Everything posted by kandiah Thillaivinayagalingam
-
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'
இரு பாடல்கள் பகுதி 5 இல் தவறிவிட்டன. அவை இங்கே இணைக்கப்படுகிறது கீழே [1] ஜெயா கேட்டாள், “தாத்தா... மனிதர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள், ஆனால் விலங்குகள் ஒன்றாக வாழ்கின்றன? விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம் விலங்குகளை ஒவ் வொன்றாக அடக்கிஅடக்கி குப்பை மனிதர்கள் செழிக்கசெழிக்க விட்டோம்! ஆசையில் மூழ்கி அசிங்கத்தை பூசி புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக பாதை தவறி அழுக்கை சுமந்து மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே! தாத்தா கிசுகிசுத்தார், “ஏனென்றால் விலங்குகள் பேராசையால் வாழ்வதல்ல, சமநிலையால் வாழ்பவை.” [2] ஆனால் இந்த மீனவர்களின் வறுமை, தாத்தாவுக்கு நன்றாக நினைவிருந்தது, அவர்களின் வாழ்க்கை சுற்றுலாப் பயணிகளுக்காக கற்பனையான தோற்றம் ஒன்றால் இங்கு உருவாக்ப் பட்டுள்ளது [Romanticized] என்பது தான் அது. ஆனால் அவர்கள் பசியால் நிறைந்தவர்கள் என்பது பார்வையாளர் பலருக்குப் புரியாது. மரக் கம்பம் விடிவெள்ளி நமக்கு விரி கடலே பள்ளிக்கூடம் - ஐலசா குட்டி மீன்கள் நம்தோழன் - ஐலசா கொக்காய் ஒற்றைக்காலில் - ஐலசா அருமைமேகம் நமதுகுடை - ஐலசா பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசா பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா பிடிக்கும் மீன்கள் நம்உணவு - ஐலசா “கடலில் திமிங்கலங்கள் சுதந்திரமாக உள்ளன,” தாத்தா தன் பேத்தியிடம் கூறினார், “ஆனால் இங்குள்ள மக்கள் அனைவரும் இன்னும் சுதந்திரமாக இல்லை.”
-
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"
பொய்களையும் புனைவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டதாக சுட்டப்படும் மகாவம்சம் யுநெஸ்கோவால்(UNESCO) 2023இல் அனைத்துலக பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. வேதனைக்குரியது அதனாலதான் எனது மூன்ர்றவது விரிவான கட்டுரை இப்ப தொடர்ந்துகொண்டு இருக்கிறது தமிழிலும் ஆங்கிலத்திலும் [1] மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / 44 parts / ஏற்கனவே பதியப்பட்டுள்ளது [2] "The truth & false in Mahavamsa and the historical & scientific evidences" / 32 Parts / ஏற்கனவே பதியப்பட்டுள்ளது [3] "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English /144 - 146 parts / 34 பகுதி மட்டும் இன்றுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது , மற்றவை தொடரும் / இது மேலும், விரிவாக்கப்பட்ட, ஓழுங்குமுறையில் அமைந்த கட்டுரையாகும் நன்றி
-
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 05 பகுதி: 05 - குமண தேசிய பூங்கா (Kumana National Park) & வெலிகம மற்றும் மிரிஸ்ஸா அருகம் விரிகுடாவிலிருந்து தெற்கே முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில், காட்டுக்குள் அமைதியாக குமனா தேசிய பூங்கா இருந்தது. இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த பாதுகாக்கப்பட்ட வனவிலங்குப் பகுதி, சிறுத்தைகள் மற்றும் பறவைகளுக்கு பெயர் பெற்றது. இப்பூங்கா, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பரந்து விரிந்து மற்றும் யால தேசிய பூங்காவிலிருந்து கும்புக்கன் ஓயாவால் [Kumbukkan Oya] பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. "யானை! யானை!" என்று இசை கத்தினான், ஆனால் எதுவும் எங்கும் கண்ணில் படவில்லை. "யானை அல்ல. அது பறவைகள்!" என்று தன் சகோதரனைத் ஜெயா திருத்தினாள். ஜெயா தன் குறிப்பேட்டை [notebook] நேராக்கினாள், "நான் அறிவியல் தரவுகளைப் இங்கு பதிவு செய்வேன்." என்றாள். பெலிகன்கள் [கூழைக்கடா / pelicans], வர்ணம் பூசப்பட்ட நாரைகள், மயில்கள் மற்றும் சாம்பல் நிற நிழல்கள் போல நகரும் யானைக் குடும்பத்துடன் அங்கு இருந்தது. ஆனால் இந்தக் காடும் வரலாற்றுடன் எரிந்து கொண்டிருந்தது. 1985 முதல் 2003 வரை போரினால் மூடப்பட்டது. பின்னர் 2004 சுனாமியில் மூழ்கியது செங்கால் நாரை [ஃபிளமிங்கோக்கள் / Flamingos] இன்று மறைந்துவிட்டன, மக்கள் ஓடிவிட்டனர். ஜெயா கேட்டாள், “தாத்தா... மனிதர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள், ஆனால் விலங்குகள் ஒன்றாக வாழ்கின்றன?” தாத்தா கிசுகிசுத்தார், “ஏனென்றால் விலங்குகள் பேராசையால் வாழ்வதல்ல, சமநிலையால் வாழ்பவை.” தூரத்தில் ஒரு மயில் நடனமாடியது, அதன் இறகுகள் ரத்தினங்களைப் போல மின்னின. குழந்தைகள் சிரித்தனர். ஒரு கணம், காடு கூட சிரித்தது. தாத்தா மெல்ல சிரித்தார். மூன்று பேரப்பிள்ளைகளும் அது என்ன செங்கால் நாரை என்று கேட்டனர். தாத்தாவுக்கு சத்தி முத்திப் புலவர் ஞாபகம் வந்தது. அது மட்டும் அல்ல, அந்த பாடல் பாடும் பொழுது, அவரினதும் அவரின் மனைவியின் நிலையும், அங்கு வாழ்ந்த மக்களையும் காட்டுவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாராய்! நாராய்! செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ! நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே. சத்திமுத்தம் என்ற ஊரில் வாழ்ந்து வரும் புலவர், பாண்டி நாட்டை அடையும் போது பெருமழையில் மாட்டிக் கொண்டார். உடம்பை மூடி போர்வையின்றிக் குளிரால் வாடினார். தம் விதியை நொந்து, தம் மனைவி பிள்ளைகளை எண்ணி வருந்தினார். அப்போது வானில் செல்லும் நாரையைப் பார்த்துத் தம் நிலையைப் பாடலாகப் பாடினார். இங்கே, பனங்கிழங்கைப் பிளந்தது போல பவளம் போன்று செந்நிறமுள்ள கூர்மையான வாயையும், சிவந்த காலையும் உடைய நாரையே என்று கூறி, மழையினால் நனைதற்குரிய சுவரோடு கூடிய கூரை வீட்டில், கனைகுரல் பல்லி நற்சகுனமாக ஒலிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற என் மனைவியைப் பார்த்து, என் நிலையைக் கூறுவாயாக! என்று விட்டு நிலைமையைச் சொல்லி, பெட்டிக்குள் அடங்கியிருக்கும் பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்ற வறுமையுடைய உனது கணவனைப் பார்த்தோம் என்று சொல்லுங்கள் என்று முடிக்கிறார். தெற்கே, வெலிகமை அல்லது வெலிகாமம் (Weligama) கடற்கரை மிகவும் பிரபலமான சர்ஃபிங் [surfing] இடங்களில் ஒன்றாகும், அங்கு நாள் முழுவதும் அலைகளைப் பிடிக்கலாம். அதேநேரம், அதிக அனுபவம் வாய்ந்த சர்ஃபராகளுக்கு [surfer], மிடிகம கடற்கரையின் அலைகள் மிகவும் சவாலானதாக இருக்கும். தாத்தாவும் குழந்தைகளும் அங்கு சென்ற பொழுது, வெலிகமவின் ஸ்டில்ட் மீனவர்கள் [கோல் மீன்பிடித்தல் / stilt fishermen] கடலில் சிலைகள் போல அமர்ந்திருந்தனர். இது, இலங்கையின் கடலோரத் தமிழர் மற்றும் சிங்கள மீனவர்கள் பயன்படுத்திய பழைய சுவாரஸ்யமான பாரம்பரிய மீன்பிடி முறைகளில் ஒன்று ஆகும். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைமுறைக்கு வந்ததாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. இங்கு மீனவர்கள் கடற்கரைக்குள் சிறிது தொலைவில், கடல்நீரில் உறுதியாகப் பதித்துக் கட்டப்பட்ட நீண்ட மரக்கம்பம் மீது ஏறிச் சின்ன மேடையில் உட்கார்ந்து, அங்கிருந்து தூண்டில் மூலம் சிறிய மீன்கள் பிடிப்பதாகும் கலை, “தாத்தா! அவை பறவைகள் போல குச்சிகளில் அமர்ந்திருக்கின்றனர்!” என்று கத்தினான். “குச்சி மனிதர்களே!” என்று இசை அவர்களைக் கூப்பிட்டான் அவர்கள் எப்படி அந்த குச்சியில் தங்களை சமநிலைப் படுத்துகிறார்கள்? நான் என்றாள் விழுந்து விடுவேன்” என்று ஜெயா முகம் சுளித்தாள். மிரிஸ்ஸாவில் மேலும், திமிங்கலங்களைப் பார்க்க பயணம் செய்த அவர்கள், அங்கு, ராட்சத நீல நிற திமிங்கலம் பின்புறம் மேலெழுந்த போது, குழந்தைகள் மூச்சுத் திணறினர். “தத்தா, இது எங்கள் வீட்டை விடப் பெரியது!” என்றான் கலை. இசை கைதட்டினார், “பெரிய மீன்! பெரிய மீன்!” ஆனால் இந்த மீனவர்களின் வறுமை, தாத்தாவுக்கு நன்றாக நினைவிருந்தது, அவர்களின் வாழ்க்கை சுற்றுலாப் பயணிகளுக்காக கற்பனையான தோற்றம் ஒன்றால் இங்கு உருவாக்ப் பட்டுள்ளது [Romanticized] என்பது தான் அது. ஆனால் அவர்கள் பசியால் நிறைந்தவர்கள் என்பது பார்வையாளர் பலருக்குப் புரியாது. “கடலில் திமிங்கலங்கள் சுதந்திரமாக உள்ளன,” தாத்தா தன் பேத்தியிடம் கூறினார், “ஆனால் இங்குள்ள மக்கள் அனைவரும் இன்னும் சுதந்திரமாக இல்லை.” ஜெயா தாத்தாவின் முகத்தை பார்த்தபடி, அவரின் கையை இறுக்கமாகப் பிடித்தாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 06 தொடரும் கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/31905432382438661/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34 B பகுதி: 34 B / முடிவுரை / 'சிங்கள மொழி எப்போது தொடங்கியது?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] சிங்கள மொழியானது, இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்தோ-ஆரிய மொழிப்பிரிவைச் சார்ந்த மொழியாக இன்று வகைப்படுத்தப்பட்டுள்ள மொழியாகும். சிங்கள மொழியைப் பொறுத்தவரை, அதன் பிராகிருத எழுத்துகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அளவுக்குப் பழைமையானது என்று சொல்லப்பட்டாலும், அதற்கான வலுவான ஆய்வுச் சான்றுகளைக் எங்கும் காணமுடியாதுள்ளது. சிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழைமையான இலக்கியமானது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரியது என்று நம்பப்படுகிறது. அதற்க்கு முன் ஒன்றுமே இன்னும் அறியப்படவில்லை என்பதே உண்மை. ஆகவே, மகாவம்சத்தின், சிங்கள இனத்தின் தோற்றத்துக்கும், அறிவியல் ரீதியான மொழியின் தோற்றத்துக்கும் இடையில் பாரிய இடைவெளிகளுண்டு. ஆகவே, கி பி 9 ஆம் நூற்றாண்டு, பிராகிருதத்திலிருந்து உருவான எலு மொழியில் இருந்து சிங்களம் ஓரளவு முழுமையாக உருவானது. இந்த எலு மொழியின் வடிவம் கி.பி 200 வரை இருந்தது. அதன் பின், 3 ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை, இந்த மொழி தொல் - சிங்களம் [Proto-Sinhalese] என்று அறியப்பட்டது. எனவே, சிங்களத்தின் ஆரம்ப வடிவம், இந்த காலத்தில், பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டது. இன்று நாம் காணும் சிங்கள வடிவத்தை, இந்த வடிவம் நாளடைவில் திடப்படுத்தியன என்று கூறலாம். 4 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தொல் - சிங்கள எழுத்து வடிவம் கணிசமாக மாறியது. 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை, இடைக்கால கட்டத்தில் சிங்கள மொழி மேலும் திடப்படுத்தப்பட்டது . நவீன சிங்கள மொழி 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக பல மொழியியலாளர்களால் கருதுகிறார்கள். சிங்களம் இன்று தமிழ் உட்பட பல மொழிகளிலிருந்து வார்த்தைகளை கடன் வாங்கியுள்ளது. இதன் விளைவு என்னவென்றால், சிங்களம் இந்தோ-ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தது என்பதான ஒரு விவாதத்தின் முடிவுக்கு வழிவகுத்தது எனலாம். அது நீண்ட காலமாகத் தமிழின் தாக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. மொழியியல் ஆய்வுகளின்படி, சிங்கள சொற்களஞ்சியத்தின் கணிசமான பகுதியானது தமிழில் இருந்து பெறப்பட்டது. குறைந்தது 10% சிங்கள சொற்கள் தமிழ் தோற்றம் கொண்டவை என்று மதிப்பிடுகிறது. இது இலங்கையில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே உள்ள நெருக்கமான வரலாற்று தொடர்புகளை பிரதிபலிக்கிறது; இருப்பினும், பகுப்பாய்வு முறை மற்றும் மூலத்தைப் பொறுத்து சரியான சதவீதம் மாறுபடலாம். தமிழ் மொழியுடனான நெருங்கிய ஆரம்ப தொடர்பும் மற்றும் சிங்கள சமூகத்தில் தமிழர்களை சிங்களமயமாக்கியது [இணைத்துக் கொண்டது] பல தமிழ் மூலச் சொற்களை சிங்கள மொழியில் ஏற்றுக்கொள்ள உதவியது என்று எண்ணுகிறேன். இரண்டு இன அயல் மக்கள், அன்றாடம் பொருள் பண்டங்களை பரிமாறிக்கொள்ளும் சூழ்நிலையில், மொழிச் சொற்களில் கடன் வாங்குவது இயல்பாக எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது உறவுச் சொற்கள், உடல் உறுப்புச் சொற்கள், மற்றும் சாதாரண நடவடிக்கைச் சொற்கள் போன்றவை கடன் வாங்கப்படுகின்றன. அப்படியே, இரண்டாவதாக, சொற்களஞ்சியம் சார்ந்த சொற்களுடன் [பெயர்ச்சொற்கள், உரிச்சொற்கள் மற்றும் வினைச்சொற்கள்], இடைச்சொற்களும் கடன் வாங்கப்பட்டுள்ளன. சிங்கள சொற்றொடரியல் அல்லது சொல்வரிசை மீது தமிழ் ஏற்படுத்திய தாக்கம் நெருங்கிய தொடர்பை மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையிலான இருமொழி பேசுபவர்களின் இருப்பையும் மற்றும் அதிக அளவு இனக்களுக்கிடையான கலப்பையும் மற்றும் கலப்பு திருமணத்தையும் உண்டாக்கியிருக்கிறது எனலாம். நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 35 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34 B https://www.facebook.com/groups/978753388866632/posts/31886481367667096/?
