Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமடி பீஸ் ஆன தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்!

Featured Replies

thanjai%20uni.jpg

 

1980இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டில் எம்.ஜி.ஆர். அவர்களால் அறிவிக்கப்பட்டு 1981ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி அண்ணா பிறந்த நாளில் தஞ்சையில் ஆரம்பிக்கப்பட்டது தமிழ் பல்கலைக்கழகம். இதற்கு தமிழக அரசால் 1000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதன்நோக்கம் தமிழ்மொழியின் வளர்ச்சி, பண்பாடுகளை பாதுகாத்து மக்களிடம் கொண்டு செல்வது, பிற மொழிகளில் சிறந்த நூல்களை தமிழில் கொண்டு வருவது, முக்கியமானது, அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்வது என்பதற்காக உலகம் முழுவதும் தமிழ் மக்களின் சார்பாக மொழிக்கென்று உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்தான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.
 
கலைப்புலம், மொழிப்புலம், வளர் தமிழ் புலம், சுவடிப்புலம், அறிவியல் தமிழ்புலம் இந்த ஐந்து புலங்களும் ஐந்து கட்டடங்களில் இயங்க முடிவெடுக்கப்பட்டது. ஒவ்வொரு புலத்தின் கீழும் பல துறைகள் உள்ளன. 'த','மி','ழ்','நா','டு' என்ற ஒவ்வொரு எழுத்தின் வடிவத்தில் ஒவ்வொரு கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. நூலகத்தை மையமாக வைத்து 360 டிகிரியில் ஐந்து கட்டடங்கள் எனவும், ஒவ்வொரு 75 டிகிரிக்கும் ஒரு எழுத்து வடிவில் ஐந்து கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. 1985ஆம் ஆண்டு 'ழ்' வடிவ கட்டடம் கட்டப்பட்டது. 2014 வரை மற்ற நான்கு 'த', 'மி', 'நா','டு' வடிவ கட்டடங்கள் கட்டப்படவில்லை.
 
கட்டப்படாத கட்டடங்கள்
 
தற்போது தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் இரு கட்டடங்கள் 'த', 'நா' வடிவில் கட்டப்படும் என அறிவித்தார். 33 வருடங்கள் கழித்து புதிய கட்டடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'மி', 'டு' என்ற இரு கட்டடங்களும் கட்ட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியாது. தமிழ் பல்கலைக்கழகத்தில் ஐந்து புலங்களில் 26 துறைகள் உள்ளன. கலைத்துறையில் இசை, நாடகம், சிற்பம், மொழித்துறையில் இலக்கியம், தத்துவம், மொழியியல், அறிவியல் துறையில் சித்த மருத்துவம், கணிப்பொறி, சுற்றுச்சூழல் துறை, சிற்பக்கலை, கட்டடக்கலை, இசைக்கலை, நாடகக் கலை, சுவடித் துறையில் அரிய சுவடித்துறை, ஓலைச்சுவடித்துறை, தொல்லியல் துறை, கல்வெட்டியல் துறை, நீர் அகழ்வுத் துறை என 26 துறைகள் செயல்பட வேண்டும். அனைத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது துறை சார்ந்த ஆய்வுகள் இல்லை. பல துறைகளுக்கு பேராசிரியர்கள் இல்லை என்கிற நிலை உள்ளது.
 
'காமெடி பீஸ்'
 
கடுமையான நிதிப் பற்றாக்குறையில் உள்ள பல்கலைக்கழகம் நிதியைப் பெருக்க மேற்கொண்டதுதான் தொலை தூரக்கல்வி. 1990இல் எம்.பில்., பி.எச்.டி. துவக்கப்பட்டது. பின்பு 1991இல் எம்.ஏ., எம்.எஸ்.சி படிப்புகள் துவக்கப்பட்டது. 2001இல் சோதிடம் பட்டயப் படிப்பு துவக்கப்பட்டது. 2001இல் சோதிடப் பிரிவில் 53 மாணவர்கள் சேர்ந்தனர். 2014இல் இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆய்வுகள் நடத்த வேண்டிய தமிழ் பல்கலைக்கழகத்தில் சோதிட பாடப்பிரிவு துவக்கப்பட்டது மிகப்பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழ் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டதன் நோக்கம் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வுகள் நடத்துவது, உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களை அழைத்து பணியில் அமர்த்தி ஆய்வுகளை மேற்கொள்வது, அனைத்து மொழிகளின் சிறப்புகளையும் தமிழ்மொழியில் கொண்டு வருவது, புலம் பெயர்ந்த தமிழ் குழந்தைகள் தமிழ் கற்க ஒன்-லைனில் பயிற்சி கொடுப்பது, மிகச் சிறந்த தமிழ் அகராதி தயாரித்து அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்வது, திருக்குறள், பாரதியார் கவிதைகளை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பது, அறிவியல் களஞ்சியம் வாழ்வியல் களஞ்சியம், பேரகராதி உருவாக்குவது என்கிற தமிழ் பல்கலைக்கழகத்தின் நோக்கம் எதுவும் தற்போது நிறைவேறாத நிலையில் உலகத் தமிழர்களின் அடையாளமாக மாறியிருக்க வேண்டிய நிலையில் தற்போது நடிகர் வடிவேலுவைப் போல காமெடி பீஸ் ஆகிவிட்டது.
 
நிலத்தை பிடுங்கிக் கொண்ட அரசு
 
1000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்போது பாதியாகக் குறைந்துள்ளது. 26 துறைகளில் நாடகத் துறை உட்பட பல துறைகளுக்கு துறைத்தலைவர்களே இல்லை. வெறும் 8 பேராசிரியர்கள் தான் உள்ளனர். துறை சார்ந்த வல்லுநர்கள் இல்லை. உடனடியாக உயர்கல்வித்துறையின் கீழ் தமிழ் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட வேண்டும்.த-மி-ழ்-நா-டு இந்த கட்டடங்கள் உடனடியாக முழுமையாக கட்டப்பட வேண்டும். முழுமையான ஆய்வு மையமாக செயல்பட வைக்க வேண்டும். புதிய துறைகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழக அரசு ஒதுக்கியுள்ள 15 கோடி என்பது யானை பசிக்கு சோளப்பொரியாகும். பல்கலைக்கழகம் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக, அந்த குறையை போக்க தொலைதூரக் கல்வியை நடத்துகிறது. இறுதியாக மூட நம்பிக்கையை வளர்க்கும் சோதிடப் பாடம் நடத்தப்படும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக உயர் கமிட்டி அமைத்து ஆய்வு செய்து தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். தேவையற்ற சோதிடம் போன்ற தொலைதூரக் கல்வியை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழ் பல்கலைக்கழகத்தை பாதுகாக்க, வளர்த்தெடுக்க உள்ளூர் தமிழர்கள் முதல், உலகத் தமிழர்கள் வரை குரல் கொடுக்க வேண்டும்.
 
 
 Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.