Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. மீண்டும் முளைக்கும் எனும் தைரியத்தில் முடிகளை வழித்திருக்கின்றார்.இப்படியானவர்கள் தம் சொத்து சொகங்களை என்றுமே தியாகம் செய்ய துணிய மாட்டார்கள்.😎 உக்ரேன் போருக்காக எதையுமே செய்யாமல் அணுகுண்டு போல் பேச்சுக்கள் நடத்துவதில் மாகா வல்லவர்கள் இந்த FDP கட்சியினர். அதிலும் இந்த மாது செய்யும் அரசியல் அதிகாரம்,அகங்காரம் ஜேர்மனிக்கே வீழ்ச்சி.👇 இவர் ஒரு ஆயுத தொழிற்சாலையின் பங்குதார் என்பது யாவருக்கும் புதியது அல்ல.
  2. மேற்குலகினது ஊடகங்களின் அமைதியான செய்திகளை பார்க்கும் போது இவர்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை போல் தெரிகின்றது. மேற்குலகு கட்டிக்காக்கும் இஸ்ரேலிலும் நல்ல செய்திகள் இல்லை போல் தெரிகின்றது. முல்லாக்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் கோபத்தை விட அரேபிய நாடுகள் மீதுதான் அதிக கோபம் இருக்கின்றது என்பது வெளிப்படையாகவே அவர்களது தாக்குதல்கள் மூலம் சொல்லாமல் சொல்கின்றார்கள்.
  3. அது உங்களை நோக்கி எழுதப்பட்ட கருத்து அல்ல. இருப்பினும்....அங்கு வந்து வாங்கிக்கட்டி நொந்து இருப்பதை விட.... யாழ்களம் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது.இங்கேயே இருங்கள். அங்கே வந்தால் அறுத்து விடுவார்கள். இன்ஸ்ரகிராமிலும் ஆதிக்கம் உண்டு. விரும்பினால் அங்கும் சாத்துப்படிகள். உண்டு.... யாழ்களம் எங்கும் எதிலும் பெரு மரியாதைக்குரிய களம். எவர் எங்கிருந்தாலும் அதற்கு களங்கம் விளைவிக்க மாட்டார்கள்.என்னைப்போன்றவர்கள் யாழ்களத்தை வேறு ஊடகங்களில் எள்ளளவும் விமர்சிக்க மாட்டார்கள். தர்க்கம் என்பது ஒருவர் ஒருவருக்கானது அல்ல. அது கொள்கை ரீதியானது. நீங்கள் பல இடங்களில் செய்த தர்க்கம் கொஞ்சம் விசித்திரமானது. அதி கேவலமான பிக்பாஸ் நிகழ்ச்சியையே யாழ்களத்தில் இணைத்து விவாதிக்க வேண்டும் என விரும்பியவராச்சே!?!?!?!?!?!? என்ன செய்வது... உங்களுக்கு பொழுது போக்கு பசி..... எங்களுக்கோ இன விடுதலை பசி.... அவ்வளவுதான் வித்தியாசம்.😎
  4. ஈரானிய அண்ணலுக்கு வணக்கம்! உங்கள் எதிர்ப்பு அரசியல் வரவேற்கத்தக்கதே. ஆனாலும் நேர காலம் அறிந்து செயலாற்ற வேண்டும். இன்றைய உலகம் அன்று போல் அல்ல. அதை உங்கள் மக்களும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டும்.தனியே மதக்கட்டுப்பாடுகள் மக்கள் நலனாக இருக்க முடியாது. கட்டுப்பாடுகளாகவும் இருக்க முடியாது. உங்கள் நாடு. உங்கள் பிரச்சனை. இருந்தாலும்..... இவங்கள் ரொம்ப ரொம்ப மோசமானவனுகள்.