Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா கடற்படையினரின் அதிகாரத்தின் கீழ் வலிகாமம் வடக்கு!

Featured Replies

யாழ்ப்பாணத்தின் வலிகாமம்-வடக்குபகுதியில் உள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகின்றபோதிலும் வலிகாமம் வடக்கின் கரைஓரப்பகுதி மக்களின் சுமுகமான அன்றாட வாழ்வுக்கு சிறீலங்கா கடற்படை இடையூறாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

கரையோரப்பகுதிகளில் மக்கள் பற்றைகளுக்குள்,பாம்புகளுடனும், பூச்சிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.சாதாரணமாக குப்பைகளை தீயிடுவதற்கும், மரம்வெட்டுவதற்கும் கூட கடற்படையின் அனுமதிக்காக காத்திருக்கவேண்டிய நிலையில் காணப்படுவதாகவும், குறிப்பிட்ட பிரதேசத்தில் மக்களுக்கான அடிப்படைவசதிகள் எதையும் செய்து கொடுக்காமல் மீள்குடியேற்றம் நடைபெற்று முடிந்து விட்டது என்று சிறீலங்காஅரசு அறிவித்துள்ள நிலையில் எதுவித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் என்ன நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என அதிகாரிகளும் கூட அங்கு சென்று பார்த்திராத நிலையில் 21வருடங்களின் பின்னர் சொந்த மண்ணிற்கு வந்த மக்கள் ஏமாற்றங்களுடன் மட்டுமே வாழ்கின்றனர் எனகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிமேறச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் குறித்த பகுதிகளுக்குச் சென்றிருந்த அவர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கரையோர கிராமங்களுக்குச் சென்று கலந்துரையாடல்களை நிகழ்த்தினார். இதன் பின்னர் கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மீள்குடியேற்றம் இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், சேந்தாங்குளம், வசந்தபுரம், போன்ற கரையோரக் கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாகின்றது.ஆனால் அரைநிரந்தர வீடுகள் மற்றும் மலசல கூட வசதிகள் உட்பட எவையுமே செய்து கொடுக்கப்படவில்லை.மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட 12தகரங்ளில் அமைத்த கூடாரங்களிலேயே மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இதேபோல் மீள்குடியேற்றத்தின் தொழில் உபகரணங்கள் எவையும் இன்றுவரை மக்களுக்கு வழங்கப்படவில்லை.வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொண்டாலும் அவற்றை மீளச் செலுத்துவதில் உள்ள கஷ;டங்களை பார்த்துவங்கிக் கடன்களைப் பெறுவதற்கும் கூட மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த நிலையில் சேந்தாங்குளம்பகுதியில் கடற்படையினரின் நெருக்குவராம் மிக அதிகமாக இருப்பதை மக்கள் எம்மோடு பேசியதிலிருந்து அறிகின்றோம்.21வருடங்களின் பின்னர் சொந்த மண்ணில் மீள்குடியேறியுள்ள மக்கள் தமது இருப்பிடங்களைச் சூழவுள்ள பற்றைகளைக் கூட துப்புரவு செய்து, அவற்றை தீயிட்டு கொழுத்த முடியாத நிலை. அதையும் மீறி தீயிட்டாலோவந்து குவியும் கடற்படையினர் மக்களைக் கொண்டு தண்ணீர் அள்ளிவித்து, ஊற்றி அணைக்கும் படிசொல்லுகின்றனர். இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அடக்குமுறை. இதனால் மக்கள் பாம்புகள், பூச்சிகள், மற்றும் உண்ணிகளின் தொல்லைகளையும், அபத்துக்களையும் தினசரிசந்திப்பதாக கூறுகின்றனர்.

இது மட்டுமல்ல ஒரு பனைமரம் தறிப்பதற்கும் கூட கடற்படையின் அனுமதிக்காக பொன்னாலை வரை மக்கள் செல்லவேண்டியிருக்கின்றது.மேலும் மலசல கூட வசதி பெரும்பாலான குடும்பங்களுக்கு வழங்கப்படவேயில்லை, இந்த நிலையில் மக்கள் பற்றைகளையும், கடற்கரையோரங்களையும் நம்பியிருக்கின்றனர். இது எல்லாச்சந்தர்ப்பத்திலும் எல்லோருக்கும் பொருத்தமானதாக அமையுமா? பெண்கள், சிறார்கள், வயதானவர்களுடைய நிலை என்ன?இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு மத்தியில், மீள்குடியேறியுள்ள மக்கள் வெறுமையாகவே வாழ்ந்துவருகின்றனர். மீள்குடியேற்றத்தின் பின்னர் அந்த மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என அதிகாரிகளும்சென்று பார்ப்பது கிடையாது. எனவே மக்களின் அன்றாட வாழ்வில் கடற்படையினரின் இடையூறுகளை தவிர்த்து,மக்களின் சுமுகமான நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் உதவவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை மேற்படி இரண்டு கிராமங்களுக்கும், மலசல கூடத் தொகுதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உரியநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Vallikamam%20%20mp.jpg

www.sangathie.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.