Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க் சுதந்திரப்போரில் துரோகிகளும் இள வயது போராளிகளும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிய நாசிகளிடம் இருந்து டென்மார்க் சுதந்திரம் அடைந்த நாளாகிய வரும் 4 ந் திகதியே டென்மார்க்கின் சுதந்திர தினமாக நினைவுகூரப்பட்டு வருகின்றது அதே நாளிலேயே அன்றைய போராட்டத்தில் தங்கள் நாட்டை ஆக்கிரப்பாளர்களிடம் இருந்து விடுவிப்பதற்காக போராடி மரணித்த டென்மார்க் சுதந்திரப் போராளிகளும் நினைவு கூரப்படுகின்றார்கள். இந்த வீரர்கள் படுகொலை செய்ப்பட்ட றுய்வங் என்ற இடத்திலே ஒரு நினைவுத்தூபீயும் அமைக்கப்பட்டு அந்த இடம் எமது தாயகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் போன்று உள்ளது. மீனலுண்ட் என அழைக்கப்படும் இந்த புனித மயானம் இப்பொழுது அரசாங்கத்தால் பராமரிப்பட்டு வருகின்றது.

இந்தநேரத்தில் அந்த போராளிகள் தமது தாயகத்திற்காக செய்த தியாகங்களுக்காக நாமும் தலை வணங்குகின்றோம். அவர்களது போராட்ட வரலாற்றை இந்த சந்தர்ப்பத்தில் பார்க்கும் பொழுது தமிழீழ விடுதலைப் போராடத்திற்கும் சுமார் 60 வருடங்களுக்கு முன் நடைபெற்ற டென்மார்க் விடுதலைப் போராட்டத்திற்கும் நிறையவே ஒற்றுமைகளை காணக்கூடியதாக உள்ளது.

விடுதலைப் போராட்டங்களை ஆரம்பிக்கும் பொழுது போராளிகள் ஆக்கிரப்பாளர்களை எதிர்கொள்வதுடன் தமது தரப்பு அரசியல்வாதிகளின் சுயநலத்தையும் எதிர்கொள்கின்றார்கள். டென்மார்க்கின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்தில் இந்த போராளிகள் யேர்மனிய நாசிப்படைகளை எதிர்ப்பதுடன் அப்போதய டென்மார்க் அரசாங்கம் நாசிப்படைகளுடன் செய்துகொண்ட ஓப்பந்தங்களால் அவர்களையும் எதிர்த்துள்ளார்கள். இதை தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் காணக்கூடியதாகவுள்ளது. சிங்களஅரசு தமிழ்மக்களை பலமுறை ஏமாற்றியுள்ள போதிலும் தங்களது சொந்த நலன்களுக்காக சில தமிழ் அரசியல்வாதிகள் அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டதால் அவர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு விடுதலைப் புலிகளும் தள்ளப்பட்டிருந்தார்கள். ஆனால் இறுதியில் விடுதலைப் போராளிகளின் சுயநலமற்ற தாயக விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும் அவர்களாலேயே தமது தாயகம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கையையும் மக்கள் புரிந்துகொண்ட பொழுது அரசியல்வாதிகளும் போராட்டத்தின் அவசியத்தை புரிந்துள்ளார்கள். அதுவே அன்று டென்மார்க்கில் நடைபெற்றது. இன்று தமிழீழத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் இன்று எமது தேசத்தில் மக்களே புலிகளாகவும் புலிகளே மக்களாகவும் உள்ளார்கள். அது எமது தேசத்தினதும் இறுதிப் போராட்டம். ஆனால் இந்த உண்மையை தற்போதைய டென்மார்க் அரசு புரிந்துள்ளதா என்பது தான் கேள்வி.

விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் துரோகிகளையே பெரிதும் பயன்படுத்தியுள்ளனர், பயன்படுத்தியும் வருகின்றனர். டென்மார்க்கின் விடுதலைப போராட்டத்திலும் இது நடைபெற்றுள்ளது. துரோகிகள் தங்களின் சொற்ப நலன்களுக்காக தமது சொந்த இனத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுடன் சேர்ந்து அவர்களின் கருத்துக்களை பரப்புபவர்கள். போராளிகளை காட்டிக்கொடுப்பவர்கள். எதிரியை விட மிகவும் ஆபத்தானவர்கள். டென்மார்க் விடுதலைப் போராட்டத்தில் துரோகிகளாக இருந்தவர்கள் டென்மார்க்கில் வாழ்ந்த நாசிகளாகவும் சலுகைகளுக்கு ஆசைப்பட்ட டென்மார்க் நாட்டவர்களாவும் இருந்திருக்கின்றார்கள்.

ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தில் சலுகைகளுக்கு ஆசைப்பட்ட தமிழர்களே துரோகிகளாக உள்ளார்கள் என்பது கவலைக்குரியது. ஆனால் இந்த துரோகிகளுக்குள்ளும் ஒரு ஒற்றுமையை காணக்கூடியதாக இருக்கின்றது. அன்று டென்மார்க்கின் துரோகிகளை எதிரியின் புலனாய்வாளர்களே உருவாக்கினார்கள். தங்களால் விடுதலை போராட்டத்தை அடக்க முடியாத சந்தர்ப்பத்திலேயே துரோகிகளை உருவாக்குகின்றார்கள். இன்று தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் இதைக் காணக் கூடியதாக உள்ளது. எதிரிகளின் புலனாய்வாளர்கள் புதிய புதிய துரோகிகளை எமது மண்ணில் உருவாக்கி வருகின்றார்கள் ஆனால் அன்று டென்மார்க் மண்ணில் மட்டுமே துரோகளின் செயல்பாடுகள் இருந்திருகின்றன. எமது தேசத்தின் துரோகிகளோ சர்வதேசத்திலும் உருவாக்கப்பட்டுள்ளார்கள்.

டென்மார்க் விடுதலைப் போராளிகள் 400 க்கு மேற்பட்ட துரோகிகளை அன்று அழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றும் களைகள் பிடுங்கப்பட்டுள்ளது. விடுதலை பெற்ற பின்பும் துரோகிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையே வழங்கப்பட்டு வந்துள்ளது. டென்மார்க்கில் இப்பொழுது மரண தண்டனை வழங்கப்படாததால் புதியநடைமுறையில் உள்ள அதிகபட்ச தண்டனையே அமுலில் இருக்கின்றது. சமீப காலத்தில் கூட இந்த விடயம் பரவலாக டென்மாக் ஊடகங்களில் ஆராயப்பட்டது. ஆனால் இப்பொழுது டென்மார்க் நாட்டிலிருந்தே எமது தமிழ் இனத் துரோகிகள் செயற்படுவதும் இவர்களின் தமிழின விரோத பரப்புரைகளுக்கு டென்மார்க் ஊடகங்கள் சில ஊதுகுழலலாக இருப்பதும் கவலைக்குரியது.

இன்று எமது விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்கள் பங்கு கொள்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று சொல்லும் சர்வதேசம் அன்றைய விடுதலைப் போராட்டங்களில் குடும்ப பந்தமற்ற இளைஞர்கள் தான் பங்குகொண்டதாக தங்கள் வரலாற்றில் பதிந்துள்ளது. சில குழுக்களில் 14 இருந்து 20 வயதானவர்களே இருந்திருக்கின்றனர். இந்த குழுவால் மட்டும் சுமார் 25 தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாக கூறப்படுகின்றது . அத்துடன் ஜேர்மனிய படைகளை முடக்குவதற்காக 2800 தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் அதில் 1500 தாக்குதல்கள் தொடரூந்துகள் மீதே நடைபெற்றிருக்கின்றன. இன்று விடுதலைக்கு பலம் சேர்பதற்காக இவ்வாறான தாக்குதல்கள் நடைபெற்றால் அது பயங்கரவாதம். இன்று தாங்கள் விடுதலைபெற்ற ஒரு இனமாக வாழ்வதால் விடுதலைபெற போராடும் இன்னொரு இனத்திற்கு வேறு விதியை எப்படிக் கூறுகின்றார்களோ? இன்று கூட தமது அரசியல் கருத்துக்கு முரண்பட்ட நாடுகளில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கின்றனர். விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசுக்கெதிராக போராடுவது ஏற்றுக்கொள்ள முடியாது அவர்களை ஐரோப்பாவிலும் தடைசெய்யவேண்டும் எனக் கோருபவர்கள் ஈரான் அரசுக்கெதிராக போராடும் அமைப்பிற்கு அதுவும் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஏன் ஆதரவளிக்கின்றனர்?

ஆனால் எமது போராட்டத்தை தேசியத்தலைவர் தனது தூர நோக்க சிந்தனையுடனும் தமிழ்மக்களின் பங்களிப்புடனேயுமே நடாத்துகின்றார். அதனால் எந்த தடையும் எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியாது. தலைவரின் காலத்தில் தமிழினம் விடுதலைபெறுவது உறுதி.

http://www.webeelam.com/Denmark0405.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.