மனித நேயம் இல்லாத யுத்தங்களை செய்தவனுகள். முதலாம் உலகப்போர்.இரண்டாம் உலகப்போர் எண்டு கனக்க சொல்லலாம்.தங்களுக்குள் தாங்களே அடித்து அழிந்து செத்தவனுகள்.ஹிரோசிமா நாஷசாக்கி அழிவுகளை பாருங்க அண்ணாச்சி.அப்போதைய ஜேர்மனி அழிவுகளை பாருங்க அண்ணாச்சி.நீதி நேர்மை நியாயம் பாக்கமாட்டானுவள் அண்ணாச்சி.சீனாவும் ரஷ்யாவும் ஒரு எல்லையோட நிப்பானுவள். மிஞ்சினால் பாயை விரிச்சிட்டு படுத்துடுவானுகள். வீர வசனத்த விடு அண்ணலே. ஈரான் மண்ணையே புல் பூண்டு முளைக்காத அளவுக்கு முடிச்சுவானுகள் அண்ணலே. Aral Sea வரலாறு தெரியுமா அண்ணலே. தெரியாட்டி போய் படி அண்ணலே. அண்ணலே! நான் ஜேர்மனியி இருக்கிறன். நான் இருக்கிற இடத்தில இருந்து ஒரு ஆயிரம் மீட்டர் தொலைவில ஒரு பெரிய குளம் இருக்கு. அதில இன்று கூட கைகால் அலம்பக்கூட அனுமதியில்ல. அந்த அளவுக்கு கெமிக்கல் குண்டுகளை கொண்டுவந்து கொட்டியிருக்கானுவள். விலகியிரு அண்ணலே. இல்லையேல் விளங்கமாட்டாய். வில்லங்கமானவனுகள்.விடானுகள்.
  5. ஏற்கனவே மூன்றாம் உலகநாடுகள் டொலரை பார்த்து காறி துப்புகின்றது. அதிலும் இந்த அறிக்கை இன்னுமொரு செருப்படி....🤣 இன்றைய நிலையில் பைடன் ஆட்சி வெள்ளைமாளிகையில் இருக்குமேயானால் இவையளும் அடிடா புடிடா எண்டு கொட்டன் குறுணி கல்லுகளோட வெளிக்கிட்டிருப்பினம்.இல்லாட்டி நேட்டோ எண்டதை அங்கையும் கொண்டுபோய் இறக்கியிருப்பினம்.😎
  6. நான் தமிழ்நாடு முன்னேறவில்லை என பல இடங்களில் எழுதுவதற்கு அந்த குடும்ப அரசியலும் முக்கிய காரணம்.எனது இன்னொரு முகநூல் பக்கத்தில் குடும்ப அரசியலுக்கு எதிரான உக்கிரம் இருந்து கொண்டே இருக்கும்.அதில் சீமானுக்கு இடமில்லை.விரும்பினால் சொல்லுங்கள் முகவரியை தருகின்றேன்.🤣 ஓம் நீங்கள் சொல்வது சரிதான்.👍
  7. இவர்,இன்னார் இப்படித்தான் இருப்பார் எனும் மனநிலையில் வந்து கருத்துக்களை வாசித்தால் இப்படித்தான் என பிழையாக விளங்கிக்கொள்ள நேரிடும். அதுதான் உங்கள் இருவருக்கும் உள்ள மனநிலை. நான் சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் சீமானின் ஈழ அரசியலை விடுத்து ....... சீமானின் தமிழ்நாட்டு அரசியல் பிடிக்கும் என பல இடங்களில் எழுதியுள்ளேன். அதை உங்கள் மூளை விளங்கிக்கொள்ள மறுக்கின்றது. எனவே இதற்கு மேல் என்னால் விளங்கப்படுத்த முடியாது. உங்கள் கருத்து வெற்றிக்காக தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள்.
  8. அன்றும் இன்றும் தலைவர் படத்தை தூக்குகின்றார் என்பதற்காக நான் சீமானை ஆதரிக்கவில்லை.
