Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் சிறு சிறு முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன! ஆஸி.தூதுவரிடம் யாழ்.ஆயர் எடுத்துரைப்பு

Featured Replies

robyn%20modi%20g878988587.jpg

 

இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடி காலை 9.30 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்தார். இந்தச்சந்திப்பின்போது, ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து விரிவாக்க கலந்துரையாடப்பட்டது என்று ஆயர் தெரிவித்தார்.
 
ஆட்சிமாற்றத்தின் பின் வடக்கில் பெரியளவு மாற்றம் ஏற்படாவிட்டாலும், சிறு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆளுநர் மாற்றம், காணிகள் கையளிப்புக் குறித்த வாக்குறுதிகள் போன்றன மக்கள் மத்தியில் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன.
 
வடக்குக்கு வந்த பிரதமர் இங்குள்ள நிலைமைகளை விரிவாக ஆராய்ந்து சென்றுள்ளார். குறிப்பாக இராணுவப் பிரசன்னம், பொது வேலைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவது போன்ற விடயங்களை அவர் நேரில் அவதானித்துச் சென்றுள்ளார். இதுபோன்ற விடயங்கள் நிறுத்தப்படவேண்டும் என்பது குறித்து அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
இதைவிட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் கருத்திலெடுத்துள்ளார். எனவே பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் வடக்கு விஜயமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்று நான் விளக்கினேன். இதற்கு பதிலளித்த ஆஸி. தூதுவர், வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை தாம் முன்னெடுத்துள்ளனர் என்றும், அந்த திட்டங்களை தாம் தொடர்ந்தும் முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்றும் என்னிடம் உறுதியளித்தார் என்றும் ஆயர் தெரிவித்தார்.
 
 
http://www.malarum.com/article/tam/2015/04/06/9492/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html#sthash.hTl307v2.dpuf
 
 
 
 
  • தொடங்கியவர்

முன்னாள் போராளிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல்: யாழ். ஆயர்

 

தங்களுக்கு இராணுவ அச்சுறுத்தல் இருப்பதாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளனர்  என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரூபின் மூடியிடம், யாழ். மறைவமாட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.

 

உயர்ஸ்தானிகருக்கும் யாழ். ஆயருக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழ்.ஆயர் இல்லத்தில் திங்கட்கிழமை (06), நடைபெற்றது. இந்த சந்திப்பு முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆயர், மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், முன்னாள் போராளிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல் இருப்பதான விடயம் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதனால் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிட்டும் என்று உயர்ஸ்தானிகர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.  

 

அத்துடன், பிரதமர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலை குறித்தும் உயர்ஸ்தானிகர் தன்னிடம் வினவியதாக ஆயர் கூறினார். காணிகள் விடுவிக்கப்படுவதால் மக்கள் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும், மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவது குறித்தும் தான் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்ததாக அவர் கூறினார்.   1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக கூறப்பட் போதிலும் அதில் ஒரு பகுதி மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது பற்றியும் தான் எடுத்துரைத்ததாக ஆயர் தெரிவித்தார்.   இவற்றைக் கருத்திற்கொண்ட உயர்ஸ்தானிகர், 'கிளிநொச்சியில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் மற்றும் அதனுடன் இணைந்து மக்களின் வாழ்வாதார உதவிகளை முன்னெடுப்பதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தெளிவுபடுத்தினார்' என்று ஆயர் மேலும் கூறினார். -

 

 

http://www.tamilmirror.lk/143511#sthash.jElhKhD2.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.