Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"மூன்று கவிதைகள் / 21"
"மூன்று கவிதைகள் / 21" 'பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே' அன்ன நடையாள் தூளியிலே ஆடி இன்முகம் காட்டி அருகில் அழைத்து இன்பம் கொட்டும் நிலா ஒளியில் மின்னும் விளக்கில் இருவரும் சேர பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே ? சின்ன இடையாள் அழகு காட்டி தேன் சிந்தும் இதழ்கள் பதித்து கன்னம் இரண்டிலும் முத்தம் கொடுத்து அன்பு மழையால் உள்ளம் நனைக்க இன்னாள் என்றும் கிடைக்குமா மீண்டும் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. 'புகைப்படக் கவிதை' அம்மம்மாவின் வடிவிலேயே, எமக்கு வந்தவளே அவளின் பெயரையே, தனக்கும் எடுத்தவளே அழகான மழலையே, எங்கள் பேத்தியே அன்போடு அணைத்து, அகம் மகிழ்கிறேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. 'வெள்ளிக் கிழமை விடியும் வேளை' வெள்ளிக் கிழமை விடியும் வேளை, கள் உண்ட வண்டுகள் பாட, இல்லம் எல்லாம் நறுமணம் வீச, நல்லாள் முற்றத்தில் கோலம் போட்டாள்! வெள்ளை மனம் கொண்ட பூவை உள்ளம் நிறைய அன்பு பொங்க அல்லல் தீரும் என்ற நம்பிக்கையில் புள்ளிகள் வைத்து வடிவம் இட்டாள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. துளி/DROP: 1988 ["மூன்று கவிதைகள் / 21" https://www.facebook.com/groups/978753388866632/posts/33245683025080250/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 87 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 87 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 22 இன் 33 முதல் 40 வரையிலான கீழே பதியப்பட்ட வசனங்களை ஒருக்கா பார்க்கவும்: " என்ன மகிழ்ச்சி இருக்கிறது ? எங்களுக்கோ குழந்தை கிடையாது. எனவே எங்கள் சந்தோஷம் சாரமில்லாதது" என்றாள் விகார தேவி. அசாதாரண சக்திகள் ஆறும் படைத்த தேரர், தமது ஞான திருஷ்டியில் அவளுக்குக் குழந்தை உண்டாகும் என்பதைக் கண்டார். ராணி என அழைத்து, நோய்வாய்ப்பட்டிருக்கும் துறவியைச் சென்று பார் என்றார். அவள் அவ்வாறே அங்கே சென்றாள். மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருந்த அவரிடம் ராணி சொன்னாள்: " என்னுடைய மகனுகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வீராக. அது எங்களுக்குப் பெரு மகிழ்ச்சியை அளிக்கும்." என்றாள். துறவி அவ்வாறு சொல்லாமல் இருப்பதைக் கண்ட அவள், இதற்காக ஏராளமான மலர்களைக் காணிக்கையாகச் செலுத்தி மீண்டும் வேண்டினாள். இப்போதும் அவர் விருப்பமில்லாமல் இருக்கவே, சரியான வழியை அறிந்த அவள் அவருடைய சார்பில் பிக்குகள் சங்கத்துக்கு மருந்துகளையும், உடைகளையும் வழங்கிவிட்டு மீண்டும் வேண்டினாள். பிறகு தான், அவர் அரச குடும்பத்தில் மறு பிறவி எடுக்க விரும்புவதாகக் கூறினார். பிறகு மனமகிழ்வுடன் அவள் விடை பெற்றுக் கொண்டு தேரில் ஏறிச் சென்று விட்டாள். அதன் பிறகு துறவி இறந்து விட்டார். ராணி சென்று கொண்டிருக்கும் போதே அவளுடைய கருவில் புதிய பிறவியெடுத்தார். இதை அவள் கண்டதும் நின்றாள். அரசனுக்கு இச்செய்தியை அனுப்பி விட்டு, அவனுடன் திரும்பி வந்தாள். இந்தக் குழந்தை தான் துட்டகாமினி. அதனால், அவர் விகாரதேவியின் கணவரான காகவண்ண தீசனின் உயிரியல் மகன் அல்ல. எனவே, அரியணைக்கு வாரிசும் அல்ல. துட்டகாமினி சமீபத்தில் இறந்த தேரரின் ஒரு அவதாரம் மட்டுமே. இது, சட்ட பூர்வ தந்தைக்கு பிறக்காத, முறைகேடான மகனாக துட்டகாமினி இங்கு காணப்படுகிறார். எனவே துட்டகாமினி ஒரு [அரச உரிமையை] அபகரிப்பாளர் என்ற நிலைக்கு வருகிறார். அதாவது அரியணைக்கு சட்டப்பூர்வ இளவரசர் அல்ல. அவர் பன்னிரண்டு வயதாக இருந்த போதே, தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக தமிழர்களுடன் சண்டையிட எண்ணினார். இது அவருக்கு துட்ட (கெட்ட) என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது என்பது வரலாறு. பன்னிரண்டு வயது சிறுவன் எப்படி அந்த முடிவுக்கு வந்திருக்க முடியும்? இரத்தக் கறை படிந்த வாளிலிருந்து இரத்தக் கறை படிந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற வக்கிரமான ஆசை கொண்ட அவரது தாயார்தான் இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். துட்டகாமினி பத்து "அதிமானுட போர்வீரர்களை" [super human warriors] நியமித்தார். அவர்களில் முதலாவதானவன், நந்தி மித்ரன் [Nandhimithra, also known as Nandhimitta], மன்னன் எல்லாளனின் தளபதியான மித்ரனின் [Mitta] மருமகன் ஆகும். அவனுக்கு பத்து யானைகளின் பலம் இருந்தது. அப்படியே, மனித வலிமை கொண்ட மற்ற ஒன்பது பேரும் உள்ளனர். இந்த கற்பனைக் கதைகளுக்குள் மேலும் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவை நிதானமான வரலாற்று கதைகள் அல்ல. பத்து யானைகளின் பலம் கொண்ட ஒரு மனிதன் என்பது எவராலும் நம்பமுடியாத ஒன்று. அப்படியானவர்களில் பத்து பேர் என்பது முழுக்க முழுக்க அபத்தமான பொய். அதிகாரம் 23 – 8 முதல் 9 வரையிலான பகுதிகள், தூபிகளை அவமதிக்கும் தமிழர்களைப் பற்றிப் பேசுகின்றன. பத்து யானைகளுடைய பலம் நந்தி மித்ரனுக்கு இருந்தது. அவன் வளர்ந்ததும் நகரத்திற்குள் சென்று தனது மாமாவுக்கு சேவை செய்தான். அந்த நேரத்தில் தூபிகள் மற்றும் பிற புனித நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை தமிழர் நாசப்படுத்தி வந்தனர் என்று இந்த பந்தி கூறுகிறது. ஆனால், அதிகாரம் 21 - 21 முதல் 26 வரை தெளிவாக எல்லாளனின் ஆட்சியின் நடுநிலையை, மற்றும் தூபிக்கும் வழங்கும் மதிப்பை விரிவாகக் கூறுகிறது. மும்மணிகளிலும் உயர்ந்ததான ஒன்றின் குற்ற மற்ற பெருமையை அறியாத போதிலும், மரபுகளைக் காப்பவனான அரசன், ஒருமுறை புத்த சங்கத்தினரை அழைப்பதற்காக சேதிய பர்வதத்துக்கு [Cetiya-mountain] தேரில் சென்று கொண்டிருந்தான். அப்போது தேரின் நுகத்தடி [yoke / இரு மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டப்படும் மரத்தாலான, நீளமான கட்டை. இதை ஏர் ஓட்டும்போதும், வண்டி இழுக்கும் போதும் மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டுவார்கள்.] ஒரு தூபத்தின் மீது மோதிச் சற்று பெயர்த்து விட்டது. 'தங்களால் தூபம் காயம்பட்டு விட்டது" என்று மந்திரிகள் அரசனிடம் கூறினர். இது அறியாமல் நேர்ந்ததாயினும், அரசன் தேரில் இருந்து குதித்துத் தரையில் படுத்துக்கொண்டு இதன் சக்கரத்தால், என்னுடைய தலையையும் துண்டித்து விடுங்கள்’ என்றார். "மற்றவர்க்குத் தீங்கிழைப்பதை எங்கள் குரு நாதர் அனுமதிப்பது இல்லை. இடிந்த பகுதியைக் கட்டிக் கொடுத்து (பிக்குகளுடன்) சமாதானம் செய்து கொள்ளுங்கள்' என்றனர் அவர்கள். இடிந்துபோன பதினைந்து கற்களைப் புதிதாக அமைப்பதற்காக அரசன் பதினையாயிரம் கஹப்பணம் [kahapanas, கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து பண்டைய இலங்கையில் பயன்படுத்தப்பட்ட ஆரம்பகால, துளையிடப்பட்ட செப்பு நாணயம் இதுவாகும்] செலவிட்டான். அதன் மதிப்பு சுமார் அரை கிரீடம் ஆகும். அதாவது, மன்னன் எல்லாளன் ஒரு நாள் தற்செயலாக ஒரு தூபிக்கு சேதம் விளைவித்தாலும், அமைச்சர்கள் இதை மன்னனிடம் சுட்டிக் காட்டியபோது, அவர் தன்னைத் தரையில் கிடத்தி, தனது தலையைத் துண்டிக்கச் சொன்னார் என 21 ஆம் அத்தியாயம் எல்லாளனை விவரிக்கிறது. இவ்வாறு சிறந்த இயல்புகளைக் கொண்ட ஒரு மன்னன், தமிழர்களை தூபி மற்றும் பிற புனித கட்டமைப்புகளை சேதப்படுத்த அனுமதிப்பாரா? எல்லாளனின் உன்னத கதாபாத்திரங்களின் கதை அந்தக் கால மக்களிடையே ஒரு புராணக்கதையாக இருந்திருக்க வேண்டும். என்றாலும் மகாநாமா 21 ஆம் அத்தியாயத்தை மறந்துவிட்டு, தமிழருக்கு எதிராக இந்த வசைபாடலைக் பாடுகிறார் அல்லது ஒரு வெறித்தனமான யாரோ ஒரு தேரர், 100 - 150 பின்னர் நகலெடுக்கும் பொழுது அதைச் செருகி இருக்கலாம்? இதன் விளைவுகளை தீவின் மூலை முடுக்கிலும் அல்லது எங்கும் உள்ள தமிழர்கள் இன்னும் உணர்கிறார்கள். பத்து யானைகளை விட அதிக பலம் கொண்ட மனிதர்கள் என்பது தேரர் மகாநாமாவின் பெரும் கற்பனைகள். எனவே, அவர்கள் எந்த விமர்சனத்திற்கும் தகுதியற்றவர்கள் என்பதே உண்மை! Part: 87 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Verses 33 to 40 of chapter 22: Viharadevi said; what is our happiness here, since we have no children? Lo, our happiness is therefore barren. The Thera, who, being gifted with six (super normal) powers, foresaw that she would have, said: ‘Seek out the sick samanera, O queen’. She went thence said to the samanera, who was near unto death: ‘Utter the wish to become my son; for that would be great happiness to us’. And when she perceived that he would not the keen witted woman commanded, to this end, great and beautiful offerings of flowers, and renewed her pleading. When he was yet unwilling, she, knowing the right means, gave to the brotherhood for his sake all manner of medicines and garments and again pleaded with him. Then he did desire (rebirth for himself in) king’s family, and she caused the place to be richly adorned, and taking her leave she mounted the car and went her way. Hereupon the samanera passed away, and he returned to a new life in the womb of the queen while she was yet upon her journey, 22 - 39. This child was Duttha Gamani. He was not the biological son of Kakkavannatissa, the husband of Viharadevi and not the heir to the throne. Duttha Gamni is only an incarnation of the Thera who has just died. This is the legitimacy to the throne of the illegitimate son, Duttha Gamni. Duttha Gamni is therefore a usurper, and not a legitimate prince to the throne. Even when he was twelve years old, he intended to fight Damilas against the will of his father. This earned him the epithet Duttha (bad).How could a twelve-year boy have come to that decision. His mother who had the perverted desire to drink the blood stained water from the blooded sword must have had been the cause. Duttha Gamni recruited ten super human warriors. First, one of them, Nandhimitta, is the nephew of Mitta, a general of the king Elara. He had the strength of ten elephants. There are other nine persons of super human strength. No need to go further into these fantasy tales as they would not make sober history. A man having the strength of ten elephants is untrustworthy and ten of them are ridiculous lies. Nandhamitta’s story is in conflict with the chapter 21. 23 – 8 to 9 speaks of Damilas desecrating the Thupas. Refer to 21 - 15 to 26. The King at that time was Elara, and he, one day accidentally caused damage to a Thupa. When the ministers pointed this to the king, he flung himself to the ground and asked his own head to be severed. This is how Elara is described in the chapter 21. Would a king of these excellent characters allow Damila’s to do damage to Thupas and other sacred structures? The story of Elara’s noble characters must have been a legend among the people of that time. Mahanama forgot the chapter 21 and invented this diatribe against the Damilas or a fanatical copyist inserted it later. The repercussions of this are still being felt by the Tamils nook and corner of the island. Men with strengths greater than ten elephants are the nefarious imaginations of the Thera Mahanama, and do not merit any criticism. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 88 தொடரும் / Will follow துளி/DROP: 1987 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 87] https://www.facebook.com/groups/978753388866632/posts/33238732342441985/?
-
கதை - 194 / தை பிறந்தால் … [மூன்று பகுதிகள்]
கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03 ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் அதிகாலை பொங்கி, படைத்து, சாப்பிட்ட பின், கிளிநொச்சியில் நடைபெறும் மாபெரும் பொங்கல் விழாவுக்கு, ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதிகாரக் கொடிகள் இல்லை. வெறுப்பு முழக்கங்கள் இல்லை. பாடல்கள், மேளங்கள், நடனம் மற்றும் பகிரப்பட்ட உணவு மட்டுமே. ஒரு கணம், வடக்கு மற்றும் கிழக்கு முழுமையடைந்ததாக உணர்ந்தன. அந்த தைப் பொங்கல் தினத்தில், முதல் முறையாக, கிளிநொச்சியின் மண் சத்தமாக சிரித்தது. பால் கொதித்தது. பறை இடித்தது. வீணை எதிரொலித்தது. அவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர். கால்நடைகளுக்கு மாலை அணிவித்தனர். பூமிக்கு வணங்கினர். இராணுவம் இருந்தது. கண்காணிப்பு இருந்தது. ஆனாலும் அன்று, பயம் பின்வாங்கியது. மிக பிரமாண்டமான, வியக்கத்தக்க, அவர்களின் மேடையில், பரிபாடலால் ஈர்க்கப்பட்ட வசனங்களுக்கு மதுமிதா பரதநாட்டியம் ஆடினார், அவரது கால்கள் ஒரு சபதம் [vow] போல பூமியைத் தாக்கின. அப்பொழுது கதிரவன் பரதநாட்டியத்தின் ஆழத்தை உணர்ந்தான். பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும், அதாவது , "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (காலத்தை அறுதியிடும் அளவு) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் எனப்படும் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் விதி சேர்ந்த நடனமே பரத நாட்டியம் என்று அவன் மனம் அவனுக்குச் சொன்னது "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர, பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்" பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்ட, கை முத்திரைகள் வழி கண் செல்ல, கண்கள் செல்லும் வழி மனம் செல்ல, மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்ல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினள் மதுமிதா. அவளைத் தொடர்ந்து கதிரவன் ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடினான் - கதிரவன் பாடிய அந்த நாட்டுப்புறப் பாடல் அலங்காரமற்ற வாழ்க்கையின் நேரடி குரலாக இருந்தது. உப்பு, வியர்வு, கண்ணீர் கலந்து உருவான அந்தப் பாடலில் ஒப்பனை இல்லை; அதில் இருந்தது அனுபவம். “இங்கிருந்து போ” என்று சொல்லப்பட்ட ஒவ்வொரு தருணத்துக்கும் “நாங்கள் இங்கேதான்” என்று திரும்பத் திரும்ப கூறிய எதிர்ப்பின் துடிப்பு அதில் ஒலித்தது. அதே நேரம், அந்த எதிர்ப்புக்குள் மறைந்திருந்த மென்மையும் இருந்தது—மண்ணுக்கான பாசம், மனிதனுக்கான பொறுப்பு, துண்டிக்கப்படாத ஒரு காதல். அவர்கள் நிலத்தை விட்டுப் போகவில்லை; போக முடியாததால் அல்ல, போக மறுத்ததால். வீடாகவும் நினைவாகவும் இருந்த மண்ணை ஒரே நாளில் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வேலி, சட்டம், அதிகாரம் என்ற பெயரில் பறித்தபோதும், அவர்கள் முழுமையாகப் போகவில்லை. அதனால் கதிரவனின் பாடல் ஒரு பாடலாக மட்டும் இல்லை; அது ஒரு உறுதியாய் நின்றது—நிலம் பறிக்கப்படலாம், ஆனால் எங்களை அல்ல - நிலம் அவர்களிடமிருந்து துண்டு துண்டாகப் பறிக்கப்பட்டாலும் கூட, தங்கள் நிலத்தை விட்டு வெளியேறாத மக்களைப் பற்றியது அந்தப் பாடல் அதன் பின், அவன் அவளிடம் கிசுகிசுத்தான்: “நாம் காதலிக்கிறோமா, அல்லது இந்த நிலத்தைப் பாதுகாக்கிறோமா? [“Are we in love, or are we protecting this land?”]” அவள் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் மட்டும் பதிலளித்தன— எந்த வித்தியாசமும் இல்லை. கூட்டம் கலைந்து சென்றபோது, வாழ்க்கை அதன் வழக்கமான போராட்டங்களுக்குத் திரும்பியது. மீன்பிடி அனுமதிகள் இன்னும் தாமதமாகின. பண்ணைகள் மற்றும் வயல்கள் இன்னும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன. சீருடைகள் இன்னும் தூரத்திலிருந்து பார்த்தன [Uniforms still watched from a distance.]. ஆனால் ஏதோ ஒன்று மாறிவிட்டது. உலகம் ஒரே நாளில் நியாயமாகிவிடவில்லை. கடல் இனிமையாகவும் இல்லை. வயல் வளமாகவும் இல்லை. ஆனால் கதிரவன் மீண்டும் கடலுக்குத் திரும்பினான் — இந்த முறை தனியாக இல்லை. அவனுடன் ஒரு நம்பிக்கை இருந்தது; அவனைப் பார்க்கும் ஒரு கண், அவனைப் புரிந்துகொள்ளும் ஒரு மனம் இருந்தது. மதுமிதா மீண்டும் தன் கல்விக்குத் திரும்பினாள் — அதே புத்தகங்கள், அதே வகுப்பறைகள். ஆனால் இப்போது அவளின் படிப்பு வேலைக்காக மட்டும் அல்ல; அடையாளத்திற்காக, பொறுப்புக்காக. கதிரவனும் மதுமிதாவும் திருமணம் பற்றிப் பேசவில்லை. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசினர். அவர்கள் சொன்ன ஒரே வாக்குறுதி — “நாம் யாரோ அதை மறக்கமாட்டோம்.” [They promised to remain who they were. அவர்கள் தாங்கள் இப்ப இருப்பது போலவே இருப்போம் என்று உறுதியளித்தனர்]. அது தை மாதம் போலவே. பெருவெள்ளத்துக்குப் பின் தெளிவாகும் ஆறு போல, புயலுக்குப் பின் அமைதியாகும் வானம் போல, சத்தமின்றி பாதைகளைத் திறக்கும் காலம். தமிழர்களிடத்தில் ஒரு சொல் உண்டு: “தை பிறந்தால் வழி பிறக்கும்.” பிரச்சினைகள் மறைந்துவிடுவதால் அல்ல அது. அநீதிகள் உடைந்து விடுவதால் அல்ல. ஆனால் மனிதர்கள் தங்கள் வேரை, தங்கள் மண்ணை, தங்கள் உண்மையை மீண்டும் நினைவுகூர்வதால்.. உழவர் திருநாள் பொங்கி மலரட்டும் அழகுப் பெண்கள் கோலம் போடட்டும் ஆழமாக வரலாறு மனதில் பதியட்டும் ஈழ மண்ணில் ஒற்றுமை ஓங்கட்டும் உலகத்தை திருத்த புத்தன் பிறந்தான் உரிமை கேட்டவனை புத்தர்நாடு கொல்லுது உண்பது நாழி உடுப்பவை இரண்டே உண்மையைப் புரிந்து புத்ததருமம் செழிக்கட்டும் நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1986 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/33232140093101210/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 86 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 86 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மகாவம்சத்தின் 22 ஆம் அத்தியாயத்தின் [காமனி ஜனனம்] 13 முதல் 22 வரையிலான வசனங்களில் விஹாரா தேவியை சுற்றி ஒரு அபத்தமான கதை சுழல்கிறது. கோதாபயனின் மகன், காகவண்ண தீசன் என்று அழைக்கப்பட்ட இளவரசன், தந்தையின் மரணத்திற்குப் பிறகு அங்கு ஆட்சி செய்தான். நம்பிக்கையுள்ள இந்த அரசனுடைய மனைவியின் பெயர் விகார தேவி ஆகும். கல்யாணி மன்னன் தீசனின் மகளான அவள், உறுதியான நம்பிக்கையுடையவள் ஆகும். தீசனின் தம்பி ஐய உதிகன் என்பவன் ராணியைக் காதலித்ததால் தீசனுடைய கோபத்துக்குள்ளாகி, பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டான். அவன் ஒளிந்து கொண்டிருந்த பிரதேசத்துக்கு, பின்னாளில் அவன் பெயரே இடப்பட்டது. ராணிக்கு இரகசிய மடல் ஒன்றைப் பிக்கு வேடம் அணிந்த ஒருவனிடம் அவன் கொடுத்து அனுப்பினான். அவன் அரண்மனை வாயிலில் நின்று கொண்டு, வழக்கமாக அரண்மனையில் உணவு கொள்ளும் தேரர் ஒருவருடன், அவர் அறியாமலே, உள்ளே நுழைந்து விட்டான். தேரருடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தியதும், அரசனுக்குப் பின்னே தன்னைக் கடந்து செல்லும் ராணியின் கண்ணில் படும்படியாக அந்த மடலைத் தரையில் போட்டான். சத்தம் கேட்டுத் திரும்பிய அரசன் கண்ணில் இது பட்டுவிட்டது. மடலை எடுத்துப் படித்த அவன் கோபத்தால் சீறினான். கோபத்தில் சிந்தித்துப் பாராமல் தேரரையும், அவருடன் இருந்த வேடதாரியையும் கொன்று கடலில் எறியச் செய்து விட்டான். இதனால் கோபமடைந்த கடலரசன் பொங்கினான். அதனால், நாட்டுக்குள் கடல் புகுந்தது. உடனே அரசன் தன்னுடைய அழகிய பெண்ணான, இளவரசி தேவி என்பவளை ஒரு பொற்கலத்தில் வைத்தான். கலத்தின்மீது அரசகுமாரி என்று பொறிக்கப் பட்டிருந்தது. அதை அப்படியே அதே கடலில் விடச் செய்தான். அந்தக் கப்பல் இலங்கை விகாரத்துக்கருகே கரையில் ஒதுங்கியது. அரசன் காகவனதீசன் அவளைக் கண்டு தன் ராணியாக்கினான். இதனால் இவளுடைய பெயருக்கு முன் விகார என்ற அடைமொழி வந்தது. ஆகவே மேற்கண்ட மகாவம்ச கதையில் மன்னர் ஒரு துறவியைக் கொல்கிறார், இது கடல் கடவுளின் கோபத்தை எழுப்புகிறது, அது நாட்டை மூழ்கடிக்க வெள்ளத்தை ஏற்படுத்தியது என்றாகிறது. இராசாவலிய, அந்த கடல் கடவுளை மணிமேகலை [Mannimehala] என்ற தமிழ்ப் பெயரால் அடையாளம் காட்டுகிறது. ஆனால், மகாவம்ச, மகாநாமா அந்த தமிழ்ப் பெயரையோ அல்லது கடல் கடவுளின் பெயரையோ குறிப்பிடவில்லை. இரண்டு பழம் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றில், கடலின் தெய்வம் மணிமேகலை ஆகும். இந்த இரு தமிழ் காவியங்களும் தீபவம்சத்துக்கும் முன்னையது ஆகும். தமிழ் இலக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ள இதே போன்ற கடல் பிரளயம் [sea deluge] உள்ளது. விகாரா தேவி ஒரு தங்கப் பாத்திரத்தில் வைக்கப்பட்டு கடலில் மிதக்க விடப்பட்டார். தமிழ் வீரனைக் கொன்ற வாளில் இருந்து இரத்தக்கறை படிந்த தண்ணீரைக், ஒரு தமிழ் வீரனின் துண்டிக்கப்பட்ட தலையில் தனது ஒரு காலை வைத்துக் கொண்டு குடிக்க வேண்டும் என்று ஒரு கொடூரமான ஆசையை விகாரா தேவி கொண்டிருந்தார். போர் இல்லாத நேரத்தில் அவள் தனது இந்த கொடூரமான தாகத்தைத் தணித்தாள்; அத்தியாயம் 22 இன் 55 முதல் 58 வரையிலான வசனங்களைக் காண்க. ' ........ அரசன் இதையறிந்ததும், அவனைப் பிடிப்பதற்காகத் தன்னுடைய முதல் வீரனை அனுப்பினான். குதிரையில் ஏறிக் கொண்டு இவ் வீரன் அவனைத் தொடர்ந்தான். குதிரை மேலிருந்தவாறே வேலு சுமணன் காட்டில் மறைந்து கொண்டு, துரத்தி வந்தவன் அருகில் நெருங்கிய போது வாளை நீட்டினன். குதிரைமீது வேகமாக வந்த அவனுடைய தலை துண்டுபட்டுக் கீழே விழுந்தது. குதிரையையும் வீரனுடைய தலையையும் எடுத்துக் கொண்டு, வேலு சுமணன் அன்று மாலையே மகாகாமத்தை [Mahagama] அடைந்தான். ராணி விரும்பிய வண்ணம் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டாள். அரசன் வேலு சுமணனுக்கு (அவன் செய்த சேவைக்கு) ஏற்ற பரிசுகளை அளித்துக் கெளரவித்தான்.' - இவள் தான் தன் இரண்டு மகன்களையும் வடிவமைத்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது? Part: 86 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 A ridiculous tale is spun around Vihara Devi in the verses 13 to 22 of Chapter 22 of the Mahavamsa. The king kills a monk in the above tale which arosed wrath of the sea-god and deluge took place to inundate the country. Rajavaliya identifies the sea-god as Mannimehala, a Tamil name, and Mahanama did not want to keep the Tamil name and did not name the god. In the two Tamil epics, the Silapathikaram and the Mannimegalai, the goddess of sea is Mannimegalai. There is a similar sea deluge described in Tamil literature. Vihara Devi was put on a golden vessel and let to drift in sea. Vihara Devi is also a Naga princess. Vihara Devi had a cruel desire to drink the blood stained water from the sword, which was used to slain Damila soldier while putting one of her legs on the severed head of the Damila soldier. She did quench her cruel thirst during the time of no war; see verse 55 to 58 of Chapter 22. This is the woman who moulded her two sons. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 87 தொடரும் / Will follow துளி/DROP: 1985 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 86] https://www.facebook.com/groups/978753388866632/posts/33225259250455961/?
