Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடகாவில் பொங்கு தமிழ் .

Featured Replies

கர்நாடகப் பொங்கு தமிழ் நிகழ்வு காலத்தின் தேவையை உணர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள்இ தமிழ் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்கும் குரல் கொடுப்பதற்காக இந்தியத் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்றும் இந்தச் சந்தர்ப்பத்தை இந்தியத் தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்தியத் தமிழ் மக்களுக்கும் புராதன காலத்திலிருந்து நிலவி வருகின்ற தொப்புள் கொடி உறவை நினைவுகூர்ந்துள்ள யாழ்.குடாநாட்டு மக்கள்இ ஈழத் தமிழர்களுக்கு அடி விழும்போது தட்டிக் கேட்;பதற்கென்றிருக்கின்ற ஒரேயொரு நாடு எமது அயல் நாடான இந்தியா என்றும் அதிலும் இந்தியத் தமிழ் மக்களே ஈழத் தமிழ் மக்களின் இரத்த உறவுகள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் தான் ஈழத் தமிழர்களுக்கு சிங்களச் சேனைகள் அடித்து உதைக்கும் போதெல்லாம் இந்தியத் தமிழ் மக்கள் கொதித்தெழுகின்றார்கள் என்றும் யாழ் குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத் தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கின்ற தமிழகக் கட்சிகளும் தமது தோழர்கள்இ கட்சித் தொண்டர்கள்இ ஆதரவாளர்கள் சகிதம் இந்தப் பொங்கு தமிழில் பங்கெடுத்து ஈழத்திலுள்ள எமது பாதுகாப்புக்கு உத்தரவாதத்தைப் பெற்றுத்தர வேண்டுமென்றும் யாழ்ப்பாண மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொங்கு தமிழ் நிகழ்வு தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்கும் குரல் கொடுப்பதற்கு உலகத்திலுள்ள மனித நேயம் மிக்கவர்கள் எல்லோரும் தயாராகிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.

மகிந்த அரசாங்கத்தினாலும் இனவெறி சிங்கள இராணுவத்தாலும் ஈழத்தில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளையும் தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு சர்வதேச நாடுகளுக்கு இருக்கின்ற போதிலும் எந்தவொரு நாடும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக எமது அயல் நாடான இந்தியா கூட தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே செயற்படுகின்றது.

தமிழர் தாயகம் நாளாந்தம் சிங்களமயமாகிக்கொண்டிருக்கிறது. எமது ஆலயங்கள் இருந்த இடங்களில் புத்த பகவான் குடியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார். தமிழர்கள் குடியிருந்த நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. ஒட்டுமொத்தமாக எமது தாயகம் சிங்கள மயமாகிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழ் மக்களின் எழுச்சியை உலகுக்கு வெளிக்காட்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்பதற்கு கர்நாடகப் பொங்கு தமிழ் நிகழ்வு ஒரு பொன்னான சந்தர்ப்பமாகும். இந்தச் சந்தர்ப்பத்தை கர்நாடகத் தமிழ் மக்களும் தமிழகத் தமிழ் மக்களும் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

இந்தியத் தேசத்தில் கர்நாடகாவும் தமிழ்நாடும் மிக முக்கியமான மாநிலங்களாகும். தமிழ் நாட்டிற்கு அடுத்ததாக கர்நாடகாவில் பெருமளவான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் முதற் கட்டமாக தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள பொங்கு தமிழ் நிகழ்விற்கு கர்நாடகத் தமிழ் மக்களுக்கு மேலதிகமாக தமிழ் நாட்டுத் தமிழ் மக்களும் தமிழகத் தலைவர்களும் இந்தக் கர்நாடகப் பொங்கு தமிழில் அலை அலையாகப் பங்கு பற்ற வேண்டும்.

கர்நாடகம் மிகவும் தூரத்தில் உள்ளது. எனவே தமிழ் நாட்டிலிருந்து அங்கு செல்ல முடியாது என்று தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் எண்ணக் கூடாது. கடல் கடந்த தீவிலிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்காக அயல் மாநிலத்தில் நடைபெறுகின்ற நிகழ்வொன்றுக்குச் செல்வது பெரிய கஸ்டம் அல்ல.

அண்மையில் கொலைவெறியன் மகிந்த ராஜபக்ஸவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக ம.தி.மு.க தலைவர் வை.கோபாலசாமி அவர்கள் தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகாவையும் கடந்து அதற்கு அடுத்த மாநிலமான சாஞ்சிக்குச் சென்றார். வை.கோ அவர்களும் அவரின் கட்சித் தொண்டர்களும் நீண்ட தூரம் சென்று மகிந்தவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியுமென்றால்இ தமிழ் நாட்டு மக்கள் கர்நாடகாவிற்குச் சென்று பொங்கு தமிழ் நிகழ்வில் பங்குபற்றுவது பெரிய கஸ்டமானதல்ல.

எனவே, தமிழகத்திலிருந்தவாறு ஈழத் தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கின்ற வை.கோபாலசாமி, பழ.நெடுமாறன், சீமான், தொல்.திருமாவளவன் உட்பட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளும் தமது கழகத் தொண்டர்கள்இ கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சகிதம் தமிழகத் தமிழ் மக்களையும் அணி அணியாக அழைத்துக்கொண்டு சென்று கர்நாடகப் பொங்கு தமிழ் நிகழ்வில் பங்குபற்ற வேண்டும். கட்சி வேறுபாடுகள், போட்டிகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தொப்புள் கொடி உறவுகளாகிய எங்களுக்காக எழுச்சிக் குரல் கொடுங்கள் என்றும் குடாநாட்டு மக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிலங்கா இனவாத அரசாங்கத்தாலும் கொலைவெறி இராணுவத்தாலும் ஈழத்தில் தமிழ் மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. தினம் தினம் நாம் செத்துக்கொண்டிருக்கிறோம். சாவின் விழிம்பிலிருந்து எங்களைக் காப்பாற்ற சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேசம் ஈழத் தமிழ் மக்களாகிய எங்களை நோக்கித் தமது பார்வையைத் திருப்புவதற்கு முதல் எமது தொப்புள் கொடி நாடாகிய இந்தியா எமது பக்கம் தமது பார்வையைத் திருப்ப வேண்டும்.

இந்தியா ஈழத் தமிழ் மக்களின் பக்கம் தமது பார்வையைத் திருப்ப வேண்டுமென்பதற்காக உயரிய தியாகத்தைப் புரிந்த தமிழக உறவுகளான முத்துக்குமார்இ செங்கொடிஇ விஜயராஜ் ஆகியோரின் ஆத்மாக்கள் இந்திய அரசின் மனச்சாட்சியை உலுக்கிக்கொண்டே இருக்கிறது. அதனைவிட தமிழக கட்சிகளினதும் மக்களினதும் பெரும் புரட்சிகரமான செயற்பாடுகளாலும் இந்திய மத்திய அரசு செய்வதறியாத நிலையிலுள்ளது.

எனவே, இந்தியாவின் பார்வையை எமது பக்கம் திருப்பக்கூடிய நிகழ்வாக இந்தப் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு அமைய வேண்டும். இதற்காக கர்நாடகஇ தமிழக உறவுகள் அனைவரும் அலையலையாக அணிதிரள வேண்டுமென்றும் குடாநாட்டு மக்கள் கோரியுள்ளனர்.

தாயகத்திலிருந்து வீரமணி

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.