Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயக்குமாரி கைது என்பது தன்னை விமர்சிப்பவர்களை மௌனமாக்கும் ஒரு நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயக்குமாரி கைது என்பது தன்னை விமர்சிப்பவர்களை மௌனமாக்கும் ஒரு நடவடிக்கை.

தீயநோக்கம் கொண்டது - கலும் மக்ரே - தமிழில் - ரஜீபன்:-

05 அக்டோபர் 2014

Jeyakumari%201_CI.jpg

சுமார் 200 நாட்களுக்கு முன்னர் இலங்கை அதிகாரிகள் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற தமிழ்பெண்மணியையும் அவரது மகளையும் கைதுசெய்தனர்.

ஜெயக்குமாரி காணமல்போன தனது 15 வயது மகன் மகிந்தனிற்க்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அதிகாரிகள் மகிந்தனை விடுதலைப்புலி உறுப்பினர் என குற்றம்சாட்டி கைதுசெய்திருந்தனர்.

கடந்த நவம்பரில் பிரிட்டிஷ் பிரதமர் முன்னர் யுத்தம் இடம்பெற்ற அந்த பகுதிக்கு சென்ற வேளை அவரை சூழ்ந்துகொண்டு தங்களது வேதனைகளை வெளி;ப்படுத்திய பலரின் மத்தியில் நன்கு அறியப்பட்ட செயற்பாட்டாளரான ஜெயக்குமாரியும் அவரது மகளுடன் காணப்பட்டார்.

இதற்க்கு மூன்று மாதத்திற்க்கு பின்னர் அவர் எனக்கு அனுப்பிய செய்தியில் தான் முன்னெடுக்கும் பிரச்சாரத்திற்காக தான் பின் தொடரப்படுவதாகவும், துன்புறுத்தப் படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நான் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுவிட்டு வரும் போதெல்லாம் இனந்தெரியாத நபர்கள் என்னை பின்தொடர்ந்து எனது வீட்டிற்க்கு வருகின்றனர். இது கடுமையான அச்சுறுத்தல் நான் இங்கு வாழ்வதற்க்கு அச்சம் கொணடுள்ளளேன், நான் எனது மகனின் விடுதலையை வேண்டி ஆர்ப்பாட்டங்களுக்கு செல்கிறேன்- வீதிகளில் கோஷங்களை எழுப்புகின்றேன் பலர் என்னை படமெடுக்கின்றனர் - இவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது’’ என அவர் குறிப்பிட்டிருநதார்.

நான் பல தடவைகள் பின் தொடரப்பட்டுள்ளேன், நான் இந்த கிராமத்தில் மகளுடன் தனியாக வாழ்கிறேன், ஆகவே நான் இங்கு வாழவே அச்சம் கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

இதற்க்கு சில நாட்களுக்கு பின்னர் அவரும் அவருடைய மகளான13 வயது சிறுமியும் கைது செய்யப்பட்டனர்- அவ்வேளை இலங்கை வெளி விவகார அமைச்சர் பிரிட்டனிலிருந்தார்- பொதுநலவாய செய்தியாளர் மாநாட்டில் நான் அவரை சந்தித்தேன்-இலங்கையே அதற்க்கு தலைமை வகிக்கிறது.

கருத்துச்சு தந்திரம் என்பது பொதுநலவாயத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றாக காணப்படும் ஒரு நிலையில் ஜெயக்குமாரியின் கைதை எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள் என நான் அவரிடம் கேட்டேன் - ஆதாரங்கள் ஆராயப்படும் வரை தன்னால் கருத்துக்கூற முடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் என்னிடம் குறிப்பிட்டார்- இது விரைவில் இடம்பெறும் - நீதிமன்ற விசாரணையும் இடம்பெறும்- இதற்க்கு முன்னால் நாங்களாக ஒரு முடிவிற்க்கு வருவது தவறானது என அவர் தெரிவித்தார்.

