Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய வரைபடம் வெளியிட்டு சீன அரசு விஷமத்தனம்: இந்திய பகுதிக்குள் அத்துமீறிய ராணுவத்தினர்

Featured Replies

Tamil_News_large_1009524.jpg

 

gallerye_012503645_1009524.jpg

 

புதுடில்லி : துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சீனப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசமும், ஜம்மு - காஷ்மீரின் பெரும்பகுதி யும், தங்களுக்கே சொந்தமானது என, தெரிவிக்கும் வரைபடம் ஒன்றை, சீன அரசு வெளியிட்டு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது.அத்துடன், ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவத்தினர், சமீபத்தில், அத்துமீறி நுழைந்ததும் தெரிய வந்துள்ளது.

மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு செயலர் சுஜாதா சிங் ஆகியோருடன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சீனப் பயணம் மேற்கொண்டுள்ளார். சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும், பஞ்சசீல ஒப்பந்தத்தின், 60ம் ஆண்டு விழாவில் பங்கேற்கும் அவர், சீன பிரதமர் லீ கெகியாங், அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரையும் சந்தித்துப் பேசுகிறார்.துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரிக்கு, சீன அரசு நிர்வாகத்தினர் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள அதே நேரத்தில், அந்நாட்டு அரசு, விஷமத்தனமான வரைபடம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.சீன அரசின் பத்திரிகையான, 'பீப்பிள்ஸ் டெய்லி'யில் வெளியிடப்பட்டுள்ள அந்த வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலமும், ஜம்மு - காஷ்மீரின் பெரும் பகுதியும், சீனாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது.

'இதுதான் சீன நாட்டின் முழுமையான வரைபடம் என்றும், நாட்டு மக்கள் இதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்' என்றும், அவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கவே, புதிய வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அந்தப் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை, பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது; அது, இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த சூழ்நிலையில், அருணாச்சல பிரதேசமும், ஜம்மு - காஷ்மீரின் பெரும் பகுதியும், தங்கள் நாட்டுக்கு சொந்தமானது போல, விஷமத்தனமான வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.
அத்துடன், தென்சீன கடல் பகுதிகளில் பெரும்பாலானவற்றையும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக தெரிவித்துள்ளது. மேலும், வியட்னாம், பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் மலேசியா நாடுகளுக்குச் சொந்தமான பல தீவுகளும், தங்களுடையதே என, குறிப்பிட்டு உள்ளது. சீனாவின் இந்தச் செயலுக்கு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில், கடந்த வாரம், சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததும், அங்குள்ள ஏரி முழுவதும் தங்களுக்கே சொந்தமானது என, உரிமை கொண்டாடியதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில், பான்காங் என்ற ஏரி உள்ளது. இந்த உப்புநீர் ஏரியின், 60 சதவீத பகுதி, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ளது. மீதமுள்ள பகுதி, இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்தியா - சீனா இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு, இந்த ஏரி வழியாகத் தான் செல்கிறது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி பகுதிக்குள், கடந்த, 24ம் தேதி, 5.5 கி.மீ., தூரத்திற்கு, சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் அத்துமீறி படகுகளில் வந்துள்ளனர். அப்போது, ஏரி முழுவதும், சீனாவுக்கே சொந்தம் என்றும், உரிமை கொண்டாடி உள்ளனர்.நான்கு அதிவேக படகுகளில் வந்த அவர்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இந்திய கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சுற்றித் திரிந்துள்ளனர். ஆனாலும், இந்தியப் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி உள்ளனர்.கடந்த, 1962ம் ஆண்டில், இந்தியா - சீனா இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போர் நிகழ, பான்காங் ஏரியே காரணம். இந்தப் பகுதியில், சீனப் படையினர் அடிக்கடி அத்துமீறி நுழைவது நடந்து வருகிறது.இவ்வாறு, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

பான்காங் ஏரி விவரம்

 


*ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பான்காங் ஏரி.
*கடல் மட்டத்தில் இருந்து, 4,350 மீட்டர் உயரத்தில் உள்ளது. 134 கி.மீ., நீளமும், 5 கி.மீ., அகலமும், 328 அடி ஆழமும் உடையது.
*குளிர்காலத்தில் முற்றிலும் உறைந்து விடும், இந்த ஏரியால், இந்த ஆண்டு மட்டும், 12 முறையும், கடந்த ஆண்டு, 18 முறையும், இந்திய - சீன ராணுவத்தினர் மோதிக்கொள்ளும் நிலைமை உருவாகி உள்ளது.
* தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிப் பகுதியில், சீன ராணுவத்தினர் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகின்றனர்.
*சீன அரசு புதிதாக வெளியிட்டுள்ள வரைபடத்தில், திபெத்தின் தென்பகுதியாக, அருணாச்சல பிரதேசம் காட்டப்பட்டுள்ளது.
* அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை ஏற்கனவே சொந்தம் கொண்டாடி வரும் சீன அரசு, அம்மாநில மக்களுக்கு சிறப்பு விசாக்களையும் வழங்கி வருகிறது.
 

'வரைபடத்தால் மாற்ற முடியாது':

 

'சீனா வெளியிட்டுள்ள வரைபடத்தால், உண்மை நிலையை மாற்றி விட முடியாது. அருணாச்சல பிரதேச மாநிலம், எப்போதும், இந்தியாவின் ஒரு பகுதியே' என, வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.இது தொடர்பாக, அவர் தெரிவித்ததாவது:அருணாச்சல பிரதேச மாநிலம், இந்தியாவின் ஒரு பகுதி; இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாத பகுதி என, சீன நிர்வாகத்தினருக்கு, பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனப் பயணம் மேற்கொண்டுள்ள, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையிலான குழுவினரும், வரைபடப் பிரச்னை குறித்து, அந்நாட்டுத் தலைவர்களுடன் பேசுவர். இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது, இரு தரப்பு பிரச்னைகள் குறித்து பேசுவது வழக்கமானதே.லடாக் பகுதியில் சீனப் படையினர் ஊடுருவியது தொடர்பாக, நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. எல்லையில் உள்ள நம் ராணுவத்தினர், நம் நிலத்தைப் பாதுகாக்கும் அளவுக்கு வலிமையானவர்கள் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும்.இவ்வாறு, வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் கூறினார்.
 

அமைதியை சீர்குலைக்கிறது

 


எல்லைப் பிரச்னை காரணமாகவே, இந்தியா - சீனா இடையே, 1962ம் ஆண்டு, சிறிய அளவில் போர் நடைபெற்றது. அதன் பின், 1993 மற்றும் 1996ம் ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, இரு நாடுகளும், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை மதித்து நடப்பது என, முடிவானது.ஆனாலும், இந்த உடன்பாட்டை சீனா மதிப்பதாக இல்லை. அடிக்கடி, அருணாச்சல பிரதேச பகுதிக்குள், சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து, இந்திய நிர்வாகத்தினருக்கு ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.இப்போது, புதிய வரைபடத்தை வெளியிட்டு, இந்தியாவுக்கு ஆத்திரமூட்டி உள்ளது மட்டுமின்றி, வியட்னாம், பிலிப்பைன்ஸ் உட்பட, மேலும் சில நாடுகளையும் வம்புக்கு இழுந்துள்ளது. சீன அரசின் இந்தச் செயல், ஆசியாவின் அமைதியை சீர்குலைக்கும் செயல் என, நிபுணர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை இருக்கலாம். எனினும், இருவரும் மற்றவரின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது அவசியம். ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் பறிமாறிக் கொண்டு, பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண வேண்டும்.
அமீது அன்சாரி,துணை ஜனாதிபதி

''சீனாவின் புதிய வரைபடத்திற்கு, எங்கள் மாநில அரசு கடும் கண்டனமும், ஆட்சேபமும் தெரிவிக்கிறது. இந்தப் பிரச்னை குறித்து, சீன அரசுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; பிரச்னைக்கு தீர்வு காண முற்பட வேண்டும்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1009524

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.