Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !

Featured Replies

னநாயகத்தின் நான்காவது தூண், சமயத்தில் நான்கு தூண் பாரத்தையும் சுமப்பதாக காட்டிக் கொள்ளும். அவ்வகையில் ஊடகங்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் போல நேரடி நடவடிக்கைகள் எடுத்து தமது கீர்த்தியை பறைசாற்றுவார்கள். இந்த நடவடிக்கைள் பெரும்பாலும் சாலை பள்ளம், விளக்கு பழுது, தேங்கிய குப்பை போன்ற ஆபத்தில்லாத விசயங்களில் இருக்கும். கொஞ்சம் விறுவிறுப்பு வேண்டுமென்றால் பாலியல் பிரச்சினைகளுக்காகவும் சாதாரண நபர்கள், சிறு குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுத்து ஆக்சன் ஹீரோவாக காட்டிக் கொள்வார்கள்.

dried-fish.jpgஇதற்கெல்லாம் அதிகார மற்றும் போலீஸ் வர்க்கத்திடம் சில தொடர்புகள் இருந்தால் போதும். செய்திக்கு செய்தி, நடவடிக்கைக்கு நடவடிக்கை என வாசகர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால் இந்த ஊடக புலிகள் எவையும் மக்கள் பிரச்சினைகளுக்கு காரணமான முதலாளிகள் அல்லது பெரும் நிறுவனங்களை மட்டும் தவிர்த்து விடுவார்கள். புரவலர்களின் தருமத்தை நாடி பிடித்து பார்ப்பது ஊடக அறமல்ல.

பொதுவாக பெருமாளுக்கு காக்கும் தொழில்தான் பார்ப்பனிய இந்து மதத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவே மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்றால் வேர்க்க விறுவிறுக்க கனஜோராக தொழில் நடக்கும்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விதிகளை மீறி கருவாடு விற்பனை நடப்பதாக 17.08.2014 தேதியிட்ட “தி இந்து” (தமிழ்) நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த விதிமுறை மீறலுக்கு, “கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்” போல லா பாயிண்டையும் எடுத்து போட்டிருக்கிறார், உலகளந்த பெருமாள்.

“தமிழ்நாடு குறிப்பிட்ட பொருள்களின் அங்காடி (அமைவிடம் முறைப்படுத்துதல்) சட்டம் 1996-ன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளை மட்டுமே விற்க வேண்டும்”. இதை மீறி கருவாடு விற்றதால் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று மாம்பலம் மாமா-மாமிகள் சார்பாக பொங்கியிருந்தார், லார்டு லபக்குதாஸ்.

பெருமாளுக்கு கோபம் வந்து விசுவரூபம் எடுத்தால் லோகம் தாங்காது என்று பயந்த, கோயம்பேடு அங்காடி வளாக நிர்வாகக் குழு முதன்மை அலுவலர் பாஸ்கரன் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலக சகபாடிகளுக்கு உத்திரவு போட்டிருக்கிறார். உதவிப் பொறியாளர் ராஜன் பாபு தலைமையிலான ஊழியர்கள் திங்களன்று (18.08.2014) சோதனை நடத்தி 18 கடைகளில் கருவாடு விற்றதாக கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விதியை மீறியதால் இந்த 18 கடைக்காரர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்புவார்களாம். தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படுமென்றும் அதிகாரிகள் கூறியிருப்பதாக உப்பிலியப்பன் தனது வெற்றிச் செய்தியில் வெளியிட்டிருக்கிறார்.

இனி கோயம்பேடு வளாகத்தில் காய்கறி வாங்க வரும் சைவ உணவுப் பழக்கம் கொண்ட அவாள்கள், வெற்றிக்களிப்புடன் பூணூலை இழுத்து விட்டுக் கொண்டே சுத்தபத்தமான சூழலில், நறுமணத்துடன் காய்களை வாங்கி இன்புறலாம். கூடவே காலை நரசுஸ் காஃபி அருந்திக் கொண்டே தி இந்துவை படிக்கும் போது “நம்மவா என்னமா லோகத்துக்கு ஷேமம் செஞ்சுண்டுருக்கா” என்று புளகாங்கிதமும் அடையலாம்.

