Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல" / "Independence is not just a flag or a date"
"சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல" காலனித்துவ ஆட்சிக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கை இன்னும் கடினமான கேள்விகளைக் கேட்டு வருகிறது: பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? குழந்தைகள் பயத்திலிருந்து விடுபட்டுள்ளார்களா? நீதி சமமானதா? நிலம் திருப்பித் தரப்படுகிறதா? நினைவு கூறல் ஒரு குற்றமா? பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு - சுதந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது, நீதி தாமதமாகிறது, மற்றும் நல்லிணக்கம் நிபந்தனைக்குட்பட்டதாக உள்ளது. உண்மையான சுதந்திரம் தொடங்குவது: உண்மை அடக்கப்படாதபோது, சட்டம் ஆயுதமாகாதபோது, பயம் இல்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கும்போது. அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல - நிறைவேறாத விடுதலையின் நினைவூட்டல். — கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் "Independence is not just a flag or a date" 78 years after colonial rule, Sri Lanka is still asking hard questions: Are women safe? Are children free from fear? Is justice equal? Is land returned? Is memory a crime? For many—especially Tamil-speaking people— freedom remains selective, justice delayed, and reconciliation conditional. True independence begins when: truth is not silenced, law is not weaponised, and every citizen lives without fear. Until then, February 4th is not just a celebration— it is a reminder of unfinished freedom. — Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna துளி/DROP: 2012 ["சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல"] https://www.facebook.com/groups/978753388866632/posts/33616508844664331/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 96 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 96 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வாசபா - எல்லாளன் உடனான ஒரு ஒப்பீடு: தமிழ் மன்னரான எல்லாளன் 44 ஆண்டுகள் (கிமு 205–161) ஆட்சி செய்தான். அதேபோல, மன்னன் வாசபா கூட, 44 ஆண்டுகள் (கிபி 67–111) ஆட்சி செய்தான். அவர்களின் ஆட்சிக் காலங்களில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை சுவாரஸ்யமானது. எல்லாளன் ஒரு நீதியுள்ள ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார், அதே நேரத்தில் வாசபா நீர்ப்பாசனம் மற்றும் பௌத்த நிறுவனங்களுக்கு அளித்த பங்களிப்புகளுக்காக அறியப்பட்டார். விதி மற்றும் மத நன்மைகள்: மகாவம்சம் பெரும்பாலும் வரலாற்றுக் கதைகளில் புராணக் கூறுகளை உள்ளடக்கியது. நிகழ்வுகள் கர்மா மற்றும் தகுதியால் [karma and merit] ஏற்படுகிறது என்று கூறுகிறது. மதச் செயல்கள் காரணமாக வாசபாவின் ஆட்சிக்காலம் [அதனால் ஆயுட்காலமும்] 12 இல் இருந்து 44 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டது என்ற கருத்து ஒரு உண்மைக் கணக்கை விட ஒரு புராணக்கதையாகும். பண்டைய வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் புத்த சமய நம்பிக்கை மற்றும் புத்தரின் அருள் போன்றவற்றை வரலாற்றில் புகுத்தி, அதை பெருமை படுத்திக் காட்டிட புராணங்கள் அல்லது கதைகள் மூலம் முயலுவது ஒரு வழமையாக காண்கிறோம். ஆனால், புத்தர் இப்படியான செயல்களில் நம்பிக்கையற்றவர், வெறுக்கிறார் என்பது எனோ இவர்களுக்கு புரிவதில்லை? வாசபா அல்லது வசபனின் மகன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasika Tissa, also known as Vakunaha Tiss] என்பவன் பருவக் காளையாக வளர்ந்திருந்தான். வசபன் அவனுக்கு ஏற்ற மனைவியைத் தேடிக் கொண்டிருந்தான். பெண்களின் சுப லட்சனங்களை அறிந்தவர்கள் செங்கல் தொழிலாளியிடம் வளர்ந்து வரும் பெண்ணைப் பற்றி, அரசனிடம் வந்து சொன்னர்கள். அரசன் அவளை அழைத்து வர ஆளனுப்பினன். செங்கல் தொழிலாளி "இவள் ஒரு ராஜகுமாரி" என்று வசபனிடம் கூறினன். சுபகராஜனுடைய மகள் என்பதைக் கூறி அடையாளமாக ராஜ முத்திரையைக் காட்டினன். இது கேட்டு மகிழ்வடைந்த மன்னன் அவளைத் தன் மகனுக்கு மணம் செய்து வைத்தான் என்று அத்தியாயம் 35 கூறுகிறது. வங்கனாசிக தீசனும் அவனது மனைவி, பின்னர் மகா மாதா [Mahamatta] என்று அழைக்கப்பட்டவளும் தமிழர்களாக இருக்கலாம்? இருப்பினும், வங்கனாசிக தீசன் மற்றும் அவரது மனைவி மகா மாதா இருவரும் தமிழர்கள் என்ற கூற்றைப் பொறுத்தவரை, இதை முழுமையாக ஆதரிக்க வலுவான வரலாற்று ஆதாரங்கள் குறைவு. நாளாகமங்கள் முதன்மையாக மன்னர்களின் அரசியல் மற்றும் மத அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன மற்றும் அவர்களின் இன தோற்றம் பற்றிய வரையறுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே வழங்குகின்றன. எனினும் அவர்களின் பெயரின் அமைப்பு, அவர்கள் வாழ்ந்த இடம், மற்றும் அவர்களின் செயல், உதாரணமாக விகாரைக்கு 'வள்ளி விகாரை' என்ற பெயரிடுதல் போன்றவை சான்றுகளாகின்றன. பண்டைய காலக் கதைகளின் படி, மன்னர் வாசபாவுக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் அவரது வம்சாவளியைப் பற்றிய கூடுதல் தரவுகளைக் வழங்குகின்றன. குருநாகல் மாவட்டத்தில் உள்ள தம்மன்னாவாவில், [Tammannava Inscription (Kurunegala District)] பிராமி எழுத்துக்களில் இரண்டாம் நூற்றாண்டின் பாறைக் கல்வெட்டு, தூதாக - மகாராஜா [Dutaga - Maharaja] என்ற ஆட்சியாளரைக் குறிக்கிறது, அவர் "பெரிய மன்னன் வஹாபா " [Vahaba] வின் (வாசபா) மகனாக அடையாளம் காணப்படுகிறார். மொனராகலா மாவட்டத்தின் புத்தலாவில் உள்ள ஹபேசாவில் உள்ள மற்றொரு கல்வெட்டு [Habessa Inscription (Buttala, Monaragala District)] , வாசபாவின் பேரனும் மன்னன் உத்தராவின் [King Uttara] மகனுமான நாகா [Naga] என்ற உப-ராஜாவைக் [துணை அரசனை] குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டுகள் வரலாற்றாசிரியர் பரணவிதான (1969) வாசபாவுக்கு மூன்று மகன்கள் இருந்ததாகக் கூற வழிவகுத்தன: தீசன் (வங்கனாசிக தீசன்), தூதாக மற்றும் உத்தரா. வாசபாவின் மரணத்தைத் தொடர்ந்து, இராச்சியம் இந்த மூவருக்கும் இடையில் பிரிக்கப்பட்டது என்றும் தீசன் தலைநகரான அனுராதபுரத்தை ஆட்சி செய்தான் என்றும்; தூதாக குருநாகல் பகுதியை ஆட்சி செய்தான் என்றும்; உத்தரா ருஹுணாவை ஆட்சி செய்தான் என்றும் முடிவு செய்தார். இந்தக் கோட்பாடு, வாசபாவின் மரணத்திற்குப் பிறகு, அவனது மகன்கள் தந்தையிடமிருந்து மகனுக்கு என்ற கடுமையான வாரிசுரிமையை, மற்ற எல்லா இலங்கை அரசுகளிலும் பின் பற்றியது போல பின்பற்றாமல், அதற்குப் பதிலாக மூவரும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்ற பரணவிதானவின் கருத்து, மற்றும் பாரம்பரிய நாளாகமங்கள் (மகாவம்சம், தீபவம்சம் போன்றவை) தூதாக மற்றும் உத்தராவைப் பற்றிக் குறிப்பிடாததாலும் உலகளவில் அவரின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால், சில வரலாற்றாசிரியர்கள் கல்வெட்டுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மன்னர்களைக் காட்டிலும், பிராந்திய ஆட்சியாளர்கள் அல்லது உள்ளூர் இளவரசர்களைக் குறிக்கலாம் என்று வாதிடுகின்றனர். Part: 96 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Vannakatissa was Vasabha’s son and the king was looking for a suitable marriage partner for him. By another storey in the chapter 35, Vannakatissa is happened to marry the daughter of the previous king Subharajah. The Husband Vannakatissa and the wife, later Mahamatta, are both Tamils. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 97 தொடரும் / Will follow துளி/DROP: 2010 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 96 https://www.facebook.com/groups/978753388866632/posts/33615883958060153/?
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 7 🌙 பாகம் 07 – மேகங்களைத் தொட்ட கோபுரம் (Palm Tower – பாம் கோபுரம்) துபாயில் காலை சூரியன் வானத்தில் ஒரு தங்க முத்துப் போல உதித்தது. தாத்தா மற்றும் மூன்று பேரன்களும் ஒரு புதிய சாகசத்திற்காக புறப்பட்டபோது காற்று மென்மையாக, சிறு வெப்பத்துடனும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் வீசியது. இன்று அவர்கள் மூச்சடைக்க வைக்கும் காட்சிகள் மற்றும் மேகங்களுக்கு மத்தியில் நடப்பது போன்ற உணர்வைத் தரக்கூடிய ஒரு இடத்துக்கு பயணிக்க முடிவு செய்திருந்தார்கள். தீவின் மையப்பகுதியில் அழகாக உயர்ந்து நிற்கும் பாம் கோபுரத்தை, நிலன் அவர்களின் கார் சாளரத்தின் ஊடாக தூரத்திலேயே பார்த்தான். அதன் தங்கக் கண்ணாடிச் சுவர்கள் [golden glass walls], சூரிய ஒளியை பிரதிபலித்து, கடலின் மேல் மிதக்கும் பொற்கலன் போல் தோன்ற வைத்தது. “தாத்தா, பாருங்க! இது தண்ணீரின் மேல் கட்டப்பட்ட கோபுரம் மாதிரி இருக்கு!” என்று நிலன் ஆச்சரியமாய் சொன்னான். திரேன் மகிழ்ச்சியுடன், கண்கள் விரிந்து தலையசைத்தான். “மேலே இருந்து பார்த்தால், பாம் வடிவிலான முழு தீவையும் நாம் உண்மையில் பார்க்க முடியுமா?” தாத்தா புன்னகையுடன், “ஓ ஆமாம், பசங்களா. இன்று, கற்பனை எப்படி நிஜமாகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள்.” என்றார். அவர்கள் பாம் டவரில் [Palm Tower] அடியெடுத்து வைத்ததும், மென்மையான இசை காற்றை நிரப்பியது. லிஃப்ட் [elevator or lift] கதவுகள் மூடப்பட்டன, மேலும் அவை உயரத் தொடங்கியதும் விளக்குகள் மங்கின - 10 ஆவது மாடி, 20, 30... இறுதியில் 52 ஆவது மாடி – பாம் கோபுரத்தில் உள்ள காட்சிகள் பார்க்கும் தளத்துக்கு ['The View at The Palm'] அடைந்தனர். அவர்கள் அங்கு அடைய, கதவுகள் திறக்கப்பட்டன, தாத்தாவும் மூன்று பேரன்களும் வானத் தளத்தில் [ஸ்கைடெக்கில் / skydeck] இறங்கினர். ஒரு மென்மையான காற்று அவர்களை வரவேற்றது. அவர்கள் இதுவரை கண்டிராத ஒரு காட்சி அவர்கள் முன் விரிந்தது - முழு பாம் ஜுமேராவும் [Palm Jumeirah], அதன் இலைகளும் வட்டங்களும் [பனங்காய் வடிவில்] நீலக் கடலில் [turquoise sea] மிதக்கும் ஒரு பெரிய பாம் மரத்தைப் [Palm tree] போல சரியான வடிவத்தில் இருந்தன. பாம் ஜுமேரா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் உருவாக்கிய ஒரு செயற்கைத் தீவு ஆகும். பாம் ஜுமேரா தீவின் கட்டுமானம் 2001 ம் ஆண்டு தொடங்கியது. இத்தீவை 94.000.000 m3 மணலையும் ஏழு மில்லியன் டன் பாறைகளையும் கொண்டு உருவாக்கினார்கள். “விமானத்திலிருந்து கீழே பார்ப்பது போல் இருக்கிறது!” என்று திரேன் கிசுகிசுத்தான். நிலன் மூச்சு விடாமல் கண்ணாடிச் சுவரில் கைகளை அழுத்தினான். “எனக்கு அட்லாண்டிஸ் ஹோட்டல் [Atlantis Hotel] தெரியுது ... கடற்கரைகள் கூட!” என்று ஒரு போடு போட்டான். குட்டி ஆரின் வானத்தை நோக்கி தன் சின்னக் கையை நீட்டி, மிதக்கும் மேகங்களைப் பார்த்து சிரித்தான். தாத்தா அவனைத் தூக்கி, மெதுவாகச் சொன்னார், “என் குட்டியே ... பார் கீழே, மேலிருந்து நீ பார்க்கும் போது உலகம் மிகவும் அமைதியாகத் தெரிகிறது இல்லையா ?.” என்று கேட்டார். அவர்கள் நால்வரும் மேகங்களில் தொங்கும் பாலமான, கண்ணாடி வான் நடைபாதையில் [ஸ்கைவாக்கில் / skywalk] கால் வைத்தனர் - அது ஒளிபுகும் கண்ணாடி பலகைகளால் [transparent glass panels] ஆன ஒரு பாலம் ஆகும். நிலன் ஒரு கணம் தயங்கினாலும், பின் கீழே சிறிதாக தெரிந்த சாலைகளையும் கார்களையும், தாத்தாவுடன் பார்த்தான். “கவலைப்படாதே, நிலன்,” தாத்தா அவனின் முதுகைத் தட்டி மெதுவாகச் சொன்னார். “அது வலிமையானது - நம் தைரியத்தைப் போலவே அதுவும் வலிமையானது.” என்றார். அவர் தனது பேரனின் கையைப் பிடித்தார், இருவரும் சேர்ந்து கண்ணாடி பாலத்தில் முன்னேறினர். என்றாலும் திரேன் தைரியமாக தனியாக சிரித்தபடி தாத்தாவை பின் தொடர்ந்தான். அவர்கள் அடியடியாக நகர்ந்தபோது கண்ணாடி கீழே மின்னியது; நீலக் கடல் அதன் அடியில் வைரம் போல ஜொலித்தது. கடற்பறவைகள் [அல்லது கடற்காகம் / Seagulls] தூரத்தில் வானில் பறந்து சென்றன. சூரிய ஒளியில் அவற்றின் சிறகுகள் வெண்மையாக மின்னின. பூமிக்கும் வானத்துக்கும் இடையில் பாதி தூரத்தில், தாத்தாவும் மூன்று பேரன்களும் ஒரு கனவில் நடந்து செல்வது போல் - அது அவர்களுக்கு இருந்தது. “தாத்தா,” என்று, தாத்தாவின் பார்வையைத் தன்மேல் பதித்து, “மேகங்களுக்கு கதவுகள் இருந்தால், இது அவற்றில் ஒன்றாக இருக்கும்!” என்று திரேன் கூறினான். தாத்தா மெதுவாகச் சிரித்து, “ஆம், இன்று, நாங்கள் அதைத் திறந்துவிட்டோம்." என்று ஒருபடி மேலே போனார். அவர்கள் தொலைநோக்கிகள் அமைந்த பார்வையிடும் பகுதிக்குச் சென்றனர், அங்கு ஒரு வழிகாட்டி பாம் ஜுமேரா [Palm Jumeirah] தீவு எப்படி உருவானது என்று விளக்கினார் - கடலில் மணலைக் கொண்டு, பாறையை கொண்டு மனித கற்பனை மற்றும் தொழில்நுட்பத்துடன் வடித்த அற்புதம் அது - 🌴பாம் மரத்தை போல் உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் கதை இதுதான் என்றார்! "ஒரு காலத்தில், இது வெறும் கடல் - ஆனால் யாரோ கடலையே வடிவமைக்க கனவு கண்டார்கள். இது கனவுகளின் மரம் என்று கூட கூறலாம் " தாத்தா, காட்சிகளை உன்னிப்பாக பார்த்துக்கொண்டே கூறினார். நிலன் ஒரு கணம் சற்று யோசித்துவிட்டு, "நாங்கள் மணல் கோட்டைகளை எப்படி கட்டுகிறோம் என்பது போல - ஆனால் இன்னும் பெரியது." என்றான் குறும்பாக. "சரியாகச் சொன்னாய், பாம் மர கோபுரம் உலகின் மிகப்பெரிய மணல் கோட்டை [sandcastle] என்று தாத்தா சிரித்தார். அதன் பின் அவர்கள், அங்கிருந்த வான் கஃபேக்கு [🍹Sky Café] போனார்கள். அங்கு சிறுவர்கள் ஜன்னல் ஓரமாக அமர்ந்து குளிரான பழச்சாறுடன் குரோசண்ட்களை [fruit juice and croissants] சுவைத்தனர். அப்பொழுது அங்கே, கண்ணாடி வழியாக சூரிய ஒளி உள்ளே வந்து, தரையில் மேகங்களின் மென்மையான பிரதிபலிப்புகளை வீசியது. ஆரின் கடந்து செல்லும் ஒவ்வொரு கடற்பறவைக்கும் கைதட்டினான். அதே நேரத்தில் நிலன், தான் பார்க்கும் 'நீல நீர் மற்றும் வெள்ளை படகுகளால் சூழப்பட்ட ஒரு பனை [பாம்மர] வடிவ தீவை' வரைய முயன்றான். திரேன் அதன் மேலே சிறிய நட்சத்திரங்களைத் தீட்டி, "இரவில் இப்படித்தான் இருக்கும்" என்று கூறினான். தாத்தா மெதுவாகத் தேநீர் அருந்திக்கொண்டு கீழே பார்த்து, "தெரிகிறதா, சிறுவர்களே? இங்கிருந்து, உலகம் ஒன்றுபட்டதாகத் தெரிகிறது - கடல், நிலம் மற்றும் வானம். எல்லாம் நம்மைப் போலவே இணைக்கப்பட்டுள்ளது." என்றார். 🌅மாலை நேரம் மெதுவாக மறைந்துகொண்டு இருந்தது. வானம் சிகப்பு, ஆரஞ்சு, தங்க நிறங்களால் பூசப்பட்டது. கோபுரத்தின் கண்ணாடிச் சுவர்கள் மினுமினுக்க, கீழே நகரத்தின் விளக்குகள் நட்சத்திரங்களைப் போல மின்னின. “தாத்தா,” நிலன் மெல்லச் சொன்னான், “நாம் மேகங்களில் இருக்கிறோம் போலிருக்கிறது.” தாத்தா தன் தலையை அசைத்து, கைகளை அவர்களின் தோள்களில் வைத்தார். “ஆம், என் குட்டிகளே. ஆனால் நினைவில் கொள்க — கீழே இறங்கினாலும், இந்த மேகங்கள் உங்கள் உள்ளத்தில் என்றும் இருக்கும்.” அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று சூரியன் கடலில் மறையும் அற்புதக் காட்சியைப் பார்த்து, தமது அன்றைய நாளை உண்மையிலேயே வானத்தைத் தொட்ட நாளாக நினைவுகூர்ந்தனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 08 தொடரும் துளி/DROP: 2009 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 7 https://www.facebook.com/groups/978753388866632/posts/33615262391455643/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 95 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 95 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 35: மகாதாதிக மகாநாகனுடைய [Mahadathika Mahanaga] மரணத்துக்குப் பின்பு அவனுடைய மகன் அமந்தகாமினி அபயன் [ Amandagamani Abhaya] ஒன்பது வருடம், எட்டு மாத காலத்துக்கு ஆட்சி செய்தான். அவரது ஆட்சிக் காலத்தில் தீவு முழுவதும் உயிர்க் கொலை கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். எல்லா இடங்களிலும் திராட்சைக் கொடிகளைப் பயிரிட்டான். அவரது தம்பி கனிராசனு தீசன் [கனிராஜனு திஸ்ஸன் / Kanirajanu Tissa] அமந்தகாமினி அபயனைக் கொன்று மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அமந்தகாமினி அபயனின் மகன் சூலபாயன் [Chulabhaya] கனிராசனு தீசன் இறந்த பிறகு ஒரு வருடம் ஆட்சி செய்தான். சூலபாயனின் மரணத்திற்குப் பிறகு அவனது தங்கை சிவாலி [Sivali] நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள் . அமந்தகாமினி அபயனின் மருமகன் இளநாகன் [இளநாகன் என்பது ஒரு தமிழ்ப் பெயர் / Ilanaga, also known as Elunna] சிவாலியை அரியணையிலிருந்து இறக்கி ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் மூன்று ஆண்டுகள் இடைக்கால ஆட்சி உள்ளது, ஆனால் தீபவம்சத்தில் இல்லை. ஏனெனில் முப்பத்தைந்தாவது அத்தியாயத்தின் 16 முதல் 44 வரையிலான வசனங்களில் ஒரு கற்பனையான நம்பமுடியாத கதை அவிழ்த்து விடப்பட்டுள்ளது. இளநாகனின் மரணத்திற்குப் பிறகு, அவனது மகன் சந்தமுகன் சிவன் (Chandamukha Siva / ஒரு தமிழ்ப் பெயர்) எட்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தான். சந்தமுகன் சிவன் ஒரு விகாரை கட்டினான், மேலும் அவனது மனைவி தமிழாதேவி [தமிழ் தேவி / Damiladevi] கிராமத்திலிருந்து தனது சொந்த வருவாயை விகாரைக்கு வழங்கினார். அந்தக் காலத்தில் தமிழர்களும் பௌத்தர்களாகத்தான் இருந்தார்கள். இதில் நீங்கள் கவனிக்கக்கூடிய மற்றொன்று சந்தமுகன் சிவனின் மனைவியின் பெயர் கூட தமிழ்தேவி! கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப் பட்ட கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 – ஆகத்து 25, 79 கிபி) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன் சந்தமுகன் சிவனின் [சந்திரமுக சிவாவின்] ஆட்சியைப் பற்றி பதிந்துள்ளார். முழு விபரத்துடன் விரிவாக ஏற்கனவே தரப்பட்டுள்ளது. மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது என்பதையும் கவனிக்க. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த [சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததைக் காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது, மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது. சந்தமுகன் சிவனின் தம்பி யசலாலக்க தீசன் [Yassalalaka Tissa] மன்னனைக் கொன்று ஏழு ஆண்டுகள் எட்டு மாதங்கள் ஆட்சி செய்தான். 51 முதல் 56 வரையிலான வசனங்களில் ஒரு வழக்கமான பழைய கதை ஒன்று சொல்லப்படுகிறது. இதன் விளைவாக தமிழர்களிடையே இப்போதும் பொதுவான புனைப்பெயரான 'சுபா' [Subha] என்ற பெயருடன் ஒரு வாயில் காவலாளி மன்னனானான். அவன் ராஜாவின் சாயலைக் கொண்டிருந்தான், அதையே ராஜாவைக் கொல்லவும் பயன்படுத்தினான். அவன் சுபகராஜன் அல்லது சுபா [Subharajah] என்ற பெயருடன் ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் வள்ளி விகாரை [Valli Vihara] என்ற பெயருடன் ஒரு விகாரையைக் கட்டினான். 'வள்ளி' என்பது பண்டைய காலங்களிலும் இன்றும் ஒரு பொதுவான தமிழ் பெயர். இங்கே, தமிழ் மன்னர் தமிழ் பெயருடன் ஒரு விகாரையைக் கட்டினார். பின்னர் 59 முதல் 70 வரையிலான வசனங்களில் மற்றொரு கதை கூறப்பட்டுள்ளது. இந்த கதையின்படி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வாசபா அல்லது வசபன் [Vasabha] நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். வாசபா ஒரு தமிழராக இருக்க வேண்டும். இதை எல்லாளனுடைய [Elara] ஆட்சிக் காலத்தின் நீளத்துடன் ஒப்பிடுக. 71 முதல் 100 வரையிலான வசனங்களில், விதியால் மன்னர் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ வேண்டியிருந்தது என்றும், ஆனால் புத்தருக்கும் துறவிகளுக்கும் புண்ணியங்களைச் செய்ததன் மூலம் அதை நாற்பத்து நான்கு ஆண்டுகளாக நீட்டிக்க முடிந்தது என்றும் மற்றொரு கதையில் கூறப்பட்டுள்ளது. எனவே, இப்படியான இந்த கதையை வரலாறாகக் கருத வேண்டியதில்லை. வாசபா அல்லது வசபனின் அடையாளம்: வாசபா ஒரு தமிழர் என்று மகாவம்சம் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அவர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது நியாயமான ஊகங்களை எழுப்புகிறது. அனுராதபுரத்தின் பல ஆரம்பகால ஆட்சியாளர்கள் தென்னிந்தியாவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மேலும் இப்பகுதியில் தமிழ் செல்வாக்கு இருந்ததையும் நிராகரிக்க முடியாது. Part: 95 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 35: After Mahadathika’s death, his son Amandagamani reigned for nine years and eight months. Killing was prohibited during his reign. His younger brother Kanirajanutissa killed the king Amandagamani, and ruled for three years. Amandagamani’s son Culabhaya ruled for one year after the death of Kanirajanutissa. After the death of Culabhaya his younger sister Sivali ruled for four months. Amandagamani’s nephew Ilanaga (Ilanaga is a Tamil name) dethroned Sivali and ruled for six years. There is an interregnum of three years in the Mahavamsa, but not in the Dipavamsa. This is because an invented unbelievable storey spun in the verses 16 to 44 of the Chapter thirty-five. After the death of Ilanaga, his son Candamuga Siva (a Tamil name) reigned for eight years and seven months. Candamuga Siva built a Vihara and his wife, known as Damiladevi bestowed her own revenues from the village to the Vihara. Tamils must be Buddhists too in those days. Candamuga Siva’s younger brother Yasalakatissa killed the king and ruled seven years and eight months. A usual old storey is told in the verses 51 to 56, and in the process a gate watchman with the name Subha, quite a common nick name even now among the Tamils, became the king. He had the semblance of the king and used that to kill the king. He ruled six years with the name Subharajah. He built a Vihara with the name Valli Vihara. Valli is a common Tamil name in ancient times as well as now. Tamil king built a Vihara with the Tamil name. Then another storey is told in the verses from 59 to 70. As per this storey, Vasabha from the Northern Province ruled for forty-four years. Vasabha must be a Damila. Compare this with the Elara’s length of rule. Another storey is told in the verses from 71 to 100 that the king was to live only twelve more years by fate, but he was able to extend it to forty-four years by doing meritorious works to the Buddha and to monks. This storey need not be considered as history! நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 96 தொடரும் / Will follow துளி/DROP: 2008 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 95 https://www.facebook.com/groups/978753388866632/posts/33604232895891926/?
