Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாவ் ! மறக்க முடியாத முட்டம் கடற்கரை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் ! மறக்க முடியாத முட்டம் கடற்கரை !
 
முட்டம் கடற்கரை - கடலோரக்கவிதைகள் படம் மூலம் பாரதிராஜாவால் பிரபலமானது இல்லையா? அதே ஊர் தான் !  அதற்கு முன் அலைகள் ஓய்வதில்லை கூட இங்கு தான் எடுத்தார் என நினைக்கிறேன். இருப்பினும் முட்டம் சின்னப்பதாஸ் என்று சொல்லி, சொல்லி கடலோரக்கவிதைகள் படம் தான் இந்த ஊரை பிரபலமாக்கியது.

DSC08317.JPG

 
நாகர் கோவிலில் இருந்து சற்று தள்ளி இருக்கும் ஊர் ( ஒரு மணி நேர பயணம்) என்பதால், அவ்வளவு தூரம் டிராவல் செய்து போகணுமா என தயக்கம் இருந்தது. அப்போ தான் கன்யாகுமரி கடற்கரை வேறு பார்த்திருந்தோம். அதே கடல் தானே என்று ஒரு எண்ணம். வீட்டம்மா தான் " ரொம்ப நல்லா இருக்குமாம். ஆபிஸ் தோழிகள் போய் வந்து சொன்னாங்க " என சென்றே ஆகணும் என்றார். 

சென்ற பின் தான் தெரிந்தது. இங்கு வராமல் போயிருந்தால் ஒரு அற்புத கடற்கரையை பார்க்க தவறியிருப்போம். 

எனக்கு தெரிந்து நான் பார்த்த அழகிய கடற்கரை இதுதான். குறைந்த பட்சம் தமிழகத்தின் அழகிய கடற்கரை என்று தயக்கமின்றி சொல்லி விடலாம். 

சினிமாவில் காட்டியதை விடவும் நேரில் இன்னும் பல மடங்கு அழகு. கடலில் என்ன அழகு இருந்து விடமுடியும் என்கிறீர்களா? 

முட்டம் கடற்கரையை நெருங்கும் போதே வரிசையாய் நூற்று கணக்கில் தென்னை மரங்கள் பீச்சில் கால் நனைக்கும் தூரத்தில் உள்ளன.  வெவ்வேறு வடிவத்தில் வளைந்து இருக்கும் இந்த மரங்களை  சாலையில் நீங்கள் சற்று உயரத்திலிருந்து பார்ப்பீர்கள். அதாவது உயரத்தில் சாலை. கீழே நூற்றுகணக்கில் மரங்கள் மற்றும் அழகிய பீச். இந்த காட்சி தான் எங்களை முட்டத்துக்கு வரவேற்றது. ஆரம்பமே அசத்தலப்பா என்று சொல்லியவாறு கடற்கரையை அடைந்தோம்.

****

இந்த வீடியோவில் சாலையில் (உயரத்தில்) இருந்து கீழே இருக்கும் பீச்சின் அழகை ரசியுங்கள்:

ஒரு பக்கம் முழுதும் கடல் அதன் நேர் எதிர்புறம் முழுதும் பாறை இடையில் கரை. இது தான் முட்டத்தின் மிகப்பெரும் அழகே. சான்சே இல்லை ! அசந்து போய் விட்டோம். இத்தனைக்கும் நாங்கள் சென்ற நேரம் உச்சி வெய்யில் மதியம் 12 முதல் 1 வரை அங்கிருந்தோம். 

கடற்கரையின் ஓரத்தில் பெரும் பாறைகள் உள்ளன. அங்கு இரும்பு கம்பி போடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெரும் அலைகள் அடித்து கொண்டே இருக்கின்றன. இந்த இடத்தில் சற்று உள்ளே போனால் அலையின் வேகத்தில் நம்மை உள்ளே இழுத்து போய் விடுமாம். இந்த இடத்திற்கு செல்லாதீர்கள் என கூட்டி வந்த டிரைவர் கூறியிருந்தார். நாங்களும் அந்த இடம் அருகே போகவே இல்லை. 

