Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

, நரேந்திர மோடியும், நடிகர் ரஜினியும் சந்தித்துப் பேசுகின்றனர்.

Featured Replies

லோக்சபா தேர்தல் பிரசாரத் திற்காக, இன்று மாலை, சென்னை வரும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், நடிகர் ரஜினியும் சந்தித்துப் பேசுகின்றனர். ரஜினி வீட்டில் நடக்கும் இந்த சந்திப்புக்கு பின், மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும், பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், மோடி பேசுகிறார். மோடி வருகை, ரஜினி சந்திப்பு காரணமாக, தமிழகத்தில் ஆதரவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பா.ஜ., கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் உள்ள கூட்டணியில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - ஐ.ஜே.கே., - புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.


தமிழக பா.ஜ., வலியுறுத்தல்:

இந்த கட்சிகள் சார்பில், 39 தொகுதிகளிலும் நிறுத்தப்பட்டு உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, நரேந்திர மோடி, தமிழகம் வர வேண்டும் என, கட்சி மேலிடத்திடம், தமிழக பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதிலும், தமிழ் புத்தாண்டு தினமான, நாளை, தமிழர் பாரம்பரிய உடையான, வேட்டி, சட்டை அணிந்து, மோடி, பிரசாரத்திற்கு தமிழகம் வர வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, மோடி இன்று, தமிழகம் வருகிறார்.சென்னை விமான நிலையத்தில் அவர் இறங்கியதும், முதல் நிகழ்ச்சியாக, நடிகர் ரஜினி வீட்டுக்கு செல்கிறார். மோடியும், ரஜினியும் தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பை முடித்த பின், மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி மைதானத்திற்கு மோடி வருகிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள, பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், மோடி பேசுகிறார்.கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் முரளீதர் ராவ் மற்றும் நிர்வாகிகள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கின்றனர்.

மோடியின் பிரசார திட்டம்

தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், வேலூர் ஆகிய தொகுதிகளின் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும், இன்றைய கூட்டத்தில், அறிமுகப்படுத்தி வைக்கப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தை முடித்த பின், மோடி, இன்றிரவு சென்னையில் தங்கி, நாளை காலை ஆமதாபாத் திரும்புகிறார். மீண்டும், 16ம் தேதி காலை, தமிழகம் வருகிறார். 16ம் தேதி கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை ஆகிய இடங்களில், பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்; இரவு கோவையில் தங்குகிறார். வரும், 17ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ஈரோடு லோக்சபா தொகுதி, ம.தி.மு.க., வேட்பாளர் கணேச மூர்த்தி, திருப்பூர் லோக்சபா தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.பின், சேலம், கிருஷ்ணகிரி தொகுதிகளில் பேசுகிறார். அந்த வழியாக பெங்களூரு செல்கிறார்.ம.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, ஈரோட்டிலும், பா.ம.க.,வுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியிலும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக கோவை, ராமநாதபுரம், கன்னியாகுமரியிலும், தே.மு.தி.க.,வுக்கு ஆதரவாக சேலத்திலும், அவர் பேசும்படி, அவரது பிரசாரத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

அத்வானி, ராஜ்நாத் சிங்:

 

வரும், 16ம் தேதி நிதின் கட்காரி வருகிறார்; 17 முதல் 19ம் தேதி வரை, வெங்கையா நாயுடு பிரசாரம் செய்கிறார்; 18ம் தேதி அத்வானி, ராஜ்நாத் சிங் தமிழகம் வருகின்றனர்; 20ம் தேதி, முக்தர் அப்பாஸ் நக்வி பிரசாரத்திற்கு வருகிறார் என்று, பா.ஜ., வட்டாரம் தெரிவித்தது.

கூட்டணி தலைவர்கள் பங்கேற்பரா?
இன்றைய பொதுக் கூட்டத்தில், மோடியுடன், கூட்டணி கட்சித் தலைவர்கள் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகியோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இன்று பங்கேற்க முடியாத, கூட்டணித்தலைவர்கள், 16, 17ல் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்பர். ஈரோட்டில் பேசும் மோடியுடன் வைகோவும், கிருஷ்ணகிரியில் அன்புமணியும், சேலத்தில் விஜயகாந்தும், மோடியுடன் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று, பா.ஜ., வட்டாரம் தெரிவித்தது.