-
"மூன்று கவிதைகள் / 22"
"மூன்று கவிதைகள் / 22" மின்னலாய் ஒரு பின்னல் [சாந்தம்/ கோபம்/ பொறுமை/ மகிழ்ச்சி] சாந்தம் நிறைந்த விழிகள் எனோ கோபம் கொண்டு பார்க்குதே பொறுமை தொலைத்து ஏங்குதே மகிழ்ச்சி தேடி என்னை அழைக்குதே [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................. 'காதல் கோட்டைகள்' காதல் கோட்டைகள் அன்பில் கட்டியது காதலன் காதலி சேர்ந்து அமைத்தது காலம் முழுவதும் நினைவில் நிற்குதே! ஆசையும் பாசமும் நிறுவிய அரண்மனை ஆரவாரம் இல்லா உறவின் கனவு ஆழ்ந்த நட்பின் நிரந்தர அடையாளமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................ புகைப்படக் கவிதை பாலைவனம் எம்மை ஒட்டகத்தில் ஏற்றிட, மாலைக் கதிரவன் உடலைத் தீண்ட, அலை அலையாக இன்பம் பொங்க, சோலைவனம் மனதில் துளிர் விட்டது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... துளி/DROP: 2007 ["மூன்று கவிதைகள் / 22" https://www.facebook.com/groups/978753388866632/posts/33602025986112617/?
-
🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023)
நன்றிகள் , சிறு இடைவெளியின் பின் மீண்டும் இணைக்கிறேன்
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 94B வடக்கு மற்றும் மேற்கு இலங்கையின் கடலோர மாவட்டங்கள், குறிப்பாக கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண தீபகற்பத்தில், நாக மக்கள் பாம்பு வழிபாட்டாளர்களாக, இலங்கையின் நான்கு பழங்குடியின மக்களில் ஒருவராக, நாகதீபம் அல்லது நாகநாட்டை ஆண்டனர். தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கேரளப் பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வழங்குகின்றன. மணிமேகலை மற்றும் மகாவம்சம் மற்றும் ராமாயணத்தின் படி, நாகர்கள் [Nagas] இலங்கையில் இயக்கர் [யக்கா], இராட்சதர் [ரக்ஷ] மற்றும் தேவர் [Yakkha, Raksha and Deva] இடையே வாழ்ந்தனர் என்று கூறுகிறது. மேலும் வரலாற்று மற்றும் இலக்கிய ஆதாரங்கள், இலங்கையில் உள்ள நாகதீபா (நாக நாடு), அதாவது, இன்றைய யாழ்ப்பாண தீபகற்பம், மன்னார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாகர் மக்கள் மேலாதிக்க ஆட்சியாளர்களாக இருந்தனர். அவர்கள் கடல் பயணம், வர்த்தகம் மற்றும் பாம்பு வழிபாட்டிற்கு பெயர் பெற்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக இருந்தனர். அத்துடன், மணிமேகலை, மகாவம்சம், ராமாயணம் மற்றும் புராணங்கள் போன்ற வரலாற்று மற்றும் இலக்கிய ஆதாரங்கள், நாகதீபம் அவர்களின் தாயகம் மற்றும் இராச்சியம் என்பதைக் குறிக்கின்றன. பண்டைய தமிழ் சங்க இலக்கியங்கள் நாக ஆட்சியாளர்களை "நாக மன்னர்கள்" (நாகர் அரசர்கள்) என்று குறிப்பிடுகின்றன, அவர்கள் தென்னிந்தியாவின் தமிழ் இராச்சியங்களுடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர்.மற்ற பழங்குடி குழுக்கள் (இயக்கர்கள், இராட்சதர்கள் மற்றும் தேவர்கள்) இலங்கையின் பிற பகுதிகளில் இருந்தனர், ஆனால் நாகதீபத்தை ஆட்சி செய்யவில்லை என்பதே உண்மையாகும். உதாரணமாக, இயக்கர்கள் (யக்கர்) முக்கியமாக இலங்கையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காணப்பட்டனர். அதேபோல, இந்து புராணங்களில் இராட்சதர்கள் (ராட்சதர்) ராவணனின் இராச்சியத்துடன் (லங்கா) தொடர்புடையவர்கள், இது மத்திய அல்லது தெற்கு பிராந்தியத்தில் இருந்திருக்கலாம்? தேவர்கள் (தேவர்) மிகவும் புராணக் கதைகள், பெரும்பாலும் ஆளும் பழங்குடியினருடன் அல்ல, ஆன்மீக அல்லது தெய்வீக மனிதர்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது. இலங்கையில் நாக ஆட்சிக்கான சான்றுகள் எவை என்று பார்த்தால், மகாவம்சத்தில் இரண்டு நாக மன்னர்களான குலோதரன் மற்றும் மகோதரன் [Chulodara and Mahodara] இடையே ஏற்பட்ட ஒரு சர்ச்சையைத் தீர்க்க பகவான் புத்தர் நாகதீபத்திற்கு விஜயம் செய்ததாகக் குறிப்பிடுவதையும், மணிமேகலையில் (ஒரு தமிழ் காவியம்) நாக நாட்டை தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகக் குறிப்பிடுவதும், இது மேலும் இலங்கையில் அவர்களின் இருப்பைக் காட்டுவதும், தொல்பொருள் ரீதியாக, நாகர்கள் கருப்பொருள் கொண்ட சிற்பங்கள், நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்ற தொல்பொருள் சான்றுகள், இலங்கையின் வடக்கில் நாகர்கள் குறிப்பிடத்தக்க இருப்பையும் செல்வாக்கையும் கொண்டிருந்தனர் என்ற கூற்றை ஆதரிப்பதையும் கூறலாம். அதுமட்டும் அல்ல, ராமாயணத்தின் படி, இந்திரஜித், நாக மன்னன் சேஷாவின் (ஆதி ஷேஷா) மகள் சுலோச்சனாவை மணந்தார் என்று கூறுகிறது. இந்த புராணக்கதை கிமு 500 முதல் கிமு 100 வரைக்குள் எழுதப்பட்டது என்று அறிய வருகிறது. இருப்பினும், சில அறிஞர்கள் அதன் வாய்வழி மரபுகள் மிகவும் முன்னதாகவே, ஒருவேளை கிமு 1500 அல்லது அதற்கு முந்தையதாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இது நாகர்களின் பழமையை எடுத்துக் கூறுகிறது. மேலும் வரலாற்றுப் பதிவுகளும் மகாவம்சம் போன்ற பௌத்த நாளேடுகளும், நாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பல மன்னர்கள் இராசரட்டை [அனுராதபுர] இராச்சியத்தை வெவ்வேறு காலங்களில் ஆட்சி செய்ததைக் குறிக்கின்றன. இது பண்டைய இலங்கையில் நாகர்களின் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் எடுத்துக் காட்டுகிறது. பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரும் "பண்டைய சிலோன்" [H. Parker, a British historian and author of "Ancient Ceylon" ] ஆசிரியருமான எச். பார்க்கர், நாகாவை கேரள நாயர்களின் ஒரு கிளையாகக் கருதுகிறார். கலித்தொகை போன்ற ஆரம்பகால தமிழ் இலக்கியப் படைப்புகள், மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர் மற்றும் பரதவர் [Maravar, Eyinar, Oliar, Oviar, Aruvalur and Parathavar] போன்ற பல நாக பழங்குடியினர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் தமிழ் சங்க காலத்தில், பாண்டிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்து அங்கு வாழத் தொடங்கியதாகக் குறிப்பிடுகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. நாக மக்கள் இலங்கையின் வடக்கு பகுதியை நாக நாடு (நாகர்நாடு) என்று அழைக்கப்பட்ட ஒரு செழிப்பான நாக அரசு உருவாக்கினர். இது 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது. இதற்கு வரலாற்று ஆதாரங்ககளாக, கி.மு 200 ஆண்டு தமிழ் பிரம்மி கல்வெட்டுகளில் நாக நகரம் (Naka Nakar) என்ற இடம் குறிப்பிடப்படுகிறது. இது இன்றைய கதிரமலை (கந்தரோடை, யாழ்ப்பாணம்) ஆக இருக்கலாம்? மேலும் கண்டி யாழ்ப்பாண நெடுஞ்சாலையில் இயக்கச்சி சந்தியில் இருந்து நேரே குறுக்காக 6கி மீ தூரத்தில் அமைந்துள்ள உடுத்துறை இயக்கர், நாகர் காலத்து தொண்மையை கொண்ட ஊர்களில் ஒன்றாக திகழ்கிறது. உடுத்துறையில் கி .பி 2ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட, பழைய செம்பு தமிழி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவும் “நாக பூமி” (Naka Bumi) என்று கூறுகிறது. கிரேக்க பூகோளவியலாளர் தொலெமி அல்லது தாலமி (Ptolemy, 1ம் நூற்றாண்டு கி பி) தனது இலங்கைக்கான வரைபடத்தில் நாகதிபோய் (Nagadiboi) என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக, சிலப்பதிகாரம் (1ம் நூற்றாண்டு கி பி) மற்றும் மணிமேகலை (3ம் நூற்றாண்டு கி பி) ஆகிய நூல்கள் நாக நாடு பற்றி குறிப்பிடுகின்றன. இது சோழர், பாண்டியர், சேரர் இராச்சியங்களையும் விட செழிப்பான நாக அரசு என இங்கு கூறப்படுகிறது. மணிமேகலையில், யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் மணிபல்லவத்தை [Manipallavam in the Jaffna Peninsula / நைனாதீவு?] ஆட்சி செய்த, நாக மன்னன் வலை வாணன் ( the great Naga king Valai Vanan) மற்றும் அவரது ராணி வாசமயிலை (queen Vasamayilai) பெருமையுடன் நாக நாட்டை, தமிழ் புத்த சமய வழிபாட்டில் [Tamil Buddhism] ஆட்சி செய்தனர் என்றும் இவர்களின் மகள் பில்லி வலை (princess Pilli Valai ), முதன்மைக் சோழர், அரசன் கிள்ளிவளவன் அல்லது கிள்ளி வளவன் உடன் தொடர்பு வைத்திருந்தார் [princess Pilli Valai had a liaison at the islet with the early Chola king Killivalavan; out of this union was the prince Tondai Eelam Thiraiyar born, who historians note was the early progenitor of the Pallava Dynasty] என்றும், இவர்களது மகன் தொண்டை ஈழம் திரையர் (Tondai Eelam Thiraiyar) தான் பல்லவர் வம்சத்தின் முன்னோராக விளங்கினார் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அத்துடன், தொலெமி அல்லது தாலமி (150 கி பி ) சோழ நாட்டில் (உரையூர்) சோர்னாகோஸ் (Sornagos) என்ற நாக அரசர் ஆட்சி செய்ததை பதிவு செய்துள்ளார் [Ptolemy (150 CE) recorded that a king named Sornagos, a Naga descendant, ruled from the early Chola capital Uraiyur.]. நாக நாட்டின் தலைநகரான கந்தரோடை (கதிரமலை), காவேரிப்பூம் பட்டினத்திற்கு ஒப்பிடப்பட்ட செழிப்பான நகரமாக இருந்தது என்றும் நாக நாட்டின் முக்கியமான பகுதிககளாக, மாந்தை (வடமேற்கு இலங்கை), திருகோணமலை (வடகிழக்கு இலங்கை), மகாவில்லாச்சி (மத்திய இலங்கை) இருந்தன எனவும் அறிய வருகிறது [Mantai (Northwest), Trincomalee (Northeast), and Mahavillachi (Central Sri Lanka)]. நாகர்கள் கடல் வர்த்தகத்திலும், வேளாண்மையிலும் சிறந்தவர்கள் என்பதுடன் மீனவர் சமூகத்தினராக, (Karaiyar tribe) தமிழ் நாட்டின் சோழ மண்டலக் கடற்கரை பகுதியிலும் மற்றும் இலங்கை கடற்கரை பகுதியிலும் [Coromandel Coast (Tamil Nadu) and Sri Lankan coasts] தொடக்கத்திலேயே குடியேறியவர்கள் ஆவார்கள். மாந்தை நகரில் உள்ள கேதீஸ்வரம் கோயில் நாகர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இதிலிருந்து நாகர்கள் இலங்கையில் மிகவும் சக்திவாய்ந்த குடி என்றும், அவர்கள் தமிழகத்துடனும், உலக வர்த்தகத்துடனும் உறவுபட்டிருந்தனர் என்பதும் தெரிய வருகிறது. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 95 தொடரும் / Will follow துளி/DROP: 2006 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 94B https://www.facebook.com/groups/978753388866632/posts/33382691734712711/?
-
கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 04 ஒரு நாள், இரவு அவர்கள் மீண்டும் ஆன்லைனில் இணைந்தனர் . அவளுடைய மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். இருவரின் வீடும் அமைதியாக இருந்தது. அதிகாரி: “உனக்குத் தெரியும்... சில சமயங்களில் நீயே உன் மகிழ்ச்சியை மறுக்கிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது.” கண்மணி உடனடியாக பதிலளிக்கவில்லை. அந்த வாக்கியத்தை அவள் முன்பே கேட்டிருந்தாள் - உறவினர்கள், அண்டை வீட்டார், அவளுடைய வாழ்க்கையைப் புரிந்து கொண்டதாக நம்பிய நண்பர்களிடமிருந்து கூட. கண்மணி: “நான் மகிழ்ச்சியை மறுக்கவில்லை. நான் மீண்டும் மீண்டும் சொல்வதை மறுக்கிறேன்.” அதிகாரி: “மீண்டும் மீண்டும் சொல்வது எது ?” கண்மணி: “மௌனமாக இருக்கச் சொல்வது, நான் ஒருவாறு சரிப்பண்ண வேண்டும் என்று சொல்வது.” அதன் பின் இருவரும் கொஞ்சம் பேசுவதை ஒரு சில நிமிடம் இடைநிறுத்தினர், அதிகாரி: “ஆனால் திருமணம் அப்படி, முன்பு போல் இருக்க வேண்டியதில்லை. அது வித்தியாசமாக நன்றாக அமையலாம்.” கண்மணி: “ஆம். அது வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அது இல்லாதபோது, அதன் தாக்கம் சமமாகப் பகிரப்படுவதில்லை.” அதிகாரி: “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” கண்மணி: “ஒரு திருமணம் முறிந்துவிட்டால், அந்தப் பெண் என்ன தவறு செய்தாள் என்று மக்கள் கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு பொறுமையாக இருந்தாளா என்று கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு புரிந்துகொண்டாளா என்று கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு முயற்சி செய்தாளா என்று கேட்கிறார்கள்.” அவள் தொடர்ந்தாள் “அவர்கள் ஆண்களிடம் ஒரே மாதிரியான இப்படியான கேள்விகளைக் கேட்பதில்லை.” அதிகாரி: “அது சரி, ஆனால் எல்லா ஆண்களும் அப்படி இல்லை.” கண்மணி: “எனக்குத் தெரியும். ஆனால் எல்லாப் பெண்களையும் மீண்டும் ரிஸ்க் எடுக்கச் சொல்கிறார்கள். [I know. But all women are asked to take the risk again.]” அதிகாரி: “மீண்டும் ஒரு காதலுக்கு பயப்படுகிறீர்களா?” அவள் லேசாகச் சிரித்தாள், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியவில்லை. அது ஆடியோ [audio] அழைப்பு என்பதால். கண்மணி: “இல்லை. நான் காதலை ரசிக்கிறேன். நான் பாசத்தை ரசிக்கிறேன். நான் ஆசையைக் கூட ரசிக்கிறேன்.” அதிகாரி: “அப்புறம் ஏன் ஒருவருடன் வாழ்க்கையை மறுக்க வேண்டும்?” கண்மணி: “ஏனென்றால் காதல் என்பது சரணடைதல் போன்றது அல்ல. மேலும் திருமணம் பெரும்பாலும் பெண்களிடமிருந்து முதலில் சரணடைதலைக் கோருகிறது.” அதன் பின் இன்னொரு மௌனம் சில நிமிடம் நீண்டது அதிகாரி: “நான் உன்னைத் தனிமையிலிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைத்தேன்.” அவள் பதில் மெதுவாக வந்தது. கண்மணி: “நான் தனிமையாக இல்லை. நான் என்னுடன் வாழ்கிறேன். என் குழந்தையுடன் வாழ்கிறேன்.” அதிகாரி: “அது... முழுமையடையவில்லையே?” கண்மணி: “இல்லை. முழுமையடையாதது நான் காணாமல் போன முன்னைய வாழ்க்கை .” அவர் குறுக்கிடவில்லை. கண்மணி: “நான் ஏற்கனவே என் குரல் சிறியதாக மாறிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். [I have already lived a life where my voice became small], என் தேவைகள் கூட இரண்டாம் பட்சமாக அமைந்த இடத்தில் [Where my needs were secondary.]" அவள் நிறுத்தி, பின்னர் மேலும் சொன்னாள்: “நான் அதில் இருந்து இப்ப தப்பித்து விட்டேன். நான் மீண்டும் என்னை இழக்கத் தயார் இல்லை.” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் துளி/DROP: 2005 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/33375172355464649/?