DSC08324.JPG டிரைவர் "செல்லாதீர்கள்" என எச்சரித்த இடம்

முட்டத்துக்கு செல்ல சரியான நேரம் காலை 6 அல்லது ஏழு தான். வெய்யில் இன்றி பீச் அழகை நன்கு ரசிக்கலாம். மாலை நேரம் சென்றால் ஆறு மணிக்குள் அங்கிருந்து கிளம்பி விடணும். அதன் பின் அப்படிப்பட்ட ஒதுக்கு புறத்தில் இருப்பது நல்லதல்ல.

மாலைக்கு பின் அதே இடம் குடிமகன்களின் கூடாரம் ஆகிவிடுகிறது. குடித்து விட்டு போகட்டும். அதில் கூட தப்பு இல்லை. ஆனால் எல்லா பாட்டில்களையும் அங்குள்ள பாறைகளில் போட்டு உடைத்து விட்டு போய் விடுகிறார்கள் என்பது பெரும் சோகம்.

மிக அழகிய கடற்கரை டூரிசம் எடுத்து கொண்டு நன்கு டெவலப் செய்யலாம். கேட்பாரற்று கிடப்பதை காண மிக வருத்தமாய் இருந்தது 

DSC08316.JPG
 

மீண்டும் முட்டம் பீச்சுக்கு வருவோம். நாம் கடற்கரையில் கால் நனைப்போம் அல்லவா? அங்கேயே சிறு சிறு பாறைகள் உள்ளன. நாம் அதன் மேல் ஏறி நின்று கொண்டால் நம்மை தாண்டி அலை அடித்து போகிறது. நம்மை சுற்றிலும் அலை போகும் போது நாம் நனையாமல் மேலே நின்று பார்ப்பதும், அலை மெல்லியதாக நம் காலை வந்து தொடுவதும் புது வித அனுபவமாய் இருந்தது.

இந்த பீச்சில் உள்ள தண்ணீர் மிக தெளிவாக அதன் நிறமே பார்க்க ரொம்ப ஆசையாக இருந்தது. நீச்சல் குளத்தில் உள்ள நீரின் நிறத்தில் இங்கு தண்ணீர் இருந்தது. மண்ணும் கூட பிரவுன் அல்லது பிங்க் நிறத்தில் இருக்கிறது 

 
**

இந்த வீடியோ பீச்சில் நின்றபடி எடுக்கப்பட்டது; படம் எடுப்பவரை சுற்றி செல்லும் சுழல் அலைகளை இதில் காணலாம்:

ஒவ்வொரு இடத்தையும் பார்த்து " கடலோர கவிதைகளில் சத்யராஜ் மீன் பிடித்து வந்து கொடுக்கும் இடம் இது தான்" ; " ரேகா குடை பிடித்தவாறு இங்கு தான் நடந்து வருவார்";  "அலைகள் ஓய்வதில்லை படத்தில் குட்டி பசங்களுடன் கார்த்திக்- ராதா ஒளிந்து விளையாடும் இடம் இது" - என சொல்லி கொண்டிருந்தோம். 

DSC08340.JPG

அங்கிருந்த ஒரு மணி நேரமும் நாங்கள் மூவரும் சிறு குழந்தைகள் போல் ஆகி விட்டோம். அந்த இடத்தில அநேகமாய் வேறு யாரும் இல்லை. அலைகளுக்கு நடுவே பாறையில் ஏறி நிற்பது; பீச்சுக்கு சற்று உள்ளே போவது; அலை துரத்தும் போது ஓடி பிடித்து விளையாடுவது என செம கலாட்டா. கிளம்பவே மனமின்றி தான் அங்கிருந்து கிளம்பினோம் 

நாகர்கோவில் அல்லது கன்யாகுமரி சென்றால் முட்டத்துக்கு அவசியம் ஒரு விசிட் அடியுங்கள் ! நிச்சயம் எனக்கு நன்றி சொல்லுவீர்கள் !

 

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.