Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகதிக் கோரிக்கையாளர்களுடன் கடலில் மூழ்கிய படகில் இருந்த 45 பேர் மீட்பு!

Featured Replies

[size=4]இந்தோனேசியாவின் அருகில் சுமார் 150 பேருடன் நேற்று கடலில் மூழ்கிய அகதிகள் படகில் இருந்த 45 பேரை ஒஸ்ரேலிய அதிகாரிகள் மீட்டார்கள்.

கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் செல்லும் வழியில் அந்தப் படகில் இருந்து அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஒஸ்ரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்று அதிகாலை, வணிகக் கப்பல் ஒன்று, ஆறு பேரைக் கடலில் இருந்து மீட்டது. இன்று பிற்பகல் ஏனையோர் மீட்கப்பட்டார்கள். அவர்கள் இந்தோனேசியாவின் மெறாக் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

இன்று அதிகாலை மீட்கப்பட்ட அனைவரும் ஆண்களெனவும், படகில் பெண்களும் குழந்தைகளும் இருந்தார்களெனவும் மீட்கப்பட்டவர்களில் ஒருவர் கூறினார். தாம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்ததாக அவர் தெரிவித்தார்.[/size]

[size=4]http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12708[/size]

[size=5]Ninety or more people remained missing Thursday after a boat carrying about 150 migrants sank off Indonesia, in another disaster this year for asylum seekers from the Middle East and Asia trying to reach Australia by sea.[/size]

[size=3]http://www.nytimes.com/2012/08/31/world/asia/scores-missing-after-australia-bound-refugee-boat-reports-distress.html[/size]

  • தொடங்கியவர்

படகு கவிழ்ந்தபின் தத்தளித்த 54 பேர் மீட்பு ; சுமார் நூறுபேரை காணவில்லை

அவுஸ்திரேலியா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது படகு கவிழ்ந்த நிலையில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 55 பேர் காப்பற்றப்பட்டு, இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவிலுள்ள மேராக் நகருக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹஸாரா இனத்தவர்கள் என நம்பப்படுகிறது. இப்படகு கடந்த புதன்கிழமை காலையில் கவிழந்தது.

இதில் பயணம் செய்த மேலும் சுமார் 100 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இப்படகில் கசிவு ஏற்படத் தொடங்கியபோது அது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலிருந்து 8 கடல்மைல்கள் தொலைவிலும் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து 220 கடல்மைல்கள் தொலைவிலும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து முதலாவது தேடுதல் குழு நடவடிக்கையில் ஈடுபட்டபோது 7 மணித்தியாலங்கள் கடந்திருந்தது. வர்த்தக கப்பலொன்றினால் முதலாவது நபர் மீட்கப்பட்டபோது புகலிடக்கோரிக்கையாளர்கள் ஜாவா கரையிலிருந்து 40 கடல்மைல் தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்தப்பியவர்களில் ஒருவரான முஹமட் அலி (53) கூறுகையில், "படகுஉடைந்த பின்னரும் நாம் அனைவரும் உயிருடன் இருந்தோம். இந்தோனேஷிய படகுகள் நான்கு ஐந்து மணித்தியாலங்கள் அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தன. நாம் உதவி உதவி எனக் கத்தினோம். ஆனால் அவர்கள் எம்மை பார்க்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

பல மணித்தியாலங்கள் தனது கைகளைப் பற்றியவாறு நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த தனது சகோதரி, களைப்பினால் நீரில் மூழ்விட்டதாக 25 வயதான மொஹமட் ஸாஹிர் என்பவர் கூறியுள்ளார்.

"நாம் கடுமையாக களைத்திருந்தோம். மிகவும் களைப்பற்றவர்கள் அலையினால் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களல் பெண்கள், சிறுமிகள், சிறார்களும் அடங்குவர்" என அவர் கூறினார்.

அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் வர்த்தக கப்பல்களால் காப்பாற்றப்பட்டவர்களும் இந்தோனேஷிய கப்பலொன்றுக்கு மாற்றப்பட்டு இந்தோனேஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

aus296.jpg

aus98(1).jpg

aus1(15).jpg

aus97.jpg

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/47767--54-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.