ஆண்டு மாநாட்டு [1815 Convention / treaty with the British] உடன்படிக்கைகள் தமிழில் கையெழுத்திட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஊகங்கள் மற்றும் அனுமானங்களைத் தவிர்த்து, தொல்பொருள் சான்றுகள் அல்லது கல்வெட்டியல் சான்றுகள் மூலம் [archeological / epigraphic facts / evidence] சிங்கள மொழி கி பி 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததாக எந்த தகவலும் நான் அறிந்த வரையில் இல்லை. சிங்கள மொழியில் ஏறக்குறைய 4000+ தமிழ் சொற்கள் இருப்பதை ஆதார பூர்வமாக எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் [Rev. S. Gnanapiragasam] சுட்டிக் கட்டி, சிங்கள மொழியில் இருந்து எல்லா தமிழ் சொற்களையும் கழற்றிவிட்டால், அங்கு சிங்கள மொழி என்று ஒன்றுமே இருக்காது என்கிறார். [If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language.] சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (An Etymological and comparative Lexion of the Tamil Language), இவரால் 1938-இல் வெளிப்படுத்தப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.1815 இல் கண்டி இராச்சியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்டது. அதன் பின் “கண்டி ஒப்பந்தம்” கண்டி அரச மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4.00க்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கண்டி திசாவைகள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அட்டவனை 10 அவர்களின் கையொப்பத்தை காட்டுகிறது. இதில் ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பலரின் கையெழுத்து தமிழும் மற்றும் இன்னும் அப்பொழுது பரிணாமம் அடைந்து வரும் சிங்களமும் கலந்து இருக்கின்றன. [Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphbets were used]. மேலும், டச்சு காலத்தில், கிபி 1656 முதல் கிபி 1796 வரை, இலங்கையில் அடிமட்ட சமூக உறவுகளில், சிங்களம் தமிழ் என்ற வேறுபாடுகள் காணப்படவில்லை என்றும், ஆனால் பல்வேறு சாதி பிரிவுகளே காணப்பட்டதாகவும் அருட்தந்தை வீ. பெர்னியோலா அடிகள் கூறுகிறார் [Vito Perniola, in observing the social relations at the grassroots level in the Dutch period of SriLanka, did not see "any racial distinction between Sinhala and Tamils," but "rather the division into various castes"]. கண்டியைத் தலை நகராகக்கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்த நாயக்கர் அரச மரபு [வம்சம்] எமக்கு எடுத்து கட்டுவது, அரசன் சிங்களவனாக இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் அப்பொழுதும் இலங்கையில் இருக்கவில்லை என்றும், ஆனால் புத்த மதத்திற்கு ஆதரவளிக்க மட்டுமே அங்கு வலியுறுத்தப்பட்டது என்பதாகும். [The longevity of the Nayakkar dynasty (1739-1815) in the kingdom of Kandy indicates that there was no requirement for the king to be Sinhalese,while his patronage to Buddhism was insisted upon]. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 25 C தொடரும் / Will follow https://www.facebook.com/groups/978753388866632/posts/31249173764731196/?