-
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 04 பகுதி: 04 - பாசிக்குடா & அருகம் விரிகுடா (Arugam Bay) பாசிக்குடா (Pasikudah) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்றும் ஆகும். மேலும் அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, அதாவது, கரையிலிருந்து நெடுந்தொலைவு வரைக்கும் படிப்படியாக ஆழம் அதிகரித்துச் செல்லும் சிறப்புடன் எழில் மிக்க இயற்கை கடற்கரையாக விளங்குகிறது. முருகைக் கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற, நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” [Cabana] என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புகளாகும். இந்த சிறப்புமிக்க பாசிக்குடாவிற்கு பயணம் குறுகியதாக இருந்தது, மேலும் கடற்காயல் அல்லது வாவி [lagoon] ஒரு பெரிய கண்ணாடியைப் போல நீண்டிருந்தது. குழந்தைகள் ஆழமற்ற நீரில் ஓடி, அலைகள் தங்கள் கணுக்கால்களை முத்தமிட சிரித்தனர். “தாத்தா, பார், நான் தண்ணீரில் நடக்க முடியும்!” என்று கலை முழங்கால் ஆழத்தில் நின்று கத்தினான். இசை தனது காற்சட்டை நனைந்து நீர் சொட்டும் மட்டும் கடல்நீரை அள்ளித் தெளித்து விளையாடினான். ஒரு விஞ்ஞானி போல் தீவிரமாக இருந்த ஜெயா, கடற் சிப்பிகளை சேகரித்தாள். “நான் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்குகிறேன்,” என்று அவள் தன் இரண்டு தம்பிக்கும் அறிவித்தாள். தீரா அலைகளின் ஓயா ஓசையினால் தீண்டித் தீண்டிச் செல்லும் அலைகளால் குளிர்ந்து நடுங்கி சிலிர்த்து நடக்கிறான் வெள்ளை மணலில் கோட்டை கட்டுகிறான்! நிமிர்ந்து எழும் கடலலை அருகே பிரிய மனமின்றி கடலில் நீந்துகிறாள் சிப்பிகள் சோகிகள் தேடி எடுத்து மாலை ஒன்று செய்து மகிழ்கிறாள்! ஆனால் பாசிக்குடாவின் மணல் ஒரு காலத்தில் இரத்தத்தால் நனைந்திருந்தது. 1983 முதல் 2009 வரை, போர் இந்த சொர்க்கத்தை ஒரு போர்க்களமாக மாற்றியது. 2009 க்குப் பிறகு, சுற்றுலா வளர்ந்தது. ஹோட்டல்கள் காளான்களாகப் பெருகின, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்தார்கள். ஆனால் உள்ளூர்வாசிகள் பலர் இன்னும் உடைந்த குடிசைகளில் வசித்து வருகின்றனர் என்பது இன்றைய நிலையாகும். “தாத்தா, ஏன் பெரிய ஹோட்டல்களில் விளக்குகள் ஏராளம் உள்ளன, ஆனால் அந்த சிறிய வீடுகள் இருட்டாக இருக்கின்றன?” என்று ஜெயா கேட்டாள். தாத்தா பெருமூச்சு விட்டார். “ஏனென்றால் சில நேரங்களில் பணம் [உறவுப்] பாலங்களுக்குப் பதிலாக, சுவர்களைக் கட்டுகிறது. [“Because sometimes money builds walls, not bridges.”]” என்றார். ஆனால் அலைகள் பழைய துயரங்களை மறைத்து, பல இன மக்களை ஒன்றிணைக்கும் உறவுப்பாலமாகத், தங்கள் சிரிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தன. சுமார் 1600 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள பிரமிக்க வைக்கும் கடற்கரையைக் கொண்டுள்ள அருகம் விரிகுடா எங்களை அலைமிதவைப் பலகையுடனும் [surfboards] சிரிப்புடனும் வரவேற்றது. இது ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அருகம் விரிகுடா குரங்குகள், யானைகள் மற்றும் முதலைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகளால் சூழப்பட்டிருப்பது இன்னும் ஒரு அதிர்ஷ்டம் ஆகும். இங்கு “சர்பிங்” [Surfing] எனப்படும் கடலில் சறுக்கு விளையாட்டு பெறும்பாலும் விளையாடப்படுகிறது. அருகம் விரிகுடாவிற்கு வருகை தருவதற்கு சிறந்த நேரமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதி அறிவிக்கபட்டுள்ளது. அருகம் பகுதியில் பல பெரிய விரிகுடாக்கள் உள்ளன அதில் ஒன்று தான் “எலிபன்ட் பாயிண்ட்” [Elephant point] ஆகும். இந்த வளைகுடாவின் முடிவிலுள்ள இந்த பாறை தமிழில் “யானைப்பாறை“ என்பார்கள். குடாவின் முழுப் பகுதியையும் இங்கு நின்று பார்க்கலாம். இரண்டு மணி நேர தடாகத்தில் சபாரி (Safari) செல்வது அருகம் விரிகுடாவில் செய்ய வேண்டிய பிரபலமான விடயங்களில் ஒன்றாகும். இங்கு யால தேசியப் பூங்கா அருகம் விரிகுடாவிற்கு மிக அருகில் இருப்பதால் சிறுத்தை போன்ற வனவிலங்குகளைக் அங்கு காணக்கூடியதாகவும் இருக்கிறது. கலை ஒரு அலைமிதவைப் பலகையை நோக்கி கைகாட்டி, “தாத்தா! அவன் கடலில் பறக்கிறான்!” என்று கத்தினான். “அது அலைச்சறுக்கு" அல்லது "கடல்சறுக்கல்", அது பறப்பதற்கு அல்ல, அங்கு சமநிலை வேண்டும் சறுக்குவதற்கு ” என்று சரிசெய்தாள் ஜெயா. இசை, “நானும் கடல்சறுக்கல் செய்கிறேன்!” என்று அறிவித்து, நீரினால் கழுவப்பட்ட ஒரு பலகையில் அமர்ந்தது இருந்தான். பேரப்பிள்ளைகளுக்கு இது வெறும் கடற்கரை மட்டுமல்ல. இது ஒரு சாகச விளையாட்டு மைதானம் ஆகும். எனவே அவர்கள் தாத்தாவின் உதவியுடன், பயிற்றுனர்கள் ஊடாக சிறிய சர்ஃப்போர்டுகளை [surfboards] பெற்றுக் கொண்டனர். “சரி, சிறிய சர்ஃப்பர்களே [surfers], பலகையில் படுத்துக் கொள்ளுங்கள், உங்கள் கைகளால் துடுப்பு போடுங்கள், பின்னர் அலை வரும் போது எழுந்து நிற்கவும்,” என்று பயிற்றுவிப்பாளர் விளக்கினார். ஜெயா தீவிரமாக தலையசைத்தார். கலை, “அலைகள் கடிக்குமா?” என்று கேட்டான். கடற்கரை முழுவதும் சிரிப்பில் மூழ்கியது. ஜெயா முதலில் சென்றாள். அவள் மூன்று வினாடிகள் எழுந்து நின்று, ஒரு பெரிய நீர் தெறிப்புடன் [splash] தண்ணீரில் விழுந்தாள். “தாத்தா, பார்த்தீர்களா? மூன்று வினாடிகள்!” என்று பெருமையுடன் கத்தினாள். கலை அவளைப் பின்பற்றினான், ஆனால் நிற்காமல், அவன் படுத்துக் கொண்டே ஒரு சூப்பர் ஹீரோ போஸ் [superhero pose] கொடுத்தான். “பாருங்க, நான் சர்ஃபிங் சூப்பர்மேன் [Surfing Superman!]” என்று கத்திவிட்டு, நேராக ஆழமற்ற நீரில் சறுக்கி விழுந்தான். குட்டி இசை ஒரு சிறிய லைஃப் ஜாக்கெட்டை [life jacket] அணிந்து கொண்டு, பலகையில் ஏறினான் - ஆனால் சர்ஃபிங்கிற்குப் [surfing] பதிலாக, அவர் ஒரு குழந்தை புத்தரைப் போல கால்களை மடித்து உட்கார்ந்து, அலை அவனை உலுக்கும் ஒவ்வொரு முறையும் கைதட்டினான். இதை பார்த்து சிரிப்புடன், கரையில் இருந்த கூட்டத்தினர் ரசித்தனர். பிறகு, குழந்தைகள் சிரித்துக் கொண்டே கத்தினார்கள்: “தாத்தா, இனி உங்கள் முறை!” ஆனால், தாத்தா மறுப்பு தெரிவித்தார், “ஐயோ, என் சர்ஃபிங் [surfing] நாட்கள் என்றோ முடிந்துவிட்டன.” ஆனால் பயிற்றுவிப்பாளர் எப்படியோ அவருக்கு ஒரு பெரிய பலகையைக் கொடுத்தார். அவர் படுத்து, துடுப்பு போட முயன்றார், நிற்க முயற்சித்த போது - கடலில், தண்ணீரைச் சிதறி விழுந்தார்! ஜெயா சிரித்தார். கலை கைகளைத் தட்டி, “தாத்தா இலங்கையின் வேகமான டைவர் [diver]!” என்று கத்தினான். இசையும் மகிழ்ச்சியுடன் கத்தினான், ஒவ்வொரு முறை விழும்போதும் “தாத்தா பூம்! [boom] தாத்தா பூம்! [boom]” என்று திரும்பத் திரும்பச் சொன்னான். அலை சறுக்கு ஆனந்தம் ஆனந்தமே கடலில் பறக்கும் பறவை அதுவோ மேகத்தின் மேல் மிதப்பது போல பூரிப்பு ஒன்று ஆட்கொள்கிறது தாயே! இன்ப ஊற்று உள்ளத்தில் பாய சக்தி பாய்ந்து ஆன்மாவை நனைக்க உப்புச் சுவை நாவில் கரைய ஆழி சொர்க்கம் இன்பம் இன்பமே! அருகம் விரிகுடா உலகப் புகழ் பெற்றது, ஆனால் அதன் அடியில் வடுக்கள் உள்ளன. ஒரு காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் அருகருகே அங்கு நெருங்கி வாழ்ந்தன. போர் பலரைத் தள்ளிவிட்டன, அரசியல் அவர்களுக்கு இடையில் எல்லைகளை வரைந்தது. இன்று சுற்றுலா திரும்பியது என்றாலும், அங்கு அனைவரும் மீண்டும் வரவேற்கப்படவில்லை என்பது கவலைக்கு உரியது. அன்று இரவு, கடற்கரை நெருப்பின் அருகே அமர்ந்திருந்த தாத்தா அவர்களிடம் மெதுவாகச், “குழந்தைகளே, இங்குள்ள அலைகள் இனிய இசையையும் அல்லது சங்கீதத்தையும் (music), அதே நேரம் துப்பாக்கிச் சூட்டையும் அன்று கேட்டுள்ளன. ஆனால் இன்று, அவை தாலாட்டுப் பாடல்களாக மட்டுமே ஒலிக்கின்றன. அது இப்படியே இருக்கட்டும், தொடரட்டும்.” என்றார். அவர்கள் மிகவும் களைப்பில் இருந்ததால், தாத்தாவின் மடியில் தூங்கிவிட்டார்கள், கடல் அவர்களை கனவுகளில் ஆழ்த்தியது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/31848062914842275/?
