Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2013 வடக்கு மாகாணசபைத் தேர்தல் – எட்டுமுனைகளில் போட்டி: தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பிரிக்க கடும் முயற்சி?

Featured Replies

[size=3]

2013ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்பாக வடக்கு மாகாணத் தேர்தலை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கையரசு அது தொடர்பான சில கபட முயற்சிகளில் நேரடியாகவே களமிறங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.[/size][size=3]

Mahinda1.jpg[/size][size=3]

குறிப்பாக எந்தவொரு கட்சியும் பெரும்பாண்மை பெறாமல் அரசாங்கத்தின் உதவியுடனே ஆட்சியை அமைக்கலாம் என்ற குறியில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் இந்த முறை டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யைத் தவிர்த்து அரச தரப்பு நேரடியாகக் களமிறங்கவுள்ளது.[/size][size=3]

Mahinda.jpg[/size][size=3]

அத்தோடு புலிகளுடனான போர் முடிந்து மூன்று வருடங்களான பின்பு ஈ.பி.டி.பி.யின் உதவி மகிந்த அரசிற்குத் எந்தவிதத்திலும் தேவையில்லையென்பதும், ஈ.பி.டி.பி அரசுடன் இணைந்து இருப்பதால்தான் ஏனைய தமிழ்க்கட்சிகள் அரசோடு கைகோற்கத் தயாராக இல்லையென்பதுமே அரசாங்கம் ஈ.பி.டி.பி.யை தவிர்ப்பதற்கான முக்கிய நோக்காகும்.[/size][size=3]

அதேவேளை அரச ஆதரவைப் பாவித்து டக்ளஸ் தேவானந்தா மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்துள்ளதும், இவரது கட்சியினர் வடக்கு அரச நிர்வாகத்தில் கொண்டுள்ள ஆதிக்கத்தை குறைப்பதற்காகவுமே இம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என அறியப்படுகிறது.[/size][size=3]

தமிழ்த் தேசியம் சார்ந்த தரப்பாக எந்தவித சிரமமுமின்றி வெல்லக்கூடிய சக்தியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினரிடம் உள்ள தலைமையுடன் ஒத்துப் போகாத மனப்பாண்மையை வைத்து அவர்களை பிரிப்பதற்கான உள்ளக முயற்சிகளை அரசதரப்புக் கடுமையாக மேற்கொள்ளவுள்ளது.[/size][size=3]

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இரண்டு அல்லது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரிந்து போனால் அவர்களை; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனோ அல்லது சுயேட்சையாகவோ செயற்பட முடியும் என்பதைக் கணக்கில் எடுத்துள்ள அரச தரப்பு இவர்களிற்குப் போட்டியாக கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதனையும் தனித்தரப்பாக (சுயேட்சையாக?) போட்டியிட அனுமதிப்பதற்கும் ஆதரவு வழங்கும் எனத் தெரியவருகிறது.[/size][size=3]

சர்வதேச நாடுகளிற்கு புலிகளின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதல் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கப் போகும் செல்வராசா பத்மநாதனின் தேர்தல் போட்டி அமையவிருக்கிறது. இவருடன் சிறையிலிருந்து வெளிவரவுள்ள தமிழினி, பிரதீப் மாஸ்ரர் போன்ற பிரபலங்களும் விரைவில் இணையவுள்ளனர். கூட்டமைப்பினரிடம் பிளவு ஏற்படும் பட்சித்தில் அவர்களின் கணிசமான வாக்குக்களையும் கவரும் நோக்கத்திலேயே இது மேற்கொள்ளப்படுகிறது.[/size][size=3]

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, முஸ்லீம் காங்கிரல் என்பன தனித்தே போட்டியிடும் பட்சத்தில் இந்தத் தேர்தலை எட்டுப் பெரிய அணிகள் போட்டியிடும் தேர்தலாக மாற்றி எவருமே அறுதிப் பெரும்பாண்மை பெறாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும்.[/size][size=3]

இதன் மூலம் ஆட்சியமைப்பதற்கு அரசின் ஆதரவை எந்தக் கட்சியும் பெறவேண்டும் என்ற ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்தவுள்ளது. அத்தோடு பல சுயேட்சைக் குழுக்களையும் களமிறக்கவுள்ள அரசு வடக்குக் கிழக்கு இணைப்பை எதிர்ப்பதையே நோக்கமாக கொண்ட பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் சுயேட்சையாகப் போட்டியிடலாமெனப் பச்சைக் கொடி காட்டி இந்தத் தேர்தலை தமக்கான வெற்றிக் களமாக அரசு மாற்றவுள்ளது.[/size][size=3]

அதன்மூலம் தமிழ் மக்கள் இலங்கை அரசியலமைப்பிற்குட்பட்ட அரச கட்டமைப்புக்களின் மூலம் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் தங்களது பிரதிநிதிகளைத் தாமே தெரிவு செய்துள்ளார்கள் என்பதைப் பொதுநலவாய நாடுகளிற்கு இலகுவாக அரசு காட்டிவிடும் என்பது திண்ணம்.[/size][size=3]

அடுத்த வருடம் பொதுநலவாயவாய நாடுகளிற்குச் செல்லும் பிரதிநிதிகள் வடக்கிற்குச் செல்லும் வண்ணம் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் புதிய நிர்வாகக் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன். கிளிநொச்சி விமானநிலையம் பெருப்பிக்கப்படுவதோடு, புதிய கட்டிடத் தொகுதிகள் தோற்றம் பெறுவதுடன், தீவகப் பகுதியில் நீச்சல் தடாகத்துடன் கூடிய ஐந்து நட்சத்திர விடுதியும் தோற்றம் பெற்றுவருகிறது. ஓரிரு இரவுகளை வடக்கில் செலவிடவுள்ள பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளின் தீவகத்திறகும் யாழ்ப்பாணத்திற்குமான பயணத்திற்கு உலங்கு வாணூர்த்திச் சேவையே பயண்படுத்தப்படுமெனத் தெரியவருகிறது.[/size][size=3]

கூட்டமைப்புப் பிரிவுற்றால் அது ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு அடிக்கப்பட்ட சாவு மணியாக அமையும் என்பதே இப்போதைய முடிவு.[/size][size=3]

http://www.canadamirror.com/international/1087.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.