Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [1] : மருதமுத்து

Featured Replies

 

indian_ship_on_lead_coin.jpg” புலையன் ” என்ற சொல்லுக்கு தமிழ் லெக்க்ஷிக்கனில் ” கீழ்மகன் ” [ கீழ்சாதியான்] என்று பொருள் தரப்பட்டுள்ளது.அதே சொல்லுக்கு ” புரோகிதன் ” என்றி வேறொரு பொருளும் தரப்பட்டுள்ளது.

புரோகிதன் என்றால் மதகுரு [ Preist ] சமயத் துறையின் தலைமகன்.சமயச் சடங்குகளை நிகழ்த்துவது இவரது சிறப்புரிமை. இந்தத் தலைமகன் எப்படிக் கீழ் மகனாகவும் கருதப்பட முடியும் ? இது ஆழ்ந்து ஆய்யு செய்வதற்குரியதாகிறது.

சமயச் சடங்குகளில் கடவுள் வழிபாட்டுச் சடங்கு தான் முதலிடம் வகிப்பது.இதற்க்கடுத்துப் புராதன சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது ஈமச் சடங்காகும்.திருமஞ்ச சடங்கு முதலியனவெல்லாம் காலத்தால் மிகவும் பிற்ப்பட்டவை. எனவே கடவுள் வழிபாட்டைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இறுதிச் சடங்கு தான் முதல் இடத்தில் இருப்பது.

பழந்தமிழகத்தில் இத்தகைய பெருமை வாய்ந்த இறுதிச் சடங்கை நடத்தி வைக்கும் மரியாதைக்குரிய மதகுருவாகப் ” புலையர் ” இருந்தனர். மட்டுமல்லாது மன்னர்களின் இறுதிச் சடங்குகளையும் இவர்களே செய்துள்ளனர்.

சுடுகாட்டில் , இறந்த மன்னனின் உடல் கிடத்தப்பட்ட பிறகு புலையன் சோறும் கல்லும் படைக்க , இறந்தவன் அதை வாங்கி உண்பான் என்று நம்பப்பட்டது.அதன் பின் உடலுக்கு எரியூட்டப்படும்.

இதைக் குறிப்பிடும் பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

” புல்லகத்திட்ட சில்அவிழ் வல்சி

புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்து உண்டு

அழல்வாய்ப் புக்க …..”

இப்பாடலை [ எண் :360 ]மேற்கோள் காட்டி புலையர் புரோகிதராயிருந்தனர் என்று பொருள் தந்துள்ளது லெக்க்ஷிக்கன்.

ஆனால் அதே புறநானூற்றில் இன்னொரு பாடலும் உள்ளது.இதில் இறுதிக் கடன் தீர்க்கும் தகுதி புதலவ்னுக்கு மட்டுமே உண்டு என்று வலியுறுத்துகிறது.

இப்பாடலில் , பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி இவ்வாறு கூறுகிறான்:

” இதோ அம்பு செலுத்த ஆயத்தமாகி விட்டேன்.அதற்க்கு முன் , பசுக்களும், பார்ப்பனரும், பெண்களும் , இறந்தோர்க் கடன் முடிக்கப் பிள்ளை பெறாதவர்களும் விளகியோடிப் பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள்!” – [ புறம் :9 ]

” ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்

……

தென்புல வாழ்நர்க்கு அருக்கடன் இருக்கும்

பொன் போற் புதல்வரைப் பெறாதீரும்

…றும் அரண் சேர்மின் “

பல யாகசாலைகள் நிறுவி வேள்விகள் நடத்த உதவிய அந்த மன்னனைப் புகழும் புலவர் விதிக்க சார்பினர் என்று கொள்ளலாம்.இவர் இறுதிச் சடங்கில் புலையனின் முக்கிய இடத்தை மறுத்து விடுகிறார்.செத்தவனுக்குக் கொடுக்கப்படும் உணவுதான் அவனது எதிர்கால் வாழ்வைப் பாதுகாக்கும். இதை பிண்டோதகக் கிரியை என்பர் வைதிகர்.இந்த மிக முக்கியமான சடங்குதான் இப்புரப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் உ.வே.சா.