  19. "மூன்று கவிதைகள் / 07" 'வண்டியில மாமன் பொண்ணு' வண்டியில மாமன் பொண்ணு வாரார் கெறங்குறேன்டி ஒன்னழகில் நான் இன்று? பட்டுச்சரிகை என் கண்ணைக் குத்துது பருவ எழில் உடலை வாட்டுது பக்கத்தில் வந்தால் குறைந்தா போகும் ? கவலகொண்ட நெஞ்சம் கொஞ்சம் இங்கே கண்மணியே எந்தனுக்கு ஆறுதல் தாராயோ? கால்கள் என்ன இளவாழைத் தண்டுகளா? காத்திருக்க முடியலையே இறங்கி வாராயோ? காலம் போகிறதே கழுத்திலே தாலியேறாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................. 'விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்' விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும் களங்கமற்ற காதல் தடையின்றி மலரட்டும் இளநெஞ்சம் இரண்டும் மெதுவாகச் சேரட்டும் வளர்பிறையாக அன்பு நாள்தோறும் வளரட்டும்! சாளரம் திறக்கிறேன் விடியவிடிய வீசட்டும் அளவான புன்முறுவல் பாசத்தைக் கொட்டட்டும் ஈடில்லா உன்னழகு ஆசையைத் தூண்டட்டும் முடிவில்லா எம்முறவு நிரந்தரம் ஆகட்டும்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................... 'சீவி முடித்து சிங்காரித்து' சீவி முடித்து சிங்காரித்து கண்ணே, சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு, சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ! சித்திரம் சொல்லாத வனிதை நீயே, சீதை காணாத காதல் தருவேன்! கூவி அழைக்குது சிட்டுக் குருவி, தாவிப் போகுது அன்ன நடையில், தேவி அங்கே சுந்தரியைக் காண்கிறேன்! ஆவி பொருள் உடல் அனைத்தும், தூவி உன்னை மடியில் தாலாட்டுவேன்!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "மூன்று கவிதைகள் / 07" https://www.facebook.com/groups/978753388866632/posts/31203921829256390/?
  20. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 25 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 25 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?' சந்தமுக சிவாவுக்கு அடுத்தபடியாக யசலாலக்க தீசன் (Yassalalaka Tissa) தீபவம்சத்தின்படி எட்டு வருடங்களும் ஏழு மாதங்களும் மகாவம்சத்தின்படி ஏழு வருடங்களும் எட்டு மாதங்களும் ஆட்சி செய்தார்; வருடங்கள் மற்றும் மாதங்களின் எண்ணிக்கை, தீபவம்சத்தில் இருந்து மகாவம்சத்துக்கு போகும் பொழுது, ஆண்டு மாதமாகவும், மாதம் ஆண்டாகவும் ஒன்றுக்கொன்று மாற்றப் பட்டுள்ளது. திஸ்ஸ [Tissa] தனது சகோதரன் சந்தமுக சிவாவை ஒரு திருவிழா விளையாட்டில் கொன்றதாக மகாவம்சம் கூறுகிறது. பின்னர் சபா [மகாவம்சத்தில் சுபகராஜா / Sabah (Subharajah in the Mahavamsa)] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் ஒரு கதவுக் காவலாளியின் மகன். மகாவம்சத்தில் உள்ள இந்தக் கதவுக்காவலரைச் சுற்றிய ஒரு கதை, அரசனைப் பற்றியும் அதே ஒற்றுமையைக் கொண்ட ஒரு வேலைக்காரனைப் பற்றியும் பழங்காலத்தில் நிலவிய ஒரு கதையுடன் ஒத்துப் போகிறது. மகாவம்சம் 35-58 இன் படி சுபகராஜா ஒரு வள்ளி - விகாரை கட்டினார். மேலும் வள்ளி என்பது மிகவும் பொதுவான தமிழ்ப் பெண் பெயர். அதன் பின் வசபா [முதலாம் இலம்பகர்ண வம்ச மன்னனான வசபன் / Vasabha] என்ற அரசன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சம் அவரது வம்சாவளியைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மகாவம்சம் அவர் வடக்கு மாகாணத்திலிருந்தும் இலம்பகர்ண அரச குலத்திலிருந்தும் வந்தவர் என்று கூறுகிறது. வட மாகாணத்தை சேர்ந்தவர் என்பதால் அவரும் தமிழராக இருக்கலாம்? அவர் தனது மாமாவின் மனைவியை ராணியாகக் ஏற்றுக்கொண்டார். இவனுடைய ஆட்சி எல்லாளனுக்குப் பிறகு மிக நீண்டது ஆகும்; இருவருமே ஒரே கால ஆட்சியைக் கொண்ட தமிழர்களாகக் காணப்படுகிறது. என்றாலும், முன்பு நாம் பல