Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் கூட்டுப் பிரேரணை கோரிக்கையை நிராகரித்த சிறீலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் கூட்டுப் பிரேரணை கோரிக்கையை நிராகரித்த சிறீலங்கா

மார் 11, 2013
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட்டுப் பிரேஇரணையொன்றை (Joint Resolution) சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை சிறீலங்கா அரசு முற்றாக நிராகரித்துள்ளது எனத் தெரியவருகிறது.
tamil%20mana%20400.jpg
 இதனால், ஜெனிவா இராஜதந்திர சமர்க்களத்தில் கொழும்பு அரசு கடும் இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்­திக்க நேரிடலாமென அறியமுடிகின்றது.
அதேவேளை, தமது கோரிக்கைக்கு சிறீலங்கா  பச்­சைக்­ெகாடி காட்ட மறுத்ததாலேயே அந்த நாடு மீது தமது போக்கை அமெரிக்க வல்லரசு ஜெனிவாவில்  இறுக்­கியுள்ளது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. 
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது அமர்­வில் சிறீலங்கா அரசுக்கு எதிராகப் பிரேரணை­யொன்­றைத் தாக்கல் செய்வதற்கு முன்வந்த அமெரிக்கா, இது விட­யம் சம்பந்தமாக சிறீலங்காப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்­தியுள்ளது. 

மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் எலின் சம்பர்லெய்ன் டொனஹே, (Eillen Chamberlain Donahoe) ஜெனிவாவுக்கான இலங்­­கையின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிடம் இந்தப் பிரேரணை விவகாரம் குறித்துக் கலந்துரையாடியுள்ளார். 

இந்தச் சந்திப்பின்போதே அமெரிக்காவின் கூட்டுப் பிரேரணை யோசனையை டொங்ஹோ, ரவிநாத்திடம் தெரிவித்திருக்கின்றார். 
 
அதாவது, குறிப்பிட்ட சில விடயங்களை சிறீலங்கா அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, அவற்றுடன் மேலும் சில விடயங்கள் உள்ளடங்கிய கூட்டுப்பிரேரணையொன்றை தாக்கல் செய்தால் அது சிறீலங்காவை மேலும் ஊக்குவிப்பதாக அமையும் என்றும் இதன்போது அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
அத்துடன், சிறீலங்கா அரசு மனித உரிமை குற்றச்சாட்டுகள் குறித்து புலனாய்வு செய்யவேண்டும் என்பதே அமெரிக்காவின் கோரிக்கையாகவுள்ளது. இதன்பொருட்டே கொழும்பு நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த தடவை பிரேரணை கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. 
 
ஆனால், அந்தத் தீர்மானம் குறித்து சிறீலங்கா சாதகமான சமிக்ஞைகளைக் காட்டவில்லை. எனவேதான், நல்லிணக்கப்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் அமெரிக்கத் தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
 
இவற்றுக்குப் பதிலளித்த சிறீலங்காப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க சாதகமான பிரதிபலிப்பைக் காட்டவில்லை என ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் அழைப்பை ஏற்று கூட்டுப் பிரேரணைக்கு சிறீலங்கா விருப்பம் தெரிவித்தால் அந்நாடு சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது எனக் கருத்துகள் பரவலாம். 
 
இதனைக் கருத்திற்கொண்டே அமெரிக்காவின் யோசனையை சிறீலங்கா ஏற்கவில்லை என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. 
 
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வளாகத்தில் ஓரங்க கூட்டமொன்றை நடத்திய அமெரிக்கப் பிரதிநிதிகள், மேற்படி விடயங்களை அனைத்துலக பிரதிநிதிகளுக்குத் தெரியப்படுத்தினர்.

கூட்டுப் பிரேரணைக்கு சிறீலங்கா இணக்கம் தெரிவிக்காததையடுத்தே தனது பிரேரணையை அமெரிக்கா காட்டமாக்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. 
 
சிறீலங்காக்கு எதிராகத் தனியானதொரு பிரேரணையைச் சமர்ப்பிப்பது அமெரிக்காவின் திட்டமாக இருந்தபோதிலும், சில நாடுகளின் ஆலோசனையின் பிரகாரம் கூட்டுப் பிரேரணை தொடர்பில் அந்த நாடு சிறீலங்காவுடன் பேச்சு நடத்தியது. 

இருப்பினும், சிறீலங்கா அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனையடுத்தே அமெரிக்கா தனது முழு அனுசரணையுடன் சிறீலங்காக்கு எதிராகப் பிரேரணையைத் தாக்கல் செய்வதற்கு முடிவெடுத்தது. தற்போது அந்தப் பிரேரணையின் தகவலும் வெளியாகிவிட்டது. 
அதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், தற்போதே சிறீலங்கா விவகாரம் ஜெனிவாவில் சூடு பிடித்திருக்கின்றது. இறுதிக்கட்டத்தில் தமது இராஜதந்திர வியூகங்களை சிறீலங்கா மாற்றியமைத்துள்ளதால் அமெரிக்க இராஜதந்திரிகளும் உஷாரடைந்துள்ளனர்.
கடந்த முறை சிறீலங்காக்கு எதிரான பிரேரணையை 15 நாடுகள் எதிர்த்திருந்தாலும் இம்முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 30 நாடுகள் அமெரிக்கப் பிரேரணையை ஆதரிக்க முடிவெடுத்துள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.