ஆனால் புறநானூற்றில் இரண்டு பாடல்களில் [ 360 ,363 ] பிண்டம் கொடுக்கும் சடங்கை[ புலையன் செய்ததாக வந்துள்ளது.அன்று தமிழகத்தில் வந்து குடியேறியிருந்த வைதிகர் பார்வையில் இது படு பயங்கரமான பாவமாகும்.இருந்தாலும் எதிர்ப்புக் குரல் மிகப் பலவீனமாகவும்,மறைமுகமாகவும் தான் ஒலிக்கிறது.புலையன் பிண்டம் தரலாகாது என்று நேரடியாகத் தடை செய்வதற்குப் பதில் புதல்வனைப் பெறாதிருப்பதர்க்கு கதி மோட்சமில்லை என்று ந்ட்பமாக உரைக்கிறது.

அன்றைய வைதிகர்கள் ஏன் இப்படி எச்சரிக்கை காட்டினார்கள்?சாதரணமாக " சாதித் தூய்மை " காப்பாற்ற மிகக் கடுமையாக பிரச்சாரம் செய்தவர்களாயிற்றே அவர்கள்?மனுதர்மம் எழுதப்பட்ட காலமல்லவா அது?

Mauryan_Empire_Map.gifமௌரியர்களின் ஆட்சியின் பொது [ குறிப்பாக அசோகர் காலத்தில்] வடக்கில் நெருக்கடிக்கு ஆளாகித் தென்னகத்துக்கு வந்த வைதிகப் புரோகிதர்கள் தமிழகத்தில் ஒரு பெரும் சிக்கலை எதிர் இங்கே ஏற்கனவே ஒரு ஆரோக்கியமான பண்பாடும் அதன் சமயம் சார்ந்த பாதுகாவலரான புரோகிதர்களும் ,புலவோரும் இருந்தார்கள்.இவர்கள் பொதுவாகப் பறையர் ,பாணர் முதலிய குடிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.குடிமக்களும் ,மன்னர்களும் தமக்குள்ள எத்தனையோ மாறுபாடுகள் இருந்தாலும் இப்புரோகிதரைப் பெரிதும் மதித்தார்கள்.இந்நிலையில் புதிதாக வந்த வைதிகப் புரோகிதர் என்ன செய்வது ?புலையரைக் கடுமையாக எதிர்க்க உடனடியாக இயலவில்லை.

அன்று மறுத்த நிலத்தில் விவசாயம் ஓரளவு வளர்ச்சியுற்றிருந்தது.ஆனாலும் தமிழகத்தின் பண்பாட்டுத் துறையில் முல்லை நிலத்தவரின் செல்வாக்கே ஓங்கியிருந்தது.முல்லை நிலம் என்று சொல்லும் போது அது மலைப்பகுதியையும் உள்ளடக்கியதாகக் கொண்டிருந்தது.[ இதில் இலக்கணத்தின் இறுக்கத்தை தவிர்த்து விடுவதே நல்லது ]

விவசாய வளர்ச்சி என்பது கூட முல்லை நிலத்தி தான் முதலில் ஏற்ப்பட்டது.

காவிரிப்படுக்கைகளில் நெல் பயிரப்படுவதற்கு முன்பே மலையடிவாரக் காட்டுப்பகுதிகளில் பயிர்த் தொழில் பயிலப்பட்டு விட்டது.தமிழகத்தில் முன் தோன்றி மூத்த பயிர்கள் நெல்லும் , கரும்பும் அல்ல. வரகும் , தினையும் ,கொள்ளும் , அவரையும் தான். மூத்த குடிகள் பாணனும் ,

பறையனும் ,துடியனும், கடம்பனும் தான்.புலையர் என்று பொதுவான பெயர் சூட்டப் பெற்றிருந்த இவர்களின் வீரத்தையும் ,குடிச் சிறப்பையும் வியந்தோதும் புறப்பாடல் ஒன்றுள்ளது. – புறம் :355 ]

” துடியன் பாணன் பரியன் கடம்பன் என்று

இந்நான்கல்லது குடியுமில்லை “

எனவரும் முல்லை நிலத்தை வீர பூமி எனச் சித்தரிக்கிறது.