தற்போது 200 நாட்களுக்கு மேலாகிவிட்டது இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த எதுவும் இடம் பெறவில்லை - நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறவில்லை - அவ்வாறான ஒன்று நடைபெறப் போவதுமில்லை - ஏனெனில் ஜெயக்குமாரி கைது என்பது நீதிமன்ற விசாரணைகள் தொடர்பானதல்ல - இது தன்னை விமர்சிப்பவர்களை மௌனமாக்கும் ஒரு நடவடிக்கை.

ஜெயக்குமாரி குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் - அவரது மகள் அனாதை விடுதியொன்றில் உள்ளார்.

வெளி உலகுடன் தொடர்புகள் எதுவுமின்றி காலவரையற்ற விதத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது –எந்த காரணத்திற்காகவும் மன்னிக்க முடியாதது-அதேவேளை இது குறிப்பாக உள்நோக்கம் கொண்டது- சர்வதேச விசாரைணையாளர்களுக்கு அவர்மிக முக்கியமான சாட்சி, அவர்களுக்குஅவரது வாக்குமூலம் தேவைப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச விசாரணைக்கான அங்கீகாரத்தை வழங்கிய பின்னர் ஜெயக்குமாரியின் கைது இடம்பெற்றது.

எனினும் ஐ.நா விசாரணை குழு முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் மீதான அச்சுறுத்தல் தொடாகிறது.

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை வெளியிட்டு உரையாற்றுகையில் பிரதி ஆணையாளர் அதனை உறுதிசெய்தார்.

இதேபோன்று இலங்கைக்கான பிரிட்னின் பிரதி உயர்ஸ்தானிகரும் தொடரும் அச்சுறுத்தல்கள்,மிரட்டல்கள் குறித்து தனது புளொக்கில் குறிப்பிட்டிருந்தார்-

இலங்கை அரசாங்கம் இந்த கரிசனைகளுக்கு அளிக்க கூடிய பதில் எங்களை ஆச்சரியப்படுத்தாது- அவர்கள் முன்னர் எப்போதும் போலவே தற்போதும் செயற்படுகின்றனர். அதேவேளை உள்நாட்டு மக்களுக்காக வேடிக்கையான புனைகதைகளை வைத்திருக்கின்றனர்.

உதாரணத்திற்கொன்று.

ஐ.நாவும்,பிரிட்ட னின் பிரதித்தூதுவரும் சாட்சியங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் மாற்றுக்கருத்துடையயோரை பழிவாங்குதல் போன்றவை குறித்து எச்சரித்துள்ள அதேவேளை அரச ஊடகம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஐனாதிபதியின் தலைமைத்துவத்தையும் அதன் கீழ் காணப்பட்ட முன்னேற்றங்கiயும் பாராட்டியுள்ளார் என தெரிவித்துள்ளது.

ஆனால் ஐ.நாவின் இந்த சந்திப்பு தொடர்பான அறிக்கை- பான் கீமூன்-மத வன்முறை குறித்த தனது கரிசனையை வெளிப்படுத்தியதாகவும், புகலிடக்கோரிக்கையாளர்களை பாதுகாக்குமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்துடன் பொறுமையாகவும்,நம்பிக்கையுடனும் ஒத்துழைப்பை வழங்குமாறும் பான் கீ மூன் கேட்டுக்கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இதுவரை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துமைக்க மறுப்பதுடன் விசாரணையாளர்களை நாட்டிற்க்குள் அனுமதிக்க மறுத்துவருகின்றது.

உள்ளுர் மக்களை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இன்னொரு ஏமாற்று நடவடிக்கை ஜனநாயகத்தின் பெரும் நண்பனான எகிப்து விடுத்துள்ள அறிக்கையாகும். குறிப்பிட்ட அறிக்கையில் இலங்கை போன்ற நிலைப்பாட்டைக் கொண்ட 22 நாடுகள் ஐ.நா. விசாரணையை தேவையற்றது என கண்டித்துள்ளன.

