Everything posted by குமாரசாமி
-
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
இஸ்ரேல் அரசால் பலஸ்தீன மண்ணில் தினசரி நடத்தப்படும் அழிவுகளை கண்டும் காணாமல் இருப்போர் உக்ரேன் அழிவுகளுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். உக்ரேன் பிரச்சனையும் பலஸ்தீனிய பிரச்சனையும் ஒரே கோட்டில் உள்ள பிரச்சனை அல்ல என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
-
📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
தலைமையகம் இப்பவும் ஸ்ரீதர் தியேட்டரில் தானா? 😂 கட்சிக்கு என தனி அலுவலகம் வாங்கிற பிளான் இன்னும் இல்லை போல....😎
-
ஐரோப்பிய ஆணைய ஆவணம் 2027 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஓர்பன் கூறுகிறார்.
வல்லமை பொருந்திய நாடுகள் அனைத்தும் தமது அண்டை நாடுகள் தமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை உதவிகள் எனும் போர்வையில் கட்டளை இடுகின்றன. மீறினால் சங்குதான் என்பதை கடந்த 15,20 வருட உலக நிகழ்வுகளில் பார்த்து விட்டோம்.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டவர் தான் இந்த சுத்துமாத்து சுமந்திரன். அது மட்டுமல்ல தேர்தலில் மக்களாலும் நிகாரிக்கப்பட்ட ஐ போவான் ஜாம்பவான் சுமந்திரன் என்றால் அது மிகையாகாது. இப்படி பூச்சிய நிலையில் உள்ள சுமந்திரனார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீதரனை நீக்க நினைப்பது ஈழத்தமிழ் அரசியலில் கேவலத்திலும் கேவலம். சுமந்திரன் ஆதரவாளர்களுக்கு ஒரு விண் அப்பம். உங்கடை சுமந்திரனோ இல்லை சம்பந்தனோ ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்திருந்தால் அல்லது செய்தால் ஏன் பொதுமக்கள் இவர்களை எதிர்க்கின்றார்கள் என்பதற்கான காரணத்தை சொல்லித் தொலையுங்கள். மீண்டுமொரு அமிர்தலிங்கம்-இராஜதுரை போன்ற அரசியல் நாடகம் இலங்கை தமிழர் பிரதேசங்களில் அழித்தொழிக்கப்பட வேண்டும்.
-
'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
ரகுமான் ஒரு இசை வியாபாரி.வியாபாரிகள் விருதுகளை வாங்குவது பெரிய விடயமல்ல. கிட்டத்தட்ட டாக்டர் பட்டம் வாங்குவது போல்.... இது மேலைத்தேய நாடுகளில் சர்வ சாதாரணம். ரகுமான் எனும் இசை வியாபாரி கிந்தி தெரியாது போடா என்றால் எந்த கிந்திக்காரன் இவர் இசையை வாங்க வருவான்? தமிழ் இசை,சினிமா உலகத்தை விட கிந்திவாலாக்களின் சினி உலகம் மிக மிக பெரியது. கொடிகட்டி பறந்த காலத்தில் தமிழுக்கு நேரமில்லாதவரின் இன்றைய அலறல் எதிர்பார்த்த ஒன்றுதான்.
-
ஐரோப்பிய ஆணைய ஆவணம் 2027 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஓர்பன் கூறுகிறார்.
