Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க சுரங்க இரயிலில் இந்தியரை கொன்ற மர்ம பெண் யார்? நியூயார்க் போலீஸார் தீவிர விசாரணை.

Featured Replies

அமெரிக்காவில் நியூயார்க்கில் ரெயில் முன் தள்ளி இந்தியரை கொன்ற மர்ம பெண்ணை போலீசார் தேடுகிறார்கள். அந்த கொலைகார பெண், பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு புத்தகம் படித்ததும், இரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற காட்சியும் இரயில்வே காமிராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை வைத்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்தியர் பிணம்

 

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுரங்கப்பாதையில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அங்குள்ள குயின்ஸ் ரெயில் நிலையத்தில் ஒரு ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்தார். அவர் யார்? எப்படி செத்தார்? என்பது மர்மமாக இருந்தது.

 

 

 

இதனை அடுத்து நியூயார்க் நகர போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த நபரிடம் இருந்த செல்போன் மற்றும் மருந்து குப்பி ஆகியவற்றின் மூலம் விசாரித்த போது, அவர் இந்தியர் என்றும் அவருடைய பெயர் சுனாந்தோ சென் (வயது 46) என்றும் அடையாளம் தெரியவந்தது. இவர் குயின்ஸ் பகுதியில் ஒரு அறையில் சில நண்பர்களுடன், தங்கியிருந்து காகித அச்சடிப்பு தொழிலில் செய்து வந்ததும் தெரியவந்தது.

 

 

ரெயில் முன் தள்ளி கொலை

 

மேலும் இவரை மர்ம பெண் ஒருத்தி ரெயில் முன் தள்ளி கொன்று இருப்பதாகவும் போலீசுக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி நியூயார்க் போலீஸ் கமிஷனர் ரேமண்ட் கெல்லி கூறுகையில், ‘ரெயில் நிலையத்திற்குள் அவர் வரும்போது ஒரு இளம்பெண் முணுமுணுத்துக் கொண்டே பின்னால் வந்திருக்கிறார். அந்த பெண்ணே இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகப்படுகிறோம். கூட்டத்தோடு கூட்டமாக அவள் தப்பி விட்டாள். அவளை தேடி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

 

இச்சம்பவம் பற்றி இறந்த சென் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள இருக்கிறோம் என போலீசார் கூறினர். ஆனால் அவருடன் தங்கியிருந்த நண்பரோ, அவர் இன்னும் திருமணம் செய்யவில்லை. பெற்றோரும் இறந்து விட்டார்கள் என கூறுகிறார்.

 

 

 

20 வயது மர்ம பெண்

 

சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ள தகவலின்படி, மர்ம பெண்ணுக்கு 20 வயது இருக்கும். சுமார் 5½ அடி உயரமிருந்த அவள் ஸ்பேனிஷ் மொழி பேசும் அமெரிக்கர். நீலம், வெள்ளை மற்றும் கிரேக் கலர் ஜாக்கெட் அணிந்திருந்தார் என தெரியவந்துள்ளது.

 

மற்றொரு நபர் போலீசாரிடம் கூறுகையில், ‘சுவர் ஓரமாக இருந்த மர பெஞ்சில் அந்த பெண் உட்கார்ந்திருந்தார். அவருக்கு சற்று முன் சென் நின்றிருந்தார். ரெயில் வந்ததும் அவள் திடீரென்று எழுந்து அவரை தள்ளினாள். அதில் நிலைகுலைந்த அவர் தண்டவாளத்தில் விழுந்து ரெயிலில் அடிபட்டு விட்டார்’ என கூறியிருக்கிறார்.

 

நியூயார்க் நகரில் இந்த சுரங்கப்பாதை ரெயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. விபத்தை தடுக்க தடுப்பு வேலியோ அல்லது கண்காணிப்பு கேமராவோ கிடையாது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கூடும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டுமென நகர மேயருக்கு, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

 

இறந்த இந்தியர் மற்றும் காமிராவில் பதிந்த கொலைகார இளம்பெண்ணின் படங்கள் பார்க்க....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.