Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

வார்த்தை தவறிவிட்டாய்

கண்ணம்மா மார்பு துடிக்குதடி

காற்றில் கலந்து விட்டாய்

கண்ணம்மா கண்கள் கலங்குதடி

நீ போன பாதை எது என்று சொல்லு

நானும் உன் கூட வர

படம்: சேது.

பாடியவர்: இளையராஜா.

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு ஆ..

வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்

இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும்

இசையில் பயனே இறைவன் தானே

இசையே இசையே இசை மழையே

நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே

இசையே இசையே இசை மழையே

நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே

அன்னை நீ பாலூட்டுவாய்

உன்னை நான் தாலாட்டுவேன்

சந்தம் தேடி வா வா வா

சொந்தம் சொல்லி வா

படம்: காஷ்மீர்.

பாடியவர்: பாலா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார்

என் உள்ளமென்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்

யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம்

நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து வந்தோம்

ஒன்றையே நினைத்து வந்தோம் ஒன்றாகக் கலந்து வந்தோம்

காதலித்தல் பாவமென்றால் கண்களும் பாவமன்றோ?

கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ?

பெண்மையே பாவமென்றால் மன்னவனின் தாய் யாரோ?

படம் வாழ்க்கைப்படகு

நினைத்து நினைத்து பார்த்தால்

நெருங்கி அருகில் வருவேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன்

உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்து படித்து முடிக்கு முன்னே

எரியும் கடிதம் உனக்கு தந்தேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன்

உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

நமது கதையை காலமும் சொல்லும்

உதிர்ந்து போன மலரின் வாசமோ

தூது பேசும் கொலுசின் ஒலியை

அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்

உடைந்து போன வளையலின் வண்ணமோ

உள்ளங் கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் உந்தன் கையில்

தோழில் சாய்ந்து கதைகள் பேச

நமது விதியில் இல்லை

முதல் கனவு போதுமே காதலா

படம்: 7G Rainbow Colony.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும்...ஏன்

கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை

கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி

அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன

சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்

பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன

விதையொன்று உயிர் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும்

காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும்

ஒரு விதை உயிர் கொண்டது ஆனால் இரு நெஞ்சில் வேர் கொண்டது

காதல் சொல்வது உதடுகள் அல்ல

கண்கள் தான் தலைவா

கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல

கவிதைகள் தலைவா

கவிதை என்பது புத்தகமல்ல

பெண்கள் தான் சகியே

பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல

நீ மட்டும் சகியே

அடடடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா

எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடுடா

படம்: பத்ரி

பாடியவர்: ஸ்ரீனிவாஸ், சுனித்தா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா

நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு

தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

தினமும் சிரிச்சு மயக்கி

என் மனச கெடுத்த கிறுக்கி

கனவை தடுத்து நிறுத்தி

அவ கனிந்து வெடித்த பருத்தி

ஏறெடுத்து பார்த்தா

பார்வை வலை போட்டா

மாட்டிக்கிட்டேன் நானும்

படம்: பொங்கி வரும் காவேரி.

பாடியவர்: அருண் மொழி, சித்திரா.

என் மேல் விழுந்த மழை துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை எழுப்பிய பூங்காற்றே

இதனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை மயக்கிய மெல்லிசையே

இதனை நாளாய் எங்கிருந்தாய்??

உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்

மெல்லிசையே என் இதயத்தில் மெல்லிசையே

என் உறவுக்கு இன்னிசையே

என் உயிர் தொடும் நல்லிசையே

கண்ணை கொஞ்சம் திறந்தேன்

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடிக்கொண்டேன்

சின்னஞ் சிறு கண்களில்

உன்னை சிறை எடுத்தேன்

மெல்லிசையே என் இதயத்தில் மெல்லிசையே

என் உறவுக்கு இன்னிசையே

என் உயிர் தொடும் நல்லிசையே

எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்

உறங்காமல் தவித்திருந்தேன்

நீ ஒரு பாதி என்றும் நான் ஒரு பாதி

என்னவனே நிலம் கடல் ஆனாலும்

அழியாது இந்த பந்தம்

படம்: Mr - Romio.

