Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களின் விருப்பம் அதிக அதிகாரங்கள் கொண்ட அரசியல் தீர்வே - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA%20leader.jpg

சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு இந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இங்கு வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ்க் கட்சியானது அரசாங்கத்திடமிருந்து சாத்தியப்பாடான அரசியல் அதிகாரப் பகிர்வைப் பெற்றுக் கொள்வதற்கான அழுத்தத்தை வழங்கிவருகிறது. 

சிறிலங்காத் தீவில் கடந்த பல பத்தாண்டுகளாக இதன் ஒன்பது மாகாணங்களுக்கு குறிப்பாக தமிழ் மக்கள் தமது தாய்நிலம் எனக்கருதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்குவது தொடர்பில் இழுபறி நிலை காணப்படுகிறது. 

1980களின் முற்பகுதியில், சிறிலங்கா அரசானது தம்மீது பாரபட்சத்துன் நடந்து கொள்வதாக உணர்ந்த தமிழ் மக்களின் இளையோர்கள் ஆயுத அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்தனர். இவ்வாறு தோற்றம் பெற்ற இந்த யுத்தமானது 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து மே 2009ல், தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கப் படைகள் தோற்கடிக்கும் வரை தொடர்ந்தது. 

"உண்மையில் இந்த அதிகாரப் பகிர்வுப் பிரச்சினை சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்படும் மாகாண ஆளுநர் தனது நிறைவேற்று அதிகாரங்களை மாகாண சபை அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பிலிருந்தே தோற்றம் பெற்றது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம்.சுமந்திரன் தெரிவித்திருந்தார். வடக்கு வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான தமிழ்க் கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். 

"அதிகபட்ச அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும்" என த.தே.கூ தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படாவிட்டாலும் கூட, வரும் செப்ரெம்பரில் இதனை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார். இந்தத் தேர்தல் இடம்பெற்றால், சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் வடக்கில் நடாத்தப்படும் முதலாவது மாகாண சபைத் தேர்தல் இதுவாகும். 

சிறிலங்காவில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லீம்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்குவதை நோக்காகக் கொண்டு 1987ல் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. 

சிறிலங்காவை ஆளும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தால் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஓரங்கட்டப்படுவதுடன் இவ்வாறான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலில் அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்குகின்ற அரசியற் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

2006ல் மாகாண சபைக்கான அதிகார வரையறைகள் மீள வரையப்பட்டதிலிருந்து இற்றைவரை மாகாணசபைத் தேர்தல் நடைபெறாத ஒரேயொரு மாகாணமாக வடக்கு மாகாணம் விளங்குகிறது. 

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இருவரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் எனவும், இவர்கள் மாகாணங்கள் வாரியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடாது தாம்தோன்றித் தனமாகச் செயற்படுவதாகவும் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். 

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்கு மாகாண சபையால் உதவமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். தேர்தல்கள் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாவிட்டாலும் கூட, "முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான சூழல் ஒன்றை தேர்தல் மூலம் உருவாக்க முடியும்" என சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் சமாதானம் ஏற்பட்டு நான்கு ஆண்டுகளான நிலையில், முன்னாள் போர் வலயத்தில் வீதி அபிவிருத்தி மின்சக்தி திட்டம் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்திகள் இடம்பெற்றாலும் கூட, இன்னமும் நிறையச் செய்ய வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்கள் மற்றும் நிரந்தர வீடுகளை அமைத்தல் போன்றன நிறைவேற்றப்பட வேண்டும். 

அதிகாரப் பகிர்வை வழங்குவதன் மூலம் தற்போது சிறிலங்கா அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதியை புலம்பெயர் தமிழ் சமூகத்திடமிருந்து அதிகம் பெற்றுக் கொள்ள முடியும் என சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார். 

போர் இடம்பெற்ற பகுதியில் உருவாக்கப்படும், மாகாண சபை நிர்வாகங்களுடன் சிறிலங்கா அரசாங்கமானது மிக நெருங்கிய தொடர்பைப் பேணுவதன் மூலம் மேலும் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என சம்பந்தன் குறிப்பட்டுள்ளார். 

