Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுருங்கிக் கொண்டிருக்கும் தமிழர் நிலப்பரப்பு. இருப்பதை தக்க வைப்பார்களா தமிழர்கள்?

Featured Replies

இந்துக்களின் நாகரீகம் எனும் அடிப்படையில் இன்று உலக ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் தமிழர்களின் மூத்த குடி நாகரீகம் பற்றியது என்பதில் எந்த ஐயப்பாடுகளும் இல்லை.

இன்று இந்து நதி கரை வெளி நாகரீகம் ஏறக்குறைய கி மு 5000 ஆண்டுகள் பழமை வந்தவை என்பதை உலக மானிட இயல் வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள் . இன்று அப்கானிஸ்தான் பாகிஸ்தான் அமைந்துள்ள நிலபகுதிகளை தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களாக அக்காலத்தில் கொண்டிருந்தார்கள் என்பது நிறுபனமாகி உள்ளது. இக்கால சம கால நிகழ்வாக கடல் கொண்ட வங்கம் இருந்துள்ளது . இந்நாகரீக வளமான வாழ்வு முறை இன்று பூம்புகார் கரை தொடக்கி ஆழக் கடலுள் அமிழ்ந்து உள்ளது என்பதும் நிறுபனமாகி உள்ளது.

எனவே இந்த இரு தொகுதி நாகரீகங்களை இணைத்து தமிழர்கள் இந்திய துணைக்கண்டம் என்று இன்று விளங்கும் பல நாடுகளை மாநிலங்களை உள்ளடக்கிய பெரு நிலத்தை தமிழர்கள் தமது ஒற்றை தாயகமாக வளமாக்கி வாழ்ந்துள்ளார்கள் என்பதை தர்க்க ரீதியாகவும் தடயங்கள் ரீதியாகவும் நாம் முன்வைக்க முடியும். இந்த நிலப்பகுதியில் தமிழர்கள் இன்று பத்து சதா வீதத்துக்கும் குறைவான பகுதிகளை தமது வாழ்விடமாக கொண்டிருந்தாலும் அதனையும் இழக்கும் ஒரு அபாய சூழலில் வாழ்கின்றார்கள் என்பது உண்மை.

நாம் வாழும் காலப்பகுதியில் 1947 ஆண்டின் பின் தங்கள் தாய் நிலத்தில் பல பகுதிகள் இழந்துள்ளார்கள் . ஈழத்தின் மொத்த நிலபரப்பாக1947 இக்கு முன் 25000 சதுர மைல்கள் இருந்தன. அவை 1950 காலபகுதியில் படிப்படியாக சிங்களவரின் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்டு இன்று 7500 சதுர மைல்களாக குறுகி விட்டது . ஈழத்தமிழர்கள் தமது வளமான பூமிகளை பறி கொடுத்து ஏதிலிகளாக உலகெங்கும் அலையும் நிலையில் இருக்கின்றார்கள்.

1900 ஆண்டுகளின் பின் தமிழகம் ஏறக்குறைய 15000 சதுர நிலப்பரப்பை புதிய கேரளத்துக்கும் கிழக்கே நெல்லூர் தொடக்கி மேற்க்கே மங்களூர் வரையிலுமான 30000 சதுர மைல்களை ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்கும் தாரை வார்த்து கொடுத்து விட்டு இன்று பரதேசியாக அவர்களிடம் நீர் பிச்சை கேட்டு நிற்கின்ற துர்பாக்கிய நிலை தோன்றி வளமான காடுகள் மலைகள் நதிகள் இல்லாம் பறிபோனது .

இது போதாது என்று அண்மைய காலங்களில் கச்சதீவு திருப்பதி பெங்களூர் முல்லை பெரியார் கல்குகை என்று சகல பகுதிகளையும் கபளீகரம் செய்துவிட்டார்கள் தமிழரிடம் இருத்து. தன் தாய் மண்ணை இழந்து இழந்து இன்று ஒரு மூளைக்குள் முடங்கி கிடக்கின்றது தமிழினம் கி மு வில் தமிழன் உலகில் மிக பெரிய நாகரீகத்தின் வாரிசாக அகண்ட குமரி மண்டாலம் கடல் கொண்ட வங்கம் கலிங்கம் சங்கம் என்று வாழ்ந்த தன் நிலங்களை இயற்க்கை அழிவிடம் பறி கொடுத்து. கடல் கொண்ட பின்னும் கூட கி பி 100 களில் ஏறக்குறைய இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் சதுர மைல்களை சொந்தமாக வைத்திருந்து வந்தவரை எல்லாம் வரவேற்று இந்த பூமி எல்லோருக்கும் பொது என்று நன் நெறி சொன்ன ஒளவை வள்ளுவன் காலத்தில் தன் நிலங்களை கொடுத்து இன்னமும் கொடுத்து இன்று இழந்து கையறு நிலையல் கரைந்து தன் நிலத்தை இழந்து கரைந்து கொண்டு இருக்கின்றது தமிழன் இருப்பு.

தமிழகம் இன்று 50200 சதுர மைல்களுக்குள் சுருங்கி உள்ளது . ஈழம் இன்று 7500 சதுர மைலக்ளாகி உலகில் தமிழன் தனக்கென வாழும் நிலம் குறுகி பெரும் அபாய சூழலில் உள்ளது . தமிழன் இன்று வாழும் பகுதியும் இன்னும் சில காலங்களை இல்லாது போய் தமிழன் என்ற இனமே அழிந்து வரலாற்றில் அழிந்து போன இனம் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவான்.

உலகில் வாழும் இனங்களுக்கெல்லாம் மூத்த குடி தமிழ்குடி இந்த மகிமை தமிழனுக்கு மட்டுமே உரியது இத்தனை வரலாற்று சிறப்பு உலகில் இன்று வாழும் எந்த இனத்துக்கும் இல்லை. எமது மூதாதையர் இந்த பெருமையை மிகுந்த இன்னலுக்குள் பாதுகாத்து தந்துள்ளார்கள் இன்று வரை உறக்கத்தில் இருந்த வேங்கையின் வாரிசே. இன்று நீ விழித்து எழுந்து பார்த்தாலே போதும் . உன்ன பார்வை ஒன்றுதான் வேண்டும் . உன் பெருமை உனக்கே உரியது .

இயற்கையாக நீ தமிழனாக இத்தைய பெருமையுடன் பிறந்து விட்டாய். பல் ஆய்வாளர்கள் தாங்கள் தமிழர்களின் வாரிசுகள் என்றும் தமிழனாக பிறப்பதே பெருமை என்று சொல்லும் அளவில் இன்று உலகம் வியக்கின்றது. உன் பெருமைகளை இந்த உலகு அறிந்த அளவில் நீ அறியாமல் இருப்பது தவறு.

தமிழா இந்த உலகு உள்ளவரையும் இந்த உரிமையை நீ விட்டுக்கொடுத்து வாழலாமா?. இடையில் வந்த ஏனைய இனங்களைப்போல நாடு காத்து எம் மூத்த தமிழ் காத்து வாழவேண்டும் . உலகில் தமிழன் என்றும் அழியாது வாழும் நிலை உன்கையில்தான் இன்று உள்ளது. எதோ ஒரு மனிதனாக வாழ்வது பெருமை அல்ல . உன் பாரம்பரிய வரலாற்றை இழப்பது நியாயமல்ல . அதை உன்ன வருங்கால சந்ததிக்கும் எடுத்துசெல்ல எழுந்து வா வேங்கையின் வாரிசே.

நன்றி : மணிவண்ணன் ஏகாம்பரம்

http://thaaitamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.