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1 🏡 பாகம் 01 – வெல்வின் கார்டன் சிட்டியில் ஏற்பட்ட முதல் ஆரவாரமும் ஆச்சரியமும் காலைக் கதிரவன் மெதுவாக எழுந்து, வெல்வின் கார்டன் சிட்டியின் [Welwyn Garden City] வீதிகளைத் தங்க நிற ஒளியால் அலங்கரித்தது. ஐந்து வயதிற்கும் சற்று குறைவான 'நிலன்', அரை உறக்கத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டு, கார் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் தாத்தா ஏன் அவர்களை காரில் கூட்டிக் கொண்டு போகிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. குட்டி 'ஆரின்' தனது குழந்தை இருக்கையில் பாதி தூக்கத்தில் இருந்தான்; ஆனால் மூத்த அண்ணன் 'திரேன்' மகிழ்ச்சியுடன் துள்ளிக் கொண்டிருந்தான். உறக்கம் கலந்த குரலில், ஆர்வத்துடன், “தாத்தா, நாம் எங்கே போறோம்?” என நிலன் கேட்டான். “என் சிறிய ஆராய்ச்சியாளனே, அதை நீயே விரைவில் பார்ப்பாய்” என்று தாத்தா சிரித்தபடி “இது ஒரு பெரிய ஆச்சரியம்!” என்று சொன்னார். வெல்வின் கார்டன் சிட்டியின் தெருக்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட புதர்கள், அழகாக சுத்தமான வீடுகளுடன், ஒரு குழந்தைப் புத்தகக் கதையைப் போல் தோன்றின. பறவைகள் கீதம் பாட, மர இலைகள் மெதுவாக அசைந்தன. தாத்தா மெதுவாக காரை ஓட்டிச் சென்றார். வழியில், அங்கு காணப்பட்ட சிறிய, அழகான விவரங்களையும் மற்றும் மனதில் தோன்றிய சிறு சிறு விடயங்களையும் சுட்டிக்காட்டினார் – ஒரு தோட்டத்தில், சோம்பேறித்தனமாக கால்களைக் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பூனை, ஒரு வேலியுடன், அனாதரவாக சாய்ந்து நின்ற சிவப்பு மிதிவண்டி, மற்றும் நடைபாதையில் குறுக்கே வேகமாகச் செல்லும் ஒரு சிறிய அணில் போன்றவற்றைப் பார்த்துக் கொண்டு சென்றனர். தாத்தா கூட்டிக் கொண்டு போன இடத்தை அடைந்ததும் நிலனின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "இது... ஒரு பூங்காவா?" அவன் தன் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு கிசுகிசுத்தான். “ஆம், ஆனால் இது சாதாரண பூங்கா அல்ல,” என்று தாத்தா கார் கதவைத் திறந்தார். குழந்தைகள் கற்களால் ஆன ஒரு பாதையில் ஒன்றாகப் பாய்ந்து ஓடினர். அங்கு உயரமான வேலிகளுக்குப் பின்னால் ஒரு இரகசிய தோட்டம் மறைந்திருந்தது. சிவப்பு, மஞ்சள், ஊதா நிற மலர்கள் வானவில் போல் மலர்ந்திருந்தன. லாவெண்டர் [lavender] மற்றும் ரோஜாக்களின் வாசனை காற்றை நிரப்பியது. திடீரென்று, ஒரு மென்மையான சிரிப்பு நிலனின் கவனத்தை ஈர்த்தது. “Welcome to Adventure Grove” ["சாகச தோப்புக்கு வருக"] என்று ஒரு சிறிய மர பலகையில் எழுதப்பட்டிருந்தது. அது அவர்களை புன்னகையுடன் பேசி வரவேற்றது. அதன் பின் சிறிய பாதைகள், பாலங்கள், ஓடைகள், விலங்குகளின் சிற்பங்கள் — எல்லாம் சேர்ந்து ஒரு கற்பனை உலகம் போல விரிந்து பரவி இருந்தது. “தாத்தா! பாருங்க!” என்று திரேன் கத்தினான். தோட்டத்தின் மையத்தில் உள்ள ஒரு சிறிய கோட்டையை சுட்டிக்காட்டினான். அதில் கோபுரங்களும், காற்றில் பறக்கும் சிறிய கொடிகளும் இருந்தன. "நாம் உள்ளே போகலாமா?” என்று கேட்டான். "நிச்சயமாக!" என்று தாத்தா பதிலளித்தார். அங்கு தான் முதல் அதிசயமான அனுபவம் அவர்களுக்கு ஆரம்பமானது. குழந்தைகள் வளைந்து நெளிந்து ஓடி, மறைந்திருக்கும் மூலைகளைக் கண்டுபிடித்தனர்: வாத்துக் குஞ்சுகள் மிதக்கும் ஒரு சிறிய குளம், ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்திருந்து எட்டிப்பார்க்கும் ஒரு செதுக்கப்பட்ட மர நரி சிற்பம், மற்றும் அவர்களுக்காகவே செய்யப்பட்டதாகத் தோன்றும் ஒரு வில்லோ மரத்தின் [அலரி மரம் or காற்றாடி வகை மரம் / willow tree] கீழ் மறைந்திருக்கும் ஒரு ஊஞ்சல் என பலவற்றை மூலை முடுக்குகளில் கண்டு பிடித்தனர். எப்போதும் ஆர்வமுள்ள நிலன், ஒரு மலர் படுக்கையின் அருகே ஏதோ மின்னுவதைக் கவனித்தான். மண்டியிட்டு [குனிந்து] அவன் பார்த்த பொழுது, வண்ணமயமான கூழாங்கற்களால் [colorful pebbles] அமைக்கப்பட்ட சிறிய ரகசிய பாதை ஒன்றைக் கண்டான். "புதையல் வேட்டை!" என்று அவன் கூச்சலிட்டான். தாத்தா சிரித்துக்கொண்டே ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய கூடையைக் கொடுத்தார். அவர்கள் கூழாங்கற்களைச் சேகரிக்கத் தொடங்கினர். அப்பொழுது அங்கே, அந்த ரகசிய பாதையில், ஒவ்வொரு முறையும் ஒரு பட்டாம்பூச்சி கலைந்து பறந்து செல்லும்போதும் அல்லது ஒரு பறவை கலைந்து குரல் கொடுக்கும் போதும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் பசுமையான புல்வெளியில் அமர்ந்தனர். தாத்தா ஒரு சாப்பாட்டு கூடையை திறந்தார். அதில் சாண்ட்விச் [sandwich], பழங்கள், பிஸ்கட்டுகள் [Biscuits] என பல சிற்றுண்டிகள் இருந்தன. தாத்தா சிரித்தபடியே, “இது என் சிறிய சாகச வீரர்களுக்கான காலை விருந்து,” என்றார். நிலன் ஒரு ஸ்ட்ராபெர்ரி [strawberry] எடுத்து, அதன் இனிப்பை ருசித்தான். திரேன் "புதையல் வேட்டையின்" [“Treasure Hunt”] வெற்றியை பெருமையுடன் எல்லோருக்கும் விவரிக்க, குட்டி ஆரின் தாத்தாவின் மடியில் கைத்தட்டி கைத்தட்டி விளையாடிக் கொண்டு இருந்தான். ஆனால் அவர்களுக்கு இன்னும் ஒரு அதிசயம் [ஆச்சரியம்] காத்திருந்தது. தாத்தா குழந்தைகளை ஒரு மறைக்கப்பட்ட மூலையில், ஒரு சிறிய மர மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு திரைக்குப் பின்னால் இருந்து, ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி தொடங்கியது - பேசும் விலங்குகள் மற்றும் மாயாஜால சாகசங்கள் பல அங்கு நிறைந்து இருந்தது. ஒவ்வொரு காட்சியும் அவற்றின் பெயர்களைச் சேர்த்து கவனமாக விபரமாக கொடுத்தது. ஒரு பொம்மை டிராகன் [a puppet dragon], அங்கே நிலனை வணங்கிய பொழுது, நிலன் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டான். கூச்ச சுபாவமுள்ள குட்டி ஆரின் கூட தனது தாத்தாவின் கைகளிலிருந்து சிரித்தான். நேரம் செல்லச் செல்ல, கதிரவன் மேலே மேலே ஏறினான். குழந்தைகள் கதிரவனின் வெப்பத்தை, ஒரு வெதுவெதுப்பான அரவணைப்பை, உணர்ந்து, அதில் மகிழ்ச்சியிலும் அன்பிலும் மூழ்கினர் — உண்மையில் சூரிய ஒளியிலிருந்து மட்டுமல்ல, கண்டுபிடிப்பின் சிலிர்ப்பாலும், குடும்பத்தின் ஆறுதலாலும், அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் காலையில் அனுபவித்த மாயாஜாலத்தாலும் மூழ்கி இருந்தனர். தாத்தா, சிரித்துக் கொண்டே, இவை தான் வாழ்க்கையின் உண்மையான செல்வம் என எண்ணினார். சாகச தோப்பை விட்டு, வீட்டிற்குத் திரும்பும்போது, குழந்தைகள் சோர்வாக இருந்தனர், ஆனால் மகிழ்ச்சியாக இருந்தனர், அவர்களின் மனம் அரண்மனைகள், ரகசிய பாதைகள் மற்றும் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களால் நிறைந்திருந்தது. "நன்றி தாத்தா," நிலன் மெதுவாக தனது இருக்கையில் சாய்ந்து அரைத்தூக்கத்தில் கூறினான். “இது என் வாழ்நாள் சிறந்த அதிசயம்." தாத்தா என்றான், சோம்பல் முறித்தபடி. தாத்தா மனம் நிறைந்த புன்னகையுடன் கூறினார். "சாகசம் இப்போதுதான் தொடங்கியுள்ளது, குழந்தைகளே. அது தொடரவேண்டும் என்றால், அடுத்த வாரம் தொடங்கும், உங்கள் கோடை விடுமுறை வரை காத்திருங்கள்." என்றார். இரகசிய தோட்டத்தையும் சிரிப்பின் எதிரொலிகளையும் ஒருபுறம் தள்ளி விட்டுவிட்டு, அவர்களின் அற்புதமான பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்குத் தயாராக கார் வீடு நோக்கி மெதுவாகச் சென்றது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 02 தொடரும் துளி/DROP: 1978 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1 https://www.facebook.com/groups/978753388866632/posts/33171634115818475/? கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 2 🏡பாகம் 02 – வெல்வின் கார்டன் சிட்டியில் மீண்டும் ஒரு ஆச்சரியம் அது ஒரு ஒளிமிகுந்த, தென்றல் காற்று வீசிய சனிக்கிழமை காலை. மேகங்கள் கூட மகிழ்ச்சியாகத் தெரிந்த ஒரு காலைப் பொழுதாக வெல்வின் கார்டன் சிட்டி [Welwyn Garden City] இருந்தது. மார்பு சிவந்த சிறுபறவைகளான ராபின் [Robins] தோட்ட வேலியில் இருந்து பாட, தபால்காரர் விசில் அடிக்க, வீட்டிற்குள், மூன்று சிறுவர்கள் ஏற்கனவே ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் [இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டமாகும் / Hertfordshire] உள்ள அனைத்து பறவைகளையும் விட அதிக சத்தம் எழுப்பிக் கொண்டு, அவர்களது கோடை விடுமுறையின் முதல் நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். மூத்த பேரனும் மற்றும் பத்துவயது நிரம்பிய திரேன் ஒரு அறிவியல் பணியில் [scientific mission] தன்பாட்டில் விளையாடிக்கொண்டு இருந்தான். ஆர்சனல் கால்பந்து கிளப்பின் [Arsenal F.C] அதிதீவீர ஆதரவாளனான அவன், கையில் ஒரு டார்ச்சுடன் [torch] சோபாவின் கீழ் ஊர்ந்து சென்று, கிசுகிசுத்தான். “காணாமல் போன கால்பந்து இந்தக் காட்டில் எங்காவது ஒளிந்து கொண்டிருக்க வேண்டும்!” என்று காட்டில் தேடுவது போல பாசாங்கு செய்தான். ஐந்து வயது நிலன், ஒரு துணிச்சலான விண்வெளி வீரனாகத் தன்னை தயார் படுத்திக் கொண்டு, தலைக்கவசத்திற்குப் பதிலாக ஒரு பாத்திரத்தை தலையில் கவிழ்த்து போட்டுக் கொண்டு, ஒரு துணி துவைக்கும் கூடையில் அமர்ந்து, அதை விண்வெளி நோக்கி போகும் ராக்கெட் கப்பலாக கற்பனை செய்து, பெருமையாகக் சத்தம் போட்டு, “மூன்று… இரண்டு… ஒன்று… புறப்படு நிலா நோக்கி!” என்று கூவினான். இதற்கிடையில், ஒரு வயதான குட்டி ஆரின், தாத்தாவின் பழைய கம்பள சாக்ஸை [old woolly sock] கண்டு பிடித்து, அதைக் கடித்து மகிழ்ந்து கொண்டிருந்தான். இந்த மகிழ்ச்சிகரமான பேரப்பிள்ளைகளின் குறும்புகளுக்கு நடுவில், தாத்தா 'கந்தையா தில்லை' அமைதியாக தனது காலை தேநீரைப் பருகிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியும் பெருமையும் கலந்த புன்னகையுடன் பேரப்பிள்ளைகளின் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த போது, அவரது கண்ணாடிகள் கூட மூக்கின் நுனி வரை நழுவி சென்று எட்டிப்பார்த்தது. வாழ்க்கை அவருக்கு பல சாகசங்களைக் கொடுத்திருந்தாலும், இந்த மூன்று சிறு புயல்களே அவருக்கு மிகப் பிரியமானவையாக இன்று இருந்தது “சரி என் சிறு சூறாவளிகளே,” என்று தாத்தா தேநீர் அருந்தியதும் மெல்லக் கூறி, “அனைவரும் தயாராகுங்கள் — நாம் இனி உடுப்புகளை அடுக்கி, பயணப்பெட்டிகளை [suitcases] தயார் செய்ய வேண்டும்" என்றார் மூன்று பேரப்பிள்ளைகளின் தலைகளும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்தில் மேலெழுந்தன. “உடுப்பு அடுக்குதல்?” — திரேன் ஆவலாக, தன் கண்களை அகல விரித்துக்கொண்டு தாத்தாவிடம் கேட்டான். “வீடு மாறப் போகிறோமா?” — நிலன் தன் கூடையில் இருந்து குதித்து எழும்பினான். “பா-பா!” [“Baa-ba!”] என்று ஆரின் கத்தினான் — தன்னுடைய பால் எங்கே என்று? தாத்தா சிரித்தார். “இல்லை இல்லை, நாம் வீடு மாறவில்லை — பயணம் போகப் போகிறோம்! நான் ஒரு அற்புதமான இடத்துக்கு ஆச்சரியமான சாகசத்தைத் திட்டமிட்டுள்ளேன், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் [ஆச்சரியம் / surprise] ஆக" என்றார். வெப்பமாய் வெளிச்சமாய் இருக்கும் ஒரு நாட்டுக்கு, அங்கே நீங்கள் கடித்து சுவைத்து உண்ண நிறைய கூக்கீஸ்களும் ["பிஸ்கட்" அல்லது "இனிப்பு அப்பம்" / cookies] இருக்கும்!” “கூக்கீஸா?” என்று நிலனின் கண்கள் ஒளிர்ந்தன. “அது பாட்டியின் சமையலறையா?” என்று கேட்டான். “அதையும் விட சிறந்தது,” என்று தாத்தா கண் சிமிட்டினார். “மணல் தங்கமாக ஒளிவிடும் இடம், கோபுரங்கள் மேகங்களைத் தொடும் இடம், கடலும் நகரத்தைக் கட்டி அணைக்கும் இடம்!” என்று கூறிவிட்டு" சொல்லுங்கள் பார்ப்பம் என்றார். திரேன் முதலில் கத்தினான், “துபாய்?”. தாத்தா பெருமையாகத் தலைஅசைத்தார். “ஆம், துபாய் தான் — நம்முடைய அடுத்த குடும்ப சாகசம்!” என்றார். ஒரு கணம் திகைப்பூட்டும் அமைதி நிலவியது, அதைத் தொடர்ந்து அடுத்த கணமே வீடே குலுங்கும் அளவுக்கு சத்தம் கேட்டது! அந்த அலறலில், வேலியில் அமர்ந்து இருந்த ராபின் பறவைகள் பயம் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றன. திரேன் உலக வரைபடத்தை எடுக்க ஓடினான். நிலன் துள்ளிக் குதித்து, “துபாய்! துபாய்! துபாய்!” என்று ஏதேதோ சொல்லி சொல்லி கோஷமிட்டான். ஆரினும் தன் சிறு கைகளால்த் தட்டியபடி தாத்தாவின் முழங்காலில் முத்தம் கொடுத்து மகிழ்ந்தான். “இப்போ எல்லோரும் உங்கள் உங்கள் பயணப் பெட்டியை அடுக்க ஆரம்பியுங்கள்,” என்று தாத்தா மகிழ்ச்சியுடன் கட்டளை இட்டார். “ திரேன், உன் எக்ஸ்ப்ளோரர் தொப்பியை [ஆய்வுப்பயணத் தொப்பி / explorer hat] எடுத்து வா. நிலன், உன் பாத்திரத் தொப்பியை வீட்டிலேயே விட்டுவிட்டு வா — இல்லை யென்றால் விமான நிலையத்திலே, உன்னைச் சமையல் காரன் [குக் / chef] என நினைப்பார்கள்! ஆரின், நீ உன் புன்னகையை மறக்காமல் எடுத்துக்கொண்டு வா, அழாமல் மகிழ்வாக இருக்க.” என்று தாத்தா எல்லோருக்கும் அன்பான வேண்டுகோள் வழங்கினார். நேரம் செல்லச் செல்ல சாளரத்தின் [யன்னல்] திரைச்சீலைகள் வழியாக சூரிய ஒளி வீட்டுக்குள் பரவின. விமான நிலையம் போகும் நேரம் நெருங்குகிறது என்பதை இது நினைவூட்டியது. வெல்வின் கார்டன் சிட்டியில் உள்ள அவர்களின் வீடு இதனால், உற்சாகத்தால் சலசலத்தது. விமான நிலையத்திற்குப் புறப்படத் தயாராகும் இந்த வேளையில், சூட்கேஸ்கள் (சக்கரங்களுடன்) இழுக்கப்பட அல்லது தள்ளப்பட தொடங்கின. சாக்ஸ் [காலுறை / socks] மீண்டும் காணாமல் போயின, தாத்தா தனக்குள் மெதுவாகச் சிரித்தார். "இன்னொரு சாகசம் தொடங்குகிறது - இந்த முறை, என் மூன்று சிறிய ஹீரோக்களுடன் [கதாநாயகர்களுடன்]." என்று தாத்தா பெருமையுடன் அறிவித்தார் 🌞 நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 03 தொடரும் துளி/DROP: 1984 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 2] https://www.facebook.com/groups/978753388866632/posts/33216229664692253/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 85 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 85 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை 22 முதல் 32 வரையிலான அத்தியாயங்கள் துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியைப் பற்றியவை ஆகும். எனவே, முழு அத்தியாயமும் ஒன்றாக இங்கு விவாதிக்கப்படுகின்றன: மகாவம்சத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 271, இதில் 81 பக்கங்கள் அல்லது சுமார் 30% பக்கங்கள், துட்டகாமினிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காமனி இருபத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார், ஆனால் மன்னர்களின் மொத்த ஆட்சிக்காலம் சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டுகள். எனவே, காமனி மொத்த ஆட்சிக் காலத்தில் 3% க்கும் குறைவாகவே ஆட்சி செய்தார். என்றாலும், 3% காலம் மட்டுமே ஆட்சி செய்த மன்னனுக்கு 30% பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தலைகீழ் நடத்தை மகாவம்சம் எவ்வளவு நம்பகத்தன்மையற்றது என்பதையும், ஆசிரியரான மகாநாமாவின் மனநிலையையும் சுட்டிக் காட்டுகிறது. மகாநாகன் [Mahanaga] தேவநம்பிய தீசனின் ஆட்சிக் காலத்தில் துணை ஆட்சியாளராக இருந்தார். அரியணைக்கு அடுத்தபடியாக இருந்தார். என்றாலும், தேவநம்பியதீசனின் மனைவியால் கொல்லப்படுவதைத் தவிர்க்க ரோஹனாவுக்கு [Rohana, "ரோஹண" என்ற பெயர் வரலாற்று ரீதியாக இலங்கையின் தெற்குப் பகுதியைக் குறிக்கிறது, இது தற்போதைய தெற்கு மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. பண்டைய காலங்களில், ரோஹண (அல்லது ருஹுணா / Ruhuna) இலங்கையின் மூன்று முக்கிய பிரிவுகளில் ஒன்றாக இருந்தது, அதனுடன் ராஜரட்ட (வடக்கு-மத்திய பகுதி / Rajarata ) மற்றும் மலாயா ரட்ட (மத்திய மலைப்பகுதிகள் / Malaya Rata) ஆகியவையும் இருந்தன.] ஓடிவிட்டார், அங்கு தனது சொந்த இராச்சியத்தை நிறுவினார். அதாவது, ஒரே நேரத்தில் குறைந்தது இரண்டு இராச்சியங்கள் அப்பொழுது இருந்தன; ஒன்று அனுராதபுரத்தில் தேவநம்பிய தீசனால் ஆளப்பட்டது, மற்றொன்று ரோஹனத்தில் மகாநாகனால் ஆளப்பட்டது. அரண்மனை சூழ்ச்சியின் காரணமாக, தனக்கென ஒரு ராஜ்யத்தை நிறுவ அவர் ரோஹனத்திற்குச் சென்றார். மேலும், மகாநாகன் தனது குடும்பத்தினர், ஆண்கள் மற்றும் குதிரைகளுடன் மன்னரின் அறிவிப்பு இல்லாமல் நகரத்தை விட்டு வெளியேறினார் என்று நம்புவது அபத்தமானது. கல்யாணியில் நாகர்கள் ஆட்சி செய்த மற்றொரு ராஜ்யம் இருந்ததாகத் தெரிகிறது. தற்செயலாக, இந்த மன்னரின் பெயரும் தீசன். எனவே, அவ்வேளையில், குறைந்தது மூன்று இராச்சியங்கள் இருந்துள்ளன என்று ஊகிக்கலாம். . மகாநாகனின் மகன் யாத்தலயக்திஸ்ஸன், அவர் தனது தந்தைக்குப் பிறகு ரோஹணவில் [உருகுணை இராச்சியம் / Kingdom of Ruhuna] அரியணை ஏறினார். அவரது மகன் கோதாபயனும் அவரது தந்தைக்குப் பிறகு ஆட்சி செய்தார். கோதாபயனின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் காகவண்ண தீசன் ஆட்சி செய்தார். மகாநாகன், அட்டாலய திச்சன் அல்லது யாத்தலயக்திஸ்ஸன் [Yatala Tissa or Yatthalayaktissa], கோதாபயன் [Gothabhaya] மற்றும் காவன்தீசன் அல்லது காகவண்ண தீசன் [Kavan Tissa] ஆகிய இந்த நான்கு மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் காலத்தை மகாவம்சம் தரவில்லை. முழு அத்தியாயமும் தீபவம்சத்திற்குப் பிறகு, செருகப்பட்டிருக்க வேண்டும்? மகாவம்சத்தின் நாயகன் வெளிப்படையாக துட்டகாமினி ஆகும். இவனின் தந்தை, தாத்தா மற்றும் கொள்ளுத்தாத்தா ஆகியோரின் ஆட்சிக்காலம் இராசாவலியவில் கூட கொடுக்கப்படவில்லை. ஆனால், மற்றவைப் போல, அவர்களின் பெயர்களை மட்டும் பட்டியலிடுகிறது. இப்படி எந்த விவரங்களும் இல்லாமல் ஒரு வரலாறு இருக்கமுடியாது. ஆகவே இதன் வரலாற்றில் ஒரு ஐயப்பாடு உண்டு? அதுமட்டும் அல்ல, துட்டகாமினியின் கதை அமைப்பை உற்றுநோக்கும் பொழுது ஜோடிக்கப்பட்ட கதையாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று இயல்பாகவே எவருக்கும் தோன்றும்? துட்டகாமினியின் தாய் விகாரமகாதேவி, அவர் கல்யாணி மன்னரின் மகள். தீபவம்சத்தில் விகார தேவி பற்றி எந்த குறிப்பும் இல்லை. புத்தர், கல்யாணி நாக மன்னரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு மூன்றாவது முறையாக விஜயம் செய்ததாகக் இலங்கை நாளாகமம்கள் கூறுகின்றன. எனவே விகார தேவி ஒரு நாக இளவரசியாக இருக்க வேண்டும்? மேலும் விகாரமகாதேவி பிறந்த களனி இராச்சியம், நாகர் இராச்சியமாக இருந்ததுடன், அது தென்னிந்தியாவுடன் வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களைக் கொண்டிருந்தது. அத்துடன் மேற்கு இலங்கையில் ஆட்சி செய்தவர்கள் தமிழ் வணிகர்களுடனும் தென்னிந்திய தாக்கங்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூட சில புராணக்கதைகள் கூறுகின்றன. அது மட்டும் அல்ல, ருஹுணா [Ruhuna] பிரதேசம், பல நூற்றாண்டுகளாக சிங்களவர்களும் தமிழர்களும் தொடர்பு கொண்ட ஒரு கலப்புப் பகுதியாக அறியப்பட்டதும் ஆகும். இன்னும் ஒன்றும் சொல்லவேண்டும், வரலாற்று மற்றும் தொல்பொருள் சான்றுகள், தீவில் திராவிட (தமிழ்) மற்றும் இந்தோ-ஆரிய கூறுகள் உள்ளிட்ட இன மற்றும் கலாச்சார தாக்கங்கள் மிக ஆரம்ப காலத்திலிருந்தே, இருந்ததாகத் தெரிவிக்கின்றன. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக்கு முன்பே, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், தமிழ் பேசும் சமூகங்கள் இலங்கையில் இருந்ததுடன் திராவிட செல்வாக்கு மற்ற பகுதிகளுக்கும் பரவியதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன! மகாவம்சம் போன்ற நாளாகமம் ஆதாரங்களின்படி, அவரது தந்தை மன்னர் களணி தீசன் [Kelani Tissa / Tissa of Kelaniya], ஒரு அப்பாவி புத்த துறவியைக் கொன்றதன் மூலம் பெரும் அநீதியைச் செய்தார். இதன் விளைவாக, கடல் பொங்கி எழுந்து அவரது இராச்சியத்தை வெள்ளத்தில் மூழ்கடித்ததாகக் கூறப்படுகிறது. கடவுள்களை திருப்திப்படுத்தவும், கடலை அமைதிப்படுத்தவும், அவர் தனது மகள் விகாரமகாதேவியை ஒரு படகில் ஏற்றி, அவளைத் தத்தளிக்கச் செய்தார். இறுதியில் அவள் தெற்கு இலங்கையில் உள்ள ருஹுணாவில் தரையிறங்கினாள், அங்கு மன்னர் காகவண்ண தீசன் (துட்டகாமினியின் தந்தை) அவளை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். இந்த கதையும் இந்தியாவின் பண்டைய இதிகாசத்தின் ஒரு சாயலை வெளிப்டையாகக் காட்டுகிறது. மற்றும் கட்டாயம் இதுவும் எந்த ஒரு உண்மையான வரலாறும் அல்ல, ஒரு புராணக் கதையாகவே தோன்றுகிறது. Part: 85 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapters 22 to 32 are about Gamani and, therefore, discussed together: The total number of pages of the Mahavamsa is 271 and 81 pages are allotted to Gamani: about 30% of the pages are allotted to Gamani. Gamani ruled only for twenty-four years, but the total lengths of the reigns of kings is about eight hundred and thirty five years. Gamani ruled, therefore, less than 3% of the total reigns. The king who ruled only for 3% of the time is allotted 30% of the pages. This lopsided treatment shows how untrustworthy the Mahavamsa is and the mindset of the author, Mahanama. Mahanaga was the vice-regent during the reign of Devanampiya Tissa, being next in line to the throne, fled to Rohana to avoid being killed by the wife of Devanampiyatissa, and founded his own kingdom there. This means that there were at least two kingdoms at the same time; one in Anuradhapura ruled by Devanampiya Tissa and another in Rohana ruled by Mahanaga. He went to Rohana to establish a kingdom for himself because of the palace intrigue. It is, furthermore, ridiculous to believe that the vice-regent left the city with his family, men and horses without the notice of the king. It seems that there was another kingdom at Kalyani ruled by Nagas. Coincidently, the name of this king also Tissa. There were at least three kingdoms. Mahanaga’s son was Yatthalayaktissa, and succeeded his father to the Rohana throne. His son Gothabhaya also ruled after his father. His son Kakavannatissa reigned after Gothabhaya’s death. Mahavamsa is not giving the lengths of the reigns of these four kings; Mahanaga, Yatthalayaktissa, Gothabhaya and Kakavannatissa. The whole episode must have been later insertion, after the Dipavamsa. The hero of Mahavamsa is obviously Duttha Gamani, and even the length of the reigns of his father, grandfather, and the great-grandfather were not given. Rajavaliya lists their names but without any specifics for the lengths of their reigns. Culavamsa also does not list the lengths of their reigns. It must have been a fabricated story, not history, without any details. Duttha Gamni’s mother is Vihara Devi, and she was the daughter of the king of Kalyani. There is no mention of Vihara Devi in the Dipavamsa. The alleged third visit of Buddha to Lanka was to Kalyani, on the invitation of the Naga king of Kalyani. Therefore, the Vihara Devi should be a Naga princess. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 86 தொடரும் / Will follow துளி/DROP: 1983 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 85] https://www.facebook.com/groups/978753388866632/posts/33210382945276925/?
-
"மூன்று கவிதைகள் / 20"
"மூன்று கவிதைகள் / 20" 'பட்டாம்பூச்சியின் காதல் ... ' பட்டாம்பூச்சியின் காதல் நிரந்தரம் அல்ல பருவம் கொடுத்த அழகின் ஈர்ப்பு! தொட்டால் குலுங்கும் ஒரு உணர்வு பட்டால் தெரியும் அதன் மாயை! திடீரென பிறக்கும் இதயத்தின் துடிப்பு திட்டம் இல்லா மனிதனின் ஆசை! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. 'புத்தருக்கும் ஆசை வருமா' புத்தருக்கும் ஆசை வருமா? இலங்கைத் தமிழரைக் கேட்டுப் பார்— சிலை வடிவில் ஊடுருவும் பேராசையை! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................................. 'வெள்ளை மழை இங்கு பொழிகிறது' வெள்ளை மழை இங்கு பொழிகிறது பிள்ளை நிலா வானில் ஒளிர்கிறது வள்ளி உன்னை மனம் தேடுகிறது! துள்ளி இருவரும் பனியில் சறுக்கி அள்ளி அணைத்து குளிர் காய்ந்து பள்ளி அறையில் இன்பம் காண்போம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................ துளி/DROP: 1982 ["மூன்று கவிதைகள் / 20" https://www.facebook.com/groups/978753388866632/posts/33204560462525840/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 84 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 84 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மூத்தசிவனின் தந்தை பண்டுகாபயா பதினாறு முதல் இருபது வயதுக்குள் தனது மனைவி சுவண்ணபாலியைச் சந்தித்தார் என்றும் அவருக்கு முப்பது வயதில் மகன் மூத்தசிவன் பிறந்திருந்தார் என்றும் வைத்தால், மூத்தசிவன் தனது எழுபத்தேழு வயதில் அரியணை ஏறியிருப்பார். பின்னர் அவர் நூற்று முப்பத்தேழு வயது வரை, [அறுபது ஆண்டுகள்] ஆட்சி செய்திருக்க வேண்டும். மூத்தசிவனுக்கு பத்து மகன்கள் இருந்தனர், அசேலன் ஒன்பதாவது மகன். மூத்தசிவனுக்கு ஐம்பது வயதாக இருந்தபோது அசேல பிறந்திருந்தால், அசேல நூற்று எண்பத்தொன்பது வயது வரை, 137-50 + 40 + 10 + 10 + 10 + 22 + 10 = 189 வரை வாழ்ந்திருப்பார். இந்த விபரங்கள் விரிவாக முழுமையாக முன்பே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றும் பல நம்பமுடியாத நிகழ்வுகளாலும் விஜயன் முதல் அசேல வரையிலான மன்னர்கள் நிச்சயமாக உண்மையான மன்னர்கள் அல்ல என்பது மிகவும் தெளிவாகிறது. மேலும் அவர்களின் பல ஆட்சிகள் நம்பமுடியாத அளவிற்கு நீண்ட ஆட்சிகளைக் கொண்டவை. விஜயனின் வருகையை புத்தரின் மரணத்துடன் ஒத்திசைக்க வரலாற்றாசிரியர்கள் ஆர்வமாக இருந்ததால், அந்த நடவடிக்கையின் காரணமாக, இது ஏற்பட்டிருக்க வேண்டும்? அதேவேளை புத்தரின் மரணத்தையும், அதாவது மரண திகதியையும் தவறாகப் புரிந்து கொண்டு இருக்க வேண்டும். இவை எல்லாம் முழுவிபரமாக, விரிவாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, இலங்கை நாளாகமங்களின்படி, அசோகரின் முடிசூட்டுக்கு சுமார் இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, புத்தர் இறந்தார். அதேவேளை, இந்திய மரபுகளின்படி, அசோகரின் முடிசூட்டுக்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தரின் மரணம் நடந்திருக்க வேண்டும். இந்த நிகழ்வு இந்தியாவில் நடந்தது, மேலும் இந்திய தரவுகளை விட இலங்கை நாளேடுகளை நம்பகமானதாகக் கருதுவதற்கு எந்த சரியான காரணமும் இல்லை. இந்த அத்தியாயத்தின் சுமார் அறுபது சதவீதம், மன்னன் எல்லாளனின் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறது 21 - 13 முதல் 34 வரை பார்க்கவும். எங்கள் கீழ்நிலைப் பள்ளிகளில் இதே போன்ற நிகழ்வுகளைப் பற்றி நாங்கள் படித்துள்ளோம். மன்னனுடைய மகன் கவனக் குறைவாக ஒரு கன்றின் கழுத்தில் தேரை ஓட்டியதும், தாய்ப் பசு, அதன் காரணமாக, நீதி கேட்டு, கயிற்றை இழுத்தது மணி அடித்தது என்றும், இதனால், மன்னன் தன் சொந்த மகன் மீதே தேர் சக்கரத்தை செலுத்தி தண்டனை வழங்கினான் என்று நாங்கள் எங்கள் ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்புகளில் படித்தோம். இருப்பினும் இங்கு மன்னன் எல்லாளன் அல்ல. அது மனுநீதி கண்ட சோழன் [Manuneethy Kannda Cholan]. அது போல, எல்லாளனின் கதையில் வரும் நெல்லை உலர்த்தும் ஒரு வயதான பெண்மணியின் கதையையும் இதே மன்னரின் கதையில் காண்கிறோம். மேலும், எல்லாளன் கதையில் வரும், பாம்பு மற்றும் இளம் பறவைக்கு ஒத்த ஒரு சம்பவம், வேறு வழியில் மற்றொரு மன்னன் சிபி சக்கரவர்த்தி [King Shibi] கதையில் காண்கிறோம். இதுவும் நாங்கள் அதே வகுப்புகளில் படித்தோம். தமிழ் நாட்டு நாளாகமம்களுக்கும் மற்றும் இலங்கை நாளாகமம்களுக்கும் இடையில் பல பொதுவான இழைகள் [நிகழ்வுகள்] பின்னிப் பிணைவதைக் இங்கு காண்கிறோம். சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவகற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன், அசேலனத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்து நான்கு வருடம் ஆண்டான். (அவன்) எதிரிகள், நண்பர்கள் என்ற பேதம் இன்றி, நீதியின் முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான். அவன் படுக்கும் [சயன] அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்ட கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனிடம் நீதி கோரி வருபவர்கள் அந்த மணியை அடிக்கலாம். அரசனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் மட்டுமே இருந்தனர். ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத்தில் திஸ்ஸா வாவிக்குச் [Tissa-tank] சென்று கொண்டிருந்தான. அப்போது தாய்ப் பசுவுடன் வீதியில் படுத்திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச் சக்கரத்தை ஏற்றி, அறியாமல் அதனைக் கொன்று விட்டான். துக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது. தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன், தலையைத் துண்டிக்கச் செய்தான். பனைமரத்தில் அமர்ந்திருந்த பறவைக் குஞ்சு ஒன்றைப் பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. தாய்ப் பறவை ஓடி வந்து மணியை அடித்தது. அரசன் அந்தப் பாம்பைத் தன் முன்பு கொண்டு வரச்செய்தான். அதன் வயிற்றைக் கீறிக் குஞ்சை வெளியே எடுத்த பின்பு, அதை மரத் தின் மீது தொங்கவிட்டான். ஒரு கிழவி வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்தாள். பருவமில்லாத காலத்தில் வானம் மழையைப் பெய்து அரிசியை நனைத்து விட்டது. அவள் அரிசியை எடுத்துக் கொண்டு போய் மணியை அடித்தாள். பருவமில்லாத காலத்தில் மழை பெய்ததை அறிந்த மன்னன் கிழவியை அனுப்பிவிட்டான். "அரசன் நீதியுடன் நடந்தால் உரிய பருவத்தில் தானே மழைபெய்ய வேண்டும்?' என்று எண்ணியவனாக, இதுபற்றி முடிவு செய்வதற்கு உண்ணுவிரதத்தை மேற்கொண்டான். அரசனுடைய விரதத்தினால் வெப்பம் தாங்காத அவனுடைய குலதெய்வம் இதுபற்றி நான்கு பெருந் தேவர்களிடம் தெரிவித்தது. * நான்கு பெரும் திசைகளை காக்கும் இவர்களை லோகபாலர்கள் என்பர். பிரம்ம லோகத்தில் இந்திரனுக்கு அருகில் எப்போதும் இருப்பவர்கள். தத்த ரதா, விருல்ஹகா, விபோக்கூடிா, வேஸ்வணு என்பது இவர்கள் பெயர். முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளில் ஆட்சி செலுத்துபவர்கள்.அவர்கள் எல்லோருமாக சக்கனிடம் சென்றார்கள். சக்கன் [Sakka] பஜ்ஜூனனை [pajjunna, A devarāja, the god of rain] அழைத்து இனி உரிய காலத்தில் மட்டுமே மழை பெய்ய வேண்டுமெனக் கட்டளை இட்டான். அரசனுடைய குலதெய்வம் இதுபற்றி அவனிடம் தெரிவித்தது. அப்போது முதல் அவன் ஆட்சிக் காலம் முழுவதும் பகலில் மழை பெய்வது இல்லை. இரவில் மட்டுமே வாரம் ஒரு முறை வானம் மழை பெய்யும். இவ்வாறு நடுநிலையாக நீதியாக ஆட்சி செய்த எல்லாளனுக்கு களங்கம் ஏற்படுத்துவது போல, இருபத்தி மூன்றாவது அத்தியாயம் [படைவீரர்கள் திரட்டல்] என்ற பகுதியில் வசனம் 8 இல் இருந்து 10 வரை அமைந்துள்ளது? ........ அதிலிருந்து அவனை 'நந்தி மித்ரன்' [Nandhimitta] என்று அழைக்கலாயினர். பத்து யானைகளுடைய பலம் அவனுக்கு இருந்தது. அவன் வளர்ந்து பெரியவனுனதும் நகரத்துக்குச் சென்று மாமனிடம் பணியாற்றினான். தமிழர்கள் அப்போது தூபிகளையும் இதர புனித சின்னங்களையும் நாசப்படுத்தி வந்தனர். இந்தப் பலசாலி எதிரிகளைக் காலைப் பிடித்துக் கிழித்து எறிவது வழக்கம். அவன் எறிந்த சவங்களைத் தேவர்கள் மறைந்து போகும்படி செய்து வந்தனர் என்று இந்த பந்தி கூறுகிறது. இங்கே எல்லாளனின் ஆட்சிக் காலத்தில் தூபிகள் மற்றும் பிற புனித நினைவுச்சின்னங்கள் தமிழர்களால் சேதப்படுத்தப்பட்டன என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுவது முரண்பாடாக உள்ளது. தாய் பசு எப்படி வலியை அனுபவித்ததோ, அவ்வாறே தானும் அனுபவிக்க வேண்டும் என்று, தனது சொந்த தேரின் சக்கரத்தின் கீழ் தனது சொந்த மகனைக் கொன்ற ஒரு நீதியுள்ள மன்னன் இவன்! அது மட்டும் அல்ல, மன்னன் எல்லாளன், ஒரு முறை தற்செயலாக ஒரு தூபியை சேதப்படுத்தி விட்டான். இந்த தவறுக்காக அவன் உடனே இறக்க விரும்பினான். அத்தகைய மன்னன், தமிழனோ அல்லது தமிழனாக இல்லாவிட்டாலும், தனது குடிமக்கள் புனித நினைவுச் சின்னங்களை இழிவுபடுத்த அனுமதிப்பானா? கொஞ்சம் சிந்தியுங்கள்? இவை பிற்காலத்தில் துறவிகள் நகலெடுப்பதன் மூலம் செருகப்பட்ட செருகல்களாக இருக்க வேண்டும். [These must be later insertions by copying monks.] துறவிகள் ஒவ்வொரு நூறு முதல் இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓலை கையெழுத்துப் பிரதிகளை நகலெடுப்பார்கள். பல துறவிகள் நகலெடுக்க தனித்தனியான அத்தியாயங்கள் [discreet chapters] ஒதுக்கப்படுகின்றன. அந்தவேளையில், யாராவது ஒரு துறவி தனது நேர்மையற்ற செயலால் புத்த மதத்திற்கு பெரும் சேவை செய்வதாக நினைத்து இந்த முரண்பாடான கதையை புத்திசாலித்தனமாக செருகியிருக்கலாம்? இதேபோன்ற செயல்கள் பல அல்லது சில துறவிகளால் நூறு முதல் இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்திருக்க வேண்டும். இன்னும் ஒன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாளாகமம்கள் ஒன்றின் பின் ஒன்றாக எழுதும் பொழுது, அவ்வற்றின் போக்கு, எந்த திசையில் போகிறது என்பதை இலகுவாக, முக்கிய மூன்று நாளாகமம்களை அலசுவது மூலம் அறிந்து கொள்ளலாம். தீபவம்சம் தமிழர்களுக்கும் எதிரான எந்த பெரும் கருத்துக்களையும் கொண்டு இருக்கவில்லை. அதன் நோக்கம் புத்தமதத்துக்கு பெருமை சேர்ப்பது மட்டுமே. ஆனால் இரண்டாவதாக எழுதப்பட்ட மகாவம்சம், புத்த மதத்துக்கு பெருமை சேர்க்கிறோம் என்று தமிழர்களுக்கு எதிரான இனத்துவேசத்தையும் புகுத்தி இருப்பதை வெளிப்படையாக காண்கிறோம். அது மேலும் ராஜவலியாவில் அதிகரித்து இருப்பதை எவரும் மறுக்க முடியாது. அது மேலும் மேலும் இன்றைய வடக்கு கிழக்கு அல்லது தமிழ் மக்களின் நிலவரத்தில் எப்படி பாதிக்கிறது என்பதை எவரும் உணரலாம்! சொல்லித் தெரிய வேண்டியது இல்லை! Part: 84 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Asela is the ninth son of Mutasiva as per the Mahavamsa, 21 - 12. The Dipavamsa, however, indicates Asela as the eighth son of Mutasiva, 11 – 7 and 17 – 76 of the Dipavamsa. The Dipavamsa gives the order of Mutasiva’s sons twice in it. Mutasiva’s father, Pandukhabhaya met his consort Suvannapalli when he was between sixteen and twenty years of age. If he had his son, Mutasiva, when he was at about thirty years of age, then Mutasiva would have ascended the throne at the age of seventy-seven years. Then he must have ruledun til the age of One hundred and thirty seven. Mutasiva had ten sons, and Asela is the ninth son. If Asela were born when Mutasiva was fifty years of age, then Asela would have lived to the ripe age of one hundred and eighty nine, 137-50+40+10+10+10+22+10=189. It is very clear that the kings from Vijaya to Asela are definitely not real kings, and many of their reigns are with unreliably long reigns. This could be because that the chroniclers were anxious to synchronize the arrival of Vijay with the death of the Buddha and got the Buddha’s death wrong. The death of Buddha must have happened about one hundred years before the consecration of Asoka, as given in the Indian tradition, than two hundred and eighteen years as given the Lanka chronicles. The event took place in India and there is no valid reason to consider the Lanka chronicles as trustworthy in preference to the Indian data. About sixty percentage of this chapter speaks of the merits of king Elara, 21 – 13 to 34. We have studied about similar events in our lower schools. The incident of Elara’s son inadvertently running over the neck of a calf and the mother cow pulling the justice rope of Elara seeking justice, and the Elara’s act of running his chariot wheel over his own son is what we studied in our fifth or sixth grades. However, the king was Manuneethy Kannda Cholan, not Elara. An old woman drying her rice also attributed to this king. An incident similar to snake and the young bird is attributed to another king Ciby Chakaravatty. This also we studied in the same grades. There are many common strands running between Tamil Nadu and the Lanka chronicles, and it would be summarised elsewhere, even if the events were to be repeated for cohesive presentation. It is ironic that accusations are made in, 23 – 9, that thupas and other sacred memorials are damaged by Damilas during the time of Elara’s rule. Would a just king who killed his own only son under the wheel of his own chariot to suffer the same pain as the mother cow allow this? King Elara once inadvertently damaged a thupa, and wanted to die for this mistake. Would such a king allow his subjects, whether Damila or not, to desecrate sacred memorials? These must be later insertions by copying monks. Monks used to copy Ola manuscripts every one hundred to one hundred and fifty years. Many monks are assigned discreet chapters to copy. One such monk must have discreetly inserted this contradictory tale, thinking he was doing great service to the Buddhism by his dishonest act. Similar acts must have been in the process by many monks every one hundred to one hundred and fifty years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 85 தொடரும் / Will follow துளி/DROP: 1981 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 84 https://www.facebook.com/groups/978753388866632/posts/33193965833585303/?
