Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்வீட்டின் பின்பக்கக் கொட்டிலில் ஒலித்திருந்த புலநாயை கல்லெடுத்துத் துரத்தும்போது அது சாத்திரிக்குப் பிறந்தநாள் என்று சொல்லிவிட்டுச் சென்றது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்திரியார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
கிருபன் நீங்கள் 12 மணிக்கு நின்றிருந்தால் மக்கள் தொகையைப் பார்த்திருக்கலாம். 1 மணிக்குப் பின் மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்களே அன்றி கனநேரம் இருக்கவில்லை. சசி முருகதாசன் பற்றி என்ன கேட்கிறீர்கள் என விளங்கவில்லை. தெளிவாகக் கேட்டல் பதில் சொல்லலாம்
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
எச்செல் மண்டபத்தில் முந்தய காலங்களில் பார்க்க ஆட்கள் குறைவு தான்.ஆனால் இதுவே நிறையத்தான்.நீங்கள் எத்தனை மணிக்கு வந்தீர்கள். தேர்தல் இல்லாமையால் அரசியல் வாதிகள் வராது விடவில்லை.இம்முறை ஒரு கட்சியிலிருந்து ஒருவர் தான் எனத் தீர்மானித்து மற்றவர்களை அழைக்கவில்லை. conservative கட்சியிலிருந்து ஒருவரும் வராததால் வீடியோ கிளிப் போடப்பட்டது.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
தமிழனைப் போல் பேராசை கொண்டவன்,தேசத்தின் பால் ஆசை அற்றவன், சுயநலம் மிக்கவன் உலகின் எந்த இனத்திலும் இருக்க முடியாது. ஆனாலும் கிட்டத்தட்ட 3 இலட்சம் மணமக்கள் வாழும் பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டிருந்தபோது கிட்டத்தட்ட 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தான் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அந்த வருடம் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர் கலந்து கொண்டனர். மிகுதி 75 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதற்காக அவர்களுக்கு எந்த உணர்வுமே இல்லை எனக் கூற முடியுமா. எந்த நாட்டிலும் விடுதலைக்கான முன்னெடுப்புக்களை சிலரே செய்ய விடுதலை எல்லோருக்குமானதே. இக்காலகட்டத்தில் பத்தாயிரம் என்பதே பெரிய தொகை தான் சசி.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
[size=5]GTV, தீபம் இரண்டும் எந்தத் தேசிய ஊடகம் என்று ஒருக்காச் சொல்லுங்கோ சாத்திரி. உங்களைப் போல் எல்லோருமே வீட்டில் இருந்து தீபம் ஏற்றலாம்.அடத்த வருடம் சிலவேளை ஏற்றலாம் ஏற்றாமல் விடலாம்.அதன் பின் ஏற்றவே தேவை இல்லை.அதற்க்கு அடுத்த வருடம் மாவீரர் நாளா எந்த நாட்டினது என்று தமிழர்கள் கேட்கும் நிலை வரும். அது மனித இயல்பு என்று விட்டு விடலாமா சாத்திரி????? [/size]
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
[size=5]ரதி நான் நேரில் நின்று பார்த்ததைத் தான் எழுதினேன்.எனக்குப் பொய் சொல்ல வேண்டிய தேவையோ அல்லது ஒருவருக்காகப் பிரச்சாரம் செய்யும் தேவையோ இல்லை. கதிரைகள் மட்டும் 10,000 போட்டனர். நான் மண்டபத்தின் மேற் பகுதியில் உள்ள அறையில் வேலை செய்தேன். 11.30 க்கு நிகழ்வுகள் ஆரம்பித்தபோது அரைவாசி இருக்கைகள் கூட நிறையவில்லை.எனக்கு மக்கள் வர மாட்டார்களோ என்ற பயம் கூட வந்துவிட்டது. மலர் வணக்கம் ஆரம்பித்த பொது பார்த்தால் மண்டபம் முழுதும் நிரம்பியிருந்தது இருபக்கமும் வரிசையிலும் மக்கள் நின்றார்கள்.