Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. 'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!' சிங்கப் பாறையின் நிழலில் நிற்கிறேன் சித்த மெல்லாம் எனக்கு உன்பெயரே! கண்ணாடிச் சுவர்களைத் தொடும் போது கண்ணே உன்ஞாபகம் என்னை வாட்டுதே! குன்றில் வரைந்த தங்கநிற மங்கையே குட்டி அரவணைப்பு தாராயோ நிழலில்! தீட்டிய சிற்பத்தில் உன்னைக் கண்டேன் தீராத மோகத்தில் அவளைத் தொட்டேன்! சிகிரியாவின் தென்றல் காதலைச் சுமக்கிறது சிறகடித்து வந்து இதயத்தை அணைக்கிறது! சிங்கப்பாறை பற்றி தொல்லியலாளர் எழுதட்டும் சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்! ["[1] சிங்கப் பாறை" - சிகிரியா குன்று [2] சிகிரியா சுவரோவியங்கள் — மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் தீட்டப்பட்ட வானுலகப் பெண்கள் / தங்கநிற மங்கை [3] ‘மிரர் வால் / mirror wall’ - கண்ணாடி சுவர் அல்லது சிங்காரச் சுவர். அதில் காணப்படும் கல்வெட்டுகள் தோராயமாக கி.பி 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலானவை ஆகும். [4] உதாரணத்துக்கு ஒன்று: “தங்க நிற மங்கையரை கண்டவன், தன் இதயத்தில் ஒளிர்கிறான் — வானில் சூரியன் ஒளிர்வது போல்.”] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1899 ['சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32373298478985380/?
  2. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 44A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 44 A / பின் இணைப்பு - தீபவம்சம் / 'மகிந்த மற்றும் சங்கமித்த இருவரும் அசோகரின் பிள்ளைகளா?' அத்தியாயம் 7 அசோகனின் சமய நம்பிக்கை பற்றியது. பிக்குகளுக்கு பலவற்றைச் செய்ததாலும், எண்பத்து நான்காயிரம் மடங்களைக் கட்டியதாலும், தான் புத்த சமயத்தின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கத் தகுதியானவர் என்று அசோகர் நினைத்தார். இருப்பினும், மொகாலிபுத்த [Moggaliputta], அசோகன் தனது மகனையோ மகளையோ புத்த மத விசுவாசத்திற்கு [தெய்வ நம்பிக்கைக்கு] அர்ப்பணித்து, அவர்களுக்கு பப்பாஜ்ஜி நியமனம் [ Pabbajji ordination / ஒரு புதிய துறவி அல்லது கன்னியாஸ்திரியாக ஒரு நபரின் வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு புத்த சமய விழா.] செய்ய வேண்டும் என்று கூறினார். 7-17 பார்க்கவும். அசோகனின் மகன் மகிந்தவும் மகள் சங்கமித்தாவும் பாப்பாஜி நியமனம் பெற உடனடியாக ஒப்புக்கொண்டனர். தந்தை தன் ஆசையை அடைய அவர்கள் இருவரும் பாப்பாஜி நியமனத்தைப் பெற்ற போது மகிந்தவின் வயது ஆக 20 மற்றும் சங்கமித்தாவுக்கு 18 வயது. ஒரு தகப்பனும், அசோகனைப் போன்ற கருணையுள்ள ஒருவரும், இருபது மற்றும் பதினெட்டு வயதுடைய தனது இரு வாலிப பிள்ளைகளை பிக்கு மற்றும் பிக்குணியாக [பெண் துறவி] ஆக்கி, அதனால் தான் தெய்வ நம்பிக்கைக்கு உரியவராக மாறலாம் என்று விரும்புவாரா? அல்லது அதனால் திருப்தி அடைவாரா? பெரும்பாலும் இருக்காது! அது மட்டும் அல்ல, மகாவம்சத்தின்படி சங்கமித்தா திருமணம் செய்து, அந்த நேரத்தில், அவளுக்கு ஒரு இளம் மகனும் இருந்தான். அப்படி உண்மையில் நடந்து இருந்தால், இது கட்டாயம் அசோகனின் கொடூரமான செயல் அல்லவா? மேலும், மொகாலிபுத்தவின் முடிவு என்னவென்றால், பாப்பாஜி நியமனம் பெறுவதற்கு ஒரு மகன் அல்லது ஒரு மகள் இருக்க வேண்டும், அவ்வளவு தான், இருவரும் அல்ல. எனவே இது ஒன்றே இந்த தீபவம்சம் கதையின் உண்மையைப் புரியவைக்கும்? அதாவது, மகிந்த மற்றும் சங்கமித்தா இருவரின் இருப்பை இது கேள்விக்குறி ஆக்கிறது. இந்த இருவருமே இலங்கை புத்த துறவி ஆசிரியர்களின் போலியான படைப்பாக இருக்க வேண்டும்? அசோகரின் கல்வெட்டுகளில் ஒன்று அசோகரின் மகன்கள் மற்றும் பேரன்களைப் பற்றி பேசுகிறது, ஆனால் மகிந்த மற்றும் சங்கமித்தாவைப் பற்றி அல்ல என்பது குறிப்பிடத் தக்கது. வேறு சில இந்திய ஆதாரங்களின்படி, அசோகருக்கு சாருமதி அல்லது சாருமித்ரா என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள், பின்னர் அவர் தனது கணவருடன் நேபாளத்தில் குடியேறினார், இருவரும் துறவிகள் ஆனார்கள் என்கிறது. இலங்கை துறவிகள் சிறிய மாற்றங்களுடன் இலங்கையை புத்த மதத்திற்கு மாற்ற, மேலே கூறிய இரண்டையும் நகலெடுத்திருக்க வேண்டும். மூன்றாவது பௌத்த மாநாடு அசோகரின் ஆதரவில் ஒன்பது மாதங்கள் நீடித்தது. வரலாற்று முக்கியத்துவம் இல்லாத பல மத விவரங்கள் இங்கு உள்ளன. பலர் தங்களின் சுயலாபத்திற்காகவும், நம்பிக்கைக்கு சேதம் விளைவிப்பதற்காகவும் தந்திரமாக, புத்த விசுவாசத்தில் சேர்ந்தனர். பின்னர் மொகாலிபுத்த மூன்றாவது புத்தமத சபையை நடத்தி, சமயப் பிளவுகளை அகற்றினார். அத்துடன், போலித் துறவிகளை மன்னர் அசோகன் சமய நடவடிக்கைகளில் இருந்து அகற்றினார். இந்திய ஆதாரங்களில், மூன்றாவது பௌத்த சபை பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதாவது எங்கு மூன்றாவது பௌத்த சபை நடந்ததோ, அங்கிருந்து எந்தச் சான்றுகளும் இல்லை. எனவே மூன்றாம் பௌத்த சபையின் உண்மைத்தன்மை பல அறிஞர்களால் சந்தேகிக்கப்படுகிறது. மீண்டும் இந்த அத்தியாயம் இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. Part: 44 / Appendix – Dipavamsa / 'Are both Mahinda and Sanghamitta, children of Asoka?' Chapter 7 is about Asoka’s intention to become the relation of the Faith. He thought that he was fit to be the relation of the faith as he did a lot to the Bikkhus, and also constructed eighty four thousand monasteries. Moggaliputta, however, told that he should give his son or daughter to the Faith and cause them to receive Pabbajji ordination [a Buddhist ceremony that marks the beginning of a person's life as a novice monk or nun.] to become the relation of the Faith, 7-17. Asoka’s son Mahinda and the daughter Sanghamitta readily agreed to receive Pabbajji ordination. Mahinda was 20 years of age and Sanghamitta was 18 years of age when they both received Pabbajji ordination so that their father could attain his desire. Would a father and a benevolent one like Asoka, make his young children of twenty and eighteen years to become a Bikkhu and a Bikkhunni so that he could satisfy his desire to be a relation of the Faith? Most probably would not! Sanghamitta had a young son, as per the Mahavamsa, by that time. It is a cruel act on the part of Asoka. Furthermore, the Moggaliputta’s decision was that either a son or a daughter to be made to receive the Pabbajji ordination, and not both. This is also of the reasons to doubt the bona fide of both Mahinda and Sanghamitta; both must be the bogus creation of the monkish authors of Lanka. One of the Asoka’s inscriptions speaks of sons and grandsons of Asoka, but not about Mahinda and Sanghamitta. Asoka had, as per Indian sources, a daughter by the name Charumati or Charumitra, and later she settled in Nepal with her husband, and both became monks. Lanka monks must have copied these two to convert Lanka to the Faith with small modification. Third Buddhist Council took place under the aegis of Asoka which lasted for nine months. There are quite many religious details which are not of historical significance. Many furtively joined the Faith for their own gain, and doing damage to the Faith. Then Moggaliputta held the Third Buddhist Council, and demolished the schisms, and the bogus monks were disrobed by the King Asoka. There is no information about the Third Buddhist Council from the Indian sources. Therefore the veracity of the Third Buddhist Council is suspected by many scholars. This chapter is also not about human historical events that took place in Lanka. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 44 B தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 44A https://www.facebook.com/groups/978753388866632/posts/32357350903913471/?
  3. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 43 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 43 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தேவி அரண்மனையில் வசிக்கத் தகுதியற்றவள் என்றால், அவளுடைய குழந்தைகள் அங்கே தங்குவதற்கு எப்படித் தகுதியானவர்கள்?' உச்சைன் (உஜ்ஜைன் / Ujjain) மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இதனை உஞ்சேனை என்று திருநாவுக்கரசர் தேவாரத்திலும் உஞ்சை எனத் தமிழ்ப்படுத்திப் பெருங்கதை என்னும் நூல் வழங்குகிறது. 'உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும், மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை, வழுவூர்-வீரட்டம், மாதானம், கேதாரத்தும்,' [திருநாவுக்கரசர் தேவாரம்] இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இது சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. உஜ்ஜையினி என்னும் பெயரில் இந்நகரம் பற்றிய குறிப்பு புத்தர் காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது அவந்தி நாட்டின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான அசோகர் மௌரியப் பேரரசின் மேற்கு மாகாண இராஜப்பிரதிநிதியாக [viceroy] இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். அப்பொழுது உஜ்ஜேனியில் வசூல் செய்யும் பொறுப்பு இளவரசர் அசோகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அங்கு, தேவி என்ற ஒரு சேத்தி [Setthi [wealthy merchant] / பண்டைய படிநிலை இயல்பு கொண்ட நான்கு சமூகப் பிரிவுகளுள் ஒன்றான, வைசியர் பிரிவில் வணிக சமூகத்தை சேர்ந்தவள் இவள்] பெண்ணைச் சந்தித்தார். அவர்கள் ஒன்றாக அங்கு வாழ்ந்தனர். இவர்களுக்கு மகிந்த என்ற மகனும், சங்கமித்தா என்ற மகளும் பிறந்தனர். மகிந்தவும் சங்கமித்தாவும் தங்கள் தந்தையுடன் பாடலிபுத்திரத்தில் உள்ள அரண்மனைக்கு சென்றனர், என்றாலும் தாய் தேவி அங்கு போக முடியவில்லை. தேவி வணிக சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், எனவே, அரண்மனையில் வசிக்கத் தகுதி அற்றவர் என்றும் கருதப் பட்டது என்று கூறப்படுகிறது. அது ஒரு சரியான காரணம் என்றால், கட்டாயம் மகிந்தவும் சங்கமித்தாவும் கூட அரண்மனையில் இருக்க தகுதியற்றவர்கள் ஆகும். மகிந்தவின் பிறந்த ஆண்டு புத்தர் இறந்து இருநூற்று நான்கு ஆண்டுகள் எனவும், [6-20. Two hundred years and four years more had elapsed: just at that time Mahinda, the son of Asoka, was born.] மற்றும் சங்கமித்தா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்றும் கூறப்படுகிறது. சில மூலங்களின்படி சங்கமித்தை மற்றும் மகிந்த, இரட்டைப் பிள்ளைகள் ஆவார்கள். சுமார் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்த ஆண்டை துல்லியமாக சுட்டிக்காட்டுவது கட்டாயம் சாத்தியமில்லை. சங்கமித்தா விடயத்திலும் அப்படித்தான். அறிஞர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மகிந்தவையும் சங்கமித்தாவையும் கற்பனையான நபர்களாகக் கருதுகின்றனர். மகிந்த மற்றும் சங்கமித்தா, அசோக மன்னனின் மகன் மற்றும் மகள் என்று எந்த இந்திய ஆதாரங்களிலும் குறிப்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. புத்தர் இறந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது என்ற கூற்று இலங்கை வரலாற்றில் மட்டும் காணப்படுகிறது. இதை பொதுவாக நீண்ட பாரம்பரியம் அல்லது தெற்கு பாரம்பரியம் [Long Tradition or Southern Tradition] என்று அழைக்கப்படுகிறது. என்றாலும் புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்ததாக, புத்தர் பிறந்து, வளர்ந்து இறந்த இந்தியாவின் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இது வடக்கு பாரம்பரியம் அல்லது குறுகிய பாரம்பரியம் [Northern Tradition or Short Tradition] என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய அரசு ஊழியர் ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் [George Turnour] கி பி 1837 இல் மகாவம்சத்தை மொழிபெயர்த்தார். மேலும் அவரது செல்வாக்கு, அன்று இலங்கையின் இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னுரிமை அளித்து, நூறு ஆண்டுகள் என்ற இந்தியர்களின் வரலாற்றுக் குறிப்பை பின் தள்ளியது. புத்தரின் மரணம் ஜோர்ஜ் டர்னரால் முதலில் கிமு 543 என்று ஊகிக்கப்பட்டது. என்றாலும் இந்திய பாரம்பரியத்தைப் பின்பற்றினால், புத்தரின் மரணம் கிமு 369 இல் நிகழ்ந்திருக்க வேண்டும். மேலும் இந்த அத்தியாயமும் இலங்கையில் நடந்த எந்த மனித வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. Part: 43 / Appendix – Dipavamsa / 'If Devi ls unfit to reside in the palace, How her children fit to stay there?' Prince Asoka was entrusted with the collection of revenue in Ujjeni. He met a Setthi (Vaisya- trading community) lady named Devi, and, they cohabited. A son, Mahinda, and a daughter, sanghamitta, were born to them. Mahinda and sanghamitta moved with their father to the palace in Pataliputra, but not the mother, Devi. It is cited that Devi belonged to trading community and, therefore, not considered fit to reside in the palace. If that is a sound reason then Mahinda and sanghamitta too unfit to be in the palace. Mahinda’s year of birth is given as two hundred and four years after the death of the Buddha, 6-20, and sanghamitta two years later. This exact pinpointing of the year of birth of a child about two thousand two hundred and fifty years ago is not possible. Same is the case with sanghamitta. Some members of the scholarly community consider Mahinda and sanghamitta as fictitious persons. There are no references to Mahinda and sanghamitta as the son and the daughter of the King Asoka in any Indian sources. The statement that Asoka’s coronation took place two hundred and eighteen years after the Buddha’s death is from the Ceylonese chronicles only. This is the Long Tradition or Southern Tradition. The Indian sources indicate that it took place one hundred years after the Buddha’s death. This is the Northern Tradition or Short Tradition. The English civil servant George Turnour translated the Mahavamsa in 1837 A. D. and his influence overshadowed the Indian one hundred years in preference to the Ceylonese two hundred and eighteen years. The Buddha attained Nirvana in 543 B. C. based on this Ceylonese tradition. As per Indian tradition, the Buddha’s death would have occurred about 369 B. C. See the Appendix-Mahaparinirvana of the Buddha for more information. This chapter 6 is also not about any human historical events that took place in Lanka. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 44 A தொடரும் / Will follow துளி/DROP: 1897 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 43 https://www.facebook.com/groups/978753388866632/posts/32313646158283946/?