-
கதை - 194 / தை பிறந்தால் … [மூன்று பகுதிகள்]
கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 02 மார்கழிக்கும் தைப்பொங்கலுக்கும் இடையிலான நாட்கள் வேலைகளால் நிறைந்திருந்தன. கடன் வாங்கிய மரங்களைப் பயன்படுத்தி மேடைகள் கட்டப்பட்டன. விவசாயிகள் கரும்பு மற்றும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியைக் கொண்டு வந்தனர். மீனவர்கள் மேளங்களை [டிரம்ஸை] வழங்கினர். பெண்கள் பழங்கால பாவை நோன்பு பாடல்களை ஒரு சடங்காக மட்டுமல்லாமல், நினைவாக ஒத்திகை பார்த்தனர், புது இளம் மாணவிகளுக்கு பயிற்சியும் கொடுத்தனர். ஆதபோல ஆண்கள் பறை மேளம் மூலம் நாட்டுப் பாடல்களை ஒத்திகை பார்த்து, பயிற்சியும் கொடுத்தனர். அப்பொழுது கதிரவனும் மதுமிதாவும் அருகருகே பணியாற்றினர். அவன் மைக்ரோஃபோன்களை [microphones] சரிசெய்து கிராமப்புற குழந்தைகளுக்கு நாட்டுப்புற தாளங்களைக் கற்பித்தான், அவள் நடன அசைவுகளை சரிசெய்து வேப்ப மரத்தின் கீழ் வீணையை இசைத்தாள். இருவரும் நகர்ப்புற மேடைகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வயல்வெளிகளையும் கரைகளையும் சேர்ந்தவர்கள். கதிரவன் பாடினார் — மீனவர்களின் பாடல். அது உழைப்பைச் சுமந்தது. அது வலியைச் சுமந்தது. அது எதிர்ப்பைச் சுமந்தது. மதுமிதா நடனமாடினார் — பரதநாட்டியம். ஆனால் ஒரு அரங்கத்திற்கு அல்ல. அது நிலத்திற்கான ஒரு மொழி. “பரிபாடல் - தாய் மொழியில் சடங்கு குளியல், பாவை சபதம்,பெண்களின் கனவுகள் [ritual bathing in Thai, the Paavai vow, the dreams of women] பற்றி எமக்குச் சொல்கிறது. அது வாழ்க்கை உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு காலத்தின் மொழி. இன்று எம் வாழ்வு சங்கிலியால் பிணைக்கப் பட்டு, அரச கெடுபிடிகள் மத்தியில் நடை போடுகிறது. கதிரவன், “இதுபோன்ற காலங்களில் அதற்கு இடம் இருக்கிறதா?” அவள் சிரித்தாள். “இடமில்லாததால்தான்—நாம் இதைச் செய்கிறோம்.” அதைத் தொடர்ந்து அவர்கள் வரலாற்றைப் பற்றிப் பேசினர். குறிப்பாக சங்கக் கவிதைகளில் தைத்திங்கள் எவ்வாறு கூறப்பட்டது என்பதை சுருக்கமாக வாதாடினர். பெண்கள் ஒரு காலத்தில் கணவர்களுக்காக மட்டுமல்ல, குளிர்ந்த உலகம், வளமான நிலம் மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்காக பிரார்த்தனை செய்து [praying not just for husbands, but for a cool world, fertile land, and shared prosperity.] ஆறுகளில் குளித்தனர் என்ற விபரம் அவர்களின் உரையாடலில் இருந்தது. ஒரு கட்டத்தில், மதுமிதா பரிபாடல் 11 இல் சிலவரியை பாடிக்காட்டினாள். அவன் அதை கேட்பதை விட, அவளின் செவ்விதழும் அதற்கு ஏற்ப கண்களும் நடனமாடுவதையே, இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். “கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல, விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும், ‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது, யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும், ‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும், மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும் “எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். பல பூக்களை நாடும் வண்டுகள் போல, எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும். எம் கணவரும், யாமும், கிழவர்,கிழவியர் என்று உலகத்தோர் கூறா வண்ணம், பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம் [பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை & பேரிளம் பெண் ] எய்துமளவும், இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலை பெற வேண்டும்.”என்கிறது. “பொங்கல்” என்றால் ‘பொங்கி வழிதல்’. அது வீணாகப் பெருகுதல் அல்ல; தேவைக்கேற்ற நிறைவு, உழைப்புக்கான பலன், மண்ணும் மனிதனும் சேர்ந்து பெற்ற செழிப்பு. அதிகம் அல்ல — அர்த்தமுள்ள வளம்." அவன் பொங்கலுக்கு ஒரு விளக்கம் கொடுத்தான் [Pongal meant “boiling over”—abundance, not excess] கதிரவன் ஒரு மாலையில் கூறினான், அவர்கள் எங்களை ஆள்கிறவர்கள். ஆனால் நாம் யார் என்பதை நினைவுகூரும் தருணம், நமது பண்பாடு, மொழி, நிலம், நினைவு, மரியாதை இவற்றை மீண்டும் பிடித்துக்கொள்ளும் நேரம் — அவர்கள் கட்டுப்பாட்டுக்கு வெளியே நாம் நிற்கிறோம். அதனால் தான் அது அவர்களுக்கு பயமளிக்கிறது. அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கலாம், சட்டங்களை எழுதலாம், அதிகாரத்தைப் பிடித்திருக்கலாம் — ஆனால் ஒரு மக்கள் தங்களின் அடையாளத்தை உணர்ந்து, மௌனமாக உறுதியாக நிற்கும்போது, அந்த நிலை எந்த ஆட்சிக்கும் அச்சத்தை உண்டாக்கும். அதனால் தான் அது ஆள்பவர்களை பயமுறுத்துகிறது. [That is why it frightens those who rule us.”]" மதுமிதா தலையசைத்தாள். "ஏனென்றால் அது மண்ணுக்குச் சொந்தமானது." என்றாள். உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம். அந்த மாதத்தின் முதல் நாளில், சூரியன் மெதுவாக உதித்தது. மீனவ கிராமங்களிலும் விவசாயக் குடியிருப்புகளிலும் பொங்கல் பானைகள் கொதித்தன. பால் சிந்தியது. அரிசி உயர்ந்தது. குழந்தைகள் சிரித்தனர். பொங்கல் என்பதற்கு பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். அறுவடை செய்துக் கிடைத்த புது அரிசியைக் களைந்து போட்டால் அது வெண்மையாகப் பொங்கும். அது மேகத்தின் பொங்கலாடுதல் போல இருப்பதால், அந்த உணவுக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது. பஞ்சு போல வெண்மையாக மேலெழுந்து மேகம் நின்றால் அதற்குப் பொங்கலாடுதல் என்று பெயர். 2500 ஆண்டுகளுக்கு முன்பே, முதிர்ச்சி அடைந்த மொழியையும் பண்பாட்டையும் கொண்டிருந்த தமிழர்கள், அன்றில் இருந்து அவர்களுடன் கலந்த சைவ சமயத்தின் படி இன்னும் பொங்கலை முறைப்படி கொண்டாடுகிறார்கள் என்பது தவிர பொங்கல் மத விழாவாக அல்லாமல் தமிழர் திருநாளாகவே அன்றும் இன்றும் இருந்து வருகிறது. பொங்கல் யாரையும் வணங்குவதல்ல. மாறாக நன்றி செலுத்துவது மட்டுமே. இயற்கைக்கு நன்றி என்பதை தமிழர்கள் சூரிய வழிபாடாக வணங்குகின்றனர். உலகுக்கு உணவு தரும் உழவனுக்கு நன்றி சொல்லும் நன்னாள் தான் பொங்கல். உழவன் அதை இயற்கைக்கு நன்றி சொல்லும் நாளாக நினைக்கிறான். அவ்வளவுதான்! பத்திக்கும் பெருமைக்கும் புகழ் வீசி புத்திக்கும் ஆற்றலுக்கும் களம் அமைத்து கத்திக்கும் வெறுப்புக்கும் இடம் இல்லா தித்திக்கும் பொங்கல் தமிழர் பெருநாளே நாத்து நட்டு புதுநெல் எடுக்க காத்து இருந்து அறுவடை செய்து தத்தி நடக்கும் மழலையும் மகிழ மூத்த மகளீர் பொங்கும் திருவிழாவே நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1980 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/33187012377613982/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 83 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 83 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அசோகர் போதிமரத்தில் வரைந்த கோட்டின் வழியாக போதி மரக் கிளை மரத்திலிருந்து தானாகப் பிரிந்து, தனக்காக உருவாக்கப்பட்ட பாத்திரத்தை அடைந்தது. எதிர்பார்த்தபடி, அந்த நேரத்தில், அதை வரவேற்பதாக, ஒரு பூகம்பம் ஏற்பட்டது. போதி கிளை தானாகப் பிரிவது, வான இசை [celestial music] மற்றும் அரிதன் புறப்பட்ட அதே நாளில் பாடலிபுத்ரத்தை அடைந்தது ஆகியவை நம்பமுடியாத நிகழ்வுகள். இந்த அத்தியாயம் ஒட்டுமொத்தமாக நம்பமுடியாதது ஆகும். அத்தியாயம் 19 [போதி விருட்சம் வருகை]: இது தேரி சங்கமித்தா மற்றும் அவள் போதிக் கிளையை கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வருவது பற்றியது. அவள் பதினொரு பிக்குனிகளுடனும் போதிக் மரக் கிளையுடனும் ஒரு கப்பலில் வந்தாள். அப்பொழுது நாகர்கள் போதிக் கிளையை எடுக்க முயன்றனர், சங்கமித்தா ஒரு கிறிப்பன் அல்லது கிரிஃபின் (griffin, சமஸ்கிருதத்தில் கருடன்) வடிவத்தை எடுத்து அவர்களின் முயற்சியை முறியடித்தாள். சங்கமித்தா அசோகருக்குப் பிறந்தால், அவள் எப்படி ஒரு கிரிஃபின் வடிவத்தை எடுக்க முடியும்? மேலும் பயந்துபோன நாகர்கள் அவளிடம் சமாதானம் கேட்டு, ஜம்புகோலம் [Jambukola, Jambukolapattinam or Dambakola Patuna, Tamil: ஜம்புகோலப்பட்டினம், is an ancient port to the north of Jaffna, in the Northern Province of Sri Lanka.] வரை கப்பலை அழைத்துச் சென்றனர். பல அதிசய நிகழ்வுகள் அப்பொழுது நடந்தன. இறுதியாக போதிக் மரக் கிளையுடன் சென்ற கப்பல் அது புறப்பட்ட அதே நாளில் அதன் திட்டமிட்ட இடத்தை அடைந்தது. போதிக் கிளையின் வருகையைக் குறிக்கும் வகையில் வழக்கம் போல் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. ஒரே நாளில் வருகையும், பூகம்பமும் வழக்கமான இந்த புத்த மத நூல்களில் காணப்படும் கதை வர்ணனைகளாகும். கஜரகாமத்தில் [கதிர்காமம் / Kajaragama / Katragama] லிருந்து பிரபுக்களும் வருகையைக் கொண்டாட வந்தனர். எனவே, போதி மரம் மற்றும் புத்த மதம் வருவதற்கு முன்பே முருக (கதிர்காமம்) வழிபாடு அங்கு இருந்தது தெளிவாகிறது. பிராமணர்களும் அங்கு இருந்தனர். பிராமணர்கள் பௌத்தர்கள் அல்ல. சங்கமித்தா ஒரு மனிதரான அசோகரின் மகள் என்று நாம் கருதினால், இந்த அத்தியாயம் ஒரு மதக் கற்பனையே தவிர வரலாற்றுப் பதிவு அல்ல. முருக வழிபாட்டின் தொன்மை மற்றும் பண்டைய இலங்கையில் பிராமணர்களின் இருப்பு ஆகியவை மறைமுகமாக இங்கு உறுதிப்படுத்தப்படுகின்றன. கதிர்காமம் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக முருக வழிபாட்டின் புனித மையமாக இருந்து வருகிறது, இது தமிழ் இந்து மரபுகள், உள்ளூர் வேடர் நம்பிக்கைகள் மற்றும் பிற்கால பௌத்த நடைமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பல மதங்களைக் கொண்ட தளமாக அதன் முக்கியத்துவம், இலங்கையின் ஆன்மீக நிலப்பரப்பில் அதை தனித்துவமாக்குகிறது. இலங்கை பௌத்த மரபுகளின்படி, கிமு 2 ஆம் நூற்றாண்டில் மன்னன் எல்லாளன் உடனான தனது புகழ்பெற்ற போருக்கு முன்பு, மன்னன் துட்டகாமினி, கதிர்காம தெய்வத்தை (முருகன் / ஸ்கந்தன்) பிரார்த்தனை செய்து ஆசிகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த பாரம்பரியம் பௌத்த வரலாறுகள் மற்றும் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. அவை துட்டகாமினி ஒரு பக்தியுள்ள பௌத்தராகவும், அவருக்கு வெற்றியைத் தரக்கூடிய உள்ளூர் தெய்வங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் விவரிக்கின்றன. அதுமட்டும் அல்ல, துட்டகாமினியின் காலத்திற்கு முன்பே, கிமு 2 ஆம் நூற்றாண்டு முன்பே, கதிர்காம கோயில், தெய்வீக உதவியை நாடும் போர்வீரர்கள் மற்றும் மன்னர்களுக்கு ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்தது என்றும் நம்பப்படுகிறது. அத்தியாயம் 20 [தேரருடைய நிர்வாணம்]: இது அசோகர், தேவநம்பிய தீசன், மகிந்த தேரர் மற்றும் தேரி சங்கமித்தா ஆகியோரின் மரணங்களைப் பற்றியது. தேவநம்பிய தீசன் பல மதக் கட்டிடங்களைக் கட்டினார், மேலும் நாற்பது ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு இறந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது தம்பி உத்தியன் (uttiya) ஆட்சி செய்தார். உத்தியாவின் எட்டாம் ஆண்டில் மகிந்த தேரர் இறந்தார். மகிந்த தேரரின் இறுதிச் சடங்கு மற்றும் நினைவுச் சின்னம் நிறுவப்பட்டது பற்றி மிக நீண்ட விளக்கம் உள்ளது. தேரி சங்கமித்தாவும் அடுத்த ஆண்டு இறந்தார். இந்த அத்தியாயத்தில் தேரர்கள் மற்றும் தேரிகளின் பல மரணங்கள் சொல்லப்பட்டு உள்ளன. பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு மன்னர் உத்தியனும் இறந்தான். அத்தியாயம் 21 [ஐந்து அரசர்கள்]: இது மகாசிவன், சூரதிஸ்ஸன் [சூரதிச்சன்], சேனன், குத்திகன் மற்றும் அசேலா [அசேலன்] ஆகிய [Mahasiva, Suratissa, Sena, Guttaka and Asela] ஐந்து மன்னர்களின் ஆட்சியைப் பற்றியது. மகாசிவன், சுரதிஸ்ஸன் மற்றும் அசேலா ஆகியோர் தேவநம்பிய தீசனின் இளைய சகோதரர்கள். மகாசிவனும் சுரதிஸ்ஸனும் தலா பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மகாசிவன் மற்றும் சுரதிஸ்ஸனின் பிறகு, இரண்டு தமிழ் மன்னர்களான சேனன் மற்றும் குத்திகன் (தீபவம்சத்தில் Gutta / குட்டன்) இருபத்தி இரண்டு ஆண்டுகள் நீதியாக ஆட்சி செய்தனர். தீபவம்சமும் மகாவம்சமும் இந்த இருவரையும் தமிழர்கள் என்று அடையாளம் காட்டுகின்றன, ஆனால் இந்த இரண்டு தமிழர்களும் குதிரைகளை கையாளும் ஒரு சரக்குக் கப்பலின் மகன்கள் என்று மகாவம்ச ஆசிரியர் கூறுகிறார். ஒரு குதிரை வியாபாரி ஒரு அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய முடிந்தது என்று நம்புவது அபத்தமானது? அப்படி என்றால், அது ஒரு அரசாங்கம் அல்ல, ஆனால் ஒரு சிறிய [குழு ஒன்றின் அரசாக இருக்கவேண்டும்] குலத் தலைவரின் ஆட்சியாக இருக்க வேண்டும்; அதாவது மிகவும் உள்ளூர் விவகாரம் இது. இங்கே, தீபவம்சம், 18-47: சூரதீசனை வென்ற பிறகு, இரண்டு தமிழ் இளவரசர்களான சேனா மற்றும் குட்டா பன்னிரண்டு (இருபத்தி இரண்டு?) ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்தனர் என்று கூறுகிறது. எனவே அவர்கள் உள்ளூர் தமிழர்களாக இருக்கலாம்? மகாவம்ச ஆசிரியர் அப்போது இருந்த தமிழ் அடையாளத்தை அழிக்க விரும்பினார், மேலும் அவர்கள் வெளிநாட்டினர் என்பதைக் குறிக்க குதிரை வியாபாரியைக் கண்டுபிடித்தார் என்று கருதலாம். தமிழர்கள் குதிரை வியாபாரிகளாக இருந்திருக்க முடியாது; அந்தக் காலத்தில் அரேபியர்கள் மட்டுமே குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் மூத்தசிவனின் ஒன்பதாவது மகனான அசேலன், சேனனையும் மற்றும் குத்திகனையும் வீழ்த்தி பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் எல்லாளன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். தீபவம்சம் எல்லாளனை ஒரு தமிழர் என்று கூறவில்லை, மேலும் சோழ நாட்டைச் சேர்ந்தவன் என்றும் கூறவில்லை. அவர் நண்பனுக்கும் எதிரிக்கும் நீதியுடன் ஆட்சி செய்தார். அவரது புண்ணிய செயல்கள் இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. அவர் வேறுபட்ட நம்பிக்கை [இந்து / சைவ] கொண்டவர் என்பதால் மகாவம்ச ஆசிரியர் அவர் மீது குற்றம் காண்கிறார். "பௌத்த மதத்திற்கு மாறான" இவ்வகையான செயல்களால், புத்தரின் ஆத்மா, நினைவுச் சின்னங்களில் மிகவும் கலக்கமடைந்து திகிலடைந்து வெறுப்பில் நெளிந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்! Part: 83 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Bo tree branch detached from the tree along the line drawn by Asoka, and reached vessels made for it on its own. There was an earthquake at this time, as expected. Self detaching of Bo branch, celestial music and the arrival at Pupphapura on the same day of departure by Arittha are unbelievable events. This chapter is, on the whole, untrustworthy for historical purpose. Chapter 19: This is about Theri Samghamitta and her bringing the Bodhi branch to Lanka by ship. She came with eleven Bhikkhunis along with the Bo tree branch in a ship. Nagas tried to take the Bo branch, and Samghamitta took the form of a griffin (garuda in Sanskrit) and thwarted their attempt. If Samghamitta is born to Asoka, how could she take the form of a griffin? Terrified Nagas then begged peace with her, and escorted the ship until Jambukola. There were many miraculous happenings and finally the ship with Bo tree branch reached to its intended place on the same day it departed. There was an earthquake, as usual, to mark the arrival of the Bo branch. Arrival on the same day and earthquake are usual religious embellishments. Nobles from Kajaragama (Katragama) too came to celebrate the arrival. Muruga (Katragama) worship was there before the arrival of Bo tree and the Buddhism. Brahmins were also there. Brahmins were not Buddhists. If we have to assume Samghamitta is the daughter of Asoka who is a human, then this chapter is a religious fantasy and not a historical record. The antiquity of Muruga worship and the presence of Brahmins in the ancient Lanka are also indirectly confirmed. Chapter 20: This about the deaths of Asoka, Devanampiya Tissa, Mahinda Thera and Theri Samghamitta. There seems to be some errors in the length of Asoka’s reign. Bo tree was planted in the Mahamegavanarama garden on the eighteenth year of the reign (18 years). Asoka’s first queen died twelve years after this (18+12). He raised Tissarakkha to the rank queen after four years (18+12+4). She caused the Bo tree to die three years thereafter (18+12+4+3). Asoka died fourth year after this (18+12+4+3+4=41). The Mahavamsa, 20-6, says the total is thirty seven years. There may be some confusion in the wording or it is from the time of assuming the power; four years before the consecration. It seems that the Mahnama wanted to stress that Bo tree by Asoka died, but that by Devanampiya Tissa survived. Devanampiya Tissa constructed many religious buildings, and died after the forty years of rule. After his death his younger brother, Uttiya, ruled. Mahinda Thera died on the eighth year of Uttiya, and Mahinda Thera was sixty years of age. There seems to be some confusion on the age of Mahinda Thera when he died. Mahinda Thera came to Ceylon when he was thirty two years of age (32). Devanampiya Tissa ruled for forty years (32+40). Then he died on the eighth year of Uttiya’s rule (32+40+8=80). Mahinda Thera should be eighty years of age when he died, but the Mahavamsa, 20-32, says he was sixty years of age when he died, 20 - 32. Wilhelm Geiger says there was some play of words, but let it be as it is. There is quite a long description of the funeral of Mahinda and the installation of the relic. Theri Samghamitta also died next year, and though the Mahavamsa, 20-49, says she died at fifty nine years of age, but she must have died at the age of seventy nine. The same confusion or play of words here too. The Mahavamsa is full of happy coincidences, and one is here too. Gautama Buddha died at eighty years of age, and the Mahinda Thera too died at the same age of eighty years, another invented coincidence. There were many deaths of Theras and Theris in this chapter. The King Uttiya also died after reigning for ten years. This chapter is kind of a chapter of deaths. This chapter is also full of invented details and coincidences. Chapter 21: This is about the rule by five kings: Mahasiva, Suratissa, Sena, Guttaka and Asela. Mahasiva, Suratisa and Sena are younger brothers of Devanampiyatissa. Mahasiva and Suratissa ruled for ten years each. After the rules of Mahasiva and Suratissa two Damila kings, Sena and Guttaka (Gutta in the Dipavamsa) justly ruled twenty-two years. Both, the Dipavamsa and the Mahavamsa identify these two as Damilas, but Mahavamsa author invented that these two Damilas are sons of a freighter who deals with horses. It is ridiculous to believe that a horse dealer was able to dethrone a government. That means it was not a government, but a head of a small clan; a very local affair. (The Dipavamsa, 18-47, says they are Damila Princes). They could be local Tamils. The Mahavamsa author wanted to erase the then existing Tamil identity, and invented the horse dealer to indicate they were foreigners. Tamilians could not have been horse dealers; only Arabs dealt in horse-trading in those days. Then Asela, the ninth son of Mutasiva, overpowered Sena and Guttaka, and ruled for ten years. Then Elara ruled for forty-four years. Dipavamsa does not say he was a Tamil, and does not say he was from Cola country. He ruled with justice to friend and foe. His meritorious deeds are described in this chapter. The Mahavamsa author finds fault with him because he was of different faith. Buddha’s relics must be writhing in disgust in their reliquaries on this un-Buddhist logic. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 84 தொடரும் / Will follow துளி/DROP: 1979 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 83 https://www.facebook.com/groups/978753388866632/posts/33186888984292988/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 82 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 82 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை புத்தர் துறவியாக மாற முடிவு செய்தபோது, அனோமா நதிக்கரையில் வெட்டப்பட்ட புத்தரின் தலைமுடியைப் பயன்படுத்தி, தேவர்களின் மன்னரான சக்காவால், ஒரு வான தூபி 'Culamani-cetiya' கட்டப்பட்டது. இதை சூளாமணி கோபுரம் [அல்லது சூளாமணி சைத்தியம்] என்று தமிழில் கூறலாம்? மேலும் புத்தர் காலமான பிறகு, டோனா என்ற மனிதன், புத்தரின் வலது கழுத்து எலும்பை தனது தலைப்பாகையில் மறைக்க முயன்றார், ஆனால் சக்கா அதை அவரிடமிருந்து எடுத்து, சேதியத்தில் [வான் தூபியில்] அதையும் சேர்த்து வைத்தார் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த வலது கழுத்து எலும்பு நினைவுச் சின்னத்தை, கடவுள் நகரத்தில் உள்ள இந்த வான் Culamani-cetiya த்திலிருந்து பெறப்பட்டது என்று [ஒரு கருத்துக்கு] கொள்ளலாம். In Dravidian and Indo-Aryan phonetics, we often see shifts where: "ḷ" (ள) and "d" (ட) get interchanged over time. Retroflex sounds like "ḷ" are replaced with dentals like "d" in Sanskritization (and vice versa). Tamil and Pali usage often differ from Sanskrit, leading to variations in pronunciation and writing. For example: Chuda (சுட) vs. Cūḷā (சூளா) → Phonetic shift from "d" (ட) → "ḷ" (ள) is possible. Mani (மணி) remains unchanged. So, Chudamani (சுடாமணி) → Cūḷāmaṇī (சூளாமணி) is phonetically feasible, especially in Buddhist contexts. ஆகவே மேலே கூறியதையும் மற்றும் ஓலைச் சுவடிகள் 100 - 150 ஆண்டுகளுக்கிடையில் திருப்பி எழுதி புதிப்பிப்பதையும் கருத்தில் கொண்டால், மிக இலகுவாக ஒரு சாத்தியத்தை கூறலாம் என்று எண்ணுகிறேன். ஒலிப்பு ரீதியாக, l (எல்) மற்றும் 'd' ஆகியவை காலப்போக்கில் அல்லது மொழிகளுக்கு இடையேயான படியெடுத்தலின் போது ஒன்றுக் கொன்று மாற்றப்படுகின்றன. எனவே இந்த Chulamani Chedi, a celestial stupa, தமிழில் 'சூடாமணி' ஆக இருக்கலாம்? தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை ஒன்று இருந்தது. இது 1006 CE இல் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் எனும் புகழ் பெற்ற மன்னனின் மகன் விஜயோத்துங்கவர்மன் தன் தந்தையின் திருநாமத்தை நிலைநாட்ட இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தைக் எழுப்பினான். இது ஜேசுட் பாதிரியாரால் [Jesuits priest] 1867 க்கு பிறகு இடிக்கப்பட்டது என்பது வரலாறு. மீண்டும் 17 ஆம் அத்தியாயத்திற்கு வரும்போது, அசோகன் இறந்தவுடன், உடனேயே சுமனன் அங்கே சென்று விட்டான் என்று கூறுகிறது. இது தெய்வீக சக்தியைக் குறிக்கிறது, அது வரலாறு அல்ல, இறையியல் ஆகும். மேலும், இதில் இருந்து நாம் அறிவது அல்லது ஊகிப்பது, மகிந்த, சுமனா, சங்கமித்தா ஆகியோர் உண்மையான நபர்கள் அல்ல. கடவுளின் நகரத்திற்குச் செல்லும் உடனடிப் பயணங்களும் உண்மையான நிகழ்வுகள் அல்ல. மேலும், புத்த நாடுகளில் புத்தரின் அனைத்து தாதுக்களையும் ஒன்றாகச் சேர்த்தால், அது புத்தர் உயிருடன் இருந்தபோது இருந்ததை விட கட்டாயம் அதிகமாக இருக்கலாம், அதுவும் எரிந்து காற்றுடன் கலந்ததையும் விட. [If all the supposed relics of the Buddha in the Buddhist countries were added together, it may weigh greater than that of the Buddha when he was alive.] அத்தியாயம் 18 [மகாபோதி விருட்சத்தை பெறுதல்]: இது போதி மரத்தின் கிளையை இலங்கைக்கு எடுத்துச் செல்வது பற்றியது. இராணி அனுலா மற்றும் அவரது ஐநூறு பெண்களுக்கும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] செய்ய சங்கமித்தாவை அழைக்க முன்னர் முடிவு செய்யப்பட்டது. 