பாடியவர்: உன்னிமேனன், சொர்ணலதா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடு வானம் ரொம்ப தூரம்

தொட்டுப் பார்க்க ஆசை உனக்கு

கையோடு சேருமோ?

கையோடு சேருமோ?

இல்லை, கனவாக மாறுமோ?

தொடு வானம் ரொம்ப தூரம்

தொட்டுப் பார்க்க ஆசை உனக்கு

சுடுகின்ற சோலையில் நெடுந்தூரம் நான் நடந்தேன்

சுகமாகும் மேகமே மழை நீரை நீ கொடுத்தாய்

தண்ணீர் எந்தன் கையில் வந்தும்

தாகம் தீர யோகம் இல்லை

தண்ணீர் தாகமோ, இல்லை கண்ணீர் சாபமோ?

திரைப் படம்: நியாயத் தராசு

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?

விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாருதோ?

ஒரு வெட்க்கம் யெண்ணை இங்கு தீன்டியதே

அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே

போகும் பாதை தான் தெரிகிறதே

மனம் ஏங்கும் மயங்கிடும் பொழுது

வார்த்தைய இது மௌனமா?

வானவில் வரும் சாயமா

வண்ணம மனம் மிண்ணுமா தேடி தெடெஇ துளைந்திடும் பொழுது

அவள் வருவாளா அவள் வருவாளா

அவள் வருவாளா அவள் வருவாளா

என் உடைந்து போன நெஞ்சை

ஒட்ட வைக்க அவள் வருவாளா

என் பள்ளமான உள்ளம்

வெள்ளமாக அவள் வருவாளா

கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள்

போக அவள் வருவாளா

படம்: நேருக்கு நேர்.

பாடியவர்: ஹரிகரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி

என் கண் பார்த்தது என் கை சேருமோ

கை சேராமலே கண்ணீர் சேருமோ

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

வெண்ணிலாவின் தேரிலேறி காதல்

தெய்வம் நேரில் வந்தாளே

மானமுள்ள ஊமை போல கானம்

கேட்க கூசி நின்றேனே

நிறம் கண்டு முகம் கண்டு

நேசம் கொண்டேனே

அவள் நிழல் கண்டு நிழல் கண்டே

நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின் தேரிலேறி காதல்

தெய்வம் நேரில் வந்தாளே

படம்: டூயட்.

பாடியவர்: ஜேசுதாஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்

கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ சொல் சொல்

தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்

சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்

வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்

தேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே

நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே

முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

கண்டுபிடிக்க முடியவில்லை யாராவது முயற்சி செய்யுங்கோ. :)

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லவோ சுகமான கதை சொல்லவோ

சொல்லும் வேளையில் இன்ப போதையில்

சொர்க்கத்தின் பக்கத்தில் செல்லுங்கள்

சின்ன ராஜாவை ராஜாத்தி கொஞ்சக் கொஞ்ச

அந்த ராஜாவும் லேசாக அஞ்ச அஞ்ச

அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல

முல்லைப் பூவை அள்ளி மெல்லத் தூவி

அவர் உள்ளம் பாடும் நல்ல பாடல்

கள்ளப் பார்வை அவள் மெல்லப் பார்க்க

அந்தக் கண்கள் பேசும் சிறு ஊடல்

அவன் கையோடு கையாகப் பின்னப் பின்ன

அவள் கன்னங்கள் பொன்னாக மின்ன மின்ன

அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல

படம் : சிவந்த மண்

சொல்லாயோ சோலைக்கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்

உயிர் ஒன்று ஊசல் ஆடுதே

சொல்லாயோ சோலைக்கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்

உயிர் ஒன்று ஊசல் ஆடுதே

இந்த ஊமை நாடகம் முடிந்ததே

குயில் பாடி சொல்லுதே நம் காதல் வாழ்கவே

சொல்லாது சொலைக்கிளி சொல்லி கடந்த காதல் இது கண்ணோட்டம் காதல் பேசுதே

பச்சைக்கிளி இலைகளுக்குள்ளே பச்சைக்கிளி ஒளிதல் போல இச்சை காதல் நானும் மறைத்தேன்

பசைக்கிளி முட்டை போல வெட்கம் உன்னை காட்டி கொடுக்க காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்

