Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னைமரவாடி விவகாரம்: 21ஆம் திகதி பிரேரணை

Featured Replies

rr(10).jpg-வடமலை ராஜ்குமார்

தென்னைமரவாடி கிராம மக்களின் காணி விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவரும் தழிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினருமான சி.தண்டதயுதபாணி கிழக்கு மாகாண சபையின் 21ஆம் திகதிய அமர்விலே தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளார்.

தென்னைமரவாடி கிராம மக்களின் பூர்வீக வயல் நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்த பெரும்பான்மை இன விவசாயிகளுக்கும் அக்காணியை பங்கிட்டு வழங்க முயற்சி செய்துவரும் கிழக்;கு மாகாண காணி ஆணையாளரின் செயற்பாடு குறித்து கிழக்கு மாகாண எதிர் கட்சித் தலைவரும் தழிழத் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி கிராமமானது திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லைக்கிராமம். இங்கு வசித்து வந்த 250  குடும்பங்கள் 1984ஆம் ஆண்டில் ஏற்பட்ட இன வன்செயல் காரணமாக இடம் பெயர்ந்தனர். இவர்களுடைய வீடுகள் சொத்துக்கள் என்பன அழிக்கப்பட்டன. 10 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள தமது சொந்த கிராமத்தை விட்டு ஓடிச்சென்றவர்கள் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்து வாழ்ந்திருந்தார்கள்.

மீண்டும் இவர்கள் தமது சொந்த கிராமத்துக்;கு 2011ஆம் ஆண்டு மீள்குடியேறினார்கள். இவர்கள் இடம் பெயர்ந்திருந்த  நீண்ட காலப்பகுதியில் அயல் கிராமங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இன விவசாயிகள் இவர்களுடைய பூர்வீக வயல் நிலங்களை ஆக்கரமித்து விவசாயம் செய்திருந்தார்கள்.

மீண்டும் தமது சொந்த நிலங்களுக்கு மீள் குடியேறிய மக்களுக்கு அவர்களுடை வாழ்வாதரத்துக்கென இருந்த ஒரே தொழிலாக இருந்த விவசாயத்தை மேற் கொள்ள முடியாமல் இருந்தது. இவர்கள் இது பற்றி குச்சவெளி பிரதேச செயலாளர் மற்றும் காணி அதிகாரிகள் பொலிஸார் ஆகியோரிடம் முறையிட்டிருந்தனர்.

ஆயினும் இவர்களுக்கான எவ்வித நல்ல தீர்வுகளும் கிடைக்கவி;ல்லை  ஆக்கிரமித்து விவசாயம் மேற் கொண்ட பெறும்பான்மையின விவசாயிகளிட்ம் உரிமையாளர்களின் தொடர்ச்சியான வலியுறுத்தலின் பின்னர், தாம் மேற்கொண்டுள்ள போகம் முடிவடைந்தவுடன் இந்ந வருடத்தில் இருந்து நிலத்தை கையளிப்பதாக இணக்கம் காணப்பட்டிருந்த போதும் ஆக்கிரமித்த விவசாயிகள் அந்ந நிலங்களில் இருந்து விலகாமல் தொடர்ந்தும் விவசாயத்தில் ஈடுபட்டுவருகி;ன்றனர்.

இந்ந சூழ்நிலையில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஸ்ரீமேவன் தர்மசேன இரு பகுதி விவசாயிகளையும் சந்தித்து கலந்துரையாடி தென்னை மரவாடி கொள்ளன் வெளி பெருமால் பிளவு வயல் கண்டத்தில் உள்ள வயல் காணி 110 ஏக்கரை இரு பகுதி விவசாயிகளும் பங்கிட்டு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனும் தீர்ப்பை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து அடுத்த தடவை இடம்பெற்ற நல்ல தண்;ணி ஊற்று பிளவு எனும் வயல் கண்டத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் அதே தீர்ப்பை அவர் வழங்க அதனை எதிர்த்த விவசாயிகளுக்கு அவர் கொடுத்த தண்டணை தம்முடைய அறிவித்தல் கிடைக்கும் வரை இந்த வயல் நிலத்தில் விவசாய நடவடிக்கையயில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளார் மாகாண காணி ஆணையாளர்.

இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ள மாகாண காணி ஆணையாளரின் செயலானது உடமைகளை இழந்து உயிர்களையும் பரிகொடுத்து மீளக்குடியேறிய மக்களுக்;கு மேலும் இழைக்கும் அநீதியாகும் அத்துடன் இவ்வாறான செயல்கள் மீண்டும் அப்பகுதி மக்களை அந்த இடத்தில் இருந்து திட்டமிட்டு துரத்துவதற்கான சதியாகும் என கிழக்கு மாகாண சபையின்  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான  சி.தண்டாயுதபாணி தெரிவிக்கின்றார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணசபை உரிய கவனம் செலுத்தி பூர்வீக காணி உரிமையாளர்களான மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்மந்தன், கிழக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும் கிழக்கு மாகாண காணி அமைச்சருக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தென்னைமரவாடி கமக்காரர் அமைப்பின் சார்பாக தமது வயல் காணிகளில் பெரும் போக வயல் செய்கை ஆரம்பித்துள்ள இந்த வேளையில் அதனை மேற் கொள்ள விடாத மாகாண காணி ஆணையாளர் தடை விதிக்கப்பட்டதையும் கடிதம் மூலம் தெரியப்படுத்திருக்கின்றனர்.

எனவே, இந்த காணி விடயத்தில் கிழக்கு மாகாணசபை கருத்திற்; கொண்டு காணி உரிமையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியும் எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ள கிழக்கு மாகண சபை அமர்வில் எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தனி நபர் பிரேரனை ஒன்றினை கொண்டுவர உள்ளார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/130392---21--.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.