Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கில் இராணுவ மய நீக்கத்திற்கான அவசியம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கில் இராணுவ மய நீக்கத்திற்கான அவசியம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

11 பெப்ரவரி 2015

இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுகிறது. புதிய அரசாங்கம்கூட இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து முடித்த பின்னரும் வட கிழக்கில் இராணுவத்தை நிலை நிறுத்த தீர்மானிப்பது ஏன்? புலிகளை அழிக்க வட கிழக்கில் இராணுவம் செறிவாக்கப்பட்டது எனில் தொடர்ந்தும் வடகிழக்கில் இராணுவ மயத்தை பேணுவதன் மூலம் தமிழ்மக்களை ஒடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறதா?

தமிழ் மக்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசியல் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் தொடர்ந்தும் இராணுவ மயத்தை செறிவாக்க முன்னைய அரசு தீர்மானித்தது. தமிழ் மக்கள் ஓர் சிவில் கட்டமைப்புக்குள் வாழக் கூடாது என்பதில் அந்த அரசு குறியாக இருந்தது. தமிழ் மக்களின் வாழ்விலிருந்து அரசியல் செயற்பாடுவரை இராணுவத்தால் கட்டுப்படுத்தும் செயற்பாடு என்பது நன்கு திட்டமிட்ட மிகப் பெரும் அடக்குமுறையின், ஒடுக்குமுறையின் வெளிப்பாடாகும்.

புதிய அரசு இராணுவ மயத்தை நீக்கும் என்று தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. குறைந்த பட்சம் இராணுவக் குறைப்புக்காவது இணங்கும் என்றே தமிழ் அரசியல் தலைமைகள் நம்பியிருந்தன. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வடக்கில் இராணுவக் குறைப்புக்கு இடமில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் இயல்பான வாழ்வுக்கு குந்தகமாக அமையும் இராணுவ மயத்தை நீக்க வேண்டும் என்பதுவே தமிழ் மக்களின் இன்றைய முக்கியமான பிரச்சினையாகும். இதுவே நீண்டகாலமாக நிலவிவந்த எதிர்காலம் குறித்த பிரச்சினை என்பதும் இங்கு முக்கியமானது. இராணுவ மய நீக்கம் ஏன் அவசியமானது? இலங்கைத் தீவில் வடக்கு கிழக்கில் மாத்திரம் இராணுவச் செறிவை அமுல்படுத்தி இலங்கை அரசே பிரித்தாளுகிறதா?

தமிழ் மக்களின் காணிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாகவும் பாதுகாப்புத் தேவைக்கான சுவீகரிப்பு என்ற பெயரிலும் அபகரிக்கப்பட்டு அங்கு இராணுவமுகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நிலங்களைச் சேர்ந்த மக்கள் அகதிமுகாங்களிலும் தெருக்களிலுமாக அலைகின்றனர். தம்மை தமது பூர்வீக நிலங்களில் குடியேற்றுமாறு அந்த மக்கள் போராடி வருகின்றனர். அந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்ப வேண்டும் எனில் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு இராணுவமுகாங்கள் அகற்றப்பட வேண்டும்.

இருபத்தைந்து ஆண்டுகளாக அகதி முகாங்கிலும் வீடற்றவர்களாகவும் வாழும் இந்த மக்கள் பல்வேறு வகையான சமூக உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அகதிமுகாங்களிலேயே பிறந்து வளரும் குழந்தைகள் குறித்து அவர்களின் எதிர்காலம் குறித்து அவர்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அகதிமுகாங்களில் பிறந்து வளரும் பிள்iளைகள் தங்கள் வாழ்க்கையை அகதிமுகாங்களில் தொலைத்தனர். இனியும் இந்த நிலை தொடரக்கூடாது என்பதே அந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.

வலிவடக்கு, சம்பூர் போன்ற பிரதேசங்களில் மாத்திரமின்றி வடக்கு முழுவதும் இராணுவ முகாங்களுக்காகவும் இராணுவப் பிரதேசங்களுக்காகவும் உயர்பாதுகாப்பு வலயங்களுக்காகவும் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலத்திற்குச் சொந்தக்காரச் சனங்கள் வீடற்றவர்களாக நிலத்தை பறிகொடுத்தவர்களாக அலைந்து கொண்டிருக்கின்றனர். இது இராணுவ மய நீக்கத்திற்கான அவசியமான அடிப்படையான ஓர் ஏதுவாக காணப்படுகிறது.