-
🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023)
🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023) அத்தியடியின் மண்ணில் பிறந்து அடியெடுத்து வைத்தான் உலகம் நோக்கி, இடைக்காட்டின் காற்றில் வாழ்க்கை கட்டி டொராண்டோ வரை கடமையைச் சுமந்தான். எட்டு பிள்ளைகளில் மூன்றாவன் என்றாலும் எட்டுத்திக்கும் உறவுகளைச் சேர்த்தவன், சத்தமில்லா சேவையாய் சிறுமை இல்லா மனிதனாய் வாழ்ந்தவன். தொலைத்தொடர்பின் கம்பிகளில் நாட்டை இணைத்த கைகள் அவை, ஸ்ரீலங்கா தொலைத்தொடர்புத் துறையில் நேர்மை பேசும் உழைப்பின் அடையாளம். ஓய்வு வந்தபோதும் உறவுகளிலிருந்து ஓயவில்லை, பேரக்குழந்தைகளின் சிரிப்பில் தன்னை மீண்டும் கண்டுகொண்டான். இன்று மூன்றாம் ஆண்டு— காலம் உன்னைத் தொலைக்கவில்லை, நினைவுகளின் நடுவே நீ இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறாய். அண்ணா, உன் சிரிப்பு எங்களின் உற்சாகம், உன் நேர்மை எங்களின் வழிகாட்டி, உன் இல்லாமை— எங்களின் அமைதியான வலி. நீ சென்ற இடம் தூரமில்லை, நீ இருந்த இடம்—எங்கள் இதயம். ..................................................... Kandiah Rasalingam (25.01.2023) Three years have passed, yet you have not faded into time. You live on—in values, in laughter, and in the quiet strength you left behind. Forever remembered. Forever our elder brother. ................................................... கந்தையா இராசலிங்கம் (25.01.2023) அத்தியடியின் மண்ணில் பிறந்து உலகம் தழுவி வாழ்ந்தவன். உழைப்பில் நேர்மை, உறவுகளில் பாசம். சேவையாய் வாழ்ந்து சாந்தியாய் சேர்ந்தாய். நினைவுகளில் என்றும் நீ! ....................................................... 🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023) https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid02RyPejZvLBab3pL6phRdNFMKj1C8A78UEbgmN3ZZEFRFbYk6ZFk3x4Gk3MwgoMRGol?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 94A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 94 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, அடுத்தடுத்து வந்த புத்த மத ஆதிக்க அரசாங்கங்கள் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் பிற திட்டங்கள் என்ற பெயரில் சிறுபான்மை தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளை ஆக்கிரமிக்க திட்டங்களைத் தொடங்ன. எடுத்துக்காட்டாக, தொல்பொருள் துறை இந்த பகுதிகளில் உள்ள பண்டைய பௌத்த குடியேற்றங்களுக்கான ஆதாரங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் அகழ்வாராய்ச்சிக்கு நிலத்தை உரிமை கோரியது மட்டுமல்லாமல், பல இந்து கோயில்களின் இருப்பை அச்சுறுத்துவது நாளாந்த நிகழ்வாக மாறிவிட்டது. புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் தொல்பொருள் ஆய்வாளருமான டாக்டர் எஸ். பத்மநாதன், 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியதிலிருந்து, இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சி தமிழர்களுக்கு எதிரான பாகுபாட்டால் மோசமாகி வருவதாக டெய்லி எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். பேராதனை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தபோது, டாக்டர் பத்மநாதன் இலங்கையில் பண்டைய தமிழர் இருப்பைக் காட்டக்கூடிய தொல்பொருள் திட்டங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்று புகார் கூறினார். "தமிழர்கள் வாழ்ந்த இடமெல்லாம் தமிழ் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார். தமிழர்கள் தங்கள் தாயகம் என்று கூறும் இடத்தில் ஆரம்பகால பௌத்த இருப்பைக் காட்டும் தொல்பொருள் தடயங்கள் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, ஏனென்றால், இன்று இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் இல்லை என்றாலும், இலங்கையின் பெரும்பாலான ஆரம்பகால தமிழர்கள் (10 ஆம் நூற்றாண்டு சோழ படையெடுப்பிற்கு முன்பு) பௌத்தர்கள் ஆகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பண்டைய பௌத்த எச்சங்கள் சிங்களவர்களோ அல்லது வேறு யாரோ விட்டுச் சென்றவை அல்ல, தமிழ் பௌத்தர்களால் விடப்பட்ட எச்சங்கள் தான் அவை. அவை இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். வடக்கு மற்றும் கிழக்கில் சமீப காலத்திலும் தற்போதும் கட்டப்பட்ட பௌத்த கோயில்கள், சிலைகள் மற்றும் கட்டமைப்புகள் மட்டுமே சிங்கள - பௌத்தமாகக் கருதப்பட முடியும் என்பது வரலாற்று வெளிப்படையான உண்மை மற்றும் சான்றும் ஆகும். இது இலங்கை அரசுக்கும் அறஞர்களுக்கும் நன்றாகத் தெரியும். என்றாலும் இனத்துவேசமும் மகாநாமாவின் மகாவம்சமும் கண்ணை மறைத்து, புத்தரின் உண்மையான போதனைகளையும் வழிகாட்டளையும் பின்னுக்கு தள்ளிவிட்டன, ஏன் புத்தரையும் சேர்த்துதான், ஆனால் வெறும் சிலைகள் மட்டும் தான் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன! அத்தியாயம் 34: வட்டகாமினியின் மரணத்திற்குப் பிறகு, மகசுழி மகாதீசன் [Mahakuli Mahatissa, also known as Maha Cula Maha Tissa] பக்தியுடனும், நீதி வழுவாமலும் பதினன்கு வருட காலம் ஆட்சி செய்தான். உழைத்து ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது பெருமைக்குரியது என்பதைக் கேட்டறிந்த அவன் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, யாருமறியாமல் மாறுவேட மணிந்து சென்று வயலில் வேலை செய்தான். அதற்குக் கூலியாகக் கொடுத்ததை தேரர் மகா சுமணவுக்குக் [Thera Mahasumma] கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்வர்ண கிரியிலுள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் மூன்று வருட காலம் வேலை செய்து, அதற்குக் கூலியாக சர்க்கரை பெற்றான். சர்க்கரையை எடுத்துக் கொண்டு தலைநகருக்குத் திரும்பிய அரசன் பிக்குகளுக்கு நிறைய தானம் வழங்கினான். அதாவது மொத்தம் நான்கு ஆண்டுகளாக மன்னர் இல்லை என்பதை யாரும் கவனிக்கவில்லை என்பது விந்தையாக உள்ளது! மகசுழி மகாதீசன் கல்லாட நாகனின் [Khallatanaga] மகன், மற்றும் சோரநாகன் [Coranaga] வட்டகாமினியின் மகன். மகசுழி மகாதீசனின் ஆட்சிக் காலத்தில் சோரநாகன் ஒரு கிளர்ச்சியாளராக இருந்தான். மகசுழி மகாதீசனின் மரணத்திற்குப் பிறகு சோரநாகன் மன்னரானான், மேலும் தனது கிளர்ச்சி ஆண்டுகளில் அவனுக்கு அடைக்கலம் அளிக்கப்படாத பதினெட்டு விகாரைகளையும் அழித்தான். அவன் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மேலும் அவனது துணைவியார் அனுலா [Anula] கொடுத்த விஷ உணவை சாப்பிட்டு இறந்தான். சோரநாகனின் மரணத்திற்குப் பிறகு, மகசுழி மகாதீசனின் மகன் குட்ட திச்சன் அல்லது குட திச்சன் [Kuda Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனும் தனது சொந்த தாயாரான அனுலாவால் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இந்த இரண்டு கொலைகளையும் அனுலா, சிவா [Siva I, [முதலாம் சிவன்] who was then a royal palace guard] என்ற அரண்மனைக் காவலாளியின் மீது கொண்ட காதல் ஏக்கத்தால் செய்தாள் என்கிறது மகாவம்சம். சிவா அனுலாவை ராணியாக ஏற்றுக்கொண்டு ஒரு வருடம் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தான். மீண்டும், வட்டுகா [வடுகன் / vatuka] என்ற தமிழன் மீது அவள் கொண்டிருந்த ஆசை காரணமாக, சிவாவும் அனுலாவால் விஷம் வைத்து கொல்லப்பட்டான். வடுகனும் அனுலாவை தனது ராணியாக ஏற்றுக்கொண்டான். என்றாலும் மீண்டும் தருபாதுக திச்சன் [Darubhatika Tissa, The wood carrier] என்ற விறகு சுமக்கும் மற்றொரு நபரைக் காதலித்ததால், ஒரு வருடம் இரண்டு மாதங்களில், முன்போலவே விஷம் வைத்து இவனைக் கொன்றாள். ஆட்சி ஏறிய தருபாதுக திச்சன் ஒரு வருடம் ஒரு மாதம் ஆட்சி செய்தான். இவனையும் அனுலா முன்போலவே, தனது அடுத்த காதலனும் அரண்மனை பூசாரியுமான தமிழ் பிராமணன் நிலியன் [Niliya, a Tamil Brahman] மேல் கொண்ட காதலால், விஷம் வைத்து கொன்றாள். அவன் ஆறு மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தான். அரண்மனைக் காவலர்கள் முப்பத்திரண்டு பேர்களுடன் தன் இஷ்டம் போல் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த அனுலா அல்லது அனுலாதேவி பின்னர் நிலியனையும் விஷம் கொடுத்துக் கொன்று, தானே நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால் இன்னும் ஒன்றையும் இங்கு கவனியுங்கள். பல தமிழர்கள் அனுராதபுர அரண்மனையில் வேலை செய்வதையும், மற்றும் அரண்மனை பூசாரியாக தமிழ் பிராமணன் இருந்ததையும், இவர்களில் சிலர் அடுத்தடுத்து மன்னர்களாக மாறுவதையும், அதை அங்கு இருந்த அரண்மனை நிர்வாகிகளோ, படை வீரர்களோ, இல்லை குடிமக்களோ எந்த எதிர்ப்பும் இன்றி, ஏற்றுக்கொள்வதையும், இது கிருஸ்துக்கு முன்பு என்பதையும் அறியும் பொழுது, உங்கள் மனதில் ஏற்படும் இலங்கை வரலாறும், ஆதி குடிமக்கள் பற்றிய கருத்தும் என்னவாக இருக்கிறது? மகசுழி மகாதீசனின் இரண்டாவது மகன் குடகன்ன தீசன் [குடகன்ன திஸ்ஸன் / Kutakanna-Tissa] என்பவன் அனுலாவிடம் கொண்ட பயத்தால், ஓடிப்போய் தீட்சை பெற்று வசித்து வந்தவன் இப்போது தலைநகருக்குத் திரும்பி வந்து ஒரு படையைத் திரட்டினன். கொடியவளான அனுலாவைக் கொன்று விட்டு அவன் இருபத்திரண்டு வருட காலம் ஆட்சி செய்தான். அவனது மரணத்திற்குப் பிறகு, அவனது மகன் பட்டிகாபய அபயன் அல்லது பாதிகாபய அபயன் [Bhatikabhaya Abhaya] இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனது மரணத்திற்குப் பிறகு, அவனது தம்பி மகாதாதிக மகாநாகன் [Mahadathika Mahanaga] பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தாதிக [Dathika] என்பது ஒரு தமிழ்ப் பெயர் என்று ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது; 33-78. எனவே, மகாதாதிக, அதாவது பெரிய தாதிக என்பதும் ஒரு தமிழ் பெயராகும். எனவே, மகாதாதிக மகாநாகா ஒரு தமிழ் மன்னர் பெயராகும். மேலும் நாகர்கள், இலங்கைத் தீவின் பூர்வீக குடியிருப்பாளர்களும் ஆகும். Part: 94 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 34: After the death of Vattagamani, Mahaculi Mahatissa ruled for fourteen years. It is claimed that this king laboured in the rice field for one year in disguise, and he gave his wages to the Thera Mahasumma. He also worked in a sugar mill for about three years and received lump of sugar as wages. He gave this as alms to the bikkhus. It is strange that no one noticed that the king was not around for four years! Mahaculi Mahatissa is the son of Khallatanaga, and Coranaga was the son of Vattagamani. Coranaga had been a rebel during the reign of Mahaculi Mahatissa. Coranaga became the king on the death of Mahaculi Mahatissa, and he destroyed eighteen Viharas where he was not given refuge during his rebel years. He ruled for twelve years, and died by eating poisoned food given by his consort Anula. After the death of Coranaga, Mahaculika’s son Tissa ruled for three years. Anula also poisoned him to death. Anula committed these two murders because of her cravings towards a palace guard by the name Siva. Siva took Anula as the queen and ruled for one year and two months. Anula also poisoned him to death because of her craving for another man by the name Vatuka who was a Damila. He too took Anula as his queen, and he was also poisoned to death by her in one year and two months as she fell in love with another person who was a wood carrier by the name Tissa. He ruled for one year and one month, and was poisoned by Anula as she was in love with Niliya, a Damila Brahman who was a palace priest. He ruled for six months. Anula again fell in love with thirty two of the palace guards, and poisoned Niliya to death, 34-27. Then she ruled for four months. Mahaculika had a second son by the Kutakanna-Tissa who fled for fear of Anula. He returned and put Anula to death and reigned for twenty-two years. After his death, his son Bhatikabhaya reigned twenty-eight years. After his death, his younger brother, Mahadathikamahanaga, ruled for twelve years. As it was already pointed out that Dathika was a Tamil name; 33-78. Then Mahadathika is also a Damila name. Naga was an original inhabitant of the island. Therefore, Mahadathika Mahanaga must be a Damila king. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 94 B தொடரும் / Will follow துளி/DROP: 2004 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 94A https://www.facebook.com/groups/978753388866632/posts/33365731243075427/?
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 6 🐪 பாகம் 06 – துபாய் வர்த்தக வளாகத்தில் மாபெரும் ஒட்டகம் துரத்தல் கதிரவன் துபாயின் அடிவானத்தில் மெதுவாக மூழ்கிக் கொண்டிருந்த போது, ஒளிரும் உயர்மாடிக் கட்டிடங்கள் பொன்னாக மின்னும் போது, தாத்தா கந்தையா தில்லையும் அவரது மூன்று பேரக்குழந்தைகளும் -திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரின் - உலகப் புகழ்பெற்ற, உலகத்திலேயே பெரிய, துபாய் வர்த்தக வளாகத்தில் ஒரு மாலை சாகசத்திற்காகப் புறப்பட்டனர். துபாய் மால் [Dubai Mall], புர்ஜ் கலீஃபாவிற்கு [Burj Khalifa] அடுத்ததாக அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் [வர்த்தக வளாகம்] ஆகும், மேலும் இது உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் கட்டிடங்களில் ஒன்றும் ஆகும். இது 1,200 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள், 120 க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் துபாய் மீன் [நீர்வாழ்] காட்சியகம் [Aquarium] & நீருக்கடியில் மிருகக்காட்சிசாலை, ஒலிம்பிக் அளவிலான பனி வளையம் [Olympic-sized ice rink] மற்றும் ஒரு பல்திரைக் கூடம் /அரங்கம் [மல்டிபிளக்ஸ் சினிமா / multiplex cinema] உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்குகளைக் கொண்டுள்ளது. துபாய் வீதிகளின் அகலமான வழியாக கார் பயணித்த போது, சிறுவர்கள் ஆச்சரியத்தால் கண்களை விரித்துக் கொண்டு ஜன்னலை நோக்கி முகத்தை அழுத்தினர். கடலுக்கு அருகிலுள்ள தங்க மணற் குன்றுகளின் விளிம்பிற்கு வெளியே, அவர்கள் திடீரென்று ஒட்டக சவாரிகளைக் கண்டனர் - உயரமான விலங்குகள் சுற்றுலாப் பயணிகளை மணலில் சுமந்து செல்லும் போது மெதுவாக அசைந்தன, மாலை வெளிச்சத்தில் அவற்றின் நிழல்கள் நீண்டிருந்தன. “தாத்தா! பாருங்க! உண்மையான ஒட்டகங்கள்!” என்று உற்சாகமாகக் கூவினான் நிலன். அவன் குரல் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தது. “அட, நாம் காரை நிறுத்தலாமா!” என்றான் திரேன் தாத்தா சிரித்தார். “சரி, ஒரு சில நிமிடங்கள் மட்டும். ஆனால் துபாய் வர்த்தக வளாகம் மூடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னவது, தாமதமாகாமல் போகவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ” என்று வேண்டுகோள் விடுத்தார். கார் துபாயின் மணல் மேடுகளுக்கு [sand dunes] அருகில் மெதுவாகச் சென்று நின்றது. சிறுவர்கள் வெறுங் காலுடன் மணலில் இறங்கிய போது, சூடான பாலைவனக் காற்று அவர்களின் முகங்களை தொட்டுச் சென்றது. தங்க மணல் மேடுகளின் குறுக்கே சிறிய கால் தடங்களை பதித்து பதித்துக் கொண்டு, அவர்கள் ஒருவரை யொருவர் துரத்தும் போது, புன்னகைகள் வெப்பக் காற்றை குளிராக நிரப்பியது. ஒட்டகங்கள் சில சோம்பேறித்தனமாக அவர்களின் அருகில் மெல்ல மெல்ல நடந்தன. அப்பொழுது அவற்றின் கழுத்தில் கட்டிய மணிகள் காற்றில் மெதுவாக ஒலித்தன. அவர்கள் சில புகைப்படங்களை எடுத்தனர் - நிலன் ஒரு கற்பனை ஒட்டகத்தை சவாரி செய்வது போல் பாசாங்கு செய்தான். திரேன் தனது கைகளை கடிவாளங்களைப் போல நீட்டினான். மற்றும் குட்டி ஆரின், மணலில் விழுந்து உருண்டான். காற்று தனது கால் விரல்களுக்கு இடையில் மணலைச் சுமந்து செல்லும் போது மகிழ்ச்சியுடன் எழும்பி துள்ளிக் கத்தினான். ஒரு சில நேர மகிழ்வான பொழுது போக்கும் மற்றும் வேடிக்கைக்கும் பிறகு, தாத்தா கைகளைத் தட்டினார். "சரி பசங்களா, கிளம்ப வேண்டிய நேரம் இது. ஒட்டகங்களும் தூங்க வேண்டும்!" என்றார். குழந்தைகள் மணலைத் தம் கால்களில் இருந்து தட்டி விட்டு மீண்டும் காரில் மகிழ்வாக ஏறினர். துபாய் மால் நோக்கிப் பயணம் தொடர்ந்த போது, வானம் மஞ்சளிலிருந்து ஊதா நிறமாக மாறியது; தூரத்தில் துபாய் நகர விளக்குகள் ஒளிரத் தொடங்கின. ஆனால் தாத்தா, அந்த கால இடைவெளியை, ஒட்டக சவாரி வரலாற்றை [Camel Riding History], பேரன்களுக்கு விளக்குதலில் ஈடுபட்டார். கார் துபாய் மால் நோக்கிச் செல்லும் போது, நிலன் இன்னும் ஒட்டக சவாரி பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். “தாத்தா, பாலைவனத்தில் ஏன் கார்களில் பயணம் செய்யாமல், ஒட்டகத்தில் சவாரி செய்கிறார்கள்?” என்று அவன் கேட்டான். கண்ணாடியில் மறைந்து போகும் தங்க மணல் மேடுகளை உற்றுப் பார்த்துக் கொண்டு “ஆ, என் அன்பான பையன்களே,” என்று அவர் தொடங்கினார். “ஒட்டகம் சவாரி செய்வதற்கு மட்டும் ஒரு விலங்கு அல்ல - அது பாலைவன வரலாற்றின் ஒரு பகுதி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கார்கள் அல்லது சாலைகள் இருப்பதற்கு முன்பு, பாலைவனப் பகுதிகளில் கால்நடைகள் மேய்க்கும் நாடோடிப் பழங்குடியான பெடோயின் [Bedouins] என்று அழைக்கப்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து பயணம் செய்தனர். வெப்பமான, முடிவற்ற மணல் வழியாக தங்களை வழிநடத்த அப்பொழுதே ஒட்டகத்தை அவர்கள் நம்பினர்.” என்று தாத்தா மெதுவாகச் சிரித்தபடி சொன்னார். அவர் தொடர்ந்தார், “ஒட்டகம் மிகவும் சிறப்பு வாய்ந்த உயிரினம். அது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் நடக்க முடியும், அதிக சுமைகளைச் சுமந்து செல்ல முடியும், அத்துடன் மிகவும் மெதுவாக நகரவும் முடியும். அதனால்தான் மக்கள் அதை பாலைவனக் கப்பல் என்று அழைத்தனர். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் ஒட்டகங்களை அடக்கக் கற்றுக் கொண்டபோது, எல்லாம் மாறியது. ஒரு காலத்தில் மக்களைப் பிரித்து வைத்திருந்த பெரிய பாலைவனங்கள், பயணம் மற்றும் வர்த்தகத்திற்கான பாதைகளாக மாறின. ஒட்டகங்கள் உலகை இணைக்க உதவியது என்று நீங்கள் கூறலாம்.” என்றார். திரேன் கண்களை விரித்து கேட்டான். “அப்போ இன்னைக்கு நாம ஒட்டகத்துல சவாரி பண்ணப்போ, அது ஒரு வரலாற்றுச் சவாரி மாதிரி இருந்துச்சு என்று சொல்லலாமா?” தாத்தா, திரேனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகநானூற்றில் மருதன் இளநாகனார் பாடிய பாடலைப் பாடினார். “குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும் கல்நெடுங் கவலைய கானம் நீந்தி, அம்மா அரிவை ஒழிய" [அகம்.245] திரேன் இதன் கருத்து என்னவென்று கேட்டான். பாறையில் உதிர்ந்து கிடக்கும் இலவ மலர்கள் காய்ந்து எலும்புகள் போலக் காட்சி தரும். அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் என்று இது பொருள்படுகிறது என்று கூறிய அவர், ஒட்டகம் ஒரு சைவ பிராணி என்று எடுத்துக் கூறினார். பின் தாத்தா பேரப்பிள்ளைகளை பார்த்து பெருமையாச் சிரித்தார். “சரியாகச் சொன்னாய், 'அது ஒரு வரலாற்றுச் சவாரி மாதிரி இருந்துச்சு!' என்று. “நீங்கள் உணர்ந்த ஒவ்வொரு மெதுவான அசைவும் கூட — காலத்தின் வழியே எடுத்த ஒரு அடியாயிருக்கும். ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் நேசித்த, வாழ்ந்த அனுபவத்தை நீங்கள் இன்று உணர்ந்திருக்கிறீர்கள்.” என்றார். தாத்தாவின் வாய், தனக்குள் முணுமுணுத்தது. 