"சிறிலங்கா அரசாங்கமானது எம்முடன் இணைந்து பணியாற்றினால், வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நாளாந்த வாழ்வில் பல்வேறு நிரந்தரமான முன்னேற்றங்கள் ஏற்படும். இதன் மூலம் அரசாங்கம் இன்று எதிர்நோக்கும் குற்றச்சாட்டுக்களின் தீவிரத்திலிருந்து விடுபட முடியும்" என த.தே.கூ தலைவர் ஆர்.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என இந்தியா உட்பட அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா மீது அனைத்துலக சமூகமானது குற்றம்சுமத்தியுள்ளது. மார்ச்சில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கமானது தன் மீதான போர்க் கால குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சிறிலங்கா அரசாங்கமானது மாகாண சபையிடம் அதன் உச்சக் கட்ட அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் என்பதில் உள்ளுர் ஆய்வாளர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. குறிப்பாக மீள்கட்டமைப்பு மற்றும் மீளிணக்கப்பாடு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை வெளிப்படையாக விமர்சிக்கும் த.தே.கூ போன்ற எதிர்க்கட்சியால் கட்டுப்படுத்தப்படக் கூடிய மாகாணசபை நிர்வாகத்திடம் அரசாங்கமானது அரசியல் அதிகாரத்தை வழங்க ஒருபோதும் முன்வராது என எதிர்வுகூறப்படுகிறது. 

"மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்குவதை தடுக்கவே சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தன்னால் அல்லது தனது ஆளும் கூட்டணியால் கட்டுப்படுத்தப்பட முடியாத ஒரு மாகாண சபைக்கு மேலும் அதிகாரங்களை வழங்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்காது" என உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனமான தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகன் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார். 

வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டாம் எனக் கோரி சிறிலங்கா அரசாங்கத்திற்குள் எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளன. ஆளும் கூட்டணியைச் சேர்ந்த தேசிய சுதந்திர முன்னணியானது உள்ளுர் சபைகளிடமிருந்து காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களைப் பறிக்குமாறு வலியுறுத்தி மில்லியன் வரையான மக்களிடமிருந்து கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது. 

இதற்கும் மேலாக, மாகாண சபைகளை உருவாக்குவதற்கு வழிசமைத்த 13வது திருத்தச் சட்டத்தை யாப்பிலிருந்து நீக்குவதற்கான முயற்சியை தேசிய சுதந்திர முன்னணி தொடர்ந்தும் முன்னெடுக்கும் என இதன் தலைவரும், கட்டுமானம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுச் சேவை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

"மாகாண சபையானது தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றால் அது நாட்டைச் சீரழித்துவிடும்" எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளையில், வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதானது போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் சிலர் மத்தியில் சிறியதோர் உற்சாகத்தையே ஏற்படுத்தியுள்ளது. 

"தேர்தல் நடாத்துவது நல்லது. ஆனால் எமக்கான தேவைகள் பல பூர்த்தியாக்கப்பட வேண்டும். எமக்கு வீடுகள், நீர் மற்றும் மின்சார வசதிகள் தேவைப்படுகின்றன. தொழில் வாய்ப்பும் தேவையாக உள்ளது. இந்தத் தேவைகளை நாம் அடைந்த பிறகு தேர்தல்களை பற்றிச் சிந்திக்க முடியும்" என கிளிநொச்சியைச் சேர்ந்த, முதற் தடவையாக வாக்களிக்கவுள்ள நிசாந்தன் தெரிவித்துள்ளார். 

செய்தி வழிமூலம் : IRIN 

மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20130614108464

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கோ அன்றேல் அவருடன் தொங்கிக்கொண்டிருக்கும் அவரது அடிப்பொடிகளுக்கோ தாம் சார்ந்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ன கொள்கைய உடையது என்பதுபற்றி எந்த அறுப்பும்தெரியாது. இதுக்காக அவருக்கு அறளைபேந்துபோச்சு என்று சொல்லமுடியாது. சிங்களவன் போடும் தாளத்துக்கு அந்தந்தச்சந்தர்ப்பதில் ஆடுவதே தமிழர்தரப்பு அரசியல் என்று நினைக்கினம். இவர்கள் இதுவரை எமக்கு என்ன வேண்டும் என்பதை எதிரிக்கோ அன்றேல் எம்மிடமோ தீர்மானமாகத் தெரிவிக்கவில்லை. நாம் எந்தவகை ஆயுதத்தை எடுப்பதென்பதை எமது எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பது போராட்டத்தை தீர்மானிக்கப்பட்ட இலக்குநோக்கி செல்வதற்கான வார்த்தைகளேயொழிய. நாம் எந்த இலக்கு நோக்கிச்செல்லவேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்பதாகவல்ல. இங்கு சம்பந்தன் வகையறாக்கள் எடுப்பது இரண்டாவது வகை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.