பூவில்லாமல் சோலை இல்லை பொய் இல்லாமல் காதல் இல்லை பொய்யை சொல்லி காதல் வளர்த்தேன்

பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு மெய்யின் கையில் ஒற்றை சாவி எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்

சேராத காதலுக்கெல்லாம் சேர்த்து நாம் காதல் செய்வோம் காதல் கொண்டு வானை அளப்போம்

புதிய கம்பன் தேடி பிடித்து லவாயனம் எழுதிட செய்வோம் நிலவில் கூடி கவிதை படிப்போம்

கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொல்வோம் மிஞ்சும் மிஞ்சும் மோதிக்கொல்வோம் சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்

பூவும் பூவும் மோதிக்கொண்டால் தேனை தானே சிந்தி சிதரும் கையில் அள்ளி காதல் குடிப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்

அழகு மலர் அன்னை என ஆனாள்.. ஆ...

ஆதரித்தாள் தென்மதுரை மீனாள்

தேடுதடி என் விழிகள் செல்லக்கிளி ஒன்று

சிந்தையிலே நான் வளர்த்த கன்று

உன் வயிற்றில் பூத்ததடி இன்று

மந்திரத்தில் மயங்குகிறாள் சந்தனத்தைப் பூசு

மல்லிகைப்பூ விசிறி கொண்டு வீசு - அவள்

மணவாளன் கதைகளையே பேசு

வெற்றி மகள் கையிரண்டைப் பற்றிவிட்டான் திருடன்

நெற்றியிலும் திலகமிட்டான் நீராடும் கண்ணன் - அவள்

நெஞ்சினிலும் திலகமிட்டான் காதலிலே மன்னன்

படம் : அவள் ஒரு தொடர்கதை

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை

நான் காத்திருந்தேன்

சின்ன சின்ன தயக்கம் சின்ன மயக்கம்

அதை ஏற்று நின்றேன்

கட்டுக்கடங்கா எண்ண அலைகள்

இறக்கை விரிக்கும் இரண்டு விழிகள்

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை

நான் காத்திருந்தேன்

படம்: தீபாவளி

பாடியவர்: அனுராதா

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழியலை மேலே செம்மீன் போலே

விளையாடும் செல்வமே வா..

குழி விழும் கன்னங்கள் மலர் போலே - அதில்

குவிந்திடும் இதழ் காலைப் பனி போலே

இளமையின் துணையாலே

இனிமையின் உறவாலே

மண் போல நான்.. விண் போல நீ

மழை போலவே நம் காதலே

பகல் வேண்டுமா இருள் வேண்டுமா

அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா

படம் : மருத நாட்டு வீரன்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு படைக்கும்? பெண்மையின் சுகமன்றி

தந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தம்

சிந்திவரும் குங்குமமுதம் தங்கிடும் குமுதம்

கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்!

கன்னித் துணை இழந்தால் முழுதும் கசக்கும்!

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்

அதிசய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன்னி ராசி என் ராசி..

காளை ராசி என் ராசி..

ஆ... ரிஷபக் காளை ராசி என் ராசி

பொருத்தம்தானா நீ யோசி

அது பொருந்தாவிட்டால் சன்யாசி..

ஒரு பக்க காதல் இல்லை இது - என்

உள்ளம் அறிந்த உண்மை இது

உள்ளம் எத்தனை சொன்னாலும் - உன்

உண்மை அறிண்த பெண்மை இது

பெண்மை இது....

படம் : குமார விஜயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.