இப்புலையர் குடியினர் பலவகையான கைத் தொழில்களிலும் வல்லவர்களாக இருந்தனர்.

” பாண்தலையிட்ட பலவல் புலையனை ” என்கிறது கலித் தொகை[35].இசைக் கருவிகள் பலவற்றில் வல்லவன் என்பதோடு பிற திறன்களும் பல கொண்டவன் புலையன் என்று காட்டுகிறது இது.

புல் என்பது அக்காலத்தில் பனை மூங்கில் முதலியவற்றை குறிப்பதாக இருந்தது.புல்லுதல் என்றால் புணர்த்தல் ,சேர்த்தல் என்று பொருள்படும்.பனம்பேழ் எனப்படும் பனைமட்டையின் நாரைக் கொண்டும், மூங்கில் ,பிரம்பு ,நாணல் முதலியன் கொண்டும் பல்வேறு வகையான பயனுள்ள பொருட்களை இவர்கள் பிணைத்து உருவாக்க வல்லவர்கலாயிருந்தனர்.மண்பாண்டங்கள் செய்வதிலும் இவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.பாண் என்ற சொல்லுக்கும் பாண்டம் என்பதற்கும் நெருங்கிய நேரடித் தொடர்பு உண்டு.

parai.jpgபானைகளின் வாயில் தோல் செறித்துக் கட்டி  பறைகள்  தயாரிக்கப்பட்டன.அதுமட்டுமல்ல , இந்தப் பாண்டம் செய்யும் புலையர் குடியினர் இறந்தோரை வைத்துப் புதைக்கும் முதுமக்கள் தாழியையும் செய்பவர்கலாக இருந்தனர்.எனவே சுடுகாட்டில் மட்டுமின்றி இடுகாட்டிலும் இவர்கள் பணி இன்றியமைதாததாக இருந்தது.இறுதியடக்கம் செய்ய உதவுவதை இழிவானது என்று நாகரீகம் படைத்தவர்கள் நினைக்க மாட்டார்கள்.இடுகாடு குறித்து அருவருப்பு அடைவது அர்த்தமற்றதாகும்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் நமக்கு இந்த நாகரீகம் இருந்தது.

” களம் செய் கோவே கலம் செய் கோவே !” வண்டிச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்டு வந்த பல்லி  போல என் கணவனோடு பாலா ஆபத்தான பாதைகளைக் கடந்த வந்தேன் அவனோ இறந்து போனான.அவனைப் புதைக்க ஒரு ஈமத்தாழி செய்து எனக்குத் தந்தருள்.அதையும் சற்றுப் பெரிதாகச் செய்து விடு – எனக்கும் அதில் இடம் இருக்குமாறு ” இப்படி ஒரு புலையரை இறைஞ்சுகிறாள் ஒரு புறநானூற்றுப் பெண்.

இது ஒரு அற்ப்புதமான புறப்பாடல் செய்தி [ எண் :256 ] இதைவிட அற்ப்புதம் ஒரு கைவினைஞன் போற்றப்பட்டு ” கோ ” என அழைக்கப்பட்டிருப்பது.” அருள் கூர்ந்து தாழியைச் செய்து தா ” என்று அவன் தயவு கோரப்படுகின்றது.

இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது பழந்தமிழகத்தில் புலையர் போற்றப்பட்டிருந்தமை புலனாகும்.

