Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபோர் முனையை அண்டிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா

Featured Replies

வடபோர் முனையை அண்டிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியது.

இன்று காலை வடபோர் முனையை அண்டிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியது. இதனால், பொதுமக்களின் குடியிருப்புக்களுக்கு சேதம் ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் ஏற்கனவே அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றிருந்தமையால் உயிரிழப்புக்கள், காயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

இதேவேளை இன்று திருகோணமலை மூதூரில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் ஒருதொகுதியினர் மட்டக்களப்புக்ககு சென்றிருக்கின்றனர். அவர்கள் அங்குள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

நாள்தோறும் அகதிகள்,இரவு பகலாக தமிழ் மக்கள்

இந்தியாவுக்குச் செல்கிறார்கள்-

ஜனவரி முதல் 8,331 பேர்.

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் நடக்கும் தொடர் மோதல் காரணமாக இலங்கைத் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் செல்வது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

கடந்த திட்கட்கிழமை மட்டும் அகதிகளாகத் தமிழகம் சென்ற இலங்கையர் 201 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார், திருகோணமலை, வங்காலை, பேசாலை பகுதிகளைச் சேர்ந்த 54 குடும்பங் களைச் சேர்ந்த 201 பேரே இவ்வாறு தமிழகம் சென்றவர்கள். பத்துப் படகுகளில் இவர்கள் பாம்பன் குத்துக்கால் கடற்கரையைச் சென்று அடைந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் திங்கட்கிழமை வரை தமிழகம் சென்றுள்ள அகதிகளின் எண்ணிக்கை 8,331 பேர். இவர்கள் மண்டபம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கொழும்பிலிருந்து கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளது என்று நேற்று தெரிவிக்கப் பட்டது.

இக்கப்பல் கொழும்பிலிருந்து 3600 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்களுடன் புறப் பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக அமைச்சின் செயலாளர் ஏற்கனவே தெரிவித்தார். கொழும் பிலிருந்து புறப்பட்ட கப்பல் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளதாக யாழ்ப்பாணச் செய்தி கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை 5600 மெட்ரிக் டன் அத்தியாவ சியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இன் னொரு கப்பல் யாழ் செல்லவுள்ளதாக அமைச் சர் கேகலிய ரம்புக்வெல ஊடகவியலாளரிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இலங்கை ராணுவத்தின் சதித் திட்டம் காரணமாகவே புலிகள் மோதலை தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அந்த அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் சொன்னார்.

விடுதலைப்புலிகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுப் போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும்.

போர் நிறுத்தத்தில் தங்களுக்குள்ள உறுதியை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியதற்குப் பதில் அளித்த தமிழ்ச்செல்வன், சிங்கள ராணுவத்தின் ரகசிய தாக்குதல் திட்டங் களை நாங்கள் ஏற்கனவே உளவுப்படை மூலம் அறிந்து இருந்த தாகவும் சிங்களப்படையை எதிர் கொள்ளத் தயாராக இருந்து சிங்கள ராணுவத் தாக்குதல்களைத் தோற்கடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்றதாக அமெரிக்காவில் எட்டுப்பேர் குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதை இலங்கை அரசு வர வேற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் இப்போதைய தாக்குதல் கொஞ்ச காலத்துக்குத் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகளும் பகுப்பாய்வாளர்களும் சொல்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தைப் பிடிக்க 11 நாட்கள் நடந்த போரில் இதுவரையில் 159 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 485 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். புலிகள் தரப்பில் 487 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வேளையில் வட இலங்கைக்குப் படகு ஒன்றை அனுப்பி அங்குள்ள வெளிநாட்டுக்காரர் களை மீட்கப் போவதாகச் செஞ்சிலுவைச் சங்கம் நேற்று அறிவித்தது.

இந்த மாதத் தொடக்கத்தில் ராணுவம் குண்டு போட்டு 15 தமிழர்களைக் கொன்று விட்டதாகக் கூறப்பட்ட தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியாரைக் காணவில்லை என்று தெரிவிக் கப்பட்டது. தேவாலயத் தாக்குதலின்போது என்ன நடந்தது என்பதற்கு ஒரே ஒரு சாட்சி அவரே என்று கூறப்படுகிறது.

TAMILMURASU-SINGAPORE.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.