seela-karuvadu.jpg

சீலா கருவாடு

தமிழகத்தில் உள்ள நூற்றுக்கு நூறு பலசரக்கு கடைகளிலும் கதவருகே சரம் சரமாக தொங்க விடப்பட்டிருக்கும் கருவாடு பாக்கெட்டுகளை பார்க்கலாம். அங்கேயெல்லாம் எந்த ஜென்மமும் மூக்கை சுளித்ததில்லை. சுளித்திருந்தால் அண்ணாச்சிகளே வெளுத்திருப்பார்கள். இவ்வளவிற்கும் இந்த கடைகளில் இருக்கும் கருவாடுகளெல்லாம் விலை அதிகமில்லாத சிறு வகை கருவாடுகள்தான். இவற்றில் உப்பும், ஈக்கல் போன்ற எலும்பையும் தவிர வேறு எதுவும் இருக்காது. எனினும் உழைக்கும் மக்கள் மலிவு, மணம் கருதி சோற்றுக்கு தொடுகாயாக இதை சமைத்து உண்பார்கள். அறுசுவை விருந்துக்கோ குறைந்த பட்சம் காய்கறிகள் போட்டு செய்யும் சாம்பார் கூட பல குடும்பங்களில் வழியில்லை.

பழையதோ, கொஞ்சம் மோர் விட்டுக் கொண்டு கருவாட்டை பொறித்தோ வதக்கியோ சாப்பிடும் மக்கள் மீது இந்த பார்ப்பன வெறியர்களுக்கு என்ன ஒரு வன்மம்?

வஞ்சிரம், இறால் போன்ற விலை அதிகம் உள்ள கருவாடுகளெல்லாம் சற்று வசதிபடைத்தோரே வாங்குவார்கள். நீல்கிரிஸ், ரிலையன்ஸ் பிரஃஷ், ஃமோர் போன்ற தரகு முதலாளிகளின் தொடர் கடைகளில் கூட இறால், வஞ்சிரம் மீன்களின் ஊறுகாய் பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது விதிமுறை மீறல் என்று ஆழ்வார்களின் ஆண்டவன் புகார் கடிதம் எழுதி அம்பானி மீது நடவடிக்கை எடுப்பாரா?

ஏற்கனவே “தி இந்து” அலுவலகத்தில் யாரும் அசைவ உணவு எடுத்துக் கொண்டு வரக் கூடாது என்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இணையத்தில் பிரபலம். மகா விஷ்ணுவிடம் குப்பை கொட்டும் ஒரே குற்றத்திற்காக எது சாப்பிட வேண்டும், எது கூடாது என்பதையெல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்றால் இது பத்திரிகை அலுவலகமா இல்லை சங்கர மடமா?

ஜெயா, மோடிக்கு அஞ்சி, அஞ்சி பத்திரிகை நடத்தும் தி இந்துக் குழுமம், அதற்காக தனது ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் பலரை வெளியேற்றியிருக்கிறது. நல்லி எலும்போ, இல்லை மாட்டுக்கறி வறுவலோ சாப்பிடாத ஜென்மங்கள் மோடிக்கும், லேடிக்கும் இடுப்பெலும்பு முறிய சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில் என்ன ஆச்சரியம்?

karuvadu-varuval.jpg

கருவாடு வறுவல்

இந்த கருவாடு என்கவுண்டர் செய்தி வந்த அதே பக்கத்தில் “மண்ணடியில் தண்ணீர் விற்ற கடைகளுக்கு நோட்டீஸ் – ‘தி இந்து’ செய்தி எதிரொலி: ஒரே நாளில் அதிரடி” என்று மற்றொரு வெற்றி செய்தி வந்திருக்கிறது. சென்னை பாரிமுனை, மண்ணடியில் உள்ள பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் தொட்டிகளை வைத்து, தனியார் லாரிகள் மூலம் நீர் நிரப்பி, குடம் பத்து ரூபாய் என மக்களுக்கு விற்கிறார்களாம். இதை பரப்பிரம்மம் அம்பலப்படுத்திய பின் அதிகாரிகள் ஒரே நாளில் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து முடித்து விட்டார்கள்.

அரசு முறையாக நீர் கொடுக்க மறுப்பதினால்தானே இங்கே பெட்டிக்கடைகளிலேயே தண்ணீர் விற்கும் நிலை இருக்கிறது. நடுத்தர வர்க்கம் கேன் வாட்டரை 40, 50 ரூபாய்க்கு வாங்குவதெல்லாம் சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லை. முக்கியமாக இங்கே தண்ணீரே இல்லை. அந்த பெட்டிக்கடைக்காரர்கள் என்ன கஞ்சா விற்றார்களா, இல்லை தி இந்துவில் வரும் பங்கு சந்தை பக்கத்தில் மோசடி செய்யும் பெரும் நிறுவனங்களின் விளம்பரங்களை போட்டு நடுத்தர வர்க்க மக்களைத்தான் ஏமாற்றுகிறார்களா? இல்லை தண்ணீர் விற்பனையை எதிர்க்க வேண்டுமென்றால் பெப்சி, கோக்கை எதிர்த்து எழுதி ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து காட்டட்டுமே?