  4. மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025] இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து இந்திரா லோகத்தை கனடாவில் அமைத்து இதயங்கள் இணைந்த நல்ல நாள் இன்பம் பொழியும் திருமணநாள் மகளே! நடனத்தின் நயம் இசையின் இனிமை அன்பின் அலை நீயே மதுரா! அமைதியின் ஆழம் உள்ளத்தில் பலம் பாசத்தின் கடல் நீயே ஹரி! ஆண்டுகள் கடந்தாலும் அன்பு நிலைக்கும் ஆயிரம் நடந்தாலும் உண்மை வாழும் முடிவில்லா ஒளியால் வாழ்வை நிரப்ப பெற்றோரின் வாழ்த்து ஆறாய் பாயட்டும்! புன்னகை விடியலை ஒளிரச் செய்ய அமைதி என்றும் உங்களைத் தழுவ உரிமைக்கு இடமளித்து உணர்வினை மதிக்க இனிதாய் வாழ்ந்திடுக அகிலம் போற்ற !💖 "இன்று போல் என்றும் இணைபிரியாமல், எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்" அப்பா & மாமா: [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Born in Sri Lanka, blossomed in England, Built a heavenly home in Canada’s land. On this day when hearts became one, May joy shower endlessly, my beloved daughter. Grace of dance and music divine, Mathura, your soul forever shines! Hari, the calm depth where love does flow, A sea of affection, pure and aglow. Years may pass, yet love will stay, Truth will guide your hearts each day. With boundless light your lives be filled, By parents’ blessings gently stilled. May smiles brighten every dawn, May peace embrace you when night is drawn. Cherish, respect, and love as one — And live a life the world will crown. 💖 With love and blessings from Appa & Mama மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32305914842390411/?
  5. எனது அறிவார்ந்த தேடல்: 1314 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 42] [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 42 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தகனத்திற்குப் பிறகு, எஞ்சியிருக்கும் எலும்புகளை, அந்த பண்டைய காலத்தில் 84,000 பகுதிகளாகப் பிரிக்க முடியுமா?' தீபவம்சத்தில், மிக நீண்ட காலம் வாழ்ந்து நான்கு முன்னால் புத்தர்களிடம் உடனிருந்த கொண்ட, ஒரு பெரிய நாகாவைப் [great Naga] பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெரிய நாகர், தங்கச் சங்கிலி அணிந்து, அசோகரைப் பார்க்க வந்தான். இவர் நான்கு புத்தர்களை சந்தித்து, அதன் பிறகு, அசோகரைச் சந்திக்கும் வரை வாழ்ந்தார் என்பதில் இருந்து, இது முற்றிலும் ஒரு புராணக்கதை என்று தெரிகிறது. என்றாலும், நாகர்கள் இலங்கையிலிருந்து மகத வரையிலும், வடக்கே ஆப்கானிஸ்தானிலும் கூட வாழ்ந்தனர் என்பதை இந்தத் தகவல் ஒப்புக் கொள்கிறது. அது மட்டும் அல்ல, புத்த மதம் சித்தார்த்த கௌதமருக்கு பிறகே தோன்றியது, அப்படி என்றால் அவருக்கு முன்னைய மூன்று புத்தர்களையும் [?] புத்தர் என்று அழைப்பதின் காரணம் என்ன? எனக்குப் புரியவில்லை? அசோகர் தனது முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, [6-18] புத்த மதத்திற்கு மாறினார். அவர் அதற்கு முன், பசண்டா, அதாவது, புத்த மதம் அற்ற ஒரு மதத்தைப் பின்பற்றினார். [Pasanda religion / "Pasanda" in this context refers to heretical or non-Buddhist religious sects, often used in Pali and Sanskrit literature to describe different ascetic or Brahmanical traditions. / "பசண்டா" என்பது புத்தமதமற்ற மதப் பிரிவுகளைக் குறிக்கிறது, இது பாளி மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் வெவ்வேறு துறவி அல்லது பிராமண மரபுகளை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.]. இந்த "பசண்டா" 6-24 இல் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சமயங்களைக் அல்லது கொள்கைகளைக் பின்தொடரும் பலரை அழைத்து, உண்மையான கோட்பாட்டைக் கண்டறிய அவர்களிடம் அசோகர் விசாரித்தார். ஆனால் எல்லோரும் அவரை நம்பிக்கைப்படுத்த தவறிவிட்டனர். அவ்வேளை, அசோகன் ஒரு இளம் அலைந்து திரிந்த சந்நியாசியை அல்லது ஒரு அருகதர் துறவியை [நிக்ரோதாவைக் / Nigrodha] கண்டு, அவனைத் தன் அரண்மனைக்குள் அழைத்து வந்தார். அருகதர் (Arhat or Arahant) என்பதற்கு, ஆன்மீக ஞான ஒளி (நிர்வாணம்) அடைவதற்கு மிகவும் தகுதியானவர் (one who is worthy) அல்லது மிகச் சரியான மனிதர் என்று தேரவாத பௌத்தப்பிரிவு கருத்து கூறுகிறது. அசோகர், தான் இதுவரை தேடிக்கொண்டு இருந்த, மரியாதைக்குரியவராக அந்த அருகதர் துறவியை மதிப்பிட்டார். அதனால், விரைவில், அவன், அசோகரின் ஆன்மீக வழிகாட்டி ஆனான். கோட்பாட்டில் 84,000 பிரிவுகள் இருப்பதாக அசோகர் அவனிடம் இருந்து அறிந்து கொண்டார். எனவே, ஒவ்வொரு நகரத்திலும் கோட்பாட்டின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒன்று வீதம், 84,000 மடங்களைக் கட்ட அசோகர் முடிவு செய்தார். அது மட்டும் அல்ல இந்த 84,000 மடங்கள் மூன்று ஆண்டுகளில் கட்டப்பட்டன; சராசரியாக ஒரு நாளைக்கு எழுபத்தேழு மடங்கள்? அந்த பண்டைய நாட்களில் இந்த விகிதத்தை அடைவது மிகவும் சாத்தியமற்றது? ஆகவே தான், இது ஒரு உண்மையான, எளிமையான புராணமாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இந்த புராணக்கதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. அதாவது, புத்தர் தகனம் செய்யப்பட்டபோது, புத்தரின் தாதுக்களைப் (relics) பெறுவதற்கான உரிமைக்கான உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்கள் இருந்தன, மேலும் மன்னர்கள் தங்கள் கோரிக்கைகளை இராணுவத்துடன் ஆதரிக்கத் தயாராக இருந்தனர். இங்கு புத்தரின் நினைவுச்சின்னங்கள் என்பது, கௌதம புத்தரின் மரணத்திற்குப் பிறகு (பரிநிர்வாணம்) அவருடன் தொடர்புடைய உடல் எச்சங்கள் ஆகும். அதாவது, அப்போது, அங்கிருந்த துரோணன் என்னும் பார்ப்பனன், அவர்களை அமைதிப்படுத்தி, புத்த தாதுவைப் பல இடங்களுக்கு அனுப்பினால், அத்தாதுக்களின் மேல் சேதியங்களை அமைத்துக் கொண்டாடுவார்கள்; அதனால் பகவன் புத்தருடைய புகழும் பெருமையும் உலகெங்கும் பரவும் என்று பரிந்து பேசி, எச்சங்களை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து உரிமை கோருபவர்களுக்கு கொடுத்தார். ஒரு பகட்டான, ஆடம்பர விழாவுடன் நினைவுச் சின்னங்களை அவர்கள் தங்கள் தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்று ஸ்தூபிகளில் பதித்துள்ளனர். இது 'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums'' என்ற புத்தகத்தின் அத்தியாயம் 2 இல் இது விவரிக்கப்பட்டுள்ளது. அசோகர் 84,000 மடங்களைக் கட்ட முடிவு செய்தபோது, அவர் மீண்டும் நிலத்தை அகழ்ந்து, முன்பு நிலத்தின் கீழ் புதைத்த ஏழு இடங்களில் இருந்து நினைவுச்சின்னங்களைப் பெற்றார். என்றாலும் நாகர்கள் வசம் இருந்த எட்டாவது புத்தரின் தாதுப் பகுதியை அவரால் பெற முடியவில்லை. ஆனால், பேரரசர் அசோகா தோல்வியுற்ற அந்த எட்டாவது புத்தரின் தாதுவை, துட்டகாமினி, நாகரின் பாதாள உலகத்திலிருந்து பெற்றதாக மகாவம்சம் பெருமையாக கூறுகிறது. இது சம்பந்தமாக மகாவம்சத்தின் முப்பத்தொன்றாம் அத்தியாயத்தைப் பார்க்கவும். மேலும், 'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums' என்ற புத்தகத்தின் அத்தியாயம் 1-ன் பக்கம் 5-ல், 'பாளி மரபுப்படி, சாம்பலோ அல்லது புகைக் கரியோ இல்லாமல், தகனம் செய்தபின், எலும்பு துண்டுகள் தவிர, எதுவும் எஞ்சியிருக்கவில்லை' [‘According to Pali tradition nothing was left after the cremation except of bits of bone, without any ashes or soot’] என்று கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் எலும்புகளை 84,000 பகுதிகளாகப் பிரிக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்காது, ஒருவேளை இப்போது கூட இன்னும் சாத்தியமில்லை என்றே நம்புகிறேன். அதுவும் முதலில் எட்டு பகுதிகளாகப் பிரித்து [இது கட்டாயம் சாத்தியம்], அதில் புதைத்த ஏழு பகுதிகளை, 200 ஆண்டுகளுக்குப் பின் தோண்டி எடுத்து?, அவையை 84,000 சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது என்பது ஏற்கக்கூடியதாகத் தெரியவில்லை? உங்களுக்கு இதற்கு ஏற்ற விடைகள் இருக்குமாயின் சொல்லுங்கள். Part: 42 / Appendix – Dipavamsa / 'Is possible to divide the bit of bones, left after the cremation into 84,000 portions at that time, probably even now?' It is also mentioned about the great Naga who lived for very long and have attended to four former Buddhas. This great Naga, wearing gold chain, came to see Asoka. This is purely a legend, but, however, acknowledges that Nagas were living from Lanka to as far as Magadha, even further north to Afghanistan. Asoka converted to Buddhist faith three years after his coronation, 6-18. He followed Pasanda religion prior to that, 6-24. Asoka invited many people from various followings, and questioned them to find the true doctrine. All failed to convince him. Asoka happened to see young Nigrodha, and brought him inside his palace. He assessed him to be a venerable one whom he was searching for. He became the spiritual guide of Asoka. Asoka learnt from Nigrodha that there were 84,000 sections in the doctrine. Asoka decided to construct 84,000 monasteries, one for each sections of the Faith in each town. These monasteries were constructed in three years; on average about seventy seven monasteries a day. This rate is quite impossible to achieve in those days, and it must be a pure and simple legend. The Dipavamsa is missing a point in the legend of Asoka building 84,000 monasteries widely believed in India. See the page 6 of the Reference 'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums' in this regard, and the legend is as follows. When Buddha was cremated, there were claims and counter claims to the right of receive the relics of the Buddha, and the kings were ready to back up their claims with armies. A Brahman named Drona interceded and divided the remains into eight portions to the eight claimants. They took the relic in reliquaries with pomp and pageantry to their countries and enshrined in Stupas. This is detailed in the chapter 2 of the Reference 'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums'. When Asoka decided to construct 84,000 monasteries, he re-excavated and obtained the relics from seven locations. He was unable to obtain the portion which was in the possession of the Nagas. Mahavamsa states that Dutthagamani was able to obtain this relic portion from the Naga’s underworld to subtly indicate that Dutthagamani succeeded where the Emperor Asoka failed. See the chapter thirty one of the Mahavamsa in this regard. Furthermore, it is stated in the page 5 of the Chapter 1 of the Reference 'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums' that ‘According to Pali tradition nothing was left after the cremation except of bits of bone, without any ashes or soot’. The technology must not have been there to divide the bit of bones into 84,000 portions at that time, probably not possible even now. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 43 தொடரும் / Will follow துளி/DROP: 1896 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 42 https://www.facebook.com/groups/978753388866632/posts/32297430556572173/?