-
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'
எல்லோருக்கும் நன்றிகள்
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 34 A / முடிவுரை / 'முதன்மை இலங்கை நாளாகமம், மகாவம்சம் எப்போது ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது?' பல்வேறு புத்த மடங்களில் [monasteries] மகாவம்சத்தின் பல பதிப்புகள் இருந்தன. ‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali” Edited by Edward Upham, M. R. A. S., F. S. A., February 16, 1833.' என்ற தலைப்பில் ஒரு வெளியீடு இருந்தது. இந்த புத்தகம் அவரது அனுமதியுடன் அரசரின் சிறந்த மாட்சிமைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த புத்தகம், மொழிபெயர்ப்பு மற்றும் அதன் விளக்கத்தில் பல பிழைகள் காணப்பட்டது. அவற்றில், முக்கியமாக, புத்தர் இலங்கையில் பிறந்தார் மற்றும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலை [Adam's Peak] சிகரத்தில் ஒரு மடாலயத்தை கட்டினார் என்று கூறியிருப்பது ஆகும். முதல் அச்சிடப்பட்ட பதிப்பு மற்றும் பரவலாக வாசிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு, 1837 இல் 38 அத்தியாயங்களை மொழிபெயர்த்த இலங்கை நிர்வாக சேவையின் வரலாற்றாசிரியரும் அதிகாரியுமான ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னரின் [George Turnour / (1799–1843)] புத்தகமாகும், வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) மகாவம்ச மொழிபெயர்ப்பானது, துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியின் மகன் சாலிய அல்லது சாலிராஜகுமாரனப் [Saliya or Salirajakumara ] பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. 33 - 1 முதல் 3 வரையிலான மூன்று வசனங்களில், ஒரு அசாதாரண அழகான சண்டாளர் அல்லது வெட்டியான் குடும்பத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்து, அவளுக்கு முன்னுரிமை அளித்து, தனது அரச பதவியைத் துறந்தார் என்று கூறுகிறது. இருப்பினும், உபாம் [Edward Upham (1776–1834)] திருத்திய பதிப்பில், கதை 207 முதல் 216 வரை ஒன்பது பக்கங்களில் கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டும் அல்ல, மேலும் அவரின், திருத்திய பதிப்பில் [‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali'], மகாவன்சியில், மன்னன் மகாசேனனுடன் நின்றுவிடவில்லை. இப்பதிப்பின்படி ,கஜபாகு மன்னன் சோழ நாட்டிற்கு தனியச் சென்று, முன்பு கைதுசெய்து கொண்டு செல்லப்பட்ட தனது மக்களை மீண்டும் அழைத்து வந்தார் என்றும், அதைவிட கூடுதலாக எவரையும் கொண்டு வந்ததாக எதுவும் சொல்லவில்லை. அது மட்டும் அல்ல, 12,000 என்ற ஒரு எண்ணிக்கை ஒன்றையும் குறிப்பிடப்படவில்லை. அவர் நினைவுச் சின்னங்களையும் புத்தரின் பிச்சை பாத்திரத்தையும் [relics and the Buddha’s begging dish] கொண்டு வந்தார் என்று கூறுகிறது. அது மட்டும் அல்ல, இந்நூலில் மகாசேனனைப் பற்றிய விளக்கம் அல்லது கதை வேறாக உள்ளது. விவசாயத்தைப் பெருக்க அவர் நிறையச் செய்திருப்பதாகத் இங்கு சொல்லப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் பல பதிப்புகள் இருந்தன, ஒன்று மற்றொன்றிலிருந்து சிறிது அல்லது கணிசமாக வேறுபடுகிறது என்பதை இந்த கூற்று வலியுறுத்துகிறது. சர் அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் [ Sir Alexander Johnston] இலங்கைத் தீவு முழுவதும் தேடலில் இருந்து அசல் அல்லது மூல கையெழுத்துப் பிரதிகளைப் பெற தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார். இருப்பினும், ஜோர்ஜ் டர்னர் [George Turnour] ஒரு மடாலயத்திலிருந்து ‘காலி’ [‘Galle’] என்ற புத்தர் பிக்கு மூலம் ஒரு பிரதியைப் பெற்று அதில் பணியாற்றினார். காலனித்துவ அரசாங்கம் மேலும் சிறந்த தரமான மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்ய விரும்பி, அதைச் செய்யுமாறு T. W. Rhys Davids ஐக் கேட்டுக் கொண்டது. அதன் விளைவாக, டாக்டர் வில்லெம் கெய்கர் [Dr. Wilhelm Geiger] மொழிபெயர்த்தார். இலங்கை அரசாங்கம் அதை 1912 இல் வெளியிட்டது. தீபவம்சம் & மகாவம்சம் இரண்டும் முதலில் பண்டைய இந்திய மொழியான பாளி மொழியில் எழுதப்பட்டது. மகாவம்சம் ஆங்கிலேயர் காலனித்துவ காலத்தில் 1877 ஆம் ஆண்டு சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது, சிங்கள மொழிக்கு ஏற்றவாறு உரையில் புதுப்பிப்புகள் [Update] செய்யப்பட்டன; இந்த சிங்கள பதிப்பு பெரும்பாலும் "சூழவம்சம்" என்று குறிப்பிடப்படுகிறது. சிங்கள பௌத்த அடையாளத்தை வடிவமைப்பதில் சிங்கள மொழியாக்கம் கணிசமான பங்கைக் கொண்டிருந்தது. இந்த கதை பின்னர் 1935 மற்றும் 1978 இல் புதுப்பிக்கப்பட்டது. தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை, மகாவம்சத்தை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தது ஒன்றும் அறியப்படவில்லை, ஏனெனில் சிங்கள சமூகத்திற்குள் அதன் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக சிங்கள பதிப்பில் முதன்மைக் கவனம் செலுத்தப்பட்டது போலத் தோன்றுகிறது. மகாவம்சத்தின் மூல நூலாகக் தீபவம்சம் கருதப்படுகிறது. என்றாலும் மகாவம்சம் அதிலிருந்து மிகவும் வளர்ந்த மற்றும் விரிவான வரலாற்று நூலாக உள்ளது. Part: 34 / Conclusion / 'When prime Lanka chronicle, Mahavamsa, translated in English & Sinhala?' There were many versions of Mahavamsa in various monasteries. There was one publication in 1833 with the title ‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali” Edited by Edward Upham, M. R. A. S., F. S. A., February 16, 1833. This book is dedicated to the King’s Excellent Majesty with his permission. but it was marked by several errors in translation and interpretation, among them suggesting that the Buddha was born in Sri Lanka and built a monastery atop Adam's Peak. The first printed edition and widely read English translation was published in 1837 by George Turnour, a historian and officer of the Ceylon Civil Service who translated 38 chapters. The Mahavamsa translation by Wilhelm Geiger briefly mentions about the son of Dutthagamani, Salirajakumara, in three verses, 33 – 1 to 3, fell in love with an extraordinary beautiful Candala woman and forsook the kingship in preference to her. However, in the version edited by Upham, the story runs into nine pages, from the page 207 to 216. Furthermore, the Mahavansi does not stop with the king Mahasena. The King Gajabahu went to the Solly country as per this edition but he went alone. He brought back his people, but does not say about the additional people. Even the number 12,000 is not mentioned. He brought the relics and the Buddha’s begging dish. The description of Mahasena is different in this book. He seemed to have done quite a lot to increase the agriculture. This is to emphasize that there were many versions of Mahavamsa, one differing from the other slightly or considerably. Sir Alexander Johnston tried his best to get the original manuscripts from an island wide search. However, George Turnour obtained a copy from one monastery through a priest called ‘Galle’ and worked on it. The colonial government found it wanting, and requested T. W. Rhys Davids to arrange for a better quality translation. Dr. Wilhelm Geiger translated it. The Ceylon Government published it in 1912. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 34 B தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34 https://www.facebook.com/groups/978753388866632/posts/31833890602926173/?
-
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'
சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' பகுதி: 03 - திருகோணமலை திருகோணமலையை நாம் அண்மித்ததும், “தாத்தா! தாத்தா! நாம் இன்னும் வந்துட்டோமா?” என மூத்த பேரன் ஒரு 'சிள்வண்டு' போல துள்ளிக் குதித்தான். அவனது தம்பி, அண்ணாவின் கையை பிடித்து இழுத்து, தனது சிறிய கைகளைத் தட்டிக்கொண்டு: “அண்ணா, கடற்கரை! கடற்கரை! மீன்!” என்றான். மூத்தவள், தன் சூரிய தொப்பியை சரிசெய்து, ஒரு ராணியைப் போல, “பாய்ஸ் [Boys], அமைதியாக இருங்கள். டால்பின்கள் உங்களுக்காக அல்ல, எனக்காகக் காத்திருக்கின்றன.” என்று குறும்பாகச் சொன்னாள். எல்லோரும் வெளியே ஒன்றாக நடந்தார்கள். திருகோணமலையின் உப்புக் காற்று அவர்களை அணைத்துக் கொண்டது. கடலின் நீல நிறம், உருகிய நீலக்கல் [sapphire.] போல பிரகாசித்தது. கடற்கரையில், குழந்தைகள் ஓடினர். இசை வெள்ளை மணலில் ஒரு நண்டைத் துரத்தினான், ஆனால் கடல் அலையால் ஈரமான மணலை அணுகிய பொழுது, அங்கே வழுக்கி தண்ணீரையும் சிதறச் செய்து விழுந்தான். அனைவரும் சிரித்தனர். "பாருங்கள், பாருங்கள்!" என்று ஜெயா அடிவானத்தை சுட்டிக் காட்டினாள். டால்பின்களின் [Dolphin] ஒரு குவியல் தண்ணீரிலிருந்து குதித்தது, காலை சூரியனின் கீழ், அவை பார்ப்பதற்கு வெள்ளி வளைவுகள் [silver arcs] போல் நடனமாடின. "ஆஹா! அவை சிலிர்க்க வைக்கின்றன," என்று கலை கத்தினான். நீல வானத்தில் நிலவு ஒளிர நீண்ட கடலில் அலைகள் தோன்ற வெள்ளை மணலில் நண்டு ஓட துள்ளிக் குதிக்குது டால்பின் கூட்டம்! காற்று வெளியில் பட்டம் பறக்க காந்த மொழியில் கலை பாட சலங்கை ஒலிக்க ஜெயா ஆட சங்கு பொருக்கி இசை மகிழ்ந்தான்! "இல்லை, இல்லை ," என்று ஜெயா பதிலளித்து, "அவர்கள் என்னை வரவேற்கிறார்கள். ஏனென்றால் நான் டால்பின் இளவரசி, கடல் இராணி ." என்று கர்வமாகச் சொன்னாள். சின்னஞ்சிறு இசை, "நான் இளவரச மீன்!" என்று கத்தி என் மடியில் துள்ளிக் குதித்தான். நான் சிரித்தேன், ஆனால் எனக்குள் மற்றொரு அலை எழுந்தது. தாத்தா, "திருகோணமலை என்பது வெறும் டால்பின்களும் கோவில்களுமல்ல. எனக்கு நினைவுக்கு வருகிறது – 1960கள். அப்போது அரசாங்கங்கள் வரைந்த வரைபடங்கள் கடல்களின் வரைபடமல்ல, மக்களின் வரைபடம். “வளர்ச்சி” என்ற பெயரில், மகாவலி திட்டங்கள் போன்ற சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தெற்கிலிருந்து சிங்களக் குடும்பங்கள் இங்கே குடியேற்றப் பட்டார்கள். ஆனால் அதற்காக தமிழர் விவசாயிகள் தங்கள் வயல்களை இழந்து வெளியேற்றப் பட்டார்கள். அரசாங்கம் இதை “வளர்ச்சி” என்று கூறியது. ஆனால் எங்கள் மக்களுக்கு அது உயிர்வாழ்வின் நிலம் அழிந்தது என்பதே உண்மை." இலங்கை வரலாற்றை சுருக்கமாக கூறினார். அப்பொழுது பேத்தி, தாத்தாவின் கையை இழுத்தாள்: “தாத்தா, சாலையில் துப்பாக்கிகளுடன் இவ்வளவு வீரர்கள் ஏன் இருக்கிறார்கள்? டால்பின்களுக்கு அவர்கள் பயப்படுகிறார்களா?” அவள் கண்கள் அவளுடைய வயதிற்கு மிகவும் கூர்மையாக இருந்தது. கடல் காற்று அமைதியாக வீசிக்கொண்டு இருந்தது. தாத்தா சற்று மென்மையான சத்தத்தில், “இல்லை கண்ணா. துப்பாக்கி ஏந்துவது அமைதியைப் பாதுகாக்கும் என்று சில அரச அதிகாரிகள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான அமைதி ... மக்கள் ஒருவரையொருவர் நம்பும்போது, யாரையும் தங்கள் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றாத போது வரும்.” என்றார். அவள் ஒரு கணம் யோசித்து, பின்னர் தலையசைத்தாள்.“பிறகு, நான் வளர்ந்ததும், எப்படி ஒருவரையொருவர் நம்புவது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்.” என்று உறுதியாகக் கூறினாள். நாங்கள் கோணேஸ்வரம் கோயிலுக்கு ஏறினோம், அங்கு யாத்ரீகர்களை விட குரங்குகள் அதிகமாக இருந்தன. “அடடா! இந்தக் குரங்கு என் பிஸ்கட்டைத் திருடிவிட்டதே!” என்று சிறுவன் இசை கத்தினான். அப்பொழுது, ஜெயா, தன் கைகளை மடக்கி, “பாருங்கள் தாத்தா , குரங்குகள் கூட ஆண்களை மதிப்பதில்லை.” என்றாள் கேலியாக, தன் கையில் பிஸ்கட்டை பிடித்தபடி. தாத்தா பாறைக்குக் கீழே உள்ள புனிதக் கடலை உற்றுப் பார்த்தார். ஒருமுறை, போர்த்துகீசிய வீரர்கள், 1622 ஆண்டு கோயில் சிலைகளை கடலுக்குள் தள்ளினர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1981 இல், சிங்கள அரச கும்பல்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தனர். தீ, இழப்பு, அமைதியிமை - மீண்டும் மீண்டும் நிகழ்ந்த வரலாறு அவர் கண் முன் வந்தது. யாழ் நூலகத்தின் படியில் புத்தரின் சடலம் குருதியில் சிவில்உடை அணிந்த காவலர் நூலகத்துடன் சத்தியமும் எரித்தனர் இரவுஇருளில் அமைச்சர்கள் வந்தனர். எங்கள் பட்டியலில் இவர் இல்லையே இவரைச் சுடாமல் எரிக்க முடியாதே சத்தியம் மறந்தே மனிதம் எரித்தோம்! ஆனால் மூன்று பிஞ்சு கைகளைப் பிடித்துக் கொண்டு நின்ற தாத்தாவுக்கு, அவர்களின் கள்ளங் கபடமற்ற புன்னகை ஒரு தெம்பை, நம்பிக்கையை கொடுத்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/31791210493860851/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 32 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 32 / முடிவுரை / 'சிங்கள மொழி அதன் வரலாறு எழுத பொருத்தமற்றதா?' தத்திக முதல் கஜபாகு வரை பல தமிழ் மன்னர்களின் சாத்தியம் முன்னரே காட்டப்பட்டுள்ளது. மூத்தசிவன், சிவன், மகாசிவன், எல்லாளன் எனப் பல தமிழ் மன்னர்களும், மற்றும் தத்திகவுக்குப் பின்பும் பல தமிழ் மன்னர்களும் உள்ளனர். ‘நாக’ என்று முடிவடையும் பல மன்னர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் தமிழ் மன்னர்களாகவும் இருக்கலாம்? அதற்கான காரணம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. மற்றொரு விசித்திரமான அம்சம், இலங்கை வரலாற்றை வெளிநாட்டு மொழியில், பாளியில் எழுதியது. சிங்கள மொழி அதன் வரலாறு எழுத பொருத்தமற்றதா? அல்லது அந்தக் காலக்கட்டத்தில் - ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுக்கு முதல் - சிங்கள மொழி வளர்ச்சி அடையவில்லையா? தீபவம்சம், மகாவம்சம் போல் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானது அல்ல. இந்த மாற்றம் எப்படி வந்தது? சிறந்த விளக்கவுரை ஆசிரியர் புத்தகோசரின் [great commentator Buddhaghosa] வருகையாக இருக்கலாம்? மூல பாஷை [மூல் பாஷா {mul bhaSha} = அசல் மொழி] கருத்தை அறிமுகப்படுத்தி, பாளி மொழியில், முன்னைய நூல்களை மொழிபெயர்த்த பிறகு, அவற்றை - முன்னைய நூல்களை - எரித்தார் என நம்பப்படுகிறது. எனவே, மகாநாம அவரிடமிருந்து தான் இந்த உத்வேகத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது? புத்தகோசரின் வாழ்க்கையைப் பற்றி வரையறுக்கப் பட்ட நம்பகமான தகவல்கள் மட்டுமே இருக்கின்றன. புத்தகோசர் தென்னிந்தியாவில் பிறந்தவர் என்றும் வட இந்தியாவிலிருந்த அன்றைய மகத அரசுக்குட்பட்ட புத்தகயாவிற்கு அருகில் பிறந்தவர் என்றும் ஆய்வாளர்கள் நடுவில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. என்றாலும் அவர் பிராமண குடும்பத்தில் பிறந்தார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. மகாவம்சத்தின் படியும், புத்தகோசர் மகத அரசுக்குட்பட்ட புத்தகயாவிற்கு [Bodh Gaya] அருகில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவராகவும், வேதங்களில் தேர்ச்சி பெற்றவராகவும், இந்தியா முழுவதும் தத்துவ விவாதங்களில் ஈடுபட்டவராகவும் கூறுகிறது. ரேவதா [Buddhist monk named Revata] என்ற புத்த துறவியை சந்தித்த பிறகுதான், புத்தகோசர் விவாதத்தில் சிறந்து விளங்கினார், முதலில் வேதக் கோட்பாட்டின் பொருள் குறித்த சர்ச்சையில் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் அபிதம்மத்திலிருந்து [Abhidhamma] ஒரு போதனையை வழங்குவதில் குழப்பமடைந்தார். அதன் பின் பௌத்தத்தில் ஈர்க்கப்பட்ட புத்தகோசர் ஒரு பிக்கு (பௌத்த துறவி) ஆனார் மற்றும் திபிடகா [Tipiṭaka / இது தேரவாத பௌத்தத்தின் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கும் முதன்மை பாளி மொழி நூல்களின் தொகுப்பாகும்] மற்றும் அதன் விளக்கவுரைகளில் ஆய்வு செய்தார். இந்தியாவில் விளக்கவுரை