Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் படையினரின் கட்டுபாட்டில் கிராமங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் படையினரின் கட்டுபாட்டில் கிராமங்கள்!

Saturday, July 14, 2012, 12:51

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராம மீனவர்களது 13 மீன் வாடிகள் மற்றும் பெறுமதி வாய்ந்த மீன் பிடி உபகரணங்களை நேற்று வெள்ளிக்கிழமை(13-07-2012) மாலை 2.30 மணியளவில் அத்துமீறி நுளைந்த மன்னார் உப்புக்குளம் கிராம மீனவர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

-மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் கடந்த 10 வருடங்களாக மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துரைமுகத்தில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.சுமார் 250 தொழிளாலர்கள் இவ்வாறு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த கோந்தைப்பிட்டி இறங்கு துறை முகம் சிறீலங்கா இறங்குதுறைமுக கூட்டுஸ்தாபனத்திற்கு சொந்தமானதாக காணப்பட்ட நிலையில் அந்த திணைக்களத்தின் அனுமதியுடன் கடற் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் கோந்தை பிட்டி பகுதினை அண்மித்த உப்புக்குளம் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கும் இடையில் சில முரண்பாடுகள் இடம் பெற்று வந்தது.

இந்த நிலையில் குறித்த மீனவர்களுக்கு வேறு இரங்கு துறைமுகம் ஒன்றை வழங்குவது தொடர்பில் கடந்த (27-06-2012) செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் உயர் மட்டக கூட்டம் ஒன்று இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதி நிதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எ.சரத்ரவீந்திர மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேல் ஜோசப்வாஸ் நகர் பங்குத்தந்தை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இறுதியாக அதிகாரிகளினால் முடிவெடுக்கப்பட்ட நிலையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தொழில் நுற்பப்பூங்காவிற்கு பின்புரமாக உள்ள கடற்கரைப்பகுதியில் யோசப்வாஸ் நகர் மீனவர்கள் கடற்தொழில் செய்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டது.

இதற்காண முழு ஏற்பாடுகளையும் மன்னார் பிரதேசச் செயலாளர் மேற்கொண்டிருந்தார்.

கோந்தை பிட்டி இறங்கு துறைமுகத்தில் மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் 60 கண்ணாடியிழைப்படகுகள் மற்றும் 100 வள்ளங்கள் ஆகியவற்றை பயண் படுத்தி 250 தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடு பட்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழில் செய்ய முயற்சிகளை மேற்கொண்ட போது ஒதுக்கப்பட்ட காணி தனியாருக்குச் சொந்தமானதாக காணப்படுவதோடு குறித்த காணி தொடர்பில் மன்னார் நீதி மன்றத்தில் பல வருடங்களாக வழக்கு விசாரனை ஒன்று இடம் பெற்று வந்தமை தெரிய வந்தது.இந்த நிலையில் குறித்த காணியின் உரிமையாளரான தானி நபர் ஒருவர் மீண்டும் ஒரு வழக்கை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றம் குறித்த தொழில் நுற்பப்பூங்காவிற்கு பின் பகுதியில் உள்ள தனியாரது காணியில் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு இடைக்கால தடையினை மன்னார் நீதி மன்றம் விதித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக குறித்த மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபடாமல் பட்டினிச்சாவை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.இந்த நிலையில் தமது குடும்பத்தின் வருமை நிலையை கருதிய ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மீன்டும் கடந்த 12 ஆம் திகதி மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இரங்கு துரைமுகத்தில் கடற்தொழிலுக்குச் சென்றனர்.

பின் நேற்று வெள்ளிக்கிழமை(13-07-2012) காலை மீண்டும் தொழிலுக்குச் செல்ல முற்பட்ட போது உப்புக்குளம் மீனவர்களுக்கும் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.எனினும் அந்த மீனவர்களில் பலர் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் உப்புக்குளம் பகுதி மக்களும் மீனவர்களும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் கோந்தை பிட்டி மீன்பிடி துரைமுகத்திற்குச் சென்று அங்கு இருந்த 13 மீன் வாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு அங்கிருந்த பெருமதியான பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்காண காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த போதும் உப்புக்குளம் மீனவர்களது எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாத நிலையில் படையினர் வரவளைக்கப்பபட்டு பின் குறித்த கோந்தைப்பிட்டி மீன் பிடி இரங்கு துறைமுகம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

-இவ்விடையம் தொடர்பில் மன்னார் உப்புக்குளம் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில் -கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்க துரைமுகத்தில் கடல் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மன்னார் ஜொசப்வாஸ் நகர் மீனவர்களுக்கு மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள பகுதியில் இரங்க துரைமுகம் அமைத்து கடல் தொழிலில் ஈடுபட அதிகாரிகளினால் இடம் வழங்கப்பட்டது.

-எனினும் குறித்த இடம் தனியாருக்குச் சொந்தமானதால் நீதிமன்றத்தில் வழக்க இடம் பெற்று வருகின்றது.

கடந்த 21 தினங்களுக்கு மேலாக மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இரங்கு துறைமுகப்பகுதிக்குள் அந்த மீனவர்கள் வரவில்லை.எனினும் கடந்த 12 ஆம் திகதி அந்த மீனவர்கள் எவருடைய அனுமதியும் இன்றி தொழிலுக்குச் சென்றனர்.இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமையும் தொழிலுக்குச் செல்ல முற்பட்ட போது ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் உப்புக்குளம் மீனவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.எனினும் பலர் பலவந்தமாக தொழிலுக்குச் சென்றனர்.இந்த நிலையில் இவ்விடையம் தொடர்பில் மன்னார் உப்புக்குளம் மீனவர் சங்கமும் மன்னார் உப்புக்குளம் பள்ளிவாசல் நிர்வாகமும் இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

-இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதினால் ஜீம்மாத்தொழுகையின் பின் இப்பிரச்சினை அங்கு வெளிக்கொண்டுவரப்பட்டமையினால் அங்கு ஒன்று திரண்ட உப்புக்குளம் மீனவர்கள்அக்கிராம மக்களும் குறித்த கோந்தைப்பிட்டி இரங்க துறை முகத்திற்குச் சென்று அங்கிருந்த 08 மீன் பிடி வாடிகளை உடைத்துள்ளனர்.அந்த மீனவர்களுடைய நோக்கம் வாடிகளை அகற்றுவதே தவிர உடமைகளை சேதப்படுத்தும் நோக்கமாக அமையவில்லை என மன்னார் உப்புக்குளம் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

http://www.tamilthai.com/newsite/?p=11318

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.