Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முட்டாபிஷேகம்! அரோகரா....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு கோழி முட்டைகளால் அபிஷேகம் செய்த "உண்டியலான்" ஜெயதேவனின் நாடகம் அம்பலத்தில்!

வெள்ளிக்கிழமை, 21 யூலை 2006 நெருடன்

கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் லண்டன் வெம்பிளிப் பகுதியில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளை வன்முறைக்கும்பலொன்று சேதமாக்கியதாகவும், அத்துடன் ஆலய வெளிப்புறத்தே பெருந்தொகையான கோழி முட்டைகள் அடித்து ஊத்தப்பட்டிருந்தாகவும் லண்டன் ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் வானொலியில் "உண்டியலான்" ஜெயதேவன் கூக்குரலிட்ட சில வினாடிகளில், ஒட்டுக்குழுக்களின் இணையமொன்றும் ஆங்கிலத்தில் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. இவ் அநாகரிகமான மிருகத்தனமான சம்பவம் தொடர்பாக "ஈழபதீஸ்வரர் அடியார் அமைப்பு" தமது அறிக்கையை இன்று எமக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் ...

சைவத்தமிழ் அடியார்களுக்கு!

சில தினங்களுக்கு முன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடைபெற்ற சம்பவம் அறிந்து மிகவும் வேதனை அடைந்திருக்கிறோம். இவ் ஈனத்தனமான செயல் யார் செய்திருப்பினும், எமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ,ப்படியான சம்பவங்களை எவ்விதத்திலும் தொடர அனுமதிக்க முடியாது. இச்சம்பவம் தொடர்பான விசாரனைகளுக்கு, எமது முழு ஒத்துழைப்பையும் பொலிஸாருக்கு வழங்கத் தயாராக உள்ளோம். நாம் கடந்த காலங்களில் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் நிதி மோசடிகள; சமூக விரோதச்செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட வரைமுறைக்குட்பட்ட முறையில், மக்களின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயத்தை மக்களிடம் ஒப்படைக்கும்படி போராட்டத்தை நடாத்தி வருகிறோம். ஆனால் இச்சம்பவம் தொடர்பாக எமது சந்தேகங்களை பகிரங்கப்படுத்த விரும்புகின்றோம்.

தற்போது நடைபெற்ற சம்பவமானது ஆலய திருவிழா காலத்தில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவுகளே சேதமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஆகம முறைகளுக்கு அப்பாற்பட்டு அமைக்கப்பட்ட ஈழ்பதீஸ்வரர் ஆலயம், ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை திருவிழாக்கள் நடைபெற்றதில்லை. இவ்வாறிருக்க எவ்வாறு முன்னறிவித்தல்கள் எவையுமற்று திருவிழா என்ற நாடகம் அரங்கேறியது?

கடந்த காலங்களில் எம்மால் தொடர்ச்சியான முறையில் நடாத்தப்படும் போராட்டங்களினால் ஈழபதீஸ்வரர் ஆலயத்துக்கு அடியார்களின் வரவு ஏறக்குறைய முற்றாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் "உண்டியலான்" ஜெயதேவனுக்கு பாரிய வருவாய் வீழ்ச்சி ஏற்பட்டும் உள்ளது. இவற்றை ஈடுகட்டும் நோக்கிலேயே இத்திருவிழா நாடகம் அரங்கேற்றப்பட்டதாக நாம் நம்புகின்றோம். தற்போது ஆலயத்தில் நடாத்தப்பட்ட வன்முறையும் சில அனுதாபங்களை அடியார்கள் மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்கமும் என்றே நாம் கருதுகின்றோம்.

இவை போன்ற எத்தனை நாடகங்களை "உண்டியலான்" ஜெயதேவன் அரங்கேற்றினாலும,; ஈழ்பதீஸ்வரர் ஆலயத்தை மீட்கும் எமது போராட்டமானது தொடருமென்று உறுதி கூறுகின்றோம். நடாத்தப்பட்ட இவ் வன்முறை நாடகமும் எமது போராட்டத்தை மழுங்கச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சியுமென்றே நாம் கருதுகின்றோம். கடந்த காலங்களில் எமது உறுதியான சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கைகள் மூலம் "உண்டியலான்" ஜெயதேவனின் போலி முகத்திரைகளை கிழித்து உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்தோம். எமது இலக்கு அடையும்வரை நாம் உறுதியாக செயற்படுவோம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