தொலைந்து போன ஒரு வாசகத்தைக் கண்டுபிடித்து படிப்பதற்காக, அது இலங்கையில் பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் அங்கு பயணம் செல்லத் தீர்மானித்தார். அங்கே, இலங்கையில், புத்தகோசர் அனுராதபுர மகா விகாரையின் துறவிகளால் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மிகப் பெரிய அளவிலான விளக்கவுரை நூல்கள் என்ன என்பதை ஆய்வு செய்யத் தொடங்கினார். புத்தகோசர் அங்கு காணப்பட்ட விளக்கவுரைகள் எல்லாவற்றையும் பாளியில் இயற்றப்பட்ட ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான ஒரு விளக்கவுரையாகத் தொகுக்க, அவர்களிடம் அனுமதி கோரினார். புத்தகோசர் வட இந்தியாவில் போதகயாவிற்கு அருகில் பிறந்தார் என்று மகாவம்சம் கூறினாலும், அவரது விளக்கவுரைகளின் பின்னுரை அல்லது முடிவுரை, இந்தியாவில் குறைந்தபட்சம் தற்காலிக வசிப்பிடமாக இருக்கும் ஒரு இடத்தை மட்டுமே குறிப்பிடுகிறது: அது தென்னிந்தியாவின் காஞ்சி ஆகும். சில அறிஞர்கள் (among them Oskar von Hinüber and Polwatte Buddhadatta Thera) புத்தகோசர் உண்மையில் தென்னிந்தியாவில் பிறந்தார் என்றும், புத்தரின் பிராந்தியத்துடன் அவருக்கு நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்காக, பிற்கால சுயசரிதைகளில் வேண்டும் என்று இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் முடிவு செய்கிறார்கள். புத்தகோசர் தனது பணி முடிந்ததும், இறுதியில், அசல் அல்லது மூல கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து எல்லாவற்றையும் எரித்ததாகக் நம்பப்படுகிறது. Part: 32 / Conclusion / 'Was the Sinhala language unsuitable for its history?' The possibility of many Tamil kings from Dathika to Gajabahu is shown earlier. There are many Tamil kings such as Mutasiva, Siva, Mahasiva, Elara, and many kings after Dathika. There are names of many kings ending with ‘Naga’. They could also be Tamil kings. Another strange aspect is the writing of the Lanka history in a foreign language, Pali. Was the Sinhala language unsuitable for its history? The Dipavamsa is not anti-Tamil unlike the Mahavamsa. What could have happened in between the compilations of the Dipavamsa and the Mahavamsa for this change? It could be the arrival of the great commentator Buddhaghosa! He burnt the originals after translating into Pali, introducing the Mula Bhasha [मूल भाषा {mul bhaSha} = ORIGINAL LANGUAGE] concept. Mahanama must have got the impetus from him. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 33 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 32 https://www.facebook.com/groups/978753388866632/posts/31701596006155634/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 33 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 33 / முடிவுரை / 'மகாநாம தேரர் ஏன் சோழ வெறியர்?' & 'புத்தர் தனது கொள்கையைப் பரப்ப நம்பிக்கையான இடமாக, இலங்கையைத் தேர்ந்து எடுத்தாரா?' இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால், அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். எனவே பாண்டிய நாட்டுடன் நல்ல நட்பு தொடர்பு இருந்ததிற்கு இதுவே காரணம். இதனால், பாண்டிய நாட்டின் எதிரியான சோழ நாடு அனுராதபுர அரசர்களுக்கும் எதிரியாகவே இருந்தது எனலாம். அதுவே மகாநாம தேரர் சோழருக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மைக்கு [to be Chola phobic] ஒரு காரணமாகுவும் இருக்கலாம் என நம்புகிறேன். மகாபாரதத்தில் விதுர நீதி என்ற ஒரு பகுதி உள்ளது. அது " நீ எப்பவும் உண்மை சொல்ல வேண்டும், ஆனால் சொல்லும் உண்மை தீங்கு விளைவிக்கும் என்றால், அதை சொல்லாதே, பொய் உதவும் என்றால், பொய்யை உண்மை போல் சொல்லிவிடு" என்கிறது. [There is a verse in Mahabharata.YOU SHOULD ALWAYS TELL THE TRUTH.IF TELLING TRUTH WOULD HARM THE PEOPLE THEN DON’T TELL THAT.IF TELLING A LIE WILL HELP PEOPLE THEN TELL THAT LIE AS A TRUTH.That is from Vidura niti of Mahabharata]. இதைத்தான் மகாவம்சத்தின் ஆசிரியர் தம் இனத்திற்கு என்றும் வரலாறு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால் மாற்றி சொல்லி இருப்பார் என்றும் எண்ணுகிறேன். மற்றது மகாவம்சத்தில் காணப்படும் தமிழருக்கு எதிரான இனத்துவேசத்திற்கு முக்கிய காரணியாக விளங்கியவர், கி.பி 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானியான, காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் [the great commentator Buddhaghosa] ஆவார். 'புத்தர் தனது கொள்கையைப் பரப்ப நம்பிக்கையான இடமாக, இலங்கையைத் தேர்ந்து எடுத்தாரா?' புத்தர் தனது நம்பிக்கைக்காக இலங்கையைத் தயார் செய்ததாக அனைத்து இலங்கை பண்டைய பாளி நூல்களும் கூறுகின்றன. புத்தர் மூன்று முறை இலங்கைக்கு விஜயம் செய்ததாக அந்த நாளாகமம்கள் [chronicles] மேலும் இதற்குச் சான்றாக கதை கூறுகிறது. இருப்பினும், இந்த வருகைகள் முந்தைய பாலி நியதியில் (திரிபிடகம் / Pāli Canon, the Tipitaka) குறிப்பிடப்படவில்லை, மேலும் இந்த நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் தொல்பொருள் அல்லது உரை ஆதாரங்கள் எதுவும், புத்தர் பிறந்து வாழ்ந்து இறந்த மண்ணில் - இந்தியாவில் - இல்லை இல்லை. புத்தர் இறக்க நேரிட்டபோது, பௌத்தர்கள் சென்று வழிபட வேண்டிய நான்கு இடங்களை புத்தரே அடையாளம் காட்டினார். அந்த நான்கு இடங்கள் லும்பினி, புத்தகயை [புத்த கயா], சாரநாத் மற்றும் குசி நகர் [Lumbini (birthplace of the Buddha), Bodh Gaya (the site where the Buddha attained enlightenment), Sarnath (the location of the Buddha’s first sermon), and Kushinagar (the location where the Buddha attained parinirvana)]. ஆனால், புத்தர் இலங்கையை ஒரு புனிதமான இடமாக என்றும் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் இலங்கைக்கு புத்தர் பறந்து மூன்று தரம் வந்தார் என்று, அதை ஒரு வரலாற்றாக மகாவம்சம் கூறுவது தான் விந்தையாக உள்ளது? புத்தர் இலங்கையை தேர்ந்து எடுத்து, அங்கு பயணம் செய்து இருந்தால், கட்டாயம் அதையே முதலாவதாக குறிப்பிட்டு இருப்பார் என்பதில் எந்த சாதாரண மனிதனுக்கும் ஐயம் இருக்காது, ஆனால் அவரோ அல்லது அவரை சூழ்ந்து இருந்தவர்களோ இலங்கையை அறவே கூறவில்லை என்பது உண்மையாகும்! பின்னர் அசோகரின் காலத்தில், எட்டு புனித புனித தளங்கள் தரிசிக்க மற்ற நான்கு இடங்களும் சேர்க்கப்பட்டன. அந்த நான்கு புனித ஸ்தலங்கள்: சிராவஸ்தி அல்லது சவத்தி [Sravasti or savatthi], சங்கிசா அல்லது சங்காசியா [Sankasia], ராச்கிர் ராஜகஹ, அல்லது ராஜ்கீர் [Rajagaha, also known as Rajgir] மற்றும் வெசாலி [Vaishali] ஆகும். பௌத்தர்கள் வருகை தரும் முக்கிய இடமாக இலங்கையை அசோகர் கருத்தியிருந்தால், அந்த பட்டியலில் இலங்கையையும் சேர்த்திருப்பார். அவரும் மீண்டும் இலங்கையைச் சேர்க்கவில்லை. இதுவும் வரலாற்று உண்மையாகும்! ஒன்று மட்டும் உண்மை, புத்தரும் அசோக மன்னரும் கூட, இலங்கையை அல்லது அனுராதபுரத்தையோ பார்க்க வேண்டிய புனித இடமாக கருதவும் இல்லை, அதை புத்த புனித இடமாக ஏற்கவும் இல்லை. Part: 33 / Conclusion / 'Why Mahanama to be Chola phobic?' & 'Is Buddha prepared Lanka for his faith?' The earliest connection was with the Pandya kingdom, came along the River Vaigai, and arrived at Mannar. From Mannar progressed along the Aruvi Aru (Malwattu Oya) to Anuradhapura. There must have better relationship with Pandya kings. This could be the reason for Mahanama to be Chola phobic. 'Is Buddha prepared Lanka for his faith? All the chronicles say that the Buddha prepared Lanka for his faith. The chronicles assert that the Buddha visited Lanka thrice. When the Buddha was about to die, he identified four places which the Buddhists should visit and venerate. The four places are Lumbini, Buddhagaya, Sarnath and Kusinara. The Buddha did not identify Lanka as one holy place to visit? Later during Asoka’s time, four other places are also added to make eight holy places to visit. Those four holy places are Savatthi, Sankasia, Rajagaha and Vesali. If Asoka considered Lanka an important place for the Buddhists to visit, then he would have included Lanka also in the list. He did not include Lanka. The Buddha and the king Asoka did not consider Lanka or Anuradhapura as a holy place to visit. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 34 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 33 https://www.facebook.com/groups/978753388866632/posts/31796437396671494/?
-
“On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren”
“On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren” / Part 02 [Original in Tamil 'கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' ] Part 02 – Nallur Festival “Roosters crow across Jaffna. Dawn is breaking. The sun blazes. Koels sing. The fragrance of white jasmine spreads everywhere. What bliss it is to wake in this paradise! And what supreme joy to watch the setting sun in the west, framed by the ‘shadow-paintings’ of palmyra trees! Then, in the fading twilight, to sip quickly the nectar of the palmyra—that delight is beyond words!” Grandpa murmured these lines to himself as he gazed out of the window in the early morning. This was the season of the grand Nallur Murugan Temple Festival. Jaffna was alive with lights, the pealing of bells, the rhythms of drums, and the scent of incense. Saffron flags fluttered in the sky like tongues of fire. On August 15, 2025, the 19th day of the annual festival—the sacred Karthigai Festival—Grandpa and his grandchildren, dressed in traditional attire, joined the great throng. That evening, Lord Murugan, with his consorts Valli and Deivayanai, appeared in procession upon the silver peacock chariot. The veshti reveals our culture, The white cloth that many wear. Though fashions change with passing years, At festival hours the veshti shines! Learned scholars, humble folk, Tie it on with equal pride. With the angavastram on their shoulder, They walk in dignity, side by side. For Jaya, Kalai, and little Isai, this was their very first time experiencing such a colorful and deeply spiritual festival in the land of their ancestors. Just before the chariot procession began, the children surprised everyone—they wanted to carry kavadi! “Grandpa, can we also take kavadi?” Jaya asked, her eyes shining. “You are still little, dear ones. Kavadi is heavy,” Grandpa hesitated. But soon, priests and helpers brought forth smaller kavadis decorated with peacock feathers and flowers, especially for children. The crowd clapped, and the children’s faces glowed with delight. Kalai placed the kavadi on his shoulders and cried out: “Muruganukku Arohara! … Kandhanukku Arohara!” Little Isai, the youngest, tried to balance his kavadi with both hands, his small feet trembling as the crowd watched with affection. Though his legs shook, his heart danced to the drumbeats. Jaya, moving gracefully to the rhythm of the temple drums, danced with natural expressions, as though a golden garland itself had come alive. Her anklets jingled in divine harmony, making her look like a little devadasi of Murugan. Kalai, with eyes like blooming flowers, spun and clapped like a master of the tavil, circling round and round in joy. Lift the kavadi and dance, O child, Bow your head and sing, O soul. Kumaran who clears our sins—O Lord, We seek your feet each day. See the Six Sacred Shrines, O heart, Hear the solace they bring, Om! Chant the mantra “Saravanabhava”— Its wisdom burns away all deeds. Then, as the golden Vel chariot—pulled by hundreds of devotees—emerged from the temple, the entire atmosphere shimmered with sacred light. The tropical evening air was heavy with the fragrance of jasmine, camphor, and incense. “I wish I could stay here forever, Grandpa. It feels as though Murugan is smiling at us,” whispered Jaya. “When I grow older, I will join the men and pull the chariot!” declared Kalai. And Isai, bouncing with joy, shouted: “Amma… Ice cream!” Everyone burst into laughter. Even amidst divine devotion, the innocent yearning of a child for ice cream revealed the simple sweetness of life. No wonder the crowd loved it! Pointing to the decorated deity, little Isai cried out, “Shining God!” “Yes,” Grandpa explained gently, “this is Lord Murugan, the Tamil God adored in full decoration—Alankara Kandhan.” But Kalai tugged at him, insisting: “Grandpa, Grandpa… tell us a Murugan story!” 👴 Grandpa: “Do you want to hear the story of Nalluran, Murugan?” 👦 Grandson: “Yes, Grandpa! Please tell us Murugan’s story!” 👴 “One day, Sage Narada brought a golden mango to Lord Shiva. To decide who should eat it, a contest was held.” 👦 “Who joined the contest?” 👴 “Only Murugan and Ganesha.” Isai giggled: “The one with the big belly who loves modakam?” 👴 “Yes! Lord Shiva declared, ‘Whoever goes around the world three times may have the mango.” 👦 “What did Murugan do then?” 👴 “He mounted his peacock and flew around the world with speed!” 👦 “Ha ha! That peacock must have flown so fast! Poor Ganesha on his little mouse!” 👴 “But do you know what Ganesha did? He thought, ‘For me, my mother and father are the world.’ So he circled Shiva and Parvati three times.” 👦 “Oh! That was true wisdom!” 👴 “Exactly. And so, Shiva happily gave the mango to Ganesha.” 👦 “Then Murugan got angry?” 👴 “Yes! He left on his peacock in anger and went to Palani Hills, saying, ‘From now on, I will stay here.’” 👦 “Ha ha! Even Murugan gets angry for small things, like me!” 👴 “😄 Yes! But even in his anger, there was love. That is why Murugan is always the favorite deity of children.” Around Nallur, sweet stalls overflowed with delicacies. “I can’t eat any more laddus!” groaned Kalai, his cheeks puffed like little drums, making everyone laugh. On August 18, 2025, with memories of Nallur, Idaikaddu, Thondaimanaru, Pannai, and Pungudutivu still glowing in their hearts, Grandpa and his grandchildren set out from Jaffna toward the eastern coast of Sri Lanka. Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna Part 03 will follow “On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren” / Part 02 [Original in Tamil 'கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' ] https://www.facebook.com/groups/978753388866632/posts/31682708958044339/?