சந்தேகங்களைக் சுட்டிக்காட்டியவாறு, எல்லாளனுக்குப் முந்தைய மன்னர்கள் எல்லோரும், எல்லாளன் உட்பட, கற்பனையான பாத்திரங்கள் போல்த் தெரிகிறது. மகாவம்சத்தின் படி, வசபா இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என்று ஒரு சோதிடரால் கூறப்பட்டதால், வசபா ஒரு பக்தியுள்ள பௌத்தரானார் என்றும் [அப்படி என்றால் முன்பு அவர் அல்லது இலம்பகர்ண வம்சம் அப்படி அல்ல என்று பொருள் படுகிறது, ஏனென்றால், இவருடன் தான் ஒரு புதிய வம்சம் ஆட்சிக்கு இலங்கைக்கு வந்தது என்பதால்] மற்றும் அவரது ஆயுளை நீட்டிக்கும் முயற்சியில் பல புண்ணிய செயல்களைச் செய்தார் என்றும் அங்கு கூறியிருப்பதால், இந்த மன்னனின் கதையில் உள்ள உண்மை சந்தேகத்திற்குரியது போல்த் தெரிகிறது? இவன் இலம்பகர்ண வம்சத்தைக் சேர்ந்தவன் என்றும் இலங்கையில் வட பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்த தனது மாமனாரின் கீழ் வேலை செய்து வந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. சோதிடரின் கணிப்பின்படி அரசனின் ஆட்சிக்காலத்தை பன்னிரெண்டு வருடங்களில் இருந்து நாற்பத்து நான்கு வருடங்களாக நீட்டிக்கும் அல்லது வாழ்நாளை நீட்டிக்கும் தீர்க்கதரிசனங்களும் அதை ஒட்டிய செயல்களும் உண்மையான வரலாறு அல்ல. எனவே மன்னனைப் பற்றி மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள கதைகள் கற்பனையானவை அல்லது அரசனே ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகக் கூட இருக்கலாம்? என்றாலும் மகாவம்சம் விவரிக்கும் இந்தக் கதைகளை தீபவம்சம் கொடுக்கவில்லை. எனவே மகாநாம தேரர் நிச்சயமாக ஒரு இலக்கியக் கலைஞர் அல்லது இன்றைய பேச்சுவழக்கில் ஒரு சொற்பொழிவாளர். வசபாவின் பெயரை வெஹெப் [Vehep] என்று இராசவலிய கூறுகிறது. வட்டகாமினி முதல் வசபா வரை பெரும்பாலும் தமிழ் மன்னர்கள் அல்லது அவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் என்று அறிய முடிகிறது. அனுராதபுரத்தில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த எல்லாளனை அடைவதற்கு 31 மன்னர்களை வென்று அதன் பின் தான் 32 ஆவதாக எல்லாளனை, துட்ட கைமுனு வென்றதாக மகாவம்சம் விவரிக்கிறது. அது மட்டும் அல்ல அவன் தனது போரில் இலட்ச்சக் கணக்கானவர்களை கொன்றதாக கூறுகிறான். இந்த தரவை வைத்து பார்க்கும் பொழுது அனுராத புரத்தையும் அதை சுற்றியும் பெரும் அளவான தமிழ் கிராமங்களும் தமிழர்களும் வாழ்ந்தது அத்தாட்சி படுத்தப் படுகிறது. அவர்கள் சிவனை வழிபட்டார்கள் என்பதும் தெரிகிறது. கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதி யீடாக ஹெள மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. அதன் பின் கி பி ஆறாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின், பிராகிருதம், பாளி, தமிழ் போன்ற மொழிகளையும் உள்வாங்கி சிங்கள மொழியாக முதல் முதல் வளர்ச்சி அடைந்தது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை ஆகும். அது மட்டும் அல்ல, வரலாற்று ரீதியாக, அனுராத புரத்தில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக, அதன் தொடர்ச்சியை. பதினேழாம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலும் வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயனின் "Historical Relation of Ceylon" என்ற அவரின் நூலிலும் காண்கிறோம். Part: 25 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Are the kings earlier to Elara, including Elara, fictional characters? Next to Candamukha Siva, Yasalala Tissa reigned for eight years and seven months as per the Dipavamsa and seven years and eight months as per the Mahavamsa; the numbers of years and months are