வடக்கே இருந்து கி.மு.வில் தமிழகத்துக்கு முதலில் வந்த பார்ப்பனர் பலர் இந்த நிலைமைகளோடு பகைமை பாராட்டவில்லை.புலையரின் பண்பாட்டுத் தலைமையை வெறுத்து ஒதுக்கவில்லை.இவர்களில் பல பார்ப்பனர் தமிழர்க்கு ஒத்துழைப்பு நல்கினர்.பாலர் நடுநிலை வகித்தனர்.ஆனால் அசோகனுக்கு அஞ்சி சநாதன வைதிகர் தெற்க்கே வரத் தொடங்கிய பிறகு படிப்படியாக போராட்டம் வலுப்பெறலாயிற்று.சங்க இலக்கியங்கப் படைப்புகளில் மிகப் பழமையானவற்றில் இந்தப் போராட்டம் அதிகம் வெளிப்படாது.பிறகு திருக்குறள் படைக்கப்பட்ட காலத்தில் பிறப்பால உயர்வு தாழ்வு குறித்த விவாதம் சூடு பிடித்து விட்டது.பரி பாடலின் வைதிகத்தின் அழுத்தமான முத்திரை விழுந்த்துள்ளதைக் காணலாம்..இதற்குப் பிறகு புலையர் என்ற சொல் இழிவான பொருள் கொண்டதாயிற்று.வடக்கே சண்டாளர் என்ற ஒரு தொல்குடியின் பெயரே ஒரு வகைச் சொல்லாக மாற்றப்பட்டது போல புலையர் என்பதும் உச்சரிக்கப்படலாயிற்று.

நான் இதுவரை கூறியுள்ள கருத்துகளுக்கு நேரெதிரான ஆய்வுமுடிவுகளை வெளியிட்டுள்ளார் ஜார்ஜ் ஹார்ட் [ George L .Hart III ] என்ற அமெரிக்க ஆய்வறிஞர்.இவரது கருத்துப்படி ” தீண்டாமை என்பது பழ்ந்தமிழரால் உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டதே” ஆகும்.இதற்க்கு வைதிகர் பொறுப்பில்லை; இந்தத் தீண்டாமைப் பழக்கம் தோன்றக் காரணமாக இருந்தது ஆரியர்க்கு முந்தைய பழந்தமிழரின் நம்பிக்கைகள் இப் பழந் தமிழ் மதத்தில் ஒரு வளர்ச்சியு ற்ற கடவுட்கோட்பாடு இருந்ததில்லை.இத்தகைய சமய நம்பிக்கையை Animism என்று கூறுவர்; இதன்படி பழந்தமிழர் பல்வேறு பொருட்களில் தெய்வீக சக்திகளைக் கடவுளர் என்று தெளிவாக உருக்கொடுக்க முடியாது ; அந்தச் சக்திகள் அபாயகரமானவை. அதன் காரணமாக அவற்றைக் கையாளும் மதச் சடங்குகள் யாவும் கீழ்ச் சாதிகளான பாணர் , பறையர் முதலிய புலையரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன ;ஆபத்தான சக்திகளோடு உறவாடும் கீழ்ச்சாதியினரைத் தீண்டினாலும் ஆபத்துத் தான் என்று கருதி தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது.

மேற்கூறிய கருத்துக்களை ஜார்ஜ் ஹார்ட் ” பண்டைத் தமிழிலக்கியம் ” என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார். [ நூல்: " Essays on South India 1976, ed .Burton Stein ]

இவை அனைத்தும் ஆனா முடிவுகள். வைதிகக் கருத்தியல் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி நவீன ஆய்வாளர்கள் பலர் இந்திய வரலாற்றை அணுகுவதால் இந்த விபரீதங்கள் நேர்கின்றன.இலக்கிய புரிதலும் இவர்களிடம் இல்லை.