ஈழபதீஸ்வரர் அடியார் அமைப்பு

... என்று குறிப்பிட்டுள்ளனர். எமது லண்டன் செய்தியாளர் அனுப்பிய குறிப்பில் இதைப்போல பல வன்முறை நாடகங்களை "உண்டியலான்" ஜெயதேவன் கடந்த காலங்களில் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது. சில வருடங்களுக்கு முன் ஆலயத்தில் நிதி மோசடிகள் தொடர்பான அடியார் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் ஆலயத்தின் பிரதம ஐயர் துடைப்பத்தால் சிவலிங்கத்துக்கு அடித்து பெரும் நாடகமொன்றை ஆடி கூட்டத்தை நிறுத்தியதயும், இன்னுமொரு கூட்டம் ஆலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் "உண்டியலான்" ஜெயதேவன் கும்பல் ஆலய கதவுகளுக்கு ஓங்கி உதைந்து பாரிய சந்தங்களை ஏற்படுத்தி பொலிஸாரை வரவழைத்து கூட்டத்தை நிறுத்தியதயும,; இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஆலய ஐயர் ஒருவரின் வாகனம் சேதமாக்கப்பட்டதாக பொலிஸில் முறையிட்டதையும,; பல தடவைகள் உயிராபத்துக்கள் என்று நாடகமாடியதயும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை ஈழபதீஸ்வத்தில் நடந்ததாக கூறப்படும் வன்முறை சம்பவமும,; "உண்டியலான்" ஜெயதேவனினால் முன்பு நடாத்தப்பட்ட நாடகங்களின் தொடர்ச்சியாகவே, பெரும்பாலான அப்பகுதி ஈழத்தமிழ் மக்களும் நம்புகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக எமக்குக் கிடைத்த மேலதிக தகவல்களின்படி ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் லண்டன் முகவர் "சாக்குத் தீபன்" அல்லது "பவுடர் தீபன்" என்றெல்லாம் அழைக்கப்படும் தருமலிங்கம் யோகராஜாவினால் அமர்த்தப்பட்ட கூலிக்கும்பல்தான் இவ் வெட்கக்கேடான காரியத்தை செய்திருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. லண்டனில் போதைவஸ்து கடத்தல், வங்கிக்கடனட்டை மோசடிகள் என பல சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவருபவரென நம்பப்படும் "பவுடர் தீபன்", மிக நெருங்கிய உறவை "உண்டியலான்" ஜெயதேவனும் வைத்துள்ளாரென்பது யாவரும் அறிந்ததே.

http://www.nitharsanam.com/?art=18955

யோவ்.. என்னப்பா மண்டையிலை பாதியை ஈழபதீஸ்..க்கு குடுத்திட்டீரோ.. எப்ப பார்த்தாலும் அரோகரா சொல்லி புராணம் பாடுறதிலையே நிக்கிறீர்.. நீர் ஜெயதெவன்.. உமக்கு நீரே முட்டாபிஷேக அரிச்சனை செய்யுறீரோ.. ஒன்னுமா புரியேல்லை. :?:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

வாவ்வ்வ்வ்... தாத்தோய்! என்னா கேள்வியை அடியேனை கோக்கி போட்டிருக்கிறீர்!!!!

உண்மைதான்! பாதியல்ல, முழுசா ஈழ்பதீஸானுக்கு மண்டையை கொடுத்திட்டன்! நான் மட்டுமல்ல என்னோடு சேர்ந்தை இன்னும் கொஞ்சமும்!!

இந்த மண்டையை ஈழ்பதீஸானுக்கு கொடுத்தபடியால்தான் ....

தேசியவாதியாய் வலம் வந்து >>> உண்டியலை அமுக்கி >>> போய் கையும் களவுமாய் பிடிபட்டு >>> ஒப்புக்கொண்டு >>> வந்து அனுதாபம் தேடப்போய் >>> மாற்றுக்கருத்தாளனாக மாறி >>> தூள்கிங் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து >>> பாலிமென்டிலை கூட்டம் >>> ரவல்கார் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் >>> எல்லாத்துக்கும் மேலாக நோர்வேக்கும் தீர்வுப்பொதியோடும் போனவராம் ....

... போதாக்குறைக்கு லேபர் பாட்டியும் கைக்குள்ளை, பொலிஸும் கைக்குள்ளை எண்டு பெரும் போடு போட்டவரை, இண்டைக்கு துண்டையும் காணோம் துணியையும் காணோம் என்று நாய் படாப் பாடு படுத்தி விட்டுக்கிடக்குது!!!!!!!! உதெல்லாம் நடந்தது உந்த மண்டையை .....!!!!

உதுகளென்ன இன்னும் கிடக்கு ....

ரோகரா.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.