interchanged. The Mahavamsa says that Tissa killed his brother Candamukha Siva in a festival sport. He is also the brother, as per the Mahavamsa, of Candamukha Siva, a Tamil. Then Sabah (Subharajah in the Mahavamsa) ruled for six years. He was the son of a doorkeeper. A story around this doorkeeper in the Mahavamsa is a very common thread in the olden times about king and a servant of same resemblance. Subharajah built a Valli-vihara as per the Mahavamsa 35-58, and Valli is a very common Tamil female name. Then a king by the name Vasabha ruled for forty-four years. The Dipavamsa is silent on his lineage, but the Mahavamsa says that he came from the Northern Province and of Lambakanna clan. He could also be a Tamil as he is from the Northern Province. He took his uncle’s wife as his queen. His reign is the longest after Elara; both could be Tamils with the same length of reigns. The kings earlier to Elara, including Elara, are fictional characters, and the king Vasabha is the king with the longest reign so far. However, the bona fide of this king is also in doubt, as there is a prophecy in the Mahavamsa about him. There are acts to lengthen the king’s length of reign from twelve years to forty-four years in accordance with the soothsayer’s prediction. Prophecies and acts to lengthen the lifetime are not real history. Either the tales given in the Mahavamsa about the king are fictional or the king himself is a fictional character. The Dipavamsa does not give this tales, which the Mahavamsa narrates. Mahanama is certainly a literary artist or a wordsmith in the present day parlance. The Rajavaliya gives the name of Vasabha as Vehep. After Vattagamani to Vasabha are mostly Tamil kings. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 25 B தொடரும் / Will follow https://www.facebook.com/groups/978753388866632/posts/31192237513758155/?
  21. "மூன்று கவிதைகள் / 06" 'இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே' இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே நன்று உணர்ந்து காதல் தேடாயோ ? அன்று படித்த சங்கஇலக்கிய கவிதையே நின்று எனக்கு அறிவுரை தாராயோ ? கூடல் இல்லாத வாழ்வு தொலையட்டுமே ஆடல் பாடல் இணைந்து மலரட்டுமே! அன்பு கொண்ட மங்கை கண்டு துன்பம் போக்கும் அணைப்பு அடையாயோ ? இன்பம் கொட்டும் அழகு வியந்து உன்னுடன் அவளை இரண்டறக் கலக்காயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. வெள்ளிப்பூக்கள்' வெள்ளிப்பூக்கள் அந்தி வானில் ஒளிர கள்ளம் இல்லாக் காதலர் தழுவ கொள்ளை இன்பம் ஆறாய் பாய்ந்ததே! அல்லிப்பூ நிலா ஒளியில் மலர ஒல்லி இடையாள் அருகில் நெருங்க சொல்ல முடியா இன்பம் பொழிந்ததே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .................................................. 'படிக்கப் படிக்க இன்பம் பெருகுகிறதே' படிக்கப் படிக்க இன்பம் பெருகுகிறதே கடிக்க கடிக்க போதை இழுக்கிறதே நடிக்க நடிக்க பொய் வளர்கிறதே! உண்மையை உணர்ந்து உலகத்தைப் படித்தால் மண்ணின் வாசனையில் உன்னை நிறுத்தினால் பண்பாடு நிலைத்து மகிழ்ச்சி மலருமே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "மூன்று கவிதைகள் / 06" https://www.facebook.com/groups/978753388866632/posts/31179991941649379/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.