Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீர்ப்பறவை திரை விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீர்ப்பறவை திரை விமர்சனம்

 
 
 
kingfisher+hunting.jpg

நீர்ப்பறவை திரை விமர்சனம்

 

 

நீர்ப்பறவை திரை விமர்சனம்

-அமிர்தம் சூர்யா

(கல்கி-வார இதழில் பிரசுரமானது)

------------------------------------------

‘குழந்தைக்குப் பாலூட்டும் அழகிய பெண்ணின் கலைப்படைப்பு சிற்பம், தானொரு தாய்என்பதை பிரச்சாரம் செய்தபடியே இருக்கும்’ என்பார் அறிஞர் அண்ணா.

அதுபோல கோலிவுட் குத்தாட்ட, வெற்று குண்டு சப்தங்களுக்கிடையே அழகிய கடலும், கடல் சார்ந்த நெய்தலும் வாழ்க்கையைக் கூவியபடி வந்திருக்கும் கலைப்படைப்பு ‘நீர்ப் பறவை’. அப்பறவை இரு விஷயங்களைப் பிரசசாரம் செய்கிறது.

1. ‘திகட்டும்படி’ குடியின் கேகட்டைச் சொல்லித் திருத்தும் வழியைச் சொல்வது.

2. கடல் எல்லையில் தினம் தினம் இலங்கை ராணுவத்தால் செத்து மடியும் தமிழன் நிலை பற்றிசலனமற்று கிடக்கும் நம் மனக்குளத்தில் கல்லெறிந்து சுரணை அலையைத் தோற்றுவிப்பது.

அந்தப் பறவை சொல்லும் கதை இதுதான்...

25 வருடங்களுக்கு முன் காணாமல் @பான கணவனுக்கு தினமும் கடற்கரையில் காத்திருக்கும் எஸ்தர் (நந்திதாதாஸ்) தன் கணவனின்(விஷ்ணு) சடலத்தை வீட்டிலேயே புதைத்து வைத்திருக்கிறாள் என்று அதிர்ச்சியிலிருந்து கதை பின்@னாக்கி நகர்கிறது. அகதியாக வரும்போது இலங்கைக் கடற்படை உறவினர்களைச் சுட்டு வீழ்த்த, எஞ்சிய சிறுவன் (கதாநாயகன்) அருளப்பசாமியாக மீனவ குடும்பத்தில் வளர்கிறான். குடிக்கு அடிமையாகி பின் திருந்தி காதலித்தவளைப் போராட்டத்துக்குப் பிறகு கைபிடித்து மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் அவன், இலங்கை ராணுவத்தால் சுடப்பட்டு கடலிலேயே நீர்ப்பறவையாய் செத்து மிதக்கிறான்... என்பதுதான் கதை.

கிறிஸ்துவ கதாநாயகனை ஒரு இந்து டாக்டர் குணப்படுத்தி உத்வேகம் தந்து அனுப்ப ஒரு இஸ்லாமியன் படகு தந்து அவனின் வாழ்வுக்குத் துணை புரிவதாக வரும் சட்டென, புலப்படாத மதநல்லிணக்கக் காட்சிக்காக இயக்குனருக்கு மகுடம் சூட்டலாம்.

செங்கடல், நீலம், பச்சை, கருநீலம் என கடலின் பல அரிதாரங்களைக் கைப்பற்றிக் காட்சிப்படுத்தியிருக்கும் பால”ப்ரமணியத்தின் ஒளிப்பதிவு அபாரம். ‘நீதான்டி என் கடல்’, ‘குடிகாரன் குடியை நிறுத்தினா ஒண்ணு அல்சரா இருக்கும் இல்ல காதலா இருக்கும்’, ‘முதுகைப் பாரு... படமெடுக்கிற பாம்பு மாதிரி’ என எல்லா நிலைகளிலும் வசனத்தில் ஜெய@மாகனின் எழுத்துத் தூரிகை, மனத்தை வருடி வரைகிறது.

கோலிவுட்டுக்கு நல்ல நடிகன் (சமுத்திரக்கனி) கிடைச்சாச்சு. ‘மாதா கோயில்ல பொம்பள பேசக்கூடாதாடா?’ என்று சரண்யா கேட்கும் இடத்தில் பெண்களின் கைதட்டல். தியேட்டரில் இஸ்லாமியர்கள் பல காட்சியில் எழுந்து நின்று கைதட்டுவது அபூர்வ காட்சி. கதாநாயகன் விஷ்ணு குடிகாரராக வாழ்ந்து இருக்கிறார்

குடிகார வாத்தியாராக வரும் ராமைய்யா குடியைவிட்ட பின் வயதான காலத்தில் வரும் காட்சியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியராக மாறி இருப்பது நச்.

திரையில் கிறிஸ்துவ மீனவ குடும்பத்தின் வாழ்வை நீண்டநாட்களுக்குப் பின் ஒரு நாவலைப்போல படிக்க முடிந்தது.

நீர்ப்பறவை - நம் நெஞ்ச நிலத்தில் கூடு கட்டும்.

--------------------------------------------------------------------------

சில சந்தேதகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள இயக்குனருடன் உரையாடியதி லிருந்து...

1.. போதை ஒழிப்பு மையத்தில் பரமாச்சாரியார் படத்தை ஏன் காட்டியுள்ளார் என்ற கேள்வி குதர்க்கமாக எழுப்பப் படுகிறதே?

“அழுக்குச் சட்டை@யாடு நான் வேலைக்கார சிறுவனாக ஒரு வீட்டுக்குப் போன இடத்தில் அவரைப் பார்த்தேன். அவர் அவ்வளவு @பர் மத்தியில் என்னை அழைத்து, பூவையும் ஒரு ருத்ராட்சத்தையும் தந்தார். ஒரு புது நம்பிக்கை பிறந்த தருணம் அது. மற்றவர்கள் அவரை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். எனக்கு என்கூடவே வரும் முப்பாட்டனாக அவரை நான் வரித்துக்கொள்ள எனக்கு உரிமையுண்டு. எனவேதான் அந்தக் காட்சியில் அவரின் படம்.”

2.. ”சுனேனாவையேவயதான பெண்மணியாகக் காட்டியிருக்கலாமே என்ன நஷ்டம் என்றும் இலங்கை எல்லைப் பிரச்னையை இன்னும் விஸ்தாரமாகக் காட்டியிருக்கலாம் என்கிறார்களே?

“”சுனேனாவை வயதான பெண்மணியாகக் காட்டினால் அபத்தமா# இருக்கும் - வாழ்க்கை படத்தில் வயதான வேடத்தில் வரும் அம்பிகா போல. மேலும் சென்ஸார் போர்டு என்று ஒன்று இங்கு உண்டு. எனவே விஸ்தாரமாகப் பேசி குற்றப்பத்திரிகை போல என் படம் முடங்கிப் போவதில் எனக்கு துளியும் ஆசையில்லை. நீதிமன்றத்தில் எல்லைப் பிரச்னை பக்கம்பக்கமாக பேச நந்திதாஸ் ஐ.நா. சபை உறுப்பினர் அல்ல - சாதாரண மீனவ இனப் பெண்.”

3.. வெற்றி மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள். ஏதேனும் சொல்ல விருப்பமா?

“விமரசனத்தினூடேஎழும் சந்தேகத்துக்கு பதில் பெற்றுப் போடும் ‘கல்கி’யின் கண்ணியம் சந்தோஷப்படுத்தியது. கல்கி வாசகர்களுக்கு என் நன்றியும் அன்பும்.”

  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.