15- 19 இல் இருந்து 22 வரை பார்க்கவும். ‘அரசே! நாங்கள் தீட்சை பெற விரும்புகிறுேம் என்று ராணி அனுலா தன்னுடன் வந்த ஐநூறு பெண்களுடன் அரசனிடம் கூறினாள். உடனே, ‘இவர்களுக்குத் தீட்சை செய்து வையுங்கள்" என்று அரசன் தேரரைக் கேட்டுக் கொண்டான். 'மாமன்ன! பெண்களுக்கத் தீட்சை செய்து வைக்க எங்களுக்க அனுமதி கிடையாது' என்று தேரர் பதிலளித்தார். பாடலிபுத்ரத்தில் [Pataliputta] என்னுடைய தங்கை சங்கமித்தா என்ற பெயருடைய தேரி இருக்கிறாள். அனுபவத்தில் முதிர்ந்தவள் அவள். ‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் [ஏன் தென்பகுதி கிளை?] அவள் இங்கே வருவாள் என்று இந்த பந்தி கூறுகிறது. மன்னன் தேவநம்பிய தீசன் தனது மருமகனும், அவரது அமைச்சருமான அரிதனிடம் [Arittha] போதி மரத்தின் கிளையை கொண்டு வருவதுடன், தேரி சங்கமித்தாவையும் கூட்டிக் கொண்டு வர, அசோகரிடம் செல்ல முடியுமா என்று விசாரித்தார்! அவன் ஒப்புக்கொண்டான். மேலும் அவன், தனது மனத்திண்மையால் [by his will power] அவன் புறப்பட்ட அதே நாளில் பாடலிபுத்ரத்தை அடைந்தார் [18 - 8: ஐம்பு கோளத்தில் கப்பல் ஏறி, மகாசமுத்திரத்தைக் கடந்து, தேரருடைய சக்தியால் புறப்பட்ட அன்றே அழகிய புஷ்பபுரத்துக்கு வந்து சேர்ந்தான்.]; மற்றொரு மாபெரும் பொய். அவன் அசோகருக்கும் சங்கமித்தைக்கும் அந்த செய்தியைச் சொன்னார். சங்கமித்தை கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தயக்கம் காட்டிய, தந்தை அசோகனை ஒருவாறு சமாதானப்படுத்தினாள். மொகாலிபுத்தவும் [Moggaliputta] அதை ஆதரித்தார். Part: 82 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Sumana went to the King Asoka the very moment he departed. All the miraculous and magical events happened are not historical events. Which is the city of gods? How did Sumana meet Sakka, the king of gods? Tamils have no issue with these as religious edifications, but will never accept as historical events. Apparently, the right collarbone relic was obtained from the Culamani-cetiya. Phonetically, l (Ell) and ‘d’ get interchanged in the course of time or during transcription between languages. It could be ‘Cudamani’ in Tamil. There was a Vihara called Cudamani Vihara in Nagapattinam in Tamil Nadu also with the name Rajarajapperumpalli, which was standing in dilapidated state until 1867, for about 800 to 900 years after its construction. It was pulled down by Jesuits priests. The above sketches are two views of Cudamani Vihara, which was prepared in 1846. The king Rajaraja endowed the revenues from the Anaimankalam village for the upkeep of this Vihara. This Vihara is also known as Rajendracholapperumpalli, Silendracutamani Vihara etc. The king Silendra of the present day Indonesia or Malaysia built this Vihara with the blessings of the Chola kings who also generously granted revenues from villages for its upkeep. The author has no intention to hurt the feelings of the Buddhists, but their blind belief in the Mahavamsa resulted in the death of about of 150,000 Tamils in very gruesome manners, and in the displacement of half a million Tamils, and the pious Buddhists without any compunction or remorse branded them as economic refugees. In this process, Tamils got their parliamentary representations drastically reduced with boisterous behaviour of the Sinhala members in the Parliament shouting down the reduced Tamil members with the tacit approval of the speaker of the House. It is then necessary to analyse the genuineness of the document on which the Sinhala Buddhists base their claim. Coming back to the chapter 17 again, Sumana went to Asoka on the very moment he departed, implying divine power, and it is not history, but theology. Sumana went to the city of gods. Tamils do not believe this nonsense. If all the supposed relics of the Buddha in the Buddhist countries were added together, it may weigh greater than that of the Buddha when he was alive. We would, again, like to stress that Mahinda, Sumana, Samghamitta are not real personalities, and the instant travels, even to the city of gods, are not real events. Chapter 18: This is about the obtaining the branch of the Bodhi tree to be taken to Lanka. It was decided earlier to invite Samghamitta to perform pabbajji ordination on Queen Anula and her five hundred women, 15-21. The King Devanampiya Tissa inquired his nephew, also his minister; Arittha whether he could go to Asoka to bring the branch of the Bo tree and Theri Samghamitta! He agreed and by his will power reached Pupphapura (Pataliputta) on the same day he departed; another lie. He passed the message to Asoka as well as to Samghamitta. Samghamitta acceded to the request and convinced the reluctant Asoka that she should go. Moggaliputta was also in favour of it. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 83 தொடரும் / Will follow துளி/DROP: 1977 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 82] https://www.facebook.com/groups/978753388866632/posts/33164353323213221/?
-
கதை - 194 / தை பிறந்தால் … [மூன்று பகுதிகள்]
கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 01 முல்லைத்தீவு கடற்கரையோரக் கடல் கவிதைக்கு மட்டும் சொந்தமானது அல்ல - அது குடும்பங்களுக்கு உணவளித்தது - உழைப்பாளிகளான மீனவரின் கைகளை கடினமாக வடிவமைத்தது - சொல்லப்படாத துயரத்தைச் சுமந்தது. கடல் எப்போதும் அலைகளால் மட்டும் பேசுவதில்லை. சில நேரங்களில் அது மௌனமாக நிற்கும் — அந்த மௌனம் தான் மீனவர்களை அதிகம் பயமுறுத்தும். கதிரவன் அந்தக் கடலுக்குப் பிறந்தான். ஒரு மீனவரின் மகனாக, அவன் கடினமாகப் படித்து, பட்டம் பெற்று, திரும்பி வந்தான் - அவன் தந்தையும், தாத்தாவும், அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் எல்லோரும் கடலோடு வாழ்க்கையைப் பகிர்ந்தவர்கள். ஆனால் கதிரவன் மட்டும் பல்கலைக்கழகம் பார்த்தவன். “படிச்சா எல்லாம் மாறிடும்னு நினைச்சோம்,” என அவன் தாய் சொன்னபோது, அவன் கண்ணில் கடலின் உப்பு கரைந்தது. பட்டம் பெற்றும் இன்னும் வேலை இல்லாதவன் ஆனால் எந்த வகுப்பறையும் கற்றுக்கொடுக்காததற்கு முன்பே கடல் அவனுக்கு தாளத்தைக் கற்றுக் கொடுத்தது. அது அவனுக்கு இன்று ஒரு தனி இடத்தை கொடுத்து, அவனை ஆறுதல் படுத்திக்கொண்டு இருக்கிறது. அவனது தந்தை விடியற்காலையில் வலைகளை இழுத்தபோது, கதிரவன் அலைகள் போல எழுந்து விழும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினான். இரவில், அவன் பறை மேளம் வாசித்தான், அதன் ஒலி கடலோரத் தமிழ் வாழ்க்கையின் துடிப்பை எதிரொலித்தது. வட–கிழக்கில் மீனவர்களுக்கு கடல் இருக்கிறது— ஆனால் முழு உரிமை இல்லை. வலை போட இடம் உண்டு— ஆனால் பாதுகாப்பு இல்லை. அதிகாரம் எல்லைகளை வரையறுக்கிறது. ஆனால் பசிக்கு எல்லை இல்லை. அவன் பாடல்களில் வடக்கு கிழக்கு தமிழரின் வேதனைகள் பிரதிபலிக்கும். அரசின் கெடுபிடிகள் வெளிவரும். அது தை மாதம். தை என்பது வெறும் ஒரு மாதம் அல்ல. அது தொழிலாளிகளின், குறிப்பாக உழவர்களின் பெருமையை பறைசாற்றும் மாதம். அது கதிரவனுக்கு நன்றாகத் தெரியும் அதேவேளை, உள்நாட்டுப் பகுதியில், வயல்கள் நிறைந்த பசுமை பூமியில் மதுமிதா வாழ்ந்தாள். அவள் ஒரு பல்கலைக்கழக கலைப்பீட மாணவி, வரலாற்றுப் புத்தகங்களால் நீண்ட காலமாக மறக்கப்பட்ட மூதாதையர்களால் கட்டப்பட்ட நெல் வயல்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்களுக்கு மத்தியில் வளர்ந்தாள். தமிழரின் இயல், இசை, நடனம் என்ற மூன்று கலைகளிலும் ஆர்வம் கொண்டவளாக, ஒரு பரதநாட்டிய மற்றும் ஒரு வீணை கலைஞருமான அவள், கலை என்பது விவசாயத்தின் மற்றொரு வடிவம் - நடப்பட்டு, வளர்க்கப்பட்டு, ஒழுக்கத்தின் மூலம் அறுவடை செய்யப்பட்ட ஒன்று என்று நம்பினாள். பரதநாட்டியத்தில் அவள் கால்கள் சங்க கால நினைவுகளை எழுப்பும். வீணையில் அவள் விரல்கள் அமைதியையே இசையாக்கும். “தைப் பொங்கல் — இது மதத்தின் சொத்து அல்ல,” என்று அவள் சொல்வாள். “இது மண்ணின் திருநாள்.” என அடித்துக் கூறுவாள். அவள் தந்தை விவசாயி. வயலில் வியர்வை சிந்தியவன். நீரின்றி பயிர் வளராததைப் போல, பண்பாடு மண்ணின்றி வாழாது என்று அவளுக்குக் கற்றுக் கொடுத்தவன் அவர்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததில்லை. ஆனால் இருவருக்கும் ஒரே கேள்வி இருந்தது: நிலம், கடல் மற்றும் கண்ணியம் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது ஒரு மக்கள் எப்படி உயிர்வாழ்வார்கள்? என்பதே அது! வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த இளம் தமிழர்கள் கிளிநொச்சியில் ஒரு பெரிய தைப் பொங்கல் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய ஒன்றுகூடினர் - “இது விழா இல்லை,” ஆரம்ப ஏற்பாடு மட்டுமே. அதை வெறும் ஒரு விழாவாக மட்டுமல்லாமல், ஒற்றுமை, வரலாறு மற்றும் உயிர் பிழைத்தல் அல்லது நிலைத்து இருத்தலுக்கான [unity, history, and survival.] ஒரு தளமாகவும் பயன்படுத்த எண்ணினர். அது மதச்சார்பற்ற, கூட்டு ஒற்றுமைக்கான மற்றும் ஆழமான தமிழ் உணர்வாகவும் இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். - தமிழ் இன்றைய அரசுகளை விட பழமையானது, குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டது, சங்கக் கவிதைகள் வடித்தது. ஏன், "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக " - என்று பொங்கள் பற்றி, புறநானூறு 172 இல், கி மு 500 ஆண்டிலேயே இலக்கிய நடையுடன் கூறிய தமிழ் இது. கடற்படை கட்டுப்பாடுகளால் இடம்பெயர்ந்த மீனவ சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்த கதிரவன் அங்கு வந்திருந்தான். பண்டைய தமிழ் மரபுகளில் வேரூன்றிய ஒரு கலாச்சார நிலையை முன்மொழிய மதுமிதா சக பல்கலைக்கழக மாணவர்களுடன் அங்கு வந்தாள். ஒரு ஒத்திகைக்காக கதிரவன் பாடியபோது, அறை அமைதியாகி விட்டது. அவனது குரல் கடலின் உப்பை சுமந்து சென்றது, தங்கள் சொந்த கடல் நீரில் மீன்பிடிப்பதை அல்லது அணுகுவதை கட்டுப்படுத்தும் அல்லது மறுக்கும் அரச நிர்வாகத்தால் ஏற்பட்ட தலைமுறைகளின் வலி அங்கு தெரிந்தது. மேலும், “இது ஒரு பண்டிகை அல்ல,” “இது எங்கள் வரலாற்றின் பிரகடனம்.” என்று ஒத்திகையின் போது கதிரவன் சொன்னான். அதேபோல, மதுமிதா பதிலுக்கு வீணை வாசித்தபோது, இசைக்குரல்கள் தெளிவான தை நீரைப் போல - அமைதியாக மற்றும் பிரார்த்தனையுடன் ஒலித்தன. அன்று அவர்கள் அதிகம் பேசவில்லை. அவர்கள் பேச வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆனால் அங்கு கண்ட அறிமுகம் அதற்கான வழியைக் காட்டி விட்டது தைவரல் காற்றோடு பொங்கலும் பொங்க தைத்த ஆடையோடு சிறுவரும் மகிழ தையல் கடிமனம் நன்று நிறைவேற தை பிறந்தால் வழி பிறக்குமே! தமிழர் திருநாள் உழவர் பெருநாள் தனித்துவம் கொண்ட எங்கள் அடையாளம் தங்கக் கதிரவனை விழுந்து கும்பிட்டு தலைவி தலைவன் கொண்டாடும் கொண்டாட்டம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் துளி/DROP: 1976 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/33157598130555407/?
-
"எங்கள் பேத்தி ஜெயாவின் பிறந்தநாள் இன்று!" (ஜனவரி 6, 2026)
"எங்கள் பேத்தி ஜெயாவின் பிறந்தநாள் இன்று!" (ஜனவரி 6, 2026) ஒன்பது ஆண்டுகளுக்கு முன் - ஒரு பெயர் மீண்டும் குழந்தையாய் - மண்ணில் பிறந்தது! விடியலைப் போல - அது மென்மையாக நினைவுகளைப் போல - உறுதியாக மலர்ந்தது! ஒரு வாழ்க்கை அன்று - சுமந்த பெயர் அது அன்பின் - சாட்சியான பெயர்! பாட்டியின் அமைதியான - வலிமையும் அழகும் இன்று உன் பெயராக - மெல்லத் திகழ்கிறது! பனிமூடிய கனடா வானின் - கீழ் பிறந்தாய் மேப்பிள் இலைகளின் - நிழலில் வளர்ந்தாய்! ஆனாலும் உன் பெயர் - ஒளி மிக்க முற்றங்களையும் யாழ்மண்ணின் வாசனையையும் - நினைவு கூருகிறது! ஜெயா எனறால் - ஒரு வெற்றி கேள்வி கேட்கும் - ஒரு துணிவு மகிழ்வு கொட்டும் - ஒரு புன்னகை எதிர்பார்ப்பு இல்லாத - ஒரு அன்பு! ஒன்பது வயதில் - இன்று நீ குழந்தைப் பருவத்திற்கும் - மாறுதலுக்கும் இடையில்! இரண்டு உலகங்களுக்கு - இடையில் நீ நேற்றைய நினைவுகளுக்கும் - நாளைய கனவுகளுக்கும் இடையில்! உன் பாட்டி - மறைந்து விடவில்லை உன் கண்களின் - அமைதியில் வாழ்கிறாள் உன் புன்னகையின் - பொறுமையில் வாழ்கிறாள் நீ அறியாமலே காட்டும் - மரியாதையில் வாழ்கிறாள்! கல்வி என்றும் - உன் நாள்களை நிரப்பட்டும் பாதுகாப்பான கனவுகள் - இரவுகளை அலங்கரிக்கட்டும் கத்தாமல் நிலைக்கும் துணிவு - மனத்தில் வேரூன்றட்டும் பெண்ணின் பெருமையை - உன் வாழ்வு சொல்லட்டும்! ஓட்டாவா உனக்கு - இறக்கைகள் தரட்டும் குடும்பம் உனக்கு - வேர்கள் ஆகட்டும்! உன் பெயர் - எப்போதும் சொல்லட்டும் நீ வந்தது - மங்காத அன்பிலிருந்து என்று! இனிய 9ஆம் பிறந்தநாள் - வாழ்த்துகள் ஜெயா! நீ எதிர்காலத்தில் - நினைவுகூரப் படுபவள் இன்றே அளவில்லாமல் - நேசிக்கப் படுபவள் என்றும் எங்கள்வீட்டின் - தேவதை ஆனவள்! தாத்தா: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் “Today we celebrate our granddaughter’s birthday!” (January 6, 2026) Nine years ago, a name returned as a child, soft as dawn, strong as memory. You were given a name that once held a life, a love, a grandmother’s quiet strength— now carried gently by you. Born under Canadian skies, raised among snow and maple leaves, yet your name remembers sunlit courtyards, warm hands, and stories whispered in another land. Jeya— a word that means victory, but your victories are small and bright: The courage to ask a question, a fearless laugh, a kindness offered without being asked. At nine, you stand between worlds— between childhood and becoming, between yesterday’s memories and tomorrow’s dreams. Your grandmother is not absent; she lives in the calm of your eyes, in the patience of your smile, in the grace you show without knowing why. May your days be filled with learning, your nights with safe dreams, your heart with courage that does not shout, but endures. May Ottawa give you wings, may family give you roots, and may your name remind you always that you come from love that does not fade. Happy 9th Birthday, dear Jeya. You are remembered forward, and loved without measure. Granddad: Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna "எங்கள் பேத்தி ஜெயாவின் பிறந்தநாள் இன்று!" (ஜனவரி 6, 2026) https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid02JWaoQvka6tVZKxvLzcLtQsEeRnFfJDufSF9YTedzmt6wKAeqx4gKMRbcrfn2pCSYl?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 81 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 81 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 16 [சேதிய பர்வத விகாரை / Cetiyapabbata Vihara]: இது தேவநம்பிய தீசன் மன்னருக்கும் மகிந்தருக்கும் இடையிலான சில கட்டிட வேலைகள் பற்றிய நம்பிக்கை மற்றும் உரையாடலைப் பற்றியது. எனினும் இது இலங்கையில் நடந்த எந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. 16 - 6 இல் கூறப்பட்டுள்ள 'நாக சதுக்கத் தடாகம் [Nagacatukka-tank , தமிழ்ப் பெயரான 'நாகசதுக்க குளம்' [நாகசாதுக்க(ள்) / ‘Nagacathukka Tank’] இன் ஒரு வடிவமாக இருக்க வேண்டும். இது இன்றைய நாச்சதூவ குளம் [Nachchaduwa Tank or Nachchaduwa wewa] ஆக இருக்கலாம்? இது மகாதரகல நீர்த்தேக்கம் [Mahadaragala Reservoir] என்றும் அழைக்கப்படுகிறது. இது இலங்கையின் தம்மண்ணகுலமா [Thammannakulama] அருகே உள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இந்த குளம் மகாசேன மன்னரால் (277 - 304) கட்டப்பட்ட பதினாறு பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. மேலும் மன்னனின் மருமகனுக்கு ஐம்பத்தைந்து சகோதரர்கள் இருந்தனர்; இது மிகப் பெரிய எண்ணிக்கையாக இருக்கிறது! 16 - 5 முதல் 7 வரை பார்க்கவும். தேரர் அங்கு போய் விட்டார் என்பதை அரசன் அறிந்ததும், தேரில் ஏறிக்கொண்டு, தன் இரு ராணிகளும் உடன் வர, வேகமாக தேரரைப் பின் தொடர்ந்து சென்றான். நாக சதுக்கத் தடாகத்தில் குளித்ததும், தேரர்கள் மலைமேல் ஏறுவதற்கு உரிய வரிசைப்படி நின்றர்கள் என்று இந்தப் பந்தி கூறுகிறது. அத்தியாயம் 17 [அஸ்தி வருகை]: இது நினைவுச்சின்னம், புத்தரின் வலது கழுத்து எலும்பு மற்றும் தூபாராமயவில் (Thuparamaya, இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடம் ஆகும்.) அதை நிறுவுதல் ஆகியவற்றினைப் பற்றியது. மகிந்த தேரர் இலங்கையில் தொடர்ந்து தங்குவதற்காக புத்தரின் நினைவுச்சின்னத்தை வழிபட விரும்பினார். மன்னர் தேவநம்பிய தீசன் தான் நினைவுச்சின்னத்தை வைக்க ஒரு தாது கோபுரம் அல்லது தூபி (stupa) கட்டுவதாகவும், அதேநேரம், மகிந்த தேரர் பகவான் புத்தரின் ஒரு நினைவுச் சின்னத்தைக் கண்டு பிடிக்க உதவுவதாகவும் உறுதியளித்தார். மகிந்த, சங்கமித்தாவின் மகன் சுமனனிடம் தனது தாத்தா அசோகரிடம் சென்று ஒரு நினைவுச்சின்னத்தையும், பகவான் புத்தர் பயன்படுத்திய தானம் செய்யும் கிண்ணத்தையும், பெற்று வருமாறு கேட்டுக் கொண்டார். என்றாலும் புத்தர் பயன்படுத்திய தானம் செய்யும் கிண்ணத்தையும் மற்றும் புத்தரின் தாதுவையும் அல்லது நினைவுச்சின்னத்தையும் மன்னர் அசோகர் எவ்வாறு கைப்பற்றினார் என்பது ஒரு மர்மமாகும்? கௌதம புத்தரின் சொந்த ஊர் இன்றைய நேபாளத்தில் உள்ள லும்பினி ஆகும். மன்னர் அசோகரின் சொந்த ஊர் இந்தியாவின் பீகாரில் உள்ள பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா). லும்பினிக்கும் பாட்னாவுக்கும் இடையிலான தோராயமான தூரம் நேர்கோட்டில் சுமார் 350–400 கிமீ (220–250 மைல்கள்) ஆகும். அத்துடன் இருவரின் வாழ்வுக்கும் இடையில் உள்ள காலம் அண்ணளவாக 230 ஆண்டுகள் என்றும் கூறலாம். எனவே புத்தரின் தாதுவை திருப்பி தோண்டி எடுக்க, தூரத்தினதும், காலத்தினதும் இடைவெளியையும் மற்றும் இது கிருஸ்துக்கு முன்பு என்பதையும் நினைவில் வைத்து அலசவேண்டும் என்று எண்ணுகிறேன். எது எப்படியாகினும் இலங்கை நாளாகமம்கள் [chronicals], தோண்டி எடுத்த தாதுக்களை 84000 ஆக பிரித்ததாகவும், அதேவேளை இந்தியா மகாபரிநிர்வாண சூத்திரம் [Mahāparinibbāna Sutta / "புத்தரின் இறுதி நாட்கள்"], புத்தரின் உடல் தகனத்திற்குப் பிறகு, துரோணர் என்ற பிராமணர் புத்தரின் தாதுக்களை எட்டு பகுதிகளாகப் பிரித்தார் என்றும், அவற்றை வெவ்வேறு குழுக்கள் தூபிகளைக் கட்ட எடுத்துச் சென்றதாகவும் கூறுகிறது. அதேமாதிரி அவதான இலக்கியமும் [Avadāna Literature / "புத்த கதைகள்"] புத்தரின் தாதுவையும் மற்றும் தூபிகளையும் குறிப்பிடுகின்றன. மற்றும் அசோகாவதானம் (Aśokāvadāna) & திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or "Divine narratives") ஆகிய இரு நூல்களிலும் அசோகர் மூல தூபிகளைத் திறந்து, நினைவுச் சின்னங்களைச் சேகரித்து, தனது பேரரசு முழுவதும் அவற்றை மறுபகிர்வு செய்து, பல தூபிகளைக் கட்டினார் என்று மட்டும் கூறுகிறது. அவ்வளவு தான்! எவ்வளவு என்றே குறிப்பிடவே இல்லை. மேலும் பேரரசர் அசோகரின் கல்வெட்டுகள் மூலப் பிரிவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், நினைவுச்சின்னங்களை மறுபகிர்வு செய்வதில் அவரது விரிவான பங்கு பிற்கால நூல்களில் பரிந்துரைக்கப்படுகிறது. அசோகர் ஏற்கனவே கட்டிய எண்பத்து நான்காயிரம் மடங்களில் நினைவுச் சின்னங்களை புதைத்து இருந்தாலும், மன்னர் அசோகர், எப்படியோ, அன்னதான கிண்ணத்தையும் நினைவுச் சின்னங்களால் நிரப்பினார். பின்னர் சுமனன் கடவுள்களின் நகரத்திற்குச் [city of gods / அது எங்கே இருக்குது, எப்படி பயணித்தார் என்பதை மட்டும் கேட்கவேண்டாம்?] சென்று புத்தரின் வலது தோள் எலும்பைக் கொண்ட நினைவுச்சின்னத்தைப் பெற்றார் [புத்தரின் எரிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் எலும்பு துண்டுகளில், வலது தோள் எலும்பு, புதைக்கப்படாமல் அல்லது புதைத்து தூபி கட்டியபின் எப்படியோ அங்கிருந்து அகன்று கடவுளின் நகரத்திற்கு போய்விட்டது?, அதை எப்படியோ சுமனன் அறிந்து அங்கு சென்று பெற்றார்?] சுமனன் இலங்கைக்குத் திரும்பி [எப்படி சென்று வந்தார் என்று கேட்கவேண்டாம்?], அந்த நினைவுச் சின்னத்தை மகிந்த தேரரிடம் ஒப்படைத்தார். பின்னர் பல அற்புதங்களும் அற்புதமான நிகழ்வுகளும் நடந்தன, மேலும் இந்த நினைவுச் சின்னம் தூபாராமயத்தில் (Thuparamaya) நிறுவப்பட்டது. நடந்த அனைத்து அற்புத மற்றும் மாயாஜால நிகழ்வுகளும் வரலாற்று நிகழ்வுகள் அல்ல. கடவுள்களின் நகரம் எது? கடவுள்களின் ராஜாவான சக்காவை சுமனன் எப்படி சந்தித்தான்? பதில் இல்லாத பல கேள்விகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. முடிந்தால் பதிலைத் தேடுங்கள்? Part: 81 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 16: This is also about the faith and the discourse between the King Devanampiya Tissa and Mahinda, about some building works. This is not about any real historical events that took place in Lanka. The Nagacatukka Tank, 16-6, must be one form of the Tamil name ‘Nagacathukka Tank’. This may the present day Nachchaduwa Tank. King’s nephew had fifty-five brothers; quite a large number! The king built sixty-eight rock cells. Rock cells shall remain even now, if they were really built. Chapter 17: This is about the arrival of the Relic, the right collar bone, and its installation in the Thuparama. Mahinda Thera wanted a relic of Buddha to worship for his continual stay in Lanka. The King Devanampiya Tissa promised to build a ‘Thupa’ to house the relic, and Mahinda Thera to find a relic of Lord Buddha. Mahinda requested Sumana, son of Samghamitta, to go to his grandfather, the King Asoka, to obtain a relic and the alms bowl used by the Lord Buddha. It is a mystery how the King Asoka came into possession of the relic and the alms-bowl used by the Buddha. Asoka already enshrined relics in the eighty four thousand monasteries he already built! The King Asoka filled the alms bowl with relics and then Sumana went to the city of gods and obtained the right Collarbone relic of the Buddha from Sakka, the king of gods. Sumana returned to Lanka, and handed the relic to Mahinda Thera. Then there were many miracles, marvellous happenings, and the relic was installed in the Thuparama. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 82 தொடரும் / Will follow துளி/DROP: 1975 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 81 https://www.facebook.com/groups/978753388866632/posts/33143830141932206/?
