Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'இரு நரிகளின் கதை'- படம் வென்றது வனவிலங்கு புகைப்படப்போட்டியில்

Featured Replies

வென்றவருக்கே வேட்டையின் பரிசுகள் அனைத்தும்.

151014135213_don_gutoskywildlifephotogra
வெள்ளை ஆர்டிக் நரியை சிவப்பு நரி கொல்லும் இந்தப் படத்துக்கு முதல் பரிசு

கடுமையாக மோதும் நரிகளின் படம் ஒன்று 2015ஆம் ஆண்டுக்கான வன விலங்குப் புகைப்படக் கலைஞர் விருதை , டான் குடோஸ்கிக்கு பெற்றுத் தந்திருக்கிறது.
"இதுதான் என் வாழ்க்கையிலேயே நான் எடுத்த மிகச் சிறந்த படம்", என்று பிபிசியிடம் கூறினார் டான்.
"நரிகளின் தலைகள், உடல்கள் மற்றும் வால்கள்-- ஏன் அவைகளின் முகங்களின் தெரியும் உணர்ச்சிகள் கூட ஒழுங்காக இந்தப் புகைப்படத்தில் வந்திருக்கின்றன" என்கிறார் அவர்.
" இரு நரிகளின் கதை" என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படம் ஒன்றும் அவ்வளவு ரத்தக்களறியானதாகவும் வெளிப்படவில்லை. இந்தப் படத்தை முதன் முதலாகப் பார்க்கும்போது ஏதோ இந்த சிவப்பு நரி தனது மழைக்கால கோட்டைக் கழற்றுவது போலத் தெரிகிறது என்று கூறினார் தேர்வுக்குழுவில் உறுப்பினரான கேத்தி மோரான்.
இந்த இரண்டு ரக நரிகளும் கனடாவின் மனிடோபாவில் இருக்கும் ஹட்சன் குடாவின் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் வாபுஸ்க் பிராந்தியத்தில் வசிக்கின்றன.
பெரிய சிவப்பு நரி இந்த வெள்ளை ஆர்டிக் பகுதி வாசியான நரியைப் பார்த்துவிட்டால், அதை அடித்துக் கொன்று உண்ண முயலும்.

இந்தப் பகுதியில் இருக்கும் வனவிலங்குப் பாதுகாவலர்கள் இது போன்ற மோதல்களைப் பார்த்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் இதுதான் இந்த மோதல் முதன் முறையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் சீதோஷ்ண நிலை மாற்றத்தைப் பற்றிய ஒரு சக்திவாய்ந்த செய்தியை சொல்கிறது என்கிறார், நேஷனல் ஜியாக்ரபிக் சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் கேத்தி.

பூமியின் வட உயர்மட்டங்களில் உள்ள பகுதிகள் வேகமாக உஷ்ணமடைந்து வருவதால், அங்குள்ள விலங்குகள் தாங்கள் பொதுவாக மற்றப் பகுதிகளுக்கு வராமல் இருந்த நிலை மாறிவருகிறது.
ஆர்டிக் மற்றும் ஆர்டிக் பிரதேசத்துக்கு சற்று கீழே உள்ள பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் நிலையில், அங்கு வசிக்கும் சிவப்பு நரி, மேலும் வடக்காக நகர்ந்து ஆர்டிக் நரிகள் வசிக்கும் பிரதேசத்துக்குள் நுழைகின்றது. எனவேதான் இது போன்ற மோதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன, என்கிறார் கேத்தி.
லண்டனில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி ம்யூசியம் நடத்தும் இந்த வருடாந்திரப் போட்டியில் குடோஸ்கி இந்த ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள சுமார் 100 நாடுகளிலிருந்து 42,000 புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

151014141205_ondrejruffs2015photography_
மோதும் ரஃப் பறவைகள்- படத்தை எடுத்தவர் 14 வயது இளம் புகைப்படக்காரர் ஒண்ட்ரெஜ் பெலனெக்

