Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருநாடகப் பொங்குதமிழுக்கு வலுச்சேர்ப்பது புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றுக் கடமை - தாயகத்தில் இருந்து வீரமணி

Featured Replies

கருநாடகத்தில் நடைபெறவுள்ள ‘பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு’ தமிழ் மக்களின் உரிமைக்கான உன்னத நிகழ்வாக அமைய வேண்டுமென்று ஈழத் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்வின் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்குரல் உலக நாடுகளின் காதுகளில் ஒங்கி ஒலிக்கட்டும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில், எதிரியின் இரும்புக் கரங்களுக்குள் பிரசவமாகிய பொங்கு தமிழ் உலகின் மூலை முடுக்கெங்கும் தவழ்ந்து சென்று இன்று கருநாடகத்தில் வளர்ந்து நிற்கிறது. புலம்பெயர் தமிழர்களால் வளர்க்கப்பட்டுள்ள இந்தப் பொங்கு தமிழ் நிகழ்விற்கு, ஈழத் தமிழ் மக்கள் தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

காற்றாடியை முறித்தால் காற்றே வீசாதென்று சிங்களம் கனவு காண்கிறது. ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்தை அழித்ததன் மூலம் எல்லாம் முடிந்துவிட்டதென்று மகிந்த குடும்பம் எக்காளமிடுகின்றது. ஆனால் எதுவுமே முடியவில்லை. ஈழத் தமிழர்களின் காவலர்களாய் நாங்கள் இருக்கிறோம் என்று புலம்பெயர் தமிழர்களாகிய நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள்.

உங்கள் ஒன்றுபட்ட எழுச்சியின் மூலம் இந்தப் பொங்கு தமிழ் பெரு வெற்றி பெறவேண்டும். அதற்கு நீங்கள் அனைத்து வகையிலும் ஒத்துழையுங்கள் என்றும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.யாழ். பல்கலைக்கழகத்தில் 2001 ஆம் ஆண்டு தமிழர்களின் உரிமைக் குரலாகத் தோற்றம்பெற்ற பொங்கு தமிழ் மூலமாகத் தமிழரின் உரிமைப் போராட்டம் உலகின் காதுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. உலக ஊடகங்கள் அனைத்தும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன.

அதனைத் தொடர்ந்து நாங்கள் இரண்டு பொங்கு தமிழ் நிகழ்வுகளை நடத்தியிருந்தோம். அவைகளும் எமக்குப் பெரு வெற்றிகளைப் பெற்றுத் தந்தன. ஆனால், தற்போது நாங்கள் எதனையும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறோம். எமது உரிமைக்காகப் போராடும் பொறுப்பை தற்போது நீங்களே தலைமேல் சுமந்துள்ளீர்கள். அத்தகைய உங்கள் பணிக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்தப் பணிகள் எல்லாவற்றுக்கும் மேலதிகமாக கருநாடகப் பொங்கு தமிழில் நீங்கள் கரம் கோர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

thalaivar%20%20pongu%2001.jpg

இது ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம். இதில் பங்கெடுப்பதன் மூலமும் உங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுங்கள் என்றும் ஈழத் தமிழ் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கருநாடகப் பொங்குதமிழ் தொடர்பாக யாழ். குடாநாட்டிலுள்ள சில தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்ளின் கருத்துக்கள் வருமாறு, யாழ்.பல்கலைக்கழகத்தில் 2001 ஆம் ஆண்டு மூன்றாம் வருடத்தில் கல்வி கற்றவரும் தற்போது அரச திணைக்களமொன்றில் பணியாற்றுபவருமாகிய எஸ்.ஆரூரன் என்பவர் கருநாடக பொங்கு தமிழ் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ‘2001 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெற்ற போது இராணுவத்தின் அடாவடித்தனங்கள் அதிகமாக அரங்கேற்றப்பட்டன.

ஈழத் தமிழ் மக்களை அழித்த சிங்கள அரசின் அடாவடித்தனங்களை நிறுத்துமாறு நாங்கள் அன்று போராட்டம் நடத்திய போது சர்வதேசம் எங்களைத் திரும்பிப்பார்க்க மறுத்துவிட்டது. இதனாலேயே நாங்கள் பெரும் அழிவுகளைச் சந்தித்திருக்கின்றோம். ஆனால், தற்போது கருநாடகா பொங்கு தமிழ் மிக மிக வித்தியாசாசமான சூழலில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன. எங்கள் பிரச்சினைகளைத் தற்போது உலகம் திரும்பிப் பார்த்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு தற்போது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் வெளிநாடொன்றில் அதுவும் பல கோடிக்கணக்கான தமிழ் மக்கள் வசிக்கின்ற இந்தியாவின் கருநாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்தப் பொங்கு தமிழினூடாக சர்வதேசத்திற்கு மேலும் தெளிவான செய்தியன்றைச் சொல்ல முடியும்.

