Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இராணுவத்தின் புதுவருட நிகழ்வுவும் இராணுவ மயமாக்கலின் அரசியலும்

Featured Replies

Miltry%20Noth1_CI.jpg

 

இலங்கையின் வடக்கில் இராணுவ மயமாக்கல் தொடர்பில் வடக்கு மாகாண சபை முதல் சர்வதேச நாடுகள் வரை குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை மிகவும் சாதாரணமானதல்ல என்றும் பல்வேறு திட்டங்களை பின்புலமாக கொண்டது என்றும் பல்வேறுபட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் உள்ள குளோபல் செய்தியாளர் ஒருவர். குறிப்பிடுகிறார் 
 
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகரம் என வருணிக்கப்பட்ட கிளிநொச்சியில் புதுவருட தினத்தை முன்னிட்டு இராணுவத்தினர் சில நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். வடக்கில் இராணுவத்திற்கும் மக்களுக்கும் நல்ல உறவு காணப்படுகிறது என்பதை காட்டுவதற்கே இந்த நிகழ்வு என்கிறார் வடக்கில் உள்ள அரசியல் அவதானி ஒருவர். இதை இராணுவத்தின் அரசியல் நிகழ்வு என்றும் அவர் அடையாளப்படுத்துகிறார். 
 
இன்றைய நிகழ்வுக்காக இராணுவத்தினர் கடும் முயற்சியை மேற்கொண்டதாக இராணு சிப்பாய் ஒருவரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு GTN செய்தியாளர் குறிப்பிடுகிறார்  ஒருவர். மிகவும் வறிய கிராமங்களுக்குச் சென்று சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை திரட்டி அவர்களை கிளிநொச்சி நகரத்திற்கு இராணுவத்தினர் கொண்டு வந்துள்ளனர். 
 
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் தொடர்ந்தும் இராணுவ வெளியேற்றம் அல்லது குறைப்பு ஏற்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இராணுவ வெளியேற்றம் என்பதை புதிய அரசும் அறியும். ஆனாலும் வடக்கில் இராணுவத்தினர் வழமை போலவே தமது நடவடிக்கைகளை தொடர்கின்றமை குறித்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்களின் பல்வேறு செயதி அறிக்கையிடல்கள் கூறியுள்ளன. 
 
இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களைப் புரிந்தது அதற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற நிலையில் வடக்கு மாகாண சபை இனப்படுகொலை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி சர்வதேச அளவில் அது குறித்து பேசப்படுகின்ற நிலையில்.அவைகளிலிருந்து தப்பிக்கொள்ள அப்பாவி தமிழ் சிறுவர்களையும் இளைஞர்களையும் இராணுவம் இவ்வாறு ஈடுபடுத்துகின்றனர்.
 
ஆக இராணுவத்தினர் இவ்வாறான ஒரு நடவடிக்கையின் மூலம் ஓர் அரசியல், இராணுவத் தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வதாக கிளிநொச்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஜீரிஎன்னிடம் சுட்டிக்காட்டுகிறார். இதன் மூலம் இராணுவத்திற்கு எதிரான இங்குள்ள நிலைப்பாட்டை - அதாவது யதார்த்ததை மறைப்பதுவே அவர்களின் திட்டம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
 
இராணுவத்தினரின் போர்க்கால நடவடிக்கைகளும் போருக்குப் பிந்தைய நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய மன வடுக்கள் ஆற்றப்படுவதற்கு இராணுவ வெளியேற்றம் அவசியம் என பலதரப்பட்டவர்களும் வலியுறுத்தும் நிலையில் இராணுவ வெளியேற்றத்தை தடுப்பதற்காகவே இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுவதாக கிளிநொச்சி மத்திய பாடசாலை ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
 
இதேவேளை இராணுவத்தை வெளியேற்றுகின்ற விடயம் தொடர்பில் வடக்கு அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் வட மாகாண முதல்வருக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் நிலவுகின்ற முரண்பாடு என்பது இராணுவத்தை வெளியேற்றக் கோரும் - வெளியேற்ற மறுக்கும் நிலைப்பாடுகளாகும்.
 
இந்த நிலையில் சிவில் வாழ்வில் தொடர்ந்தும் இராணுவத்தின் தலையீடு காணப்படும் என்ற வெளிப்பாட்டை இன்றைய நிகழ்வு உணர்த்துகிறா? அல்லது இராணுவத்தினர் தமது இராணுவ அரசியல் செயற்பாடுகளை வடக்கு களத்தில் தொடர்ந்தும் இவ்வாறு மேற்கொள்ளப்போகின்றனரா? என்ற கேள்வியும் எழுகிறது. 
 
பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகள், தனியார் கல்வி நடவடிக்கைகள், ஆயல வழிபாடுகள், வீட்டு நிகழ்வுகள் என அனைத்திலும் இராணுவத்தினர் தலையிட்டு வருகின்ற சிவில் வாழ்வை பாதிக்கும் இராணுவ மயமாக்கல் செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்வு நடப்பதாக தெரிவிக்கும் யாழ் பத்திரிகையாளர் ஒருவர் இதுவும் ஓர் இராணுவ மயமாக்கலை அப்பட்டதாக வெளிப்படுத்தும் உதாரணம் என்றும் கூறுகிறார்.
 
 
66&663_NYF_2.jpg
 
66&663_NYF_6.jpg
 
66&663_NYF_7.jpg
 
66&663_NYF_3.jpg
 
 

7SLLI_NYF_3.jpg

 

7SLLI_NYF_4.jpg

7SLLI_NYF_5.jpg

 

7SLLI_NYF_6.jpg

 


54&61_NYF_2.jpg

 

54&61_NYF_1.jpg

 

54&61_NYF_7.jpg

 

http://www.army.lk/detailed.php?NewsId=9560

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.