இவ்வளவு ரூல் பேசுகிறவர்கள் தமிழில் “தி இந்து” ஆரம்பித்த போது பாசிச ஜெயாவின் விஷன் 2020 எனும் இலவச இணைப்பை என்ன அறத்தில் கொண்டு வந்தார்கள்? இது பெயிட் நியூஸ் இல்லையா? அரசு விளம்பரங்கள் பெறுவதற்காக அதிமுக அரசுக்கு கூஜா தூக்கும் அடிமைத்தனம் இல்லையா? இதே போல சந்திரபாபு நாயுடு பதவியேற்பின் போதும் வெளியிட்டார்களே? உங்கள் அடிவருடித்தனத்தை கண்டிப்பதற்கு இங்கே மக்களிடம் அதிகாரம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் கருவாடு சாப்பிடும் எளிய மக்கள் மீது அடக்குமுறை செய்வீர்களா?

கோயம்பேடுக்கு வரும் பலசரக்கு கடை அண்ணாச்சிகள் மொத்தமாக காய்கள் வாங்குவது போல இந்த கருவாடு பாக்கெட்டுகளையும் வாங்கி மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். விற்பனைக்கு வழியில்லாத சிறிய மீன்களே இப்படி கருவாடாக தயாரிக்கப்பட்டு கடைகளுக்கு வருகின்றன. அந்த வகையில் மீனவர் மக்களுக்கு இது ஒரு சிறிய உதவியாக கிடைத்து வருகிறது. காரசாரமாக சாப்பிட ஆசையிருந்தும், மட்டனையோ, சிக்கனையோ அடிக்கடி வாங்க முடியாத மக்கள் அதிகம் விலையுள்ள மீன்களையும் வாங்குவது சாத்தியமல்ல.

இந்த இடத்தில்தான் அனைத்து தேவைகளையும் கருவாடு பூர்த்தி செய்கிறது. இதையும் கூட ஒழிக்க வேண்டுமென்றால் அவன் இந்த உலகிலேயே மிகப்பெரும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு சாட்சாத் தான்தான் அந்த பயங்கரவாதி என்று கம்பீரமாக தெரிவிக்கிறார்.

இன்றைய ‘தி இந்து’ நாளிதழில் எம்ஜிஆருக்கு கருவாடு விற்ற சைதாப்பேட்டை வணிகரைப் பற்றியெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவியின் விருப்பத்திற்குரிய தலைவரின் கருவாடுக்கு தனி கவனிப்பு. புரட்சி நடத்த போகும் உழைக்கும் மக்களின் கருவாட்டுக்கு மட்டும் கருவறுப்பா? நடுப்பக்கத்தில் சமஸ் என்பவர் தமிழக மீனவ கிராமங்களுக்கு சென்று உயிரற்ற முறையில் மலிவான என்சைக்ளோப்பீடியா பாணியில் மீன்கள் குறித்தும்,கடல் குறித்தும் எழுதுகிறார். ஆனால் உயிருள்ள மக்கள் சாப்பிடும் கருவாடு மீது இவர்களுக்கு அருவெறுப்பு! சமஸ் கட்டுரை முதன்முதலாக கடலோர மக்கள் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது என்று இந்து பத்திரிகையும் சொன்னது,அதையே பல கருவாடு சாப்பிடாத சைவ உணவுக்காரர்கள் பின்னூட்டங்களில் அங்கீகரித்தார்கள். இது நடிப்பு என்பதற்கு இந்துக் கருவாடு வெறுப்பே சாட்சி.

உழைக்கும் மக்கள், ஜனநாயக அமைப்புகள், மீனவர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் அனைவரும் “தி இந்து”வை கண்டிக்க வேண்டும். அரசிடமும் விற்பனைக்கு அனுமதிக்குமாறு போராட வேண்டும். இதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இணைய சுவரொட்டிகளை நண்பர்கள் பரவலாக பகிர்ந்து பரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். மகா விஷ்ணு தொடுத்திருக்கும் பயங்கரவாதப் போருக்கு எதிராக படை சேருமாறும் அழைக்கிறோம்.

http://www.vinavu.com/2014/08/19/the-hindu-shows-brahminical-arrogance-in-opposing-karuvadu/

கருவாடாற்றுப்படை!