மோடிக்கு ஆதரவாக ரஜினி 'வாய்ஸ்' கொடுப்பாரா? 
சென்னையில் இன்று, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்திக்கும், ரஜினிகாந்த், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக, 'வாய்ஸ்' கொடுக்க வேண்டும் என, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கின்றன.கடந்த சில தேர்தல்களில், அரசியல் ஆர்வமின்றி அமைதி காத்த ரஜினி, இந்த தேர்தலில், என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ என்ற பரபரப்பு, அவரது ரசிகர்கள் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சரியாக இருக்குமா

 

சென்னை வரும் நரேந்திர மோடியை, நடிகர் ரஜினிகாந்த், இன்று சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு, ரஜினியின் வீட்டில் நடைபெற உள்ளது.இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை, வழக்கம்போல், பத்திரிகையாளர் சோ ராமசாமி தான் செய்திருக்கிறார் என்ற, தகவலும் வெளியாகி உள்ளது. அது உண்மை தான் என்பதை, தமிழக பா.ஜ., தலைவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். ஏனெனில், இந்த சந்திப்புக்கு, தமிழக பா.ஜ., தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மாறாக, நேற்றைய தினம், குஜராத்தில் உள்ள மோடி அலுவலகத்தில் இருந்து வந்த, அவரது நிகழ்ச்சி நிரல் பற்றிய அறிவிப்பு மூலமே, ரஜினி சந்திப்பு பற்றிய தகவலை, தமிழக பா.ஜ., தலைவர்கள் அறிந்துள்ளனர். அதிலும், ரஜினி வீட்டுக்கு, மோடி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளர், வீட்டுக்கு சென்று ரஜினியை சந்திப்பது சரியாக இருக்குமா என்ற விமர்சனம், பா.ஜ., வட்டாரத்தில் எழுந்துள்ளதால், விமான நிலையத்திலோ அல்லது

ஓட்டலிலோ இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என, பா.ஜ., தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். இறுதியில், ரஜினியின் வீட்டிலேயே சந்திப்பு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேநேரத்தில், ரஜினி சந்திப்பு பற்றிய தகவலை, தமிழகத்தில் யாருக்கும் தெரிவிக்காமல், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.அதன் காரணமாக, தேர்தல் நேரத்தில், இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஓட்டலிலோ இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என, பா.ஜ., தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். இறுதியில், ரஜினியின் வீட்டிலேயே சந்திப்பு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேநேரத்தில், ரஜினி சந்திப்பு பற்றிய தகவலை, தமிழகத்தில் யாருக்கும் தெரிவிக்காமல், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.அதன் காரணமாக, தேர்தல் நேரத்தில், இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

'ரஜினி வாய்ஸ்': 

 

நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவாக எழுந்துள்ள அலை குறித்தும், அதனடிப்படையில் வெளியான கருத்துக் கணிப்புகளை பார்த்த பிறகே, பல கட்சிகள் தி.மு.க., - அ.தி.மு.க.,வை வேண்டாம் என, கூறிவிட்டு, பா.ஜ., வுடன் அணி சேர்ந்தன.அந்த நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, இன்றைய ரஜினி சந்திப்பு அமையக் கூடும் என, தெரிகிறது. ரஜினி, அரசியலில் நேரடி தலையீடு இல்லாதவர் என்றாலும், தேர்தல் நேரத்தில் அவர் ஆதரவு தெரிவித்து, அறிக்கை வெளியிடுவது உண்டு. 'ரஜினி வாய்ஸ்' என்ற பெயரில், அது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றதுடன், பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமும் உண்டு.ஒரு தேர்தலில், அ.தி.மு.க., தோல்விக்கு காரணமாக இருந்தவர், அடுத்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக 'வாய்ஸ்' கொடுத்தார். கடந்த சில தேர்தல்களாக, அவர் அமைதி காத்து வருகிறார். தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அவருக்கு வேண்டப்பட்ட கட்சிகளாகி விட்டதால், இப்படி மவுனம் சாதிக்கத் துவங்கினார். இரு கட்சி தலைமையுடனும் அவர் அணுசரணையாக இருந்து வருகிறார்.இதனால், ரசிகர்கள் எவ்வளவோ உசுப்பி பார்த்தும், கடந்த சில தேர்தல்களில், அரசியல் ஆர்மின்றி, ஒதுங்கிக் கொண்டார். இந்த நிலையில், அவர், தைரியமாக ஒரு முடிவு எடுத்து, மோடியை ஆதரித்து குரல் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த தமிழக பா.ஜ., வட்டாரம், 'நடப்பது பிரதமருக்கான தேர்தல் என்பதால், அவர் நிச்சயம் மோடியை ஆதரித்து குரல் கொடுப்பார்' என, அடித்து சொல்கிறது.
 

http://www.dinamalar.com/news_detail.asp?id=953914

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.