‘ஈழத் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவே விரும்புகின்றனர். அவர்களுக்கு உரிய தீர்வொன்றை வழங்க சர்வதேசம் முன்வர வேண்டும். தமிழ் மக்கள் மாற்றானின் நிலத்தைக் கேட்கவில்லை. காலம் காலமாக அவர்கள் வாழ்ந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கே அவர்கள் விரும்புகின்றனர். பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து பண்பாடு கலாசாரத்துடன் வாழ்ந்த நிலங்களையே அவர்கள் கேட்கிறார்கள்.

அதனை அவர்களுக்குக் கொடுங்கள். தமிழ் நிலத்தில் தமிழர்களை சுதந்திரமாக வாழவிடுங்கள் என்ற உரத்த கோசங்களை எழுப்பி எமது பிரச்சினையை உலகின் காதுகளுக்குக் கொண்டு செல்ல முடியும். கருநாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் இந்தப் பொங்கு தமிழில் அலை அலையெனக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது வீரமகனை மாவீரராக்கிய ஒரு தாய் (இவர் ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியை. பாதுகாப்புக் கருதி தனது பெயரை வெளியிட வேண்டாமென்று கூறினார்) கருத்து வெளியிடுகையில், ‘நாங்கள் போராட்டத்திற்காக எத்தனையோ பெரிய தியாகங்களைச் செய்துள்ளோம். பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறோம். உலகிலே எந்தவொரு இனமும் தமது விடுதலைக்காக இத்தகைய பெரிய விலையைச் செலுத்தியிருக்கவில்லை.

எமது பிள்ளைகள் வீரதீரத்துடன் போராடி சிங்களப் படைகளை ஆட்டம் காணச் செய்தனர். எமது தலைவரின் வழியில் இணைந்து போராடுமாறு நானே என் மகனை நேரடியாகக் கொண்டுசென்று போராட்டத்தில் இணைத்தேன். எமது பிள்ளைகள் இறுதி இலக்கை அடைவதற்கான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது சர்வதேசம் சிங்கள அரசுக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்தமையால் சிங்கள அரசு தமிழரின் போராட்டத்தை அழித்துள்ளது.

ஆனாலும் எமது சுதந்திர வேட்கையை யாராலுமே அழிக்க முடியவில்லை. சர்வதேசத் தாலேயே எமது போராட்டம் அழிக்கப்பட்டது. எனவே எமக்குரிய விடுதலையையும் சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும். இதற்காக நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது. கருநாடக பொங்கு தமிழ் இதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் இந்தப் பொங்கு தமிழில் அலை அலையெனத் திரளுங்கள். எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லுங்கள்’ என்று கூறினார். வடமராட்சியைச் சேர்ந்த 50 வயதுடைய இந்த அன்னை மேற்படி பொங்கு தமிழில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார். தனது மகள் ஒருவர் தமிழ் நாட்டில் வசிப்பதாகவும் இன்னும் சில வாரங்களில் அங்கு செல்லவுள்ளதாகவும் இவர் கூறியுள்ளார். அங்கிருந்து கருநாடகா சென்று பொங்கு தமிழில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேபோன்று தாயகத்திலுள்ள பல தேசியப் பற்றாளர்கள் கருநாடகப் பொங்கு தமிழ் குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். தமிழர்களின் தாயகம், தேசியம், சுய நிர்ணய உரிமை போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு கருநாடகப் பொங்கு தமிழ் ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் என்றும் இதனைச் சரியாகப் பயன்படுத்துமாறும் தாயகத்திலுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ்த் தலைவர்கள் இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமென்று ஈழத்தமிழ் மக்கள் விரும்புகின்றனர். உலகிலுள்ள தலைவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள் பிரச்சினைகளைத் தெரிந்தவர்கள். இவர்கள் தமிழ் மக்களின் உண்மை நிலமைகளை உலகிற்கு எடுத்தியம்புவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண முடியும்.

அதேவேளை மேற்படி பொங்குதமிழ் நிகழ்விற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களால் இயன்ற பண உதவியை வழங்க வேண்டியதும் அவசியமானதாகும். ஏனெனில் பெருமெடுப்பில் நடத்தப்படவுள்ள இந்தப் பொங்குதமிழ் நிகழ்விற்கு பெருமளவு நிதி செலவாகுமென்பது திண்ணம். இந்த நிதியை புலம்பெயர் மக்களே பொறுப்பேற்க வேண்டும்.

இதுவரை காலமும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு நிதி உதவிகள் உட்பட அனைத்து வகை உதவிகளையும் வழங்கிய புலம்பெயர் உறவுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஈழத்தமிழர்களின் ஜனநாயக வழியிலான உரிமைப் போராட்டத்திற்கும் உதவிகளை வழங்க வேண்டும்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.