-
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 02 பகுதி: 02 - நல்லூர் திருவிழா 'யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன. வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது. இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்! மாலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்" [நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!! அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!!' தாத்தா காலை எழும்பியதும் சாளரத்தின் ஊடாக வெளியே பார்த்து முணுமுணுத்தார். இது நல்லூர் முருகன் கோயில் திருவிழா காலம் என்பதால், யாழ்ப்பாணம் - விளக்குகள், மணி ஓசைகள், மேள தாளங்கள் மற்றும் தூப வாசனையால் நிறைந்திருந்தன. அதே நேரத்தில் காவி நிறக் கொடிகள் [saffron flags] அந்தி வானத்தில் நெருப்பு நாக்குகளைப் போல பறந்தன. 15 / 08 / 2025, நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான கார்த்திகை திருவிழாவாகும். தாத்தாவும் மூன்று பேரப்பிள்ளைகளும் பாரம்பரியமான உடைகளுடன் அங்கு சென்றனர். அன்று முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் பூஞ்சப்பரத்தில் ஊர்வலம் வந்தார். பண்பாடு கலாசாரம் காட்டும் உடை பலராலும் உடுத்த வெள்ளை வேட்டி! காலம் மாற கோலம் மாறினாலும் திருவிழாக் காலத்தில் தோன்றும் வேட்டி! படித்தவரும் கட்டினர் பாமரரும் கட்டினர் உடுத்த வேட்டியில் மகிழ்ச்சி கொண்டனர் மடித்தகரை சால்வையை தோளில் போட்டு எழுந்து நடந்தனர் மனதில் கம்பீரம்பொங்க! குழந்தைகள் ஜெயா, கலை மற்றும் இசை ஆகியோருக்கு, அவர்களின் மூதாதையர் நிலத்தில் இவ்வளவு வண்ணமயமான மற்றும் ஆன்மீக விழாவை அனுபவிப்பது இதுவே முதல் முறையாகும். ஊர்வலத்திற்கு சற்று முன்பு, மூன்று குழந்தைகளும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். அவர்கள் காவடி எடுக்க விரும்பினர்! “தாத்தா, நாங்களும் காவடி எடுத்துச் செல்லலாமா?” ஜெயா ஒளிரும் கண்களுடன் கேட்டார். “நீ இன்னும் சிறியவள், கண்ணா. காவடி கனமானது,” என்று தாத்தா கொஞ்சம் தயங்கினார். ஆனால் விரைவில், பூசாரிகளும் உதவியாளர்களும் மயில் இறகுகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய குழந்தைகளின் காவடியைக் கொண்டு வந்தனர். கூட்டம் கைதட்டியது, குழந்தைகளின் முகங்கள் பிரகாசித்தன. கலை காவடியைத் தோளில் வைத்துக்கொண்டு கத்தினான்: “முருகனுக்கு அரோகரா! .. கந்தனுக்கு அரோகரா!” மூவரிலும் இளையவரான 'இசை', தனது சகோதரனைப் பின்பற்றி, இரண்டு கைகளாலும் காவடியை சமநிலைப்படுத்த முயன்றான். சிறுவனின் கால்கள் நடுங்க, அனைவரும் அன்பாக பார்த்து மகிழ்ந்தனர், ஆனாலும் அவனது மனம் தாளத்துடன் நடனமாடியது. மூத்தவள் ஜெயா, கோயில் மேளங்களின் தாளத்தில் அழகாக, "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர" என, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப் பிடித்து நடனமாடினாள், அவளுடைய கணுக்கால்கள் (Ankle) சத்தமிட்டன. அவள் முருகனின் சிறிய தேவதாசி போல இருந்தாள், அதே நேரத்தில், மலர்ந்த நெய்தல் மலர் போன்ற கண்களைக் கொண்ட - கலை, புன்முறுவலுடன் அமர்ந்தும், குதித்தும், சுழன்றும் தன்னை ஒரு தவில் வித்வான் போல நடித்து வட்டமாக சுழன்று சுழன்று ஆடினான். காவடி தூக்கி ஆடு - அவன் காலடி பணிந்து பாடு - நம் பாவங்கள் தீர்க்கும் குமரன் - அவன் திருவடி நாடு தினம்! ஆறுபடை வீடு பாரு - அது ஆறுதலைத் தரும் கேளு - ஓம் சரவணபவ எனும் - மந்திரம் வினைகள் தீர்க்கும் புரிந்திடு! நூற்றுக்கணக்கான பக்தர்களால் இழுக்கப்பட்ட தங்க வேல் சப்பரம் கோவிலிலிருந்து வெளியே வந்த போது, வளிமண்டலம் மின் ஒளி மயமானது. வெப்பமண்டல மாலையில் காற்றோடு கலந்த மல்லிகை, கற்பூரம் மற்றும் தூப வாசனை எங்கும் பரவியது. ஜெயா: “நான் இங்கேயே என்றென்றும் இருக்க விரும்புகிறேன், தாத்தா. முருகன் நம்மைப் பார்த்து சிரிப்பது போல் இருக்கிறது.” என்றாள். கலை: “நான் பெரியவனானதும், பெரியவர்களுடன் சேர்ந்து சப்பரம் இழுப்பேன்.” என்றான். இசை: (சிரித்துக்கொண்டே) “அம்மா... ஐஸ்கிரீம்!” என்று துள்ளினான். அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தெய்வீக பக்தியின் நடுவிலும், ஒரு குழந்தையின் இதயம் இன்னும் ஐஸ்கிரீமுக்காக ஏங்கியது இயல்பான உண்மை நிலையைக் காட்டியது. அதனால்த்தான் அங்கு சனக் கூட்டம்! அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தை சுட்டிக்காட்டி, “பிரகாசிக்கும் கடவுள்!” என்று கத்தினான் குட்டி 'இசை'. “இது முழு அலங்காரத்தில் இருக்கும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகன், அலங்காரக் கந்தன்.” என்று கூற, கலை, 'தாத்தா தாத்தா .. முருகன் கதை ஒன்று சொல்லுங்க' என்று பிடிவாதமாக வெள்ளை மண்ணில் உருண்டான். 👴 தாத்தா : நல்லூரான், முருகப்பெருமான் கதை கேட்டுக்கொள்ள விரும்புகிறாயா, குட்டி? 👦 பேரன் : ஆமாம் தாத்தா! முருகன் கதை சொல்றீங்களா? என்று கேட்டபடி, மணலில் இருந்து எழும்பினான். 👴 தாத்தா : சரி. ஒருநாள் நாரத முனிவர், சிவபெருமானிடம் ஒரு பொன் மாம்பழம் கொண்டு வந்தாராம். அந்த மாம்பழம் யாருக்குக் கிடைக்கும்னு போட்டி ஒன்று போட்டாராம். 👦 பேரன் : யாரெல்லாம் போட்டில கலந்துகிட்டாங்க? 👴 தாத்தா : முருகப்பெருமான், மற்றும் கணேசப்பெருமான் மட்டுமே இசை சிரித்தான், 👴'தொப்பை வயிருடன், மோதகம் சாப்பிடுபவரா ?' தாத்தா தொடர்ந்தார், 👴ஆமாம் , சிவபெருமான் சொன்னாராம் – “யாரு மூன்று தடவை உலகத்தைச் சுற்றிகிட்டு வருகிறாரோ, அவங்கத்தான் மாம்பழம் சாப்பிடலாம்.” என்று 👦 பேரன்: அப்போ முருகன் என்ன பண்ணாரு? 👴 தாத்தா: அவன் தன் மயிலின் மேல் ஏறிக்கிட்டு – “வீய்ய்… வீய்ய்…”ன்னு உலகத்தையே சுற்றிப்பார்த்துட்டாராம். 👦 பேரன்: ஹா ஹா! எவ்வளவு வேகமா பறந்திருக்கும் அந்த மயில்!, எலியில் கணேசப்பெருமான் பாடு ... பாவம் ... பாவம் 👴 தாத்தா: ஆமாம். ஆனா கணேசர் என்ன பண்ணினாரு தெரியுமா? 👦 பேரன் [ஆச்சரியத்துடன்] : என்ன பண்ணினாரு தாத்தா? 👴 தாத்தா: “அவன் யோசிச்சான் – என் அம்மா அப்பா தான் எனக்கு உலகமே. அவர்களைச் சுற்றினால் போதும்.” ன்னு. அவன் மூன்று தடவை சிவபெருமான் – பார்வதியம்மா இருவரையும் சுற்றினாராம். 👦 பேரன்: ஐய்யோ! அதான் பெரிய புத்திசாலித்தனம்! 👴 தாத்தா: சரியாக சொன்னாய் குட்டி. அதனாலே சிவபெருமான் மகிழ்ந்து அந்த மாம்பழம் கணேசருக்கே கொடுத்தார். 👦 பேரன்: அப்போ முருகன் கோவம் பண்ணினாரா? 👴 தாத்தா: ஆமாம்! 😄 அவன் மயிலோட கோபத்துல பறந்துட்டு பழனி மலையிலே போய்ச் சேர்ந்தான். “இனிமேல் நான் இங்குதான் இருப்பேன்” ன்னு சொல்லிக்கிட்டான். 👦 பேரன்: ஹா ஹா! முருகனுக்கு கூட - என்னை மாதிரியே சின்னச் சின்ன விஷயத்துக்கே கோவம் வந்துடுது ? 👴 தாத்தா : 😄 சரியாகச் சொன்னாய்! ஆனா, அந்தக் கோபத்துக்குள்ளேயும் பாசம் தான் இருந்தது. அதனால் தான் முருகன் எப்போதுமே குட்டிகளுக்கு பிடித்த தெய்வம் என்று கதையை முடித்தார். நல்லுரைச் சுற்றி எல்லா இடங்களிலும் இனிப்புகளும் சிற்றுண்டிகளும் நிரம்பி வழிந்தன. "இனி என்னால் லட்டு சாப்பிட முடியாது!" என்று கலை முனகினான், அவனது கன்னங்கள் டிரம் [drum] போல இருந்தது, அனைவருக்கும் சிரிப்பைக் கொடுத்தது. ஆகஸ்ட் 18, 2025 அன்று, யாழ் நகரின் குறிப்பாக நல்லூரின் மற்றும் இடைக்காடு, தொண்டைமானாறு, பண்ணைக்கடல், புங்குடுதீவு என .... யாழ் நகருக்கு வெளியே உள்ள இடங்களும் - நினைவுகளில் இன்னும் இதயங்களில் இருக்க, அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு கடற்கரைக்குப் புறப்பட்டனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/31682603474721554/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 31 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 31 / முடிவுரை / 'விஜயன் உண்மையான நபரா?' தீபவம்சத்தின் 9 ஆம் அத்தியாயத்தின் 1 ஆம் வசனம் இலங்கைத் தீவு சிங்கத்தின் பெயரால் சிஹல [Sihala] எனக் அழைக்கப்பட்டது என்று கூறுகிறது. எனவே சிங்கள மொழிக்கும் அந்த மொழி பேசுபவர்களுக்கும் சிஹலவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே பொருள் படுகிறது. இந்த அத்தியாயத்தின்படி, வங்க மன்னனின் மகள் சுப்பதேவி [Suppadevi] ஒரு சிங்கத்துடன் இணைந்து வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்: அவர்கள் சிங்கபாகு மற்றும் சிங்கசீவலி [Sinhabahu and his sister Sinhasivali ] ஆகும். வாலிப பருவத்தை அடைந்த சிங்கபாகு தன்னுடைய தாய், தங்கை சகிதமாக குகையை விட்டு நாட்டுக்குள் நுழைந்தான். பின், அரச பாரம்பரியங்களுக்கு இணங்கி சுப்பதேவி தன் அத்தை மகனை மணம் கொண்டாள். அதன் பின், சிங்கபாகு, தனது தந்தையான சிங்கத்தைக் கொன்று, தனது சகோதரியான சிங்கசீவலியை மணம்புரிந்துக் கொண்டு அரசை தன் தாயின் கணவன் கைகளில் ஒப்புக்கொடுத்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினான். தான் பிறந்த கானகத்தை அடைந்து அங்கு தனக்கென ஒரு நகரை அமைத்துக் கொண்டான். அதனை சுற்றிலும் கிராமங்களை அமைத்து சிங்கபுரம் என்ற அரசை நிறுவினான். தன்னுடைய தங்கை சிங்கசீவலியை அரசியாக்கி தன் நாட்டை ஆளத்தொடங்கினான். இவர்களுக்கு பிறந்தவன் தான் விஜயன். ஆனால், உங்களில் பலர் அடிப்படை உயிரியல் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு ஆண் சிங்கமும் ஒரு மனித பெண்ணும் புணர்ந்து சந்ததி உண்டாக்கும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. உதாரணமாக, சிங்கம் 38 குரோமோசோம்கள் / உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள் கொண்டு உள்ளது , அதேவேளை மனிதன் 46 குரோமோசோம்கள் [Horses have 64 chromosomes, donkeys have 62, humans have 46, and lions have 38.] வைத்திருக்கிறான். அத்துடன் அவைகளின் வகைகளும் முக்கியம் [the types of chromosomes are also important.] ஆகும். உதாரணமாக, மனித-விலங்கு கலப்பினங்கள் நீண்ட காலமாக சமூக கலாச்சாரங்கள் முழுவதும் (குறிப்பாக புராணங்களின் அடிப்படையில்) இருந்து வருகின்றன, பல கண்டங்களில் பண்டைய கதைகளின் ஒரு பகுதியாக இருக்கின்றன, மேலும் சமீபத்திய காலங்களில் நகைச்சுவை அல்லது கேலிச்சித்திர புத்தகங்கள், திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகள் மற்றும் பிற தொடர்புடைய வெகுஜன ஊடகங்களிலும் காணப்படுகின்றன. மற்றும் படி உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை, இருக்கவும் வாய்ப்பு இல்லை. எனினும், சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இதற்கு காரணம் இந்த இரு இனத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பதால், மற்றும் அவைகளின் குரோமோசோம்கள் மிகவும் ஒத்த தன்மையாக இருப்பதால் ஆகும், அப்படியே புலிச்சிங்கம் அல்லது வேயரிமா (Tigon) ஆகும். அத்துடன் இவை பெருபாலும் மலட்டுவாகவும் [sterile] இருக்கின்றன. இன்னும் ஒரு உதாரணமாக, குதிரையையும், கழுதையையும் எடுத்தால், அவை முறையே 64, 62 குரோமோசோம்கள் கொண்டுள்ளன. அவைகள் புணர்ந்து கோவேறு கழுதை [mules] பிறக்கிறது. அது எப்பொழுதும் மலடும் ஆகும். சிங்கத்தையும், மனிதனையும் இனி கருத்தில் கொண்டால், இங்கு குரோமோசோம்கள் வேறுபாடு எட்டு ஆகும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் சந்ததி உண்டாகாது. அப்படி என்றால், விஜயன் என்று உண்மையான ஒருவர் இருக்க முடியாது? இது நான் சொல்லவில்லை. அறிவியல் சொல்லுகிறது! கழுதையும் குதிரையும் ஒரே பேரினம் [genus], ஆனால் வெவ்வேறு இனங்கள். குரோமோசோம்கள் சொற்ப வித்தியாசம். எனவே தான் கோவேறு கழுதை முற்றிலும் மலடாகவே பிறக்கிறது. மனிதனும் சிங்கமும் ஒரே பேரினமும் இல்லை [do not even belong to same genus] . எனவே, சிங்கம் இளவரசியை உண்பதுதான் இறுதியாக நடந்து இருக்கும்! Genus மற்றும் Species அல்லது ஏதேனும் உயிரியல் பாடப்புத்தகத்தின் அர்த்தத்திற்காக, 'The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English'' என்ற புத்தகத்தின் பக்கம் 39 ஐப் பார்க்கவும். இலங்கையில் வாழ்ந்து பூர்வீக மக்களிடம் இருந்து நிலத்தை பறிக்க மகாநாம தேரரின் கட்டுக்கதை என்றே தோன்றுகிறது. ஒன்று மட்டும் உண்மை, அவர் தொடங்கி வைத்த நிலம் பறிப்பு, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்வது கண்கூடு! அறிவு வளர்ந்து, மக்கள் நாகரிகம் அடைந்தாலும், பிற்போக்கு மத குருக்களும், அரசியல்வாதிகளும் இன்னும் அநாகரிகமாகவே இருப்பது ஆச்சரியமே, ஆனால் உண்மை!! விஜயனுக்குப் பிறகு அடுத்த அரசர் பண்டுவாசுதேவன் அல்லது பண்டுவாசுதேவ ஆவார், அவர் மகாவம்சத்தின்படி விஜயனின் தம்பி சுமித்தவின் [Sumitta] இளையகுமாரன் ஆகும். ஆனால் நாம் முன்பு அறிவியல் ரீதியாக கூறியது போல, விஜயன் உண்மையான ஆள் இல்லை. அதனால் அவனது தம்பி சுமித்தவும் உண்மையான ஆள் இல்லை. அப்படி என்றால், சுமித்தவின் மகன் பண்டுவாசுதேவனும் உண்மையான நபர் அல்ல. அடுத்த மன்னன் அபயன் அல்லது அபய, பண்டுவாசுதேவனின் மகன், எனவே அவன் ஒரு கற்பனை மனிதனின் மகனாக இருப்பதால் உண்மையான மனிதனாக இருக்க முடியாது? அடுத்த மன்னன் பண்டுகாபய அல்லது பண்டுகாபயன், அபயனின் சகோதரியின் மகன் என்பதால், உண்மையான மனிதனாக மீண்டும் இருக்க முடியாது? மூன்று நபர்களின் பிறந்த ஆண்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன அல்லது நாளாகமங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவர்களின் பிறந்த ஆண்டுகள் கணக்கிடப்படலாம்? அவர்கள் பண்டுகாபய, மகிந்த தேரர் மற்றும் தேரி சங்கமித்தை (Sanghamitta, பாளி: சங்கமித்தா] ஆகும். என்றாலும், முன்பு கூறிய காரணங்களால், இந்த மூவரும் அதிகமாக உண்மையான நபர்களாக இருக்க முடியாது? எது என்னவென்றாலும், மகிந்த தேரரும், தேரி சங்கமித்தாவும் இலங்கையின் ஆட்சியாளர்கள் அல்ல, எனவே, அது இலங்கையின் வரலாற்றிற்கு முக்கியமும் இல்லை. மேலும், பண்டுகாபய முதல் துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி வரையிலான மன்னர்களின் ஆட்சியின் நீளம் மற்றும் அவர்கள் வாழ்ந்த மிகவும் சாத்தியமான வயது ஆகியவற்றில் முரண்பாடுகளைக் கொண்டுள்ளதால், வழக்கத்திற்கு மாறான அல்லது விதிமுறையிலிருந்து அவை மிகவும் வேறுபாடாகத் தோன்றுவதால், அவை உண்மையாக இருக்கும் எந்த சந்தர்ப்பம் இல்லை. நாம் முன்னரே குறிப்பிட்ட நான்கு அரசர்களைத் தவிர, உத்திய, மகாசிவன், சுரதிஸ்ஸ அல்லது சுரதிசா ஆகியவரும் இதேபோன்ற பழுத்த வயது மட்டும் வாழ்ந்திருக்க வேண்டும். எனவே, மூன்று தலைமுறைகளில் ஏழு மன்னர்கள் 107 வயது முதல் 189 வயது வரை வாழ்வது உண்மையாக இருக்க முடியுமா?, வாழ்வது மட்டும் அல்ல, அந்த வயது மட்டும் மன்னராக ஆட்சியும் செய்துள்ளார்கள் என்பதையும் நோக்குக. மகாவம்ச ஆசிரியர், இலங்கையில் புத்த சமயத்திற்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க, புத்தர் தனது கொள்கையை பரப்ப, தேர்ந்து எடுத்த மக்களாக சிங்களவர்களையும், தேர்ந்து எடுத்த நாடாக இலங்கையையும் தனது கதையில் வெளிக் காட்டி, அதற்கு மகுடம் வைத்தாற் போல், விஜயனினதும் அவனது தோழர்களினதும் இலங்கை வருகை நாளை செயற்கையாக, புத்தரின் மரண நாளுடன் ஒத்து போக செய்தது வெளிப்படையாக எந்த நடுநிலையாளருக்கும் கட்டாயம் தெரியும் [The author of Mahavamsa, artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of Buddha in 543 BCE.]