'ஒவ் வொரு ஒட்டக அசைவும் ஒரு ஆயிரமாண்டின் மூச்சாய் ஒலிக்கிறது! இன்றைய உன் அனுபவமும் சிரிப்பும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கனவுகள்!' காருக்குள், சிறுவர்கள் ஒட்டகங்களைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள் - அவற்றின் நீண்ட கண் இமைகள், பெரிய கால்கள் மற்றும் வேடிக்கையான நடைகள் [Walking] பற்றி. “அதனால்த் தான் அது பாலைவனத்தின் கப்பல்,” என்றார் தாத்தா புன்னகையுடன். “அது அமைதியாகவும், பொறுமையுடனும், வலிமையுடனும் இருக்கும் — நாமும் அப்படித்தான் இருக்கணும்." என்று புத்திமதியும் கூறினார். விரைவில் அவர்கள் துபாய் மாலின் பிரமாண்டமான நுழைவாயிலை அடைந்தனர், கண்ணாடி ஒளியில் மின்னும் அந்த மால் [Mall] ஒரு கனவு உலகம் போல இருந்தது. அவர்கள் உள்ளே நுழைந்தவுடன், அவர்கள் வண்ணங்கள், ஒலிகள் மற்றும் வாசனைகளின் சுழலால் சூழப்பட்டனர். காற்று குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் இருந்தது. அத்துடன் வனிலா, கேரமல் பாப்கார்ன் மற்றும் புதிய காபியின் [vanilla, caramel popcorn, and fresh coffee] நறுமணத்தால் அது நிரம்பியிருந்தது. அங்கே பிரம்மாண்டமான திரைகள் மின்னி மின்னி ஆட்டம் போடும் விளக்குகளால் [dancing lights] ஒளிர்ந்தன; நீரூற்றுகள் இசைத்தன. காற்றில் தண்ணீரை மேலே தெளித்தன; மென்மையான அரபு இசை தென்றல் போல மிதந்தது. ஆனால் அவர்கள் மாலை அங்கு உலாவி தேடுதல் செய்யும் போதும், அவர்களின் எண்ணங்கள் இன்னும் அவர்கள் பார்த்த ஒட்டகங்களைப் பற்றியே இருந்தன. அவர்கள் வளாகத்தின் முற்றத்திற்குள் [atrium] - நேர்த்தியான, தங்க நிற மற்றும் யதார்த்தமான உயிருள்ள அளவிலான ஒட்டக சிலைகளைக் கண்டபோது, அவர்களின் கற்பனை மீண்டும் ஒரு முறை தீப்பிடித்தது. “பாருங்க, தாத்தா! மறுபடியும் ஒட்டகங்கள்!” என்று தாத்தாவின் சட்டையை இழுத்துக் கொண்டு கத்தினான் குட்டி ஆரின். “ஒருவேளை அவங்க பாலைவனத்துல இருந்து ஷாப்பிங் [shopping] பண்ண இங்கு ஓடி வந்திருக்கலாம்!” திரேன் கேலி செய்தான். “அல்லது அவங்க சோளப்பொரியைத் [popcorn] தேடிட்டு இங்கு வந்திருக்கலாம்!” என்று சிரித்தான் நிலன். தாத்தா பதில் சொல்வதற்குள், சிறுவர்கள் கூட்டத்தின் ஊடே உற்சாகமாக ஓடினர். அவர்களுக்கு, அங்கிருந்த ஒட்டக சிலைகள் உயிர் பெற்றன! அவர்கள் ஒட்டக பந்தயம் ஓடுவது போல் பாசாங்கு செய்து சுற்றி சுற்றி ஓடி, அவைகளுக்கு உணவளிப்பது போல் நடித்தனர். திரேன், நிலன், ஆரினின் சிரிப்பு மால் [mall] முழுவதும் எதிரொலித்தது. "ஏய், குழந்தைகளே, கொஞ்சம் எனக்காக காத்திருங்கள், ஒட்டகங்களை விட வேகமா ஓடாதீங்க, ஒட்டகம் மெதுவாகத்தான் ஓடும்!" என்று தாத்தா பாதி மூச்சுத் திணறி, பாதி சிரித்தார். தாத்தா துரத்தி துரத்தி பேரன்களுக்கு பின்னால் ஓடுவதை கடைக்காரர்கள் திரும்பிப் பார்த்தார்கள் - என்றாலும் நீரூற்றுகள் மற்றும் கண்ணாடிச் சுவர்களுக்கு [fountains and glass walls] மத்தியில் தனது துடிப்பான பேரக்குழந்தைகளைத் துரத்தும் அன்பான முதியவரைப் பார்த்து மகிழ்ந்தனர். கண்ணுக்குத் தெரியாத ஒட்டகத்திலிருந்து விழுவது போல் நடித்து நிலன் தடுமாறி விழுந்தபோது, திரேன் ஒரு பாலைவன வீரனைப் போல அவனை "மீட்க" விரைந்த போது "ஒட்டகத் துரத்தல்" இன்னும் வியத்தகு முறையில் வளர்ந்தது. சிறியவனான ஆரின் கைதட்டி, "ஓடு, ஓடு, ஒட்டகங்கள் வருகின்றன!" என்று கத்தினான். மால் பாதுகாப்புக் காவலர் கூட சிரித்துக் கொண்டே, “பிரச்சனை இல்லை சார் — சிறார்கள்தான்!” என்றார். நீண்ட, மகிழ்ச்சியான ஓட்டத்திற்குப் பிறகு, தாத்தா இறுதியாக மூன்று சிறுவர்களையும் நீரூற்றுக்கு அருகில் கூட்டிச் சென்றார். அவர்கள் அங்கு பளிங்கு விளிம்பில் அமர்ந்து, மூச்சுவாங்கி மூச்சுவாங்கி, சிரித்தனர். அவர்களுக்கு முன் தண்ணீர் நடனமாடி, வெள்ளி நூல்கள் போல விளக்குகளின் கீழ் மின்னியது. தாத்தா சிரித்தார், அவரது கண்கள் அன்பால் சூழ்ந்து இருந்தது. “பார்த்தீர்களா, என் பிள்ளைகளே, சில நேரங்களில் சிறந்த சாகசங்கள் நம் கற்பனையால் நாம் உருவாக்கும் சாகசங்கள்தான். இன்று நாம் ஒட்டகங்களை சவாரி செய்யவில்லை - ஆனால் நாம் இன்னும் ஒரு சிறந்த ஒட்டகத் துரத்தலைக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன், இல்லையா?” என்று கேட்டார் “ஆமாம், தாத்தா!” என்று அவர்கள் ஒன்றாகக் குரல் கொடுத்தனர் [chorused]. “எப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்தது!” என்று. அவர்கள் ஐஸ்கிரீமைப் [ice cream] பகிர்ந்து கொண்டு இசை நீரூற்று நிகழ்ச்சி [musical fountain show] தொடங்குவதைப் பார்த்த போது, ஒருவேளை பாலைவனக் காற்றைப் போல குழந்தைப் பருவக் கனவுகள் ஒருபோதும் ஓடுவதை நிறுத்தாது என்று தாத்தா தனக்குள் நினைத்துக் கொண்டார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 07 தொடரும் துளி/DROP: 2003 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 6 https://www.facebook.com/groups/978753388866632/posts/33359504587031426/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 93 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 93 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வட்டகாமினி மீண்டும் அரசனாக திரும்பிய உடனே நிகந்தர்களுடைய ஆராமாவை [கோயில்கள்] அழித்து விட்டு அங்கு பனிரெண்டு அறைகளுடன் ஒரு விகாரை கட்டினான் என்று 79 ஆவது வசனம் சொல்லுகிறது. அது ஒரு சமணக் கோயிலாக இருக்க வேண்டும்; அத்தியாயம் 10 இன் 97 ஆம் வசனத்தின் அடிக்குறிப்பின்படி நிகந்தர் என்பது சமணத் துறவிகள் ஆகும். அதேசமயம் களப்பிரர் என்ற தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் சைன சமயத்தையே ஆதரித்தனர். அதேவேளை, 33 ஆம் அத்தியாயத்தின் 43 ஆம் வசனத்தின் [அரசன் தப்பியோடுவதைக் கண்ட கிரி என்னும் பெயருடைய ஒரு நிகந்தர்* ‘கருப்புச் சிங்கம் ஓடுகிறது" என்று உரக்கக் கத்தினான்] அடிக்குறிப்பின்படி, நிகந்தர் என்றால் பௌத்தர் அல்லாத துறவிகள் என்று பொருள். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின் பிற்பகுதியில், கங்கை சமவெளியில் (வடக்கு இந்தியா) கடுமையான வறட்சி மற்றும் பஞ்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பல சமணர்கள் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர் என நம்பப்படுகிறது. உதாரணமாக, சந்திர குப்த மௌரியர் (கி.மு. 321–297 ஆட்சி) தனது கடைசி நாட்களில் சமண மதத்தைத் தழுவினார் என்றும், துறவியாக வாழ்ந்து இன்றைய கருநாடக மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவிற்கு [Shravanabelagola] அருகில் உள்ள சந்திரகிரியில் பத்திரபாகு [Bhadrabahu] முனிவர் உட்பட பலருடன் மோட்ச நிலையை அடைந்தார் என சமண நூல்கள் கூறுகின்றன. இது வடக்கில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமாக இருக்கலாம். கி.பி 600 வரை தமிழ்நாட்டில் அமைதியாக இருந்த பல மதங்களில் சமண மதமும் புத்த மதமும் ஆகிய இரண்டும் அடங்கும். இருப்பினும், 6 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சமணர்களும் பௌத்தர்களும் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர், ஒருவேளை ஆதி சங்கராச்சாரியாரின் போதனைகளின் செல்வாக்கின் காரணமாகவோ அல்லது பிற காரணங்களாலோ இருக்கலாம். இதன் விளைவாக, பல சமணர்களும் பௌத்தர்களும் பாதுகாப்புக்காக இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்? உதாரணமாக, சில வரலாற்றுக் குறிப்புகளும் கல்வெட்டுகளும், குறிப்பாக பல்லவ மற்றும் பாண்டிய ஆட்சியாளர்களின் கீழ் சமணர்கள் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறுகின்றன. மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித் "துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார் கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. மன்னர் வட்டகாமினி நிகந்தர்களுடைய ஆராமாவை இடித்தது மட்டுமல்லாமல், அந்த இடங்களில் பௌத்த விகாரையையும் கட்டினான். அத்தியாயம் 33 இன் 81 வது வசனத்தின் அடிக்குறிப்பு 1 இன் படி, வட்டகாமினி நிகந்தர்களுடைய கோவிலை இடித்த இடத்தில் அபயகிரி விகாரையைக் கட்டினான். மன்னர் வட்டகாமினி பௌத்த நியதிகளை வருங்கால சந்ததியினருக்காக எழுத்து வடிவில் இருக்க உத்தரவிட்டார். இது இதுவரை வாய்மொழியாக மட்டுமே வழங்கப்பட்டது ஆகும். சைவ கோயில்கள் ஆண்டு ஆண்டாக பண்டைய காலத்தில் இருந்தே , கிருஸ்துக்கு முன்பே இருந்தே, தமிழர்களின் தேசிய பாரம்பரியமாக, பெருமையாக இருந்து வருகிறது. ஆனால், தற்போதைய தொல்பொருள் துறையால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் புனிதமான சைவத் தலங்கள் படிப்படியாக தரைமட்டமாக்கப் படுகின்றன. ஆனால் உண்மையில் இந்தப் பிரச்சினை, புனிதமான கோயில்களை அழிப்பதை விட, அங்கு சிங்கள பௌத்த குடியேற்றமும் அதற்காக புத்தர் விகாரை அமைப்பதுமே முதன்மையாகத் தெரிகிறது .தமிழ் பேசும் மக்கள், நாட்டில் சிறுபான்மையினராக இருந்தாலும், இவர்கள் பண்டைய காலம் தொடங்கி, வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டும் அல்ல, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழ்வதும் இன்று குறிப்பிடத் தக்கது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில், இராணுவம், சிங்கள - பௌத்த நிறுவனத்துடன் சேர்ந்து, அதிகமான புத்த கோயில்கள் மற்றும் புத்த சிலைகளை நிறுவுவதன் மூலம் நிலப்பரப்பை மாற்றி வருவதுடன் இந்தப் பகுதிகளில் நிலத்தையும் பலவந்தமாக கையகப்படுத்துகிறது. இந்தப் பகுதிகளில் தொல்பொருள் துறையின் செயல்பாடுகள் குறித்து சந்தேகத்திற்குரிய தகவல்கள் வந்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர்மலையில் நிலவும் சூழ்நிலை ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் என்று எண்ணுகிறேன். மற்றது தையிட்டியில் மக்கள் காணியில் பலவந்தமாக, அவர்களின் காணியை பறித்து, போலீஸ் [காவல்துறை / Police] காவலுடன் இராணுவம் அமைத்துள்ள சட்டவிரோத தையிட்டி விகாரையையும் கூறலாம். இவை இரு உதாரணங்கள் மட்டுமே, அங்கு இதைவிட பல இடங்களில் இப்படி நடக்கிறது. இவைக்கு இலங்கை அரசும் நீதித்துறையும் கண்மூடி இருப்பது கேவலமான காட்சி ஆகும். குருந்தூர்மலையை எடுத்துக் கொண்டால், பிப்ரவரி 2021 இல், இந்த இடத்தில் ஒரு இந்து ஆலயத்தை இராணுவ வீரர்கள் அழித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஜூன் 2021 இல், அதே இடத்தில் ஒரு புதிய புத்த கோவிலுக்கு அடித்தளம் அமைக்கும் விழாவிலும் இராணுவம் பங்கேற்றது மட்டும் அல்ல, நீதிமன்ற உத்தரவுகளை மீறி கட்டுமானப் பணிகளையும் தொடர்ந்தது. இந்த நடவடிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் தொகை மற்றும் கலாச்சார நிலப்பரப்பை மாற்றுவதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக பலரால் கருதப்படுகின்றன, இது பெரும்பாலும் "சிங்களமயமாக்கல்" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சொல் பாரம்பரியமாக சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்கள பௌத்த கலாச்சாரத்தை மேம்படுத்துவதை விவரிக்கிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 'நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் தமிழர்கள்', முதலில் கிருஸ்துவத்துக்கு மாற்றப்பட்டு, பின் அவர்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்ட அண்மைய வரலாறு ஆகும். மேலே கூறிய அத்தனையும் தமிழ் மற்றும் முஸ்லிம் அடையாளங்களை ஓரங்கட்டுவதற்கு வழிவகுக்கும் என திட்டவட்டமாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. இந்த செயல்முறைகளில் தொல்பொருள் துறையின் ஈடுபாடு குறிப்பாக சர்ச்சைக்குரியதாக உள்ளது. சைவ [இந்து] கோயில்களை பௌத்த தலங்களாக மறுவடிவமைப்பு செய்வதில் இந்தத் துறை முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், இதன் மூலம் சைவ [இந்து] வழிபாட்டாளர்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதாகவும், இந்த இடங்களில் பௌத்த கட்டமைப்புகளைக் கட்டுவதற்கு வசதி செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது மத சமூகங்களுக்கு இடையே பதட்டங்களுக்கு பங்களித்துள்ளது மற்றும் சிறுபான்மை கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் கூறுகிறது. Part: 93 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Soon after his return he demolished the arama of the Niganthas (temples of Niganthas), must be a Jain temple; as per footnote on 10- 97 Nigantha means Jain monks. As per footnote on the 33- 43, Nigantha means non-Buddhist monks. Tamil epic Mannimeghalai denote Samana Kutta as Samana (Jain) Malai (hill). There was a drastic drought and famine during the latter part of the reign of Chandragupta Maurayan in the Gangetic plain. Quite a lot of Jains moved to south during that time. Jainism and Buddhism were two of the many religions prevailed and peacefully co-existed in Tamil Nadu until about 600 A.D. It could be due to the preaching of Aadi Sangarar or otherwise, Jains and Buddhists were in severe persecution after sixth century A.D. Both Jains and Buddhist moved to Ceylon. The king Vattagamani not only demolished the Aarama of the Nigantha’s but also built Buddhist Viharas on those places. As per footnote 1, Abhayagiri Vihara was built on the site where Vattagamani, 33-81, demolished the Nigantha temple. The king Vattagamani ordered the Buddhist canons to be in written form for posterity which was earlier orally handed down நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 94 தொடரும் / Will follow துளி/DROP: 2002 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 93 https://www.facebook.com/groups/978753388866632/posts/33350022154646336/?
-
கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 03 விவாகரத்துக்குப் பிறகு, கண்மணி தனது குழந்தையுடன் தனியாக, ஆனால் பெற்றோரின் கண்காணிப்பில் தொடர்ந்து வாழ்ந்தாள். ஒரு ஆசிரியராக மதிக்கப்பாக தன் வாழ்வை நகர்த்தினாள். என் தனிமை, என் குழந்தை, என் சுயமரியாதை - இவை மட்டுமே முக்கியம். நான் அவைகளை மீண்டும் அச்சுறுத்த விடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள். எனினும் பெற்றோர்கள், உறவினர்கள், மறு திருமணத்துக்கு கண்மணியை ஒப்புக்கொள்ள முயற்சி செய்தார்கள். “அவர் ஒழுக்கமானவர்.” “அவர் உங்கள் கடந்த காலத்தை ஏற்றுக்கொள்வார்.” “அவர் உங்கள் குழந்தையை ஏற்றுக்கொள்வார்.” இப்படி புது புது வரன் கொண்டுவந்தார்கள். கண்மணி அவர்களின் வேண்டுதலை கேட்டுவிட்டு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டாள்: “அவர் என் எல்லைகளை ஏற்றுக்கொள்வாரா? [Will he accept my boundaries?]” யாரும் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. அவர்கள் அவளை பிடிவாதமானவள் என்று அழைத்தனர். ஆனால், அவள் தான் இப்ப விழித்திருப்பதாகக் கூறினாள். அந்த சூழலில் தான், ஒரு நாள், ஓய்வுபெற்ற அதிகாரி சமூக ஊடகங்கள் மூலம் அவளுடைய வாழ்க்கையில் நுழைந்தார் - அவசரமின்றி, உரிமை கோராமல். அவர்கள் புத்தகங்கள், சமூகம், பெண்கள் கல்வி பற்றிப் பேசினர். அவர் அவளுடைய புத்திசாலித்தனத்தை மதித்தார். படிப்படியாக, உரையாடல்கள் ஆழமடைந்தன. "நீங்கள் உங்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டும்," என்று அவர் ஒரு முறை அறிவுரை கூறினார். "உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் ஒரு பாதுகாப்பான நிலை வேண்டும்." அவர் கண்ணியமானவர். சிந்தனைமிக்கவர். மற்றும் பாதுகாப்பானவர் என்ற அவளின், அவர் மேல் உள்ள மதிப்பு, அவளை வாதாட விடவில்லை. என்றாலும் அவள் விளக்கினாள். "கண்ணியமில்லாத நிலைத்தன்மை மற்றொரு வகையான சரிவு. [“Stability without dignity is another kind of collapse.”]" - வெளியில் இருந்து பார்க்கும் போது வாழ்க்கை நிலையானதாகத் தோன்றுவதால் - திருமணம், வீடு, [வழக்கமான] நடைமுறை, நிதிப் பாதுகாப்பு [marriage, home, routine, financial security] - போன்றவை, உண்மையிலேயே ஆரோக்கியமானதாகவோ அல்லது வெற்றிகரமானதாகவோ உள்ளது என்றுஅர்த்தமல்ல. கண்ணியத்தை (சுயமரியாதை, குரல், சம்மதம், அடையாளம் / self-respect, voice, consent, identity) பலிகொடுத்தால் வந்த நிலைத்தன்மை [ஸ்திரத்தன்மை] - உண்மையில் நிலைத்தன்மையே அல்ல. இது வெறுமனே மெதுவாக, ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒரு அமைதியான சரிவு" என்று அவள் விவரமாக விளக்கினாள். அவளுடைய மீள்தன்மையை அவர் பாராட்டினார். அவர் அவளது அறிவாற்றலை மதித்தார். அவர்களின் உரையாடல்கள் சிந்தனை மிக்கவையாக அளவுடன் இருந்தன. "நீங்கள் தனியாக இருக்கக்கூடாது," என்று அவர் மீண்டும் ஒருமுறை எழுதினார். "நான் தனியாக இல்லை," என்று அவள் பதிலளித்தாள். "நான் என்னுடன் வாழ்கிறேன்." என்றாள். அவர்களின் உரையாடல் எளிமையானதாகவே தொடர்ந்தன. ஒரு முறை, அதிகாரி: “எப்படி இருக்கீங்க?” கண்மணி: “உடம்பு சரியில்லை... வாழ்க்கை சோகமாக இருக்கிறது.” அவர் உடனே ஒரு கவிதையை அவளுடன் பகிர்ந்து கொண்டார்: "In the hidden shadow of your eyes, I burn with the touch of memory, Love arrives, yet never heals, You remain the light of my dreams." "உன் கண்களின் - மறைந்த நிழலில் நினைவின் தீண்டலால் - நான் எரிகிறேன் காதல் வருகிறது - ஆனால் பலனில்லை கனவுகளின் ஒளியாகவே - நீ இருக்கிறாய்." கண்மணி தன் இதயத்திலும் உடலிலும் ஒரு சிறிய பரபரப்பை, உணர்ச்சின் பாச்சலை உணர்ந்தாள். என்றாலும் காதல் என்றுமே தன் வாழ்வில் சாத்தியமற்றது என்று திடமாக இன்னும் நம்பும் அவள், காதல் கவிதை - ஆசையின், காமத்தின் பாதுகாப்பான அனுபவத்தை இன்பத்தை தனக்கு கொடுக்கிறது என்று எனினும் நம்பினாள். அவர் மீண்டும் சில கவிதைகளை அனுப்பினார். அவை நீண்ட காலமாக செயலற்ற நிலையில் அவளிடம் இருந்த ஒன்றைத் தூண்டின - விரக்தியை அல்ல, நினைவை. ஆபத்து இல்லாத ஆசையை. அவள் அதை அனுபவிக்க தன்னை அனுமதித்தாள். வார்த்தைகள் பாதுகாப்பானவை. தூரம் மரியாதைக்குரியது. அவள் அந்த ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ஒருபோதும் பொய் சொல்லவில்லை. அவரின் எழுத்தை, கவிதையை, கதையை ரசித்து வாசித்தாள். அதில் உள்ள காதலை, காமத்தை, அழகின் வர்ணனைகளை, ஒன்றும் விடாமல் ரசித்தாள். மகிழ்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல்கள் ஆழமடைந்தன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் துளி/DROP: 2001 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/33341508072164411/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 92 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 92 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 33: துட்டகாமினியின் மகன் சாலி ராஜகுமாரன் [Salirajakumara] ஒரு சண்டாளப் (மிகவும் தாழ்ந்த சாதி / சண்டாளன் (Chandala) (சமக்கிருதம்: चण्डाल) என்ற சமசுகிருத சொல்லிற்கு சுடுகாட்டில் பிணஞ்சுடுபவரைக் குறிக்கும். இவர்கள் சுடுகாட்டிலே பிணஞ்சுடும் தொழிலைப் பரம்பரையாகச் செய்து வருகின்றனர். தமிழில் சுடுகாட்டில் பணிபுரிபவர்களை வெட்டியான் என்று அழைப்பர்.) பெண்ணை நேசித்ததால், அந்த சண்டாள பெண்ணுக்காக தனது அரச பதவியை அவன் துறந்தான். அதனால், துட்டகாமினியின் சகோதரரான சத்தாதீசன் [சத்தா திச்சன் / Saddha Tissa] அரசரானார். இவர் பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். சத்தாதீசன் நான்கு மகன்களைப் பெற்றார்; லஞ்ச திச்சன், துலத்தன், கல்லாட நாகன் மற்றும் வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் [Lanjatissa, Thulathana, Khallatanaga, and Vattagamani]. இரண்டாவது மகனான துலத்தன், லஞ்ச திச்சனை விட இளையவராக இருந்தாலும், அவை உறுப்பினர்கள் [councillors] மற்றும் பிக்குகளின் ஆலோசனையின் பேரில் அல்லது விருப்பத்தின் பேரில் அரியணை ஏறினார். இதனால், நட்புமுறிவுற்று, மனவேறுபாடு கொண்ட மூத்த சகோதரர் லஞ்ச திச்சன் [Lanja Tissa, also known as Lamani Tissa] ஒரு மாதம் மற்றும் பத்து நாட்களில் துலத்தனை வென்று அரசரானார். லஞ்ச திச்சன் ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஒன்றரை மாதங்கள் ஆட்சி செய்தார். லஞ்ச திச்சன் இறந்த பிறகு, அவரது தம்பி கல்லாட நாகன் அரசரானார், ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். கல்லாட நாகனின் தளபதி ராஜாவை வென்றார், ஆனால் ராஜாவின் தம்பி வட்டகாமினி தளபதியைக் கொன்று ராஜாவானார். வட்டகாமினி கல்லாட நாகனின் மகன் மகசுழி மகாதிஸ்ஸனை [Mahaculika] தனது சொந்த மகனாகக் கவனித்துக் கொண்டார். தனது சகோதரர் கல்லாட நாகனின் மனைவியான அனுலா தேவியை [Anula devi] தனது சொந்த மனைவியாகவும் ஆக்கிக் கொண்டார். அவருக்கு ஏற்கனவே மற்றொரு மனைவி சோமாதேவி [Somadevi] இருந்தார். சுமார் ஆறு மாதங்களில், ஏழு தமிழர்கள் தங்கள் படைகளுடன் மகா திட்டு [Mahatittha] என்ற இடத்தில் தரையிறங்கினர். அதே நேரத்தில், ரோஹணாவில் [Rohana] வசித்து வந்த தீசன் [Tissa] என்ற பிராமணன் (எனவே, திஸ்ஸா அல்லது தீசன் என்பது பிரத்தியேகமாக ஒரு பௌத்த பெயர் அல்ல) ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்து கொண்டிருந்தார். வட்டகாமினி தீசனிடம் சாதுரியமாக இந்த இராச்சியம் உங்களுடையது, ஆனால் மகா திட்டில் தரையிறங்கிய ஏழு தமிழர்களை வெல்லுங்கள் என்று கூறினார். என்றாலும் பிராமணர் ஏழு தமிழர்களுடன் போரிட்டு தோற்றார். ஏழு தமிழர்கள் அபகரிப்பாளர்கள் அல்ல, ஏனெனில் அவர்கள் ராஜா விதித்த நிபந்தனையின் பேரில் பிராமணரிடமிருந்து வெற்றி பெற்று தான் இராச்சியத்தை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் மன்னர் வட்டகாமினியுடன் சண்டையிட்டனர். ஆனால் மன்னர் ஒரு கட்டத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார். அவர் தப்பி ஓடும்போது கர்ப்பிணியாக இருந்த அனுலா தேவியைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணியவனாக அவன் அவளுடனும், அனுலா தேவியின் மகன் மகசுழி மகாதிஸ்ஸன் மற்றும் அவரது சொந்த மகன் மகாநாகனையும் [Mahanaga] அழைத்துச் சென்றார். என்றாலும் தேரின் சுமையைக் குறைக்கவென அவர் தனது அசல் மனைவி சோமா தேவியை அழைத்துச் செல்லவில்லை. ஆனால், சோமாதேவியிடம் தனது கிரீடத்தை கொடுத்துவிட்டு அவளை விட்டுவிட்டு ஓடிவிட்டார். அதுமட்டும் அல்ல, புத்தர் பயன்படுத்தியதாக கருத்தப்பட்ட தானம் செய்யும் பாத்திரத்தைக் கூட அவர் எடுத்துச் செல்லவில்லை. இந்த பிட்சா பாத்திரம் [பிச்சைப்பாத்திரம்; இரப்போர் கலம்], தேவநம்பிய தீசன் காலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது. வட்டகாமினி பதினான்கு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தபோது தனசிவன் [Tanasiva] என்ற தமிழ்ப் பெயர் உடைய ஒருவரால் பராமரிக்கப்பட்டார். பின்னர் அனுலாதேவிக்கும் தனசிவனின் மனைவிக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. அதை சமாதானமாக தீர்க்காமல், தன்னை பதினான்கு ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்த தனசிவனைக், வட்டகாமினி கொன்றான். அதேவேளை, சோமாதேவியின் அழகில் மயங்கிய ஏழு தமிழ்களில் ஒருவர், தாம் வந்த நோக்கத்தை மறந்து, தாம் பெற்ற வெற்றியை மறந்து, அவளை அழைத்துக்கொண்டு, அது தனக்கு போதுமென அடுத்த கரைக்குச் சென்றான். என்றாலும் அவனது பெயர் மகாவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை; அது ஒரு கற்பனையான கதாபாத்திரமாக இருக்க வேண்டும். மற்றொருவர் பத்து அதிசய சக்திகள் படைத்த குருநாதருடைய [புத்தரின்] தானப் பாத்திரத்தை [பிட்சா பாத்திரத்தை] எடுத்துக்கொண்டு, அதேபோல, அவரும் மற்ற கரைக்குச் சென்றான். வெற்றியாளர் தானம் செய்யும் பாத்திரத்தில் திருப்தியடைகிறார் என்றால், மறு கரையில் புத்தர் மிகவும் பெருமையாக வணங்கப்பட்டிருக்க வேண்டும். இங்கேயும் முன்போலவே, அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை; மகாநாமவின் கற்பனை மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். மேலும், தீபவம்சத்தில் ஏழு அல்ல, ஐந்து தமிழர்கள் தான் உள்ளனர். மேலும் பிராமணரின் கதையும் தீபவம்சத்தில் இல்லை. எனவே கட்டாயம் இந்த மூன்று பேரும் மகாநாமவின் கறபனையே என்பது உறுதிப்படுத்தப் படுகிறது. இந்த மன்னர்கள் ஐவரும் [Pulahatta, Bahiya, Panya Mara, Pilaya Mara, and Dathiya, அநுராதபுரத்தின் பஞ்ச பாண்டியர் எனவும் இவர்கள் அழைக்கப்பட்டனர்] தமிழ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் எதிர் கரையைச் சேர்ந்தவர்கள் என்றும் தீபவம்சமும் கூறுகிறது. ஐந்து தமிழர்களில் ஒருவரான புலாகதன்[புலஹதன் / Pulahatha] என்ற தமிழன், பாகியன் [பாஹியா / Bhaiya] என்ற தமிழனைத் தன்னுடைய படைத் தலைவவனாக வைத்துக்கொண்டு மூன்று வருட காலம் ஆட்சி செய்தான். என்றாலும், அவனது தளபதி பாகியன், புலாகதனைக் கொன்று இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மீண்டும் அவனது தளபதி பாண்டிய மாறன் [பணயமாறன் / Panayamara] பாகியனைக் கொன்று ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் தன் முந்தைய அரசனான பாகியன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த பழைய மாறன் [Pilayamara] இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான். அதே போல, இவனின் அமைச்சனாக இருந்த தாட்டியன் [Dathika] இவனைக் கொன்று இவனுக்குப் பின் ஆட்சிக் கட்டில் ஏறினான். முறையே இருவரும் ஏழு மாதங்களும் மற்றும் இரண்டு ஆண்டுகளும் ஆட்சி செய்தார்கள். வட்டகாமினி திரும்பி வந்து தாட்டியனைக் கொன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். 