Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் சீனக் கடலில் மோதும் இந்தியாவும் சீனாவும் - விவேகன்

Featured Replies

சீனா போட்டுள்ள முத்துமாலை குறித்தும், அதனை முறியடிக்க அமெரிக்கா போட்டு வருகின்ற பாதுகாப்பு வளையம் குறித்தும் கடந்த இதழில் பார்த்திருந்தோம். பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாகப் பிரிப்பதற்கு நடந்துவரும் நகர்வுகளைப் பார்ப்பதற்கு முன்பாக இந்து - பசுவிக் சமுத்திரத்திரங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் தென் சீனக் கடற் பிராந்தியம் குறித்தும், இதற்காக சீனாவும் - இந்தியாவும் முட்டி மோதிக்கொள்வது ஏன் என்பது குறித்தும் இந்தத் தொடரில் பார்ப்போம்.

இந்திய - சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் இந்தியா தனக்கு சொந்தமானது என்கின்றது. ஆனால், இதனை தனக்கு சொந்தமென சீனா உரிமை கொண்டாடி வருவதுடன், அப்பகுதி மக்கள் சீனாவிற்குள் நடமாடுவதற்கும் விசா தேவையில்லை எனக்கூறி, தனது சொந்த நாட்டு மக்கள் போன்று அவர்களையும் நடத்துகின்றது. இதனைச் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என குற்றம்சாட்டும் இந்தியா, சீனாவின் முக்கிய கடற் போக்குவரத்துப் பாதையான தென் சீனக் கடலில் தனது ஆளுமையைச் செலுத்த முனைந்து வருவதை சீனா எச்சரிக்கையுடனே பார்க்கின்றது.

தென் சீனக் கடற் பரப்பில் எண்ணெய் வளமிக்க பல்வேறு தீவுகள் உள்ளன. இவை அனைத்துக்குமே சீனா உரிமை கோரி வருகின்றது. இதனால், தென் சீனக் கடல் முழுவதும் தன்னுடைய கடற் பிராந்தியம் என்று வலியுறுத்தும் சீனா, அங்கு நடைபெறும் நடவடிக்கைகளுக்கு தன்னிடமே அனுமதி பெறவேண்டும் என்கின்றது. ஆனால், தென் சீனக்கடலை அண்மித்திருக்கும் வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, தாய்வான், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் தென் சீனக் கடற் பிராந்தியத்தில் தங்களுக்கும் உரிமைகோரி வருகின்றன.

China%20south%20sea%20map.jpg

எண்ணெய் வளம், கடற் போக்குவரத்து என தென் சீனக் கடல் இரண்டு விடயங்களில் மட்டுமல்ல சீனாவிற்கான மீன் வளத்தை அள்ளிக்கொடுக்கும் பகுதியாவும் இருப்பதால் சீனாவிற்கு இக் கடற் பிராந்தியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. அத்துடன், சீனாவின் கடற்படைத் தளங்களும் பெருமளவில் தென் சீனக் கடற் பிராந்தியத்தில்தான் அமைந்துள்ளன.

எனவேதான் சீனாவிற்கு எதிரான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுமானால் அது மலாக்கா ஜலசந்தியை அண்மித்த தென்சீனக் கடலிலேதான் நிகழும் என்பது அரசியல் வல்லுனர்களின் கருத்து. இந்த கடலின் ஆதிக்கத்திற்காகவே வியட்நாமை அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பில் வைத்திருக்க முனைந்தாகவும் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை உறுதிப்படுத்துவது போன்றுதான் தற்போது அவுஷ்திரேலியாவின் கோகோஸ் தீவில் அமெரிக்கப் படைத்தளம் அமையவுள்ளது.

கோகோஸ் தீவுத் தளத்தில் இருந்து தென் சீனக் கடலை கண்காணிப்பது இலகு என்பது மட்டுமல்ல, அங்கிருந்து சென்று தென் சீனக் கடலுக்கான பயணப் பாதைகளையும் முடக்குவதும் சுலபம். சீனாவிற்கான மலாகா ஜலசந்தி ஊடான பயணமாக இருந்தாலும் தென் தீமோர் கடற் பிராந்தியம் ஊடான பயணமாக இருந்தாலும் கோகோஸ் தீவில் இருந்து இந்த இரண்டு வழிகளையும் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் சுலபம்.

எனவே, தென் சீனக் கடலை மையப்படுத்தியே அவுஷ்திரேலியாவின் டார்வின் துறை

முகத்திலும் கோகோஸ் தீவிலும் அமெரிக்கா தனது படைத்தளங்களை தற்போது நிறுவுகின்றது என்பது உறுதி. இதேவேளை, வியட்நாம் அரசின் ஒத்துழைப்புடன் தென்சீனக் கடலில் இந்தியா ஏற்கனவே எண்ணெய் அகழாய்வுப் பணியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஏசியான் உச்சிமாநாட்டில்தான் வியட்நாமுடன் இந்தியா இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. ஒப்பந்தப்படி தென் சீனக் கடற் பிராந்தியத்தில் மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா அகழ்வாராச்சியில் ஈடுபடமுடியும். கடந்த மார்ச் மாதம்தான் இந்திய எண்ணெய் இயற்கை எரிவாயு விதேஷ் (ONGC Videsh Ltd) நிறுவனம் வியட்நாம் எண்ணெய் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை சீனா ஆரம்பம் முதலே தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருவது மட்டுமல்ல, எச்சரித்தும் வருகின்றது. இந்நிலையில்தான் கம்போடியாவில் கடந்த வாரம் ஏசியன் நாடுகளின் (ASEAN Countries) அரசியல் விவகாரம் தொடர்பான உச்சி மாநாட்டில் தென் சீனக் கடற் பகுதி குறித்து கடந்த ஏப்ரல் 4ம் திகதி முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதை தடைசெய்ய சீனா பலவழிகளிலும் முயன்றது. ஆனால் அதையும் மீறி விவாதிக்கப்பட்டதையடுத்து சீனா கடும் சீற்றத்துடன் தனது எச்சரிக்கையை விடுத்தது. இந்த விவாதம் குறித்து கருத்து வெளியிட்ட தென்சீனா தேசிய இன்ஸ்டியூட் தலைவர் ஷீசிஹீன், தென் சீனக்கடல் பகுதியில் 54 தீவுகள் உள்ளன. இவை மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்வான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளன.

