Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள, தமிழ் தேசியவாதங்களும் இஸ்ரேலிய கனவுகளின் தாக்கங்களும்

Featured Replies

இளையதம்பி தம்பையா முன்னாள் பாலஸ்தீன இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தின் இறப்பு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவரது மனைவி உட்பட, அவருக்கு நெருக்கமானவர்கள் எழுப்பி இருந்தபோதும் இன்னும் தீர்வு காணப்படாத புதிராக இருக்கிறது.  யசீர் அரபாத் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்துவிட்டதாகவும், அவர் பாலஸ்தீன மக்களின் விடுதலை பற்றி அக்கறை கொண்டவரல்லர் என்றும் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இக்குற்றச்சாட்டு ஹமாஸ் என்ற மத அடிப்படை வாதத்தை கொண்ட பாலஸ்தீன இயக்கம், மட்டுமன்றி, பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி என்ற இடதுசாரியத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கமும் அவரை ஏகாதிபத்திய கைக்கூலி என்று கூறத்தவறவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டை இலங்கையில் சில அமைப்புகள் மட்டுமன்றி இந்தியாவின் சில அமைப்புக்களும் கூறின.

உலக ஒழுங்கை அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானிப்பதாக இருக்கும்போது, அதற்கு எதிரான உலக மக்களின் அபிப்பிராயம் பாரியதாகவும் சக்திமிக்கதாகவும் இல்லாதபோது, கருங்கல்லில் தலையை மோதுவதே “தூய்மையான போராட்டம்‘ என கூறுபவர்களும், மோதுவதற்கு துணிபவர்களும் எத்தகைய சமூகப் பெறுமானத்தை கொண்டுள்ளனர் என்பதை உய்தறிவது மேலானது. உலக நாடுகளின் அமைப்பு அல்லது உலக அரசுகளின் அரசென கொள்ளப்படும் ஐ.நா. சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்க கொடி ஐ.நாடுகளின் சபையின் அங்கத்துவ நாடொன்றிற்கு சமமான வகையில் பறக்க விடப்பட்டிருப்பது முக்கியமல்ல என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவத்தை பாலஸ்தீன விடுதலை இயக்கம் பெற்றுக்கொண்டுள்ளது. இந்நீதிமன்றத்தில் நாடுகளுக்கு இருக்கும் பெறுமதியை பாலஸ்தீன இயக்கம் பெற்றுக்கொண்டுள்ளது. இஸ்ரேல் சியோனிசம் பாலஸ்தீன மக்கள் மீதும், நாட்டின் மீதும் புரியும் மனிதாபிமான மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எந்தவொரு சர்வதேச அமைப்பும் கவலைப்படுவதாக இல்லை என்றும் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அக்கறை கொள்ளவில்லை என்றும் பரவலான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

எத்தனையோ தீர்மானங்கள் ஐ.நா. சபையில் இஸ்ரேலிற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளபோதும் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்பதுடன், நடைமுறைக்கு வரவில்லை என்பதற்காக இஸ்ரேல் தனிமைப் படுத்தப்படவுமில்லை, தண்டிக்கப்படவும் இல்லை. மத்தியகிழக்கில் இஸ்ரேல் என்பது பாலஸ்தீன நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தேசம். இஸ்ரேலியர்களுக்கு உலகில் தனிநாடில்லை என்பதால் கற்பாறைகள், கற்பாறை மலைகள் அமைந்த பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலியர்களின் விருப்பத்தினால் மட்டுமன்றி அமெரிக்கா உட்பட ஏனைய ஏகாதிபத்திய நாடுகளினதும் சக்திகளினதும் விருப்பத்தின் அடிப்படையிலும், தேவையின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டதே இஸ்ரேல் என்ற நாடாகும்.

