Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கண்ணிவெடிகளுக்கு மத்தியில்' - போராட்டத்தை மையமாக கொண்டு மற்றொரு தமிழ் திரைப்படம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'கண்ணிவெடிகளுக்கு மத்தியில்' - போராட்டத்தை மையமாக கொண்டு மற்றொரு தமிழ் திரைப்படம்! 
[sunday 2014-11-30 20:00]
landmine-cinema-301114-200-seithy-cinema
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் போராட்டத்தை மையமாக கொண்டு பல ஆவண படங்கள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன.  சமீபத்தில் புலி பார்வை என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழம் போரில் உயிர் தப்பிய திரைப்பட தயாரிப்பாளரின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு மைன்பீல்டு (கண்ணிவெடி பகுதி) என்ற பெயரில் படம் ஒன்று தயாராகிறது.  இதனை ஷிலாதித்யா போரா என்பவர் இயக்குகிறார்.  அவருக்கு இது முதல் படம்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் போராட்டத்தை மையமாக கொண்டு பல ஆவண படங்கள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. சமீபத்தில் புலி பார்வை என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழம் போரில் உயிர் தப்பிய திரைப்பட தயாரிப்பாளரின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு மைன்பீல்டு (கண்ணிவெடி பகுதி) என்ற பெயரில் படம் ஒன்று தயாராகிறது. இதனை ஷிலாதித்யா போரா என்பவர் இயக்குகிறார். அவருக்கு இது முதல் படம்.
   
இந்த படத்தை அடுத்த வருடம் இயக்க தயாராகியுள்ளார் போரா. படத்தின் கதையானது தமிழ் படதயாரிப்பாளர் ஒருவரை பற்றியது. அவர் விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை சந்திக்கிறார். அவரது கருத்துகள் தயாரிப்பாளரை ஈர்க்கின்றன. படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற தனது கனவை விட தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கனவே மிக முக்கியமானது என பிரபாகரன் அவருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.
 
ஜப்னா பகுதியை சேர்ந்தவரான படதயாரிப்பாளர் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவரது அடையாளம் மறைக்கப்பட்டு உள்ளது. இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து 25௨6 வருடங்கள் வரை தனது வாழ்வினை செலவிடுகிறார். அந்த இயக்கத்தின் கொள்கையை விளக்கும் படங்களை தயாரிக்கிறார் என்று போரா படம் குறித்து விளக்கமளிக்கிறார்.இந்தியா-இலங்கை-விடுதலை புலிகள் என்ற கோணத்தை தாண்டி இது ஒரு மனிதனை குறித்த படகதை. இது ஓர் உலகம் அறிந்த கதை. ஒருவரது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை வைத்து படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இது ஓர் ஆவண படம் அல்ல என்று போரா கூறியுள்ளார்.
 
வருகிற பிப்ரவரி-மார்ச் 2015ல் படம் திரைக்கு வரும். இலங்கை மற்றும் கேரளாவில் இதற்கான படப்பிடிப்பு நடக்கும். இது முதல் படமாக இருந்தாலும் தனக்கு மிக முக்கியமானது என்றும் அவர் கூறுகிறார். அரசியல் திரில்லரை மையமாக கொண்டு படம் எடுப்பது என்பதே எனது விருப்பம்.கடந்த 12 வருடங்களில், சரியான ஒரு கதையை நான் தேடி கொண்டு இருந்தேன். இலங்கை திரைப்பட தயாரிப்பாளர் பிரசன்ன விதனேஜை சந்தித்தபோது, அவரது படங்களில் ஒன்றில் நான் பணியாற்றியபோது அவருடன் அதிக நேரம் செலவிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
 
அவர் படதயாரிப்பாளர் குறித்து எனக்கு கூறினார். விடுதலை புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது அவர் அரசியலில் ஈடுபாடு இல்லமல் இருந்ததை எனக்கு எடுத்து கூறினார் என போரா கூறியுள்ளார். படதயாரிப்பாளர் வேடத்தில் நடிப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த சில நடிகர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
 
இந்த படத்தின் ஒளிப்பதிவை கேங்ஸ் ஆப் வாசிபூர், பாம்பே வெல்வெட் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜீவ் ரவி மேற்கொள்கிறார். பெரும்பான்மையான மணிரத்னம் படங்களில் பணியாற்றியுள்ள ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். படத்திற்கான ஒலிப்பதிவு பணிகளை ரெசூல் பூக்குட்டி மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=121792&category=EntertainmentNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.