Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியத் தமிழர் பேரவை கூட்டமைப்பை எச்சரிக்கை செய்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியத் தமிழர் பேரவை கூட்டமைப்பை எச்சரிக்கை செய்கிறதா?

கலாநிதி சர்வேந்திரா
 
<p>பிரித்தானியத் தமிழர் பேரவை கூட்டமைப்பை எச்சரிக்கை செய்கிறதா?</p>
 

 

பிரித்தானியத் தமிழர் பேரவை சிறிலங்காவின் 68வது சுதந்திரநாளை முன்னிட்டு ஊடக அறிக்கையொன்றை கடந்த 04.02.2016 அன்று விடுத்திருந்தது. இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைக்கு இடித்துரைக்கப்பட்ட விடயங்கள் போலவே தோன்றின. இது பிரித்தானியத் தமிழர் பேரவை குறித்த பலரது அண்மைக்கால எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த அறிக்கையாகவும் இருந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பிரித்தானியத் தமிழர் பேரவை பங்குபற்றிய பின்னர், இவர்களும் உலகத் தமிழர் பேரவையினைப் போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சிறிலங்கா அரசு தொடர்பாக எடுக்கும் அணுகுமுறையினைப் பின்பற்றப் போகிறார்கள் என்ற கணிப்பு பலருக்கும் இருந்தது. முரண்பாடுகள் காரணமாக உலகத் தமிழர் பேரவையில் இருந்து விலகியிருந்த பிரித்தானியத் தமிழர் பேரவை மீண்டும் உலகத் தமிழர் பேரவையில் இணையப்போகிறது என்ற தகவலும் புலம்பெயர் தேசிய அரசியற் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பேசப்பட்டது.

ஆனால், பிரித்தானியத் தமிழர் பேரவையின் அறிக்கை ஆட்சிமாற்றத்தின் பின்னரும் தமிழ் மக்களின் அவலநிலையைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சிறிலங்காவின் 68வது சுதந்திர தினத்தில் பங்குபற்றியிருந்தவொரு சூழலில் இது தமிழ் மக்களுக்கான சுதந்திரதினம் அல்ல என பிரித்தானியத் தமிழர் பேரவை பிரகடனம் செய்கிறது: «இலங்கைத் தீவின் தென்பகுதிக்கு சுதந்திரம்! வட கிழக்கு வாழ் மக்களுக்கு தொடரும் அவலம்!» என்ற தலைப்பில் அமைந்திருந்த அறிக்கையின் சொற்தேர்வுகளும் கவனத்துக்குரியதாக இருந்தது. இவ் அறிக்கை தொடர்பாக சில குறிப்புகளைப் பதிவு செய்வதற்கு உதவியாக இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை முதலில் குறித்துக் கொள்வோம்.

1. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.

2. கைது செய்து காணாமல் போனோர் பற்றிய பூரண விபரங்களை வெளியிடவில்லை.

3. கணக்கில் வராத 146,679 பேரைப் பற்றிய விபரங்களுக்கு பொறுப்புக் கூறவில்லை.

4. தமிழ் மக்களின் வாழ்நிலங்கள் மற்றும் வளங்கள் அவர்களிடமே கையளிக்கப்பட வேண்டும்.

5. தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் நிலை என்று வருகின்றதோ அன்றுதான் தமிழ் மக்களின் பாதுகாப்பு, சுபீட்சம், சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது விட்டுக் கொடுப்புக்கு இடமில்லாதது என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு.

<p>பிரித்தானியத் தமிழர் பேரவை கூட்டமைப்பை எச்சரிக்கை செய்கிறதா?</p>

6. 68 வருடமாக தமிழ் மக்களை திட்டமிட்ட இன அழிப்பு நிகழ்ச்சி நிரலில் தொடர்ச்சியாக வைத்திருக்கும் சிறிலங்காவின் எந்த அரசாங்கமும் சிங்கள மக்கள் மத்தியில் இனப்பிரச்சினை பற்றிய நேர்மையான கலந்துரையாடலை நடத்தி தீர்வு கொண்டு வர முடியாத நிலைமைதான் இன்று வரை உள்ள யதார்த்தம்.

7. உலகை உலுக்கிய 1956, 1958, 1977, 1983 இனவழிப்பு உட்பட தமிழீழப் பிரதேசமெங்கும் கட்டவிழ்த்து விட்ட சிறிய பெரிய இனப் படுகொலைகள், விரட்டியடிப்பு, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்கவே முடியாது என்று உறுதிப்படுத்தக்கூடிய கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் எதனையும் சிறிலங்கா தேசம் முன்னெடுக்கத் தயாராகவில்லை.