-
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் [மூன்று பகுதிகள்]
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 03 புத்தான்டுக்கும் தைப்பொங்களுக்கும் இடையில் ஒரு நாள் அவன் காயங்களோடு வந்தான். போலீஸ் தாக்குதல். ஆராதனா முதல் முறையாக அவன் கைகளைப் பிடித்தாள். “நீங்கள் எல்லோருக்காகவும் நிற்கிறீர்கள். உங்களுக்கு யார் நிற்கிறார்கள்?” அடைக்கலம் பதில் சொல்லவில்லை. அவன் முதல் முறையாக தனக்கான ஆதரவை உணர்ந்தான். டிசம்பர் 31 இரவு, நகரம் பட்டாசுகளால் ஒளிர்ந்தது—கண்ணைக் கவரும், காதை கிழிக்கும், ஆனால் நிமிடங்களுக்குள் மறையும் ஒளி. அந்த மகிழ்ச்சி அந்த மண்ணிலிருந்து பிறந்ததல்ல; ஒரு வருடம் முடிந்துவிட்டதென்ற காரணத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட தற்காலிக சந்தோஷம். மேலே வானம் மலர்ந்தபோது, கீழே நிலம் மாற்றமின்றியே இருந்தது. சோதனைச் சாவடிகள் தங்கள் இடங்களில் நின்றன. காணாமல் போன பெயர்கள் இன்னும் திரும்பவில்லை. நீதிமன்றங்களின் கதவுகளைத் தாண்டி நீதி இன்னும் வரவில்லை. இந்தக் கொண்டாட்டம் மக்களின் வாழ்விலிருந்து எழவில்லை; அது வெளியிலிருந்து வந்த ஒரு பழக்கம், மீண்டும் மீண்டும் பழகச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு. கடைசி பட்டாசு அணைந்ததும், இரவு தனது பழைய மௌனத்திற்குத் திரும்பியது; புதிய ஆண்டு வந்தது — பழைய சுமைகளைக் தோளில் சுமந்தபடியே. புத்தாண்டு ஆரவாரமாக பிறந்தது “ஜனவரி 1 ஆம் தேதி பிரபஞ்சம் சார்ந்தது அல்ல, இது ரோமானிய நிர்வாகம்” என அடைக்கலம் மீண்டும் ஆராதனாவுக்கு கூறினான். “இன்னும்,” ஆராதனா மெதுவாகச் சொன்னாள், “மக்கள் வலி முடிந்து நம்பிக்கை தொடங்கும் ஒரு திகதியை - ஒரு கோட்டை - ஆண்டு தொடக்கத்தை - விரும்புகிறார்கள். [“people want a line where pain ends and hope begins.”]” அந்த நிலையில், அறுவடை முடியும் மாதமான தை மாதம், மண்ணுடன் இணைந்த ஒரு நாளாக, நீங்கள் தேடும் சமயம் தாண்டிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நாளாக, "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக " - என்று புறநானூறு 172 கி மு 500 ஆண்டிலேயே கூறிய தமிழரின் திருநாளாக, உங்களுக்கு பொருத்தமான ஒரு நாளாக, நான் நம்புகிறேன் என்றவள் பின் மௌனமாக அவனைப் பார்த்தபடியே அருகில் இருந்தாள். கொத்துக் கொத்தாய்ப் பாவிருக்கும் சித்திரையிலே கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே. [பாவேந்தர் பாரதிதாசன்] அன்று இரவு, அவள் குரலைப் போலவே அவள் மௌனத்தையும் தான் நம்புவதை அடைக்கலம் உணர்ந்தான். அதன் பின் இருவரும் ஷாம்பெயின் [champagne] அல்ல, தேநீர் ஒன்றாக அருந்தினர். அப்பொழுது அடைக்கலம் தனக்கு பதவி உயர்வு, பாதுகாப்பு, ஒருவேளை சுதந்திரம் ஆகியவற்றை இழக்கும் வழக்குகளைப் பற்றி அவளுடன் தேநீரை மெல்ல மெல்ல குடித்தபடி பேசினான். அவள் அதை மௌனமாக கேட்டுக் கொண்டு தானும் தேநீர் பருகினாள். தேநீர் அருந்தி முடிந்ததும், அடைக்கலம், அவள் கண்களை நேராகப் பார்த்தபடி, திருமணம் அல்ல, ஆனால் தனது நோக்கத்தை - மோதிரத்துடன் அல்ல, உண்மையுடன் - அவளுக்கு முன்மொழிந்தான் [He proposed then—not marriage, but intention.]. திங்கள் முகம் மடந்தை இவளோ கங்கை நதியின் அழகு இவளோ! மங்கை எனும் மாயை இவளோ அங்கம் எல்லாம் சிலிர்த்தது ஏனோ? மதி ஒளிர்ந்து வானில் தவழ்கிறதோ சதி செய்து என்னை மயக்கிறதோ? ரதிதேவி வடிவான சிலை நீயோ விதி என்னை உன்னிடம் சேர்க்கிறதோ? “திணிக்கப்பட்ட தேதிகள் அல்லது கடன் வாங்கிய கனவுகளில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தை நான் விரும்பவில்லை,” என்றும் அவன் அவளுக்கு கூறினான். “எனக்கு, எங்கள் தாய் நிலத்தில் வேரூன்றிய ஒரு திகதி வேண்டும். அதைத்தான் நீ அடையாளம் காட்டினாய்” என்றான். உழைப்பிற்கு அழகு சேர்த்த தையே பொங்கல் விழா தந்தது அதற்கோ ? அறுவடை தந்த செல்வமும் மகிழ்வும் தை பிறந்தால் வழிபிறக்கும் என்றதோ நன்றி கூறும் பாரம்பரியம் வளர்த்ததோ? இருவராய் இணைய நல்ல தருணமென முன்பனி நீராடி முடிவு எடுத்ததோ? தையில் திருமண வாழ்வு காண கோலம் போட்டு தோரணம் கட்டியதோ? வணங்கி வாழ்த்தி பொங்கல் பொங்கியதோ?" அவள், அவனுடைய முன்மொழிவுக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை, ஆனால், ““நாம் இருப்பது போலவே இருப்போமா?” [“Will we remain who we are?”] என்று ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டாள். அவன் ஒற்றைச் சொல்லில் “ஆம்.” என்றான். அவர்கள் அவசரப்படவில்லை. ஆறுதலாக அந்த சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார்கள். பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் உள் அடங்கியிருக்கின்றன என்பது யாருக்கும் பொதுவாகத் தெரியாது. தமிழ் நிலங்களில் கார்த்திகை மாதம் வரை மழை இருக்கும். மார்கழி மாதம் வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும். மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும். தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. அதனால் தை என்னும் பெயர் இந்த மாதத்திற்கு வந்திருக்கலாம்? தை என்றால், தைத்தல் என்று பொருளும் உண்டு. மேலும் உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த தானியத்தை [நெல்லை] மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை அனுபவிக்கத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்தது வழிபட்டனர் என்பது வரலாறு. இது நிலத்துடன் சேர்ந்த ஒன்று. மதத்துடன் அல்ல. இப்படியான, தாய் நிலத்தில் வேரூன்றிய ஒரு நாளைத்தான் அடைக்கலம் தனது திருமணத்துக்குவிரும்பினான். தை பிறந்தால் வழி பிறக்கும் தையல் கனவும் பலன் தரும்! அறுவடை தரும் புது நெல்லில் நறு மணப் பொங்கலும் வரும் ! திருமணம் வேண்டி காத்து இருந்தவள் கரும்பு வைத்து கதிரவன் வணங்குகிறாள்! முன்பனி நீரில் மூழ்கி எழுந்தவள் அன்ன நடையில் அழகு காட்டுறாள்! ஜனவரி மாதம் வந்ததும், ஆராதனா குழந்தைகளுக்கு கால்நடைகள், சூரியன், நிலம் பற்றிய பொங்கல் பாடல்களைக் கற்றுக் கொடுத்தாள். அங்கு எந்த மதமும் இருக்கவில்லை, தமிழர் நிலத்துடன் இணைந்த பண்பாடு மட்டுமே இருந்தது. அதேவேளை, மூதாதையர் மண்ணை விட்டு வெளியேற மறுத்ததற்காக கைது செய்யப்பட்ட விவசாயிகளை அவன் தன் வாதாடும் திறமையால் பாதுகாத்தான். அங்கே தமிழரின் இருப்பு இருந்தது. ஒரு மாலையில், முதல் முதலாக சம்மதம் தெரிவித்து அவளும் சொன்னாள்: கடன் வாங்கிய தேதிகளில் கட்டமைக்கப்பட்ட ஒரு திகதி எமக்கு வேண்டாம் “கிறிஸ்துமஸ் போப் ஜூலியஸ் I [Pope Julius I] தேர்ந்து எடுத்த நாளில் பிறப்பைக் கொண்டாடுகிறது. புத்தாண்டு ஜூலியஸ் சீசர் [Julius Caesar] தேர்ந்து எடுத்த நாளில் பிறக்கிறது ஆனால் பொங்கல் தாய் மண்ணின் அறுவடையைக் கொண்டாடுகிறது. எவரும் தேர்ந்து எடுக்கவில்லை. மண்ணில் வேரூண்றிய ஒன்று அப்போது அவள் ஏன், தனக்கு உடனடியாக மறுமொழி கொடுக்காமல் காத்திருந்தாள் என்பதை அவன் புரிந்துகொண்டான் - பொங்கலுக்காக காத்திருந்தாள் என்று - தை பொங்கல் அன்று, பொங்கல் பொங்கி வடியும் பொழுது, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அந்த நாளை, எந்த பேரரசரும் தேதியை பெயரிடவில்லை. எந்த ஆலயமும் அதை உரிமை கோரவில்லை. எந்த அரசும் அதைக் கட்டுப்படுத்தவில்லை. சூரியன், பூமி, மற்றும் உயிர் பிழைத்த மக்கள் மட்டுமே. ஒரு கிறிஸ்தவ வழக்கறிஞர். ஒரு இந்து கலைஞர். மதமாற்றம் இல்லை. சரணடைதல் இல்லை. அவர்கள் அழிக்க முடியாத ஒரு அன்பை மட்டும் தேர்ந்தெடுத்தார்கள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1974 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/33138870995761454/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80B பூகம்பம் மகிந்த தேரரின் செயல்களால் பல முறை ஏற்படுகிறது, குறைந்தது ஒன்பது முறை பூகம்பம் இலங்கையில்? நடைபெற்றுள்ளது . அந்தக் காலத்து எந்தக் கொத்து கட்டிடங்களும் [கற்கட்டிடமும்] , இலங்கையில் மட்டுமல்ல, அருகிலுள்ள தென்னிந்தியாவிலும், இவ்வளவு நிலநடுக்கங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஏற்பட்டால், தப்பிப் பிழைத்திருக்க முடியாது. அது மட்டும் அல்ல இலங்கையும் தென்னிந்தியாவும் பூகம்பத்திற்கு ஆளாகும் பகுதிகளும் அல்ல. இந்த அத்தியாயத்தில் நான்கு முன்னாள் புத்தர்களின் கதைகளும் உள்ளன, அவற்றை நிதானமான வரலாறாகக் கருத முடியாது. மேலும் துட்டகாமினி [Duttagamini] ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு தூபியை [Thupa] கட்டுவார் என்று புத்தர் தீர்க்கதரிசனம் கூறினார் என்றும் உள்ளது. அதிகாரம் 15 - 164 முதல் 172 வரை பார்க்கவும். "அப்போது இலங்கைத் தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை, ஆதலால், இத் தீவில் வசித்த தேவர்களுக்கும், நாகர்களுக்கும் உபதேசம் செய்துவிட்டு, ஆகாய மார்க்கமாக பிக்குகளுடன் ஜம்புத்வீபத்துக்குத் திரும்பி வந்தார். [மனிதர்கள் அல்லாத தேவர்கள் மற்றும் நாகர்கள் இலங்கையில் ஏன் வாழ்ந்தார்கள்?, அவர்களுக்கு ஏன் உபதேசம்?? ஏனென்றால் புத்தரின் போதனைகள் மனிதர்களுடன் சம்பந்தப்பட்டது]* அரசனே! இவ்வாறாக இந்த இடம் நான்கு புத்தர்களால் விஜயம் செய்யப்பட்டது. பேரரசனே! இந்த இடத்திலே புத்தருடைய உடல் தாதுவை வைத்த தூபம் இருக்க வேண்டும். அது நூற்றி இருபது முழம் உயர முள்ளதாகவும் இருக்கும். 'ஹேம மாலி' என்ற பெயர் அது பெறும்." நானே அதைக் கட்டுகிறேன்" என்று அரசன் கூறினன். அரசே! நீ இங்கு ஆற்ற வேண்டிய கடமைகள் வேறு பல உள்ளன. அவற்றை நிறை வேற்றுவாயாக! ஆனால் உன் வழி வந்த ஒருவன் இந்த தூபியைக் கட்டுவான். உன்னுடைய சகோதரனும், உபராஜனுமான மகாநாமனுடைய மைந்தன் யத்தாலாயக தீசன் என்பவன் இனிமேல் அரசன் ஆவான். அவனுடைய மகன் கோத அபயன் அடுத்து அரசனுக வருவான். அவனுடைய மகன் காகவன தீசன் எனப்படுவான். ‘இவனுடைய மகன் அபயன் என்பவன் துட்ட காமனி என்ற பெயரால் புகழ்பெற்று விளங்குவான். அவன், தன்னுடைய அதிசய சக்தியினால் இங்கு தூபியைக் கட்டுவான்." என்று கூறுகிறது. பாளி மொழியில் "துட்ட" (Dutta) என்ற சொல்லுக்கு "தீட்டுப்படுத்தப்பட்ட" அல்லது "துன்மார்க்கன்" என்று பொருள், "காம்னி" (Gamini / காமினி) என்றால் "தலைவர்" அல்லது "போர்வீரன்" என்று பொருள். இப்ப என் கேள்வி, புத்தர் முதலில், நாடுகடத்தப்பட்ட , தீய செயல்களின் வடிவமான விஜயனை தேர்ந்தெடுத்தார். அவன் தானும் புத்த மதத்தில் இணையாமல் மற்றும் எங்கும் பரப்பாமல் , தன் ஆட்சியைத் தொடர பிள்ளைகளும் இல்லாமல் போய்விட்டான். இப்ப இதே புத்தர் மீண்டும் துன்மார்க்க போர்வீரன் ஒருவனைத்தான் தேர்ந்து எடுக்கிறார்? அது ஏன் ? புத்தருக்கு அவர்களைத்தான் பிடிக்குமா? துட்ட காமனியின் அத்தியாயம் புத்தரின் வாயிலிருந்து வருவதாக இங்கு கற்பனை செய்யப்படுவதை வெளிப்படையாக அறிகிறோம். புத்தரால் கூறப்பட்டாலும் கூட, யாராலும் கூறப்படும் எந்தவொரு தீர்க்கதரிசனமும், எதோ ஒரு சந்தேகத்திற்குரிய நோக்கத்துடன் தான் பொதுவாக இருக்கும். இந்த அத்தியாயத்தில் பல மாயாஜால நிகழ்வுகள் நடந்துள்ளன. உதாரணமாக, 'ஒரு மாங்காய் விதை உடனே வளர்ந்து உடனடியாக பழங்களைத் தரும் ஒரு உயரமான மரமாகிறது', 15 – 41 முதல் 43 வரை பார்க்கவும். தேரர் அமர்ந்ததும் அரசன் மாங்கனியை அவருக்கு அளித்தான். தேரர் மாம்பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டையை அரசனிடம் கொடுத்து அதை நடச் சொன்னார். தன் கையாலேயே அரசன் அதை அங்கு நட் டான். அது வளர்வதற்காக அந்த இடத்தில் தேரர் தம் கையைக் கழுவினர். அதே விடிையில் கொட்டையிலிருந்து முளை வெளிப்பட்டு செடி முளைத்தது. கொஞ்சங் கொஞ்சமாக அது வளர்ந்து, இலைகளும் கனிகளும் நிரம்பிய பெரிய மரமாயிற்று என்கிறது இந்தப் பந்தி. திவலா (Tivala , கிமு 3 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்), திவரா என்றும் குறிப்பிடப்படுகிறார், மௌரியப் பேரரசர் அசோகரின் இரண்டாவது ராணி கருவாகியின் [Karuvaki] மகன். கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்ட அசோகரின் ஒரே மகன் இவர் தான். இவர் அவரது தாயாருடன், ராணி அரசாணை [Minor Pillar Edict III of Ashokan edicts, known as the Queen Edict.] என்று அழைக்கப்படும் அசோகரின் ஆணைகளின் மூன்றாம் சிறு தூண் அரசாணையில் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளார். வேறு எந்த மகன்களோ அல்லது மகள்களோ எந்த கல்வெட்டுகளிலும் / அவரது ஆணைகளிலும் குறிப்பிடப்படவில்லை. இங்கே அசோகர் ராணியின் பரிசுகளுக்குப் பெருமை சேர்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறார். அலகாபாத் தூணில் [Allahabad pillar] இது காணப்படுகிறது. "கடவுள்களின் அன்புக்குரியவரின் உத்தரவின் பேரில், இரண்டாவது ராணியின் பரிசு எதுவாக இருந்தாலும், அது ஒரு மாமரமாக இருந்தாலும், ஒரு மடமாக இருந்தாலும், தொண்டு வழங்கும் நிறுவனமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த நன்கொடையாக இருந்தாலும், அது அந்த ராணியின் ... இரண்டாவது ராணி, திவாலாவின் தாயார், கருவாகியின் புகழுக்குக் கணக்கிடப்பட வேண்டும் என்று எல்லா இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்." என்று பதியப்பட்டுள்ளது. ஆனால் புத்த மதத்தை இலங்கையில் நிலைநிறுத்த, பல நூறு தேரர்களுடன் பறந்து இலங்கைக்கு வந்த பெருமைமிக்க மகிந்தவோ, போதி மர கிளையுடன் வந்த பிக்குணி சங்கமித்தவோ, இவர்களின் தாயுமான தேவியோ, கல்வெட்டில் மட்டும் அல்ல, எந்த இந்தியா வரலாற்று குறிப்பிலும் இல்லை. அப்படி என்றால், அசோகன் இவர்களை , இவர்களின் பெருமையை மறந்துவிட்டானா? அல்லது அப்படி ஒன்றுமே இல்லையா, கவனத்தில் எடுப்பதற்கு? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 81 தொடரும் / Will follow துளி/DROP: 1973 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80B https://www.facebook.com/groups/978753388866632/posts/33133175609664326/?