உக்ரேனில் ரஷ்யா தனது மொழி,இனவாரியான கைப்பற்றிய இடங்களை பற்றி ஐரோப்பிய ஒன்றியம் அலட்டிக்கொள்ளா விட்டால் ஒன்றிய கனவு சாத்தியம் என நினைக்கின்றேன்
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
இரா சம்பந்தன் கூட்டிக்கொண்டு வந்த ஆளிட்ட கனக்க/நல்லதை எதிர்பார்க்கப்படாது கண்டியளோ.😀 அமிர்தலிங்கம்,சம்பந்தன் வரிசையில் வந்த இன்னொருவர்தான் இந்த சுமந்திரனார்.வழமை போல் பதவியை மோகத்தை தவிர வேறேதும் இல்லை.🤣 இவர்கள் எல்லாம் பொன்னம்பல இராமநாதன் காலத்து மூளைசாலிகள்.😂
-
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா: சுகாதார விதிமுறைகளை மீறிய உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு
மதிப்புக்குரிய சுகாதார இன்ஸ்பெக்டர்மார் உந்த தேத்தண்ணி கடையள்,கூல் பார் ரொய்லட்டுக்களையும் செக் பண்ணினால் போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும் 😷
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
நான் முல்லாக்களின் ஆதரவாளன் இல்லை. ஆனால் ஈரான் நாடு என்று பார்த்தால் சீனாவின் பின் பலம் அதிகமாக உள்ளது. இது நான் தீர்மானித்து எழுதிய கருத்து அல்ல. என்னுடன் வேலை செய்யும் தம் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனி வந்த ஈரானியர்கள் சொன்னது. அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள்..... ஈரானில் அரச மொழியாக சீன மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை என..... ஐ திங்......அமெரிக்காவிற்கு வெளிப்படை எதிரிகள் அதிகரித்து வீட்டார்களோ என திங் பண்ண வேண்டிக்கிடக்கு....😜
-
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!
இந்த பிக்குகள் எல்லாம் முள்ளிவாய்கால் அழிவுகளுக்கு பங்கெடுத்த முன்னாள் இராணுவ வீரர்களாக இருக்கலாம்.
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
உங்கடை ஆளுக்கு வரியை தவிர வேறை ஒண்டும் தெரியாது போல கிடக்கு. ஏலுமெண்டால் கூகிள்,பேஸ்புக்கு,வாட்ஸ் அப்,விண்டோஸ் ,ரிவிட்டர் எல்லாத்தையும் தனக்கு பிடிக்காத நாடுகளிலை நிப்பாட்டச்சொல்லுங்கோ பாப்பம்😃
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
எதையும் வெளிப்படையாக தெரிவித்தால் பலருக்கு பல சந்தேகங்கள் வராது என நான் நினைக்கின்றேன். மொட்டையாக எழுதி விட்டு கடந்து செல்வதால் பின்னடைவுகள் தான் ஏற்படும் என நான் நினைக்கின்றேன்.
-
கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
அமெரிக்கர்களின் சீட்டாட்டம் மிக நுட்பமானது.ஐரோப்பிய ஒன்றியத்தின் பலிக்கடா உக்ரேன் என்பது போகப்போக தெரிய வரும். உக்ரேனில் ரஷ்யா கையகப்படுத்திய பகுதி ரஷ்யாவுக்கே சொந்தமாகும். உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றிய கனவு ஊட்டியவர்களுக்கு கிரீன்லாந்து நல்லதொரு சமர்ப்பணம்.
