Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடி சுட்டு ஒருவருக்கு கை பறந்தது.. மாமனார் வாளால் வெட்டி மருமகனின் இரண்டு விரல்கள் பறந்தன நத்தார் கூத்து..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கில் நத்தார் விழா களைகட்டியது பெருந்தொகை பரிசுப் பொருட்கள்,

ஞாயிறு, 24 டிசம்பர்r 2006 17:47

வெடி சுட்டு ஒருவருக்கு கை பறந்தது.. மாமனார் வாளால் வெட்டி மருமகனின் இரண்டு விரல்கள் பறந்தன நத்தார் கூத்து..

சிலுவையை தேசியக் கொடியில் ஏந்திய டென்மார்க்கில் நடைபெறும் விழாக்களில் சுமார் ஒரு மாத காலத்திற்கு நீண்டு செல்லும் நெடிய, இனிய விழாவாக நத்தார் திருநாள் அமைந்துள்ளது. பரிசுகளை வழங்குவதும், வாழ்த்துக்களை அனுப்புவதும், புத்தாண்டுக்கு வெடிசுட ஆரம்பிப்பதும், நத்தார் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதும் இக்காலத்தே பெருமெடுப்பில்; களைகட்டுவது வழமை. அந்தவகையில் இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்களில் பரிசுப் பொருட்களை வாங்கிய மக்களில் அதிகமானோர் தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை கடன் பெற்றே பரிசுகளை வாங்கியுள்ளனர். கந்துவட்டி போல வட்டி அறவிடும் நீண்டகால கொடுப்பனவு மிக்க இந்த கடன் நிறுவனங்களில் இருந்து பணம் பெறும் விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு கடன் வாங்கியோரில் ஐந்து பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இந்த நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளார்கள். 21 வீதமானவர்;கள் பெற்றுள்ள இக்கடன் தொகை சுமார் 1000 கோடி குறோணராக இருக்கிறது. அதுபோல பரிசுப் பொருட்களை வாங்கிய வீதமும் சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு 15 முதல் 20 வீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை நத்தார் வாழ்த்து அட்டைகளை அனுப்புவதிலும் இவ்வாண்டு சாதனை படைத்துள்ளது. நத்தார் வாழ்த்து அட்டைகள் மொத்தம் 51 மில்லியன் அட்டைகள் வரை தபால் திணைக்களத்தால் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும் 14 மில்லியன் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வழமைபோல தாமதங்கள் இல்லாமல் டேனிஸ் தபால் திணைக்களம் உரிய காலத்தில் நத்தார் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை பெறுநர்களிடம் வழங்கியுள்ளன. தலைநகர் பகுதியில் தபால்களை வழங்க சுறுசுறுப்பான வெளிநாட்டு பின்னணி கொண்ட இளைஞர்கள் சுவீடனில் இருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டது இந்த விரைவுக்கு இன்னொரு காரணமாகும். இவ்வாண்டு நத்தார் வாழ்த்து அட்டைகள் அதிகமாக அனுப்பப்பட்ட நாடாக உலகத்தில் முதலாவது இடத்தை பிரித்தானியா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நத்தார் விடுமுறையோடு புத்தாண்டுக்காக வெடிகளை சுடும் ஓசைகளும் சகல நகரங்களிலும் குறைவின்றிக் கேட்டவண்ணமுள்ளன. பட்டாசு வெடிகளை சுடுவதினால் வரும் ஆபத்துக்களையும், அங்க இழப்புக்களையும் வருடாந்தம் சந்தித்து வரும் டென்மார்க் மக்களுக்கு வழமைபோல இம்முறையும் போலீஸ் கடுமையான எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது. அவ்வாறு இருந்தாலும் கூட நெஸ்ற்வில் நகரத்தில் கடந்த சனியன்று அதிசக்தி வாய்ந்த கோட்டை வெடியை வெடிக்க வைத்த 40 வயதுடைய நபர் ஒருவர் கையை இழந்துள்ளார். இவர் மீது தடைசெய்யப்பட்ட பட்டாசை வெடித்த குற்றத்தின் பேரில் போலீஸ் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இவரோடு சேர்ந்தியங்கிய 25 வயது நபர் ஒருவரும் கைதாகியுள்ளார். இராணுவ வெடியை விட நாலு மடங்கு அதிக மூச்சுக்கொண்ட கர்ப்பம் கலக்கி வெடிகளை பலர் சுடும் ஓசைகள் ஆங்காங்கு கேட்டு வருகின்றன.

இது இவ்விதமிருக்க நத்தார் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாமனும் மருமகனும் மோதியதில் கோபம் கொண்ட மாமன் நீளமான சமுராய் வாளினால் மருமகளை வெட்டித்தள்ளினார். இரண்டு தோள்களும் வெட்டுப்பட்டு, இரண்டு விரல்களும் அறுபட்ட நிலையில் மருமகன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமனார் கொலை முயற்சிக் குற்றத்தின் பேரில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். மகளை மாமனிடம் அழைத்து சென்று, நத்தாரைக் கொண்டாடிய மருமகன் தனது உள்ளக் கிடக்கையின் வேதனைகளை தொகுத்து, பிள்ளை வளர்ப்பதென்றால் எப்படி இருக்க வேண்டுமென மாமனாருக்கு விபரிக்க, பிள்ளையை வளர்த்த மாமனார் வெகுண்டெழுந்து சுவரில் தொங்கிய சமுராய் வாளினை ஆவேசமாக உருவி மருமகனை அறுத்தெறிந்து நத்தார் கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தார். இந்த நிகழ்வு டென்மார்க் ஓகூஸ் நகரை அண்டியுள்ள ஸ்ருட்ஸ்ரப் நகரில் நேற்று நடைபெற்றுள்ளது.

இதேவேளை ஒல்போ றெஸ்ருரன்ற் ஒன்றில் நடைபெற்ற கடும் மோதலில் இரண்டு நபர்கள் கைதாயினர். இவர்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளான இன்னொரு நபர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய நிலை சிறிது ஆபத்தாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.alaikal.com

என்ன கறுப்பி வாள் வித்தை காட்டியவர்கள் தமிழர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.