  9. இது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் அல்ல. இந்த நிலையில்.... புட்டினும் ரஷ்ய மக்களும் அமைதியாக தூங்கி ஒவ்வொரு நாட்களையும் இரசித்து வாழ்கின்றார்கள்.தாம் உண்டு.தம் வேலை உண்டு. உக்ரேன் மீதான சின்னஞ்சிறு சேட்டைகள் உண்டு.😎 பட்டுப்பாதையின் குறுக்கே வந்தவர்கள் அவஸ்தை படுகின்றார்கள். ஈரான் போர் வேண்டாம் என்றாலும் போர் நிற்காது.😁 அனைவருக்கும் ஒரு அரோகரா🙏
  10. அமெரிக்காவிட்டையும்,ஐரோப்பாவிட்டையும் இல்லாத காசே? 11 பில்லியன் அவங்கள் பின்னேரம் கோப்பி,தேத்தண்ணி குடிக்க செலவழிக்கிற காசு. 😎 அவங்களை அசைக்கேலாது கண்டியளோ....
  11. ஐம்பது வருடத்திற்கும் மேலாக அதுதானே நடக்கின்றது.சிங்களம் இந்தியாவை நோக்கி காறித்துப்பும் போது...... நம்ம ரமில் பொலிற்ரிக்கஸ் கூலிங்கிளாஸ் போட்டுக்கொள்வார்கள்.
  12. அத்திவாரத்தை விட்டுச்செல்லும் மனநிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்தும் பயனில்லை. இப்படியான நடவடிக்கைகள் தமிழினத்திற்கு புதிதும் அல்ல. இலங்கை தமிழ் அரசியலிலும் இராசதுரை மற்றும் ஊர்காவல்துறையார் நல்ல உதாரணங்கள். அதே போல் கருணா,பிள்ளையான் போன்றோரின் நடவடிக்கைகளும் தகும். காளியம்மாள் தலைவர் படம் தாங்கிய புத்தகத்தை அதிமுக காரியாலத்திற்கு எடுத்துச்செல்லாமல் தவிர்த்திருக்கலாம். கொள்கை இல்லாதவர்களுக்கு தலைவர் படம் அரசியல் வியாபாரப்பொருள் அல்ல.
  13. நான் அறிந்த வரையில் இரு பெரு மதங்கள் உருவாகிய பூமியில் என்றும் கலவரமும் இரத்தக்களரியும் தான்.....
  14. ஹலோ ஸ்ரீலங்கா....... கிந்தியா இருக்க பயமேன் 🤣
  15. மணி. இதைத்தான் கழுத்து பிடி என்பது. இதைத்தான் சொல்வது இருந்ததையும் கெடுத்தானாம் ஆண்டி என்று. ஏற்கனவே கொரோனா,உக்ரேன் போர் என்பவனவற்றால் பாரிய சறுக்கல்.இப்போது இது புதிய பிரச்சனை. இந்த மேற்குலகு 50 வருடங்களுக்கு முன்னர் தாம் இருந்த நினைப்பில் இன்றும் இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அடிமையாக்கப்பட்டவர்களோ அசுர வேகத்தில் வளர்ந்து தம்மை எதிர்ப்பவர்களை திருப்பி தாக்க ஆரம்பித்து விட்டார்கள். ஈரானின் பூகோளம் நன்றாகவே அவர்களுக்கு கை கொடுக்கின்றது. சிந்திக்க தவறியது அவசர புத்தி. இன்றைய அவசர வெற்றி நாளைய அழிவிற்கு சமம். இதுதான் இன்றைய உலகில் நடக்கின்றது.
  16. வட பகுதியில் போதை பிரச்சனைகள் வர முன்பே இப்படி குடும்பத்துக்குள்ளான பிரச்சனைகளும்,வெட்டுக்கொத்துகளும்,கொலைகளும் நடந்துள்ளன. பிள்ளைகள் திருமணம் செய்து தனிக்குடித்தனம் போன பின்...... அவர்களாச்சு அவர்கள் குடும்பமாச்சு என தாய் தகப்பன் வாயை மூடிக்கொண்டு இருக்கணும். பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைக்குள் தாய் தகப்பன் மூக்கை நுழைத்து நாட்டாண்மை பண்ணக்கூடாது.