8. 2009 முள்ளிவாய்க்கால் உச்சம் பெற்ற நிலையில் தமிழினப் படுகொலை செய்தவர்கள் சுதந்திரமாக உலா வருகின்றார்கள்.

9. இது தமிழ் மக்களுக்கான சுதந்திர தினமாக அமையவில்லை.

10. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக இடம்பெறும் அரசியலமைப்பு மாற்றம் போன்ற முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தியாக்க வேண்டும். இப்போதுள்ள அரசு ஜனநாயக விழுமியங்களை மதிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின் வட கிழக்கு மற்றும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் எந்த அச்சுறுத்தலுமின்றிய சூழ்நிலையில் ஒரு சுதந்திரமான சர்வசன வாக்கெடுப்பினை அனுமதிக்க வேண்டும்.

11. அவ்வாறான சூழ்நிலையில்தான் இரு தேசங்களும் நட்புடன் சமாதான சக வாழ்வில் ஈடுபட முடியும். இதுவே நிரந்தரத் தீர்வாக அமைய முடியும்.

பிரித்தானியத் தமிழர் பேரவை இவ் அறிக்கையில் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படையான பிரச்சினைகள் பலவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவ் விடயங்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக மக்கள் அவை போன்ற அமைப்புக்களால் சுட்டிக்காட்டுப்பட்டு வருபவை. இவ் அறிக்கையின் ஊடாகப் பிரித்தானியத் தமிழர் பேரவை தனது நிலைப்பாட்டை உலகத் தமிழர் பேரவைக்கு நெருக்கமானதாக அல்லாது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் மக்கள் அவையின் நிலைப்பாட்டுக்கு நெருக்கமானதாக வெளிப்படுத்தியிருக்கிறது. தாயகத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் நிலைப்பாட்டுக்கும் அணுகுமுறைக்கும் மாறானதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது.

இவ் அறிக்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தப்பட்ட அல்லது சுட்டிக்காட்டப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. இலங்கைத் தீவில் தமிழீழ தேசம் சிறிலங்கா தேசம் என்ற இரு தேசங்கள் உள்ளன.

2. தமிழீழ தேசத்தவர்க்கு தமது அரசியற் தலைவிதியினை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நடாத்தப்படும் மக்கள் வாக்கெடுப்பின் ஊடாக தீர்மானிக்கும் உரித்து வழங்கப்பட வேண்டும்.

3. தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கு தமிழீழத் தனியரசு உருவாகுவதுதான் தீர்வாக அமைய முடியும் என்பதனை பிரித்தானியத் தமிழர் பேரவை வெளிப்படையாகப் பேசவில்லை. இருப்பினும் சுயநிர்ணய உரிமை தொடர்பாக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருப்பதுவும் உள்ளக சுயநிர்ணயம் குறித்துப் பேசப்படாதமையும் அரசியற் தீர்வுக்கான தெரிவுகளில் தமிழீழம் என்ற தனிநாட்டையும் உள்ளடக்கும் உள்ளக்கிடக்கையையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

4. தமிழ் மக்கள் சிறிலங்கா அரசால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

5. சிறிலங்கா அரசு எந்தவிதமான மறுசீரமைப்புக்கும் தயாராக இல்லை.

6. தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசிடம் இருந்து நீதி கிடைக்கும் என்று நம்புவதற்கு அடிப்படைகள் ஏதும் இல்லை.

பிரித்தானியத் தமிழர் பேரவை வெளிப்படுத்தியிருக்கும் இவ் விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கவனத்துக்குரியவையாக உள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக ஆட்சிமாற்றத்தின் பங்காளியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் ஊடாகச் செய்யத் தவறிய விடயங்களை பிரித்தானியத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியிருக்கிறது. தன்னை எவ்வகையிலும் மறுசீரமைத்துக் கொள்ளத் தயாராக இல்லாத சிறிலங்கா அரசால் தமிழர்களின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமா என்ற கேள்வியையும் பிரித்தானியத் தமிழர் பேரவை இவ் அறிக்கையின் ஊடாக மறைமுகமாக எழுப்புகிறது.

இலங்கைத்தீவின் தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆண்டு எனக் கூறப்படும் 2016 ஆம் ஆண்டில் பிரித்தானியத் தமிழர் பேரவை முன்வைத்திருக்கும் இக் கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்வைக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் இத் தருணத்தில் எழுகிறது.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=e536bbb5-583c-4115-bc88-b91c3a74d1e8

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.