உலகெங்குமிருந்து விரட்டி அடிக்கப்பட்ட, குறிப்பாக ஹிட்லரின் நாஜிசத்தினால் விரட்டி அடிக்கப்பட்ட அகதிகளாக இருந்த இஸ்ரேலியர்களை எங்கு குடியேற்றலாம் என்ற ஏகாதிபத்திய ஆலோசனையில் இலங்கை நாட்டில் குடியேற்றலாம் என்ற தீர்மானம் இருந்தது. இதனை இலங்கையை ஆண்ட பிரிட்டிஷ்ஷாரே முன் வைத்தனர். மலையக தமிழர்களை நாடற்றவர்களாக்கிய ஐ.தே.கட்சி அரசாங்கமும் எதிர்க்கவில்லை. ஆனால் மத்திய கிழக்கில் இஸ்ரேலை ஆக்குவதே ஏகாதிபத்திய சக்திகளுக்கு தேவையாக இருந்ததால் பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் சிசேரியன் செய்யப்பட்டு ஜனனமாக்கப்பட்டது. இதற்கு  மத்தியகிழக்கில் இருந்த எண்ணெய், வாயு வளம் போன்றன மட்டுமே காரணமல்ல. மத்திய கிழக்கில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதற்கு இஸ்ரேலின் உருவாக்கம் அவசியமாகியது. இதனால் நாடாக இருந்த பாலஸ்தீனம் நாடற்ற தாக்கப்பட்டு, நாடில்லாத இஸ்ரேல் நாடாக்கப்பட்டது.

இஸ்ரேல் அல்லது யூதர்களுக்கு நாடு தேவை என்பது அம்மக்களின் விருப்பமாக அல்லது தேவையாக இருந்த போதும் ஏகாதிபத்தியத்திற்கே தேவை மிகையாக இருந்தது. இஸ்ரேலுக்கு உலக தேசப்படத்தில்பாலஸ்தீனத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. பாலஸ்தீன  தேசப்படம் சிறியதானது. பங்களாதேசம், வடயேமன், யேமன், உருவாக்கம் பின்னர் வட சைப் பிரஸ், தென் சைப்பிரஸ் பிரிவினை கிழக்கு தென் திமோர் உருவாக்கம், கெகோவா, தென்சூடான் உருவாக்கம் போன்றன ஏகாதிபத்திய தலையீடுகளால் ஏற்பட்டன. இந்நாடுகளில் மக்கள் அமைதியாகவோ, முன்னேற்றகரமாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிரிவினைக்குட்பட்ட, மக்கள் கூட்டம் ஒப்பீட்டு ரீதியாக இனமேலாதிக்கமற்ற விதமாக பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். இம்மாதிரி அமெரிக்க, இந்திய ஏகாதிபத்தியங்கள் இலங்கையில் தனிநாட்டை அமைத்து தருமென்ற எதிர்பார்ப்பு பழைமைவாத தமிழ் தேசியவாதிகளிடம் இருந்தது.

தமிழ் தேசியவாதிகள் இந்தியாவின் தென்கிழக்கு கோடியில் ஒரு இஸ்ரேலாகவோ, பங்களாதேசமாகவோ இருக்கமுடியும் என்றும், அதற்கு இந்தியா உட்பட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் உதவுமென எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே மிதவாத தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமன்றி, தீவிரவாத தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உட்பட பல தமிழர் அமைப்புகளும் செயற்பட்டன. அதாவது இந்தியா பங்களாதேஷத்தின் உருவாக்கத்திற்கு போன்று இலங்கையில் தமிழீழத்திற்கும் உதவும் என நம்பின.

நாட்டு பிரிவினையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்ட சோவியத் ஒன்றியம், அங்கு முதலாளித்துவம் மேலெழுந்த 90களில் பல நாடுகளாக பிரிந்தது. ஐக்கியப்பட்ட சோஷலிஸ சீனாவில் பிரிவினைவாத சக்திகளின் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பிரிவினைவாத அமைப்புகளுக்கு வெளியுலக சக்திகளின் ஆதரவிருக்கின்றன. இன்றும் சில தமிழ்த் தேசியவாத சக்திகள் ஏகாதிபத்திய நாடுகளினதும் சக்திகளினதும் தயவில் இலங்கையில் தனித் தமிழீழத்தை உருவாக்கலாம் என்று நம்புகின்றன.

