Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்மானம் நிறைவேற்றினால் மாத்திரம் போதுமா? - ஆய்வு

Featured Replies

army-1.jpgஎந்தவொரு நாடும் தனது தேசிய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காது பிறிதொரு நாட்டிற்கு உதவ முன்வராது. இது சர்வதேச அரசியலின் அடிப்படைச் சித்தாந்தம். தனது இலாபத்திற்காகப் பிற நாட்டுப் பிரச்சனையில் தலையிடும் போது பிரச்சனையோடு தொடர்பு இல்லாதவர்களும் இலாபம் அடைய வாய்ப்புண்டு. அது தற்செயலாக நடக்கும் நிகழ்ச்சி.

தேவை எவருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் தலையிடுவார்கள் என்பதும் மேற்கூறிய கருத்தின் இன்னொரு பரிமாணம். இவற்றை வைத்து நோக்கும் போது குற்றவாளி நாடான இலங்கையின் சிங்கள அரசு தயாரித்த நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கைக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?.

சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜநா நிபுணர் குழு அறிக்கை கூறுகிறது. இந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இலங்கைப் படையினரின் போர்க் குற்றங்கள், மனித நேயச் சட்டங்கள், மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஜநா நிபுணர் குழு அறிக்கையில் காணப்படுகின்றன.

இப்போதைய நிலவரத்தில் ஜநா நிபுணர் குழு அறிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் கொள்வதில் தவறில்லை. ஜநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் நிறைவேறுவதற்கு அமெரிக்கா தலைமையில் 24 நாடுகள் சாதகமாக வாக்களித்துள்ளன. இதில் வேண்டா வெறுப்பாக இந்தியா அமெரிக்காவுடன் கூட்டாக வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படை ஆவணமாக இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை இடம்பெறுகிறது. அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை (1) இன நல்லிணக்கம் (2) மீள் குடியேற்றம் (3) இராணுவமயமாக்கல் நிறுத்தம் என்ற மூன்று முக்கிய விடயங்கள் உள்ளடங்கியுள்ளது.

இந்த மூன்று விடயங்களும் தொடர்ச்சியாக இலங்கை அரசால் மீறப்படுகின்றன. புலிகள் மீண்டும் தாக்குதல்களை நடத்தத் தொடங்கி விட்டார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டுடன் அரசு இராணுவத்தை வடக்கு கிழக்கில் குவித்துள்ளது. கைதுகள், சித்திரவதைகள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமற் போதல்கள், பாலியல் வல்லுறவுகள் முன்னரிலும் கூடிய எண்ணிக்கையில் நடக்கின்றன.

வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு முனைப்புப் பெற்றுள்ளது. அரசு தனது படை பலத்தின் மூலம் தமிழர்களின் நிலத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுகிறது. தமிழ் கிராமங்களுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. மீள் குடியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. புதிதாக வீடு, வாசல், நிலம் இழந்தோர் எண்ணிக்கை வடக்கிலும் கிழக்கிலும் பல்கிப் பெருகியுள்ளது.

தமிழர்களுடைய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு புத்த கோவில்கள் அதே இடத்தில் கட்டப்படுகின்றன. தமிழர்களுடைய அடையாளங்களை அழிப்பதற்கு அரசு தீவிரமாகச் செயற்படுகிறது. இவை அனைத்தும் தமிழ் சிங்கள நல்லுறவைப் பாதிக்கும் செயற்பாடுகளாக அமைகின்றன.

பாலஸ்தீன மேற்குக் கரையில் நடக்கும் யூதக் குடியேற்றத்திற்கு ஆதரவு வழங்கும் அமெரிக்கா சிங்களக் குடியேற்றத்திற்கும் ஆதரவு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டு நியாமானதே. ஜெனிவா தீர்மானம் நிறைவேறியதால் தமிழர்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக தமிழ்க் “கட்டமைப்பு இன அழிப்பு” (Structural genocide) மாத்திரம் தீவிரமடைந்துள்ளது.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.