Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளி வாய்க்கால் 3 ம் ஆண்டு இன அழிப்பு நினைவு கூரல் பிரித்தானியா

Featured Replies

[ mullivaikal_tamil_2012_100.jpg

ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு செயற்படும் அமைப்பாகவும், பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த 2006 இல் இருந்து செயற்பட்டு வருகின்றது.

இதில் குறிப்பாக 2008, 2009 காலப்பகுதியில் மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட எழுச்சிமிக்க ஊர்வலத்தில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதும், தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை. மேற்கொண்டுவருவதும் யாவரும் அறிந்ததே.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் முள்வேலி முகாமிற்க்குள் அடைத்துவைத்த மக்களை விடுதலை செய்யக்கோரி "திறப்பு பரப்புரை போராட்டமும்(Unlock the camps) அதன் பின் இராணுவத்தால் அரசியல் கைதியாக பிடிக்கப்பட்ட "அரசியல் கைதிகள் இப்பவும் இருக்கிறார்களா?" என்ற பரப்புரைப் போராட்டமும்(Are they alive) சர்வதேச சுயாதீன விசாரணை உருவாக்குவதற்கான பரப்புரைப் (International Independent Investigation)போராட்டங்களும் மேற்கொண்டு வரும் பிரித்தானிய தமிழர் பேரவை, தாயக மக்களின் நெருக்கடிகளை அறிந்து அவர்களின் விடிவுக்கான போராட்டத்தினை தொடர்ந்து செய்து வருகின்றது.

ஈழத்தமிழர்களது உரிமைப்போரட்டத்தினை வெளிப்படையாகவும், தெளிவாகவும், முனைப்புடன் முன்னெடுத்து சென்று கொண்டிருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை, புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கைளையும், மற்றும் இளையோர்களையும் உள்வாங்கி

செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் கழக 19 ஆவது ஜெனிவாகூடத்தொடரில் கனேடிய தமிழர் பேரவை (Canadian Tamil Congress –CTC), அமெரிக்க தமிழ் அரசியல் பேரவை (United States Tamil Political Action Council –USTPAC), பிரித்தானிய இளையோர் அமைப்பு (TYO UK) போன்ற புலம்பெயர்அமைப்புக்களை ஒருங்கமைத்து நெறிப்படுத்தி சிறிலங்கா அரசுக்கு எதிராக பரப்புரை செய்தது.

இதனால் இன்று சர்வதேச சமூகங்களும், கொள்கைவகுப்பு தளங்களும், மனித உரிமை அமைப்புகளும் மற்றும் பிரதான ஊடகங்களும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களை அதிகரித்து வருகின்றது. ஆயினும் புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வு ரீதியான மக்கள் திரளும் போராட்டங்களும், அவை அனைத்துலக சமூகங்களுக்கு வெளிப்படுத்தும் காத்திரமான செய்தியும், அனைத்துலக சமூகத்தை எம்பக்கம் ஈர்க்கும். இதனடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வுகளை சர்வதேச சமூகம் திரும்பிப் பார்க்கும் வகையிலும், அவை ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் வகையிலும் மிகவும் எழுச்சியாகவும், சிறப்பாகவும் அனைத்து பொது அமைப்புக்களையும் மற்றும் அனைத்து ஊடகங்களையும் உள்வாங்கி நினைவு கூர்ந்தமை யாவரும் அறிந்ததே.

அதேபோல் இவ்வருடமும் (18 /05 /2012 ) இந் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கான முன்பதிவினை கடந்த 04 நவம்பர் 2011 இல் பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டிருந்தது. 18/05/2012 அன்று வெள்ளிக்கிழமை வருவதால் அலுவலக நாட்களில் நிரந்தர பாவனையாளர்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமிருப்பதால் 19/05/2012 நினைவு கூரலினை மேற்கொள்ளும் வண்ணம் லண்டன் பெரும்பாக அதிகாரசபை Greater London Authority (GLA) குறிப்பிட்டு இருந்தது. கடந்த வருடமும் இப்படியான தவிர்க்க முடியாத தடைகள் வந்தும், பிரித்தானிய தமிழர் பேரவையின் அதீத முயற்சியால் அத்திகதியில் அனுமதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே மே 18 இல் இவ் இடத்தினை ஒழுங்குபடுத்தித் தரும் வண்ணம் பிரித்தானிய தமிழர் பேரவைச் செயற்பாட்டாளர்கள் பல பகுதிகளுடாக முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளை, BTU என்னும் அமைப்பு இன்னுமொரு போட்டி விண்ணப்பத்தினை அனுப்பியிருப்பதாக எமக்கு லண்டன் பெரும்பாக அதிகாரசபை அறிவித்திருந்தனர். இதன் மூலம் தமிழ் மக்களிடையே ஒற்றுமை குறித்த சந்தேகத்தையும், அனாவசியமான பிளவினையும் ஏற்படுத்தி மேற்படி அதிகாரிகள் மத்தியில் முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கான அனுமதி வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தியது.

புலம் பெயர் தேசங்களில் ஈழத் தமிழ் மக்களின் போராட்ட சக்திகளின் அடித் தளமாக விளங்குகின்ற பிரித்தானிய மக்கள் மத்தியில் குழப்பத்தினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளையும், பிரித்தானியாவில் மக்களின் பேராதரவுடன் மக்களை தொடர்ச்சியாக ஒன்று திரட்டி, தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்ற பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளை சிதைக்கு முகமாகவும், BTU என்ற பெயரில் புதிய ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

இருந்தும் எமது பல்வேறு அரசியல் முயற்ச்சிகளுக்கூடாக லண்டன் மாநகர மேயர் பொறிஸ் ஜோன்சன்(Boris Johnson's) அவர்கள் மட்டத்திற்கு இவ் விடயம் எடுத்துச் செல்லப்பட்டு மே 19 ம் திகதி சனிக் கிழமை அன்று இந் நிகழ்வை நடத்துவதற்கு அவர் அனுமதி தந்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பிரித்தானியாவிலும் சர்வதேசமெங்கும் ஏனைய இன மக்களுக்கு எடுத்துச் சென்று, அவர்களை எமக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும்.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தமிழ் மக்களுக்குள் மட்டுமே பரப்புரை செய்யாது ஏனைய இன மக்களும் பார்வையிடக் கூடிய லண்டன் மாநகர் ரபால்கர் சதுக்கத்தில் மே 19 ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் 8 மணிவரை உணர்வு பூர்வமாக இந் நிகழ்வு நடைபெற பாரிய ஆயத்தம் நடை பெற்று வருகின்றது.

இன அழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே 12 ம் திகதி தொடக்கம் 18 ம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு தமிழ் மக்களின் பல்வேறு பொது அமைப்புக்களும், தனி நபர்களும் சர்வதேச சுயாதீன விசாரணை கோரும் பல்வேறு விதமான பரப்புரைகளை பிரித்தானியா எங்கிலும் முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம்.

மே 18 ம் திகதி வெள்ளிக் கிழமையன்று வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கை அரசிற்கு எதிரான காத்திரமான மக்கள் போராட்டத்தை கட்டியெழுப்பி முள்ளிவாய்க்காலிற்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை, எம் மக்கள் பெருமளவில் அணி திரண்டு இந் நிகழ்வில் கலந்து கொண்டு இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை

mullivaikal_tamil_2012_1.jpg

mullivaikal_tamil_2012_2.jpg

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.