எனவே இந்தியாவின் எண்ணெய் நிறுவனம் இங்கு வந்து மசகு எண்ணெய் எடுப்பதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. இந்தியாவுடன், சீனா எந்த வகையிலும் சர்வதேச கடற் பகுதி ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. ஆனால், இப்பகுதியில் 40 சதவீத மசகு எண்ணெய் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, உடனடியாக இந்தியா தென்கடல் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துக் கூறியுள்ளார்.

ஆனால், சீனாவின் இந்தக் கருத்தை இந்தியா மறுத்துள்ளது. இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், தென் சீனக் கடற் பகுதிகள் அனைத்தும் உலகத்தின் சொத்து. தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஏசியன்) இதை ஏற்றுக் கொண்டுள்ளன. சீனாவும் இந்த கருத்தை ஏற்றுள்ளது. தெற்கு சீனக்கடல் பகுதிகள் வளர்ந்து வரும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

அங்கு எந்த ஒரு நாட்டின் தலையீடும் இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகின்றோம். இந்த விவகாரத்தில் இந்தியா - சீனா பரஸ்பர உறவில் எந்தப் பாதிப்பும் நிச்சயமாக இல்லை என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு பதலளிக்கும் வகையில் சீன அரசின் பத்திரிகையான ‘குளோபல் ரைம்ஸ்’ மறுகருத்தை வெளியிட்டிருக்கின்றது. ‘தென் சீனக் கடற் பகுதி உலகின் பொது சொத்து என்று இந்தியா தெரிவித்துள்ளது தவறு.

சர்ச்சைக்குரிய அந்த கடல் பகுதியில் சட்டப்படி பயணம் செய்யும் உரிமையும், வர்த்தகம் செய்யும் உரிமையும் பிற நாடுகளுக்கு உள்ளது. அதற்கு சீனா ஒருபோதும் ஆட்சேபனை தெரிவித்தது இல்லை. ஆனால் அந்த உரிமைகள் சீனாவின் இறையாண்மை உரிமையை மீறும் வகையில் இருக்கக் கூடாது’ என்று ‘குளோபல் ரைம்ஸ்’ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

W020120405612443104764.jpg

அண்மையில் இந்தியாவின் தலைநகர் டில்லியில் நடைபெற்ற ‘பிரிக்ஸ் (BRICS)’ மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சீன அதிபர் ஹீ ஜிந்தாவோ, பிரதமர் மன்மோகன்சிங்குடன் இந்த விடயம் குறித்து விவாதிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென் சீனக் கடற் பிராந்திய விடயம் குறித்து அவர் வாயே திறக்கவில்லை என்று கூறப்படுகின்றது. தென் சீனக் கடலுக்கும் இந்தியாவிற்கும் எந்தவித தொடர்புகளும் இல்லாதமையால் இதனை ஒரு உத்தியோகபூர்வமான விடயமாக சீனா விரும்பாதமையே அதிபர் ஹீ ஜிந்தாவோவின் மௌனத்திற்கு காரணம் என்று கருதப்படுகின்றது.

ஆனால் அதேவேளை, தென் சீனக் கடலில் இந்தியாவின் பணிகள் தொடங்கியதன் பின்னர் சீனாவும் அருணாச்சல பிரதேசம் மீதான தமது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய எல்லைப் பகுதி அருகே அமைந்துள்ள கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் சீனா மிகப் பெரிய அளவில் இராணுவப் பயிற்சிகளை அண்மைக்காலமாக மேற்கொண்டுள்ளது.

இதில் முதல்முறையாக சீனாவின் சொந்த தயாரிப்பான ஜே-10 ரக போர் விமானங்களும் இடம்பெற்றிருந்தன. 3,500 மீற்றர் உயரமுள்ள இந்தப் பகுதியில் தரைப்பகுதிகளை தாக்கும் வகையிலான பயிற்சிகளிலும் சீன இராணுவம் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இராணுவப் பயிற்சி குறித்த தகவல்களை சீனா எப்போதும் வெளியிடுவதில்லை. எனினும், மைனஸ் 20 பாகை செல்சியஸ் குளிர்நிலை நிலவும் இப்பகுதியில், ஜே-10 ரக விமானங்கள் வழக்கமான விமானப் படை குண்டுகளும், லேசர் குண்டுகளும் பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டதற்கான செய்தியையும், படங்களையும் சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை வெளியிட்டும் இருந்தது.

இது இந்தியாவுக்காக சொல்லப்படும் செய்தியாகவே இந்திய ஊடகங்களால் பார்க்கப்பட்டிருந்தன. தென் சீனக் கடல் குறித்து சீனாவும் இந்தியாவும் உள்ளுக்குள் முரண்களை வளர்த்து வருவதையே இச்சம்வங்கள் உணர்த்தி வருகின்றன. தென் சீனக் கடலில் இவ்வாறான முரண்கள் வளர்ந்துகொண்டிருக்க, முத்துமாலைக்குள் அடங்கியுள்ள வங்கக்கடலில் நடக்கும் நிகழ்வுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.