. அதற்கான அறிவியல் காரணங்கள் ஏற்கனவே விரிவாக அலசப் பட்டுள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் உண்மையான ஆண்டு கிமு 483 என்று ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், சரியான தேதி பற்றி பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. உதாரணமாக, சில வரலாற்றாசிரியர்கள் புத்தரின் மரணம் கிமு 410 இல் நிகழ்ந்ததாக நம்புகிறார்கள். எவ்வாறாயினும் கி மு 543 யைக் கருத்தில் கொண்டு, விஜயனுக்குப் பிறகு ஆட்சி செய்த சில மன்னர்களின் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. ஒரு எடுத்துக்காட்டாக, அபயாவின் மருமகனான பாண்டுகபயா, கிமு 377 முதல் கிமு 307 வரை 70 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது. அவருடைய மகன் மூத்தசிவன் கிமு 307 முதல் கிமு 247 வரை 60 ஆண்டுகள் ஆட்சி செய்தார் எனவும் நம்பப்படுகிறது. அதாவது தந்தையும் மகனும் மொத்தம் 130 ஆண்டுகள் செய்தனர் என்றாகிறது! Part: 31 / Conclusion / Is Vijaya a real person? The Verse 1 of Chapter 9 of Dipavamsa says the Island of Lanka was called Sihala after lion. Sihala has therefore nothing to do with the Sinhala language or with those who are speaking that language. As per this Chapter, the daughter of Vanga king, Suppadevi, cohabited with a lion and gave birth to two children: Sihabahu and Sivali. Sihabahu married his sister Sivali. Vijaya was born to them. A male lion and a female human to have offspring is a biological impossibility. Humans and Lions are two different species, and would never have off springs. Lions have 36 chromosomes and humans have 46 chromosomes. Not only the number of chromosomes, but also the types of chromosomes are also important. A Lion and a Tigress may produce Ligers, and Tiger and Lioness may produce Tions, as their chromosomes are very much similar. In this case, they are mostly, but not always, sterile. Horses and donkeys have 38 and 36 chromosomes respectively. They mate to produce mules, but mules are always sterile. The difference of only two chromosomes makes the mule sterile. Humans have 46 chromosomes and the lions have 36 chromosomes, and mating of these two will never result in off spring. Therefore, Vijaya cannot be a real person. He is a concocted personality to steal the land from the original people of Lanka. See the page 39 of the Reference 'The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English' for the meaning of Genus and Species or any biology textbook. A group of similar speices belong to same Genus. Donkeys and horses belong to a same genus, but not to same species. All the donkeys belong to one species and they mate, male and female donkeys, to produce offspring. However, the hybrids between a horse and a donkey, mules or hinnies, are always sterile. Mules have relatively high load carrying capacity. Lions and Humans do not even belong to same genus. The only eventuality is for the lion to eat the adventurous woman. The next king after Vijaya is Panduvasudeva and he is, as per the Mahavamsa, the son of Sumita, the younger brother of Vijaya. Vijaya is not a real person and therefore his brother Sumita is also not a real person. Sumita’s son Panduvasudeva is also not a real person. The next king Abhaya is the son of Panduvasudeva, and therefore he, being a son of an imaginary person, could not be a real person. The next king Pandukabhaya, being the son of Abhaya’s sister, could not be a real person. The birth years of only three persons are given or could be calculated based on the information available in the chronicles. Pandukabhaya, Thera Mahinda and Theri Sanghamitta are those three. These three should be, most probably, not real persons. Thera Mahinda and Theri Sanghamitta are not rulers of Lanka and it is irrelevant to the history of Lanka. Also, The rules from Pandukabhaya to Dutthagamani have anomalies with respect to the lengths of their reigns and the most probable ages to which they lived. Other than the four kings we mentioned earlier, Uttiya, Mahasiva and Suratissa must also have lived to the similar ripe ages. Therefore, Seven kings of just three generations living to the age from 107 years to 189 years is really an absurdity. It looks like that the author of the Mahavamsa artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of the Buddha in 543 BCE, while most historians now agree that the actual year was 483 BCE. However, there are different theories about the exact date. For example, Some historians believe the Buddha's death occurred around 410 BC, somewhere between the earlier and later dates. With this in mind, it is evident that the reigns of some of the kings who ruled after Vijaya were extended, particularly as father and son were said to have ruled for a total of 130 years. For example, King Pandukabhaya, the nephew of Abhaya, is believed to have ruled from 377 BCE to 307 BCE, a span of 70 years. His son, Muttasiva, ruled for 60 years, from 307 BCE to 247 BCE. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 32 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 31 https://www.facebook.com/groups/978753388866632/posts/31672899879025247/?
-
“On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren”
“On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren” / Part 01 [Original in Tamil 'கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'] Part 01 – From Ottawa to Jaffna The very first “beachcombers” were none other than early humans in Africa. Wandering along the coasts and living off the sea’s abundance, they slowly spread from Africa into Asia, Australia, and eventually the rest of the world. Thus, history remembers the seashore as humanity’s first great “highway.” Perhaps it was for this very reason that Grandpa chose to begin a grand tour of Sri Lanka with his Canadian-born and -raised grandchildren in August 2025, following that ancient, glorious “highway.” On August 11, 2025, three little explorers—Grandpa Kandiah Thillai’s grandchildren, Jaya, Kalai, and Isai—boarded a plane in Ottawa, Canada. Flying through Germany, they finally landed with their grandfather on the soil of Sri Lanka. “Ah! It’s so hot here, Grandpa!” exclaimed Jaya, fanning her face the moment they stepped outside Bandaranaike International Airport. “That’s because this is the tropics, my dear. The sun here is a little more mischievous than in Canada,” Grandpa laughed. Among the world’s most captivating sights is the seashore. No one is untouched by its charm—children and adults alike love the beach. And so, with a hired van and a friendly driver, they decided to spend their first two days in Colombo, the seaside capital. Their hotel faced Galle Face Green, which had been laid out in 1859 by Sir Henry George Ward (1797–1860), then Governor of British Ceylon. The cool sea breeze, the gentle waves, the playful cries of seabirds, and the soothing rhythm of the ocean washed away their jetlag and fatigue, while giving the children a joyful welcome. Grandpa had chosen the place with care. On August 13, they set off again in the same van, heading toward Jaffna by way of Dambulla. When the children saw the glittering golden statues of the cave temples, they gasped in awe. “This feels like a storybook cave!” Kalai exclaimed breathlessly. But as they passed Dambulla, Grandpa’s face grew somber. Jaya noticed and tugged at him. “What’s wrong, Grandpa?” she asked. He explained gently: “For many years, the only Tamil Hindu temple along the Kandy–Jaffna A9 highway stood here in Dambulla—the Badrakali Amman Temple. It was attacked multiple times under the leadership of Buddhist monks, and finally, on October 28, 2013, it was demolished completely. Yet, within the ancient Dambulla Golden Cave Temple, four sacred statues remain—even two Hindu deities, Vishnu and Vinayagar. That is a historical truth.” She listened carefully. Grandpa added that this place was once called Thampalai and was ruled in the 10th–11th centuries by the great Chola emperors, Rajaraja Chola and Rajendra Chola. That night, they finally reached the coastal city of Jaffna—Grandpa’s own childhood and youth’s home. They stayed at a hotel near Athiady, his birthplace. Behind that very station lay Athiady, the neighborhood where Grandpa, his mother, and his siblings were born and raised with pride. It reminded him of a song by poet Sathees: Though we leave our homeland to live afar, The fragrance of Jaffna soil never leaves our hearts. Come, let us board the Yaal Devi train, And speak in the language of our souls. For the people of Jaffna, the sounds and bustle of the Yaal Devi train were woven into daily life—there was hardly a day without them. Nearby also stood the home of Arumuga Navalar — praised as the giver of Tamil and Saiva tradition. Today it is known as the Navalar Mandapam. Grandpa pointed it out fondly—it lay just half a mile from their hotel, behind the site of his old family home, where he had once played as a boy. Jaffna town itself spread around the fort, the market, the hospital, the bus and railway stations, and the main roads. In North American terms, one could call it the “downtown” of Jaffna. Amidst the taller buildings, palmyra palms stood proud and scattered everywhere. That night, Jaya and Kalai marveled at the city glowing under the lamps, while little Isai had already fallen asleep in Grandpa’s lap. Pulling Jaya and Kalai close, Grandpa explained: “The palmyra tree sways fiercely in the storm, but unlike the reed, it does not bend to escape. It prefers to break rather than bow. In the same way, when hardship and suffering come, the people of Jaffna take the palmyra as their example—facing adversity with courage, resilience, and unyielding determination.” And so, in his heart, verses bloomed like the Jaffna sun: Golden sun in the open sky, Palmyra’s lullaby swaying high, Parrots singing sweet delight, Jaffna’s music fills the night. It clings to every soul and ear, Sprouting love and culture dear. Step outside and you will find, Goats and cattle by the roadside, Children’s laughter, Tamil’s song, Palmyras rising proud and strong. Memories that touch the heart, Never from our lives depart. Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna Part 02 will follow “On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren” / Part 01 [Original in Tamil 'கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' ] https://www.facebook.com/groups/978753388866632/posts/31664470166534885/?