-
"மூன்று கவிதைகள் / 19"
"மூன்று கவிதைகள் / 19" 'தூது செல்லாயோ' தூது செல்லாயோ கண்மணியை அழைக்காயோ தூய்மை அன்பில் நட்பை வளர்த்து தூரிகை எடுத்து காதல் வரைந்தவள் தூர விலகிப் போனது ஏனோ? ஓரமாய்த் தள்ளி ஓடியது எதற்கோ? ஈர உள்ளம் உனக்கு இல்லையோ? கால் சலங்கை இசை எழுப்பக் காதணி இரண்டும் சேர்ந்து ஆடக் காமன் வலையில் என்னை வீழ்த்தி காதோரம் கெஞ்சிய வார்த்தை எங்கே? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. புகைப்படக் கவிதை மழலையின் மொழி கேட்டு நான் குழல் ஊதும் கண்ணனை மறந்தேன்! குழவியின் கெஞ்சிக் கொஞ்சிக் குலாவுதலில் அழகு மங்கையின் தழுவலைத் துறந்தேன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .......................................................................... 'மின்னலாய் ஒரு பின்னல்' [ஏற்றம், இறக்கம், சமநிலை, தாழ்வு] ஏற்றம் மிகு வாழ்வு வேண்டின் இறக்கம் தருவதைத் தவிர்! சமநிலை தவறாது வாழ தாழ்வு எண்ணங்களை முற்றிலும் அகற்றிடு! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. துளி/DROP: 1972 ["மூன்று கவிதைகள் / 19" https://www.facebook.com/groups/978753388866632/posts/33126338203681400/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 80 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை எனக்கு இன்னும் புரியாதது என்னவென்றால், புத்தர் இலங்கைக்கு வருகை தந்தபோது நாகர்கள் மற்றும் தேவர்கள் உட்பட பில்லியன் கணக்கான ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை மீண்டும் மதம் மாற்ற மகிந்த தேரர் ஏன் அனுப்பப்பட்டார்? அல்லது புத்தர் வந்து போன பிறகு, அந்த உயிரினங்கள் அனைத்தும் தனது கொள்கைகளை கைவிட்டு முந்தைய கொள்கைகளுக்கும் சிவன் மற்றும் நாக வழிபாடுகளுக்கும் திரும்பிச் சென்றார்களா? அல்லது புத்தர் சரியாகப் போதிக்கவில்லையா? அத்தியாயம் 14: தலைநகரில் வசிப்பவர்களுக்கு நீர்விழா நடத்த ஏற்பாடு செய்த தேவநம்பிய தீசன் வேட்டையாடுவதில் உள்ள இன்பத்தை அனுபவிக்கப் நாற்பதாயிரம் ஆண்களுடன் வேட்டைப் பயணத்திற்குச் சென்றார். மலையின் உச்சியில் இறங்கிய மகிந்தவிடம் மன்னனை வழிநடத்த விரும்பிய மலைக் கடவுள் (தேவன்), ஒரு ஆண் மானின் வடிவத்தை எடுத்தார். வேடடைக்குச் சென்ற மன்னன் அதைப் பின்தொடர்ந்தார். அந்த மான், மன்னனை மகிந்த தேரரிடம் அழைத்துச் சென்று, அதன் பின் மறைந்தது விட்டது. கட்டாயம் இது ராமாயணத்தில் நடந்த நிகழ்வின் ஒரு நகல், அதில் ராமர் தனது மனைவி சீதையின் வற்புறுத்தலின் பேரில் ஒரு மாயை மானைப் பின்தொடர்ந்தார். குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச் சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்; நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும் மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா! [மகளிர் மனம் போல நின்றும் ஓடியும் மான் மாயம் செய்தது / கம்பராமாயணம் - மாரீசன் வதைப் படலம்] மேலே கூறிய நம்பமுடியாத பல நிகழ்வுகளில் இருந்து, இது ஒரு உண்மையான வரலாற்று நிகழ்வாக இருக்க முடியாது என்பது, கொஞ்சம் சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவருக்கும் புரியும். அவர்கள், மன்னனும் மகிந்தவும் பல விடயங்களில் விவாதங்களை நடத்தினர். இறுதியில் மன்னனும் அவரது நாற்பதாயிரம் ஆட்களும் புத்த மதத்திற்கு உடனேயே மாறினர். வின்சென்ட் ஏ. ஸ்மித் [Vincent A. Smith], புத்த மதத்திற்கு மதமாற்றம் மிகவும் படிப்படியாக நடந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறார். நிதானமான வரலாறாகக் கருத முடியாத பல அற்புதங்களும் இயற்கைக்கு மாறான நிகழ்வுகளும் இங்கு கூறப்பட்டு உள்ளன. அசோகரின் மகன் மகிந்தவைப் பற்றி மன்னர் தேவநம்பிய தீசன் அறிந்தது இதுவே முதல் முறை ஆகும். இருப்பினும், மன்னர் அசோகரும் மன்னர் தேவநம்பிய தீசனும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள்? 11- 18 முதல் 19 வரை பார்க்கவும். [1 5 (முத்துக்கள்) கடலில் இருந்து வெளிவந்து குவியலாக கரையில் கிடந்தன. 16 இவை அனைத்தும் தேவநம்பியதீசனின் பெருமையால் நிகழந்தவை. நீலமாணிக்கம் [Sapphire], பெரில் (Beryl) அல்லது காமதகம் , மாணிக்கம் [ruby], இரத்தினக்கல் அல்லது இரத்தினம் [gems] மற்றும் பல நகைகள் மற்றும் 17 முத்துக்களும் மூங்கில் தண்டுகளும் அனைத்தும் ஒரே வாரத்தில், மன்னனுக்கு அவர்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். இதைக் கண்ட மன்னன் மனதார மகிழ்ச்சியடைந்தார். 1 8 ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ்விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதி உள்ளவர்கள் அல்ல. இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்று எண்ணினான். / 19 தேவநம்பியதீசனும், தர்ம அசோகனும் ஒருவரையொருவர் நேரில் பார்த்ததே இலலை. ஆயினும் வெகு காலமாகவே அவர்கள் நண்பர் களாக இருந்தார்கள் என்கிறது இந்தப்பகுதி. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அசோகர் தனது மகன் மற்றும் மகளைப் பற்றி தனது நீண்டகால நெருங்கிய நண்பரான மன்னன் தேவநம்பிய தீசனுடன் விவாதிக்க மறந்துவிட்டார்! நெருங்கிய நண்பர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளைப் பற்றி முதலில் விவாதிப்பார்கள். ஆனால் இங்கு அதைக் காணவில்லை? இது ஒரு வினோதமான நட்பு அல்லது தோழமை! அத்தியாயம் 15 [மகா விகாரை]: இது ஒரு நீண்ட அத்தியாயம், பெரும்பாலும் புத்தர் மற்றும் முந்தைய புத்தர்களைப் பற்றிய நம்பிக்கையைப் பற்றியது, ஆனால் இலங்கையில் நடந்த எந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. மேலும் புராணக் கதைகள் கண்டுபிடிக்கப்படும் போது அத்தியாயங்கள் பொதுவாக நீளமாக இருக்கும். ராணி அனுலாவும் [Queen Anula] ஐநூறு பெண்களும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] பெற விரும்பினர். பப்ஜா (Pabbajjā) என்பது பௌத்த மதத்தில் மடாலய வாழ்க்கைக்குள் நுழைவதற்கான ஆரம்ப புத்த மத சடங்கு ஆகும். இது ஒரு துறவி (பிக்கு) அல்லது கன்னியாஸ்திரி (பிக்குனி) ஆக முழுமையாக வாழ்வை ஈடுபடுத்த முன், அதற்கான முதல் கட்டம் ஆகும், இதில் ஒரு நபர் உலகியலான வாழ்க்கையை விட்டு பௌத்த மதத்தின் வழியில் செல்வதை குறிக்கிறது. அதாவது, இங்கு கட்டாயம் நான்கு விடயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும். ஆண்-பெண் கலவி கூடாது. புல்லைக் கூட திருடக் கூடாது. உயிருள்ள சின்னசிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது. இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது. இப்ப இலங்கையில் , பர்மாவில் பிக்கு அல்லது பிக்குணியின் வாழ்வு மற்றும் அவர்களின் செயல்கள், வாய்மொழி பேச்சுக்கள் இப்படித்தானா இருக்கிறது என்பதைக் நீங்களே கூறுங்கள்? எனவே இந்த நோக்கத்திற்காக சங்கமித்தாவை [Sanghamitta] அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. மேலும் தாரை வார்த்த நீர் தரையில் விழுந்தபோது ஒரு பூகம்பம் ஏற்பட்டது. 15 - 22 முதல் 26 வரை பார்க்கவும். ‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் அவள் இங்கே வருவாள். அவளுடன், புனிதத்தால் புகழ்பெற்ற பிக்குணிகளும் உடன் வருவார்கள். இகைக் குறித்து என்னுடைய தந்தையாகிய அரசனுக்குச் செய்தி அனுப்புக. அந்தத் தேரி இங்கு வந்ததும் இந்தப் பெண்களுக்குத் தீட்சை செய்து வைப்பாள்" என்றார் மகிந்த, அதுதான் நல்லது" என்றான் மன்னன். பின்பு அழகிய கலசத்தில் நீரை யெடுத்து மகிந்த தேரருடைய கையில் ஊற்றி தாரை வார்த்துக் கொடுத்தான். "இந்த மகா மேகவனத்தை பிக்கு சங்கத்துக்கு அளிக்கிறேன்' என்று மன்னன் சொன்னான். தாரை வார்த்த நீர் தரையில் விழுந்த போது பூமி அதிர்ந்தது. புவியின் காவலன் தேரரிடம், 'ஏன் இப்படி பூமி அதிர்கிறது?’ என்று கேட்டான். தீவில் இப்போது முதல் தர்மம் வேரூன்றிவிட்டது அதனால்" என்று தேரர் பதிலளித்தார். [எப்படியான புத்த தர்மம் உண்மையில் இலங்கையில் வேரூன்றிவிட்டது என்பதை வடக்கு கிழக்கில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்?] Part: 81 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 14: The King Devanampiya Tissa was having a water festival, and went on a hunting expedition with forty thousand men. The mountain god (Deva) wanted to guide the king to Mahinda who has just alighted on the top of the mountain. The mountain god took the form of a male deer and the king followed it. The deer lead the king to Mahinda Thera and vanished. This is a copy of the event that happened in the Epic Ramayana in which Rama went after an unreal deer on the urging of his consort Sita. This cannot be a real historical event. They, the king and Mahinda, had discussions on many subjects, and in the end, the king and his forty thousand men converted to Buddhism. Vincent A. Smith strongly expresses that the first conversion to Buddhism must have taken place in a very gradual manner. There are so many miracles and unnatural happenings, which cannot be considered as sober history. This is the first time the King Devanampiya Tissa came to know about Mahinda, the son of Asoka. However, it is alleged that the King Asoka and the King Devanampiya Tissa were intimate friends, 11- 18 to 19. Asoka forgot to discuss about his son and the daughter with his long-time intimate friend, the King Devanampiya Tissa! Intimate friends usually discuss first about their children. It is a queer friend ship! There is confusion with the name ‘Anula’. Anula is the consort of Sub-king Mahanaga. The sentence next to it says queen Anula! It seems that the name of the queen is also Anula and the name of the consort of the sub-king, the brother of the king who is next in line to the throne, is Anula. It seems quite strange. Chapter 15: This is a long chapter and mostly about the faith, about Buddha, and the previous Buddhas, but not about any reliable historical events that took place in Lanka. The chapters are usually long when the narratives are invented. The Queen Anula and five hundred other women wanted to receive pabbajji ordination. It was decided to bring Samghamitta for that purpose. Water from the king fell on the ground and an earthquake occurred. Earthquake occurs so many times due to Mahinda Thera’s actions, not less than nine times. No masonry buildings of that time would have survived, not only in Lanka but also in the adjacent South India, these so many earthquakes. Lanka and South India are not earthquake prone regions. There are stories of former four Buddhas, which cannot be considered as sober history. The Buddha prophesied that Dutthagamani would build a Thupa at a particular place, 15 – 168 to 169. The episode of Dutthagamani is imagined to come from the mouth of the Buddha. Any prophesies by anyone, even if it is by the Buddha, is with suspicious motive. A mango seed grow into a tall tree bearing fruits immediately, 15 – 41 to 43. The King Tissa built the MahaVihara. Lengthier the chapter, fraudulent is the narrative. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 80 B தொடரும் / Will follow துளி/DROP: 1971 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A] https://www.facebook.com/groups/978753388866632/posts/33119471261034761/?
-
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் [மூன்று பகுதிகள்]
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 02 கிறிஸ்துமஸுக்கு புத்தாண்டுக்கும் இடையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடையில், அடைக்கலமும் ஆராதனாவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு யாழ்ப்பாண பொது நூலகத்தில் மீண்டும் சந்தித்தனர். ஆராதனா நூலகக் குறிப்புப் பகுதியில் நாட்டுப்புற தாளங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்; அடைக்கலம் குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு மீனவருக்காக ஒரு ஆட்கொணர்வு வழக்கைத் தயாரித்துக் கொண்டிருந்தார். வரலாற்றால் வடுக்கள் நிறைந்த, ஆனால் அதை மறைப்பதற்காகவே முழுமையாக புனர்நிர்மாணம் அரசால் செய்யப்பட்ட அந்த யாழ்ப்பாண பொது நூலகத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் உலகங்களைக் கற்றுக்கொண்டனர். 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்' இதைத்தான்1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் இலங்கை அரச அதிகாரத்தால், சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் முற்றாக எரிக்கப்பட்டது. அது பற்றியே முதலில் அங்கு பேசத் தொடங்கினர். அவர்களின் கலந்துரையாடலுக்கு இடையில், ஆராதனா, கிறிஸ்மஸ் ஈவை [christmas eve] நான் குழந்தைப் பருவத்தில் விளக்குகளாகவே பார்த்திருக்கிறேன். நட்சத்திரங்களாக. பாடல்களாக. ஆனால் அன்று அது கேள்வியாக இருந்தது. இப்ப கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் முதல் முறை இந்த கிறிஸ்மஸ் ஈவுக்கு சென்றபின், அந்த கேள்வி மறைந்து விட்டது என்றாள். அடைக்கலம் ஒன்றும் பேசவில்லை. அவளை, அவளின் பேச்சை ரசித்தபடி மௌனமாக இருந்தான். பின் இப்ப கிறிஸ்மஸ் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டான். அவள் சற்றும் தாமதிக்காமல், உடனடியாகவே, அவனின் கண்ணை பார்த்தபடியே, "இப்போது எனக்குத் தெரியும் — நான் கற்றுக் கொண்ட கிறிஸ்மஸ் பிறந்த நாளைப் பற்றி அல்ல. மனிதன் மனிதனாக நிற்பதைப் பற்றி" என்றாள். "நான் கேள்வி கேட்டே பழகவில்லை. வழிபாடு எனக்கு இசை. பாடல். நடனம். கண்கள் மூடி ஏற்றுக் கொள்ளும் அமைதி." என்று தன்னையும் கொஞ்சம் அறிமுகப் படுத்தினாள். இதுவரை அமைதியாக இருந்த அடைக்கலம், "நான் வழக்கறிஞராக மாறியது சட்டத்தை நேசித்ததனால் அல்ல. அநீதியைப் பார்த்து அமைதியாக இருக்க முடியாததனால்" என்றான். "வடக்கில் ஒரு மனிதன் அவனுடைய நிலத்தில், அவனே விருந்தினன் ஆக்கப்பட்ட போது நான் சட்டப் புத்தகத்தைத் திறந்தேன்" என்று விளக்கமும் கொடுத்தான்." அன்று முதல் என் கிறிஸ்மஸ் ஒரு வழக்குக் கோப்பாகவே இருந்தது, அது மட்டும் அல்ல, நான் தேவாலயத்திற்குப் போகிறேன். ஆனால் நான் அங்கு நம்பிக்கையைத் தேடுவதில்லை. அமைதியை மட்டும் தேடுகிறேன்." என்று தன் கதையைச் சுருக்கமாக சொல்லி முடித்தான். ஆண் பெண்ணின் உடல் அழகைக் கண்டு கவரப்படுவது போல, பெண் ஆணின் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, பாதுகாப்பு உணர்வு, அக்கறை போன்ற குணாதிசயங்களில் மயங்கி காதலிப்பதே பொதுவான கண்ணோட்டமாகும். அதில் ஆராதனாவும் ஒருவளே. என்றாலும், ஆராதனா தன் உணர்வுகளை வெளிக் காட்ட நினைத்தாலும் ஏதோ ஒரு நாணம், வெட்கம் அவளைத் தடுத்தது. பெண்ணிடம் தயக்கம் இருக்கும், பயம் இருக்கும், கூச்சம் இருக்கும், நாணம் இருக்கும், வெட்கம் இருக்கும் .... இவற்றிற்கு நடுவில் அவர்கள் தங்கள் காதலையும் சொல்லியாக வேண்டும். இந்த பிரச்சனை இன்று நேற்று அல்ல .... தொன்று தொட்டு வருகிறது. பாண்டிய மன்னன் வீதி உலா போகிறான். அவள் ஒரு சாதாரண குடும்பப் பெண். பாண்டியன் மேல் காதல். சொல்லவா முடியும் ? அவனைக் கொஞ்சம் பார்கவாவது செய்யலாம் என்றால் அவனை சுமந்து வரும் அந்த பட்டத்து பெண் யானை வேக வேகமாக நடந்து சென்று விடுகிறது. யானையிடம் தலைவி சொல்கிறாள் ... "ஏய் யானை, கொஞ்சம் மெதுவா தான் போயேன் ... என்ன அவசரம் .." என்று சொல்ல வேண்டும். யானை கேட்குமே , "ஏன் என்னை மெதுவாக போகச் சொல்கிறாய் " என்று. பாண்டிய மன்னனை சைட் அடிக்கணும் என்று சொல்லவா முடியும் ? அவள் அந்த பட்டத்து பெண் யானையிடம் சொல்கிறாள் " நீ இப்படி தங்கு தங்கு என்று வேகமாய் நடந்து போனால், ஊரில் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல், ஒரு பெண் இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள். எனவே, மெல்லமா போ " என்கிறாள். என்னவோ, அந்த யானை மேல் ரொம்ப கரிசனம் உள்ளவள் போல. எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான் புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப் படுவது உடைத்து அப்படித்தான் ஆராதனா தன் மனதை மெல்லமா போக செய்து விட்டாள். அதனால், அடைக்கலத்துக்கு அவளின் நிலையை அறியமுடியவில்லை. அதன் பின் ஒரு முறை அடைக்கலத்துடன் நீதிமன்றத்திற்குச் சென்றாள் - உள்ளே அல்ல, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுடன் வெளியே காத்திருந்தாள், சட்ட பயத்தை [சட்டத்தின் மீதான அச்சம்] இலகுவான தமிழில் மொழிபெயர்த்தாள். மகன் காணாமல் போன அந்த வயதான பெண்மணியிடம், சமநிலையில் இருந்து, ஆறுதல் அளிக்கப் பேசுவதை அவன் பார்த்தான். அந்த தருணத்தில் அவனின் மனம் அவனுக்குச் சொன்னது, "அவளின் தனிப் பெருமை கொண்ட அழகை விட, அவள் பிறர் துயரத்தை தன் துயராக ஏற்கும் மனிதராக இருக்கிறாள்" என்று. அது அவனை மேலும் சிந்திக்க வைத்தது. அவள் செய்யும் இந்தச் செயல், அவன் வழக்காடும் வாழ்க்கையையும் பிரதிபலித்து, இருவரும் ஒரே உண்மையின் பக்கம் நிற்பவர்கள் என்பதை அவன் உணர்ந்தான். அந்த நிமிடம் அவனுக்குச் சொன்னது: “இந்த பெண்ணுடன் நான் வாழ்க்கையைப் பகிர முடியும்.” அன்று மாலை, சோதனைச் சாவடியைத் தாண்டி அவர்கள் செல்லும் போது, ஆராதனாவின் மனம் காணாமல் போன தன் மகனைப் பற்றி பேசும்போது குரலே இல்லாமல் போன அந்த முதிய பெண்ணின் முகத்தில் இன்னும் இருந்தது. இரும்புக் கம்பிகளும் சீருடை ஒளிகளும் சூழ்ந்த அந்தச் சாலையில், அவள் திடீரென நின்று, “நாம் செய்கிற எல்லாம் சில நேரங்களில் பயனற்றது போல் தோன்றுகிறதா?” என்று கேட்டாள். அந்தக் கேள்வி அவள் நம்பிக்கையால் அல்ல; அவள் சுமந்த பொறுப்பின் சத்தம். அடைக்கலம் ஒரு கணம் மௌனமாக இருந்தான். பிறகு மெதுவாகச் சொன்னான்: “நான் வருவதை நிறுத்தும் நாளில்தான் அது பயனற்றதாகும்.” அவன் நீதியை வெற்றியாக மாற்ற முடியாதவன் என்பதை அறிந்திருந்தான்; ஆனால் நீதி தேவைப்படும் இடத்தில் இருப்பதை விட்டுவிட மறுத்தவன். அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள்—சோதனைச் சாவடியைத் தாண்டி, இரவுக்குள்—உலகத்தை மாற்ற முடியாவிட்டாலும், மனிதனை முற்றிலும் உடைய விடாமல் தடுக்க நிற்கும் மனிதர்களைப் போல. அப்பொழுது ஒரு பாடல் அவர்களின் காதில் ஒலித்தது; "உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய் அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான் அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்! உன்னை நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர் அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர் அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையுடன் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம் !! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1970 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/33112176718430882/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79B பகவான் புத்தர் மிகவும் நல்ல மனிதர். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவருக்கு மட்டும் அல்ல, எந்த மனிதனுக்கும் மனத் திறனை முன்னறிவிக்கும் தெய்வீக சக்தி கட்டாயம் இருக்காது. அதுமட்டும் அல்ல, புத்தரே இப்படியான தெய்வீக சக்திகளை, தன்னால் முடிந்தாலும் முடியாவிட்டாலும், அவ்வற்றை கையாள மாட்டேன் / கையாளக்கூடாது என்கிறார். இருப்பினும், கதையின்படி, இலங்கைக்கு பறந்து வந்த மகிந்த தேரர் மிஸ்ஸகா மலையில் [mount Missaka] இறங்கினார் என்று கூறப்பட்டுள்ளது. மகாவம்சம், அத்தியாயம் 13 - 20, அத்தியாயம் 14 - 2, & அத்தியாயம் 17 - 23, இல், மிஸ்ஸகா மலை குறிக்கப்பட்டுள்ளது. இதை இன்று மிகிந்தலை என்று கருதுகிறார்கள். இது இலங்கையில் அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு மலை சிகரம் ஆகும். இலங்கையில் புத்த மதத்தின் இருப்பைத் தொடங்கிய புத்த துறவி மகிந்தருக்கும் மன்னர் தேவநம்பிய தீசனுக்கும் இடையிலான சந்திப்பு நடந்த இடமாக இது [மிகிந்தலை] இலங்கையர்களால் நம்பப்படுகிறது. இது இப்போது ஒரு புனித யாத்திரைத் தளமாகவும், பல மத நினைவுச் சின்னங்கள் மற்றும் கைவிடப்பட்ட கட்டமைப்புகளின் தளமாகவும் உள்ளது. பழங்கால உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஒருவர் தனது போதனைகளை முதலில் தான் பிறந்து வளர்ந்த நாட்டிலேயே நிறுவ முனைகிறார். அதன் பிறகு மற்ற நாடுகளுக்கு பரவலாம் அல்லது பரவாமல் போகலாம். ஏனென்றால் அவர்கள் குறிப்பாக தங்கள் நாடு, அவர்களின் மொழி, அவர்களின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தை நன்றாக அறிந்து இருப்பதுடன் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாடுகளுக்கு, அந்தக் காலத்தில் கடினமாகவும் இருந்தது. இரண்டாவதாக, விஜயன் வருவதற்கு முன்பு புத்தர் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்தார், மேலும் அவரது முதல் வருகையின் போது, தேவர்கள் கூடினர், அவர்களின் கூட்டத்தில் புத்தர் தன் கோட்பாட்டைப் போதித்தார். இதன் விளைவாக, ஏராளமான உயிரினங்கள் [many kotis of living beings] பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டன. அவ்வாறே, அவர் தனது இரண்டாவது வருகையின் போதும், புத்தம், தர்மம், சங்கம் என்ற மும்மணிகள் அல்லது திரிசரணங்களில் [three jewels, மூன்று இரத்தினங்கள்] அடைக்கலம் புகுந்து, அறநெறிகள் ஒழுக்கத்தைப் பின்பற்றும்படி வழிநடத்தி கடலிலும் நிலத்திலும் வாழ்ந்த ஏராளமான நாகர்களுக்கு கோட்பாட்டைக் கற்பித்தார். அவர்களில் எண்பது கோடி [eighty kotis] பேர் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டனர். தனது மூன்றாவது வருகையின் போது, புத்தர் மீண்டும் போதித்தார். புறப்படுவதற்கு முன், அவர் தனது கால்தடங்களை சுமனகுடாவில் (Sumanakuta / A mountain peak in Ceylon / இப்போது ஸ்ரீ பாத அல்லது ஆதாமின் சிகரம் என்று அழைக்கப்படுகிறது) விட்டுச் சென்றார். அப்படியானால், விஜயன் வந்த நேரத்தில் புத்தரின் போதனைகள் அங்கு இருந்திருக்க வேண்டும், ஆனால் தேவநம்பிய தீசனின் காலம் வரை சிவ வழிபாடும் மற்றும் நாக வழிபாடும் தான் அங்கு தொடர்ந்தன. உதாரணமாக, பதின்மூன்றாம் அத்தியாயத்தில், இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறார். அதேபோல, பதினான்காம் அத்தியாயத்தில், தர்மத்தை (பிரசங்கிக்கும்) நேரத்தை அவர் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் இலங்கை முழுவதும் கேட்கும் படியாக அவன் தர்மப் பிரசார நேரத்தை அறிவித்தான். இந்த அழைப்பின் காரணமாக ஒரு பெரிய தேவர்கள் கூட்டம் ஒன்று கூடியதாகக் கூறப்படுகிறது; இந்தக் கூட்டத்திற்கு முன்பு தேரர் சமசித்த சுத்தத்தைப் [Samacitta-sutta] உபதேசம் செய்தார். எண்ணற்ற தேவர்கள் கோட்பாட்டிற்கு மாற்றப்பட்டனர் மற்றும் பல நாகர்களும், சுபானர்களும் திரிசரணத்தை மேற்கொண்டனர். [The supanna (a kind of fairy bird / Skt. suparna) or garula (Skt. கருடன், ஒருவகைப் புராணப் பறவை / garuda) are mythical creatures who are imagined as winged and are always considered as the sworn foes of the nagas.] இதனால் அவர்கள் மும்மணிகளில் அடைக்கலம் புகுந்தனர் [came unto the (three) refuges]. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 80 தொடரும் / Will follow துளி/DROP: 1969 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79B] https://www.facebook.com/groups/978753388866632/posts/33103434085971812/?