  6. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 41 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 41 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'அசோகர் தனது தொண்ணூற்றொன்பது சகோதரர்களைக் கொன்றாரா?' அத்தியாயம் 6 பெரும்பாலும் அசோகா மன்னன், அவனது இரண்டு குழந்தைகள் மற்றும் புத்த மதத்தைப் பற்றி கூறுகிறது. புத்தர் இறந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகர் அரசனாக புனிதப்படுத்தப்பட்டார் என்று இதில் கூறப்பட்டுள்ளது. அசோகரின் முடிசூட்டு விழா இந்திய மற்றும் பிற வெளிப்புற வரலாற்று தரவுகளின் அடிப்படையில் தோராயமாக நிறுவப்பட்டது. இருநூற்று பதினெட்டு வருட இடைவெளியின் அடிப்படையில் புத்தர் இறந்த ஆண்டை நாம் மதிப்பிடலாம். மகிந்த தேரர் மற்றும் தேரி சங்கமித்தா [பாளி] / சங்கமித்ரா [சம்ஸ்கிருதம்] அசோகருக்கு அவர் உஜ்ஜெனியில் [Ujjeni] துணை அரசராக இருந்தபோது பிறந்தனர் எனக் 6-16 முதல் 17 வரைக் கூறுகிறது [16. There the daughter of a Seṭṭhi, known by the name of Devī, having cohabited with him, gave birth to a most noble son. 17. Mahinda and Saṅghamittā chose to receive the Pabbajjā ordination; having obtained Pabbajjā, they both destroyed the fetter of (individual) existence.]. இங்கு 17 ஐ, கவனத்தில் எடுத்தால், அங்கு கூறப்பட்டுள்ள பப்பாஜ்ஜா என்பது பாளி மொழியில் "வெளியே செல்வது" என்று பொருள்படும். இது புத்த துறவியாக அல்லது துறவறத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் செயலைக் குறிக்கிறது. அசோகர் தனது நூறு சகோதரர்களை தனது முடிசூட்டுக்கு முன்னதாகக் கொன்றார் என 6-22 கூறுகிறது. [22. தனது நூறு சகோதரர்களைக் கொன்றுவிட்டு, தனியாக தனது வம்சத்தை தொடர, மகிந்தவின் பதினான்காம் ஆண்டில் அசோகன் அரசனாகப் பதவியேற்றார். / 22. Having killed his hundred brothers, alone continuing his race, Asoka was anointed king in Mahinda’s fourteenth year.] புத்த துறவி சமூகம், இந்த சகோதரக் கொலை பற்றி எந்தக் கோபத்தையோ, வருத்தத்தையோ, இரக்கத்தையோ வெளிப்படுத்தவில்லை என்பது ஆச்சரியமே! அதுமட்டும் அல்ல, அவர்கள் அதை ஆமோதித்ததாகத் தோன்றுகிறது! அசோகர் உண்மையில் தனது தொண்ணூற்றொன்பது அல்லது நூறு சகோதரர்களைக் கொன்றாரா என்று அறிஞர் சமூகம் தீவிரமாக சந்தேகிக்கின்றது; ஒருவேளை ஒரு சில சகோதரர்களைக் கொன்று இருக்கலாம்?. எனினும், இந்த அத்தியாயம் இந்தியாவில் பல்வேறு இடங்களில், பல கல்வெட்டுகளின் ஆசிரியரை அடையாளம் காண துப்பு வழங்கியிருக்கிறது. அந்த கல்வெட்டுகள் அனைத்தும் ஆசிரியரின் உண்மையான பெயர் இல்லாமல் அநாமதேயமாக [பெயரும் நாடும் (ஊரும்) அறியப்படாத ஒரு நபர்] முதலில் இருந்தன. உதாரணமாக, ஜேம்ஸ் பிரின்செப் [James Prinsep] கல்வெட்டுகளை மொழிபெயர்த்தாலும், அவரால் கல்வெட்டுகளின் ஆசிரியரை அடையாளம் காண முடியவில்லை. [இங்கு குறிப்பிட்ட கல்வெட்டுகள், பெயர் தெரியாமல் முன்பு இருந்த அசோகனின் கல்வெட்டுகள் ஆகும்] மேற்கூறிய கல்வெட்டுகளில், ‘பியதாசனா’ [தேவநம்பிய மற்றும் பியதாசி அல்லது பியதாசனா, இவை அசோகரின் பெயரின் மாறுபாடுகள் / Devanampiya and Piyadasi or Piyadassana] என்ற பெயர் இடம் பெற்றுள்ளன. அதேவேளை, [Dīpavaṁsa / VI. [Asoka’s Conversion] இல்] 6 ஆம் அத்தியாயம் - 18 ஆம் 24 ஆம் பாடலில், அசோகா மற்றும் பியதாசனா என்ற பெயர் கூறப்பட்டுள்ளதைக் காண்க. [18. அசோகர் பாட்டலிபுத்தாவில் ஆட்சி செய்தார், நகரங்களில் சிறந்தது; அவரது முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் புத்தரின் நம்பிக்கைக்கு மாற்றப்பட்டார். / 24. இந்தியாவின் பேரரசர் அசோகரின் மற்றொரு பெயரான பியதாசி மன்னனைப் பற்றி பேசுகிறது. அசோகர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு (?) அதிகாரப்பூர்வமாக மன்னராக முடிசூட்டப்பட்டார் என்றும் மன்னரான பிறகு, அவர் பௌத்தம் அல்லாத மத குழுக்களுக்கும் மரியாதை செலுத்தி மூன்று ஆண்டுகள் கழித்தார் எனவும் கூறுகிறது (பாசண்டா என்பது மதவெறியர்கள் அல்லது காஃபிர்களைக் குறிக்கிறது, அதாவது பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள்). / 18. Asoka ruled in Pāṭaliputta, best of towns; three years after his coronation he was converted to Buddha’s faith. 24. They crowned Piyadassi after full twenty years (?); he passed three years doing honour to Pāsaṇḍa infidels.] குறிப்பாக இந்த இரண்டு வசனங்களும் தான், கி பி 1837 இல் ஜேம்ஸ் பிரின்செப் [James Prinsep] என்பவரால் இந்தியாவின் தொலைந்து போன புத்த சக்கரவர்த்தி அசோகாவை, அடையாளம் காண உதவியது. என்றாலும், அதன் பின், கி பி 1915 இல் மஸ்கியில் [Maski] கண்டு பிடிக்கப்பட்ட சிறிய பாறைக் கல்வெட்டு தான், 'அசோகா' என்ற உண்மையான பெயருடன் பட்டப் பெயரான 'பியதாசனா' வையும் ஒன்றாகக் கொண்டு இருந்தன. இந்த கல்வெட்டுகள் அசோகர் கல்வெட்டுக்கள் அல்லது அசோகரின் கட்டளைகள் [ Asoka’s Edicts, Asoka’s Command.] என்று இன்று அழைக்கப்படுகின்றன. Part: 41 / Appendix – Dipavamsa / 'Is Asoka slaughtered his ninety nine brothers?' Chapter 6 is mostly about the King Asoka, his two children and Buddhism. It was given in this that Asoka was consecrated two hundred and eighteen years after Buddha’s death. Asoka’s coronation could be approximately established based on the Indian and other external historical data. Then the year of the Buddha’s death could be evaluated based on the gap of two hundred and eighteen years. Mahinda Thera and Theri sanghamitta were born to Asoka when he was in Ujjeni as sub-king, 6-16 to 17. Asoka killed his one hundred brothers prior to his coronation, 6-22. [22. Having killed his hundred brothers, alone continuing his race, Asoka was anointed king in Mahinda’s fourteenth year.] The monkish community never expressed any indignation, remorse or compunction in this parricide. They seemed to have approved of it! The scholarly community seriously doubts whether Asoka really slaughtered his ninety nine brothers; perhaps a few. This chapter must have provided the clue to identify the author of the many inscriptions in India on various locations, far and wide. All those inscriptions were anonymous without the real name of the author. James Prinsep was able to translate the inscriptions, but unable to identify the author of the inscriptions. The word ‘Piyadassana‘ [the names Devanampiya and Piyadasi or ‘Piyadassana , which are variations of Ashoka's name] occurred in the inscriptions. The name Asoka and Piyadasana occurred in this chapter [18. Asoka ruled in Pāṭaliputta, best of towns; three years after his coronation he was converted to Buddha’s faith. / 24. They crowned Piyadassi after full twenty years (?); he passed three years doing honour to Pāsaṇḍa infidels.] which enabled to identify the lost Buddhist emperor of India, Asoka, by James Prinsep around 1837 A. D. The minor rock inscriptions found at Maski in 1915 A. D. has the real name Asoka with the appellation Piyadassana, which ultimately confirmed the author of the inscriptions as the King Asoka. These inscriptions are known as Asoka’s Edicts, Asoka’s Command. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 42 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 41 https://www.facebook.com/groups/978753388866632/posts/32281951261453436/?
  7. 'கருணை பொழியும் கதிர்காம முருகா' கருணை பொழியும் கதிர்காம முருகா கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா! கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன் கண்கள் இரண்டும் அழகில் மயங்குது! சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள் சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய்! சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட சங்கமம் ஆகிறாள் இதயத்தில் இன்று! கண்களில் ஒரு காதல் தேடல் கரை புரண்டு ஓடுது மனதில்! கதிரவன் ஒளியில் அவள் மட்டுமே கந்தன் கடம்பனாய் என்னை அழைக்கிறாள்! உன்னைக் காண தனிமை ஏங்குதே ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே! வள்ளி நீயோ முருகன் நானோ வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'கருணை பொழியும் கதிர்காம முருகா'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32280545221594040/?
  8. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 40 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 40 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தேரவாத பௌத்தத்தில் 84,000 என்ற எண், ஒரு சிறப்பு எண்ணா?' அத்தியாயம் 4 இந்தியாவில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது பௌத்த சபைகளைப் பற்றியது. முதலாவது ஒரு புத்தர் இறந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு நடத்தப்பட்டது. அது ஏழு மாதங்களுக்கு தொடர்ந்து நடந்தது. இந்த நிகழ்வுகள் 5-5 வரை தீபவம்சம் கூறுகிறது. இரண்டாவது பௌத்த சபை, புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்டது. அது எட்டு மாதங்கள் வரைத் தொடர்ந்தது. இந்த நிகழ்வு 5-29 வரை தொடர்ந்தது. முதல் பௌத்த சபையின் தேரர்கள் புத்தரின் போதனைகளை சேகரித்து மகாகாசியபர் (Mahākāśyapa) (சமசுகிருதம்; பாலி: Mahākassapa] தலைமையில் பௌத்த கருத்தை நிறுவினர். புத்தரின் போதனைகளின் தொகுப்பு முடிந்ததும் அங்கு - அதை வரவேற்பது போல - சிறப்பியல்பு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த ஏழு இலட்சம் பிக்குகளில் இருந்து, ஐநூறு தேரர்களைத் [பிரதிநிதிகளைத்] தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிப்பது என்ற ஒரு கருத்தாக்கம் ஒன்றுக ஏற்றுக்கொள்ளப்பட்டது; வாக்களிப்பதன் மூலம் உலகில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முதல் நிகழ்வாகவோ அல்லது ஒரு பண்டைய நிகழ்வுகளில் ஒன்றாகவோ இது இருக்கலாம்? [4-2. They all, having made enquiry and determined which were the most worthy, elected by vote of the congregation five hundred Theras.] தேரர்கள் கருத்துகளைத் தொகுத்ததும், அது தேரவாத பௌத்தம் என்று அழைக்கப்பட்டது. இரண்டாவது பௌத்த சபையானது, முதல் சபையில் குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதாகும். இரண்டு பௌத்த சபைகளும் இந்தியாவில் நடந்தன. எனவே, இந்த அத்தியாயத்தில் இலங்கையில் நடந்த எந்த வரலாற்று மனித நிகழ்வுகளும் இல்லை. தேரவாத பௌத்தத்தில் 84,000 என்ற எண் ஒரு சிறப்பு எண் போலத் தெரிகிறது. உதாரணமாக, கோட்பாட்டில் 84,000 பிரிவுகள் உள்ளதுடன், 84,000 நகரங்கள் இருந்ததும், அந்த ஒவ்வொரு நகரத்திலும் அசோகர் ஒரு மடத்தை கட்டினார் என்றும் கூறப்பட்டுள்ளது ஆச்சரியமே! இலங்கையின் வரலாற்றிற்கு முக்கியமில்லாத அரசர்கள் பற்றியும் மற்றும் துறவிகள் பற்றியும் சில துணை விவரங்கள் இங்கு காணப்படுகின்றன. அத்தியாயம் 5 தேரவாத பௌத்தத்தில் [Theravada Buddhism] இருந்து எழுந்த பதினேழு பிரிவுகளைப் பற்றியது. தேரவாத பௌத்தம் நூறு ஆண்டுகள் தூய்மையாக, தனித்துவமாக இருந்தது. என்றாலும், பின்னர் பதினேழு பிரிவுகள் அங்கு உண்டாக்கின; 5-25 இல், அசோக மன்னன் சுசுநாகாவின் மகன் என குறிக்கப் பட்டுள்ளது [25. At that time Asoka, the son of Susunāga, was king; that prince ruled in the town of Pāṭaliputta.]. இங்கே கட்டாயம் ஒரு எழுத்துப்பிழை இருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட அரசன் கலா-அசோகனாகத் தான் இருக்கவேண்டும். எழுதியவர் அங்கும் இங்கும், புராணங்களிலும், வாய்மொழி கதைகளிலும் பொருக்கி எடுத்து, சரி பிழை ஒன்றும் பார்க்காமல், எழுதியது தெரியவருகிறது. ஏன் என்றால், இவன் கட்டாயம் தம்ம அசோகனாக இருக்க முடியாது. ஏனென்றால், கலா-அசோகர் தான் சிசுநாக வம்சத்தின் ஆட்சியாளராக இருந்தார் என்பதே உண்மை [King Kāḷāsoka was the son of Susunāga and ruled Pāṭaliputta for 28 years.] மேலும் கலா-அசோகர், காகவர்ணன் [Kakavarna] என்றும் அழைக்கப்பட்டார். அவர் வம்சத்தின் நிறுவனரான சிசுநாகாவின் மகன் மற்றும் வாரிசு ஆவார். சில அறிஞர்கள் கலா-அசோகாவை கற்பனையான பாத்திரமாகக் கருதுகின்றனர். புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் பன்னிரண்டாயிரம் வஜ்ஜிபுத்தர்களால் [Vajjiputas / பொல்லாத மனிதர்கள் / The Vajjiputtaka Bhikkhus were a group of Buddhist monks who split from the orthodox Theras. The Vajjiputtakas refused to accept the finding of Revatas Council and formed a separate sect, the Mahasanghikas, numbering ten thousand monks, who held a recital of their own.] நியதிகளை [a set of rules] மாற்றியமைக்கும் முயற்சி நடந்தது. எட்டு புகழ்பெற்ற தேரர்கள் இந்த முயற்சியை எதிர்க்க கூடியிருந்தனர், மேலும் மன்னன் (கலா)-அசோகரின் கீழ் இரண்டாவது புத்தமத சபை நடந்தது. மாற்றத்தை விரும்பிய அந்த தேரர்கள் பிரிந்து மகாயான பௌத்தத்தை உருவாக்கினர், அது திபெத்துக்கும் பின்னர் சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவிற்கும் பரவியது. தேரவாதத்தைத் தவிர, மொத்தம் பதினேழு பிரிவுகளாகப் பல பிரிவுகள் உருவாகின. (கலா) அசோக மன்னரின் கீழ் இரண்டாவது சபைக்குப் பிறகு நூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது பௌத்த மாநாடு நடந்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாம் பௌத்த சபையில் தேரவாதக் கருத்து மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் பல பிறழ்ந்த பிக்குகள் [deviant Bikkhus], [தம்ப] அசோகா ["Dampa Asoka"] அரசனால் பிக்கு பதவியில் இருந்து கழற்றப்பட்டனர். புத்தரின் மகாபரிநிர்வாணத்துடன் தொடர்பு படுத்தி, இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு மன்னர்களின் ஆட்சியின் நீளம் மற்றும் ஒப்பீட்டு மேற்பொருந்துதல் [relative overlapping] இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல, பல புராணங்களும் அத்தியாயத்தில் உள்ளன. பிரம்ம லோகத்திலிருந்து (பிராமண தேவர்களின் உலகம்) அவதரித்த? மொக்கலிபுத்த திசா [Moggaliputta Tissa] தான் மூன்றாம் சபையின் தலைவர். இதனால்த் தான் வின்சென்ட் ஏ. ஸ்மித் போன்ற அறிஞர்கள், மூன்றாவது பௌத்த பேரவை உண்மையில் நடந்ததா என்ற சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர். அதேநேரம் இரண்டாவது பௌத்த சபை குறித்தும் சந்தேகம் உள்ளது. 84,000 என்ற எண்ணிக்கையும் பூகம்பமும் புத்த மதத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது! இந்த அத்தியாயத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இலங்கையில் நடக்கவில்லை, எனவே இலங்கையின் மனித வரலாற்றில் இதுவும் பங்களிக்கவில்லை. Part: 40 / Appendix – Dipavamsa / 'Is 84,000 a special number in the Theravada Buddhism?' Chapter 4 is about the First and the Second Buddhist Councils which were held in India. The first one was held four months after the Buddha’s death and continued for seven months, 5-5. The second council was held one hundred years after the death of the Buddha and continued for eight months, 5-29. Theras of the First Buddhist Council collected the teachings of Buddha and established the Buddhist concept under the leadership of Mahakassapa. The Characteristic earthquake also happened on the completion of the collection of the Buddha’s teachings. The concept of voting to elect representatives is adopted to select the five hundred Theras from the seven hundred thousand Bikkhus who assembled; could be the first or among the earliest in record to elect representatives by voting, 4-2. As Theras compiled the concepts it is called Theravada Buddhism. The second Buddhist council is to reaffirm the Faith as set out in the First Council. Both the Councils had taken place in India. This chapter also has no historical human events that took place in Lanka. The number 84,000 seems to be a special number in the Theravada Buddhism. There are 84,000 divisions in the doctrine. There are also 84,000 towns, and Asoka built a monastery in each of the town. There are some ancillary details about kings and monks which are not essential for the history of Lanka. Chapter 5 is about the seventeen other sects arose from the Theravada Buddhism. Theravada Buddhism remained pure for one hundred years. Then arose the different sects; seventeen in number. 5-25 implies that the King Asoka is the son of Susunaga. There must be a clerical error here. The referenced king must be Kala-Asoka, and not the Dhamma Asoka. Kala-Asoka was a ruler in the Shishunaga dynasty, and was also known as Kakavarna. He was the son and successor of Shishunaga, the dynasty's founder. Some scholars consider Kala-Asoka a fictitious character. There was an attempt to modify the canons by about twelve thousand Vajjiputas [wicked men] one hundred years after the death of the Buddha. Eight eminent Theras assembled to counter this attempt, and had the Second Buddhist Council under the aegis of the king (Kala)-Asoka. Those Theras who wanted the modification separated and formed the Mahayana Buddhism which spread to Tibet and then to China, Japan and Korea. Then many other sects formed, totalling seventeen sects, apart from Theravada. Third Buddhist Council allegedly took place one hundred and eighteen years after the second council under the aegis of the King Asoka. Theravada concept was reaffirmed in the Third Buddhist Council, and many deviant Bikkhus were disrobed by the King Asoka. The Lengths of the reigns relative to the Mahaparinirvana of the Buddha of various kings of India and Lanka and the relative overlapping of the reigns are also given in this chapter. Many legends are also in the chapter. Moggaliputta Tissa who descended from the Brahma’s world (world of gods) is the chief of the Third Council. Scholars like Vincent A. Smith, express doubts whether the Third Buddhist Council actually took place. There is doubt about the Second Buddhist Council too. It is interesting to note that the number 84,000 and earthquake are very special to Buddhism! All the events in this chapter happened not in Lanka, and therefore do not contribute to the human history of Lanka. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 41 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 40 https://www.facebook.com/groups/978753388866632/posts/32241043422210887/?