இராணுவத்தினர் மக்களின் பொது நடவடிக்கைகள்மீது கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுகின்றனர். பாடசாலைகளின் நிகழ்வுகள், ஆலய நிகழ்வுகள், வீட்டின் மரணச்சடங்குகள் என வாழ்வின் அத்தனை விடயங்களிலும் மூக்கை நுழைத்து வருகின்ற செயற்பாடு தமிழ் மக்களின் பொது வாழ்வை கடுமையாக பாதிக்கிறது. பொது மக்களின் இயல்பு வாழ்வில் - பொது நடவடிக்கைகளில் எதற்காக இவ்வாறு இராணுவத்தை கலக்க வேண்டும்?

இராணுவத்தினர் ஓர் படை நடவடிக்கையை இன்னமும் தொடர்கின்றனர் எனலாம். தமிழ் மக்களின் சிவில் வாழ்வை கண்காணிக்கின்றனர். ஓர் மரண வீட்டில்கூட இந்தக் கண்காணிப்பு தொடர்கிறது. ஓர் ஆலய திருவிழாவில்கூட இந்தக் கண்காணிப்பு தொடர்கிறது என்றால் அது எப்படியான கண்காணிப்பு? தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகள், உரையாடல்களை கண்காணிக்கும் இந்த நடவடிக்கையை ஓர் படை நடவடிக்கையாகவே இராணுவம் மேற்கொள்ளுகிறது.

யுத்தம் முடிந்த பின்னரும் இராணுவம் தனது தீவிர நடவடிக்கைகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டுள்ளது. வருடத்தின் மே மாத்திலும் நவம்பர் மாதங்களிலும் கடுமையான கெடுபிடிகளில் ஈடுபட்டுவருகின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவில் இராணுவத்தின் போர்க்குற்றம் குறித்து சாட்சியம் வழங்கியவர்களை கண்காணித்து அவர்கள் எச்சரிக்கைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு முன்னெடுத்த அந்த நடவடிக்கையில் அவ்வாறு இராணுவ அணுமுறை மேற்கொள்ளப்படுவது நமக்குப் பல்வேறு செய்திகளைச் சொல்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைள் குறித்தும் உள்ளக விசாரணை குறித்த நம்பகத்தை குறித்து தெளிவாக்கும் அதேவேளை சாட்சியம் அளிக்கும் மக்களை இராணுவம் கண்காணித்தன் மூலம் சாட்சிகளை இல்லாமல் செய்தலுக்காகவா மேற்குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற கேள்வியும் எழுகிறது. புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் சில நாட்களாக முகாங்களுக்குள் முடங்கிய இராணுவத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் வீதி ரோந்துகளும் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளன.

பொது இடங்களில் நின்று மக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தற்போதைய சூழலிலும் சில போராட்டங்களில் இராணுவம் கண்காணிப்பு செய்துள்ளது. எனினும் வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களை கோரியும் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்குமாறு கோரியும் போராட்டங்கள் முன் னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான போராட்டங்கள் கடும் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மகிந்த அரசிலும் நடைபெற்றவை. இப்போதும் பாதுகாப்பின்மையான உணர்வுடனேயே போராட்டங்களில் மக்கள் ஈடுபடுகின்றனர்.

மேற்குறித்த போராட்டங்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கும் காணாமால் போகச் செய்யப்பட்மைக்கும் எதிரானது. இந்தப் போராட்ங்களில் இராணுவத்தை வெளியேறுமாறும் மக்கள் கோரிக்கையை முன் வைக்கின்றனர். புதிய அரசு புதிய இராணுவமுகாங்கள் வராது, இனி காணிகள் சுவீகரிப்படாது என்று கூறுகிறது. மகிந்த அரசால் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதும் சுவீகரிக்கப்பட்டதையும் புதிய அரசு ஏற்றுக்கொள்கிறதா?

இனி அபகரிக்க மாட்டோம், அபகரித்ததைவிட மாட்டோம் என்பதும் அபகரிப்பு நடவடிக்கையே. இராணுவத்தை வெளியேற்ற மாட்டோம் என்பதன் மூலமும் அபகரிக்கப்பட்ட நிலங்களை இன்னமும் விடுவிக்காமையின் மூலமும் புதிய அரசும் தமிழர்கள்மீது மகிந்த முன்னெடுத்த அதே நடவடிக்கையை முன்னெடுக்கப் போகிறதா என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.