 

cat-dried-fish.jpg

 

கோயம்பேடு கருவாடு

விற்பனைக்கு தடைபோடு!

என

கவுச்சி வெறுத்த பூனைகள்

கத்துகின்றன,

சந்திலிருந்தும்

‘தி இந்து’ விலிருந்தும்.

மச்ச அவதாரம் எடுத்த

மகா விஷ்ணுவின்

மறு அவதாரமல்லவோ

கருவாடு!

மிச்ச அவதாரமாக

பன்றி வரை

பகவான் அவதரிக்க

இனிய கருவாட்டின் மேல்

இந்துவுக்கென்ன நோக்காடு!

வேதகாலத்தில்

நீங்கள் தின்று தீர்த்த

உயிரினம் போக

எங்களுக்கு எஞ்சியிருந்தது

இந்தக் கருவாடு,

அதுக்குமாடா

உங்கள் இடையூறு!

காய், கனிச் சந்தையில்

கருவாடு விற்கலாமா? என

வக்கணை பேசும் அக்கிரகாரமே!

the_hindu_ban_on_meat.jpg

அலுவலகத்தில் யாருக்கும் அசைவமே கூடாதென அடுத்தவன் வயிற்றிலும் ‘நாமம்’ போடலாமா?

செய்திப் பத்திரிகை என்று

அரசு சலுகையை அள்ளிக் கொண்டு

விளம்பரத்திலும்

விலைக்கு செய்தி போட்டும்

நீ கடை நடத்தலாமா?

ஹோண்டா கார் விளம்பரத்துக்காக

பிள்ளையாரை டான்ஸ் ஆட விட்டு

நீ மட்டும்

‘ இந்துக்கள்’ மனதை

புண்படுத்தலாமா?

அனைத்துக்கும் மேலே

போதுமான அளவுக்கு

உன்னிடம்

புளிசோறு ‘ஸ்டாக்’ இருப்பதாலே

அலுவலகத்தில் யாருக்கும்

அசைவமே கூடாதென

அடுத்தவன் வயிற்றிலும்

‘நாமம்’ போடலாமா?

எதையுமே

அவாள் செய்தால் அனுபூதி

அடுத்தவன் செய்தால்

அதோ கதி!

அவர்கள் குலத்தையே அழித்தாலும்

வேள்வி,

நாம் கொஞ்சம் தின்றாலும் என்.வி.!

மற்றவர் ஆடினால்

சதிராட்டம், தாசியாட்டம்

அவர்கள் ஆடினால்

பரத நாட்டியம்!

அவர்கள் வயிற்றில் மலர்ந்தால்

கடல் புஷ்பம்,

நம் சட்டியில் மிதந்தால் மீன்!

bharatanatyam-1.jpg

மற்றவர் ஆடினால் சதிராட்டம், தாசியாட்டம் அவர்கள் ஆடினால் பரத நாட்டியம்!

சைவம் புழங்குமிடத்தில்

அசைவம் கூடாதெனில்

தமிழ் புழங்கும்

எம் தமிழ்நாட்டில்

சமஸ்கிருத புழக்கம் மட்டும்

மொழிக் கவிச்சியில்லையா?

‘தமிழால் இணைவோம்’ என்று

மொழியைக் காட்டி

காசைப் பறிப்பது,

‘கருவாட்டால்

பிரிவோம்’ என

சுத்தத்தைச் சொல்லி

இனத்தைப் பிரிப்பது,

இரண்டிலும்

இந்துவின் சங்கு, சக்கர லாவகம் பார்த்து

பெருமாளுக்கே கை நடுங்குது!

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின்

“அக்கார வடிசிலிலும்”

திருவரங்கரத்து நாச்சியாருக்கு

படைக்கப்பட்ட ரொட்டியிலும் மட்டுமல்ல

நாலாபுறத்திலும் காவிரிக்கரையின்

கருப்பஞ்சாறு புகையிலும்

கருவாட்டுக்குழம்பு மணத்திலும்

திளைத்துக் கிடந்தவன் திருவரங்கன்!

karuvattu-kuzhambu.jpg

காவிரிக்கரையின் கருப்பஞ்சாறு புகையிலும் கருவாட்டுக்குழம்பு மணத்திலும் திளைத்துக் கிடந்தவன் திருவரங்கன்!