  9. “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார்! நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல் தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து! அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம் ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம்! இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில் ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது! அந்த நொடியில் நூலகத்தின் சுவர்கள் சாம்பலின் நினைவைக் கூறின! சாம்பலின் நடுவே விதை முளைத்தது தமிழர்களின் உள்ளத்தில் மீண்டும் மலர்ந்தாள்! மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின! நூலகத்தின் அமைதி தெய்வீகத் தாலாட்டானது “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! https://www.facebook.com/groups/978753388866632/posts/32226482883666941/?
  10. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 39 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 39 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தர் இந்தியாவை விட்டு வெளியே எங்கேயாவது சென்றாரா?' புத்தர் நாகர்களை வென்று ஜேதவனத்திற்குத் [ஜேதவனம் (Jetavana) பரத கண்டத்தின் பண்டைய நகரமான சிராவஸ்தி அருகே கௌதம புத்தர் மற்றும் பௌத்த பிக்குகள் தங்குவதற்காகவும், பௌத்த தத்துவங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும், அனாதபிண்டிகன் என்ற செல்வந்தன் புத்தருக்குத் தானமான வழங்கிய தோட்டமாகும்.] திரும்பினார். பின்னர் மீண்டும் நாக அரசரின் அழைப்பின் பேரில், புத்தர் மூன்றாவது முறையாக இலங்கைக்கு விஜயம் செய்தார். புத்தர் தனது மூன்றாவது பயணமாக 2-52 இல் இந்தியாவிலிருந்து ஐந்நூறு தேரர்களுடன் இலங்கைக்கு காற்றில் பறந்து சென்றார்? அப்படி உண்மையில் நடந்து இருந்தால், இது ஒரு விசித்திரமான மற்றும் கண்கவர் காட்சியாக இருந்திருக்கும். பலர் இதை இந்தியாவில் பதிவும் செய்திருப்பார்கள், ஆனால் இந்தியாவின் எந்த வரலாற்று குறிப்பிலோ இல்லை புராணங்களிலோ அப்படி ஒன்றும் இல்லை! உப மனித நாகர்கள் அல்லது மனிதர் அல்லாதவர்கள், ஆயிரம் மைலுக்கும் அப்பால் இருந்த புத்தருக்கு ஐந்நூறு பிக்குகளுடன் மீண்டும் வருகை தரும் படி அழைப்பை அனுப்பும் திறன் கொண்டவை என்பது உண்மையில் விசித்திரமே ! எனினும் இது, இந்த அத்தியாயம், இலங்கையில் நடந்த எந்த மனித வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற புத்தகத்தின் பக்கம் 47 இல், கௌதம புத்தர் மகதத்திலும் [Magadha] அதற்கு அருகாமையிலும் ஒரு சிறிய பிரதேசத்தில் தான் வாழ்ந்தார், உலாவினார், இறந்தார் என்று கூறுகிறார். முன்பு கூறியது போல், 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' என்ற நூலின் பக்கம் 8ன் படி, புத்தர் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசியில் (Varanasi / Benares) இருந்து 250 மைல்களுக்கு அப்பால் செல்லவே இல்லை என்று கூறுகிறது. காசி என்பது பெனாரஸின் மற்றொரு பெயர். கீழே உள்ள அசோகப் பேரரசின் பரப்பளவைக் காட்டும் வரைபடத்தைப் பார்க்கவும். இந்தியாவில் தோன்றிய எந்த ஆவணங்களும், புத்தர் வான்வழி பறந்து இலங்கைக்கு சென்றது பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. அத்தியாயம் 3, புத்த மரபின்படி உலகின் முதல் விவசாயி மன்னரான மகாசம்மதாவிலிருந்து [Mahasammata] புத்தரின் பரம்பரையைப் பற்றியது ஆகும். உதாரணமாக, இவரைப்பற்றி கூறும் பொழுது, 'முதல் பதவியேற்ற மன்னன், பூமியின் ஆட்சியாளர், புத்திசாலித்தனம் நிறைந்தவர், இளவரசர் மகாசம்மதா என்ற பெயரால், அவரது இராஜ்யத்தை ஆட்சி செய்தார் என்று வர்ணிக்கிறது. / The first inaugurated king, a ruler of the earth, full of brilliancy, prince Mahāsammata by name, reigned over his kingdom. மேலும் சித்தார்த்த (Siddhattha / பின்னர் புத்தர்) மற்றும் அவரது மகன் ராகுலபத்தா [Rahulabhadda] வைப் பற்றி கூறும் பொழுது, சித்தார்த்த சுத்தோதனனின் மகன் என்றும், உலகின் தலைவன் என்றும், ராகுலபத்தாவைப் பெற்றவன் என்றும், பின்னர் புத்ததன்மைக்காக அல்லது புத்தத்துவத்திற்காக, அதில் முழுநேரம் பாடுபடுவதற்காக, தனது வீட்டை விட்டு வெளியேறினான் என வர்ணிக்கிறது. / He the son of Suddhodana, Siddhattha, the chief of the world, begot Rāhulabhadda, and then left his home in order to strive for Buddhaship. புத்தத்தன்மை (சமஸ்கிருதம்: புத்தத்துவம், பாளி: புத்தத்த, அல்லது (இரண்டிலும்) புத்தபாவம்) என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இறுதியாக அந்த அத்தியாயம் "அரசர்களின் பெரும் பரம்பரையின் முடிவு" / End of the Great Lineage of Kings என்று முடிவடைகிறது. மகாநாம தேரரால் தொகுக்கப்பட்ட மகாவம்சம், இந்தக் கருத்துக்கு மாறாக, விஜயன் முதல் மகாசேனா வரையிலான பரம்பரையை மகாவம்சமாகக் கூறுகிறது. புத்தரின் மகாபரிநிர்வாணத்துடன் அல்லது புத்தரின் மரணத்துடன் தொடர்புபடுத்தி அரசர்களின் ஆட்சிக்காலம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அத்தியாயம் இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. Part: 39 / Appendix – Dipavamsa / 'Did Buddha go anywhere outside India?' The Buddha returned to Jetavana after conquering the Nagas. The Buddha made a third visit to Lanka on the invitation of the Naga king. Buddha flew to Lanka with five hundred Theras from India on his third visit, 2-52. It would have been a strange and spectacular sight and many would have had recorded this in India, but none! Sub human Nagas or the serpents were capable of sending an invitation to the Buddha to visit again together with five hundred Bikkhus! Strange! This chapter is also not about any human historical events that took place in Lanka. V. A. Smith states in the page 47 of the Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' that Gautama Buddha lived, moved, and died within a small territory in and near Magadha. As stated earlier, as per the page 8 of the Reference 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends', that the Buddha never moved beyond 250 miles of Benares. Kasi is another name for Benares. See the map showing the extent of the empire of Asoka below. No documents originated in India give any details about the Buddha’s aerial flights to Lanka. Chapter 3 is completely about the Buddha’s lineage from Mahasammata [3. The first inaugurated king, a ruler of the earth, full of brilliancy, prince Mahāsammata by name, reigned over his kingdom.] to Siddhattha (later Buddha) and his son Rahulabhadda [47. He the son of Suddhodana, Siddhattha, the chief of the world, begot Rāhulabhadda, and then left his home in order to strive for Buddhaship.]. 3-50 reads thus;”End of the great lineage of kings”. Mahavamsa complied by Mahanama Thera, contrary to this concept, narrates the lineage from Vijaya to Mahasena as the Mahavamsa. The lengths of reigns of kings are given relative to the Buddha’s Mahaparinirvana, the death of the Buddha. This chapter is also not about human historical events that took place in Lanka. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 40 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 39 https://www.facebook.com/groups/978753388866632/posts/32207411668907396/?
  11. "என் பிறந்த நாளில் மனதில் உதித்தது" / "A memory touched my heart on my birthday" [01/11/2025] இன்று இன்னுமொரு அகவை நாள் மெழுகுவர்த்தி தவிர்த்து தெளிவைத் தேடுகிறேன் மனதில் ஒளியை ஏற்றி உண்மை தேடுகிறேன் கடந்த பாதையை மீண்டும் பார்க்கிறேன்! சில நேரங்களில் நான் சிரித்துக்கொண்டே சில நேரங்களில் நான் அமைதியாக அதிகம் பேசும் நண்பனைப் போல வாழ்வு எனக்கு துணையாய் வந்தது! அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய நாட்களும் உண்டு அறிவுகொண்டு உணர்ந்த இரவும் உண்டு! ஆரம்பித்த எதுவும் முடிவு காணும் ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்கும் ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்! இன்பம் துன்பம் சம பங்கே இரண்டும் நாமே உருவாக்கிய பாதைகளே இதயம் திறந்து வரவேற்கப் பழகு இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்! ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே ஈகை ஆன்மாக்களுக்கு இடையிலான பாலமே ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை! உயர்ந்த நோக்கம் மனதில் எழுக உண்மை கெடாமல் ஒப்பந்தம் செய்க உயிர் பிரிந்தால் திரும்ப பிறக்காது உங்கள் துணையாக நேர்மை இருக்கட்டும்! ஊக்கம் இல்லையேல் தோல்வி நிச்சயம் ஊடல் இல்லையேல் கூடல் சுவைக்காது ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் ஊமை வாழ்வு பிணத்துக்கு சமமே! எய்யாமை எவருக்கும் கேடு தரும் எதிரொலித்து உன் பலவீனத்தை காட்டிவிடும் எழுச்சி கொண்ட வாழ்வை அமை எரிவனம் போவது எவருக்கும் திண்ணம்! ஏழை பணக்காரன் தற்கால நிலைதான் ஏற்ற இறக்கம் வாழ்வின் இசைதான் ஏமாற்றம் நிறைந்தது இந்த உலகம்தான் ஏணியின் கடைசிப் படி சுடுகாடுதான்! ஐதீகம் என்றாலும் திருப்பிக் கேள் ஐயம் தவிர்த்து துணிந்து நில் ஐம்புலனை அடக்கினால் மதி கெடும் ஐயனே நெறிப்படுத்தி அறிவை வளர்த்திடு! ஒடுங்கி வாழ்வது வாழ்க்கை அல்ல ஒண்டிக்கட்டை ஆனாலும் நிமிர்ந்து நில் ஒரு விளக்காய் என்றும் இருந்து ஒளிர்ந்திடு அணையாத வழிகாட்டும் சுடராக! ஓதுபவன் சொல்வதை அறிந்து கேளு ஓந்தி போல நிறம் மாறாதே ஓசையுடன் அன்று அழுது பிறந்தாய் ஓரமாய் இன்று ஒதுங்கிப் போறாய்! உண்மை தேடி உலகம் சுற்றினேன் வேஷம் போட்ட மனிதர் கண்டேன் காசுக்கு மாறும் காதல் கண்டேன் பேராசையால் உடையும் ஒற்றுமை கண்டேன்! ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன் மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன் சாதி மதம் கடந்து இனம் ஒன்றாகட்டும் அதுவே நம் விடுதலையின் விதையாகட்டும்! ஆலம் விழுதின் அற்புதம் பார் தாங்கி நிற்கும் உறுதியைப் பார் இடர் பல எமக்கு வந்தாலும் இணை பிரியா ஒற்றுமை காண்! நானாய் வாழ முடிவு எடுத்தேன் சாதி சமயம் இரண்டும் தவிர்த்தேன் சகோதரர்கள் & சகோதரி கனவில் வந்தினம் பெற்ற அனுபவத்தை எனக்குத் தந்தினம்! ராமனை வெறுத்து சீதை பூமியுள் குதித்தாள் யுத்தத்தை வெறுத்து சித்தார்த்தன் புத்தனான் அன்பை போதித்து சமயம் பல பிறந்தாலும் சமயம் வளர்க்க அரசு கொலை செய்யுது! ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை மண்ணில் புதைந்த மைந்தர்களின் குரல் என் இதயத்தில் இன்னும் முழங்குகிறது! கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம் நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் நீதிவேண்டி கண்ணகி சிலம்பை உடைத்தாள் காதுகேளாத உலகில் நியாயத்திற்காக அழுகிறோம்! விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும் தட்டிக் கேட்டும் பெற வேண்டும் நன்னெறி என்றும் நிலைக்க வேண்டும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வே! ஒன்றாய் கூடு உண்மையை உரை நியாயம் நிறுத்து விசாரணை எடு கவலை மறக்க தீர்வைத் தா கேள்வி கேட்டு நடுகல் முழங்குது! என் பிறந்தநாளைக் கொண்டாடும்போது என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது அவளை நினைத்தேன் அழுகை வருகுது மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] On this birthday of mine, I look not for candles, but for clarity. Life has walked beside me, sometimes smiling, sometimes silent— like a friend who knows too much to speak. The beautiful life I began now walks toward its close, counting not wealth, but the hearts it has touched. There were days when I ruled with pride, and nights when wisdom ruled me back. Everything that begins must end, but endings are not always defeat— if anger softens, the soul shines clearer, if ego falls, the human rises. I have seen joy and sorrow in equal share, but both were chosen roads of my own making. Open your heart, tell yourself— welcome what comes, and let go of what never was. Faith—yes, it is only a hope that breathes, and charity—only the bridge between souls. I write these words as the sky burns with evening light, until my own fire joins that distant blaze. Let noble dreams rise in the mind, let truth guard every pact you sign. Life will not return once it departs— so let honesty be your final companion. Without courage, failure is certain, without love, union is hollow. He who quarrels with his own people kills his roots before his death. Rich and poor, all stand on temporary ground— ups and downs, a rhythm we must dance. Deceit and loss are teachers too, and even the ladder to the grave has rungs of habit. Do not live folded or afraid; raise your head, even if alone. Be the lamp that burns and teaches light— the “guiding flame” that never dies. I learned from reading, from wandering, from wounds. I sought truth across oceans, and found masks upon men, love traded for coins, and unity broken by greed. I searched for a united Tamil people I found diversity even in the house of death Let the race be one, transcending caste and religion Let that be the seed of our freedom Tamil, rise beyond faith and frontier, be one heart, one hand, one song. Like the banyan root that never breaks, stand firm, even when storms rise. I chose to live as myself no caste, no creed, no hate My brothers and sister visit me in dreams offering me the experiences they had Sita leapt from a world of lies, Buddha turned from war to truth, Religion was born to teach love, but men used it to sharpen swords. I have no mother now, no wife beside, no land to claim The voice of the children buried in the soil Still rings in my heart We lit lamps in Kartikai nights, we planted stones for heroes lost. Kannagi broke her anklet for justice, and still we cry for fairness in a deaf world. We must learn to yield yet live, to ask yet earn, to build a just path that stays. When united, life itself becomes victory. Let us speak the truth together, demand reason, seek remedy, for even the stones of the grave ask questions, and echo with our unfinished songs. Today, as I celebrate my birthday, I smile when I think of myself, I weep when I think of her, I burn with the world’s injustices, and yet— I find joy when I think of death, for it too is but another homecoming. Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna. "என் பிறந்த நாளில் மனதில் உதித்தது" / "A memory touched my heart on my birthday" [01/11/2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32134260759555821/?
