கேள்வி: அவுங்க குடும்பம், நல்ல குடும்பம்…நல்ல குடும்பம்ன்னு சொல்றாங்களே… அப்படின்னா என்னங்க?
பதில்: ப்ரியா என்ற பொண்ணு அனீஸ் என்ற பையனை காதலிச்சா… அவனைக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்கிற விஷயத்தை, தந்தைகிட்டே சொன்னாள். அவரோ “சாரிம்மா…. நீ அவனை மணக்க இயலாது. ஏன்னாக்க… அவன் உனக்கு அண்ணன் முறை! ஆனால், உன்னோட அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அதனால இத அவகிட்ட சொல்லிடாத. அவகிட்ட இது குறித்து மூச்சு விடாதன்னு சொல்லிவிட்டார்.
ப்ரியாவும் ஒரு நல்ல மகளா அனிஷை கழட்டி விட்டுட்டு, தனுஷ் என்கிற பையனைக் காதலிக்க ஆரம்பித்தாள். சில மாதங்களில் மீண்டும் அப்பாவிடம் வந்து, அப்பா… நான் தனுஷைக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்.. உங்க அபிப்ராயம் என்னன்னா?
அப்பாவோ மறுபடியும் ” சாரிம்மா.. அந்த தனுஷும் உனக்கு அண்ணன் முறைதான் வரும். தயவுசெய்து இத உன் அம்மாகிட்ட சொல்லிடாத… அவ என்னைத் தப்பா நினைச்சுக்குவாள்ன்னு” கெஞ்சினார்.
ஆனால் ப்ரியாவோ, தன் தாயிடம் போய்க் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லன்னு உணர்ந்தவள், தாயிடம் போனாள். அம்மா… அப்பாகிட்ட.. ஏற்கனவே.. நான் போய் அனீஸ், தனுஷ் இருவருடன் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தைத் சொன்னேம்மா… அப்பா.. சொல்றாரு, ரெண்டு பேருமே உனக்கு அண்ணன் முறை வேணும்… அதனால.. கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்கிறாரும்மா… ஏம்மா… என்றாள்?
ப்ரியாவின் தாய் சொன்னாளாம்” என் கண்ணு… அனீஸ் அல்லது தனுஷ் … ரெண்டு பேர்ல.. யாரைக் கல்யாணம் பண்ணனும்னு நீ நினைக்கிறாயோ.. அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோ…”. “ஏன்னா.. உங்க அப்பாதான் என் கணவர்… நான் அறிந்தவரை அவருக்கு உன்னுடன் எந்த உறவுமுறையும் கிடையாது!ன்னு ” குண்டைத் தூக்கிப் போட்டாளாம். மேலும் மகளிடம்” அப்பாவுக்கு நீ அவருக்கு எந்த உறவுமுறையும் கிடையாதுங்கிற விஷயம் இதுநாள் வரை தெரியாதும்மா… தயவு செய்து நீ இத அவருகிட்ட சொல்லிடாதம்மா..” என்று கெஞ்சினாள்.