வட கிழக்கை விட்டு இராணுவத்தை வெளியேற்றப் போவதில்லை என்பதன் மூலம் நடந்த நில அபகரிப்பை இன அழிப்பை மறைப்பதும் தொடர்ந்தும் அதை முன்னெடுப்பதுமா நோக்கம்? ஜனாதிபதித் தேர்தலின்போது இராணுவத்தை அகற்ற மாட்டோம் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்தபோது அது சிங்கள மக்களின் வாக்குகளுக்காகவே அவ்வாறு கூறப்பட்டது என்றார்கள்.

இப்போது வடக்கில் இராணுவக் குறைப்பில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளபோது நாடாளுமன்றத் தேர்தலுக்காகவே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. வடக்கு கிழக்கில் இராணுவம் நிலை கொள்வதைத்தான் சிங்கள மக்கள் எதிர்பார்க்கிறார்களா? தமிழ் மக்களின் நிலத்தை அபகரித்து அவர்களின் இயல்பு வாழ்வை பாதிக்கும் ஓர் முடிவைத்தான் சிங்கள மக்கள் விரும்புகிறார்களா? சிங்கள மக்களின் பெயரால் அரசுகள் முன்னெடுக்கும் நடவடிக்கையா இது? அல்லது இவ்வாறான ஓர் திருப்திப்படுத்தலை செய்வதுதான் இன நல்லிணக்கமா?

அல்லது காலம் காலமாக தொடரும் சிங்கள பேரினவாத இராணுவ ஆக்கிரமிப்பு நோக்கில் இவ்வாறு தொடர்ந்தும் இராணுவ மயம் பேணப்படுகிறதா என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இலங்கைத் தீவின் பிறபகுதிகளில் இல்லாத வகையில் தொடர்ந்தும் ஓர் பகுதி மக்கள் அல்லது ஓர் இன மக்கள் இவ்வாறு இராணுவ ரீதியாக கையாளப்படுவது ஒடுக்குமுறையும் பாரபட்சத்தின் வெளிப்பாடும். சம உரிமைகளை தர மறுப்பதைப்போல இராணுவ மயத்தை அமுலாக்குவதிலும் வட கிழக்கை ஓர் வேற்று நாடாக கையாளும் நடவடிக்கைகளை இலங்கை அரசுகளே மேற்கொள்ளுகின்றன.

கடந்த அரசில் மகிந்த ராஜபக்சவால் பறிக்கப்பட்ட சரத்பொன்சேகாவின் இராணுவ அந்தஸ்துக்கள் புதிய அரசினால் மீளளிக்கப்பட்டன. அது மாத்திரமல்ல மகிந்த அரசில் பறிக்கப்பட்டவைகளும் இழக்கப்பட்டவைகளும் பலருக்கு மீள அளிக்கப்படுகின்றன. புதிய ஜனாதிபதியின் பதவி ஏற்புடன் மிக விரைவாக அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தமிழர் தாயகத்திலிருந்து அவர்களின் இயல்பு வாழ்வை அச்சுறுத்தும் இராணுவமயத்தை நீக்கவோ குறைக்கவோ இலங்கை அரசு முன்வரவில்லை. இதன் மூலமும் பல தசாப்தங்களாகத் தொடரும் பாரபட்சத்தையே உணர முடிகிறது.

தமிழ் மக்கள் தங்களைத் தாங்கள் ஆளும் வாழும் உரிமைக்காக போராடினார்கள். கோரப்பட்ட சுய உரிமையை மறுத்ததோடு அதற்காக அவர்களின் இயல்பு வாழ்க்கையும் இருப்பிடத்தையும் இராணுவமயத்தின் ஊடாக பறித்தெடுப்பது மாபெரும் அநீதியிலும் அநீதி. இது சம உரிமையை மறுத்தலில் இருக்கும் ஆதிக்கத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே வட கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருக்கும் இராணுவ மய நீக்கத்தை வலிறுத்தி மிக வீச்சோடு போராட வேண்டிய நிர்பந்தம் தமிழ் மக்கள்மீது திணிக்கப்படுகின்றது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116453/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.