  17. என்றும் எதிலும் எங்கும்... போர் எனும் கிடாரத்தை தலையில்.. தூக்கி வைத்துக்கொண்டு.. தாம் அறிவாளிகள் என்பர்- தாம் விஞ்ஞானிகள் என்பர்- தாம் அதை கண்டு பிடித்தோம் என்பர்- தாம் இதை கண்டு பிடித்தாம் என்பர்- தாம் எல்லூருடனும் நேயம் மிக்கவர் என்பர்- தாம் மனித நேயம் கொண்டவர்கள் என்பர்- தாம் பட்டினிக்கு உணவு கொடுக்கின்றோம் என்பர்- நெஞ்சில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு.......
  18. உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இன்றைய அரசியல் உலகில் உண்மைகளையும், தோல்விகளையும் வெளிப்படையாக கூறும் போது அதியுச்ச கோபம் வருகின்றது. Jeffrey Epstein பற்றிய பேச்சுக்களும் குற்றச்சாட்டுகளும் அது சம்பந்தப்பட்டோரின் அறிக்கைகள் வெளி வரும்போதே இல்லாதது பொல்லாதது நடக்கப்போகின்றது என நினைத்திருந்தேன். ஒரு கோட்டுக்கு முன் இன்னொரு பெரிய கோட்டை கீறிவிடும் தந்திரம் அவர்களுக்கே உரியது.
  19. ஏன் டொனால்ட் ரம்பிற்கு மட்டும்(உங்கள் தம்பர்) நாசமணி பட்டம்? அமெரிக்க அரசியல் வரலாறுகளை எடுத்து பார்த்தால் ஏனைய நாடுகள் மீது......அது எந்த கட்சி ஜனாதிபதியானாலும் சரி......போர் தொடுப்பதும், பொது மக்களை அழிப்பதும் ,தோல்விகளும் தானே வரலாறுகளாக இருக்கின்றது.
  20. புட்டின் பேய்க்காய். இன்னும் 10 வருசத்துக்கு உக்ரேன் போரை இழுக்கிற பிளான் போல கிடக்கு. அப்பிடி எண்டால் தான் ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய வியாபாரங்களும் காலி. இப்பவே ஜேர்மனி கார் கொம்பனியள் வெளிப்படையாக தங்கள் நட்டங்களை வெளிப்படையாக தெரிவித்து ஏராளமான தொழிலாளர்களையும் வேலையிலிருந்து நீக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.
  21. உடையார்ரை திருவிழாவில ஆரோ ஒருத்தன் வெடி கொழுத்தி வாணம் விட்டானாம் எண்ட மாதிரி.....அமெரிக்க-ஈரான் திருவிழாவில சீனா புகுந்து விளையாடுது போல கிடக்கு.....சீனாவும் தன்ர விளையாட்டு சாமான் எல்லாத்தையும் ரெஸ்ற் பண்ணி பாக்குது போல.....🤣
  22. நேசமணியா நாசமணியா?! பாட்டியின் மழலைப்பேச்சு! அறப்பளசை தம்பியர் தோண்டி எடுத்ததின் மர்மம் என்னவோ? 😂
  23. இனிய காலை வணக்கம்.🙏 புட்டின் அருமை தெரியாதவர்களுக்கு சம்பலின் அருமையும் தெரியாது. 😎
  24. இன்றோ நாளையோ உயிர் போகும் தருவாயில் இருந்த ஒரு மத/அரசியல் தலைவரை ஒழித்து கட்டியதுதான் மிச்சம்.அதற்கான செலவோ பில்லியன் கணக்கில்..... ஆப்கானிஸ்தானை அழித்து மீண்டும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளிடம் நாட்டை திருப்பி கொடுத்த ஞாபகம் தான் வருகின்றது.😁
  25. துனேசியாவில் ஆரம்பிக்கப்பட்ட அரபு வசந்தம் ஈரானில் முடங்கிப்போயுள்ளது போல் தெரிகின்றது. அந்த அரபு வசந்தத்தின் பின்னர் அந்தந்த நாட்டு மக்கள் வசந்தமாக இருக்கின்றார்களா என விசாரித்தால் இல்லை என்ற பதிலே வருகின்றது. அங்கே வாள் வெட்டு குழுக்கள் போல் வசந்த நாடுகளிலும் ஆங்காங்கே ஆயுத குழுக்கள் உருவாகியதுதான் மிச்சம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.