33 ஆம் அத்தியாயத்தின் 78 ஆம் வசனம்: 'புகழ்பெற்ற மன்னன் அனுராதபுரத்துக்கு வந்து தமிழன் தாதிகனைக் கொன்று ஆட்சியை வசப்படுத்திக் கொண்டான்' என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் வட்டகாமினி சோமதேவியை அழைத்து அவளுக்கு பொருத்தமான பதவி வழங்கினார். அவள் இந்தியாவுக்கு முன்பு ஒரு பெயர் தெரியாத தமிழனால், தன் மனைவியாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தால், பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனின் மனைவியாக வாழ்ந்த பின்பு, இந்தியாவில், அந்த பரந்த பெரிய நாட்டில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அவளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானதும் அல்ல. என்றாலும் வட்டகாமினி உடனடியாகவே அழைத்து வந்தான், நம்புபவர்கள் இருக்கும் மட்டும், இப்படியான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கும்! என்றாலும் எதிர் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட புத்தரின் பிச்சைப் பாத்திரத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்று தெரிகிறது; யார் கவலைப்படுகிறார்கள்! எங்கே பிக்குமார் அல்லது புத்த பத்திமான்கள் இலங்கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறார்கள் ?, அது புத்தர் பிறந்த நாட்டிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டான் போலும்! Part: 92 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 33: Salirajakumara was the son of Dutthagamani, and he loved a Candala (very lower caste) woman and forsook the kingship in preference to the Candala woman whom he loved. Saddhatissa, the brother of Duttha Gamani, became the king, and ruled for eighteen years. Saddhatissa had four sons; Lanjatissa, Thulathana, Khallatanaga, and Vattagamani. Thulathana, the second son, ascended the throne on the advice or the preference of the councillors and Bikkhus, even though he was younger to Lanjatissa. The estranged elder brother Lanjatissa overpowered Thulathana in one month and ten days and became the king. Lanjatissa ruled for nine years and a half-month. On the death of Lanjatissa, his younger brother Khallatanaga became the king and ruled for six years. Khallatanaga’s commander overpowered the king, but the king’s younger brother Vattagamani killed the commander and became the king. Vattagamani took care of the son of Khallatanaga, Mahaculika, as his own son. He also made Anuladevi, the wife of his brother Khallatanaga, his own wife. He already had another wife Somadevi. In about six months, seven Damilas landed at Mahatittha with their troops. There was, at the same time, a Brahmin in Rohana with the name Tissa. (Tissa is not exclusively a Buddhist name). This Brahmin was rebelling against the king. Vattagamani shrewdly told Tissa that the kingdom belongs to you, but win over the seven Damilas landed at Mahatittha. The Brahmin fought the seven Damilas and lost. Seven Damilas were not usurpers as they won the kingdom by conquest from the Brahmin by conquest on the condition issued by the king. Then they fought the king Vattagamini and the king fled. When he was fleeing, he took Anuladevi, her son Mahaculika, and his own son Mahanaga with him. He did not take his original wife Somadevi to reduce the load on the car, the chariot. He gave his diadem jewel to Somadevei and fled without her. He did not take the alms-bowl used by the Buddha also with him. Vattagamni was taken care of by Tanasiva, a Tamil name, for fourteen years when he was in hiding. Later there was a quarrel between Anuladevi and the wife of Tanasiva and Vattagamni killed Tanasiva who gave him refuge for fourteen years. One of the seven Damilas, enamoured by the beauty of Somadevi, took her and went to the further coast. His name is not given in the Mahavamsa; must be a fictitious character. Another one took the alms-bowl of the Buddha and left for the other coast well contended. The Buddha must have been venerated on the other coast for a victor to be satisfied with the alms-bowl. His name is also not given in the Mahavamsa; the flight of fancy of Mahanama must have soared very high. Furthermore, it is not seven but five Damilas in the Dipavamsa. The story of the Brahmin is also not in the Dipavamsa. The Dipavamsa says that these kings belonged to Damila tribe, but does not say that they were from the opposite coast. Pulahatha, one of the five Damilas, ruled for three years. His commander Bhaiya slew Pulahatha and ruled for two years. His commander in chief Panayamara slew Bahiya and ruled for seven years. His commander in chief, Pilayamara, slew Panayamara and ruled for seven months. Dathika slew Pilayamara and ruled for two years. Vattagamini came back, killed Dathika, and ruled for twelve years. It is stated in the 33-78 that Dathika was a Damila. Vattagamini then sent for Somadevi and raised her to the appropriate rank. If she was taken to India, was it then so easy to find her in India after fourteen years as an unknown person took her? Vattagamini seems to have not bothered by the Buddha’s alms-bowl taken to the opposite coast. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 93 தொடரும் / Will follow துளி/DROP: 2000 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 92 https://www.facebook.com/groups/978753388866632/posts/33331702509811634/?
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 5 🌙 பாகம் 05 – மேகங்களைத் தொடும் கோபுரம் மறுநாள் காலையில், தாத்தா குடும்பத்தினர் குழந்தைகளின் இதயங்களை உற்சாகத்துடன் துடிக்க வைப்பதற்காக ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்கினர் — மேகங்களைத் தொட்டது போல உயர்ந்து நிற்கும் உலகின் மிக உயர்ந்த கோபுரத்தை அருகில் இருந்து பார்ப்பதற்காக. புர்ஜ் கலிஃபா (அரபு மொழி: برج خليفة என்னும் கலிஃபா கோபுரம்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும். இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் "இமார்" (AMAR) நிறுவனத்தினராவர். கார் மெதுவாக நகரும்போது, தூரத்திலேயே அந்த கோபுரம் ஒளிர்ந்தது. அதன் கண்ணாடி சுவர்கள் சூரியனின் ஒளியைப் பிடித்து மின்னின. அதைக் கண்ட நிலனின் கண்கள் பெரிதாக, ஆச்சரியத்தால் விரிந்தன. “தாத்தா … இது … இது பெரியது இல்லை … இது பிரமாண்டமானது [gigantic]!” என்று அவன் மெல்ல கிசுகிசுத்தான். திரேன், தலையை மேலே உயர்த்தி, அதன் உச்சியைப் பார்க்க முயன்றான். ஒரு வயது ஆரின் கூட அந்த மின்னும் கம்பீரத்தை ரசிக்க, தனது சிறிய கழுத்தை வளைத்து, வானத்தை நோக்கிப் பார்த்தான். அந்த கோபுரம் சூரிய ஒளியில் வைரம் போல ஒளிர்ந்தது. அதன் கண்ணாடி முகப்பு, நகரத்தை கோடிக்கணக்கான சிறிய கண்ணாடிகள் போல பிரதிபலித்தது. உலகம் முழுவதிலுமிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளாலும், கேமராக்கள் படபடப்பாலும் [cameras clicking], வானளாவிய கட்டிடத்தைப் பற்றிய உண்மைகளைச் சுட்டிக்காட்டும் சுற்றுலா வழிகாட்டிகளாலும் அதன் அடிப்பகுதி [தளம்] பரபரப்பாக, உற்சாகமாக இருந்தது. தாத்தா கந்தையா தில்லை மூன்று பேரன்களையும் மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றார். குழந்தைகள் லிஃப்ட்களை [elevators] நெருங்கும் போது தாத்தா அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்தார். "நீங்கள் தரையை விட்டு நீங்காமலேயே பறக்கப் போகிறீர்கள்" என்று தாத்தா கண் சிமிட்டிக் கொண்டு நகைத்தார். குழந்தைகள் தாங்கள் ஒரு சூப்பர் ஹீரோக்களைப் போல மேல் நோக்கிச் செல்வதைக் கற்பனை செய்து கொண்டு சிரித்தனர். லிஃப்டின் [Both "elevator" and "lift" are used interchangeably to describe the vertical transport systems in the world's tallest tower, the Burj Khalifa] உள்ளே, சுவர்கள் தரையிலிருந்து மேல் நோக்கிய பயணத்தைக் காட்டும் டிஜிட்டல் திரைகளால் [digital screens] ஒளிர்ந்தன. நிலன் கண்ணாடி போன்ற காட்சிப் பெட்டியில் முகத்தை அழுத்தி, எண்கள் ஏறுவதைப் பார்த்தான்: 10… 50… 100… 400 மீட்டர்! லிஃப்ட் மென்மையான ஓசையுடன் மேல் நோக்கிச் சென்றது, கீழே உள்ள நகரம் சுருங்கத் தொடங்கியது, கார்களை சிறிய பொம்மைகளாகவும், மக்களை புள்ளிகளாகவும் அது மாற்றியது. "சின்னஞ்சிறு கார்களைப் பாருங்க தாத்தா!" என்று திரேன் கீழே இருந்த தெருக்களைக் சுட்டிக் காட்டி கத்தினான். "இது எறும்புகளின் நகரம் மாதிரி இப்ப இருக்கு தாத்தா!" என்று குரல் கொடுத்தான். அவை உயரமாகச் செல்லச் செல்ல, மேகங்கள் கோபுரத்தைச் சுற்றி வருவது போல் தோன்றியது. நிலன் ஜன்னலில் கையை அழுத்தி, பஞ்சுபோன்ற வெள்ளை மேகங்களைத் தான் தொடுவது போல் கற்பனை செய்து கொண்டான். தாத்தா அவனது ஆச்சரியத்தைப் பார்த்து சிரித்தார், "ஒரு நாள், நீங்கள் ஒரு விமானத்திலிருந்து உண்மையான மேகங்களைக் காண்பீர்கள், ஆனால் இது எங்கள் சிறிய வான சாகசம் மட்டுமே" என்று விளக்கினார். அவர்கள் இறுதியாக கண்காணிப்புத் தளத்தை (Observation Deck) அடைந்த போது, அந்தக் காட்சி அவர்களை மூச்சடைக்க வைத்தது. நகரம் கீழே ரத்தினக் கம்பளம் போல மின்னியது. வானளாவிய கட்டிடங்கள் [Skyscrapers] பெரிய பென்சில்கள் போல உயர்ந்திருந்தன. வளைந்து நெளியும் நதிகள் அல்லது நீர்வழிகள் [waterways] வெள்ளி நூல்கள் போல மின்னின. அப்பால் உள்ள பாலைவனம் கூட காலை சூரியனின் கீழ் தங்க நிறத்தில் மின்னியது. நிலனும் திரேனும் ஜன்னலுக்கு ஓடி, ஒவ்வொரு ஜன்னலாகச் சென்று பார்த்தனர். ஒரு சிறிய வட்டமான கிண்ணம் மாதிரி தெரிந்த ஒரு நீச்சல் தடாகத்தை [pool] நிலன் கண்டான். அதேவேளை, ஒரு பரபரப்பான சந்தையையும், கீழே சிறிய சிறிய கார்கள் ஓடுவது போல தெரிவதையும் திரேன் ஆர்வத்துடன் பார்த்தான். மேலும் குழந்தை ஆரின் கீழே உள்ள விளக்குகள் மற்றும் அசைவைப் பார்த்து உற்சாகமாகத் கைதட்டினான். தாத்தா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய தொலைநோக்கி [பைனாகுலரைக்] கொடுத்து, அவர்கள் தங்கள் நிர்வாணக் கண்ணால் பார்க்க முடியாத விவரங்களைக், அதன் மூலம் காட்டினார். “சிறுகலத் துறைமுகத்தில் [மெரினாவில் / marina] உள்ள சிறிய படகுகளை இப்ப பாருங்கள்?” என்று தாத்தா சொன்னார். .... “அந்தப் பாலமா? மக்கள் பாம் தீவுக்கு [Palm Island] காரில் செல்வது அதில் தான்.” ... என்று தாத்தா விளங்கப் படுத்தினார். இதேவேளை நிலனின் கற்பனை உச்சத்தை எட்டியது - அந்தச் சிறிய படகுகளில் சிறு கடற்கொள்ளையர்கள் பயணம் செய்து, தன்னை நோக்கி கையசைப்பதாக அவன் கற்பனை செய்துகொண்டான். சுற்றிப் பார்த்த பிறகு, அந்த டெக்கில் [deck] ஒரு சிறிய சிற்றுண்டிச்சாலையைக் [கஃபேயைக் / café] கண்டுபிடித்தனர், அதில் குக்கீகளும் பழச்சாறுகளும் காத்திருந்தன. அவர்கள் அவற்றை நுகர்ந்தபோது, குழந்தைகள் மேகங்களைக் கண்டு வியந்தனர், சில மேகங்கள் மிக அருகில் நகர்ந்து வந்ததால், அவற்றை கிட்டத்தட்ட தொட முடியும் போல் அவர்களுக்குத் தோன்றியது. கடந்து செல்லும் மேகத்திற்கு வணக்கம் சொல்வதாக கற்பனை செய்துகொண்டு, நிலன் கையசைத்தபடி “ஹலோ மேகமே!” என்று சிரித்தான். தாத்தா ஒரு வேடிக்கையான விளையாட்டை பரிந்துரைத்தார்: “மேக வடிவங்களை கண்டுபிடிப்போம்!” குழந்தைகள் கண்ணாடியின் மீது தங்கள் கைகளை அழுத்தி, யானைகள், டிராகன்கள் மற்றும் அரண்மனைகள் போல தோற்றமளிக்கும் மேகங்களைப் பெயரிட்டனர். குழந்தை ஆரின் கூட, கடந்து செல்லும் பஞ்சுபோன்ற வடிவங்களை சுட்டிக்காட்டி கூச்சலிட்டான். சூரியன் மறையத் தொடங்கியதும், வானம் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் மாறியது. கீழே உள்ள நகரம் ஆயிரம் மின்னும் நட்சத்திரங்களைப் போல மின்னி, மேலே உள்ள மாயாஜால வண்ணங்களைப் பிரதிபலித்தது. நிலன் தாத்தாவின் தோளில் சாய்ந்து, "தாத்தா... நாம் வானத்தைத் தொடுவது போல் உணர்கிறேன்" என்று கிசுகிசுத்தான். "ஆமாம், குட்டி," தாத்தா மெதுவாகச் சொன்னார், அவரது இதயம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தது. "நினைவில் கொள்ளுங்கள், வானம் ஒருபோதும் எல்லையல்ல - அது சாகசங்களின் ஆரம்பம் மட்டுமே." மேலே கழித்த ஒரு நாளின் நினைவை நெஞ்சிலில் சுமந்து கொண்டு, தயக்கத்துடன் அவர்கள் மேகங்களை விட்டு விட்டு, லிஃப்டில் கீழே இறங்கினார்கள் - அங்கு கட்டிடங்கள் சிறியதாகத் தெரிந்தன, நகரம் புதையல் போல மின்னியது, கற்பனை யதார்த்தத்துடன் உயர்ந்தது. அவர்கள் தங்கள் காரை நோக்கி நடந்து செல்லும் போது, நிலன் தாத்தாவின் கையை இறுக்கமாகப் பிடித்தான். “நாளைக்கு, இன்னும் சாகசங்கள் உண்டா?” என்று அவன் கேட்டான். “எப்போதும்,” தாத்தா புன்னகையுடன் பதிலளித்தார், உலகம் நிறைய ஆச்சரியங்களால் நிரம்பி இருக்கு — நம்ம பயணம் இப்போதுதான் ஆரம்பம்,” என்றார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 06 தொடரும் துளி/DROP: 1999 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 5 https://www.facebook.com/groups/978753388866632/posts/33325804077068144/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 91 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 91 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை தமிழ் காவியமான மணிமேகலையில் துசிதா சொர்க்கத்துக்கு இணையான ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. ‘அறவணர்த் தொழுத காதை’, அத்தியாயம் 12 இல் 71 முதல் 81 வரையிலான வசனங்கள் பார்க்கவும். "சக்கர வாளத்துத் தேவர் எல்லாம் தொக்குஒருங்கு ஈண்டித் துடிதலோ கத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன ஈர்எண் ணூற்றோடு ஈர்எட்டு ஆண்டில் பேர்அறி வாளன் தோன்றும்அதன் பிற்பாடு பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவது போல அளவாச் சிறுசெவி அளப்புஅரு நல்அறம் உளம்மலி உவகையோடு உயிர்கொளப் புகூஉம்" [சக்கரவாளக் கோட்டம் என்பது தேவர்கள் அனைவரும் கூடும் இடம். துடிதல் உலகம் என்பது உயிர்கள் வாழும் உலகம். சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு உயிர் உலகில் மேம்பட்டு விளங்குபவன் திருவடிகளை வணங்கி வேண்டிக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, கதிரவன் தோன்றினான் என்னும்படி, ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டளவில் பேரறிவாளன் (புத்தன்) தோன்றுவான். அதன் பிறகு, பெரிய குளமாகிய ஏரியிலிருந்து சிறு மதகின் வழியே நீர் பாய்வது போல அறநெறி உயிர்களின் உள்ளத்தில் பாயும் - உயிர்த்தலைவன் கூறினான் என்கிறது.] பௌத்த அண்டவியல் (buddhist cosmology) என்பது பௌத்த சித்தாந்தத்தின் படி அண்டத்தை குறித்தும் அதன் தோற்றத்தை குறித்தும் கூறும் இயல் ஆகும். இதை அண்டத்தைக் குறித்த வானியல் மற்றும் அறிவியல் / இயற்பியல் அடிப்படையிலான விளக்கங்களாக, வருணனையாக எடுத்துக் கொள்ள கூடாது. ஏனெனில் இந்த வருணனை மனிதர்களின் பார்வையில் அண்டத்தை விவரிப்பது அல்ல. ஒரு புத்தரின் பார்வையிலோ அல்லது ஒரு அருகனின் ஞானக்கண்களின் (திவ்யாக்ஷுஸ் - திவ்ய கண்கள்) பார்வையிலோ தான் அண்டத்தை பௌத்த நூல்கள் விரித்துரைக்கின்றன. இங்கு காமதாது [Kāmadhātu ] என்ற காம உலகம் ஒன்றையும் காண்கிறோம். இங்கு காமதாதுவின் உலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதால், வெவ்வேறு விதமான சுகத்தை அடையக்கூடியவர்களாக உள்ளனர். அப்படியான உணர்ச்சி ஆசைகளின் உலகம் என்று கூறப்படும் ஆறு சொர்க்கங்களில் ஒன்றாக, புத்த மத அண்டவியலில் ஒரு உயர்ந்த தேவலோகமாக துசிதா சொர்க்கம் (Tusita Heaven) இருக்கிறது. எனவே இது காமதாதுவில் உள்ள ஆறு சொர்க்கலோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மகாவம்சம் போன்ற புத்த மத வரலாற்று நூல்களில், துசிதா சொர்க்கம் மிக முக்கியமானதாக குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அடுத்த புத்தராக வரப்போகும் ஒருவர் இந்த சொர்க்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மகாவம்சத்தில், பல பௌத்த பிரமுகர்கள் மற்றும் போதிசத்துவர்களின் இறப்புக்குப் பிறகு துசிதா சொர்க்கத்தில் பிறந்து, பின்னர் சரியான காலம் வரும் பொழுது அவர்கள் தங்கள் இறுதிப் பிறவிக்காக ஞானோதயம் பெற்றவர்களாக மனித உலகிற்கு இறங்குகிறார்கள் அல்லது மனிதர்களுக்குள் வந்து புத்தராகும் கதைகள் காணப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தின் ஐந்து பெரிய காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை புத்த மதம் சார்ந்தது. இதை எழுதியவர் சிதலைச்சாத்தனார். இந்த காப்பியத்தில் பௌத்த தத்துவங்கள், மறுபிறவி கொள்கைகள், கர்ம வாதம் போன்றவை விளக்கப்படுகின்றன. மணிமேகலையில் நேரடியாக துசிதா சொர்க்கம் பற்றிய குறிப்பிடுதல் இல்லையென்றாலும், பௌத்த மத அண்டவியல் தொடர்பான பல கருதுகளுக்கும் மறுபிறவிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மணிமேகலை கதாபாத்திரம் புத்த மத ஆசாரியர்களின் போதனைகளைப் பெறுவதும், முக்தி (நிர்வாணம்) அடைவதற்கான வழிகளை அறிதலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுருக்கமாக மகாவம்சம் வருங் கால புத்தரின் [Maitreya (Sanskrit) or Metteyya (Pali) is the future Buddha,] பிறப்பை துசிதா சொர்க்கத்துடன் இணைக்கிறது. அதேவேளை மணிமேகலை புத்த மதம் சார்ந்த மறுபிறவிக் கொள்கையை விவரிக்கிறது, ஆனால் துசிதா சொர்க்கத்தை நேரடியாக குறிப்பிடவில்லை. Part: 91 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 It was surprising to see reference to Tusita Heaven in the Tamil epic Mannimeghalai. Refer ‘ARAVANAR WORSHIPPED KAATHAI’, Chapter 12, verses 71 to 75, of the Epic Mannimeghalai. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 92 தொடரும் / Will follow துளி/DROP: 1998 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 91 https://www.facebook.com/groups/978753388866632/posts/33320521544263064/?
