Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை சிங்களக் கல்வி வலயம் - பற்றாக்குறை வளத்துடன் தமிழ்ப் பாடசாலைகள்

Featured Replies

திருகோணமலை சிங்களக் கல்வி வலயம் - பற்றாக்குறை வளத்துடன் தமிழ்ப் பாடசாலைகள் [ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 08:52 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] pankulam%20schools%20students%20.jpg

திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டாவது கல்வி வலயம் திருகோணமலை வடக்கு கல்வி வலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. திருகோணமலைக்கு வடக்கே உள்ள சிங்களக்கிராமங்களான மொரவேவா, கோமரங்கடவல, மயிலவேவா, பதவிசிறிபுர, போன்ற சிங்கள கிhரமங்களை உள்ளடக்கியதாக சிங்கள வலயம் அமைந்துள்ளது. 

பன்குளம், நொச்சிக்குளம், ஒளவைநகர், முதலிக்குளம் ஆகிய தமிழ்க்கிராமங்களும் இக்கல்வி வலயத்தினுள் வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது சிங்களக் கல்வி வலயம் இதுவாகும். முதலாவது சிங்களக்கல்வி வலயம் கந்தளாயில் அமைந்துள்ளது. திருகோணமலை ஏனைய கல்வி வலயங்கள் திருகோணமலை, மூதூர், கிண்ணியா, கந்தளாய் ஆகியவையாகும்.

ஐந்து தமிழ் மொழி மூல பாடசாலைகள் இவ்வலயத்தினுள் இருக்கின்றன. முதலிக்குளம், நொச்சிக்குளம், ஒளவைநகர் ஆகிய இடங்களில் உள்ள தமிழ் கலவன் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களும் நாமல்வத்தை மற்றும் ரொட்டவேவா ஆகிய இடங்களில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்கின்றனர். ஆசிரியர் வளம் மற்றும் பௌதிக வளங்களின் குறைபாடுகள் இத்தமிழ்மொழி மூலப்பாடசலைகளில் நிலவுகின்றன. 

சிங்களக்கல்வி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் ஒரு சிங்களவர். சிங்களத்தில் தான் நிர்வாகம் நடத்தப்படுகின்றது. 

இப்பின்னணியில் திருகோணமலை மாவட்ட அகதிகள் நலன்புரிச்சங்கம் கடந்த புதன்கிழமை திருகோணமலை வடக்கு சிங்கள கல்வி வலயத்தில் முதலிக்குளம், நொச்சிக்குளம் மற்றும் ஒளவைநகர் ஆகிய கிராமங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 11 வரை பயிலும் மாணவருக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது.

pankulam%20schools%20students%2001.jpg

pankulam%20schools%20students%2002.jpg

pankulam%20schools%20students%2003.jpg

[தண்டாயுதபாணி கற்றல் உபகரணங்களை வழங்குகின்றார். அகதிகள் நலன்புரி சங்க நிர்வாகி யேசுதாசன் செயலாளர் ஸ்ரீதர்சன் மற்றும் மாணவர்கள் காணப்படுகின்றனர்]

ஓய்வுநிலை கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளராகப் பணியாற்றியவரும் தற்போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினரான சி.தண்டாயுதபாணி கற்றல் உபகரணங்களை மாணவர்க்கு வழங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அகதிகள் நலன்புரிச்சங்கத்தின் நிர்வாகி யேசுதாசன், பொதுச்செயலாளர் ஸ்ரீ.தர்சன், பொருளாளர்க.சுந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

வளக்குறைபாடுகள் மத்தியிலும் இருக்கும் வளங்களை உச்சப்பயன்பாட்டுக்கு உட்படுத்தி கல்வித்தரத்தை உயர்த்த அனைவரும் உழைக்க வேண்டும் என்று தண்டாயுதபாணி கேட்டுக்கொண்டார்.

http://www.puthinappalakai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.