எனினும் அரசாங்கத்தின் இந்த அறிக்கை குறித்த அறிக்கையை சில நாட்களுக்கு முன்னால் தயான் ஜெயத்திலக தெரிவித்துள்ள கருத்துகள் பாதித்துள்ளது. 5 வருடத்திற்கு முன்னர் இலங்கைக்கு மனித உரிமை பேரவையில் 29 நாடுகளின் ஆதரவு காணப்பட்டது. அது தற்போது 12 ஆக குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அவர் இன்னொரு விடயத்தையும் சுட்டிக் காட்டி உள்ளார். இந்த அறிக்கையில் எந்தந்த நாடுகள் கைச்சாத்திடவில்லை என்பதே இலங்கைக்கு ஆபத்தான விடயம். நான் மேற்கு நாடுகள் குறித்து குறிப்பிடவில்லை. ஆனால் இதில் கைச்சாத்திட வேண்டிய நாடுகள் கைச்சாத்திடவில்லை. உதாரணத்திற்கு வியட்நாம் தென்னாபிரிக்கா, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்தின் உணர்வுகளை புறக்கணிப்பது, உள்ளுர் மக்களுக்கு அர்த்தமற்ற விடயங்களை தெரிவிப்பது பல உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்களை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் நீண்ட காலத்திற்கு சாத்தியமில்லை என்பது அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது.

யுத்தத்தின் போது சிறிய உயிர் இழப்புக்கூட ஏற்படவில்லை என்ற அரசாங்கத்தின் கூற்றுக்கள் போல இவையும் ஒரு நாள் அம்பலமாகும்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவை அம்பலமாவதற்கு முற்பட்ட காலத்தில் என்ன நடக்கும் என்பதே?

அரசாங்கத்தின் இந்த புனைகதைகளும், சர்வதேச சமூகத்தின் கேள்விகளுக்கு நேரடி பதிலை வழங்காத நடவடிக்கைகளும் தனக்கு அவசியமான காலஅவகாசத்தை பெறும் நடவடிக்கைகளே.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களுக்கு சிறுஉயிரிழப்பு கூட ஏற்படுத்தப்படவில்லை என தெரிவித்துக்கொண்டே அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்களை இலக்குவைத்து படுகொலை செய்தது.

முன்னாள் பிரிட்டிஸ் வெளிவிவகார செயலாளர் டேவிட்மில்லிபான்ட் அதனை காலஅவகாசத்தை பெறும் நடவடிக்கை என்றார்.

இதேபோன்று தற்போது உள்நாட்டு விசாரணைகுழுவின் ஆணை விஸ்தரிக்கப்பட்டுள்ளது, பான் கீ மூன் பாராட்டுகிறார் என தெரிவித்துக்கொண்டே - இலங்கையின் அரசியல் தலைமை தனது திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது- அதன் உண்மையான நோக்கம் வடகிழக்கின் சனத்தொகை பரம்பல் போன்ற விடயங்களில் நிரந்தர மாற்றத்தை கொண்டுவருவதே.

பாரிய தந்திரோபாய ரீதியிலான நிலஅபகரிப்புகள்,திட்டமிடப்பட்ட பாலியல் வன்முறைகள், அரசியல் ஒடுக்குமுறைகள், பலவந்தமாக காணமற்போகச்செய்தல், தமிழர்கள் அற்றவர்களை குடியமர்;த்துதல், போன்றவற்றின் மூலம் அவர்கள் தமிழர்களின் இனத்துவ அடையாளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். வடக்குகிழக்கு முழுவதையும் மாற்றியமைக்க முயல்கின்றனர்.

இலங்கை மக்கள் அரசாங்கத்தின் ஏமாற்று நாடகங்களை புரிந்துகொள்ளும் அந்தவேளையில், சர்வதேச சமுகம் அதன் உள்நாட்டு நடைமுறைகள் ஏமாற்றும் நடவடிக்கை என உணரும் வேளையில் –எல்லாமே முடிவடைந்திருக்கும்.

வடகிழக்கை இன ரீதியாக மாற்றியமைப்பது முடிவடைந்திருக்கும்- அரசாங்கம் தனது யுத்தத்தின் இறுதி தாக்குதலில் வெற்றியடைந்திருக்கும்.

யுத்தத்தின் போது வேகமாகவும், தீவிரமாகவும் செயற்படத்தவறியதன் காரணமாக படுகொலைகளை தடுக்க உலகம் தவறியது. அது மீண்டும் தோற்க்கப்போகின்றதா?

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112292/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.