  12. கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 07 பகுதி: 07 - பின்னவலை யானைகள் புகலகம் (Pinnawala Elephant Orphanage) & கொழும்பு இலங்கை பயணத்தின் கடைசி சுற்றுலாவாக பின்னவலை யானைகள் புகலகம் இருந்தது. அவர்கள் ஆற்றங்கரையில் நின்று, பெரிய யானைகள் தண்ணீரில் குளிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜெயா சத்தமிட்டார்: “பெரிய குட்டிகள் குளிக்கின்றன!” கலை ஒரு தண்ணீர் பாட்டிலை [bottle] எடுத்து, தண்ணீர் தெளிக்கும் யானையைப் போல நடித்து, தனது குட்டி சகோதரன் மீது தெளித்தார். குழந்தைகள் சிரித்தபடி உருண்டு உருண்டு சிரித்தனர். ஒரு யானைப் பாகன் (mahout) அவர்களை அணுகிச் சொன்னான்: “சில யானைகள் தங்கள் குடும்பத்தை இழந்துவிட்டன. ஆனால் இங்கே நாம் அவற்றைப் பாதுகாக்கிறோம். அன்பைக் கொடுக்கிறோம்.” என்றார். அப்பொழுது தாத்தா கண்களில் நெகிழ்ச்சி பொங்க, பேரன்களை நோக்கிச் சொன்னார்: “இது தான் இலங்கையின் பாடம். துன்பத்திற்குப் பிறகும், போருக்குப் பிறகும் கூட நாமும் ஒருவருக்கொருவர் அன்புடன் காப்பாற்ற வேண்டும். ஒரு குடும்பம்போல.” என்றார். உடனே இசை தன்னுடைய சிறிய குரலில் சொன்னான்: “அப்படியென்றால் தாத்தா நீங்கள்தான் எங்களுடைய யானைப் பாகன். நாங்க எல்லாம் உங்க யானைகள்!” அனைவரும் சிரித்தார்கள். தாத்தா அவனைத் தழுவிக்கொண்டார். பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே உன் அறிவும் உனக்குப் பெரிதோ? சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும் உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ? பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன் உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ? வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம் தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ? பாசத்தின் அருமை உனக்குத் தெரியுது வேசமிடும் மனிதனுக்கு அன்பு தெரியாதோ? மோசமான இலங்கை அரசியல் உலகில் மனிதம் வளராது இறந்தது எனோ? குழந்தைகள் அமைதியாகி தாத்தாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். அப்பொழுது ஜெயா கூறினார்: “தாத்தா, ஒரு நாள் இந்தக் கதையை மற்றவர்களுக்குச் சொல்வோம். கடற்கரைகள், யானைகள் மற்றும் நம்பிக்கை பற்றி.” என்றாள். தாத்தா அன்புடன் சிரித்தார். “ஆம், என் சிறிய ஆய்வாளர்களே. நீங்கள்தான் இந்தத் தீவின் எதிர்காலம்.” என்று முதுகில் தட்டிக்கொடுத்தார். மீண்டும் கொழும்பு கொழும்பில் சத்தமாய் ஓடும் பஸ்கள், பளபளக்கும் கடைகள், கடற் காற்றின் வாசம்—அனைத்தும் கலந்த ஒரு பரபரப்பு காணப்பட்டது. அவர்கள் கால்ஃபேஸ் கிரீன் [Gall Face Green] சென்றனர். குழந்தைகள் வண்ணமயமான பட்டங்களை பறக்க விட்டனர். சுவை மிக்க இறால் வடை [Isso Vadai], ஐஸ்கிரீம் - எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஜெயா சிரித்தபடி சொன்னாள்: “தாத்தா, கொழும்பு தினமும் திருவிழாவைப் போல இருக்கிறது!” தாத்தா சிரித்தார். அவரின் உள்ளம் பழைய காயங்களை நினைத்தது. 1983 கறுப்பு ஜூலை - வீதிகள் எரிந்தன, தமிழர்கள் வேட்டையாடப்பட்டார்கள், நூலகம் சாம்பலானது. சில நிமிடங்கள் அமைதியாகக் கண்ணீர் வழிந்தது. ஜெயா கவனித்தாள்: “தாத்தா, ஏன் அழுகிறீர்கள்?” தாத்தா அவள் நெற்றியில் முத்தமிட்டு சொன்னார்: “சில நினைவுகள் ஒருபோதும் மறையாது. ஆனால் நீங்கள்… நீங்கள் என் புதிய நினைவுகள். பழையதைவிட பிரகாசமாக.” ஜெயா விரைவாகச் சொன்னார், “அப்படியானால், தாத்தா, உங்களுக்காக இன்னும் மகிழ்ச்சியான நினைவுகளை நாம் உருவாக்குவோம். இனி சோகமான நினைவுகள் உங்களுக்கு வேண்டாம்!” என்றாள். தாத்தாவின் கண்கள் பெருமையால் பிரகாசித்தன. “ஆம், என் குட்டி நட்சத்திரங்கள். அதனால் தான் நான் உங்களை இங்கு அழைத்து வந்தேன். இந்த இலங்கை நிலத்தை அறியவும், அதை நேசிக்கவும், அதன் கதையை முன்னோக்கி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும்.” என்றார். காலி முகத்திடலில் அலைகள் முழங்கியது, சத்தமிட்டபடி அடித்தன, ஆனால் அந்தக் கணத்திலும் தாத்தாவின் உள்ளம் அமைதியாக இருந்தது. அவருக்கு கடந்த காலத்தின் காயங்கள் இருந்தாலும், அவரது பேரக்குழந்தைகள் அந்தக் காயங்களுக்கு மருந்தாக இருந்தனர். யாழின் தென்றலில் நல்லூர் வளாகத்தில் நடந்து சென்றோம் கைகள் கோர்த்தே! புனித நிலத்தில் ஞானம் சேர மனம் நிறைந்து ஆனந்தம் பெருகியதே! நல்லூர் மேளமும் கடல் ஓசையும் மனதில் நிலைத்து என்றும் வாழுமே! கடல் சறுக்கல் டால்பின் பாய்தல் ஈழ சுற்றுலாவை பறை சாற்றுமே! தெற்கும் மேற்கும் மனிதம் நிலைத்தால் வடக்கும் கிழக்கும் மீண்டும் தளிருமே! ஒற்றுமை கீதம் உள்ளத்தில் பாடினால் வேற்றுமை நீங்கி சொர்க்கம் ஆகுமே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 07 https://www.facebook.com/groups/978753388866632/posts/32130663769915520/?
  13. 🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025] பிறந்தநாளில் என்னை திரும்பிப் பார்த்தேன் ஆண்டுகளை அல்ல, அனுபவங்களைக் கண்டேன்! பனைமரக் காடுகளின் மண்ணிலே பிறந்தேன் இன்னும் கடல்கள் என்பெயரை கிசுகிசுக்குது! வேலை முடித்து ஓய்வு எடுக்கிறேன் கடிகாரத்தின் கட்டளை மறந்து போனேன்! ஓய்வூதியம் அல்ல, நினைவுகளே என்செல்வம் அன்பும் இழப்பும் சேர்ந்தது என்ஊதியம்! தந்தையின் குரலும் தாயின் வருடலும் அக்காவின் புன்னகையும் மனதில் தெரியுது! மூன்று சகோதரர்கள் வாழ்வை முடித்தாலும் அவர்களின் நினைவுகள் இதயத்தில் ஒளிருது! காலங்கள் எல்லாம் ஆதரவளித்த மனையாள் காத்திருக்காமல் இடையில் மறைந்தது எனோ! ஒவ்வொரு விடியலிலும் அவள் புன்னகை உண்டு ஒவ்வொரு குழந்தையிலும் அவள் நிழல் உண்டு! குழந்தைகள் என்றும் என் வானமே பேரப்பிள்ளைகள் என்றும் என் விண்மீன்களே! அவர்களின் புன்னகையில் என்வயது மறைகிறது அவர்களின் கண்களில் என்நம்பிக்கை ஒளிர்கிறது! யாழ்ப்பாணமே என் முதல் இதயத்துடிப்பு வேர்கள் ஆழமாக நிலைத்திருக்கும் இடம்! நான் அவளை மீண்டும்மீண்டும் பார்ப்பேன் சிறுவனாக அல்ல வீடுதிரும்பும் யாத்ரீகனாக! அன்பு தூரத்தால் மரணத்தால் அழியாது நம்பிக்கை அதன் சுவர்களையும் தாண்டும்! நேரம் கடுமையானாலும் முடிவில் கருணையாகும் வாழ்க்கை தந்த பாடம் இதுவே! இன்று என் பிறந்த நாளில் வெள்ளை முடிகளல்ல வாழ்த்துக்களை எண்ணுகிறேன்! ஒவ்வொரு இழப்பும் ஞானமாக மாற ஒவ்வொரு துன்பமும் புனிதமான ஆசிரியரே! நான் கண்களை மூடிய போது மரணத்தை அல்ல, தொடர்ச்சியைக் காண்கிறேன்! உண்மையாக நேசிக்கும் இதயம் ஒருபோதும் வயதாகாது, மறையாது, என்றும் நிலையானது! When time turns and looks at me, It sees not the years, but the stories I carry. A homeland of palmyrah dreams, And seas that still whisper my name. I have walked beyond the wages of work, Where clocks no longer command the day. Pensioned not by coins, but by memories, Paid in love, loss, and unspoken prayers. Father’s voice, mother’s touch — both echoes now, My sister’s laughter still lives in the wind. Three brothers gone ahead, leaving behind Chapters I read with trembling hands. My wife — ah, my companion of seasons — She walks no longer by my side, Yet her smile lingers in every sunrise, Her warmth folded in every child’s embrace. Children became my horizon, Grandchildren — my stars in twilight. Their laughter renews what years had taken, Their eyes — windows to all that remains pure. Jaffna — my first heartbeat, Where roots grew deep and memories stay. I cross oceans to see her again, Not as a boy, but as a pilgrim returning home. I’ve learned: Love outlives its name, Faith outgrows its temple, And time, though cruel, becomes kind at the end. Today, on this birthday of silence and reflection, I do not count candles — I count blessings. Each loss became a light, Each sorrow, a teacher of grace. When I close my eyes, I see not death, but continuity. For the heart that truly loves — Never grows old, never says goodbye. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] 🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32127544686894095/?
  14. 'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' பெண் நிலவு உன்னைப் பார்த்து வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ கண்ணழகி உன்னைப் பார்த்த நானும் வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ? அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில் அலைமோதுதே என்மனம் உன் விழிகளில் அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம் அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ? வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும் வாடாத மலராய் இருக்க மாட்டோமா வாலிபம் தந்த காதல் மோகம் வாசனை வீசி எம்மை அணைக்காதா? மொழியும் உணர்வும் பின்னிய பந்தம் விழியில் பேசிய அன்புச் சொந்தம் வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம் அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' https://www.facebook.com/groups/978753388866632/posts/32106754852306412/?
  15. 💙 பேரன் ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] இலையுதிர் விடியலில் அழுகை ஒலித்தது சொர்க்கத்தில் இருந்து பரிசு வந்தது காலைப்பனி போல சிறிய கைகளுடன் ஆரின் [Aarin], எங்கள் மகிழ்ச்சி, நனவானது! ஆண்டு ஒன்று கடந்த மகிழ்வில் அன்பு மலர் விரிவடையத் தொடங்க மழலைச் சிரிப்பு வீட்டில் ஒலிக்க மென் குரல் அனைவரையும் அணைத்தது! கருணை உள்ளம் பொங்கி வழிய அண்ணன் இருவரும் உன்னை அணைத்து திரென் [Dhiren] அமைதியாக புத்தியாக வழிகாட்டிட நிலன் சிரிப்பும் உற்சாகமும் கொடுப்பானே! உன்னைச் சுற்றி சுழலும் உலகில் உறக்கமற்ற இரவுடன் மகிழ்வான நாட்களுடன் பரந்த இதயத்துடன் பெற்றோர் பிரகாசிக்க பொன் கதிர்களால் வீட்டை நிரப்புவாயே! ஆனந்தக் கண்ணீருடன் கவனமாக பார்க்க தாத்தா என்றும் உன்னுடன் நிற்பாரே ஈழத்தின் கரையிலிருந்து இங்கிலாந்தின் வானம்வரை தாத்தாவின் மங்கா வாழ்த்துக்கள் ஒலிக்குமே! அம்மம்மா வானத்தில் இருந்து ஆசீர்வதிக்க அவளின் கருணை உள்ளம் ஒளிகொடுக்க விண்மீன்கள் அவளின் முகத்தைக் காட்டிட ஆரினின் தொட்டிலை ஆசீர்வதித்து ஆட்டுவாளே! ஆரினே பேரனே வலிமையாக கனிவாக வளர்ந்து மனதில் அன்பையும் நம்பிக்கையையும் பதித்திடு உன்னை உருவாக்கிய ஒவ்வொரு குடும்ப வேரிலும் அன்பு உணர்வு நிறைந்த கதைகள் அடங்குமே! வெல்வின் தோட்டத்தில் [Welwyn Garden] மலர்ந்த மழலையே நேசிப்பவருக்கு இன்ப மகிழ்ச்சி கொடுப்பவனே மூன்று காலமும் அன்பும் நம்பிக்கையும் பொங்க காலம் பிணைத்த பிணைப்பு நீதானோ! உங்கள் வாழ்வின் புதுப்பாடல் ஆரம்பிக்க ஆரின் குட்டியே மெழுகுவர்த்தியை ஊதுங்கள் காலடித் தடங்கள் அமைதியும் மகிழ்ச்சியும் அடைய சொர்க்கத்தின் புன்னகை முகத்தில் ஒளிரட்டுமே! தாத்தா 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம்', அத்தியடி, யாழ்ப்பாணம். 💙 ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32083417654640132/?
