Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கையில் படையினர்

Featured Replies

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக கடந்த 1989 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லையென்று சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், தமது காணிகளில் மகிந்த அரசாங்கம் தனது படைகளைக் கொண்டு விவசாயம் செய்கின்றது என்றும் மேற்படி காணி உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

KKS_Palaali%20air%20port.jpg

சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல தரப்பினருக்கும் பல தடவைகள் கடிதங்கள் அனுப்பிய போதிலும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லையென்றும் மேற்படி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வலி.வடக்கில் கடந்த 1989 ஆம் ஆண்டு பல காணிகள் விமான நிலைய விஸ்தரிப்புக்காக சிறிலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டன. இது தெடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் காணிகளை இழக்கின்ற காணி உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்படும் என்றும் அப்போது  அரசாங்கம் தெரிவித்திருந்தது.

Chadrasiri_Hathuru%201.jpg

ஆனால், 24 வருடங்கள் கடந்த நிலையில் இன்றுவரை தமக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்று மேற்படி காணிகளை இழந்தவர்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

மேற்படி சுவீகரிக்கப்பட்ட காணிகளில் குரும்பசிட்டி வடக்கு தென்மயிலை ஜே-240 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த எஸ்.பி. நடராசாவுக்குச் சொந்தமான அண்ணா பண்ணை, மற்றும் தி.தட்சணாமூர்த்தி, சி.முத்துலிங்கம் ஆகியோரின் காணிகளும் சுவீகரிக்கப்பட்டிருந்தன. இந்தக் காணிகளுக்கான நஸ்டஈட்டை வழங்குமாறு மேற்படி நபர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நில அளவை செய்த பின்னரே நஸ்டஈடு வழங்கப்படும் என்று வலி.வடக்கு பிரதேச செயலகம் தெரிவித்திருக்கிறது.

Chadrasiri_Hathuru_3.jpg

ஆனால், நில அளவை செய்யாமல் காலம் கடத்தப்படுகின்றது. இந்த நிலையில்; அண்ணா பண்ணை உட்பட தமது காணிகளில் படையினர் தற்போது விவசாயம் செய்து வருகிகின்றார்கள்.

இந்த விடயம் தொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இரண்டு தடவைகளும் வடமாகாண ஆளுநருக்கு இரண்டு தடவைகளும் தாங்கள் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

தங்களுக்கு நஸ்டஈடு வழங்குமாறு யாழ்.மாவட்டச் செயலகத்திலுள்ள காணி அலுவலகத்தில் கேட்டபோது, 1989 ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணி விடயங்களை வலி.வடக்கு பிரதேச செயலகமே கவனிக்க வேண்டும் என்றும் தற்போது சுவீகரிக்கப்படுகின்ற காணிகள் தொடர்பாகவே மாவட்டக் காணி அலுவலகம் கவனம் செலுத்தும் என்றும் இவர்களுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.

1989 ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கே இதுவரை நஸ்டஈடு வழங்காத சிறிலங்கா அரசாங்கம் தற்போது சுவீகரிக்கும் பல ஏக்கர் கணக்கான காணிகளுக்கு எப்போது நஸ்டஈடு வழங்கும் என்று வலி. வடக்கு மக்கள் கேள்வியெழுப்பியுள்ள

http://www.sankathi24.com/news/32148/64//d,fullart.aspx

  • தொடங்கியவர்

தமிழன் தலையில் மிளகாய் அரைப்பது சிங்களவனின் வேலை  :icon_idea: 

இதை தடுத்து நிறுத்த வேண்டியது கூட்டமைப்பின் கடமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.