-
கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
இன்றைய காலத்தில் சீனா எதற்கும் வன்முறையை கையில் எடுப்பதில்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அந்தந்த நாட்டு திண்ணையில் உட்காந்து விடுகின்றார்கள்.சிறிது காலம் செல்லச்செல்ல எமது சேவை உங்களுக்கு தேவை என்பது போல் தமது இருப்பை நியாயம் கற்பித்து விடுகின்றார்கள்.இதை இன்றைய காலங்களில் எல்லா நாடுகளிலும் நடக்கும் சம்பவங்களை கண்கூட பார்க்கின்றோம். நேட்டோ ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் செய்த நற்செயல்கள் எவை? சம்பந்தமில்லாத ஏனைய நாடுகள் மீது வான்வெளி தாக்குதல்களை செய்து மக்களையும் நாட்டையும் அழித்ததை தவிர.....? நேட்டோவை கலைப்பது போல் ஐநா போன்ற உலகை பேயனாக்கும் அமைப்புகளையும் கலைக்க வேண்டும். எல்லாம் சூரிய அஸ்த்தமனம் இல்லாத பிரிட்டிஷ் சாம்ராஜ்ய வம்சாவளிகள். உன் மடியில் நான் படுக்க....என் மடியில் நீ படுக்க எனும் பீலிங் வருவதை யாராலும் தடுக்க முடியாது.🤣 ஒரு காலத்தில் தாம் தம் இனம் என வாழ்ந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகளை வியாபார ரீதியாக ஆக்கிரமித்து ,தம் ஆட்சி நலனுக்காக சிற்றரசுகளை அழித்து கூட்டாட்சியை உருவாக்கி...... இன்று நடுத்தெருவில் நிற்கும் தனி இனங்களின் சாபம் சும்மா விடாது. இவர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு சாகும் தூரம் அதிகமில்லை.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
படித்தவர்கள் இரு வகைப்படும். ஒரு வகை படித்த படிப்பை நாட்டு வளர்ச்சிக்காக பயன்படுத்துவர். அவர்களிடம் நான் என்ற அகங்காரம் இருக்காது.அமைதியான மனப்பான்மை உடையவர்கள்.தெரியாததை அமைதியாக விளங்கப்படுத்துவர். இரண்டாவது வகையினர் தொழிலுக்காக படிப்பவர்கள். அவர்களது நோக்கு எதை படித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற நோக்குடையவர்கள். அப்படியானவர்களிடம் எந்தவொரு மனித மாண்புகளையும் காணவே முடியாது. இவையெல்லாம் நான் இலங்கையில் வாழ்ந்த போது கண்ட அனுபவங்கள்.
-
கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்
அடிடா புடிடா எண்டு போன ஜேர்மன் வீரர்கள்.....போன அதே வேகத்தில் திரும்பி வந்து கொண்டிருக்கினமாம்... அமெரிக்கா இல்லை என்றால் ஜேர்மனிக்கு முதுகெலும்பு இல்லாத பீலிங் எப்பவும் இருக்கும்.
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வெனிசுலாவின் ஆட்சி முறையை எதிர்த்து பொருளாதார தடைகளை விதித்தவர்களில் ஐரோப்பியர்களும் அடங்குவர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் தல டொனால்ட் ரம்ப் அவர்கள்.
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
அன்று தலைவர் போட்டு வாறன் பிள்ளையள் என்று சொன்னதும்..... இன்று. அனுர போட்டு வாறன் என்று சொல்வதும் நம்மவர்களின் ஒற்றுமையின் சிகர சொப்பனம். https://youtu.be/f8unFNmNYzw?si=yeTSgHnult2bSgMR
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அறவே மலசல கூடங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் திட்டமாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே மலசலகூட வசதி இருப்பவர்களின் திருப்பணி வேலைகளுக்கு பொதுப்பணி சரியான நிலையா? இல்லையேல் நான் பிழையாக விளங்கிக்கொண்டேனா? நான் நினைப்பது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.🙏
-
கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
