Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு தமிழகத்தின் முதுபெரும் அறிஞர் கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன் காலமானார்!

Featured Replies

kamalanathan-1-150x150.jpgகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரான கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன் காலமானார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற கமலநாதன் அவர்கள் தமிழ் துறையில் வித்துவான் பட்டம் பெற்றவராவார்.

இவர் தமிழ் இலக்கிய ஆய்வுத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக கிழக்கு பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்திருந்தது. மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்றை தேடும் பணியில் இறங்கிய கமலநாதன் அவர்கள் பழைய ஏட்டுச்சுவடிகளை தேடி அதனை அச்சுவடிவில் கொண்டுவந்த பெருமையை பெற்றார். ஓலைச்சுவடிகளில் இருந்த வரலாற்று தடயங்களை தொகுக்கும் மிகப்பெரிய பணியில் இறங்கிய வித்துவான் கமலநாதன் அவர்களும் அவரது துணைவியார் கமலா கமலநாதன் அவர்களும் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக உருவானதே மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலாகும்.

இந்த நூலை தொகுப்பதற்கு டி.சிவராம் அவர்களும் பெரிதும் உதவினார். மட்டக்களப்பில் மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா அவர்களுக்கு பின்னர் இருந்த நடமாடும் தமிழ் நூலகம் கமலநாதன் அவர்களாகும். ஆதனால்தான் கிழக்கு பல்கலைக்கழகம் அந்த வித்துவான்கள் இருவருக்கும் இலக்கிய கலாநிதி பட்டங்களை வழங்கி கௌரவித்திருந்தது.

மட்டக்களப்பு வரலாற்றைப்பற்றி பேசுவோர் எஸ்.ஓ.கனகரத்தினம் எழுதிய The Monograph of Batticaloa என்ற ஆங்கில நூலையும் அவரது மருமகனான எவ்.எக்ஸ்.சி. நடராசா அவர்களின் மட்டக்களப்பு மான்மியத்தையுமே எடுத்துக்கொள்வர். அதன் பின்னர் சரித்திரத்தை ஆதாரங்களுடன் பேசும் நூலாக வெளிவந்ததுதான் சா..கமலநாதன், கமலா கமலநாதன் ஆகியோர் ஏட்டுச்சுவடிகளிலிருந்து தொகுத்த மட்டக்களப்பின் பூர்வ சரித்திரமாகும்.

இந்த நூலுக்கு வரலாற்று அறிமுக குறிப்புரை எழுதிய டி.சிவராம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

எமது மண்ணின் வரலாற்றை புரிந்து கொள்வதற்கு கமலநாதன் அவர்களும், அவரின் துணைவியார் கமலா கமலநாதன் அவர்களும் எடுத்துக்கொண்ட அரிய முயற்சி ஈழத்தமிழர்களுக்கு இன்றியமையாத கொடையாகும் என சிவராம் அந்த நூலில் தெரிவித்திருக்கிறார்.

கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன் என்ற தமிழ் கடல் பற்றி அவரின் கல்விப்பணி, இலக்கிய பணி, ஆராய்ச்சி பணி, என அவர் பதித்த தடங்கள் பல. அவர் தொகுத்த ஏட்டுச்சுவடிகளின் வரலாற்று தொகுப்பை முதல் முதலில் விடிவானம் பத்திரிகையில் தொடராக எழுதி வந்தார். அதற்காக அவர் வாராவாரம் எமது அலுவகத்திற்கு வந்து எம்முடன் சில மணி நேரம் பேசி விட்டு செல்லும் அந்த நினைவுகள் மறக்க முடியாதவை. தமிழ் இலக்கண இலக்கிய விடயங்களில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் நாம் நாடிச்செல்லும் இருவர் மட்டக்களப்பில் இருந்தனர். ஒருவர் மட்டக்களப்பு மத்திய வீதியில் இருந்த வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா, மற்றவர் மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் இருந்த சா.இ.கமலநாதன். அந்த இருவரையும் இன்று மட்டக்களப்பு மண் இழந்து விட்டது.

கமலநாதன் ஐயாவின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மட்டக்களப்பு தமிழகம் இன்று தன்னுடைய மற்றொரு அருந்தவ புதல்வனை இழந்து நிற்கிறது.

இரா.துரைரத்தினம்

http://www.thinakkathir.com/?p=35233

நாளை (27) பி.ப. 3:00 மணிக்கு இறுதி அஞ்சலி இல. 8, புகையிரத நிலைய வீதியில் இருக்கும் இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.