-
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01 பகுதி: 01 - ஒட்டாவாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை முதன் முதலில் “கடற்கரை அலைந்து திரிந்தோர்” (Beachcombers) ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்களே ஆகும். கடற்கரைகளைக் கடந்து, கடலின் வளங்களை உணவாகக் கொண்டு அவர்கள் மெதுவாக ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் உலகின் பல பகுதிகளுக்குப் பரவினர் என்பது வரலாறு ஆகும். இதனால், மனித வரலாற்றின் முதல் “நெடுஞ்சாலை”யாக கடற்கரை அமைந்து இருந்தது. அதனாலோ என்னவோ, தாத்தாவும் தன் வெளிநாட்டில் பிறந்து வளரும் பேரப்பிள்ளைகளுக்கு அந்த பெருமை பெற்ற “நெடுஞ்சாலை” வழியாக இலங்கை சுற்றிலாவை ஆகஸ்ட் 2025 இல் ஆரம்பிக்க முடிவு செய்தார். ஆகஸ்ட் 11, 2025 அன்று, மூன்று சிறிய ஆய்வாளர்கள், தாத்தா கந்தையா தில்லையின் பேரப்பிள்ளைகள் - ஜெயா, கலை, மற்றும் இசை - கனடாவின் ஒட்டாவாவில் இருந்து விமானத்தில் தங்கள் தாத்தாவுடன், ஜெர்மனியின் ஊடாக, பறந்து சென்று, இலங்கையில் தரையிறங்கினர். “ஆஹா, இங்கே மிகவும் சூடாக இருக்கிறது, தாத்தா!” அவர்கள் பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஜெயா முகத்தை விசிறிக் கொண்டாள். “ஏனென்றால் இது வெப்ப மண்டலப் பகுதி, என் அன்பே. கனடாவை விட இங்கு சூரிய ஒளி சற்று குறும்புத்தனமானது,” தாத்தா சிரித்தார். உலகில் கண்களைக் கவரும் இடங்களில் கடற்கரையும் ஒன்று எனலாம். கடற்கரையைப் பற்றி அறியாதவர் யாவரும் இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடற்கரைக்கு செல்வ தென்றால் மிகவும் பிடிக்கும். எனவே, ஒரு வாடகை வேனில் [Van] ஒரு நட்பு ஓட்டுநருடன், முதலில் கடற்கரை நகரமும் மற்றும் தலைநகரமான கொழும்புக்கு சென்று இருநாள் ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். எனவே பிரித்தானிய ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்டு [ Governor of British Ceylon, Sir Henry George Ward (1797–1860)] என்பவரின் முயற்சியின் பலனாக 1859 ஆம் ஆண்டு உருவான காலிமுகத் திடலுக்கு (Galle Face Green) முன்னால் அமைந்த ஹோட்டல் ஒன்றில் தங்க முடிவு செய்தனர். சில்லென்ற கடல் நீர், இதமான தென்றல் காற்று, கடல் அலையின் ஓசை, கொஞ்சி விளையாடும் பறவைகள் என யாவும் தமக்கு மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும், பயணக் களைப்பையும் போக்கும் என்பதாலும் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக களிக்கலாம் என்பதாலும், தாத்தா அந்த ஹோட்டலை தெரிந்து எடுத்தார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி, அதே வாடகை வேனில் தம்புள்ளை [Dambulla] வழியாகச் யாழ் நகரை நோக்கிச் செல்லும் போது, தங்கச் சிலைகளால் மின்னும் குகைக் கோயில்களைப் பார்த்து வியந்தது, "இது ஒரு கதைப்புத்தகக் குகை போல நான் உணர்கிறேன்!" என்று கலை மூச்சுத் திணறினான். தம்புள்ளையை தாண்டும் பொழுது தாத்தாவின் முகம் கொஞ்சம் வாடியிருந்தது. அதைக் கவனித்த ஜெயா, தாத்தாவைத் தட்டி என்ன நடந்தது என்றாள்? யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அன்று பல ஆண்டுகளாக அமைந்து இருந்த ஒரேயொரு தமிழ் இந்து ஆலயமான தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில், புத்த பிக்குவின் தலைமையில் பல முறைதாக்குதல் நடத்தப்பட்டு, இறுதியாக அக்டோபர் 28, 2013-ம் நாள் ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது எதையம்மா காட்டுகிறது ?. ஆனால், இந்த முன்னைய தம்புள்ளை பொற்கோவிலில் தெய்வங்களுக்குரிய 4 சிலைகள் காணப்படுகின்றன. இதில் இரண்டு இந்துக் கடவுள்களான விஷ்ணு மற்றும் விநாயகர் சிலைகளாகும் என்பது வரலாற்று உண்மையாகும் என்று தாத்தா ஜெயாவுக்கு ஒரு சரித்திரமே கூறினார். அவள் அதைக் கவனமாகக் கேட்டாள். இது ஆரம்பகாலத்தில் தம்பலை என அழைக்கப்பட்டது. இராச இராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோர் 10ஆம் 11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்டார்கள் என தன் உரையாடலை முடித்தார். அன்று இரவு, அவர்கள் இறுதியாக தாத்தாவின் குழந்தை மற்றும் வாலிப பருவத்தின் வாழ்விடமான கரையோர நகரமான யாழ்ப்பாணத்தை அடைந்தனர். அங்கே, தாத்தாவின் பிறப்பு இடமான அத்தியடிக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில், ஒரு சிலநாட்கள் தங்க முடிவெடுத்தனர். அந்த ஹோட்டலை பார்த்து கொண்டு யாழ் ரயில் நிலையம் அமைந்திருந்தது. அந்த யாழ் ரயில் நிலையத்தின் பின்பக்கம் தான் தாத்தா, தாத்தாவின் அம்மா, சகோதரங்கள் எல்லோரும் பிறந்து வளர்ந்த பெருமைமிக்க அத்தியடி அமைந்துள்ளது. "நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே, யாழ் தேவி ரெயில் ஏறுவோம், எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய பாடல் வரிகளை நினைவூட்டியது. ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே அன்று இல்லை. "ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும், தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு, இன்றைய நாவலர் மண்டபம், ஹோட்டலில் இருந்து, அரை மையிலுக்கும் குறைவான தூரத்தில், தாத்தா குடும்பத்தாரின் முன்னைய வீட்டின் பின்பக்கத்தில் தான் அமைந்திருந்தது. அங்கு தான் தாத்தா இளம் வயதில் பந்தடித்து விளையாடினார். பொதுவாக யாழ்ப்பாண நகர், யாழ் கோட்டை , சந்தை பகுதியையும் வைத்திய சாலை, பேருந்து, புகையிரத, நிலையத்தையும் முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை "downtown."எனவும் கூறலாம். யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்கள், உயர்ந்த கட்டிடங்கள் மத்தியிலும் ஆங்ககாங்கே இருந்தது. ஜெயாவும் கலையும், முதல் முதல், அந்த முன் இரவிலும் யாழ் நகரைப் பார்த்து ரசித்து ஆச்சரியப்பட்டனர். இசை தாத்தாவின் மடியில் தூங்கிவிட்டான். ஜெயாவையும் கலையையும் தன் அருகில் அழைத்த தாத்தா, 'பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும், நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது. அது வளைவதை விட, வளையாமல் உடைவதையே விரும்புவது. இன்னல், துன்பம் வரும் போது, யாழ்ப்பான மக்கள், பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து, தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம் மற்றும் துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக் குணத்தை கொண்டிருந்தனர்' என ஒரு பெரும் விளக்கம் கூறினார். மஞ்சள் வெயில் பூத்த வானமும் பனை மரங்களின் இனிய தாலாட்டும் பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும் எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும் அன்பும் பண்பும் துளிர் விடும்! வீட்டை விட்டு எட்டி நடந்தால் வானம் பாடிகளின் ஆட்டமும் வீதியோர பசுக்களின் கூட்டமும் காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும் வானுயர நிமிர்ந்த பனைமரமும் மனதைத் தொடும் நினைவுகளே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31646004468381455/?
-
IDAIKKADU - OUR MOTHER LAND
IDAIKKADU - OUR MOTHER LAND / Part 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/31645716751743560/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 B பகுதி: 30 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'புத்த சமயவாதிகள் புத்தரின் நான்கு பேருண்மைகளை சரியாக உணர்ந்தார்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வதென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன், அவனது பண்பற்ற கொடிய செயல்களால், நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக, அகதியாக 700 தோழர்களுடன் இலங்கை தீவிற்கு வரும் முன்பே, சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது. மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்புதான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாக தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரிசையை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட கிருஸ்துக்கு முற்பட்ட கல்வெட்டுகளில், 50 மேற்படட இடத்தில் முக்கிய இடத்தை வகுத்த சொல் 'பருமக' [parumaka] ஆகும். இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக, ராசநாயகம், சி பத்மநாதன், ப புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம் , தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது [Vellaveli Brahmi Inscription / photo attached. The rough translation says “Ship caption Shamathaya, who has the title Parumaka, given this rock”. The word Parumaka literally means lord, and the word Naavika could be a sailboat as per use of Sangam literature’s wording.]. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற பட்டத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. எனவே இந்த இடத்தில் கிருஸ்த்துக்கு முன், தமிழ் மொழியையும் அல்லது வேறு மொழியையும் [பரணவிதான கூறியது போல் இந்தோ ஆரியன்] பேசியோர் வாழ்ந்து உள்ளனர் என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. எனவே விஜயன் வரும் பொழுது அவனுக்கும் அவன் தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூர்வீக குடிமக்களில் இவர்களும் ஒருவராகும், எனவே இவர்களை நீங்கள் ஒதுக்க முடியாது ,இவர்களும் இம் மண்ணின் மைந்தர்களே !! சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற துறவிகள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாகச் சொல்கிறார்: 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்த சமயவாதிகள் என்ன செய்கிறார்கள் ?, எது செய்யப் போகிறார்கள் ? என்ற தவிப்பில், பயத்தில் மற்ற இனம் வாழும் நாடாக இவை மாறுகிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்தது தான் இந்த மகாவம்சம் என்று சொல்லலாமோ என்று எனக்கும் தோன்றுகிறது ? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 31 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 B https://www.facebook.com/groups/978753388866632/posts/31627963990185503/?
-
எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025]
மிக்க நன்றி
-
IDAIKKADU - OUR MOTHER LAND
IDAIKKADU - OUR MOTHER LAND / Part 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/31627270690254833/?
-
IDAIKKADU - OUR MOTHER LAND
IDAIKKADU - OUR MOTHER LAND / Part 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/31608173112164591/?