அமெரிக்க இராஜாங்கத்தின் உள் மனதிற்குள் இருந்த திட்டங்களை டொனால்ட் ரம்ப் அவர்கள் வெளியே கொண்டு வருகின்றார் என நான் நினைகின்றேன். பொதுவாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் வளர்ச்சி என்பது அமெரிக்காவின் சர்வதேச அதிகாரத்திற்கு பெரிய இடையூறாக இருக்கின்றது. உதாரணத்திற்கு எண்ணை உற்பத்தி நாடுகளின் ஈரோ நாணய நாட்டங்கள். பிரச்சனைகள் எங்கேயோ இருக்க..... தேவையில்லாத இடங்களில் நின்று சண்டை பிடிக்கும் நிகழ்வுகள் இன்று நேற்றல்ல. அன்று தொடக்கம் நடக்கும் நிகழ்வுதான்.... இதை எம்மவர்களின் குடும்ப சண்டைகளிலும் நன்கு அவதானிக்கலாம். நிற்க.... அமெரிக்க ஆதிக்கத்தையும் ரஷ்ய ஆதிக்கத்தையும் மாறி மாறி கடிந்து கொள்பவர்கள்.....கறையான் போல் உலகையே அரித்துக்கொண்டுவரும் சீன ஆதிக்கத்தை கண்டு கொள்வதில்லை. சொல்ல வருவது சீனாவின் பட்டுச்சாலை திட்டம். இன்றைய காலத்தில் சீனாவின் பொருளாதார ஆதிக்க விளைவுகளை உலகின் சகல நாடுகளும் அனுபவிக்கின்றன.சீனாவின் ஒரு சில மூலப்பொருட்கள் இல்லையெனின் ஐரோப்பாவின் பல தொழிற்சாலைகள் முடங்கு நிலைக்கு வருவது நல்ல உதாரணம். கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவதை எதிர்த்தால் நாளை சீனா வந்து கையகப்படுத்தும். அதை யாரிடமும் எங்கேயும் எதிர்ப்புகளை காட்ட முடியாது.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் அதிர்ச்சியை தரும் செய்தியாக இருக்கின்றது. மோகனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆளாத்துயரில் நானும் பங்கெடுக்கின்றேன்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
எப்ப தொடக்கம் என்ற கேள்வி வருகின்றது? பதில்கள் ஆண்டு வாரியாக வரும் என எதிர்பார்க்கின்றேன்.
-
இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் வீதி விபத்துகளில் 82 பேர் உயிரிழப்பு!
ஒரு நாடு முன்னேற போக்குவரத்து சட்டங்களும் மிக மிக முக்கியமானது. போக்குவரத்து சட்டங்கள் மீறப்படும்போது லஞ்சம் வழங்கப்படுவதால் இத்தகைய விபத்துகள் நிகழ மேலும் வாய்ப்பளிக்கின்றது. மேலைத்தேய நாடுகளைப்போல் சட்டங்கள் பாகுபாடின்றி இறுக்கமானதாக இருக்க வேண்டும்.
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
ஆதரவு வேறு. எதிர்பார்ப்பு வேறு. இலங்கை தமிழர்கள் ஆதரவு நிலையில் இருந்து விலகி எதிர்பார்ப்பு அரசியலில் இறங்கியுள்ளார்கள் என நான் நினைக்கின்றேன். புதிதாக வருபவர்கள் ஏதாவது நல்லது செய்ய மாட்டார்களா என்ற நப்பாசையில் அவர்கள் பேச்சை கேட்டு வாக்களிக்கின்றார்களே ஒழிய கட்சி ஆதரவு அல்லது தனிமனித ஆதரவு வாக்குகள் இன்றைய நிலையில் அங்கில்லை. இதற்கு நல்ல உதாரணமாக..... சுமந்திரன்,அங்கஜன்,டக்ளஸ் போன்றோர் இன்னும் பலரின் தோல்விகளை உதாரணமாக எடுத்து கொள்ளலாம். அதை விட இரா.சம்பந்தனின் மரண நிகழ்வு நிகழ்ச்சிகள் இன்னும் பல நிசர்சனங்களை சிங்கள மக்களுக்கு எடுத்து சொல்லியுள்ளது. அதே போல் இனவாதத்துடன் இயங்கும் சிங்கள பேரினவாத குழுக்களுக்கு... சிங்கள அனுர திசநாயக்கவையும் தமிழர்கள் ஆதரிப்பது தமிழர்களிடம் இனவாதம் இல்லை என்பதை எடுத்து சொல்லட்டும். இப்படிக்கு... இடம் கண்ட இடத்தில் மடம் கட்டியவன்🤣
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
இனியென்ன புத்தபிக்கு பயங்கரவாதிகள் இவர்கள் விடுதலை வேண்டி அஜாரகங்கள் உட்பட வீதி மறியல் செய்து போராட்டங்கள் செய்வார்கள். அரபு நாடுகளைப்போல் ஸ்ரீலங்காவும் இன/மதவாத தீவிர அரசியல் கொண்ட நாடு.