Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் இரகசிய சந்திப்பு தொடர்பில் நாம் கரிசனையாக இருக்க வேண்டும்! ஊடகவியலாளர் கோபி ரத்தினம் VIdeo in

Featured Replies

லண்டனில் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகிறது இதில் இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் சமரவீர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.சு.சுமந்திரன்  மற்றும் உலகத்தமிழர் பேரவை போன்ற  வேறு சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.  இச் சந்திப்பின் நோக்கம் என்ன? என பதிவு இணையம் சார்பாகக் கேட்டபோது...

http://www.pathivu.com/news/40706/57//d,article_full.aspx

லண்டன் இரகசியப் பேச்சுக்களின் மர்மம் விலகியது JUN 08, 2015 | 1:58by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

Sumanthiran-300x200.jpgசிறிலங்கா அரசாங்க, தமிழர் பிரதிநிதிகள், அனைத்துலக சமூகப் பிரதிநிதிகளுக்கு இடையில் பிரித்தானியாவில் நடைபெறும் பேச்சுக்களில், போர்க்குற்ற விசாரணை குறித்தோ, அரசியல்தீர்வு குறித்தோ விவாதிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நேற்று ஆரம்பமாகிய இந்தச் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் பிரதிநிதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன், நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராகிம் இப்ராகிம், சிறிலங்காவுக்கான சுவிஸ் தூதரகத்தின் முன்னாள் சமாதானத்திற்கான ஆலோசகர் மார்டீன் சுஷேஞர்,உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இரகசிய கலந்துரையாடல் தொடர்பாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சந்திப்பின் நோக்கங்கள் தொடர்பாக விபரித்துள்ளார்.

அதில் அவர், “விரைவில் நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உடனடித் தேவைகள் குறித்தும் ஆராயவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.

நேற்று ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் இன்று வரை தொடர்ந்து இடம்பெறும்.

இரகசியமான சந்திப்பாகவே இது ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும் இதுபற்றிய தகவல்கள் தவறான முறையில் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து இரகசிய ஆலோசனைகள் நடத்தப்படுவதாக சிலர் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் நிறைவேற்றப்பட வேண்டிய தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் குறித்தே நாம் ஆராய்கிறோம்.

இதுகுறித்து ஏற்கனவே சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவது குறித்தும் கலந்துரையாடப்படும்.

சிறிலங்காவின் எந்த அரசாங்கமானாலும், எமது பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் அனைத்துலக அழுத்தம் தேவைப்படுகிறது.

அத்துடன் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதியுதவிகள் அனைத்துலக சமூகத்திடம் இருந்தே கிடைக்க வேண்டும்.அதன் காரணமாகவே அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் புலம் பெயர் தமிழர்களும், உடனடித் தேவைகளை நிறைவேற்றும் விடயத்தில் விருப்பம் வெளியிட்டுள்ளனர். அவர்களும் இதில் பங்கேற்கின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்தப் பேச்சுக்களின் அடுத்த கட்டம் டுபாயில் நடக்கவுள்ளதாக, உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

 http://www.puthinappalakai.net/2015/06/08/news/6841

 

லண்டன் பேச்சுக்களுக்கான ஏற்பாட்டாளர் நானல்ல – என்கிறார் எரிக் சொல்ஹெய்ம் JUN 08, 2015 | 10:57by கார்வண்ணன்in செய்திகள்

erik-solhaim-300x200.jpgசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை நேற்று லண்டனில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த அதிகாரபூர்வமற்ற சந்திப்பு இடம்பெற்றதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுக்களில் வேறு யார் யார் பங்கெடுத்தார்கள் என்பது பற்றிய  அறிக்கை ஒன்று, பேச்சுக்களுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும்,  புலம் பெயர் தமிழர்களுக்கும் இடையில் லண்டனில் பேச்சுக்களை நடத்த தானே ஒழுங்கு செய்ததாக வெளியான செய்திகளையும் அவர் நிராகரித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/06/08/news/6850

 

போர்க்குற்ற விசாரணையை ரத்து செய்யவும்,இன அழிப்பென்ற பதத்தினையும் நீக்கவும் சிங்கள அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழர் அல்லது ஆங்கில கணனி அறிவுள்ள புலம்பெயர் தமிழ் தலைவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர் என்பது தான் உண்மை.செப்டம்பரையும் கடத்த எடுத்த முடிவுதான் இது

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.