Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓலைச் சுவடிகளுக்காக புதுச்சேரியில் ஒரு நூலகம்: 8,400 அரியவகை சுவடிகளைப் பாதுகாக்கும் பிரெஞ்சு நிறுவனம்

Featured Replies

ganesan_2118280f.jpg
 

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் 8400 ஓலைச் சுவடிக் கட்டுகளை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.

 

புதுச்சேரியில் பிரெஞ்சு அரசு நிர்வாகத்தின்கீழ் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்கள், துறை வல்லுநர்கள், பணியாளர்கள் என சுமார் 60 பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் இந்தியாவின் இயற்கையையும் பண்பாட்டையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

 

நமது தொன்மையையும் பாரம்பரிய பெருமைகளையும் நாம் பாதுகாக்க தவறிவிட்டபோதும் இந்த பிரெஞ்சு நிறுவனம் அதை எல்லாம் போற்றிப் பாதுகாக்கும் முயற்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இங்கு ஓலைச் சுவடிக்கு என்றே ஒரு நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அந்த நூலகத்தில் 8400 ஓலைச் சுவடிக் கட்டுகளை பாதுகாத்து வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசினார் இந்த நிறுவனத்தின் ஓலைச்சுவடி ஆராய்ச்சித் துறை தலைவர் டி.கணேசன். “இங்கு கிரந்த எழுத்து ஓலைச்சுவடி கட்டுகள் ஐயாயிரமும் தமிழ் ஓலைச்சுவடிக் கட்டுகள் ஆயிரமும் திகழாரி மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் சுமார் 400 கட்டுகளும் உள்ளன. இவைகள் இல்லாமல் தெலுங்கு, நந்தி நாகரி மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிக் கட்டுகளும் உள்ளன.

 

இவை அனைத்துமே நாங்களே ஊர் ஊராய் கிராமம் கிராமமாய் அலைந்து திரிந்து சேகரித்தவை. சில ஓலைச் சுவடிகள் எளிதில் கிடைத்துவிட்டன. எங்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு சில பேர் ஓலைச் சுவடிக் கட்டுகளை எடுத்துக் கொடுத்துவிட்டனர். சிலபேர் தரமறுத்தனர். அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்துத்தான் ஓலைச் சுவடிக் கட்டுகளை வாங்க வேண்டியிருந்தது.

 

இங்குள்ள ஓலைச்சுவடிகளில் கடவுளால் அருளப்பட்ட சைவ ஆகம நூல்கள் நிறைய இருக்கின்றன. இங்கிருப்பதைப் போன்ற சைவ மற்றும் சைவ சிந்தாந்த நூல்கள் உலகில் வேறெங்கும் இல்லை. அரிய நிறுவனங்கள் மற்றும் தகவல்களைப் பதிவு செய்யும் யுனெஸ்கோவின் ‘மெமரி ஆஃப் தி வேல்டு’ பதிவேட்டில் இங்குள்ள ஓலைச்சுவடி நூலகம் 2005-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓலைச் சுவடிகள்தான் தமிழ் இலக்கியத்தின் ஆதாரம். சுவடிகள் இல்லை என்றால் நமக்கு திருக்குறளே கிடைத்திருக்காது. ஆனால், நாம் ஓலைச்சுவடிகளின் அருமை தெரியாமல் இருந்து விட்டோம். அதனால் பெரும்பகுதியான சுவடிகள் அழிந்துவிட்டன.

 

இங்குள்ள சுவடிகளை நாங்கள் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். இவைகளை பூச்சிகள் அரித்துவிடக் கூடாது என்பற்காக ஒவ்வொரு ஏட்டிலும் ‘லெமன் கிராஸ் ஆயில்’ தடவி பாதுகாக்கிறோம். அதேசமயம், இந்தச் சுவடிகளில் உள்ள தகவல்கள் காலத்துக்கும் அழியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்தையும் டிஜிட்டலைஸ் பண்ணிவிட்டோம். இப்போது, இந்த ஓலைச் சுவடிகளில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஆன் லைனில் இருக்கின்றன. உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரும் இந்த ஓலைச்சுவடிகளில் உள்ள தகவல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்’’ என்று கூறினார் கணேசன்.

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-8400-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6430130.ece?homepage=true&theme=true

 

Germany, Halle என்னும் இடத்தில் பெரிய நூலகம் ஒன்று இருக்கிறது. 

அங்கே பல தமிழ் ஓலைச் சுவடிகள் உள்ளன. 

 

அவற்றை பார்க்கும் ஆவலில்.. நானும் ஒரு நண்பரும் இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்றோம்.

 

ஒரு அறையில் எம்மை அமர்த்திவிட்டு.. ஒரு சில சுவடிகளை கொண்டு வந்து தந்தார்கள். மிகவும் பழமையானது. சிறிது தட்டினால் நொறுங்கிவிடுவதுபோல பயமுறுத்தின. சிறிது நேரத்தில் ஒரு தமிழக தமிழர் அங்கு வந்தார். 

 

தான் மாணவர் விசாவில் வந்து அவற்றை ஆராய்வதாகவும்... அவற்றை நூலுருவில் வெளியிட நிதி உதவி செய்யுமாறும் கோரினார்.

 

'நாமும் அவற்றை மைக்ரோபிலிம் எடுக்கும் முயற்சியிலேயே பார்வையிட வந்திருக்கிறோம்.. திரும்பி சென்றூ அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்' எனவும் கூறி, மதிய உணவிற்கு பின் மீண்டும் வருகிறோம் என்று அங்கிருந்து நகர்ந்தோம்.

 

உணவருந்திவிட்டு..ஒரு மணி நேரம் அளவில் திரும்பி வந்தால்... ஏட்டுச் சுவடிகளைப்பார்க்கும் எமக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

 

அந்த தமிழக நபரின் திறமை அது எனப் புரிந்தது.

 

அதன் பின் அந்த ஏட்டுச் சுவடிகள் இடைக்கிடை மனதில் வந்து தம்மை காப்பாற்று என்று மன்றாடுவது போலிருக்கும்.

 

வேறு எவராவது காப்பாற்றினார்களா தெரியவில்லை.. எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதுதான் உண்மை.. சிலவேளை எனது முயற்சிக்கான பாடுபடல் போதமையாகவும் இருக்கலாம்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.