குறிஞ்சி நிலக்கடவுள் முருகனுக்கு

காட்டுப் பன்றி படையல் போட்டது

திணைவாழ்க்கை,

பாண்டிக்கோயில் கறிசோறும் தின்று

அழகர்கோயில் துளசி தீர்த்தமும் குடித்து

கருவாட்டுக்குழம்பும், சுருட்டும்

கருப்பண்ணசாமிக்கு படைப்பது எம் வழக்கம்.

முறுக்கும், சீடையும் தின்றுவிட்டு

ஒரு வேலையும் இல்லாமல்

சும்மா உட்கார்ந்து

குடல் நாறுவது உன்சாமி,

முழு ஆட்டையும் தின்றுவிட்டு

மூலைக்கு ஒருவராய்

வேலைக்குப் போறவருடன்

வேட்டைக்குப் போவது எம்சாமி!

சிறுபாணாற்றுப் படையா

பெரும்பாணாற்றுப் படையா

இல்லை கருவாட்டுக் கடையா என

வியக்குமளவுக்கு

வெண்சோறும், எயினர் வீட்டு

கருவாட்டு புளிசாறும்

மணக்கும் காட்சிகள்

இலக்கிய சாட்சிகள்.

meat.jpg

சுத்த அசைவமாய் சத்தானது சங்க இலக்கியம்!

நண்டும், நத்தையும்

மீனும், கருவாடும்

உடும்பும், பன்றியும்,

கோழியும், மடையானும்

ஆடும், மாடும், உரித்துத் தின்று

சுத்த அசைவமாய்

சத்தானது சங்க இலக்கியம்!

ஆமை புழுக்கியும்

சாமை வதக்கியும்

ஆய்ந்து வளர்ந்தது அகநானூறு

நற்றிணை, நல் குறுந்தொகை

திணைக்களம் ஏற்ற தெரிவால்

உணவுப்புனிதம் ஒழித்தது

எங்கள் வரலாறு!

பொருநராற்றுப்படை சீரில்

நாங்கள்

பொரித்து எடுத்த இறைச்சியின்

ஓசையும் உள்ளது

அர்த்தசாஸ்திரத்திலேயே

இறைச்சிக்கேற்ற எண்ணெய் அளவு பற்றிய

பக்குவம் உள்ளது!

‘பாரத விலாஸ்’ பருப்பெல்லாம்

இங்கே வேகாது

வேதங்களின் அசைவ உணவை

அடுக்கினால்

பாரில்

முனியாண்டிவிலாசே பத்தாது!

fish-2.jpg

மீன்கள் துள்ளிடும் எம் பட்டினப்பாலை

அயிரை, ஆரல், இரால்

சுறா, விறால், வாளை

குரவை, கெண்டை என

மீன்கள் துள்ளிடும்

எம் பட்டினப்பாலை

தாழை முள்ளும்

வாளை முள்ளும்

தரித்தது எங்கள்

நெய்தல் சாலை.

”திருக்கண்ணபுரத்து செங்கண் மாலுக்கு

தன் காதலைச் சொன்னால்

இரு நிலத்தில் உன் பேடையோடு

இன்பம் எய்த

மீன் கவர்ந்து நான் தருவேன்” என

திருமங்கையாழ்வார் பாசுரத்திலும்

மீன் வாடை உண்டு!

moolasthanam.jpg

மூலஸ்தானத்தில் உங்கள் மூத்திர நெடிதாங்காமதானே பெருச்சாளி கூட கோயிலை விட்டே ஓடுது!

சைவம் சுத்தம்

அசைவம் அசுத்தமென்று

எவன்டா சொன்னது?

எங்கள் சாமிகளில் பெரும்பான்மை

கருவாடு தின்பது.

மூலஸ்தானத்தில்

உங்கள்

மூத்திர நெடிதாங்காமதானே

பெருச்சாளி கூட

கோயிலை விட்டே ஓடுது!

பெரும்பான்மை படி

இது இந்து நாடல்ல,

கருவாடு!

பார்ப்பான் சுத்தம்

சூத்திரன் அசுத்தம்!

சமஸ்கிருதம் சுத்தம்

தமிழ் அசுத்தம்!

பால் சுத்தம்

மாட்டுக்கறி அசுத்தம்!

பரம்பரை

அர்ச்சகர் சுத்தம்

இடஒதுக்கீடு அசுத்தம்!

தட்சணை சுத்தம்

தரும் தாழ்த்தப்பட்டவர் அசுத்தம்!

manu-dharmam.jpg

கட்டுக்கதைகளும் கட்டளைகளுமே பார்ப்பனிய மொத்தம்!