நாடுகள் பிரிவதும் இணைவதும் இன்று ஏகாதிபத்திய சக்திகளால் மட்டுமே சாத்தியமாக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளன. நாடுகளை பிரிக்கும் தேவை இல்லாத இடங்களில் அந்நாட்டின் தேசிய இனங்களுக்கு சம உரிமை அல்லது சுயாட்சியை உறுதிசெய்யவும் ஏகாதிபத்திய நாடுகள் அவற்றின் நலன்களுக்கேற்ப தலையீடுகளை செய்துவருகின்றன. இன்று இலங்கையிலும் ஏகாதிபத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற அதிகார கையளிப்புக்குட்பட்ட அரசியல் தீர்வுக்கு ஆதரவாக இருக்கின்றன. இதனை உறுதி செய்ய இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கம் இணங்குவதாக இல்லை. அதனால் ஏகாதிபத்திய நாடுகள் அல்லது ஐ.நா. சபையின் அழுத்தத்தினூடாக அதிகார கையளிப்பை அரசியல் தீர்வாக பெற்றுக்கொள்ளமுடியும் அல்லது வேண்டுமென த.தேசிய கூட்டமைப்பு அல்லது அதற்கு இணையாக கொள்கை நிலைப்பாட்டை கொண்ட அமைப்புகள் நம்புகின்றன.

இவ்வாறான இடத்தைநோக்கி நகர்வதற்கு மைத்திரி ரணில் அரசாங்கம் ஓரளவாவது விருப்பம் அல்லது நிர்ப்பந்தத்தை கொண்டிருந்தபோதும், பாராளுமன்றத்திற்கும் வெளியிலும் செயற்படும் பேரினவாதிகள் உடன்படப்போவதில்லை. எனவே பண்டா செல்வா, டட்லிசெல்வா, இலங்கை  இந்திய சமாதான உடன்பாடு, சந்திரிகாவின் பிராந்தியங்களின் ஒன்றியம் என்பதை வெளிப்படுத்திய அரசியல் யாப்பு சீர்திருத்தம் போன்றவற்றுக்கு ஏற்பட்ட கதி ஏற்படுவதே இலங்கையின் எதிர்காலமாக இருக்கப்போகிறது எனலாம். நாடில்லா யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற நாடு உருவானது போல் நாடில்லா தமிழர்களுக்கு இலங்கையின் வடகிழக்கில் ஒரு இஸ்ரேலாக தமிழீழம் உருவாகும் என்ற தமிழ்த் தேசியவாதிகளின் விருப்பம் தற்போது தமிழர்கள் செறிவாகி வாழும் இலங்கையின் வடகிழக்கில் கூடிய அதிகாரங்களை கொண்ட  ஆட்சிச் சலுகையாவது பெற்றுக்கொள்ளலாம் என்பதாக குறுக்கப்பட்டுள்ளது.

தென்னாசியாவில் ஒரு இஸ்ரேலாக தமிழீழத்தை பெற்றுக்கொள்ளும் தமிழ் தேசிய கனவு கலைந்தது. ஆனால் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் முழு இலங்கையும் ஒரு இஸ்ரேலாக ஆக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு பாலஸ்தீன மண்ணில் அமைந்துள்ள இஸ்ரேல் போன்று, தற்போதைய உலக ஒழுங்கில் நவதாராளவாத பொருளாதாரம் என்ற அச்சில் இயங்கும் பல ஏகாதிபத்திய நாடுகளுக்கும் தென்னாசியாவில் இலங்கை விளங்கவேண்டும் என்ற எண்ணத்தை மஹிந்த அரசாங்கமும் அதனது இராணுவ தலைமைகளும் கொண்டிருந்தன. அத் திசையில் பயணித்தே விடுதலைப்புலிகள் இயக்கத்தை முறியடிக்க அமெரிக்கா உட்பட பல நாடுகளினதும் இராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்டன. அந்த இராணுவ நடவடிக்கைகளினூடாக இலங்கையின் இராணுவ கட்டமைப்பு, வலுவடைந்ததுடன், இராணுவ மேலாதிக்கமும் ஸ்திரமானது எனலாம்.