-
கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 02 மதுவில் கொஞ்சம் பலவீனமாக இருந்த அவன், கண்மணியைச் சரியாகக் கவனிக்கவில்லை. என்றாலும் எதோ தானோ என்று குடும்பவாழ்வு ஓடியது. ஒருநாள், உண்மை பெரும் சத்தத்துடன் வரவில்லை. அது சுலபமாக வந்தது. அவனுடைய பூட்டப்படாத கைப்பேசி அவள் கைகளில் சிக்கியது. அடிக்கடி தோன்றும் ஒரு பெயர். வேறொரு பெண். வேறொரு வாழ்க்கை. அதில் அவனின் இரட்டை வாழ்வு (Double Life) வெளிச்சத்துக்கு வந்தது. கண்மணி அழவில்லை. கெஞ்சவில்லை. ஒரு முடிவு மட்டும் அவளுக்கு வந்தது. இது தவறு அல்ல. இது திட்டமிட்ட புறக்கணிப்பு. அது துரோகம் மட்டும் அல்ல — கண்மணிக்கு அவள் வாழ்ந்த திருமணம் ஒரு பொய்யென்று உறுதி செய்த தருணம். அவள் துரோகத்தையும் அதனால் மனவேதனையையும் அடைந்தாள். அவளது இளமைக் கனவு சுக்குநூறாகியது. அதிர்ச்சி அடைந்தாள், திருமண வாழ்வை வெறுத்தாள். ஆனால், அவள் கோபப்படவில்லை. அவள் கத்தவில்லை. அவள் விழித்தாள். “பொறுத்துக்கொள்” என்று சொன்ன உலகை அவள் இனி கேட்கவில்லை. “பெண்ணாக இருந்தால் சகிக்க வேண்டும்” என்ற பொய்யை அவள் உடைத்தாள். விவாகரத்து வழக்கறிஞர் மென்மையாகப் பேசினார். “குழந்தைக்காக மீண்டும் யோசியுங்கள்.” நீதிபதி நடுநிலையாகக் கேட்டார். ஆனால் கேள்விகளில் சமூக தீர்ப்பு மறைந்திருந்தது. உறவினர்கள் சொன்னார்கள்: “பெண் பொறுத்துக் கொள்ள வேண்டும்.” கண்மணி ஒருமுறை மட்டும் சொன்னாள்: “நான் திருமணத்திலிருந்து தப்பவில்லை. பொய்யிலிருந்து வெளியேறுகிறேன்.” விவாகரத்து கிடைத்தது. வெளியில் யாரும் வாழ்த்தவில்லை. பெண்கள் பெற்ற சுதந்திரம் பொதுவாகக் கொண்டாடப்படுவதில்லை. உண்மையில் விவாகரத்து கண்மணிக்குத் தோல்வி அல்ல— அது மூச்சை மீண்டும் பெறும் தருணம். கண்மணி ஒரு கணவனை விட்டு வரவில்லை; அவள் தன்னைச் சிதைத்த வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாள். எனக்கு மீண்டும் காதல் அல்லது திருமணம் வேண்டாம். இந்த வகையான வலியிலிருந்து நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள தனிமைதான் ஒரே வழி என்று, தன் பெற்றோரிடம் பிறந்த கைக் குழந்தையுடன் திரும்பினாள். அவளுக்கு உழைப்பு இருந்தது. அந்த உழைப்பு அவளும் மகளும் வாழப் போதுமாக இருந்தது. கண்மணியின் கையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை. வீடும் அதே வாசனை. ஆனால் பார்வைகள், எதிர்பார்ப்புக்கள் மாறின. பெருமைக்கு பதிலாக பரிதாபம் வந்தது. பாசத்திற்குப் பதிலாக அறிவுரை வந்தது. [Pity replaced pride. Advice replaced affection.] அவளுடைய அம்மா அண்டை வீட்டாரைப் பற்றி கவலைப்பட்டார். அவளுடைய தந்தை எதிர்காலப் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்டார். கண்மணி ஒரே ஒரு விடயத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டாள் - தன் மகள் ஒருபோதும் உயிர்வாழ்வதை காதலோடு, அன்போடு குழப்பக்கூடாது [her daughter should never confuse survival with love.]. இரவில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு, அவள் கிசுகிசுத்தாள்: நீ என்னிடமிருந்து மௌனத்தைக் கற்றுக்கொள்ள மாட்டாய் [You will not learn silence from me]. அக்கம்பக்கத்தினர் பார்த்தார்கள். சிலர் பரிதாபப்பட்டனர். சிலர் தீர்ப்பளித்தனர். சிலர் அமைதியாக சரிப்பண்ணி அவனுடன் மீண்டும் இருக்குமாறு அறிவுறுத்தினர். ஒரு உறவினர் மெதுவாக, “குழந்தைக்காக, நீங்கள் சரிப்பண்ணி வாழ்ந்து இருக்க வேண்டும்” என்றார். ஆனால், கண்மணி அமைதியாக, “என் குழந்தைக்காக, நான் சரிசெய்ய மாட்டேன்” ஏன் எனறால், அப்படியான தந்தையிடம் எந்த நல்ல பழக்கவழக்கங்களையோ, பாசத்தையோ குழந்தை காணாது, வெறுப்பைத் தவிர என்றாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1997 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 02] / எனது அறிவார்ந்த தேடல்: 1413 https://www.facebook.com/groups/978753388866632/posts/33310717181910167/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 90 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 90 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை லோகப்பாசாதம் கட்டிடத்திற்கு சக்க கடவுள் [Sakka god] விசுவகர்மனை [Vishvakarma or Visvakamma] செங்கற்களைத் தயாரிக்க அனுப்பினார். இவர் இந்து தொன்மவியலின் படி தேவலோகத்தின் சிற்பி ஆவார். இவர் தேவதச்சன், தேவசிற்பி என்றும் அறியப்படுகிறார். பல்வேறு அளவுகளில் தங்கப் பலகைகள் கிடைத்தன. மக்கள் செம்பையும் கண்டுபிடித்தனர். விலைமதிப்பற்ற கற்களும் கிடைத்தன. வெள்ளியும் ஏராளமாகக் கிடைத்தன. முத்துக்கள் கரை ஒதுங்கின. இதனால் மகா தூபிக்குத் தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாகக் கிடைத்தன. இது முழுக்க முழுக்க தூய கற்பனை, இதற்கும் மனித வரலாற்றுக்கும் சம்பந்தம் இல்லை. அது மட்டும் அல்ல, மகா தூபியின் கட்டுமானத்தைப் பார்வையிட வந்த தேரர்களின் எண்ணிக்கை மட்டும் 29 ஆம் அத்தியாயத்தின்படி சுமார் 1.37 மில்லியன் ஆகும். மேலும், விருப்பு வெறுப்புகளைக் கைவிட்டவர்களில் 960 மில்லியன் பேர் இருந்தனர் என்றும் கூறுகிறது. இன்றைய இலங்கை மக்கள் தொகை கூட முப்பது மில்லியனுக்கு மேல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி எனறால், மக்களின் எண்ணிக்கை இலங்கையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு என்று நீங்களே ஊக்கியுங்கள்? ஏன் இந்த பித்தலாட்டம் ? மகாநாமாவைத் தான் கேட்கவேண்டும்? இன்னும் இரண்டையும் உங்களிடமே விட்டு வைக்கிறேன். முதலாவது புத்தர் தனக்கு உதவ அழைப்பது இந்து தெய்வங்களையே [உதாரணம் இந்திரன், கிருஷ்ணர் .... மற்றும் இப்ப தேவலோக சிற்பி விசுவகர்மன்], ஆனால் இன்று நடப்பது என்ன ? புத்தர் தமிழர்கள் வாழும் இடங்களில் பலவந்தமாக நுழைகிறார், முளைக்கிறார், இந்து வழிபாடுகளை மூடுகிறார், தடுக்கிறார் ..... இரண்டாவது, தேவலோகத்தின் சிற்பி மூலமும், தானாகவே அனைத்து விலை உயர்ந்த கட்டிட பொருட்களும் கூட வந்தன. அப்படி இருந்தும், இவ்வாறு சிறப்புமிக்க அந்த லோகப்பாசாதம் தீயினால் பலமுறைஅழிக்கப்பட்டு கல் தூண்கள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன என்பது எதைச் சொல்லுகிறது ? அது மட்டும் அல்ல, முப்பதாயிரம் பிக்குகள் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து (கிரீஸ்) வந்ததாகவும் கூறப்படுகிறது. நானூற்று அறுபதாயிரம் பிக்குகள் பெர்சியாவிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கிரேக்கர்கள் மற்றும் பெர்சியர்களிடையே பௌத்தம் ஒருபோதும் செல்வாக்கு செலுத்தவில்லை என்பது உண்மையான வரலாறு. அதுமட்டும் அல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு, ஏன் இன்று கூட, இத்தனை ஆட்கள் வர வசதி உண்டா என்பதை நீங்களே கூறுங்கள்? இருப்பினும், இவை உண்மையான மனித வரலாற்றுக்கு சம்பந்தம் இல்லை என்றே நினைக்கிறன். பல அற்புதமான நிகழ்வுகளுடன் நினைவுச்சின்ன அறையின் கட்டுமானம் நடைபெற்று, அங்கே நினைவுச்சின்னம் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 'Gandharan buddhist reliquaries by David Jongeward (Author), Elizabeth Errington (Author), Richard Salomon (Author), Stefan Baums (Author)', என்ற குறிப்பின்படி, புத்தரின் எச்சங்கள் ஒரு பிராமண துரோணரால் [Brahmin Drona] எட்டு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எட்டு உரிமை கோருபவர்களுக்கு வழங்கப்பட்டன. மௌரிய மன்னர் அசோகர் பின்னர் அசல் எட்டு பகுதிகளில், ஏழு பகுதிகளை மட்டும் மீட்டெடுத்து, அவையை, 84,000 பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் 84,000 தூபிகளைக் கட்டினார். மிகச் சிறிய தொகையை 84,000 பகுதிகளாகப் பிரிக்கும் தொழில்நுட்பம் அவரிடம் இருந்ததா என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயம். இருப்பினும், நாக மன்னர் தனது வசம் வைத்திருந்த பகுதியை அசோகரால் மீட்டெடுக்க முடியவில்லை என்பது புராணக்கதை, ஆனால் மகாவம்சத்தின் 31 ஆம் அத்தியாயத்தின்படி, நாகர்களிடம் இருந்த பகுதியை துட்டகாமினி மீட்டுப் பெற முடிந்தது. அசோகரால் சாதிக்க முடியாததை துட்டகாமினி சாதித்ததால், துட்டகாமினி அசோகரை விட வலிமையானவர் என்பதைக் இது மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறது எனலாம். அவ்வாறு பெறப்பட்ட நினைவுச்சின்னப் பகுதி தான் நினைவுச்சின்ன அறையில் பதிக்கப்பட்டுள்ளது. மனித வரலாற்று சம்பந்தம் இல்லாத பல புராணக்கதைகள் மற்றும் அதிசய நிகழ்வுகள் இந்த அத்தியாயங்களில் காணப்படுகின்றன. பின்னர், இறுதியாக, துட்டகாமினி துசிதா சொர்க்கத்திற்குச் [Tusita Heaven] சென்றார். எந்தவொரு விவாதத்திற்கும் தகுதியற்ற பல அற்புதமான மற்றும் நம்பமுடியாத நிகழ்வுகள் இங்கு உள்ளன. என்றாலும் இவை வரலாற்றுக்குப் எள்ளளவும் பொருத்தம் இல்லாதவை ஆகும். Part: 90 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Sakka god sent Visvakamma to prepare the bricks. Visvakamma is a legendary builder for the celestial world. He came here to prepare bricks. There happened to occur golden slabs in various sizes. People found copper too. So did the precious stones. Silver too was found in abundance. Pearls washed ashore. Thus all the materials needed for the Mahathupa became available free. This is a pure imagination, and it has no human historical relevance. The number of Theras came to visit the construction of the Great Thupa is about 1.37 million as per the chapter 29. Furthermore, there were 960 millions of those who gave up likes and dislikes. Even the present day population Ceylon may not be greater than thirty millions. It is also stated that thirty thousand Bhikkhus came from Alexandria (Greece). It is also claimed that four hundred and sixty thousand Bikkhus came from Persia. The Buddhism never had influence among the Greeks and the Persians. The above numbers are mentioned to show the extent of the over statements made in the Mahavamsa. It has, however, no human historical relevance. The construction of the Relic Chamber was with so many miraculous happenings. The relic is enshrined in the already constructed Relic Chamber. As per Reference 9, Buddha’s remains were divided into eight equal portions by a Brahmin Drona to be given to eight claimants. Maurayan king, Asoka, later recovered seven of the original eight portions, and divided into 84,000 portions, and constructed 84,000 Stupas over each portion. Whether he had the technology to divide a very small amount into 84,000 portions is a moot point. However, the legend is that Asoka could not recover the portion, which Naga king had in his possession, but as per the chapter 31 of the Mahavamsa, Dutthagamani was able get the portion that Nagas had. It is to indicate that Dutthagamani is mightier than Asoka is as Dutthagamani achieved what Asoka could not. The relic portion so obtained is enshrined in the Relic Chamber. There are so many legends and miraculous events, which have no human historical relevance. Then, at last, Duttha Gamni went to the Tusita Heaven. There are so many fabulous and miraculous events, which merits no discussion as none had any human historical relevance. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 91 தொடரும் / Will follow துளி/DROP: 1996 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 90] https://www.facebook.com/groups/978753388866632/posts/33299136156401603/?
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 4 🏖️ பாகம் 04 – அல் மர்ஜான் தீவிலுள்ள உல்லாச விடுதி மற்றும் ஸ்பா [அரோக்கிய நீரூற்று] வை தன்னகத்தைக் கொண்ட 'டபுள் ட்ரீ ஹோட்டல்' [DoubleTree by Hilton Resort & Spa, Marjan Island] கடலுக்குள் 4.5 கி.மீ நீளமுள்ள அல் மர்ஜன் தீவு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட தீவுக்கூட்டத்தில் உள்ள 4 பவள வடிவ தீவுகளின் குழுவாகும். அது மட்டும் அல்ல, இது ஒரு அருமையான சுற்றுலா தலங்கள் கொண்ட இடமாகும். இங்குதான் 'டபுள் ட்ரீ ஹோட்டல்' அமைந்துள்ளது. தாத்தாவும் மூன்று பேரன்களும் 'டபுள் ட்ரீ ஹோட்டல்' [DoubleTree by Hilton Resort & Spa, Marjan Island] என்ற அழகிய விடுதிக்குச் சென்ற தருணத்தில், குழந்தைகள் ஒரு கனவில் அடியெடுத்து வைத்தது போல் உணர்ந்தனர். தங்க மதிய வெயிலின் பொற்கதிரில், உல்லாச விடுதி மின்னியது, அதன் வெள்ளை கட்டிடங்கள் மின்னும் குளங்களால் சூழப்பட்டு இருந்தன. அங்கு சூழப்படிருந்த பசுமையான தோட்டங்கள் காற்றில் மெதுவாக ஆடின. இவைகளைக் கண்டு பரவசம் அடைந்த நிலனின் கண்கள் விரிந்தன. “தாத்தா ... தண்ணீர் எல்லாம் இருக்கு பாருங்க! கடற்கரையும் இருக்கு!” என்று கூறி, மணல் கரையில் மோதிய நீல நிற அலைகளை சுட்டிக் காட்டி அவன் கூச்சலிட்டான். திரேன், ஏற்கனவே தனது சிறிய துணிமணி பெட்டியை இழுத்துக் கொண்டு முன்னால் ஓடிக் கொண்டிருந்தான், அதே நேரத்தில் குழந்தை ஆரின் அலைகளின் சத்தத்தால் கவரப்பட்டு மகிழ்ச்சியில் கதறினான். "வரவேற்கிறோம் , குட்டி சாகசக்காரர்களே!" ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். புதிதாக சுடப்பட்ட பிரபலமான டபுள் ட்ரீ சாக்லேட் சிப்ஸ் குக்கீகள் [DoubleTree chocolate chip cookies] ஒரு தட்டில் வைத்து பரிமாறினார்கள். குழந்தைகள் மூவரும் அவற்றை முதல் கடித்து உண்ணும் போது அவர்களின் கண்கள் மின்னின. "ம்ம்ம்... மாயாஜால மந்திரக் குக்கீகள்!" நிலன் சொன்னான். அப்பொழுது சிறு துண்டுகள் உடைந்து அவன் மேல் சட்டையில் விழுந்தன. தாத்தா அதைக் கண்டு சிரித்தார். கடற்கரை மற்றும் நீச்சல் தடாகம் போன்றவற்றை நோக்கிய பால்கனியுடன் [balcony] கூடிய விசாலமான அறையில் தங்கிய பிறகு, தாத்தா மற்றும் குழந்தைகள் ஜன்னல்களுக்கு விரைந்தனர். நிலன் தனது கைகளை கண்ணாடியின் மீது அழுத்தி, சிறிய நண்டுகள் மணலில் வேகமாக ஓடுவதைப் பார்த்தான், அதே நேரத்தில் திரேன் தண்ணீரை நோக்கி டைவிங் [குதித்து நீந்துவது / diving] செய்யும் இரண்டு கடற்பறவைகளைக் [seagulls] கண்டான். மென்மையான காற்று அவன் தலைமுடியை அசைக்கும் போது, குழந்தை ஆரின் கூட மகிழ்ச்சியுடன் கைதட்டினான். அடுத்த சாகசம் வெளியே கடற்கரையில்தான்: மணல் கோட்டை கட்டுதல். தாத்தா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய வாளி மற்றும் மண்வெட்டியைக் கொடுத்தார். "இன்று, அல் மர்ஜன் தீவில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய கோட்டையை நாங்கள் கட்டுகிறோம்," என்று தாத்தா உற்சாகமாகச் சொல்லி, குனிந்து மணலை அள்ளினார். குழந்தைகளின் கற்பனைகள் கட்டுக்கடங்காமல் ஓடியது. நிலன் உயரமான கோபுரங்களைச் செதுக்கி, அவற்றைச் சுற்றி அகழிகளைச் செதுக்கினான். கடல் சிப்பிகளை அலங்காரமாக வைத்தான். அதே நேரத்தில் திரேன் பாலங்கள் மற்றும் ரகசிய சுரங்கப்பாதைகளை செதுக்கினான். அதன் பின் தாத்தாவும் சேர்ந்து, சுவர்களை வடிவமைத்து, சிறிய ஜன்னல்களை செதுக்கினார், அதே நேரத்தில் ஆரினின் சிறிய கைகள் மணலை நசுக்கி, மகிழ்ச்சியான "ஸ்ப்ளோஷ்" "ஸ்ப்ளோஷ்" [“splosh”] ஒலிகளை எழுப்பினான். விரைவில், இலைகள் மற்றும் கடல் ஓடுகளால் [seashells] ஆன கொடிகளுடன் கூடிய ஒரு கம்பீரமான மணல் கோட்டை கடற்கரையின் ஓரத்தில் பெருமையுடன் நின்றது. மணல் கோட்டைகளுக்குப் பிறகு, நீச்சல் குளத்திற்குள் சென்று தண்ணீரில் விளையாடுவது, நீந்துவது அல்லது தண்ணீரைச் சிதறடித்து விளையாடுவது என்று தாத்தா முடிவெடுத்து, மூன்று பேரன்களுடனும் அங்கு சென்றார். நிலனும் திரேனும் ஆழமற்ற பகுதியைக் கடந்து கொஞ்சம் ஆழமான பகுதிக்கு பாய்ந்து நீந்த ஓடினர். ஒவ்வொரு முறையும் தண்ணீர் முகத்தில் தெறிக்கும்போது சிரித்தனர். மிதக்கும் வளையத்தில் [floating ring] பாதுகாப்பாக அமர்ந்திருந்த ஆரின், ஒவ்வொரு சிறிய அலையையும் பார்த்து சிரித்தான். தாத்தாவும் அவர்களுடன் சேர்ந்து, சிறிய நுரை பந்துகளை [foam balls] வீசி, விளையாட்டுத்தனமான நீர் சண்டைகளை உருவாக்கினார், இது குழந்தைகளை மகிழ்ச்சியுடன் சத்தம் போட்டு சிரிக்க வைத்தது. கதிரவன் கீழே இறங்க, உல்லாச விடுதி மீது தங்க நிற பிரதிபலிப்புகள் வீச, தாத்தாவும் மூன்று பேரன்களும் கடற்கரையில் நடந்து சென்றனர். தாத்தா சிறிய நட்சத்திர மீன்களையும், இதய வடிவிலான ஓடுகளையும், பக்கவாட்டில் சிதறிக் கிடந்த ஒரு நண்டையும் சுட்டிக்காட்டினார். இது நிலனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. "இது ஒரு புதையல் வேட்டை போன்றது!" என்று அவன் ஒரு பளபளப்பான கடல் ஓடு [seashell] ஒன்றை எடுத்துக் கொண்டு கூச்சலிட்டான். அன்று மாலை, உல்லாச விடுதி [resort] அவர்களுக்கு ஒரு சிறப்பு ஆச்சரியத்தை அளித்தது - அது ஒரு குக்கீ அலங்கார ஏற்பாடு [a cookie-decorating session]. குழந்தைகளுக்கு இன்னும் மென்மையாகவும் சூடாகவும் உள்ள, அடுப்பிலிருந்து உடன் வெளியே வந்த குக்கீகள் அவை. குக்கீகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பிரகாசமான வண்ணங்களில் (சிவப்பு, நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு போன்ற) அடர்த்தியான, இனிமையான ஐசிங் [colorful icing] மற்றும் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், ஊதா போன்ற, கற்பனை செய்யக்கூடிய சாத்தியமான அனைத்து வண்ணங்களிலும் சிறிய மிட்டாய் மேல்புறங்கள் அல்லது மேல் வண்ணமிடல் [tiny candy toppings] வழங்கப்பட்டன. நிலன் அவர்களின் முன்னைய மணல் கோட்டை மாதிரி ஒரு குக்கீ கோட்டையை உருவாக்கினான். அதை பாதுகாக்க திரேன் ஒரு குக்கீ டிராகனை [cookie dragon] உருவாக்கினான். மேலும் ஆரினின் சிறிய குக்கீ எளிய புள்ளிகளால் அலங்கரிக்கப்பட்டு, அங்கே ஒரு சிரிப்பின் தடயத்தை விட்டுச் சென்றது. இறுதியாக, இரவு வந்தபோது, தாத்தாவும் பேரன்களும் தங்கள் பால்கனிக்குத் திரும்பி, தண்ணீருக்கு மேல் நட்சத்திரங்கள் மின்னுவதைப் பார்த்தார்கள். அலைகளின் மென்மையான சத்தம் ஒரு தாலாட்டுப் பாடலைப் போல இருந்தது, குழந்தைகள் தாத்தாவை நெருங்கி அணைத்துக் கொண்டனர், அவர்களின் சிறிய இதயங்கள் மகிழ்ச்சியாலும் சாகசத்தாலும் நிறைந்திருந்தன. “தாத்தா... நாம் இங்கே என்றென்றும் தங்கலாமா?” நிலன் கொட்டாவி விட்டபடி கிசுகிசுத்தான். என்றாலும் அவன் இன்னும் உற்சாகமாக இருந்தான். தாத்தா அவனை நெருங்கி அணைத்துக் கொண்டு சிரித்தார். "நாளைக்கு, இன்னும் பல சாகசங்கள் காத்திருக்கின்றன. ஆனால் இன்றிரவு, அரண்மனைகள், குக்கீகள் மற்றும் அல் மர்ஜன் தீவின் மாயாஜாலத்தைக் கனவு காண்போம்." என்றார். அதனால், மின்னும் நட்சத்திரங்களின் கீழ், மூன்று சிறிய சாகச வீரர்கள், மர்ஜான் தீவின் மென்மையான அலைகளின் ஒலியிலும் நட்சத்திரங்களின் ஒளியிலும் - வானத்தை எட்டிய மணல் கோட்டைகள், ஒருபோதும் முடிவடையாத சாக்லேட் குக்கீகள் மற்றும் முடிவற்ற சாகசங்களின் ரகசியங்களை கிசுகிசுக்கும் அலைகள் பற்றிய கனவுகளில் - முடிவில்லா மகிழ்ச்சியுடனும் இனிய நினைவுகளுடனும் திளைத்தனர். ✨ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 05 தொடரும் துளி/DROP: 1995 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 4 https://www.facebook.com/groups/978753388866632/posts/33293662250282327/?