தமிழரசு போட்டுள்ள படங்களில் நீங்கள் அதைப் பாத்திருக்கலாம். எந்த மாவீரர் நிகழ்வு நடந்தாலும் முதலில் மீடியா தான் செய்திகளைப் போடும். இரவு 12 மணிச் செய்தியைப் பார்த்தால் மாவீரர் நிகழ்வு பற்றிய எதுவும் இல்லை பிறகு காட்டிய நிகழ்வில் முருகதாசன் திடலில் நடைபெற்ற நிகழ்வை பின்பக்கத்தில் இருந்து ஆட்களின் எண்ணிக்கை தெரியாதவாறு காட்டினார்கள். அவ்வளவு சனம் அங்கே வந்திருந்தால் ஏன் GTV ஆட்களைக் கிட்டக் காட்டவில்லை. நாவூறு பட்டுவிடும் என்றா???? எனது நண்பர். ஆனால் அவர் முருகதாசன் திடலுக்குப் போனார். அவர் வாயால் 2000 இக்கு உள்ளே தான் அங்கு மக்கள் வந்ததாகக் கூறினார். நான் பொய் சொல்லலாம் ஆனால் அங்கு போனவர் பொய் சொல்ல மாட்டாரே. முருகதாசன் திடலில் போடப்பட்டிருந்த கொட்டகையைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே எவ்வளவு ஆட்டலை அது கொள்ளும் என்று. எமக்காக உயிர் நீத்த ஒருவரின் பெயரால் அத்திடலை அழைத்துக்கொண்டு அவருக்கு களங்கம் விளைவிக்கிறோம் பொய்யும் புனைவுகளும் கூறி என்பதே என் ஆதங்கம் . யாரும் எதுவும் கூறி யாழில் ஏன் நாம் சண்டை போடுவான். காலம் காட்டும் எல்லாவற்றையும் பொறுத்திருப்போம் வண்டு. உங்களுக்கு எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறவும் முடியாது. எனக்கு GTV பற்றி உங்களிலும் தெரியக்கூடிய அளவு என் நண்பர்கள் அங்கு வேலை செய்கின்றனர். [/size]
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
[size=4]இன்று முன்பகல் 11.30[/size] [size=4]மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட [/size][size="4"]10,000[/size] [size=4]இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த[/size] [size=4]மக்கள் விளக்கேற்றும் நேரத்தில்[/size] [size=4]கூடியிருந்தமை மனதுக்கு நம்பிக்கையைத் தந்ததெனலாம்.[/size] [size=4]பள்ளி[/size] [size=4]நாளில்[/size], [size=4]வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில்[/size] [size=4]நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும்[/size], [size=4]மாவீரரை ஓரிடத்தில் துதிக்க[/size] [size=4]வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.[/size] [size=4]ஆனாலும் முன்பு இருந்த[/size] [size=4]ஒரு[/size] [size=4]கர்வம் எல்லோர் முகங்களிலும் இல்லாமலிருந்ததையும்[/size] [size=4]கவனிக்கக் கூடியதாக இருந்தது.[/size] [size=4]GTV தொலைக்காட்சி தொடர்ந்து ஒரு வாரகாலமாக excel மண்டபத்துக்கு எதிரான விளம்பரங்களைத் தொடர்ந்தும் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், சங்கீதன் என்பவர் தொடர்ந்து மூன்று நாட்களாக GTV வந்து மக்களிடம் முருகதாசன் திடலில் நடைபெறும் நிகழ்வுக்கு வருமாறு உருக்கமான வேண்டுகோளைமக்களிடம் விடுத்துக்கொண்டிருந்த வேளையிலும் யார் சரி என்பதற்கும்மேலாக ஓரிடத்திற் கூடவேண்டும் என்னும் மக்களின் நோக்கம் வரவேற்கத்தக்கது. கடந்த சில வருடங்கள் மாவீரர் நாளில் கலந்துகொள்ளாது ஒதுங்கி இருந்தவர்கள் கூட இங்கு வந்திருந்தமையைக் காணக்கூடியதாகவும் இருந்தது. நிகழ்வுகள் யாவும் பிரித்தானிய நேரம் 5.30 க்கு நிறைவுக்கு வந்து மக்கள் கலையத்தொடங்கிய பின்னரும் பலர் வேலையை முடித்துக்கொண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்தபடி இருந்தனர். யாரென்றாலும் மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை. [/size]
-
உங்களுக்கு தெரியுமா?
அனைவருக்கும் மிகப் பயனுள்ள திரி நன்றி நுனாவிலான்.பல நூல்களைப் புரட்டவேண்டிய தேவை இனி இல்லை. நிறுத்தாது தொடருங்கள்
-
யாழ் களம் 2012 மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள்
தமிழ்ப் பெண்ணான நான் என் உயிர் உள்ளவரை எம் தேசம் நோக்கிய பாதையில் பயணிப்பேன் என உறுதி எடுத்துக் கொள்கிறேன்.