  16. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 38 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 38 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சத்தின் ஆசிரியர் புத்தருக்கும் அவருடைய கொள்கைக்கும் வஞ்சகம் செய்தாரா?' 1-27 'இந்த மன்னன் அசோகனுக்கு, இலங்கை தீபத்தை [புத்த சமயத்துக்கு] மாற்றுவதற்கு, ஒரு கற்றறிந்த புத்திசாலி மகன் மகிந்த இருந்தார். ' [27. This king Asoka will have a son, a clever man, Mahinda, the learned converter of Laṅkādīpa.”] என்று மட்டும் கூறுகிறது. மகிந்த, ஆண் மக்களையும், சங்கமித்தை (Sanghamitta, பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா) பெண் மக்களையும், புனிதப் பதவியான துறவியாக, ஒருவரை உயர்த்தும் சடங்கு செய்வதற்கு நியமித்ததாக கூறப்பட்டாலும், சங்கமித்தா இந்த முன்னைய அத்தியாயத்தில் குறிப்பிடப்படாததால், கதையில் ஒரு பின் சிந்தனையாக, சங்கமித்தாவை இணைத்திருக்க வேண்டும்? அத்தியாயம் 1 புத்தரின் பயங்கரவாத தந்திரங்களைப் பற்றியது. புத்தர் 1-21, இல் 'இயக்கர்கள், பிசாசுகள் [அரக்கன்கள்] மற்றும் அவருத்தகர்களின் [சில குறிப்பிட்ட இயக்கர்களை 'அவருத்தக்க' என்று புத்த சமயத்தில் அழைக்கப்படுகிறது] படைகளை விரட்டியடித்து, நான் தீவில் அமைதியை நிலைநாட்டி, அதை மனிதர்களால் வாழ வைப்பேன்' [21. Having driven out the hosts of Yakkhas, the Pisācas and Avaruddhakas, [a certain Yakkha named Avaruddhaka] I will establish peace in the island and cause it to be inhabited by men.] என்று கூறுகிறார். அதாவது உண்மையில் இலங்கையின் பூர்விகமாக்களை பயமுறுத்தி துரத்துகிறார். மிகவும் வேதனையான பகுதி என்னவென்றால், புத்தர் நிர்வாணம் அல்லது ஞானம் அடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இந்த கொடுமையை, தீபவம்சத்தின் படி செய்கிறார். அப்படி என்றால், அது என்ன வகையான ஞானத்தை உண்மையில் அவர் பெற்றார்? இங்கு புத்தர் மிக மோசமான நிலையில் வர்ணிக்கப் படுகிறது. எனவே, அத்தியாயம் 1, இலங்கையில் நடந்த எந்த மனித வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. அத்தியாயம் 2, இரண்டு நாக அரசர்களுக்கிடையேயான உட்பூசல்களை நிறுத்துவதற்காக புத்தர் ஞானம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாம் தரம் இலங்கைக்கு வருவதைப் பற்றியது. சிம்மாசனத்திற்காக, நாக இனத்தைச் சேர்ந்த மாமாவுக்கும் அவரது மருமகனுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரை நிறுத்த வந்த புத்தர், அதை மறந்து, [2- 36 முதல் 37 வரை] அவர் தனக்காக அந்த அரியணையைப் பெறுவதில் கதை முடிகிறது. இது புத்தருக்கு எப்படிப்பட்ட அவமானம்! ஆனால், உண்மையான புத்தர், உண்மையைத் தேடுவதற்காக தனது சொந்த சிம்மாசனத்தையும், தனது இளம் மனைவியையும், பிறந்த குழந்தை ராகுலனையும் துறந்தார். சமகால அரசர் பிம்பிசாரர், தனது அரசை புத்தருக்கு வழங்கினார், ஆனால் புத்தர் அதை ஏற்க மறுத்தார். அப்படியான உண்மை புத்தரின் புனித உருவத்தை, நாகர்களின் சிம்மாசனத்தை ஏற்றுக்கொள்வதாக இலங்கை நூல்களில் சித்தரிப்பதன் மூலம், அவரை உண்மையில் இழிவுபடுத்தியது என்பதே உண்மை!. என்றாலும் இன்று இலங்கையில் இந்த புத்தரின் பெயரில் தமிழரின் காணிகள் பறிக்கப் படுவதையும், தமிழர்களை அங்கிருந்து அகற்றுவதையும் பௌத்த சிங்கள பலவந்த குடியேற்றங்களை நிறைவேற்றுவதில் இலங்கையின் அரசும் நீதியும் மௌனம் சாதிப்பதும் , இலங்கை பண்டைய நூல்களின் நோக்கத்தை இன்று புரிய வைக்கிறது! அதாவது, இந்தக் கதையை இயற்றிய வஞ்சகத் துறவிகள், புத்தர் ஆயிரம் மைல்களுக்கு மேல் பறந்து வந்து, நாகர்களின் [அதிகமாக தமிழ் மொழியுடனும் பண்பாட்டுடனும் ஒன்றியவர்கள்] அரியணையைப் பிடித்ததாக, மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று ஏன் விரும்பினர் என்பது இன்று எனக்குப் புலப்படுகிறது! இந்த இரண்டு வருகைகளிலும் புத்தர் தனது செய்தியை, தனது கொள்கையை இலங்கையில் தெரிவிக்க அமைதியான எந்த வழிகளையும் கடைப்பிடிக்கவில்லை. புத்தரும் அவருடைய கொள்கைகளும் தீபவம்சத்தின் ஆசிரியரால் துரோகத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது கவலை தரும் ஒரு விடயம்.! எவ்வாறாயினும், ஞானம் பெற்ற புத்தருக்கு அடிபணிவதற்கு, நாகர்கள் பயமுறுத்தப்பட்ட போதிலும், நாகர்கள் ஒரு குழுவாக தப்பிப்பிழைத்ததை இந்த அத்தியாயம் வெறுப்புடன் மற்றும் மனக்கசப்புடன் ஏற்றுக்கொள்கிறது. Part: 38 / Appendix – Dipavamsa / 'Is the author of the Dipavamsa, betrayed the Buddha and his tenets?' 1-27 reads ‘This king Asoka will have a son, a clever man, Mahinda, the learned converter of Lankadipa’. Mahinda Thera allegedly ordained the male population and sanghamitta ordained the female population. sanghamitta must have been an afterthought in the narration as she is not mentioned in this chapter. The chapter1 is about the alleged terror tactics of the Buddha. The Buddha thinks, 1-21 reads, ‘Having driven out the hosts of Yakkhas, Pisacas, and Avaruddhakas, I will establish peace in the island and cause it to be inhabited by men’. The agonizing part is that, it is alleged, that the Buddha did these just nine months after attaining the Buddhahood (nirvana - the enlightenment). What kind of enlightenment was that! The Buddha is betrayed to the worst degree. Chapter 1 is, therefore, not about any human historical events that took place in Lanka. Chapter 2 is about Buddha’s uninvited visit to Lanka five years after the attainment of the Buddhahood to stop the infighting between two serpent kings, 2 – 3. Second time too the Buddha resorted to the same tactics of terrorizing the combatants in Lanka. The Buddha who came to stop the internecine war between an uncle and his nephew over a throne ended in getting the throne for himself, 2- 36 to 37. What a shame on the Buddha! The real Buddha renounced his own throne, his young wife, and the just born infant son Rahula in search of truth. The contemporary king Bimbisara offered the Buddha his kingdom which the Buddha refused. It is a wanton debasement of the holy image of the Buddha by portraying him as accepting the throne of Nagas. The devious monks who concocted this story wanted others to believe that the Buddha came flying more than thousand miles to take the throne of Nagas! Nowhere in these two visits had Buddha adopted peaceful means to convey his message in Lanka. The Buddha and his tenets are betrayed by the author of the Dipavamsa! This chapter, however, grudgingly accept that Nagas survived as a group, though terrorized into submission by the enlightened Buddha. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 39 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 38 https://www.facebook.com/groups/978753388866632/posts/32090689990579565/?
  17. 'மனசுக்குள் மத்தாப்பூ' அதிகாலை தென்றலிலே மனசுக்குள் மத்தாப்பூ அழகுப் பதுமை இதயத்துக்குள்ளே புகுந்ததே! அணங்குப் பார்வை தீண்டிய நொடியிலே அன்பு மலர்ந்து காதல் பூத்ததே! உன்னை நினைத்தால் இருதயம் துள்ளுதே தீப்பொறி போலே எண்ணங்கள் ஒளிருதே! மௌனமாய் வெடிக்கும் காதல் இதுவோ! குறும்புப் புன்னகையால் என்னை மயக்கியவளே குறையில்லா அழகை வீசும் வனிதையே குதூகலம் பொழியும் வண்ண மையிலே குதர்க்கம் வேண்டாம் அருகில் வாராயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் 'மனசுக்குள் மத்தாப்பூ' https://www.facebook.com/groups/978753388866632/posts/32072218642426700/?
  18. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 37 B பகுதி: 37 B / பின் இணைப்பு - தீபவம்சம் / ''புத்தருக்கு மந்திர தந்திர சக்தி உண்டா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] மீண்டும் அத்தியாயம் 1ல்: 76. பலமான கயிற்றால் இழுத்துச் செல்லப்படும் காளைகளின் கழுத்தை சுற்றியிருக்கும் ஒரு கடிவாளம் போல, கௌதம புத்தர் தனது (மந்திர) சக்தியால், [மற்றோரு] தீவைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டார். அதாவது இரண்டு கப்பல்கள் உறுதியான கயிற்றினால் சூழப்பட்டு இருப்பது போல, முனிவர் [புத்தர்] ஒரு தீவை மற்றொன்றை நோக்கி இழுத்தார். 77. அழகான தீவை மற்றொன்றுக்கு இணைத்த பிறகு, ததாகதர் (மனதில் நிறைநிலை அடைந்த, கௌதம புத்தர்) அரக்கர்களை (?) அங்கு பலவந்தமாக இலங்கையில் இருந்து அகற்றி, அவர்களிடம் "அனைத்து அரக்கர்களும் கிரிதீபாவில் [Giridīpa / An island near Sri Lanka] வசிக்கட்டும் . . ” என்றார். 78. கோடையில் தாகம் எடுத்த மக்கள் நதிக்கு ஓடுவது போல, [தப்பினோம் பிழைத்தோம் என்ற] எதிர்பார்ப்புடன் இயக்கர்கள் கிரிதீபாவுக்கு ஓடினார்கள்; அவர்கள் அனைவரும் திரும்பி இலங்கைக்கு வருவதில்லை என்ற உறுதியுடன் அங்கு நுழைந்தனர்; முனிவர் (பின்னர்) தீவை அதன் முந்தைய இடத்திற்கு கொண்டு சேர்த்தார். பௌத்த மரபு படி, புத்தருக்கு “தெய்விக ஆற்றல் (Iddhi)” என்ற மாய / மெய்ஞ்ஞான சக்திகள் (psychic / magical abilities) இருந்தன என்று நம்பப்படுகிறது. உதாரணமாக: நீரில் நடந்து செல்லும் திறன், ஒரே நேரத்தில், பல்வேறு இடங்களில் தன்னைக் காட்டுதல், வானத்தில் பறப்பது மற்றும் பிறர் சிந்தனையை அறிதல் போன்ற திறன்களைக் கொண்டு இருந்தார் என நம்பப்படுகிறது. ஆனால் புத்தர் தாமாகவே சொன்னார்: “இத்தகைய மாயங்களை வெளியே காட்டுவது தவறு; உண்மையான விடுதலை ஞானத்திலேயே உள்ளது.” என்று. எனோ அவரின் கூற்றை மறந்து விட்டார்கள்? எனவே, தீபவம்சம் போன்ற நூல்களில் கூறப்படும் வரலாறுகள் சில பொதுமக்களின் பக்தியை தூண்டும் வகையில் மார்க்கத்துடன் புராணத்தையும் கலந்து எழுதப்பட்டவை என்பதே உண்மை! புத்தர் மந்திர தந்திர சக்திகளில் நம்பிக்கை அல்லது விருப்பம் இல்லாதவர் என்பதே உண்மையாகும்! இன்னும் ஒன்றையும் நான் சொல்ல வேண்டும், உதாரணமாக பத்து தலை இராவணன் என்றால், பத்து பேரின் பலத்தை உடையவன் என்று குறியீட்டு ரீதியாக அல்லது உருவகமாக [symbolically or metaphorically] நாம் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறே புத்தரின் போதனைகள் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், 'அவரது இருப்பு பெருகுவது போலத்' [Multiplying his body] தோன்றும் அல்லது ஒரே மூலத்திலிருந்து தோன்றினாலும், உண்மை பல வடிவங்களில் வெளிப்படும் என்று 'ஒரே நேரத்தில், பல்வேறு இடங்களில் தன்னைக் காட்டுதல்' [One could create multiple visible forms of himself, appearing simultaneously in various locations or positions — as if there were many versions of himself present at the same time.] என்பதற்கான அர்த்தத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படியோ? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 38 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 37 B https://www.facebook.com/groups/978753388866632/posts/32053137834334781/?
  19. கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 06 பகுதி: 06 - மிடிகம உணவுப் பண்ணை & காலி மிடிகம உணவுப் பண்ணைக்கு சென்றதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளினர். அங்கே பச்சை தேங்காயில் இருந்து குடித்த இளநீர் அவர்களின் தாடையால் வழிந்தது, என்றாலும் அவர்கள் சிரித்தபடி மாமரம், வாழைமரம், பப்பாளி மரங்களைச் சுற்றி ஓடி விளையாடினர். அவர்களுக்கு அங்கே முதலில், உடனடியாக மரத்தில் இருந்து பிடுங்கி செய்த பப்பாளிப் பழச்சாறு பருக கொடுக்கப்பட்டது. குழந்தைகள் துள்ளிக் குதித்தனர். தாத்தா கல்யாண சாப்பாடுபோல் மகிழ்ந்தார். கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும் அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே சந்தோஷ மீறிப் பொங்க ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு ஏராளமான தட்டு இதுவே எனக்குப் போதும் பண்ணையில் மரங்களுக்குப்பின் ஒழித்து விளையாடிக்கொண்டு இருந்த கலை கேட்டான்: “தாத்தா, நீங்களும் இப்படித்தான் முன்பு விளையாடினீர்களா?” தாத்தா சற்றே அமைதியுடன் சிரித்தார். “ஆம்… ஆனால் போரின் காலத்தில் பல பண்ணைகள் அழிந்தன. அரச சிப்பாய்கள், இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட வேண்டிய இடங்களில் எல்லாம் ஆக்கிரமிதார்கள். அதனால்த் தான் சாதாரண மக்கள் அமைதியை, சமாதானத்தை ஒரு பொக்கிஷமாக மதிக்கிறார்கள், அதற்காக ஏங்குகிறார்கள்.” என்றார். தாத்தா சொன்ன வார்த்தைகளின் கனத்தை உணர்ந்த குழந்தைகள் ஒரு கணம் அமைதியாகிவிட்டனர். பின்னர் ஜெயா குறும்புத்தனமாக கலையின் தலையில் சிறிது இளநீரை ஊற்றி, "பார் தாத்தா, இப்போது கலை ஒரு தென்னை மரம்!" என்று சிரித்தாள். எல்லோரும் அவளுடன் சேர்ந்து சிரித்தனர். பின் அவர்கள் மூவரும் குரங்குகள் போல நடித்து வாழைத் தோப்பின் வழியாக, வாழைக்குலையில் இருந்து வாழைப்பழம் பிடுங்க, எட்டி எட்டிப் பார்த்தனர். காலி கோட்டை காலியில், அவர்கள் பழைய போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்டு, டச்சுக்காரர்களால் விரிவு படுத்தப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்ட, கோட்டையின் வழியாக நடந்து சென்றனர், அலைகள் பண்டைய சுவர்களில் மோதி, வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் மறக்கப்பட்ட போர்களின், காலனித்துவக் கதைகளை கிசுகிசுத்தன. அலைகள் வெகுதூரம் கீழே மோதிய போது உப்புக் காற்று அவர்களின் முகங்களைத் துடைத்தது. இலங்கை எவ்வாறு வெளிநாட்டு ஆட்சியாளர்களை மட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு அதன் சொந்தப் போராட்டங்களையும் எதிர்கொண்டது என்பதை தாத்தா விளக்கினார். ஜெயா சுவற்றை தொட்டு கேட்டாள்: “இது எத்தனை வயதான சுவர் தாத்தா?” தாத்தா சிரித்து :“16 ஆம் நூற்றாண்டளவில் முதலில் கட்டப்பட்டது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா? காலி என்பது வெளிநாட்டினரைப் பற்றியது மட்டுமல்ல. அது உள்நாட்டினரின் சோகத்தையும் கண்டது. 