இப்படி – கட்டுக்கதைகளும்

கட்டளைகளுமே பார்ப்பனிய மொத்தம்!

அம்பிகளே

உங்களுக்கு கருவாடுதான் நாறுது

எங்களுக்கு

பார்ப்பன கலாச்சாரமே நாறுது!

‘மோருஞ்ஜா’ நக்கும் ஓசையில்

தயிர்கவுச்சி தாங்காமல்

பசுமாடு மூக்கைப் பொத்தும்,

பளபளக்கும்

உங்கள் ”லெதர்பேக்கு, செருப்பு

பர்சின் வெறிகொண்ட வேட்டையைப் பார்த்து

பிறந்த கன்றுக்குட்டியும்

பீதியில் கத்தும்

இனிய திருக்குறள்

பொதுவில் இருக்க

வலிய பகவத்கீதையை

வாரிசுகளின் வாயில் திணிக்கும்

சாதிய நாற்றம்

சகிக்கக் கூடியதா?

முகநூலில் உலகமே

முகம் காட்டும் காலத்திலும்

பூணுலில் அகம் காட்டும்

பொல்லாத சாதிவெறியை

கருவாடும் தாங்குமோ?

karuvadu-varieties.jpg

நெஞ்சனைய வஞ்சிரம், நினைத்ததும் நா சுரக்கும் காரப்பொடி, ஓட்டாம்பாறை, சூரையும், மாசியும் யாரையும் இழுக்கும்.!

ஜனநாயக சுத்தம்

சற்றாவது உண்டா?

”தமிழ் நீசபாஷை

தமிழன் சூத்திரன்” என்று

தாளித்துக் கொட்டினாலும்

சங்கராச்சாரி படத்தை வைத்திருக்கும்

சர்சூத்திரன் இன்னும் உண்டு,

பார்ப்பன சர்வாதிகாரத்தை திருத்திய

பெரியார், அம்பேத்கர் படம்

ஒரு பார்ப்பனர்

வீட்டிலாவது உண்டா?

கோயம்பேட்டில்

கருவாடு விற்பதே

அபச்சாரமென்றால்

எங்கள் கோயில்களில்

சமஸ்கிருதம் விற்பது

அநீதியன்றோ!

கத்திரிக்காய் மட்டுமல்ல

நெத்திலியும்

எமக்கு சுத்தமாய்ச் சேரும்

இன்னும் எத்தனை வகை வேண்டும்

எங்கள் உழைப்பவர் தாழ்வாரம்

‘இந்துவே’ எட்டிப்பாரும்,

நெஞ்சனைய வஞ்சிரம்,

நினைத்ததும் நா சுரக்கும்

காரப்பொடி, ஓட்டாம்பாறை,

சூரையும், மாசியும்

யாரையும் இழுக்கும்.!

behave-yourself-hindu.jpg

கண்ணெரிச்சல் தாங்காத ‘இந்துவே’ கொஞ்சம் சங்கு சதையும் வயல் நத்தையும் தின்று பார் உன் மூலச்சூடும் அடங்கும்!

கானாங்கெழுத்தியும்,வவ்வாலும் வேண்டாம்

என்குமோ மனம்?

கெட்ட பார்ப்பனியம் பழகியதால்

சுட்ட கருவாடானது இனம்!

திவலைகள் உரசும்

மழைக்கால இரவில்

கவலை மீனில் உயிர்

கரையும், சிலிர்க்கும்!

சுறாவும், திருக்கையும்

எம் இரத்தத்தில் கலந்து

பிள்ளைபெற்ற பெண்ணின் மார்பில் சுரக்கும்!

சென்னாகுன்னி கருவாட்டுப்பொடிக்கு

இட்டலி ஆவி பறக்கும்,

கெளுத்தி, உளுவை

கண்ணாடிக்கெண்டையைப் பார்த்தால்

சுவை மொட்டுகள் வாய் திறக்கும்!

உடும்பும், நண்டும்

உலை கொதிக்க

உழைப்பின் வலிகள் அடங்கும்,

கண்ணெரிச்சல் தாங்காத ‘இந்துவே’

கொஞ்சம் சங்கு சதையும்

வயல் நத்தையும் தின்று

பார்

உன் மூலச்சூடும் அடங்கும்!

-துரை.சண்முகம்

 

http://www.vinavu.com/2014/08/29/karuvadu-attuppadai-kavithai/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.