-
15 / 01 / 2026 : "84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 84th Birthday, dear elder brother"
15 / 01 / 2026 : "84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 84th Birthday, dear elder brother" 84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா! கலாநிதி கந்தையா சுந்தரலிங்கமே! ஒளிரும் விண்மீனே! எங்கள் நேசத்துக்குரிய அத்தியடியின் வாரிசே புகழ் சூழ பெருமையுடன் வாழ்ந்தவரே! யாழ் மத்திய கல்லூரியில் வேர்கள் நாட்டப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளர்ந்து மலர்ந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஞானப் பழமாகி அறிஞன் வாழ்க்கை ஒளிர்ந்து வீசியதே! இயற்பியல் விரிவுரையாளராக கனிந்த பழமாகி சரியான இடத்திற்கு மாணவர்களை வழிநடத்தி மெல்போர்னில் பெருமையுடன் ஓய்வு பெற்றவரே! ஞானம் நிறைந்த வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதே! உங்கள் இரக்கமும் நகைச்சுவையும் ஆறுதல் தர எங்கள் இதயங்களில் பிரகாசமாக இருப்பவரே! எண்பத்தி நான்கு ஆண்டு அன்பும் மகிழ்ச்சியும் நேர்மையான ஆன்மாவின் நலமான வாழ்வே! உவகை மலர மகிழ்வு பெறுக கொண்டாடுகிறோம் ஒரு சகோதரர், ஒரு வழிகாட்டி, ஒரு கலங்கரை விளக்கை! ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் என்றென்றும் இருக்கட்டும் அன்புள்ள அண்ணா அகவை திருநாள் வாழ்த்துக்கள்! அன்புடன் தம்பி 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம் & குடும்பம்' Happy 84th Birthday, dear brother of mine, Dr. Kandiah Sundarlingam, a star that shines. Born in Athiady, our cherished hometown, Your journey through life brings you renown. From Jaffna Central, your roots were laid, At Colombo’s halls, your brilliance displayed. Durham’s towers saw your wisdom grow, A scholar’s path, a radiant glow. A Physics lecturer of honor and grace, Guiding students to a brighter place. In Melbourne now, your well-earned rest, A life of wisdom, truly blessed. Your kindness and humor, a comforting light, In our family’s hearts, forever bright. Eighty-four years of love and cheer, A life well-lived, a soul sincere. So today we celebrate, with joy and delight, A brother, a mentor, a guiding light. May health and happiness forever stay, Happy Birthday, dear Anna, on this special day! With love and admiration, Thampi 'Kandiah Thillaivinayagalingam & family ' 15 / 01 / 2026 : "84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother" https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid028uckL9HBVU3ULzV2wmRfr1iDJxzvftb7ZUcBWFwK3vswXhfDa3NpVNK86dQ2jGhdl?
-
"தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!"
"தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!" கி மு 500 ஆம் ஆண்டு புறநானுறு / 500 BC old, Purananuru 172 Says: "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!''கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக " "Set the pot on the stove!Cook the rice!Do not stint on toddy!Let the viralis[female artists] with gleaming jewels who are skilled in singing,wear garlands!" இருநூறாம் நூற்றாண்டு சிலப்பதிகாரம் / 200 AD old, Silappathikaram 5;68-69 Says: “புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' On the day on which the moon approached the cittirai star in the month of cittirai (i.e. on the full-moon day) the sacrifice of boiled grains, sweetened sesame balls, meat mixed with rice, flowers, incense, and toddy was offered தொள்ளாயிரம் ஆண்டு சீவகசிந்தாமணி / And 900 AD old, Seevaga Chinthamani-1821 Says: “மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்'' The sweet milky rice is boiling in the new mud pot over the red fireplace "முருகிற்கு அழகு சேர்த்த தையே பெருவிழா காண என்னை அழைத்தாயோ? தை பிறந்தால் வழிபிறக்கும் என்று தைரியம் காட்டி என்னைக் கூப்பிட்டாயோ? தைத்து புத்தாடை எல்லோரும் அணிய தையல் பொங்கும் பொங்கலோ பொங்கல்!” As the harvest moon shines bright, Thai Pongal arrives, filling hearts with pure delight. Fields adorned with sugarcane, turmeric, and rice, A festival of gratitude, a moment so nice. Sun's golden rays paint the morning sky, A symbol of prosperity, as the birds joyfully fly. Pongal pot overflows with abundance and cheer, May this auspicious day bring happiness near. (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் குடும்பம் அத்தியடி, யாழ்ப்பாணம்) (Kandiah Thillaivinayagalingam & family , Athiady, Jaffna) "தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!" https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid02mHLanWtXaHFk59SuikHzt9wFRCqNZi4iifwTU7ubHfKeSG19eUnUM2gpNHhGXednl?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 89 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 89 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை எல்லாளனை வெல்லமுன், முப்பத்திரண்டு மன்னர்கள் அங்கு இருந்தனர். துட்டகாமினி அனைவரையும் தோற்கடித்து தனது இறுதி வெற்றியை அடைந்தான். எனினும் நடந்த பல கொலைகள் குறித்து துட்டகாமினி அதிருப்தி அடைந்தபோது, புத்த பிக்குகள் துட்டகாமினியை ஆறுதல்படுத்தினர், அவர் ஒன்றரை பேரை மட்டுமே கொன்றார் என்றும், மற்ற அனைவரும் புத்த மார்க்கத்தை நம்பாதவர்கள் - மிருகங்கள்! புத்தர் எப்படிப்பட்ட அசுர துறவிகளைப் படைத்தார்! நீங்களே தேரர்கள் சொல்வதைக் கேளுங்கள்! அதற்கு அத்தியாயம் 25-104 - 112 ஐப் முழுமையைப் பார்க்கவும். உயர்ந்த மஞ்சக்தில் சாய்ந்து கொண்டு மன்னன் அதை ரசித்தான். தன்னுடைய புகழ்மிக்க வெற்றியைப் பற்றி எண்ணமிட்ட அவன் அது மகத்தானதாயினும் மனதுக்கு மகிழ்வளிக்கவில்லே என்பதைக் கண்டான். அதன் மூலம் லட்சக்கணக்கானவர்கள் அழிய நேரிட்டது என்பதை அவன் மறக்கவில்லே. பியாங்கு தீபத்திலுள்ள [Piyahgudipa, இன்றைய புங்குடுதீவாக அடையாளம் காணப்பட்டுள்ளது.] தேரர்கள் இவனுடைய மனதில் உள்ளதை அறிந்ததும் அரசனைத் தேற்றுவதற்கு எட்டு தேரர்களே அனுப்பிவைத்தினர். நள்ளிரவில் வந்து சேர்ந்த அவர்கள் அரண்மனை வாசலில் இறங்கினர். தாங்கள் வந்திருப்பதை அறிவித்துவிட்டு ஆகாய மார்க்கமாகவே அரண்மனை மேன்மாடத்தை அடைந்தனர். அரசன் அவர்களே வரவேற்று உபசரித்தான். ஆசனங்களில் அமரச் செய்து பலவித மரியாதைகளேச் செய்த பின்பு அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டான். பியாங்கு தீபத்திலுள்ள பிக்குகளால் தங்களுக்கு ஆறுதல் கூற அனுப்பப் பட்டோம் என்று அவர்கள் கூறினர். அதன் பேரில் அரசன் மீண்டும் சொன்னான்; எனக்கு எப்படி ஆறுதல் ஏற்பட முடியும்? வணக்கத்துக்கு உரியவர்களே ! என்னால் அல்லவோ லட்சக்கணக்கானவர்கள் மடியும்படி நேரிட்டது ' என்றான். இந்தச் செய்கையின் காரணமாக நீ சுவர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத்தடையும் ஏற்படாது. ஒன்றரை மனிதர்கள் மட்டுமே உன்னால் இங்கு கொல்லப்பட்டார்கள். ஒருவர் மும்மணிகளேச் சரணடைந்து விட்டார். மற்றவர் பஞ்சசீலங்களை மேற்கொண்டு விட்டார். மற்றவர்கள் எல்லாம் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள். தீய வாழ்வை மேற்கொண்டவர்கள் - மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள். "ஆனால் நீயோ புத்தருடைய போதனைகளுக்குப் பலவிதத்திலும் பெருமை தேடப் போகிறவன். எனவே உன் மனதிலிருந்து கவலேயை அகற்று அரசனே !" என்று அவர்கள் ஆறுதல் கூறினர். இவ்வாறு அவர்களால் கூறப்பட்ட அரசன் ஆறுதலடைந்தான். அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுப் படுக்கையில் சாய்ந்த அவன் மீண்டும் எண்ணத்தில் மூழ்கினான். சுவாரஸ்யமாக, அந்த ஆறுதல் கூற வந்த துறவிகள் புங்குடுதீவில் இருந்து காற்றின் வழியாக பறந்து வந்தனர். மீண்டும் ஒரு பெரிய பொய்! யானை கந்துலா [elephant Kandula] மிகவும் வலிமையானது, ஆனால் நந்திமித்ரன் [Nandhimithra or Nandhimitta] அதைத் தனது கையால் அடக்கினார். யாராவது அதை நம்ப முடியுமா? மகாநாமா, எல்லா வாசகர்ககளும் அதை நம்புவார்கள் என்று எதிர்பார்க்கிறார். கலிங்க மன்னருடனான போரில் நடந்த கொலை மற்றும் ஊனமுற்றதற்கு பேரரசர் அசோகர் உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அசோகரின் மூலம் புத்த மதம் இலங்கைக்கு பரவியதாகவும் தேவநம்பிய தீசனின் உற்ற நண்பன் அசோகன் என்று பெருமைப்படும் இலங்கையின் துறவிகள் அசோகர் மன்னர் செய்ததற்கு நேர்மாறாக இங்கு செயல்படுகின்றனர். இருப்பினும், நன்றியுள்ள சிங்கள மக்கள் கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மன்னன் எல்லாளனை வணங்கினர். மேலும் இந்த குறிப்பிட்ட அத்தியாயங்களில், மரிசவட்டி விகாரையின் [அல்லது மாரிசவதி விகாரை / Maricavatti Vihara] கட்டுமானம் மற்றும் அதன் பதிட்டை விழா [அபிஷேக விழா], அதாவது பிரதிஷ்டை - விதிமுறைகளுக்குட்பட்ட சடங்குகளோடு நிலைபெறச் செய்தல் அல்லது கட்டுமானம் முடிந்தபின் இறுதியாக நடைபெறும் புனிதப்படுத்தும் திறப்பு விழா பற்றி உள்ளது. இந்த மரிசவட்டி விகாரை அனுராதபுரத்தில் உள்ள ஒரு பெரிய புத்த மடாலய வளாகமான மகா விகாரைக்குள் உள்ள ஒரு கட்டிடம். இதை இன்று மிருசவேட்டையா தூபி [Mirisavetiya Stupa] என்று நம்புகிறார்கள். இது துட்டகாமினி, தனது ஈட்டியை, நட்ட இடத்தில் கட்டப்பட்டதாகவும் அந்த ஈட்டியில் புத்தரின் நினைவுச்சின்னம் [தாது / Relics] இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த அத்தியாயத்தில் லோகப்பாசாதத்தின் கட்டுமானம் [construction of the Lohapasada] மற்றும் அதன் பிரதிஷ்டை உள்ளது. இது புத்த பிக்குகளுக்காக கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமான ஒன்பது மாடி துறவி இல்லமாகும். இதன் கூரை செம்பு அல்லது வெண்கல ஓடுகளால் மூடப்பட்டிருந்ததால் இது "செம்பு மாளிகை" என்று அழைக்கப்பட்டது (Lohapasada / லோகப்பாசாதம் என்றால் "செம்பு கூரை கொண்ட மாளிகை" என்று பொருள்). இந்தக் கட்டமைப்பு இறுதியில் தீயினால் அழிக்கப்பட்டு வரலாற்றில் பல முறை மீண்டும் கட்டப்பட்டது, ஆனால் இன்று, அனுராதபுரத்தில் கல் தூண்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த லோகப்பாசாதத்தின் கட்டுமானத்திற்கான வரைபடங்களைக் கொண்டு வர எட்டு தேரர்கள் வான உலகத்திற்குச் [தேவலகம் / celestial world] சென்றனர். தீபவம்சம், 19 - 5 முதல் 7 வரை, லோகப்பாசாதத்தின் அடிக்கல் விழாவிற்கு [foundation ceremony] துட்டகாமினி இந்தியாவிலிருந்து பதினான்கு தேரர்களை அழைத்தார் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்களைப் பற்றி மகாவம்சத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த பெரிய தூபியின் கட்டுமானத்திற்கான ஏற்பாடுகளை துட்டகாமினி செய்தார். ஆனால் தமிழர்களுக்கு எதிரான போரின் போது அவர்களை ஒடுக்கியதால், அவர்களுக்கு வரி விதிக்க அவர் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. Part: 89 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 There were thirty-two kings and Duttha Gamni defeated all. When Duttha Gamni was unhappy about the many killings that took place, the Buddhist monks comforted Duttha Gamni that he killed only one and a half person, all others, Damilas, are beasts. What kind of monster monks the Buddha created! See 25-104 - 112. Curiously, those comforting monks came through the air. Again, it is a lie to have the capability of the gravity defying aerial flight. The elephant Kandula is very strong, but Nandhimitta subdued it with his hand. Could anyone believe it? Mahanama expects readers to believe it. The emperor Asoka expressed genuine remorse for the killing and maiming that took place in the war with the Kalinga king. The monster monks of Lanka acted opposite of what the king Asoka did. However, the grateful Sinhalese folks venerated the king Elara well into the nineteenth century A.D. There is about the construction of the Maricavatti Vihara and its consecration. Then there is the construction and consecration of the Lohapasada. Eight Theras went to the celestial world to bring drawings for the construction of the Lohapasada. As per Dipavamsa, 19 - 5 to 7, Dutthagamani invited fourteen Theras from India for the foundation ceremony of the Lohapasada. There is no mention of them here. The preparation for the construction of the Great Thupa was made by Dutthagamani but he did not want to levy tax as he oppressed them during the war against the Damilas. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 90 தொடரும் / Will follow துளி/DROP: 1994 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 89 https://www.facebook.com/groups/978753388866632/posts/33284955734486312/?