1950கள் மற்றும் 1960களில், தமிழர்களுக்கு எதிராக இங்கு கலவரங்கள் வெடித்தன. கடைகள் சூறையாடப்பட்டன, குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. பல தமிழர்கள் ஒன்றுமில்லாமல் தங்கள் வாழ்க்கையை மீண்டும் பாதுகாப்பான இடங்களில் தொடங்க வேண்டியிருந்தது.” குழந்தைகள் சற்று கவலையுடன் காணப்பட்டனர். பின்னர் தாத்தா அவர்களின் மனநிலையை பிரகாசமாக்கினார்: “ஆனால் வரலாறு என்பது துக்கம் மட்டுமல்ல. வாருங்கள், நான் உங்களுக்கு ஒரு மகிழ்வான ஒன்றைக் காட்டுகிறேன்.” என்றார். “இங்கே காலி மும்மொழிக் கல்வெட்டு (Galle Trilingual Inscription) இருக்கிறது. 1409-ல் சீனக் கடற்படைத்தளபதி செங் கே இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக சீன, தமிழ், பாரசீகம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு இது ஆகும்” என்றார். உடனே ஜெயா ஆச்சரியமாகக் கேட்டாள்: “ஆனால் தாத்தா, அப்போது சிங்கள மொழியில் எழுதலையா? சிங்களர்கள் இங்கே இல்லையா?” என்று. தாத்தா (சிரித்தபடி): “கண்ணா, சிங்கள மக்கள் இருந்தார்கள். ஆனால் அட்மிரல் ஜெங் ஹீ மாத்தறைக்கு அருகிலுள்ள பழைய சிவன் கோவிலில் பிரார்த்தனை செய்தார், அங்கு தமிழ் வழிபாட்டு மொழியாக இருந்தது. கடல் தாண்டிய வர்த்தக மொழியாகவும் தமிழ் இருந்தது. ஆமாம், 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தமிழ் முக்கிய கடலோர மற்றும் வணிக மொழியாக இன்னும் இருந்தது. வணிகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் கோயில்கள் கல்வெட்டுகளுக்கு தமிழைப் பயன்படுத்தினர். குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கில். அதனால்தான் ஜெங் ஹீயின் கல்வெட்டு சீன மற்றும் பாரசீக மொழிகளுடன் தமிழில் எழுதப்பட்டது. இலங்கை பரந்த உலகத்துடன் எவ்வாறு இணைக்கப்பட்டிருந்தது என்பதை இது காட்டுகிறது.” என்றார். குழந்தைகள் அதிசயத்தோடு அந்தக் கல்வெட்டைக் கண்டு களித்தனர். கலை கிசுகிசுத்தான்: (கண்களை விரித்து): “அப்போ தெற்கிலும் தமிழ் முக்கியமானதா?” “அப்போ தமிழ் ஆங்கிலம் மாதிரியா இருந்தது? எல்லாரும் அதைப் பயன்படுத்தினாங்களா?” தாத்தா தலையசைத்தார்: “ஆம். சிங்கள மன்னர்கள் கூட சில சமயங்களில் தமிழைப் பயன்படுத்தினர். நமது தீவு ஒரு காலத்தில் சீனர்கள், பாரசீகர்கள், தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் சந்தித்து வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட இடமாக இருந்தது என்றார். கலை (சிரித்துக்கொண்டே): “அப்போ அந்தக் கல் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிப் புத்தகம் மாதிரி!” தாத்தா (சிரித்துக்கொண்டே அவனை அணைத்துக் கொண்டு): “சரியாக சொன்னாய் , கண்ணா. இது இன்றும் நமக்குக் கற்பிக்கும் ஒரு வரலாற்றுப் பள்ளிப் புத்தகம்.” குழந்தைகள் கண்ணுக்குத் தெரியாத உளிகளால் தங்கள் பெயர்களை காற்றில் செதுக்குவது போல் நடித்துக் ஓடி விளையாடினர். பின் அவர்கள் நடந்து செல்லும்போது, தாத்தா அவர்களுக்கு கடலை நோக்கிச் சுட்டிக்காட்டி: "இலங்கையின் கடற்கரையோரங்களில் உள்ள ஐந்து பழங்கால ஈஸ்வர கோயில்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? யாழ்ப்பாணத்தில் நாகுலேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் கோணேஸ்வரம், சிலாபத்தில் முன்னேஸ்வரம், மற்றும் "இங்கே, தேவேந்திரமுனை அல்லது தேவந்துறை [Dondra] அருகே, ஒரு காலத்தில் ஐந்து பெரிய ஈஸ்வர சிவாலயங்களில் ஒன்றான தொண்டேஸ்வரம் இருந்தது. ஆனால் அது 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டது. இப்போது கடலுக்கு அடியில் கற்கள் மட்டுமே உள்ளன." என்றார். இவற்றில் ஏழாம் எட்டாம் நூற்றாண்டிலேயே தமிழ் தேவாரம் பாடப்பெற்ற தலமாக மாதோட்டம் - திருக்கேதீஸ்வரமும் திருக்கோணமலை - கோணேஸ்வரமும் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே என்றார் தாத்தா. ஏன் என்றால் இலங்கை பௌத்தரின் வரலாறு கூறும் புராண நூலான மகாவம்சம், அந்த காலப் பகுதியில், கி.பி 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் தான் முதல் முதல் அதுவும் பாளி மொழியில் தான் எழுதப்பட்டது. அந்த நேரம் வளர்ச்சிக்கால முதற்படியைச் சார்ந்த சிங்களம் [Proto-Sinhala] மட்டுமே புழக்கத்தில் இருந்தது வரலாற்று உண்மை என்று விளக்கம் கொடுத்தார். மூவர் என இருவர் என முக் கண்ணுடை மூர்த்தி மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன் னகரில் பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் தேவன் எனை ஆள்வான் திருக் கேதீச்சரத் தானே! [சுந்தரமூர்த்தி நாயனார்] குற்றம் இலாதார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை, கற்று உணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன் உற்ற செந்தமிழ் ஆர் மாலைஈர் ஐந்தும் உரைப்பவர், கேட்பவர், உயர்ந்தோர் சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர், வான்இடைப் பொலிந்தே. [திருஞானசம்பந்த நாயனார்] அப்பொழுது குழந்தைகள் முடிவில்லாமல் உருளும் கடல் அலைகளைப் பார்த்தார்கள். "அப்போ கடல் ஒரு கோயிலை மறைத்து வைத்திருக்கிறதா?" கலை கிசுகிசுத்தாள். "ஆம்," தாத்தா கூறினார். "ஆனால் நினைவுகள் ஒருபோதும் மூழ்காது. அவை இது போன்ற கதைகளில் வாழ்கின்றன." என்றார். குழந்தைகள் அதை, தங்கள் கண்களை விரித்து கேட்டார்கள். ஜெயா சிரிப்புடன், கிண்டலாகக் கேட்டாள்: “தாத்தா, அவர்கள் கோவில்களை அழித்துவிட்டதால், நாம் அவற்றை லெகோ கோவில்களாகக் [Lego temples] கட்டலாமே?” தாத்தா சிரித்தபடி சொன்னார்: “ஆமாம், ஒருவேளை லெகோ தான் வரலாறு காப்பாற்ற முடியாததை காப்பாற்றும்!” என்றார். பின்னர், ஐஸ்கிரீம் வாங்கும்போது, தாத்தாவின் முகம் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தது , “ ஒரு காலத்தில் இங்கே அருகருகே வாழ்ந்த தமிழ் சிங்கள மக்கள் பிரிந்து போனது இன்னும் நினைவில் இருக்கிறது” என்றார். குழந்தைகள் அவரது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். “ஆனால் இப்போது நாம் இங்கே ஒன்றாக நடக்கிறோம், தாத்தா. அமைதிதான் சிறந்தது, இல்லையா?” தாத்தா சிரித்தார். “ஆமாம், என் குழந்தைகளே. அதனால்த் தான் நீங்கள் இதே தெருக்களில் சுதந்திரமாக ஓடுவதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 07 தொடரும் கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/32019348474380384/?
  20. 'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens' ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று நடக்கிறது, ஆனால் உண்மையில் எதுவும் அர்த்தமுள்ளதாக இல்லை... மழை பெய்தாலும், என் இதயம் வறண்டு கிடக்கிறது, சூரியன் உதித்தாலும், என் நிழல் மட்டுமே வளர்கிறது. இலங்கையின் வாசனை மறைந்துவிட்டதா? அல்லது நான் என்னையே இழந்துவிட்டேனா? Every day, something happens, Yet nothing truly makes sense… Though it rains, my heart stays dry, Though the sun rises, my shadow only grows. Has the scent of Sri Lanka faded away? Or have I simply lost myself? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] 'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens' https://www.facebook.com/groups/978753388866632/posts/32002873182694580/?
  21. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 37 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 37 A / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சத்தின் அத்தியாயம் 1 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பயங்கரவாத தந்திரங்களை புத்தர் உண்மையில் கையாண்டாரா?' அத்தியாயம் 1, புத்தர் காற்றில் பறந்து தனது முதல் பயணத்தை இலங்கைக்கு செய்தது மட்டும் அல்ல, புத்தர் தீவின் பழங்குடியினர் மக்களை, இயக்கர்கள் (Yaksha), பூதங்கள் மற்றும் அரக்கர் என அவர்களை 'மனிதர்கள் அல்லாதவர்கள்' [non-humans; Yakkhas, Bhutas and Rakkhasas.] என்றும் விவரிக்கிறார். இது புத்தரின் சிறந்த புனிதத்தன்மையை மதியாது செய்யும் அல்லது வர்ணிக்கும் அடாச்செயல் போல் தெரிகிறது. இது கட்டாயம் அவரின் குணங்கள் மீதான துரோகமாகும். இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதரல்லாத மனிதர்கள் உலகில் எங்கும் வாழ்ந்தார்கள் என்பதை இந்தக் காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள். அதற்கான அறிவியல் சான்றுகளும் இல்லை. பகை உணர்வு கொண்ட துறவிகள் மற்றும் கேவலமான அரசியல்வாதிகள் மற்றும் குழுநல அக்கறை மட்டுமே கொண்ட கல்வியாளர்களின் மனதில் தவிர, இப்படியான பொய்யான வர்ணனை, முரணான செயல்கள் இடம் பெறாது என்பது வெளிப்படை. பழங்குடியினர்களின் நிலங்களை, அவர்களின் மண்ணை முறைகேடாக அபகரிக்க முடிவு செய்யப்பட்டு, மனிதர்கள் அல்லாதவர்களின் கதையை உருவாக்கியது போலத் தோன்றுகிறது. இரண்டு மனித பெற்றோருக்கு பிறந்த புத்தர், காற்றில் பறந்தார் என்பது வெறும் புராணக்கதை மட்டுமே. அது போலவே மற்றோரு புராணக் கதையான, மகாவம்சத்துக்கு முன்பே எழுதிய இராமாயணக் காவியத்தின்படி, அனுமன், அதுவும் ஒரு கையில், ஒரு மலையைக் காவியபடி, இலங்கைக்குப் பறந்தார் என்று கூறுகிறது. அது மட்டும் அல்ல, அவர்கள் போரில் ஈடுபட்டு, சீதையை மீட்டு, இலங்கையை விட்டு திரும்பினர் என்று மேலும் அந்த கதை கூறுகிறது. ஆனால் அவர்கள் , அதை ஒரு சாட்டாகக் கூறி, இலங்கைத் தீவைத் தங்களுக்குத் தான் என எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, அனுமானால் பறக்க முடியுமா இல்லையா என்பதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படவில்லை. ஆனால், புத்தரை இங்கு ஒரு பண்டைய நாள் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படுகிறார்; அவர் கனமழை, குளிர் காற்று மற்றும் இருளால், அந்த பண்டைய இலங்கை மக்களை பயமுறுத்துகிறார். துறவி ஆசிரியர்கள் தங்கள் கொடூரமான கருத்துக்களை, மிகவும் கருணையான கண்ணியமான நபரான புத்தரின் குரல் மற்றும் செயல்கள் மூலம், உண்மையில் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை!. அது இன்னும், அதே வழியில் வந்த துறவிகளால், வடக்கிலும் கிழக்கிலும் தொடர்கிறது, அதற்கு அரசும் அரசியல் வாதிகளும், அரச படைகளும் வெள்ளைக்கொடி ஏந்துகிறார்கள் என்பது, நாம் இன்று காணும் உண்மை. இவர்களுக்கு ஒத்து ஊதும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் மற்றும் கல்வி கற்ற அறிஞர்களையும் கூடாக் காண்கிறோம். பாவம் புத்தர்! "இதோ இயக்கர்களை கட்டாயப்படுத்தி கட்டுப்படுத்தும் புத்தரின் செயல் முடிவடைகிறது" என்று அத்தியாயம் 1 முடிவடைகிறது. இது என்னத்தைக் காட்டுகிறது? தீபவம்சத்தின் அத்தியாயம் 1-ல் கூறப்பட்டுள்ள பயங்கரவாத தந்திரங்களை புத்தர் ஒருபோதும் கையாண்டிருக்க மாட்டார். தங்கள் நாகரிக ஐரோப்பியர்கள் என்று பெருமை கூறிக்கொண்டு, காலனித்துவ நாடுகளின் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளை நாகரிகப்படுத்த வந்தனர் என்று ஐரோப்பிய காலனித்துவவாதிகள் இதே போன்ற தர்க்கத்தைத் தான் பயன்படுத்தினர் என்பதை கொஞ்சம் ஞாபகப் படுத்துங்கள். உதாரணமாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் போர்த்திறஞ்சார்ந்த [மூலோபாய] இராணுவ தளங்களை நிறுவுவதற்கு அவர்கள் பல பூர்வீக மக்களை வேரோடு பிடுங்கினார்கள் என்பது இன்றைய உண்மை வரலாறு!. Part: 37 A / Appendix – Dipavamsa / 'Is Buddha resorted to such terror tactics as outlined in the chapter 1 of the Dipavamsa?' Chapter 1 is about the Buddha’s purported first visit to Lanka by flying through air. The Buddha describes the original (aboriginal) inhabitants of the island as non-humans; Yakkhas, Bhutas and Rakkhasas. This is sacrilege on the excellent benevolent and genial qualities of the Buddha. No one in this age would believe that non-humans lived two thousand five hundred years ago anywhere in this world, except in the minds of the nefarious monks and the vile politicians and the vested interest academicians of same ilk. It was decided to misappropriate the lands of the original inhabitants, and concocted the story of non-humans. The capability of flying by humans, the Buddha was born to two human parents, is mere legend. Hanuman, as per the epic Ramayana, flew with a mountain in one of his hands to Lanka. They came, in the Ramayana Epic, fought a battle and returned with their lady. It was not to take the island for themselves, and, therefore, no one cared whether it could be possible to fly or not. The Buddha is portrayed here as an ancient day terrorist; terrorizing the inhabitants with heavy rains, cold winds and darkness. Monkish authors expose their cruel ideas through the alleged voice and actions of the Buddha who is a very decent person. The chapter 1 ends thus “Here end (Buddha’s) subjection of the Yakkhas”. Buddha would never have resorted to such terror tactics as outlined in the chapter 1 of the Dipavamsa. The European colonizers used similar logic that the civilized Europeans came to civilize the uncivilized barbarians of the colonized countries. They uprooted many native peoples to establish strategic military bases in the Indian Ocean and the Pacific Ocean areas. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 37 B தொடரும் / Will follow துளி/DROP: 1881 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 37] / எனது அறிவார்ந்த தேடல்: 1299 https://www.facebook.com/groups/978753388866632/posts/31988155807499651/?