-
IDAIKKADU - OUR MOTHER LAND
IDAIKKADU - OUR MOTHER LAND / Part 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31593648180283751/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
இது 146 பகுதிகளாக பதிவிட உள்ளேன். எல்லாம் எழுதி முடித்துவிட்டேன். ஆகவே பிரச்சனை இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, இப்பொழுது தோள் மூட்டு வலியில், குறிப்பாக வலது தோளில், நான் சிக்கியிருக்கிறேன். தற்போது மிகக் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இனிமேல் நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளைத் தவிர, புதிய பதிவுகளை எழுதுவதை மிகக் குறைக்கவோ, சில காலம் முற்றிலும் நிறுத்தவோ உள்ளேன். அடிப்படை தேவைக்கு அப்பாற்பட்டு, வலது கையால் வேகப்பந்து வீசுவது, பாரங்கள் தூக்குவது, அல்லது கையால் கூடுதல் வேலை செய்வதை தவிர்க்கிறேன். மருத்துவ சிகிச்சையை முறையாக மேற்கொண்டு, மருத்துவர் அறிவுரையின் படி என் வருங்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பேன். மிக்க நன்றி என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் மற்றும் கருத்து தெரிவிப்பவர்களுக்கும்
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 30 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'பிராமணர் கோயில்களை இடிப்பது என்ற கருத்து மகாசேன மன்னரிடமிருந்து தொடங்கியதா?' மகாவம்சத்தின் கடைசி அத்தியாயம் மகாசேனனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மகாசேனன் மன்னன், சங்கமித்ரர் தேரரின் ஆலோசனையின் பேரில், மகாவிகாரையின் பிக்குகளுக்கு எதிராகச் சென்றார், அதனால், அது ஒன்பது ஆண்டுகளாக குடியிருப்பவர்கள் இல்லாமல் வெறுமையாக இருந்தது. 'மன்னர் நிலம்' என்ற கருத்து [Crown land concept] இவரது காலத்தில் தான் நடைமுறைக்கு வந்தது. பின்னர் மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப் படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira-vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, anda third in the village of the Brahman Kalanda; moreover ... According to the Tika, the Gokanna-vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth '] ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று மறைமுகமாக சுட்டிக் காட்டுவதை காணலாம். அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது. இதன் தொடர்ச்சியையே அல்லது நீட்சியே இன்றும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படுகிறது. ஆனால், இந்த அரசன் பகலில் ஆட்களையும், இரவில் பேய்களையும் அமர்த்தி பல பெரிய செயல்களைச் செய்தான் என்று மகாவம்சத்திற்கு மாறாக இராசவலிய கதை கூறுகிறது. இன்றும் அதன் தொடர்ச்சியை வேறு ஒரு கோணத்தில் காணுகிறோம். அதாவது பேச்சில் நீதியும் சமாதானமும் காணப்படுகிறது, ஆனால் செயலில் அதற்குத் எதிராக தனியார் காணிகள் கூட வலிந்து எடுக்கப்படுகிறது. அன்பும் பண்பும் போதித்த புத்தரின் சிலைகள் அல்லது ஆலயங்கள் கூட அங்கு வலிந்து நிறுவப் படுகின்றன. அவர் இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார் (மற்ற இரண்டு நூல்களைப் போல இருபத்தி ஏழு அல்ல) மற்றும் அவரது திறமையான பணியின் காரணமாக தெய்வீக உலகத்திற்குச் [சொர்க்கத்துக்கு / divine world] சென்றார். மகாவம்சத்திற்கும் இராசவலியக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்? ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D.). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before] அது மட்டும் அல்ல, மகா சேன மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் (கி பி 277-304 ), அவனால் கட்டப்பட்ட குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது. இலங்கையில் மகாசேனன் காலம் முதல் சைவ கோவில்கள் இடித்து புத்த ஆலயங்கள் கட்டப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் உள்ளன என்றாலும் இவை காலப்போக்கில் அதிகரித்தும், அரச ஆதரவு பெற்றும் இன்று வடக்கு கிழக்கில் பலவந்தமான நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. உதாரணமாக, வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்தச் செயல் வகைகள் மாற்றப்பட்ட வடிவங்களில் தொடர்கின்றன – குறிப்பாக இனமத அடிப்படையிலான அதிகார நிலைப்பாடுகள், பௌத்தமயமாக்கல், மற்றும் பழமையான தமிழ் பண்பாட்டை அழிக்க முயற்சிகள் என அவையை பிரித்துக் கூறலாம். இந்தவகையில், அண்மைய எடுத்துக்காட்டாக முக்கியமான இரண்டைக் கூறலாம். முதலாவது நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆயுத படையினரின் உதவியுடன், அரச நிர்வாகத்தின் மறைமுக ஆதரவுடன் குருந்தூர்மலை, முல்லைத்தீவில் பலவந்தமாக கட்டப்பட்ட புத்த விகாரை மற்றது யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில், எந்தவித அனுமதியும் இன்றி, மீண்டும் முன்னையபாணியிலேயே, காணி உரிமையாளர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் கட்டப்பட்ட புத்த விகாரை ஆகும். இவ்வளவிற்கும் இந்த இரண்டு பகுதியும் முற்றிலும் தமிழர் வாழும் இடம் ஆகும். ஒன்று மட்டும் விளங்குகிறது. புத்த மதம் பற்றி பேசுபவர்கள் பலருக்கு புத்தரின் போதனைகளில் விளக்கம் அல்லது அறிவு இல்லை என்பதே, அது ஆகும், முக்கியமாக அதன் தலைவர்களுக்கும் குருமார்களுக்கும்! Part: 30 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did the concept of demolishing Brahminical temples begin with King Mahasena?' The last chapter of the Mahavamsa is dedicated to Mahasena. The king Mahasena, on the advice of the thera Samghamitta, went against Bikkhus of the Mahavihara, and it was unoccupied for nine years. The Crown land concept came into effect during his time. The king later demolished three temples of the Brahminical (Hindu temples) gods, one at Gokanna (Trincomalee), and another at Erakaville, and the other at the Brahmin village Kalanda (Kanthalai). Mahasena seems to be busy with destroying the seven stories high Lohapasada, and later with demolishing the Brahminical temples as per the Mahavamsa. The Rajavaliya, in contrast with the Mahavamsa, says that this king did many great deeds by employing men in the daytime and demons in the night time. He reigned twenty-four years (not twenty-seven as in the other two chronicles) and went to the divine world because of his meritorious work, what a contrast between the Mahavamsa and the Rajavaliya. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 30 B தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 A https://www.facebook.com/groups/978753388866632/posts/31577049141943655/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 29 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 29 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாம தேரர் சோழர்களைப் பற்றி சித்தப்பிரமை உள்ளவரா? விஜய அல்லது விசயகுமாரனுக்குப் பிறகு முதலாம் சம்கதிஸ்ஸ [Samghatissa] நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார். அவர் லம்பகண்ண குலத்தைச் சேர்ந்தவர் என்று மகாவம்சம் கூறுகிறது [முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதிமூன்றாமானவனான விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் முதலாமானவன் இவனாகும்.]. ஆனால் இராசவலியவில் அவர் லெமினி வம்சத்தைச் [Lemini dynasty] சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. மகாவம்சம் வழக்கம் போல் மூன்று லம்பக்கண்ணர்களான [Lambakanna] சம்கதிஸ்ஸ, சம்கபோதி மற்றும் கோதகபய [Samghatissa, Samghabodhi and Gothakabhaya] பற்றிய கதையுடன் வருகிறது. சம்கதிஸ்ஸவுக்கு விஷம் கொடுத்து, அதனால் அவன் இறந்தபின், சம்கபோதி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்று, மகாவம்சம் கூறுகிறது. சம்கபோதி ஒரு நீதியுள்ள அரசர், அவரைப் பற்றிய கதைகள் மகாவம்சம் மற்றும் இராசவலிய இரண்டிலும் உள்ளன. ஆனால், தீபவம்சத்தில் அத்தகைய கதைகள் ஒன்றும் இல்லை; அவர் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த நல்லொழுக்கமுள்ள மன்னர் என்று அது வெறுமனே கூறுகிறது. அவருக்குப் பின் அபய மேகவன்னா (Abhaya Meghavanna / மகாவம்சத்தின்படி கோதகபய / Gothakabhaya மற்றும் இராசவலியவின் படி கோலு அப / Golu Aba) பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். மன்னனின் மகன் ஜெத்ததிஸ்ஸ [Jetthatissa] வெற்றி பெற்று பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் இராசவலியவில் கலகண்டேது [Kalakandetu] ஆகும். ஜெத்ததிஸ்ஸனுக்குப் பிறகு, அவனுடைய தம்பி மகாசேனன் [Mahasena] இருபத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சத்தின்படி, சில பிக்குகள் உண்மையானவர்கள் அல்ல என்று அவர் நினைத்தார். அதனால் அவர்களுடன் இந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க முயன்றதுடன், அவர் துன்மார்க்க மக்களையும் சமாளிக்க முயன்றார். மகாவம்சத்தின்படி, ஜெத்ததிஸ்ஸ ஆட்சிக் காலத்தில் பிரிவினைவாத பிக்குகள் அங்கு இருந்தனர் என்பதையும் அறிகிறோம். மேலும் சோழ நாட்டைச் சேர்ந்த பிக்கு சங்கமித்ரர் மற்றும் அவனது செயல்களைப் பற்றிய ஒரு கதையும் அங்கு உள்ளது. ஆனால், இந்தக் கதை தீபவம்சத்தில் இல்லை. சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களான முதலாம் ஜெத்ததிஸ்ஸ, மகாசேனன் என்பவர்களை மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான ஜெத்ததிஸ்ஸ இலங்கைக்கு அரசனானான். மகாவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் சோழர்களைப் பற்றி சித்தப்பிரமையாக இருக்க வேண்டும்! அவர் பொதுவாக தமிழ் பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பேசுவதில்லை. Part: 29 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is Mahanama, the author of the Mahavamsa, paranoid about Cholas?' Then Samghatissa ruled for four years. The Mahavamsa says that he belonged to the Lambakanna clan, but the Rajavaliya says he belonged to Lemini dynasty. The Mahavamsa, as usual comes with a tale about three Lambakannas, Samghatissa, Samghabodhi and Gothakabhaya. Samghatissa was poisoned and Samghabodhi succeeded him as per the Mahavamsa, and ruled for two years. Samghabodhi is a righteous king and there are tales about him in both the Mahavamsa and the Rajavaliya. There are no such tales in the Dipavamsa; it simply says that he is a virtuous king ruled for two years. He was succeeded by Abhaya Meghavanna (Gothakabhaya as per the Mahavamsa and Golu Aba as per the Rajavaliya) and ruled for thirteen years. King’s son Jetthatissa succeeded and reigned for ten years. He is Kalakandetu in the Rajavaliya. After Jetthatissa, his younger brother king Mahasena reigned twenty-seven years. He, as per the Dipavamsa, thought that some Bikkhus are not genuine and tried to discuss the issues with them. He tried to deal with the wicked people. As per the Mahavamsa, the sectarian Bikkhus were there during the Jetthatissa’s reign. There is a story about a Bikkhu Samghamitta from Chola country and his actions. This story is not in the Dipavamsa. Mahanama, the author of the Mahavamsa, must be paranoid about Cholas! He does not usually speak about Tamil Pandiya kings. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 30 தொடரும் / Will follow துளி/DROP: 1861 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 29] / எனது அறிவார்ந்த தேடல்: 1279 https://www.facebook.com/groups/978753388866632/posts/31528774886771081/?
-
"மூன்று கவிதைகள் / 12"
"மூன்று கவிதைகள் / 12" விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம் விலங்குகளை ஒவ்வொன்றாக அடக்கி அடக்கி குப்பை மனிதர்கள் செழிக்க விட்டோம்! ஆசையில் மூழ்கி அசிங்கத்தைப் பூசி புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக பாதை தவறி அழுக்கைச் சுமந்து மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே! ........................................................ பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே உன் அறிவும் உனக்குப் பெரிதோ? சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும் உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ? பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன் உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ? வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம் தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ? பாசத்தின் அருமை உனக்குத் தெரியுது வேசமிடும் மனிதனுக்கு அன்பு தெரியாதோ? மோசமான இலங்கை அரசியல் உலகில் மனிதம் வளராது இறந்தது எனோ? ............................................ யாழின் தென்றலில் நல்லூர் வளாகத்தில் நடந்து சென்றோம் கைகள் கோர்த்தே! புனித நிலத்தில் ஞானம் சேர மனம் நிறைந்து ஆனந்தம் பெருகியதே! நல்லூர் மேளமும் கடல் ஓசையும் மனதில் நிலைத்து என்றும் வாழுமே! கடல் சறுக்கல் டால்பின் பாய்தல் ஈழ சுற்றுலாவைப் பறை சாற்றுமே! தெற்கும் மேற்கும் மனிதம் நிலைத்தால் வடக்கும் கிழக்கும் மீண்டும் தளிருமே! ஒற்றுமை கீதம் உள்ளத்தில் பாடினால் வேற்றுமை நீங்கி சொர்க்கம் ஆகுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "மூன்று கவிதைகள் / 12" https://www.facebook.com/groups/978753388866632/posts/31528636796784890/?
-
'தோள் மூட்டு வலி – ஒரு கடுமையான சவால்' / 'Shoulder Joint Pain – A Serious Challenge'
'தோள் மூட்டு வலி – ஒரு கடுமையான சவால்' மூட்டு வலிகளில் முக்கியமானது தோள் வலி. எந்த அடியும் படாமலேயே தோளில் வலி வருவது பலருக்கு புதிராகத் தோன்றும். பொதுவாக, இது 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகம் காணப்படுகிறது. அறிகுறிகள்: கையை உயர்த்தும் போது கடுமையான வலி ஒரு பக்கமாகப் படுத்தால் வலி அதிகரிக்கும் இரவில் கை முழுவதும் குடைச்சல் / எரிச்சல் கையை அசைக்காமல் வைத்துவிட்டு மீண்டும் அசைத்தால் வலி கையை முற்றிலும் கழற்றி விட வேண்டும் எனத் தோன்றும் அளவுக்கு தாங்க முடியாத வலி காரணங்கள்: தோள் மூட்டை இணைக்கும் தசைகள், முதுகு மற்றும் கழுத்திலிருந்து வந்து குகை போன்ற பகுதியில் இணைகின்றன. அங்கே இரத்த ஓட்டம் குறைந்தால் வலி ஏற்படும். அதிக உடல் உழைப்பு அல்லது அதிக எடை தூக்கும் பழக்கம் காரணமாக தசைகள் பிசைந்து வலிக்கலாம். விபத்து, விளையாட்டு காயம், அடிபடுதல் ஆகியவற்றால் மூட்டுச் சவ்வு கிழிந்து வலி ஏற்படும். தொற்று அல்லது அழற்சி ஏற்பட்டாலும் தோளில் வலி வரும். கணினி, தையல் போன்ற வேலைகளில் கழுத்து நீண்ட நேரம் ஒரே நிலையில் இருந்தாலும் தோள் வலி ஏற்படும். நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவதால் இணைப்பு தசைகள் பலவீனமடையலாம். மூட்டழற்சி நோய்கள், மூட்டு நழுவுதல், எலும்பு தேய்வு, Bursa எனும் குஷன் பாதிப்பு, தசைநாண்களில் கால்சியம் படிவு போன்றவை கூட காரணமாகும். பித்தப்பை பிரச்சினைகளால் வலது தோளில் வலி தோன்றலாம். கழுத்து எலும்பில் சிதைவு ஏற்பட்டால் நரம்புகள் அழுத்தப்பட்டு தோளில் வலி வரும். மாரடைப்பு வந்தால் 'இடது தோளில்' வலி தோன்றும். Rotator cuff தசைநாண்கள் பாதிக்கப்படுதல், நீரிழிவு கட்டுப்பாட்டின்மை ஆகிய காரணங்களால் Frozen Shoulder உருவாகி, தோளைச் சிறிதும் அசைக்க முடியாத நிலை வரும். என் அனுபவம் துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறான ஒரு பிரச்சனையில் வலது தோளில் நானும் சிக்கியிருக்கிறேன். தற்போது மிகக் கடுமையான வலியால் தவிக்கிறேன். எனவே, இனிமேல் நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளைத் தவிர, புதிய பதிவுகளை எழுதுவதை மிகக் குறைக்கவோ, சில காலம் முற்றிலும் நிறுத்தவோ உள்ளேன். அடிப்படை தேவைக்கு அப்பாற்பட்டு, வலது கையால் வேகப்பந்து வீசுவது, பாரங்கள் தூக்குவது, அல்லது கையால் கூடுதல் வேலை செய்வதை தவிர்க்கிறேன். மருத்துவ சிகிச்சையை முறையாக மேற்கொண்டு, மருத்துவர் அறிவுரையின் படி என் வருங்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பேன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'Shoulder Joint Pain – A Serious Challenge' Among joint pains, shoulder pain is one of the most troubling. Often, pain appears without any direct injury or impact, which many find puzzling. It is especially common after the age of 40. Symptoms: Sharp pain when lifting the arm Increased pain while lying on one side Tingling or discomfort in the arm at night Pain after keeping the arm still and then moving it again Pain so severe that it feels like detaching the arm would bring relief Causes: Muscles connecting the shoulder joint extend from the neck and back into a socket. Reduced blood supply here leads to pain. Overexertion or lifting heavy weights can strain the muscles. Accidents, sports injuries, or falls may tear joint tissues. Infections or inflammations in the joint. Long hours in the same posture (computer work, tailoring) can cause shoulder pain. Long-distance driving on rough roads can weaken supporting tendons. Arthritis, joint dislocation, bone wear, bursitis (inflammation of the bursa), and calcium deposits in tendons may all cause pain. Gallbladder problems can cause pain in the right shoulder. Cervical spine issues can press nerves and cause pain in the shoulder. Heart attacks often present with pain in the left shoulder. Rotator cuff damage or uncontrolled diabetes can cause frozen shoulder, where movement becomes extremely painful and restricted. My Experience Unfortunately, I too am suffering severely from right shoulder pain. At present, the pain has become very difficult to manage. Therefore, apart from posts I have already written, I may reduce or even stop writing new posts for some time. I will also avoid activities like fast bowling, heavy lifting, or overuse of my right hand. I am undergoing proper medical treatment and will follow my doctor’s advice to decide on future contributions. Thank you [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1860 ['தோள் மூட்டு வலி – ஒரு கடுமையான சவால்'] / எனது அறிவார்ந்த தேடல்: 1278 https://www.facebook.com/groups/978753388866632/posts/31513216794993557/?