Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுஷ்மா சுவராஜின் இலங்கைப் பயணம்

Featured Replies

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு நேரில் வந்த சுஷ்மா சுவராஜ் அவர்களைத் தமிழர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். அரசியலுக்காக அனுதாபம் காட்டாமல் மனிதத்திற்காக இரக்கம் காட்டியவருக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு.

ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் நிறைவேறிய பிறகு இந்தியாவுக்கும் இலங்கைக்கும்; இடையில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரி செய்வதற்காக காங்கிரசு அரசு பல முயற்சிகளை எடுக்கிறது.

அதில் ஒன்றாகக் கொழும்புக்கு இந்திய மத்திய அரசு ஒரு தூதுக் குழுவை அனுப்புகிறது. இதில் சுஷ்மா தலைமைப் பதவியுடன் பயணம் செய்கிறார். செட்டிக்குளம் தடுப்பு முகாமைப் பார்வையிட திமுகவின் பிரமுகர்களும் விடுதலைச் சிறுத்தைத் தலைவரும் முன்பு சென்றது நினைவில் இருக்கிறது.

கருணாநிதி கொடுத்து அனுப்பிய மாலைகளை டி.ஆர்.பாலுவும் தொல் திருமாமளவனும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அணிவித்தார்கள். தமிழின அழிப்பிற்கு பாராட்டுத் தெரிவிக்கும் தூதுக் குழுவாக அது அமைந்தது.

Evening-Tamil-News-Paper_20059931279.jpg

சுஷ்மா சுவராஜ் பயணம் அப்படி அமைந்து விடக் கூடாதுதென்று தமிழகம் விரும்புகிறது. பயணத்தின் குறிக்கோள் வெறும் நல்லெண்ணமாகவும் உறவுகளைப் பலப்படுத்துவதாகவும் இருக்கக் கூடாதென்பது இந்தியக் குடிமக்களின் அபிலாசை.

இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதமர் வாஜ்பாய் அரசில் நிதி, மற்றும் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்த யஸ்வந்த் சின்ஹா 2011.08.12ம் நாள் இந்தியப் பாராளுமன்றத்தில் கூறியவற்றை நினைவு கூர்தல் மிகவும் பொருத்தம். இந்தியர்கள் எல்லோரும் உறுதியாக ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறோம் என்பதை உலகிற்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் சின்ஹா.

பாராளுமன்றம் முன்பாக மதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் யஸ்வந்த் சின்ஹா ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்திப் பேசினார். ஈழத் தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தால் அதில் பங்கு பற்ற நான் தயார் என்று அவர் சொன்னார்.

நான் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன். வாருங்கள் எல்லோருமாகப் படகுகளில் புறப்பட்டுச் சென்று இலங்கை விவகாரத்தில் நாங்களும் ஈழத் தமிழர்களுடன் இருக்கிறோம் என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வோம் என்றார்.

ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரை இந்தப் போராட்டத்தை விடமாட்டோம் என்றும் அவர் சொன்னார். யஸ்வந்த் சின்ஹா அவர்களுடைய ஆணித்தரமான இந்தக் கருத்துக்களை சுஷ்மா அவர்களும் ஆதரிக்கிறார் என்பதை அறிவோம்.

ஈழத் தமிழர்களின் இன அழிப்பிற்கு முழு அளவு ஆதரவு வழங்கியது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தான் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. தமிழ் நாட்டில் தோன்றிய கொந்தளிப்பும் அமெரிக்காவின் அழுத்தமும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியாவைத் தூண்டியுள்ளன.

ஆனால் இலங்கையுடன் சமரசம் செய்யும் போக்குடன்; இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செய்யும் அனைத்து படுகொலைகள், மனித உரிமை மீறல்களுக்கும் தொடர்ந்து இந்தியா இரகசியமாக ஆதரவு வழங்குகிறது.

சுஷ்மா இடம் பெறும் தூதுப் பயணமும் இலங்கையுடனான நலலுறவை பேணும் நோக்கத்தைக் கொண்டது என்பதை மறுக்க முடியாது. யஸ்வந்த் சின்ஹாவின் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை என்பதையும் மறக்க முடியாது.

jasvanth%20kansha.jpg

தனது பயணத்தின் போது சுஷ்மா அவர்கள் பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

1) தமிழக மீனவர்கள் படுகொலை நிறுத்தப்பட வேண்டும். கச்சதீவில் இலங்கை கடற்படை அமைத்த தளங்கள் அகற்றபப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை அரசு தனது படைகள் மூலம் தடுக்கக் கூடாது.

2) வவுனியா, செட்டிக்குளம் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக அமைக்கப்பட்ட இந்தத் தடுப்பு முகாம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

3) தமிழர் மண்ணில் துரித கதியில் நடக்கும் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும். குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டு மண்ணுக்குச் சொந்தமான ஈழத் தமிழர்கள் அந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும்.

4) வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் நிறுவப்பட வேண்டும். இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

5) இந்துக் கோவில்கள் வடக்கிலும் கிழக்கிலும் இடித்து அழிக்கப்படுகின்றன. இடிக்கப்பட்ட கோவில் நிலத்தில் புத்த கோவில்கள் கட்டியெழுப்பப் படுகின்றன. இந்து மதம் வடக்கு கிழக்கில் ஆபத்தை எதிர் நோக்குகின்றது.

6) ஈழத் தமிழர்களின் தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களுடைய பொருளாதார வாழ்வு படிப்படியாகச் சிதைக்கப்படுகிறது. இலங்கை அரசு தனது போக்கை நிறுத்தாவிட்டால் ஈழத் தமிழினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

7) ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். பல வருடமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுகின்றன. அரசு தமிழர்களை ஏமாற்றுகிறது. உண்மையான ஆட்சி அதிகாரமும் அதிகாரப் பகிர்வும் ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

8) தூதுக் குழுவினர் இலங்கையில் விரும்பிய இடங்களுக்குச் சென்று விரும்பிய எவரையும் சந்தித்து இராணுவ அச்சுறுத்தல் இன்றி பேசும் உரித்தை உறுதி செய்ய வேண்டும்.

9) வெறும் கண்துடைப்புக்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப் படுவதாக கருத இடமுண்டு. ஆகையால் அதிமுக, திமுக கட்சிகளைப் போல் பயணத்தை தவிர்ப்பது பயனுள்ளதாக அமையும்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.