  22. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 36 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 36 / பின் இணைப்பு - தீபவம்சம் / தீபவம்சம் முழு தீவுக்கான விளக்கமா? தீபவம்சம் முதலில் பாளி மூலமும், பின்னர் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மொழிபெயர்பு பகுதி பக்கம் 117 முதல் பக்கம் 221 வரை சுமார் 105 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில், முதல் எட்டு அத்தியாயங்கள் சுமார் 43 பக்கங்களை கொண்டு உள்ளது. என்றாலும் அதில், இலங்கை வரலாறோ, அல்லது இலங்கை மனித குடிமக்களையோ அல்லது இலங்கையில் நடந்த நிகழ்வுகளோ அல்லது இலங்கை மன்னர்களையோ அல்லது அவர்களின் ஆட்சிகள் பற்றியோ அல்ல என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் அத்தியாயம் 9, சுமார் 3 பக்கங்கள், இலங்கையில் நடைபெறாத, விஜயனின் தகுதியற்ற தீய குணங்கள் மற்றும் அவரது தீய செயல்கள் பற்றிக் கூறுகிறது. அதனால், அவரின் தந்தையால், படகில் ஏற்றி, தண்டனையாக, கடலில் எங்கேயாவது போய் தொலைந்து போக, மிதக்க விட்டதையும் மற்றும் காற்றுடன் பயணித்து முடிவில், விஜயன் தோழர்களுடன் இலங்கைக்கு வந்ததைப் பற்றியும் கூறுகிறது. அத்தியாயங்கள் 10 ம் 11 ம், பக்கம் 163 முதல் 167 வரை அடங்குகிறது. இது இலங்கையைப் பற்றியது என்றாலும் முழுமையாக அப்படி இல்லை. அத்துடன் இந்த அத்தியாயங்கள் இரண்டும் மிகவும் சிறியவை, மொத்தம் 5 பக்கங்கள் கூட இல்லை; அதில், 3 பக்கங்கள் மட்டுமே இலங்கையைப் பற்றியது. அத்தியாயம் 12 மகிந்த தேரரைப் பற்றியது, என்றாலும் இதுவும் இலங்கையில் நடந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகள் பற்றி அல்ல. மகிந்த தேரர், 12- 16, இலங்கையை (பௌத்த மதத்திற்கு) மாற்றுவதற்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார் என்றும், மகிந்த தேரர் இன்னும் இந்தியாவில் இருந்தார் என்றும், எனவே தீவு இன்னும் பௌத்தத்திற்கு மாற்றப்படவில்லை என்பது வெளிப்டையாகத் தெரிகிறது. அதாவது விஜயன் மற்றும் அவரது உதவியாளர்கள், ஊழியர்கள் வந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சுமார் இருநூற்று முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் இலங்கை புத்தசமயத்துக்கு மாற்றப்படவில்லை. அது மட்டும் அல்ல, புத்தர் ஐந்நூறு தேரர்களுடன் 2-53 இல் தனது மூன்றாவது வருகையாகவும் இலங்கைக்குப் பறந்தார் எனினும் அவர் தனது மூன்று பயணங்களிலும் தனது பிரசங்கங்களை முறையாக இலங்கை வாழ் மக்களிடம் அறிமுகப்படுத்தவில்லை அல்லது சரியாகப் போதிக்கவில்லை என்றும் தெரிகிறது! மொத்தத்தில், 28 பக்கங்களைக் கொண்ட அத்தியாயம் 12 முதல் அத்தியாயம் 16 வரை, இலங்கையில் நடந்த உண்மையான மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. அத்தியாயம் 17 முதல் அத்தியாயம் 22 வரையிலான கடைசி ஆறு அத்தியாயங்கள் மட்டுமே, இலங்கைப் பற்றியது. இது 27 பக்கங்களை மட்டுமே கொண்டது ஆகும். எனவே, தீபவம்சத்தின் மூன்றில் ஒரு பகுதியே, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறது எனலாம். 1-18 ;”அழகான தட்பவெப்பநிலை கொண்டும், வளமான பூமியாகவும், புதையல் சுரங்கங்களை தன்னகத்தே கொண்ட ஒரு நேர்த்தியான நாடு...” என வர்ணிப்பதில் இருந்து, நாம் இலகுவாக விளங்கிக் கொள்வது என்னவென்றால், அழகிய காலநிலை என்பது மத்திய மலை நாட்டையும், வளமான பூமி என்பது அதிக மழைப்பொழிவு பகுதியையும், மற்றும் புதையல் சுரங்கம் என்பது இரத்தினபுரியையும் கூறுவது போலத் தோன்றுகிறது. எனவே, மேற்கூறிய விளக்கங்களைக் கருத்தில் கொண்டு, கீழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, அநுராதபுரத்திற்கு தெற்கே, தீவின் கீழ் பாதியை மட்டுமே காட்டியுள்ளது போன்று உணரலாம். எனவே, இது முழு தீவுக்கான விளக்கம் அல்ல என்று நம்புகிறேன். 17-1 : "முப்பத்திரண்டு யோஜனை நீளமும் பதினெட்டு யோஜனை அகலமும் கொண்ட சிறந்த இலங்கை தீவு என்றும், அதன் சுற்று நூறு யோஜனைகள் என்றும் ." கூறுகிறது. [1-2. The excellent island of Laṅkā is thirty-two yojanas long, eighteen yojanas broad, its circuit is one hundred yojanas; it is surrounded by the sea, and one great mine of treasures. It possesses rivers and lakes, mountains and forests.] மேலே உள்ள விளக்கம், செவ்வக வடிவ நாட்டிற்கானது மற்றும் மாம்பழ வடிவ நாட்டிற்கானது அல்ல என்பது மிகத் தெளிவு புரிகிறது. தீபவம்சத்தை எழுதியவர்களுக்கு அனுராதபுரத்திற்கு வடக்கே குறுகலான நிலப்பரப்பு ஒன்று இருப்பது பற்றிய எந்த எண்ணமும் இருந்ததாகத் தெரியவில்லை. அனுராதபுரத்திற்கு வடக்கே உள்ள நிலங்களும், மகாவலிகங்கைக்கு கிழக்கே உள்ள நிலங்களும் இந்த விளக்கத்தில் காணாமல் போய்விட்டன. அனுராதபுரத்திற்கு தெற்கே உள்ள நிலப்பகுதியை மட்டுமே இது குறிப்பிடுவது, இந்த பகுதியின் வடிவம் ஓரளவு செவ்வக வடிவம் என்று கூறுவதில் இருந்து புலப்படுகிறது. Part: 36 / Appendix – Dipavamsa / 'Is Dipavamsa the description for the entire island?' The Pali original is given first in the book, and then the English translation. The portion of the English translation runs from the page 117 to the page 221, approximately about 105 pages. The first eight chapters are about 43 pages, and are not about historical or human inhabitants or events that took place in Lanka or about the kings of Lanka or their reigns. The Chapter 9, about 3 pages, is about the unworthy evil characters of Vijaya and his evil deeds that took place not in Lanka, condemned to drift in sea, and his arrival in Ceylon with others at the end of their drift. Chapters 10 to 11, run from the page 163 to 167, are about Lanka, but not fully about Lanka, and these chapters are very short, not even 5 pages in total; only 3 pages are about Lanka. The chapter 12 is mostly about Mahinda Thera, and not about any trustworthy historical events that took place in Lanka. Mahinda Thera was considering, 12- 16, whether the time would be favourable or unfavourable for the conversion of Lanka (to the Buddhist faith). Mahinda Thera was still in India and the Island was therefore not converted yet to the Buddhism, about two hundred and thirty six years after the alleged arrival of Vijaya and his attendants and servants. The Buddha flew to Lanka on his alleged third visit, 2-53, along with five hundred Theras, but it seems that he did not introduce his sermons then! All in all, chapter 12 to chapter 16, consisting of 28 pages, are not about the true human historical events that took place in Lanka. The last six chapters, from the chapter 17 to the chapter 22, are about Lanka and consist of 27 pages. Therefore only less than one third of the Dipavamsa speaks about human historical events that allegedly took place in Lanka. 1-18 reads;”an exquisite country, endowed with beautiful climate, fertile, a mine of treasure...” Considering above descriptions such as beautiful climate (central hilly country), fertile (high rainfall area), and mine of treasure (Ratnapura), the reference is for the lower half of the island, south of Anuradhapura, as shown in the map below. It is not the description for the entire island. 17-1 reads;”The excellent island of Lanka thirty two Yojanas long and eighteen Yojanas wide, its circuit is one hundred Yojanas.” The above description is for a rectangular shape country and not for a mango shaped country. Those who wrote the Dipavamsa never had the idea of the land north of Anuradhapura with a narrowing landscape. The lands north of Anuradhapura and lands to the east of Mahaweliganga are not part of this description. The reference is only to the land south of Anuradhapura, and the shape of this area is somewhat rectangular. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 37 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 36 https://www.facebook.com/groups/978753388866632/posts/31958835430431689/?
  23. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 35 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 35 / பின் இணைப்பு - தீபவம்சம் / ' தீபவம்சம் என்பது இலங்கை மக்கள் அனைவரையும் பற்றிய வரலாற்றுப் பதிவா?' தீபவம்சம் கி.பி நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாம் பகுதிக்கு இடையில் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஏற்கனவே இருந்த ஜாதகக் கதைகள் [என்பது இந்தியாவைச் சார்ந்த புத்தரின் முற்பிறவிகளை கூறும் கதைகளின் தொகுதியாகும்.], விளக்கவுரைகள் மற்றும் பிற நியமனப் படைப்புகள் [ஒரு குறிப்பிட்ட பாரம்பரியம் அல்லது மொழிக்குள் தரம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் தரமாகச் செயல்படும், அத்தியாவசியமான மற்றும் செல்வாக்குமிக்கதாகக் கருதப்படும் படைப்புகளின் தொகுப்பு அல்லது உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித புத்தகங்களின் தொகுப்பு] தீபவம்சத்தின் தொகுப்பிற்கு அடிப்படையாக அமைந்தன என்று மொழிபெயர்ப்பின் அறிமுகப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது. தீபவம்சம் தொகுக்கப்பட்ட பின், சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஊகம், அதாவது ஒரு சாத்தியமாக, மொழிபெயர்ப்பாளரால் முன்மொழியப்பட்டது என்பதால், இந்த அனுமானத்தின் உண்மைத்தன்மையை அல்லது நம்பகத்தன்மையை நாம் இங்கு அலசவில்லை. தீபவம்சத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்படும். 1879 இல் ஹெர்மன் ஓல்டென்பர்க் (Hermann Oldenberg) (1854 - 1920) மொழிபெயர்த்த தீபவம்சத்தின் பிரதியை அடிப்படையாகக் கொண்டு இந்த பகுப்பாய்வு செய்யப்படும். "தீபவம்சம் - ஒரு பண்டைய புத்த வரலாற்றுப் பதிவு" [“The Dipavamsa - An Ancient Buddhist Historical Record”] என்ற தலைப்பில் இந்த புத்தகம் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க்கின் கருத்துப்படி, இது ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவு ஆகும். அப்படி என்றால், இது முழு இலங்கை மக்களின் வரலாற்றுப் பதிவாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க் பயன்படுத்திய நம்பகமான பிரதிகள் முக்கியமாக பர்மாவைச் சேர்ந்தவை. என்றாலும் அவர் இலங்கை மற்றும் பிற இடங்களில் இருந்து பெற்ற தரம் குறைந்த நகல்களையும் பயன்படுத்தினார். இது தொடர்பாக தீபவம்ச மொழிபெயர்ப்பின் 10 முதல் 11 வரையிலான அறிமுகப் பக்கங்களைப் பார்க்கவும். மொழிபெயர்ப்பாளர், ஹெர்மன் ஓல்டென்பர்க், ஒரு ஜெர்மன், பாளி மற்றும் பௌத்த அறிஞர் ஆவார். எனவே, மற்ற ஆங்கிலேய அரசு ஊழியர்களைப் போல அவருக்கு காலனித்துவ ஆர்வம் இருக்காது. உதாரணமாக, தீபவம்சம் 1-1 ; "புத்தர் தீவுக்கு வந்த வரலாறு, நினைவுச்சின்னம் மற்றும் போதி மரத்தின் வருகை, மறுபரிசீலனை செய்த ஆசிரியர்களின் கோட்பாடு, தீவில் நம்பிக்கையைப் பரப்புதல், மனிதர்களின் தலைவரின் வருகை ஆகியவற்றின் வரலாற்றை நான் முன்வைப்பேன்." என்று கூறுகிறது. இவை அனைத்தும் முதல் ஒன்பது அத்தியாயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் சில அறிஞர்கள் மீதமுள்ள அத்தியாயங்களை பின்னர் சேர்த்ததாக கருதுகின்றனர். தீபவம்சம் மேற்கூறிய தலைப்புகளில் மட்டுமே முதன்மையாக கவனம் செலுத்துவதால், பண்டைய இலங்கையின் அனைத்து மக்களின் விரிவான வரலாறு அல்ல என்று நான் நம்புகிறேன். மாறாக, பெரும்பாலும் அனுராதபுரத்தில் உள்ள மகாவிகாரத்தில் இருந்து, இது புத்த துறவிகளால் எழுதப்பட்ட ஒரு மத நாளேடாகும். இது பெரும்பாலும் பின்வருவனவற்றைத் தவிர்த்துள்ளது என்பதையும் நினைவில் கொள்க: 'தீவின் புத்த மதத்திற்கு முந்தைய வரலாறு, பூர்வீக பழங்குடியினர் (இயக்கர்கள் மற்றும் நாகர்கள் போன்றவை) உட்பட பௌத்தம் அல்லாத சமூகங்களின் வரலாறு, மற்றும் இலங்கையில் இருந்த தமிழ் பேசும் குழுக்கள் அல்லது பிற இனங்கள், துறவறம் அல்லது அரச பௌத்த சூழலுடன் தொடர்பில்லாத சமூக-பொருளாதார, மொழியியல் அல்லது கலாச்சார விவரங்கள் போன்றவை.' ஆகும். எனவே, தீபவம்சம் இலங்கையின் முழு மக்களின் வரலாற்றுப் பதிவு அல்ல. இது ஒரு பிரிவுவாத பௌத்த நாளேடாகும், இது மத மற்றும் கோட்பாட்டு நலன்களுக்கு சேவை செய்ய வரலாற்றைத் தேர்ந்தெடுத்து வழங்குகிறது - முக்கியமாக தேரவாத பௌத்த மரபு மற்றும் அதை ஆதரித்த சிங்கள பௌத்த முடியாட்சிகளில் கூடுதலான கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, தீபவம்ச மொழிபெயர்ப்பின் அறிமுகப் பக்கம் 11 இல்: தீபவம்சம் நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கும் ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாம் பகுதிக்கும் இடையில் எழுதப்பட்டது. மகாவம்சம் இயற்றப்பட்ட சரியான தேதி இன்னும் நமக்குத் தெரியாது. ஆனால் இரண்டு படைப்புகளும் எழுதப்பட்ட மொழி மற்றும் பாணியை ஒப்பிட்டுப் பார்த்தால், தீபவம்சம் முதலில் எழுதப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. மகாநாம தேரர் தனது முன்னோடிகளின் படைப்புகளை விவரிக்கும் வார்த்தைகள் இதை உறுதிப்படுத்துகின்றன என்றும் தீபவம்சத்தின் உரையைத் தொகுப்பாக்கம் செய்யும்பொழுது, பர்மிய எழுத்துக்களில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை பாவித்தேன் என்றும் ஹெர்மன் ஓல்டென்பர்க் கூறியிருப்பதைக் தெளிவாகக் கவனிக்கலாம். Part: 35 / Appendix – Dipavamsa / 'Is the Dipavamsa a historical record of the entire people of Ceylon?' Dipavamsa is believed to be compiled between the beginning of the fourth century A.D. and the first third of the fifth century A. D. It is claimed in the introductory pages of the translation that the already existed Jathakas, commentaries and the other canonical works formed the basis for the compilation of the Dipavamsa. We would not go into the veracity of this conjecture as this guess was made by the translator about one thousand five hundred years after the compilation of the Dipavamsa. The focus will only be on the content of the Dipavamsa. The analysis is based on the copy of the Dipavamsa translated by Hermann Oldenberg in 1879 with the title “The Dipavamsa - An Ancient Buddhist Historical Record”. As per the translator, Hermann Oldenburg, this is an ancient Buddhist historical record. It cannot, therefore, be the historical record of the entire people of Ceylon. The trustworthy copies used by the translator, Hermann Oldenberg, were mainly from Burma though he used copies of lesser quality from Ceylon and other places. See the introductory pages 10 to 11 of the Dipavamsa translation in this regard. The translator, Hermann Oldenburg, was a German, and Pali and Buddhist scholar. He might not, therefore, have any colonial interest unlike the other English Civil Servants. Reference to a particular verse in a particular chapter is given by two numbers separated by a hyphen, such as 2-7. The number combination 2-7 references the verse seven of the chapter two. When a reference is made thus 4-36 to 39, it refers to the verses thirty six to thirty nine of the chapter four. Thus Dipavamsa 1-1 refers the verse one of the chapter one of the Dipavamsa;” I will set forth the history of Buddha’s coming to the Island, of the arrival of the relic and the Bo, of the doctrine of the teachers who made the recensions, of the propagation of the faith in the Island, of the arrival of the chief of men”. All these are covered in the first nine chapters, and, some scholars consider the rest of the chapters are later additions. [ As It focuses primarily on the above titles only, I belief that the Dipavamsa (circa 3rd–4th century CE) is not a comprehensive history of all the peoples of ancient Ceylon (Sri Lanka). Rather, it is a religious chronicle written by Buddhist monks, most likely at the Mahavihara in Anuradhapura. Please note that It largely omits: The pre-Buddhist history of the island, The history of non-Buddhist communities, including indigenous tribes (like the Yakkhas and Nagas), and Tamil-speaking groups or other ethnicities who existed in srilanka, Socio-economic, linguistic, or cultural details unrelated to the monastic or royal Buddhist context etc. Therefore, the Dipavamsa is not a historical record of the entire people of Ceylon. It is a sectarian Buddhist chronicle that selectively presents history to serve religious and doctrinal interests — mainly those of the Theravāda Buddhist tradition and the Sinhalese Buddhist monarchy that supported it. - By Kandiah Thillaivinayagalingam] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 36 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 35 https://www.facebook.com/groups/978753388866632/posts/31930767686571797/?
  24. துளி/DROP:177["தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"[பகுதி :01]]- https://www.facebook.com/groups/978753388866632/permalink/1227695237305778/ துளி/DROP:179["தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"[பகுதி :02]]https://www.facebook.com/groups/978753388866632/permalink/1228633883878580/ துளி/DROP:190["தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"[பகுதி :03]]https://www.facebook.com/groups/978753388866632/permalink/1243879122354056/ துளி/DROP:197["தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"/பகுதி:04]:https://www.facebook.com/groups/978753388866632/permalink/1252527018155933/ துளி/DROP:204["தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"/பகுதி:05]:https://www.facebook.com/groups/978753388866632/permalink/1261114833963818/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.