இந்தப் போட்டியில் அடுத்த பெரிய பரிசு என்பது, இளைய வன விலங்கு புகைப்படக்காரருக்கானது. இந்த ஆண்டுக்கான இளைய வனவிலங்கு புகைப்படக்காரர் விருது 14 வயதான ஒண்ட்ரெஜ் பெலனெக் என்ற சிறுவனுக்கு கிடைத்திருக்கிறது. செக் குடியரசைச் சேர்ந்த இவர் "மோதும் ரஃப் பறவைகள்" என்ற படத்துக்காக இந்த விருதை வென்றிருக்கிறார்.
நடந்து செல்லும் இந்தப் பறவைகள் , கூடும்போது கடுமையாக மோதி உரசிக்கொள்ளுமாம். இந்தக் காட்சியை நார்வேயின் வடக்கே வாரங்கர் தீபகற்பத்தில் எடுத்திருக்கிறார் ஓண்ட்ரெஜ். இது போன்ற காட்சியை எடுக்க வயதான புகைப்படக் கலைஞர்களே முயன்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் எடுக்க முடியாத காட்சியை இந்தச் சிறுவன் எடுத்திருக்கிறான் என்கிறார் கேத்தி.

151014141946_amirbendovbirdscompetition_n

"பறவைகள்" பிரிவில் வென்ற படம் -எடுத்தவர் இஸ்ரேலிய புகைப்படக் கலைஞர் அமிர் பென் டோவ்

பறவைகள் பிரிவுக்கான புகைப்படப் போட்டியில் பரிசு வென்ற இந்தப் படம் இஸ்ரேலியர் அமிர் பென் டோவால் எடுக்கப்பட்டது.
இந்த சிவப்புக் கால் கழுகுகளை எடுக்க இவர் ஐந்து நாட்கள் முயன்றிருக்கிறார்.
ஐந்தாவது நாளின் கடைசி ஐந்து நிமிடங்களில்தான் இவரால் இந்தப் படத்தை 'கிளிக்' செய்ய முடிந்திருக்கிறது.

151014142422_edwin_giesbers_2015newtphot

ஓடையின் மீது நீரில் ஊர்ந்து செல்லும் இந்த நீர்ப்பல்லியை படமெடுத்தவர் நெதர்லாந்து புகைப்படக் கலைஞர் எட்வின் கீஸ்பர்ஸ்

நெதர்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எட்வின் கீஸ்பெர்ஸ் எடுத்த இந்தப் படம், நீரோடையின் மேலே ஒரு நீர்ப்பல்லி ஊர்ந்து செல்லும்போது அதை தன் கீழிருந்து எடுத்தது. "நிலத்திலும் நீரிலும் வாழும் பிராணிகள்" பிரிவில் இந்தப் படம் வென்றது.


151014143433_scarlet_ibisjonathan_jagotp
பிரேசிலில் ரத்தச் சிவப்பு நாரைகள்

பிரேசிலின் வட கிழக்கே லென்ஸ்வா என்ற தீவுக்கப்பால் பறந்து கொண்டிருந்த இந்த ரத்த சிவப்பு நிற நாரைகளை படமெடுத்தவர் பிரான்சின் ஜோனாதன் ஜாகோ. ஜோனாதன் 15-17 வயதினர் பிரிவில் வென்றார்.


151014144259_juan_tapiaimpressions_439x5
'இம்ப்ரெஷன்ஸ்' பிரிவில் வென்ற இந்த உருவாக்கப்பட்ட காட்சிப் படம். எடுத்தவர் யுவான் டாப்பிய

இது ஒரு உருவாக்கப்பட்ட காட்சிப் படம். உடைந்த ஜன்னல் விளிம்பின் மேல் கிழிந்த கேன்வாஸ் ஒன்று வைக்கப்பட்டு, அதன் ஊடாக பண்ணைக்குருவிகள் வருவதைக் காட்டுகிறது. தென் ஸ்பெயினில் அல்மேரியாவில் ஒரு சேமிப்புக் கிடங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்தப் படம். படமெடுத்தவர் யுவான் டாப்பிய . "இம்ப்ரெஷன்ஸ்" பிரிவில் இது வென்றது.


I151014151712_pere_soler2015_competitiona
விண்ணிலிருந்து அண்டல்சியா கடற்கரையில் தெரியும் பாசிப் படர்வை எடுத்தவர் பெரெ சொலர் என்ற ஸ்பானியர்

விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படம் அண்டல்சியா கடற்கரையில் , பாஹியா டெ கடிஸ் தேசியப் பூங்காவில் பாசிபடர்ந்து இருக்கும் ஒரு காட்சியைக் காட்டுகிறது. எடுத்தவர் பெரெ சொலர் என்ற ஸ்பானியப் புகைப்படக்காரர்

http://www.bbc.com/tamil/global/2015/10/151014_wildlifephoto

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.