-
"மூன்று கவிதைகள் / 18"
"மூன்று கவிதைகள் / 18" 'மின்னலாய் ஒரு பின்னல்' [நம்பிக்கை, துரோகம், சத்தியம், சோதனை] நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து துரோகம் செய்யும் மனிதர்களை அறியாயோ? சத்தியம் வெல்ல களத்தில் இறங்கினால் சோதனை வந்து வேதனை கொடுக்குதே! அல்லது நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து/ துரோகம் செய்யும் மனிதர்களே/ சத்தியம் வெல்லும் நாளில்/ சோதனை வரும் உங்கள் வாழ்வுக்கு! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. 'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்' விண்ணில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை உண்மை ஒன்றை உலகிற்குப் பகிர ஆண்டவன் வருகையை ஞானிகள் அறிய மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்! கண்கள் எல்லாம் அன்பு பொழிய கந்தலில் மறைந்து இருந்த பாலகன் கருணை காட்டி உலகை அணைத்து களவு இல்லா மனிதம் காட்டினான்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................................. 'வன்னியில் குண்டுகள் ... ' வன்னியில் குண்டுகள் ஆயிரம் விழுகுது கன்னியின் பார்வையில் ஏக்கம் தழுவுது மண்ணுக்கும் மொழிக்கும் நின்ற மக்கள் கண்ணுக்கும் தெரியாமல் சாம்பல் ஆகினர்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ துளி/DROP: 1968 ["மூன்று கவிதைகள் / 18" https://www.facebook.com/groups/978753388866632/posts/33098366463145241/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 79 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 13: இது மகிந்த தேரர் இலங்கைக்கு பறந்து சென்ற மாயாஜால நிகழ்வைப் பற்றியது. இது இலங்கையில் நடந்த எந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியதும் அல்ல. இதில் மகிந்த, அசோக மன்னரின் மகன் என்று கூறப்படுகிறது. எனவே அவர் ஒரு மனிதர். எனவே, ஈர்ப்பு விசையை மீறி பறக்கும் திறன் பெற்றிருக்க முடியாது. மகிந்த இலங்கைக்கு பறந்து வந்தது ஒரு புராண கதையாக மட்டுமே இருக்கலாம்? எந்த இந்திய ஆதாரங்களிலும் மகிந்த என்ற, அசோகனின் மகன் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. அது மட்டும் அல்ல, இவர் பிறந்து வளர்ந்ததாக கூறப்படும் இந்தியாவில், மகிந்த மட்டும் அல்ல, அவரது சகோதரி சங்கமித்தா, அவரது மகன் சுமனா, அவர்களின் தாய் தேவி மற்றும் மூன்றாம் புத்த சபை [Mahinda, his alleged sister Sanghamitta, her son Sumana, their mother Devi, and the Third Buddhist Council] ஆகியவை பற்றி எந்த வரலாற்று அல்லது இலக்கிய ஆவணங்களும் இல்லை. மேலும் அவர்கள் அனைவரும் துறவி எழுத்தாளர்களால் தங்கள் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கண்டு பிடிக்கப்பட்ட கற்பனையான கதாபாத்திரங்கள் என்றே தோன்றுகிறது. சங்கமித்தா என்ற பெயருக்கு 'சங்காவின் நண்பர்' என்று பொருள். ஆனால், சங்கமித்தா பிறந்தபோது அசோகர் ஒரு பௌத்தர் அல்ல, அவர் ஒரு இந்து. எனவே அவர் தனது மகளுக்கு அப்படி பெயரிட்டிருக்க முடியாது? மேலும், சங்கமித்தா என்பது பெண்களுக்கான பிரத்யேகப் பெயரும் அல்ல. இது ஒரு பட்டப் பெயர் என்பதுடன், அதே பெயரைக் கொண்ட ஆண் தேரர் ஒருவர் தொலைதூரக் கரையிலிருந்து வந்தார் என மகாவம்சமே கூறுவதைக் காண்க. அத்தியாயம் 37 - 1 முதல் 5 வரை பார்க்கவும். ஜேததீசனுடைய [Jetthatissa] மரணத்துக்குப் பின்னர் அவனுடைய தம்பி மகாசேனன் [MAHÁSENA1] இருபத்தேழு வருட காலம் அரசனுக இருந்தான். அவனை அரசனாகப் பட்டாபிஷேகம் செய்வதற்கு மறு கரையிலிருந்து ச்ங்கமித்திர தேரர் இங்கு வந்தார். பட்டாபிஷேகமும் மற்றும் வேறு பலவிதமான சடங்குகளையும் செய்து முடித்ததும் மகா விஹாரையை அழிக்க விரும்பிய கட்டுப்பாடில்லாத அந்தப் பிக்கு, இவ்வாறு கூறி அரசனைத் தம் வசப்படுத்திக் கொண்டார். "மகா விஹாரையில் வசிப்பவர்கள் உண்மையான வினயத்தைப் போதிப்பது இல்லை. நாங்கள் தான் உண்மையான வினயத்தைப் போதிப்பவர்கள்." இதன்பேரில் அரசன் 'மகா விஹாரையில் வசிக்கும் பிக்குகளுக்கு யார் உணவு அளித்தாலும், அவர்களுக்கு நூறு பணம் அபராதம் விதிக்கப் படும்’ என்று கட்டளை பிறப்பித்தான் என்று கூறுகிறது. மகிந்த இலங்கையை புத்த மதத்திற்கு மாற்றுவார் என்று புத்தர் முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. 13 - 15 முதல் 16 வரை பார்க்கவும். அத்தியாயம் XIII / மகிந்தவின் வருகை: 15. இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். 16. "அங்கு உங்களுக்கு உதவுபவர்கள் நாங்களாக இருப்போம் ' என்றான். புத்தர் ஒரு மனிதராக இருந்ததால், இந்த முன்னறிவிப்பு ஒரு அப்பட்டமான பொய், மேலும் அவருக்கு எந்த முன்னறிவிப்பு திறனும் இருந்திருக்க முடியாது. இன்னும் ஒன்றையும் கவனியுங்கள். புத்தர், தானே, இலங்கைக்கு மூன்று தடவை பறந்து போய், அங்கு கோடிக்கணக்கானோருக்கு போதித்தது என்னவாச்சு? ஏன் அவர் தான் பிறந்து வளர்ந்து இறந்த இடத்தில் புத்த மதத்தை நிலைநிறுத்த, இப்படியான மாயயால வித்தைகள் செய்யவில்லை? அது மட்டும் அல்ல, முன்பும் புத்தர் தனது மரணப் படுக்கையில் விஜயன் இலங்கைக்கு வருவது குறித்து தீர்க்கதரிசனம் கூறினார். அத்தியாயம் 7 – 3 முதல் 4 வரை பார்க்கவும். அத்தியாயம் 07 விஜயனின் பட்டாபிஷேகம்: "சிம்மபாகுவின் மகன் விஜயன் லால நாட்டிலிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வந்திருக்கிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவதற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்கிறார். ததாகதர் கூறிய இவ் வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீலோற்பலம் மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த தேவனிடம் ஒப்படைத் தான். [சக்கன் - இந்திரன். விஷ்ணு-நீல வண்ணமுடையவன்.] சக்கனிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் அத்தேவன் விரைந்து இலங்கைக்கு வந்து நாடோடியான துறவிக் கோலத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். விஜயனுடன் வந்தவர்கள் யாவரும் அவரிடம் வந்து ஐயனே ! இது என்ன தீவு’ என்று கேட்டனர். "இலங்கைத் தீவு' என்று அவர் பதிலளித்தார். "இங்கு மனிதர் யாரும் கிடையாது. எனவே அபாயம் எதுவும் நேராது' என்றும் அவர் கூறினர். பின்பு தமது கமண்டலத்திலிருந்து நீரையெடுத்து அவர்கள் மீது தெளித்தார். பிறகு அவர்கள் கையில் நூலினுல் காப்புக் கயிறு" கட்டிவிட்டு காற்றிலே கலந்து மறைந்து விட்டார். அங்கே பெண் நாய் உருவில் ஒரு யட்சினி [ யட்சி yakkhini] தோன்றினாள். அவள் குவண்ண [Kuvanna] என்பவளுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவள். விஜயனைச் சேர்ந்தவர்களில் ஒருவன் இளவரசன் [விஜயன்] தடுத்ததையும் கேளாமல் அவள் பின் தொடர்ந்து சென்றான். அருகில் கிராமம் இருந்தால் தானே நாய் தென்படும்" என்று இளவரசன் அப்பொழுது எண்ணினான். ஒன்றைக் கவனியுங்கள். 'கிராமம் இருந்தால்தானே நாய் தென்படும்', என்ற வரியில், கிராமம் என்றால் என்ன வென்று ஒரு தரம் சிந்தியுங்கள். மனிதர்கள் கூட்டாக வாழும் பொழுதுதான் கிராமம் தோன்றுகிறது. அப்படி என்றால் அங்கு மனிதர்கள் உண்டு என்பதாகிறது. ஆனால், "இங்கு மனிதர் யாரும் கிடையாது' என்று கூறியது எனோ? விஜயனின் நண்பன் சென்ற இடத்தில் நாயுருவில் இருந்த யகூஷிணியின் எஜமானி குவண்ண என்பவள் ஒரு மரத்தடியில் சந்தியாசினியைப் போல் நூல் நூற்றுக் கொண்டு அமர்ந்திருந்தாள். இதில் கட்டாயம் ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம். உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது. இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது. Part: 79 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 13: This is about the magical event of Mahinda Thera flying to Lanka and not about any reliable historical events that took place in Lanka. Mahinda is alleged to be the son of the King Asoka. He is therefore a human and could not have had the gravity defying capability of flying. Mahinda came flying to Lanka is a hoax, as described above. There is no mention of Mahinda in any of the Indian sources. Mahinda, his alleged sister Samghamitta, her son Sumana, their mother Devi, and the Third Buddhist Council have no synchronism with any historical or literature documents in India, and they all are fictitious characters invented by the monkish authors to meet their nefarious agenda. The name Samghamitta means ‘friend of Sanga’. Asoka was not a Buddhist when Samghamitta was born, and therefore he would not have named his daughter thus. Furthermore, Samghamitta is not an exclusive name for females, for a Thera with the same name came from the further coast, 37 - 2. It is alleged that the Buddha foretold that Mahinda would convert Lanka to the faith, 13 - 15 to 16. This foretelling is an abject lie as the Buddha was a human, and he could not have had any foretelling capability. The Buddha also prophesied at his deathbed about the arrival of Vijaya to Lanka, 7 – 3 to 4. Lord Buddha was a very good person, but it does not mean that he had the divine power of foretelling mental faculty. Mahinda, however, as per the narrative flew to Lanka and landed on the Missaka mountain. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 79 B தொடரும் / Will follow துளி/DROP: 1967 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79A] https://www.facebook.com/groups/978753388866632/posts/33091560820492472/?
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
"அனைவருக்கும் எம் இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!" --- உங்கள் "2026" பயணத்தை இனிதே ஆரம்பித்து நீங்கள் கொண்ட கனவுகள் பலிக்கவும் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவும் என் முழுமனத்தோடு உங்களை வாழ்த்துகிறேன்!. வீடும் நாடும் இனிய எனின் எம் வாழ்க்கையும் இனிதே என்பதை இந்த புது ஆண்டு 2026 இல் உணருங்கள்!!. "யாண்டுபல வாக , நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்க; அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே." [புறநானூறு பாடல் 191 - பாடியவர் - பிசிராந்தையர்] “தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன் ---- “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.” புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான். அப்படியான ஒரு வாழ்வு, அப்படியான ஒரு நாடு உங்களுக்கு கிட்டட்டும் . 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பண்டைய தமிழ் பாடலில் இருந்து உங்களுக்கு ஒரு வாழ்த்து [மதுரைக் காஞ்சி / ஆசிரியர் - மாங்குடி மருதனார்] "முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பல் மீன் நடுவண் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே" "கடலின் நடுவில் சூரியன் பிரகாசிப்பது போலவும், பல நட்சத்திரங்களுக்கு நடுவில் சந்திரன் ஒளிர்வது போலவும், செழித்த/மலர்ந்த உறவினர்களுடன் பிரகாசமாக, அழகாக விளங்கி, அழகிய அணிகலன்களை அணிந்த பெண்கள் பொற்கிண்ணங்களில் வாசனை நிறைந்த தேறலை (மதுவை) ஊற்றித் தர, நீ தினமும் மகிழ்ச்சியுடனும் இனிமையுடனும் வாழ்க; நீ பெற்ற இந்த நல்ல வாழ்க்கையை (ஊழியை) மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ்வாயாக!" அன்புடன் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid033aDU7J4b39aeWz2DtwETREGGLkaQYRJhoehLLdX5cqkjeVtzeWn82Dy8d1utaRwVl?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 78 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 78 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை சில இலங்கை புராணக்கதைகள் கூறுவது போல், மகேந்திரன் [மகிந்த] மாயமாக பறக்காமல் தென்னிந்தியாவில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணம் செய்ததாக இந்த கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் மகேந்திரன் [மகிந்த] துறவியானதற்கான காரணம் என்னவென்றால்: பண்டைய இந்திய மரபில், ஒரு மன்னர் இறந்தால், அவரது மூத்த மகன் அரியணையைப் பெறுவார் என்றும் இளைய சகோதரர்கள் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்றும் பொதுவாக அவர்கள் துறவிகளாக மாற வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்கள் தங்கள் தாயகத்தில் தங்க அனுமதிக்கப் படுவதில்லை. எனவே தான் அசோகரின் ஒன்றுவிட்ட சகோதரரான மகேந்திரன் [மகிந்த], இந்த மரபைப் பின்பற்றி ஒரு புத்த துறவியானார். முக்கிய குறிப்புகள்: தென்னிந்தியாவிலிருந்து புத்த மதம் படிப்படியாக இலங்கைக்கு பரவியது. பௌத்தம் தமிழ்ப் பகுதிகளுக்கும் இலங்கைக்கும் பரவுவதில் பேரரசர் அசோகரும் அவரது குடும்பத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். 7 ஆம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் புத்த மதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது, அதே நேரத்தில் இந்து மதமும் சமண மதமும் மிகவும் பிரபலமாக இருந்தன. அசோகரின் சகோதரர் மகேந்திரன் [மகிந்த], இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகளில் அல்ல, தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு பயணம் செய்திருக்கலாம். மேலும், தமிழ் நாடுகள் பேரரசர் அசோகரின் ஆட்சியிலிருந்து சுதந்திரமாக இருந்தன. மேலும் மேற்கூறிய மரபின்படி அசோகரின் தம்பி மகேந்திரன் [மகிந்த] தமிழ் நாட்டை வசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது இயல்பானது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாடு அல்லது மகதத்தில் (Magadha) பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தின் போது சமண மதம் தமிழ்நாட்டிற்கு வந்தது. மன்னர் சந்திரகுப்த [Chandragupta] கூட ஆட்சியைத் துறந்த பிறகு சமணராகி, மைசூருக்கு [Mysore] வந்து அங்கு இறந்தார். புத்த மதம் சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் நாட்டிற்கு வந்து, கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை கணிசமான காலம் நிலவியது. கி.பி 300 முதல் கி.பி 600 வரையிலான தென் இந்தியா தமிழ் மன்னர்களின் வரலாறு எதுவும் இல்லை. அதுமட்டும் அல்ல, பொது சகாப்தத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குக் கூட தமிழ் மன்னர்களின் விவரங்கள் தெளிவாக இல்லை. களப்பிரர் (Kalabhra dynasty) தென்னிந்தியாவை ஆண்ட அரசர்கள் ஆவார்கள். இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய பொ.ஊ. 250 – பொ.ஊ. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சைன சமயம், பௌத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்று பொதுவாக நம்பப்படுகிறது? இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. அதன் பின், ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் போர்க்குணமிக்க சைவ மதம் [militant Saivism] நிலவியது. கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கரர் அந்தக் காலகட்டத்தில் தனது பிராமண மத வடிவத்தைப் [Brahminical religion] பரப்பினார். ஏழாம் நூற்றாண்டில், சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறிய பாண்டிய மன்னரின் ஆட்சியில் சமண மதம் கடுமையான அடியைச் சந்தித்தது. அவரது பெயர் மாறவர்மன் அரிகேசரி [Maravarman Arikesari]. அரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவார். பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவர் தன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டார். கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றார். திருவிளையாடல் புராணத்தில் இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்று பெரிய சின்னமனூர்ப் பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளான். இந்த மன்னர் ஒரு வெறித்தனமான குணம் [fanatical character] கொண்டவர், முதலில் சமணத் துறவிகளின் தூண்டுதலின் பேரில் சைவர்களை சித்திரவதை செய்தார். பின்னர் அவர் சைவ மதத்திற்கு மாறி சமணர்களுக்கு எதிராக சமமான தீவிரத்துடன் இருந்தார். இவர் சுமார் எட்டாயிரம் சமணத் துறவிகளை உயிருடன் தூக்கிலிட்டார். இது மற்ற அனைத்து மதப் பின்பற்றுபவர்களுக்கும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியிருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பௌத்தர்கள் பெருமளவில் இலங்கைக்கு இடம்பெயர்ந்திருக்க வேண்டும், இருப்பினும், இந்த துயரமான மரணத்திற்குப் பிறகும் சமணர்கள் நீண்ட காலம் உயிர் பிழைத்தனர். மகாவம்சத்தில் தமிழர்களுக்கு எதிரான சார்பு இதனால்த்தான் தோன்றியிருக்கவும் ஒரு வாய்ப்பு உண்டு, ஆனால் தீபவம்சத்தில் வெளிப்படையாகக் அப்படி ஒன்றும் கூறப்படவில்லை. இந்தியாவில் மகாயான பௌத்தம் பரவுவதை கடுமையான தேரவாத பௌத்தத்தால் தாங்க முடியவில்லை என்பதும் இதற்குக் இன்னும் ஒரு காரணமாக இருக்கலாம். சமையலில் இருந்து வரும் சூடான புகையை தினமும் வெளிப்படுத்தாவிட்டால் ஓலை கையெழுத்துப் பிரதிகள் நீண்ட காலம் நிலைத்திருக்காது. புத்த துறவிகள் பொது மக்கள் கொடுக்கும் பிச்சையில் உயிர்வாழ வேண்டும் என்பதால் மடங்களில் சமையல் நடைபெறுவதில்லை. அதனால்த் தான் துறவிகள் எப்போதும் மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார்கள். இதனால் அவர்கள் பிச்சை எடுக்கத் தேவையில்லை. சூடான புகைக்கு ஆளாகாத ஓலை கையெழுத்துப் பிரதிகள் நூற்று முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. குறிப்பாக சூடான ஈரப்பதமான சூழலில். எனவே, ஓலை கையெழுத்துப் பிரதிகள் நொறுங்கி நொறுங்குவதற்கு முன்பு அவற்றை கட்டாயம் ஒவ்வொரு நூற்று முதல் நூற்றைம்பது ஆண்டுகளில் நகலெடுக்க வேண்டும். இந்த தருணத்தில் தான் மூலப் பிரதிகளுக்குள் தமக்கு வேண்டியவற்றை செருகவும் மூல பிரதியில் உள்ளவற்றை சிதைக்கவும் சரியான நேரமாக இருந்துள்ளது. இந்தச் செயல்பாட்டில் தான் தமிழ் எதிர்ப்பு உணர்வு மெல்ல மெல்ல மெதுவாக அங்கு சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்ற வாதமும் இன்னும் அறிஞர்களிடம் உண்டு. Part: 78 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 The earlier mentioned interesting passage, which shows how vivid the traditions of Asoka and his brother continued to be in the south after the lapse of nine centuries, and locates Mahendra in a monastery to the south of the Kaviri, within easy reach of Ceylon, goes a long way to support the hypothesis that Mahendra really passed over to the island from a southern port on the mainland. That hypothesis is much more probable than the Ceylonese story that he came by aerial flight through the air, ‘as flies the king of swans.’ Nor is it likely that his first discourse converted the king and forty thousand of his subjects…’ Unquote Quote from page 51 ‘The assumption of monastic robe by the emperor’s younger brother, or rather half brother on the mother’s side, was quite in accordance with the precedent and rule. ‘According to the laws of India, says Chinese historian, ‘when a king dies, he is succeeded by his eldest son (Kumararaja); the others leave the family and embrace a religious life, and they are no longer allowed to be in their native kingdom’. Unquote Tamil countries were independent of the Emperor Asoka’s rule and it was natural that Mahendra, Asoka’s younger brother elected to reside in Tamil Nadu as per the above-mentioned tradition. Jainism came to Tamil country around third century B. C. during a twelve-year famine in Magadha. Even the King Chandragupta became a Jain after abdicating, and came to Mysore to die. Buddhism came to Tamil country about a century later and prevailed for a considerable time, till about sixth century A. D. There is no history of Tamil kings from 300 A. D. to 600 A. D. The details of Tamil kings are sketchy even for the first three centuries of the Common Era. Around sixth to seventh century, militant Saivism came to exist in the south India. Adi Sankarar from Kerala propagated his form of Brahminical religion around that time. Around the seventh century, Jainism suffered a severe blow under the rule of a Pandyan king who converted from Jainism to Saivism. His name is Maravarman Arikesari, but he is also known as Koon Pandyan and Sundarapandiyan, and he reigned from 641 A. D. to 670 A. D. This king was a fanatical character and tortured Saivists first at the instigation of Jain monks. Then he was converted to Saivism and went against Jains with equal vehemence. He impaled about eight thousand Jain monks alive, and this must have sent shock waves through all other religious followers. The Buddhists must have shifted to Ceylon en masse during this time, however, the Jains survived for a long-time even after this tragic impaling. That is the anti Tamil bias in the Mahavamsa, which is not explicit in the Dipavamsa. It could also be that rigid Theravada Buddhism could not stand the spread of Mahayana Buddhism. Ola manuscripts will not survive long if it is not daily exposed to the warm smoke from cooking. No cooking takes place in monasteries as monks are supposed to survive on alms given by the common folks. That is why monks are always trying to win favour of kings and rulers so that they need not to go around for alms. Ola manuscripts not exposed to warm smoke would not last more than one hundred to one hundred and fifty years, especially in the warm moist environment. Ola manuscripts need to be copied before they become friable and crumbling. This is the opportune time to insert and corrupt the originals. The anti-Tamil sentiment must have slowly built up in this process. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 79 தொடரும் / Will follow துளி/DROP: 1966 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 78] https://www.facebook.com/groups/978753388866632/posts/33076511595330728/?
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
மேலும் நான் இலங்கை கடற் தொழில் அமைச்சில் [கொழும்பு] கடல் பொறியியல் விரிவுரையாளராக சில ஆண்டு கடமையாற்றிய பொழுது, 1983 க்கு முதல், அங்கு, குறுநகரில் அமைந்துள்ள கடல் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சில தடவை போய் உள்ளேன். அங்கு பயிற்சி, குருநகர் மீன்பிடித்தல் மற்றும் சிறிய படகுகள் தங்கி இருக்கும் ஜெட்டிகளில் இருந்து புறப்பட்ட மீன் பிடி படகுகளில் தான் நடந்தன - அங்கு பெரிய கப்பல்கள் அல்லது கிரேன்கள் இருக்க வில்லை என்பது நான் நேரடியாக பார்த்தது