-
கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 01 கண்மணி, தனது இளமைப் பருவத்தில், தன்னம்பிக்கை, ஆர்வம் உள்ளவராகவும், சக மாணவர்களாலும் குடும்பத்தினராலும் போற்றப்பட்டவராகவும் இருந்தாள். அவள் கல்வி, திருமணம், குழந்தைகள் மற்றும் மனநிறைவு [Education, marriage, children, contentment.] கொண்ட வாழ்க்கை எல்லாம் நேர்கோட்டில் நகரும் ஒன்றென்று அன்று நம்பி வளர்ந்தவள். இந்த வரிசை பெண்களுக்கு வேறுபடுவதாக யாரும் அவளுக்குச் சொல்லவில்லை. கண்மணி புத்திசாலி மற்றும் திறமைகள் பல தன்னகத்தே கொண்ட பெண்ணாக, மென்மையான தன்னம்பிக்கையுடன் தனது படிப்பை முடித்து, ஆசிரியராக தொழில் வாய்ப்பும் பெற்றாள். ஆரம்ப பாடசாலையில் ஆசிரியையாக, ஒழுக்கத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து மாணவர்களுக்கு முழுமையாக பாடம் விளங்கும் வண்ணம் கற்பித்தாள். அப்பொழுதும் காதல் — அது புரிதலால் வளரும் ஒன்று என்று நினைத்தாள். திருமணம் — அது உடன்பாட்டின் பிணைப்பு என்று கருதினாள். அவள் அதில் மாற்றம் அடையவில்லை. அப்போது அவள் இருபத்தி இரண்டு அல்லது இருபத்தி மூன்று அகவை கொண்ட அழகான பெண். அன்பு, புரிதல் மற்றும் நெருக்கமான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும், தன் மேல் காதல் கொண்ட, கண்ணீரையும் வெற்றிகளையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் கணவரை அல்லது காதலனைக் அவள் கனவு கண்டு, வாழ்க்கையை நேசித்தாள். காதலை — உடலோடு மட்டுமல்ல, மனதோடும், பகிர்வோடும், பரஸ்பர புரிதலோடும் நேசித்தாள். அவள் கனவு கண்டது ஒரு கணவனை அல்ல— ஒரு இணையான மனிதனை. அங்கே, அவள் கனவு கண்ட நெருக்கம் - கட்டாயமில்லாத தொடுதல், பயமில்லாத உடல், மறைப்பில்லாத மனம். அவளை “விவேகமான பெண்” என்று அனைவரும் புகழ்ந்தனர். “விவேகமான பெண்களுக்கு நல்ல வாழ்வு அமையும்” என்றார்கள். கண்மணி அந்த வாக்கியத்தை நம்பினாள். ஆனால் நடந்ததோ வேறு. அவளுக்குத் தெரியாது — சில திருமணங்கள் இணைவு அல்ல; உரிமை அறிவிப்பென்று. கண்மணியின் திருமணம் வேறு விதமாக அமைந்து விட்டது. இது அவள் தேர்ந்து எடுத்த காதல் திருமணம் அல்ல, பெற்றோர் ஒழுங்கு படுத்திய திருமணம், என்றாலும் ஒரு நம்பிக்கையுடன் தன் கழுத்தை நீட்டினாள். திருமணமும் அழகாகவே நடந்தது. சடங்குகள். புன்னகைகள். புகைப்படங்கள். என்றாலும் அவளது கணவரின் போக்கு முதல் இரவே வித்தியாசமாக இருந்தது. முதல் இரவில் அவள் எதிர்பார்த்தது மென்மை. அவளுக்காகக் காத்திருக்கும் கரம். ஆனால் வந்தது உரிமை உணர்வு. அவள் உடல் — ஒரு கடமை போல. அவள் தயக்கம் — ஒரு குற்றம் போல. அன்று, அவன் செயலும் மௌனமும் அவளுக்குப் புதிராக இருந்தாலும், “ஆண்கள் இப்படித்தான்” என்று சமூகம் அவளுக்குப் பதில் சொன்னதால், அவள் அதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. போகப் போக சரிவரும் என்ற நம்பிக்கையில் இருந்தாள். அவன் அணைப்பு— காதலின் வெளிப்பாடு அல்ல; உடல் மீது வைத்த அதிகாரத்தின் அறிவிப்பாக மாறியது. அவள் விருப்பம் கேட்கப்பட வில்லை. அவள் தயக்கம் மதிக்கப்படவில்லை. “மனைவி” என்ற சொல்லே அவளது சுய விருப்பத்தை அழித்து விட்டது. அந்த இரவுகளில் அவள் அழவில்லை. அழுகை கூட அவளிடம் இருந்து பறிக்கப்பட்டது. கல்யாணத்துக்கு முன் கண்மணிக்குத் தன்னைப் பற்றிய முதல் நினைவு, ஒரு பெண்ணாக அல்ல; ஒரு முழுமையான மனிதையாக இருந்தது. அப்பொழுது அவளது சிரிப்பில் அச்சமில்லை. அவளது உடலில் குற்றவுணர்ச்சி இல்லை. அவளது கனவுகள் “அனுமதி” கேட்காது. ஆனால் இன்று ... நாட்கள் பழக்கமாக மாறின. அவன் காலையில் போவான். இரவில் வருவான். விளக்கம் இல்லை. கண்மணி தன் ஆசைகளை மடக்கிக் கொண்டாள். கேள்விகளை ஒத்திவைத்தாள். ஏக்கங்களை அமைதியாக மாற்றினாள். அவள் உடல் விருப்பத்தின் இடமாக இல்லை; எதிர்பார்ப்பின் இடமாக ஆனது. ஒரு சிறிய குறிப்பேட்டில் அவள் எழுதினாள்: 'பயன்படாத ஆடைகள் போல என்னை மடக்கி வைத்தேன், எப்போதும் பூட்டிய அலமாரியில்.' அவள் இன்னும் நம்பினாள் — பொறுத்துக் கொள்வதே காதல் என்று. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் பி கு: உங்கள் கருத்துக்கள் எங்கள் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் துளி/DROP: 1993 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/33271271955854690/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 88 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 88 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை துட்டகாமினிக்கும் அவரது தம்பி சத்தாதிச்சனுக்கும் இடையே ஒரு சண்டை நடக்கிறது, அது ஒரு மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருந்தது. துட்டகாமினி, தந்தை காவன்தீசன் அல்லது காகவண்ண தீசனுடன் சண்டையிட்டு மலாயாவுக்கு தப்பி ஓடினார். மலாயாப் பகுதி பொதுவாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகள் உட்பட இன்றைய இலங்கையின் மத்திய மலைநாட்டுடன் தொடர்புடையது. இது இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது, குறிப்பாக பல்வேறு மோதல்களின் போது அடைக்கலம் மற்றும் எதிர்ப்பின் இடமாக இருந்தது. எனவே அத்தருணத்தில், குறைந்தது நான்கு இராச்சியங்கள் இருந்ததற்கான அறிகுறியாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஒன்று அனுராதபுரத்தில், இன்னொன்று ரோஹனாவில் [Rohana அல்லது உருகுணை / Ruhuna], இன்னொன்று கல்யாணி மற்றது மலாயா ஆகும். வவுனியா மற்றும் வடக்கே எந்த குறிப்பும் இல்லை. எனவே, அநேகமாக குறைந்தது ஐந்து இராச்சியங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்கலாம். துட்டகாமினிக்கும் அவரது சகோதரர் சத்தாதீசனுக்கும் இடையில் பிக்குகள் மலையை உருவாக்கினர். இவை போன்ற பல நிகழ்வுகள் இந்து புராணங்களிலும் இந்தியா இதிகாசங்களிலும் மற்றும் பண்டைய தமிழ் இலக்கியத்திலும் இருந்து நகல் எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். எனவே வரலாறு என்ற வகையில் எந்த தீவிர விவாதத்திற்கும் தகுதியற்றது. துட்டகாமினி தனது ஈட்டியில் ஒரு புத்தரின் நினைவுச்சின்னத்தை [தாதுவை] வைத்தார். புத்தரின் நினைவுச்சின்னத்தை அவர் எப்படிப் பெற்றார்? அமைதியை விரும்பும் புத்தர், ஒரு சிறந்த நீதி தவறாத மன்னன் எல்லாளனுக்கு எதிராக துட்டகாமினிக்கு மகிழ்ச்சியுடன் உதவினார்! அப்படியானால், புத்தருக்கு என்ன மாதிரியான ஞானம் கிடைத்தது! நீங்களே சொல்லுங்கள்? வரலாற்று ரீதியாக அகிம்சை மற்றும் இரக்கத்தின் போதகரான புத்தர், மகாவம்சத்தில் துட்டகாமினியின் எல்லாளனுக்கு எதிரான போரை மறைமுகமாக ஆதரிப்பதாக சித்தரிக்கப்படுகிறார். இந்த முரண்பாடு குறிப்பிடத்தக்க நெறிமுறை மற்றும் தத்துவ கவலைகளை, உண்மையில் புத்தரைப் பற்றி அறிந்தவர்கள் மனதில் எழுப்புகிறது என்பதே உண்மை. மகாவம்சம் போரை நியாயப்படுத்த முயற்சிக்கிறது, இது பௌத்தத்திற்கும் (துட்டகாமினியால் பிரதிநிதித்துவம் செய்யும்) பௌத்தர் அல்லாதவர்களுக்கும் (எல்லாளனும் தமிழர்களும்) இடையிலான போராகக் காட்டுகிறது. இருப்பினும், வரலாற்று ஆதாரங்கள் எல்லாளன் ஒரு நீதியுள்ள மற்றும் மரியாதைக்குரிய மன்னராக இருந்தார். அவர் சிங்களவர்கள் மற்றும் தமிழ் குடிமக்கள் இருவரையும் நியாயமாக ஆட்சி செய்தார் என்பதைக் குறிக்கிறது. இந்த முரண்பாட்டை சரிசெய்ய, மகாவம்ச பௌத்த துறவிகள் துட்டகாமினிக்கு, போரில் பௌத்தர் அல்லாதவர்களைக் கொல்வது தீய கர்மாவுக்கு வழிவகுக்காது, ஏனெனில் அவர்களில் சிலர் மட்டுமே உண்மையிலேயே தர்மத்தை ஏற்றுக்கொண்டனர் என்று உறுதியளிக்கும் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இந்த நியாயப்படுத்தல் சிக்கலானது மற்றும் அகிம்சை பற்றிய முக்கிய பௌத்த போதனைகளுக்கு முரணானதும் ஆகும். சுருக்கமாக புத்தரை நெஞ்சில் குத்தி ஞாயப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது? எனவே, மகாவம்சம் ஒரு முக்கியமான வரலாற்று ஆதாரமாக இருந்தாலும், வரலாறு, புராணக்கதை மற்றும் மத பிரச்சாரம் ஆகியவற்றைக் கலக்கும் ஒரு ஆழமான சார்புடைய உரையாகவும் இருக்கிறது. புத்தர் போருக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுவது, போரில் ஏமாற்றுதலைப் பயன்படுத்துவது மற்றும் துட்டகாமினியின் செயல்களை மகிமைப்படுத்துவது போன்ற முரண்பாடுகள் போன்றவற்றை வெளிப்படையாக காண்கிறோம். இலங்கையின் கடந்த காலத்தைப் பற்றிய மிகவும் சமநிலையான புரிதலைப் பெற, மகாவம்சத்தை விமர்சன ரீதியாகப் படித்து, மற்ற வரலாற்று ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் முக்கியம் என்று நம்புகிறேன். துட்டகாமினி தித்தம்பன் [Titthamba] என்ற தமிழனை எதிர்த்து நான்கு மாத காலம் கடுமையாகப் போரிட வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் தித்தம்பனை தோற்கடிப்பது கடினமாக இருந்தது. பின்னர் பலமுள்ள எதிரியை அவனால் சூழ்ச்சியால் தான் வெற்றிகொள்ள முடிந்தது. தாயாரைக் காட்டி அவனை வெற்றி கொண்டான். மகாவம்சத்தில் இது வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும், மொழிபெயர்ப்பில் உள்ள அடிக்குறிப்புப்படி, டிகா [Tika, மகாவம்சம் பற்றிய விளக்கங்கள், தெளிவுபடுத்தல்கள் மற்றும் முக்கிய உரை பற்றிய கூடுதல் விவரங்களை வழங்க பின்னர் எழுதப்பட்ட ஒரு வர்ணனை அல்லது விளக்கக் குறிப்பைக் இது குறிக்கிறது.] என்ற விளக்கத்தில் இது கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் தித்தம்பன் கொல்லப்பட்டார். காமனி என்ன விதமான சூழ்ச்சிசெய்தான்? தாயாரைக் காட்டி எப்படி வெற்றி கொண்டான் என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை. மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, எந்த நிலைக்கும், ஒருவரின் சொந்த தாயை எதிராளிக்குக் கொடுக்கும் அளவிற்கு கூட, குனியத் தயாராக இருந்தார் என்பது இங்கு தெரிகிறது. தனது தாயின் ஆலோசனையின் பேரில் கசகலவில் [Kasagala] இருந்து தொலைவில் ஒரு கோட்டையைக் கட்டி, எதிரிப் படைகளைத் தவறாக வழிநடத்தி, மற்றும் எதிரித் தளபதியான மகேலவைப் [Mahela] பிடிக்க ஒற்றர்களைப் பயன்படுத்தி, தனது காரியத்தை துட்டகாமினி நிறைவேற்றினான். ஐரோப்பிய உலகிற்கு மகாவம்சத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய காலனித்துவ அரசு ஊழியரான ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் (George Turnour Jnr; 11 மார்ச் 1799 – 10 ஏப்ரல் 1843), மேலே கூறிய எல்லாவற்றையும் "ராஜதந்திர உத்தி மூலம்" என்று விளக்கினார். ஜோர்ஜ் டேனர் மகாவம்சத்தை தனது சொந்த குழந்தையாகவோ அல்லது தனது கண்டுபிடிப்பாகவோ கருதியதால் மகாவம்சத்திற்கு மிகவும் சாதகமான நிலைப்பாட்டை எடுத்தார் என்று எண்ணுகிறேன். Part: 88 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 There is a quarrel between Duttha Gamni and his younger brother Tissa, and it had a happy ending. Duttha Gamani fell out with the father, Kakkavanna Tissa, and fled to Malaya. This is an indication that there were at least four kingdoms, One in Anuradhapura, another one in Rohana, another one in Kalyani and a fourth in Malaya. There is no reference to Vavuniya and further north. Most probably there must have been at least five kingdoms, with another one to the North of Vavuniya. Bikkhus created mountain between Dutthagamani and his brother Tissa. This is nonsense and merits no serious discussion as history. Dutthagamani put a relic onto his spear. How did he come into possess the Buddha’s relic? The peace loving Buddha happily assisted Duttha Gamani against an excellent monarch Elara! What kind of enlightenment the Buddha had! Dutthagamani fought with Damila Titthamba for four months. Duttha Gamni found it difficult to defeat Titthamba. Then Duttha Gamni in a sly manner indirectly indicated that he would give his mother in marriage by placing his mother along with him in the battlefield. It is not explicitly stated so in the Mahavamsa, but it is stated so in the Tika, the commentary, as per the foot note in the Geiger’s translation. In the ensuing confusion, Titthamba was killed. The Mahanama, the author of Mahavamsa, prepared to stoop to any level, even to the extent of giving one’s own mother to the opponent. In another battle with Elara’s commander Mahela, Duttha Gamni cunningly defeated Mahela. George Turnour, the Colonial Civil Servant who first introduced Mahavamsa to the European world, glossed this as “by diplomatic Stratagem”. George Turnour took a very favourable stand with Mahavamsa as he considered the Mahavamsa his own baby, or his discovery. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 89 தொடரும் / Will follow துளி/DROP: 1992 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 88] https://www.facebook.com/groups/978753388866632/posts/33269433679371851/?
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 3 ✈️ பாகம் 03 – விமான நிலைய சாகசம் அன்று காலையிலே வீடு உற்சாகத்தில் மூழ்கி இருந்தது. நிலன், தன் சிறிய தோள் பையை இறுகப் பிடித்துக் கொண்டு, அங்கும் இங்கும் ஓடி துள்ளிக் கொண்டு இருந்தான். திரேன், பெரியவன் என்பதால், தன் பாஸ்போர்ட் [Passport] மற்றும் போர்டிங் பாஸ் (Boarding Pass) இரண்டையும் அடிக்கடி மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டு இருந்தான். எதையும் புரியாத வயது கொண்ட ஒரு வயது ஆரின் — சுற்றியுள்ள உற்சாகத்தை உணர்ந்து மகிழ்ச்சியாக “கூ கூ” என ஒலித்தான். “நாம் உண்மையிலேயே இன்று விமானத்தில் போகிறோமா, தாத்தா?” என்று நிலன் கண்கள் அகலமாக, எதிர்பார்ப்புடன் மின்னின. தாத்தா புன்னகையுடன், "ஆமாம், சின்ன பைலட் [விமானி]," தாத்தா புன்னகையுடன் கூறினார். "இன்று, நாம் மேகங்களுக்கு மேலே பறந்து உலகை உயரத்திலிருந்து பார்க்கப் போகிறோம்." என்றார். விமான நிலையத்திற்குச் செல்லும் பயணம் சிரிப்பாலும், அரட்டையடிப்பதாலும் நிறைந்திருந்தது. தாத்தா விமான நிலையம் போகிற வழியில், வெவ்வேறு வாகனங்களைச் சுட்டிக்காட்டினார் - ஒரு பெரிய சிவப்பு பேருந்து, ஒரு கருப்பு டாக்ஸி [taxi], மற்றும் ஒரு பளபளப்பான டெலிவரி வேன் [delivery van] . “ஒவ்வொரு வாகனத்துக்கும் அவை அவற்றுக்காக ஒரு பிரத்தியேக வேலையுண்டு?” என்று அவர் கூறினார். “ஒரு நாள், ஒருவேளை நீங்கள் உங்கள் சொந்த விமானத்தை ஓட்டுவீர்கள்!” என்றார். விமான நிலையத்தை அடைந்ததும், அதன் பிரம்மாண்டமான அளவு குழந்தைகளை மூச்சுத் திணறச் செய்தது. விமான நிலைய முனையம் [terminal] பளபளப்பான தரைகள் மற்றும் கண்ணாடிச் சுவர்களால் மின்னியது, அதனூடாக உள்ளே பாய்ந்த சூரிய ஒளி அங்கு பிரதிபலித்தது. மக்கள் சூட்கேஸ்களை [suitcases] இழுத்துக் கொண்டும், தொலைபேசிகளில் பேசிக் கொண்டும் அல்லது சிலர் குழந்தைகளுடன் நெரிசலில் ஸ்ட்ரோலர்களை [strollers] உருட்டிக் கொண்டும் வேகமாக கடந்து சென்று கொண்டு இருந்தனர். “அட! இது கட்டிடத்துக்குள்ளே ஒரு நகரம் மாதிரி இருக்கே!” என்று திரேன் அதிசயித்தான். தாத்தா அவர்களை பாதுகாப்புப் பாதை வழியாக அழைத்துச் சென்று, ஒவ்வொரு அடியையும் பொறுமையாக விளக்கினார். “காலணியை கழற்றுங்க, பெல்ட்டை [belt] கழற்றுங்க, உங்கள் ஒவ்வொருவரின் தோள் பையையும் [backpacks] அந்த மெஷினில் வையுங்கள் … பீப் சத்தம் [beep] வந்தாலும் கவலைப்படாதீங்க — இதெல்லாம் சாகசத்தின் ஒரு பாகம் தான்!” என்று சிரித்தபடி சொன்னார். கன்வேயர் பெல்ட்கள் [conveyor belts] ஸ்கேனர்கள் [scanners] வழியாக தங்கள் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதை நிலன் வியப்புடன் பார்த்து மூச்சே விட்டான். பாதுகாப்பைக் [security] கடந்ததும், சாகசம் உண்மையிலேயே தொடங்கியது. அவர்கள் புறப்படும் லவுஞ்சிற்குள் [departure lounge] நுழைந்தனர், அங்கு காணப்பட்ட பெரிய ஜன்னல்கள் வழியாக, ஓடு பாதையில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களின் பரந்த காட்சியைப் பார்த்தனர். நிலன் தனது மூக்கை கண்ணாடியில் அழுத்தி - அங்கே ஒரு பெரிய விமானத்தின் இயந்திரங்கள் சத்தமாக ஒலித்துக் கொண்டு, ஓடுபாதையில் நகரத் தொடங்கி, புறப்படத் தயாராகிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் - இயந்திரங்களின் சத்தம், தரையின் அதிர்வு, ஒளிரும் விளக்குகள் நிலனுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டியது. "தாத்தா! நாம அதுக்குள்ள போகலாமா?" என்று ஆவலாகக் கேட்டான். தாத்தா சிரித்தார். “சீக்கிரம், என் சின்னஞ்சிறு சாகசக்காரர்களே. சீக்கிரம் நாம் போகிறோம்.” என்றார் காத்திருக்கும் நேரத்தை வேடிக்கையாக்க, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தையும் வண்ண பென்சில்களையும் கொடுத்தார். “நீங்கள் காணும் விமானங்களை வரையுங்கள்,” என்று அவர் பரிந்துரைத்தார். வானவில் இறக்கைகள் கொண்ட ஒரு விமானத்தை நிலன் ஆவலுடன் வரைந்தான், அதே நேரத்தில் திரேன், இரவு வானில் பறக்கும் ஒரு விமானத்தை, அது வெளிவிடும் புகை அல்லது நீராவிக்குப் பதிலாக, மின்னும் நட்சத்திரங்களை வெளியே தள்ளி விட்டுக் கொண்டு போவது போல - ஒரு மாயாஜால விமானம் அல்லது ஒரு நட்சத்திரம் போல - கற்பனை செய்து வரைந்தான். குட்டி ஆரின் கூட கைகளைக் காற்றில் ஆட்டி ஆட்டி, விமானம் பறக்கிற மாதிரி நடித்தான். அவசர அறிவிப்பு ஒலித்தது — அவர்களின் விமானம் தயாராகி விட்டது என்று! எனவே அவர்கள் ஜெட் பாலத்தின் [Jet bridge or jetway or passenger boarding bridge (PBB)] ஊடாக விமானத்துக்குச் சென்றார்கள். நிலன் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அடைந்து அதனுள்ளாக ஓடிப் போனான். விமானத்தின் அறை [கேபின்] விசாலமாக இருந்தது, வரிசையாக இருக்கைகள் அழகாக இருந்தன. பொதிகள் வைக்க தலைக்கு மேல் மூடக்கூடிய பெட்டிகள் [மேல்நிலை பெட்டிகள் / overhead compartments] இருந்தன. மற்றும் குழந்தைகளைப் அன்பாகப் பார்த்து பழகும் நட்பு விமானப் பணிப்பெண்கள் ["Airhostess"] அங்கு இருந்தனர். தாத்தா அவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் பாதுகாப்பாக இருக்கைப் பட்டை [seat belt] போட்டு அமர உதவினார். விமானம் நகரத் தொடங்கியதும், நிலன் தனது கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, அவனின் கண்கள் வியப்புடன் விரிந்தன. தரை வேகமாகவும் வேகமாகவும் கடந்து செல்வது போல் அவனுக்குத் தோன்றியது, திடீரென்று, மெல்ல உயர்ந்து, அது காற்றில் பறந்தது. "நாங்கள் பறக்கிறோம்! நாங்கள் பறக்கிறோம்!" என்று அவன் சிரித்துக் கொண்டே, கீழே உள்ள சிறிய கார்களையும் கட்டிடங்களையும் சுட்டிக்காட்டினான். அவை மங்கியபடி, சிறிதாகத் தெரிந்தன. விமானத்தில் பயணம் செய்த அனுபவம் மூன்று பேரனுக்கும் மாயாஜாலம் போல் இருந்தது. தாத்தா அவர்களுக்கு சீட் பெல்ட்களை எப்படி கட்டுவது, ஜன்னலுக்கு வெளியே எப்படி பாதுகாப்பாகப் பார்ப்பது போன்றவற்றைக் கூறி, ஆனால், சிறிய தட்டு மேசைகளை [மேசைத் தாம்பாளம் / little tray tables] அவர்களே சரிபார்த்து பொருத்த அனுமதித்தார். குழந்தைகள் சிற்றுண்டிகளால் மகிழ்ச்சியடைந்தனர் - ஒரு சிறிய பொட்டலம் பிஸ்கட் மற்றும் ஜூஸ் - மேகங்கள் சோம்பேறித்தனமாக ஜன்னலைக் கடந்து சென்றன, சில பஞ்சுபோன்ற யானைகள் மற்றும் பெரிய அரண்மனைகள் போல இருந்தன. விமானப் பயணத்தின் நடுவில், தாத்தா தான் கொண்டுவந்த ஒரு சிறிய போட்டி விளையாட்டு ஒன்றை வெளியே எடுத்தார் - 'வானத்தில் புதையல் வேட்டை'. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சரிபார்ப்புப் பட்டியல் இருந்தது: ஒரு டிராகன் போன்ற வடிவிலான மேகத்தைக் கண்டுபிடி, தூரத்தில் ஒரு விமானத்தைக் கண்டுபிடி, அல்லது கீழே நிலத்தில் வளைந்து செல்லும் ஒரு சிறிய நதியைக் கண்டுபிடி என பல கேள்விகள் அங்கு இருந்தன. நிலன் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முறையும் அவனது கண்கள் பெருமையில் பூரித்தன. திரேன், வழமைபோல் ஆர்வத்துடன், கவனத்துடன் போட்டியிட்டான். ஆரின் கூட எதோ ஒரு புரிதலுடன் எதையெதையோ "சுட்டிக் காட்டி, என்னென்னெவோ சத்தம் போட்டான். விமானம் துபாயை நோக்கி தரை இறங்கும் போது, குழந்தைகள் தங்கள் முகங்களை மீண்டும் ஜன்னல்களில் அழுத்திக் கொண்டனர். அவர்களுக்குக் கீழே நகரம் ஒரு மின்னும் புதையல் பெட்டியைப் போல விரிந்தது: மின்னும் வானளாவிய கட்டிடங்கள், வளைந்து செல்லும் நீர்வழிகள், மற்றும் அடிவானம் வரை நீண்டு கிடக்கும் சிறிய சிறிய மணல் மேடுகள். நிலன் மூச்சுத் திணறினான். "இது மாயாஜாலம் போன்றது!" என்று நிலன் பெரு மூச்சு விட்டான். விமானம் இறுதியாக தரையிறங்கியதும், விமான நிலையத்தின் பரபரப்போடு சாகசம் தொடர்ந்தது: நீண்ட தாழ்வாரங்கள் [long corridors] வழியாக நடந்து, சாமான்களை [luggage] சேகரித்து மற்றும் ஆங்கிலம் மற்றும் அரபியில் வேடிக்கையான பலகைகளையும் கண்டனர். தாத்தா அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்து, கூட்டத்தின் வழியாக அவர்களை கவனமாக பாதுகாப்பாக வழிநடத்தினார். அப்பொழுது சுவாரஸ்யமான காட்சிகளைச் சுட்டிக்காட்டிட தவறவில்லை - நகரும் நடைபாதை [moving walkway, also known as a travelator], வண்ணமயமான நினைவுப் பொருட்களின் காட்சி, மற்றும் சிறிய மீன்கள் நீந்தும் நீரூற்று [fountain] போன்றவை. அவர்கள் வெளியே வந்த நேரத்தில், சூடான துபாய் சூரியன் அவர்களை ஒரு பழைய நண்பரைப் போல வரவேற்றது. குழந்தைகள் புதிய நகரத்தை சுவாசித்தனர், வரவிருக்கும் ஆச்சரியங்களை எதிர்பார்த்து உற்சாகமாக இருந்தனர். அவர்களின் கண்கள் ஆச்சரியத்தால் பிரகாசிப்பதைக் கண்டு தாத்தா சிரித்தார். "துபாய்க்கு வருக, என் சிறிய ஆய்வாளர்களே," என்று அவர் செல்லமாக அவர்களின் முதுகில் தட்டிக் கொடுத்து கூறினார். "ஆனால் இது வெறும் ஆரம்பம் தான்." என்றார் 🌍✈️ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 04 தொடரும் துளி/DROP: 1991 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/33261397920175427/?