சர்வதேச ரீதியாக கடற்கொள்ளையர்களுக்கு எதிரான ஏனைய நாடுகளுடன் கூட்டாகவும் ஒப்பந்த அடிப்படையில் தனியாகவும் செயற்பட்டது. இதனால் இலங்கைக்கு வருமானம் கிடைத்தது. சர்வதேச (ஐ.நா.) சமாதானப் படைகளிலும் இலங்கையின் பாதுகாப்பு படைவீரர்கள் சேர்க்கப்பட்டனர். இதனூடாகவும் இலங்கைக்கு வருமானம் கிடைத்தது. அத்துடன் உள்நாட்டிலும் இராணுவத்தினர் அரசின் ஏனைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். விவசாயம் கட்டுமானம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை ஆயுத விற்பனையிலும் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவன்கார்ட் என்ற நிறுவனம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஒரு கம்பெனியாக இயங்கி வந்துள்ளது. அதனிடம் ஆயுதங்கள், கப்பல்கள் இருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. காலி கடற்பரப்பில் ஆயுதங்களுடன் கப்பல்கள் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களாக இருந்துள்ளன. அக்கம்பனி பாதுகாப்பு அமைச்சின் பகுதியாக செயற்பட்டுள்ளது. இந்த மிதக்கும் ஆயுத களஞ்சியங்கள் இலங்கை கடற்பரப்பில் மட்டுமன்றி சர்வதேச கடற்பரப்பிலும் வலம் வந்துள்ளன.

அரசாங்கம் மாற்றம் ஏற்பட்டவுடன் அவன்கார்ட் கப்பல்கள் பற்றியும், அதனுடைய ஆயுதங்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப கட்டிடத் தொகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை பற்றியும், செய்திகள் வெளியாகி இருந்தன. அவை பற்றி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளிடம் புலனாய்வு செய்யப்பட்டன. அவன்கார்ட் நிறுவனம் இலங்கையின் பாதுகாப்பு சட்டங்களுக்கு முரணாக இயங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு பொறுப்பாக இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால், கடந்தவாரம் இந்திய கடல் எல்லையை ஊடறுத்துக் கொண்டு காலி கடற்பரப்பிற்கு அவன்கார்ட் நிறுவன கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இதற்குப்  பிறகு இலங்கையின் அரசியல் பரப்பில் அவன்கார்ட் பற்றி மீண்டும் பேசப்படுகிறது. இந்த நடவடிக்கைகளினூடாக சர்வதேச பாதுகாப்பு தொடர்பான சட்டங்களையும் இலங்கை அரசு அல்லது அதன் பாதுகாப்பு மீறியுள்ளதா என ஆராயப்படுகிறது.

அவன்கார்ட் நிறுவன கப்பல்களினூடாக வெளிநாடுகளுக்கு(??) ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரான ஒருவர் ரஷ்யாவில் இலங்கை தூதுவராக இருந்து கொண்டு ஆயுத விற்பனையில் ஈடுபட்டிருந்தார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன. யுத்தத்தில் வெற்றியடைவதற்காக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட ஆயுதங்களையும், விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையுமே இலங்கை விற்பனை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இவை தென்னாசியாவில் இலங்கை இஸ்ரேலாக இருப்பதற்கான தகைமைகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இலங்கையின் பேரினவாதத்தின் இஸ்ரேலிய கனவை தற்போதைய அரசாங்கமும் முன்னெடுக்குமா என்பதிலேயே எதிர்கால சவால்கள் ஏற்படும்.

http://www.thinakkural.lk/article.php?article/gumgbhgtiy6501692baebec313650wcozlbb4b53d7ebc3b9fabac31bxjyt1#sthash.OAxg1j5f.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.