ஆரியல்லாத பழந்தமிழர் பல்வேறு பொர்ட்களில் கடவுள் தன்மை கண்டார்கள் என்பது உண்மை.ஆனால் அவர்களது சமை நம்பிக்கை வெறும்

Animism என்ற நிலையோடு நின்றிருக்கவில்லை.அவர்களிடம் ஒரு நல்ல கடவுள் தத்துவத்தின் கரு இருந்தது.ஒப்பீட்டளவில் அவர்களுடைய கடவுள் அன்றிருந்த பிற கடவ்ள்கள் அனைவரிலும் உயர்ந்தவன் எனலாம்.[ இது பொதுவாக கி.மு. குறித்தது]

அன்றைய தமிழகத்தில் எத்தனையோ விதமான கடவுள் நம்பிக்கைகள் இருந்த போதிலும் அனைத்து சக்திகளையும் அடக்கியாளும் ஒரு தனிப்பெரும் கடவுள் இருந்ததாக மக்கள் நம்பினார்.அவன் தான் முருகன்.அணங்குகள் யாவும் அவனுக்கு அடங்கியவை.” கணங்கெழு கடவுள் ” என்று அவனைக் குறிப்படுவது நற்றிணை [ 358 ]. அந்தக் கணம் என்ற சொல் பெருங் கடவுளின் ஆணைக்குக் கீழ்ப்படும் சிறு தெய்வங்களைக் குறிப்பதாகும்.இயற்கையில் உறையும் பல்வேறு சக்திகளும் கணம் என்பதில் அடங்கும்.

tamil_murugan.jpgஇந்த முருகனைப் ” பெரும் பெயர் முருகன் ” என்கிறது பண்டை இலக்கியம். நெடுவேள் ,நெடியோன் என்பவையெல்லாம் அவனது உயர்தனி இடத்தை [supremacy ] வலியுறுத்தும் பெயர்களே.

இயற்க்கைப் பொருட்களை வழிபடும் மதமாக [ Animsm ] மட்டுமே பழந்தமிழ் மதம் இருந்திருக்குமானால் அதில் தலைமைக் கடவுள் என ஒரு பெருங் கடவுள் இருந்திருக்க முடியாது.முருகனோ ஊர்க்கடவுள் அல்ல.வட்டாரக் கடவுளுமல்ல.தமிழகம் முழுவதும் தாழ்ந்து பணிந்த ஒரே தெய்வம்.கி.மு.காலத்தில் அவனோடு போட்டியிட சிவனும் இல்லை.விஷ்ணுவும் இல்லை.போட்டி இந்திரனிடமிருந்து தான் முதலில் வந்தது.அதை நொடிப்பொழுதில் முருகன் முறியடித்ததாகப் பிற்காலப் புராணக் கதை [ கி.பி காலத்தியது ] கூறுகிறது.பலகாலம் இந்தப் பகையுணர்வு நீடித்திருந்ததை இக்கதை வெளிப்படுத்துகிறது.இறுதியாக முருகன் இந்திரனின் மாப்பிள்ளையாகி விடுகிறான்.தமிழகத்துக்குக் குடி பெயர்ந்து வந்த வைதிகரின் சமய நம்பிக்கைக்கும் [இந்திரன் ] இங்கே ஏற்க்கனவே நிலவி வந்த கடவுட் கோட்பாட்டுக்கும் [ முருகன் [ இடையிலான நெடுக்காலப் போராட்டத்தை இப்புராணம் மறைமுகமாகப் பிரதிபலிக்கிறது.

http://inioru.com/?p=35500

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளர், பறையர் தங்களின் ஜாதி உயர்த்து என காட்டும் முயற்சி இது முதலில் மாடு , பன்றி போன்ற விலங்குகளை உண்பவர்களை புரோகிதன் செய்ய அனுமதிப்பர்? . புரோகிதன்(ஏக:surname purohit) என்பது வடசொல்; நாவிதன் , வண்ணான் போன்ற ஜாதிஎனர் இன்றளவும்  ஈம சடங்கை செய்வர் இடுகாட்டில். வண்ணான் ஊரின் முதல் குடி மகன் என கூறுவர்.

"ஆபத்தான சக்திகளோடு உறவாடும் கீழ்ச்சாதியினரைத் தீண்டினாலும் ஆபத்துத் தான் என்று கருதி தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது".

அப்பட்டமான பொய் , உண்மை இதுவாஇன் சத்திரியர்களை தான் வெறுக்க வேண்டும் அவர்கள் தான் மிக அதிகமான  படுகொலை செய்தவர்கள்.   

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.